Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில், இந்தி கட்டாயம்.. லிஸ்ட் வெளியிட்ட எச். ராஜா! எச். ராஜா மறுபடியும் ஆரம்பித்து விட்டார். கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கட்சிகள் போராடும் நிலையில் திமுகவினர், காங்கிரஸ் பிரமுகர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் எச் ராஜா. இங்கெல்லாம் இந்தி கட்டாயம் என்பதையும் அவர் மறக்காமல் சுட்டிக் காட்டியுள்ளார். வெளியில் இந்தி திணிப்பு என்று கூறி விட்டு உள்ளுக்குள் சத்திமில்லாமல் ரகசியமாக இவர்கள் இந்தியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். இது இரட்டை நிலை இல்லையா என்றும் கேட்டுள்ளார் எச். ராஜா. கொஞ்ச நாளாவே சற்று காட்டமான ட்வீட்டுகளைத்தான் போட்டு வருகிறார் எச்.ராஜா. இந்த நிலையில் தற்போது ஒரு பட்டியலை வெளியி…

  2. சிறுவர்களை... கொத்தடிமைகளாக, விற்க முயற்சி! உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 40 சிறுவர்கள் உள்ளிட்ட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாநிலத்தில் இருந்து பஞ்சாப் செல்லும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலில் 80 பேரும் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மீட்கப்பட்ட 40 சிறுவர்களும் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226314

  3. Published By: DIGITAL DESK 3 20 MAY, 2024 | 04:23 PM இந்தியாவில் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் குறித்த நால்வரும் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் (ஏடிஎஸ்) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு தீவிர விசாரணைக்காக சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளது. அகமதாபாத் விமான நிலையத்திற்கு குறித்த நால்வரும் ஏன் வந்தார்கள் என்பதற்கான துல்லியமான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதனால் அந்த விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத…

  4. கேரள நிலச்சரிவில் சிக்கிய 9 பேரின் உடல்கள் மீட்பு August 11, 2019 கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டுள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 8ம் திகதி மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 சிறுவர்கள் உட்பட 59 பேர் சிக்கியிருந்த நிலையில் மோசமான காலநிலை காரணமாக குமீட்பு பணிகளில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த 9 பேர் …

  5. அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி Idealnabaraj கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று, வெள்ளிக்கிழமை, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்…

  6. பூடான் மீதும் கண் வைத்த சீனா.. அடுத்த ஆக்கிரமிப்பு.. . இந்தியாவுக்கு பாதகமாகும் பகீர் முயற்சி.! திம்பு: லடாக் மற்றும் தென்சீனக் கடலை தொடர்ந்து பூடானின் சில பகுதிகளை ஆக்கிரிமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ராணுவ உள் கட்டமைப்பை உருவாக்கி எல்லை நிலையை சீனா மாற்ற முயற்சிக்க உள்ளதாகவும், வரவிருக்கும் 25 வது சுற்று எல்லை பேச்சுவார்த்தைகளில் இதை சாத்தியப்படுத்த சீனா திட்டமிடுவதாகவும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்தியாவின் சிலிகுரி பகுதிக்க அடுத்தபடியாக பூட்டான் இருப்பதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மையமாக உள்ளது. ஆனால் சீனாவுடன் நடத்த உள்ள ச்சுவார்த்தையில் பூட்டான் மேற்கொள்ளப்போகும் எந்தவொரு பிராந்திய சமரசமும…

  7. கும்பமேளாவால் கொரோனா தொற்று அதிகரிக்கும் – மத்திய அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா திருவிழாவின் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் ”ஹரித்வாரில் தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பமேளா திருவிழாவிற்கு 15 ஆயிரம் கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த விழாவிற்கு …

  8. காஷ்மீர் விவகாரம் : இம்ரான்கானின் கருத்தால் போர்கப்பலை நிறுத்தியுள்ளது இந்தியா! காஷ்மீர் விவகாரம் போருக்குத்தான் இட்டுச்செல்லும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ள நிலையில், அரபிக்கடல் பகுதியில் இந்தியா தனது போர்கப்பலை தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பல்வேறு முறைகளில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச சமூகம் தலையிட்டு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் தோல்வியை தழுவவே பயங்கரவாதிகளை கொண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் முயற்சிப்பதாக இந்தி…

  9. பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியாவில் தொடரும்: அமெரிக்க உளவுத்துறை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடு தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டான் கோட்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறுகிய எண்ணத்துடன் மேற்கொள்ளப்படுகின்றமையாலேயே அதனை முறியடிக்க முடியாமல் இருக்கின்றது. மேலும் பயங்கரவாத அமைப்புக்கள் தன்னுடைய கொள்கை முடிவுக…

  10. இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்? vivekanandhanMay 31, 2024 19:42PM நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி கட்டத்தில் இந்தியா நிற்கிறது. 57 தொகுதிகளில் ஏழாம் மற்றும் இறுதி கட்டத் தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்று தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலக்கட்டத்தில் அவர் செய்து கொண்டிருப்பது மறைமுகமான தேர்தல் பிரச்சாரம் என்ற விமர்சனத்தை எதிர்கட்சிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழாம் கட்டத் தேர்தலைப் பொறுத்தவரை பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. எனவே பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதி…

  11. பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் நேற்று திங்கட்கிழமை, மிக மோசமான பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு ரசாயன விதைநீக்கம செய்து தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தாயொருவர் வாகனத்தில் எரிபொருள் முடிந்த நிலையில் தவிப்பதை வாய்ப்பாக பயன்படுத்தி பிள்ளைகளுக்கு முன்னாலேயே துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை நாடுமுழுவதும் எதிர்ப்பாளர்களை உருவாக்கியது. ஒரு ஆண் துணையில்லாமல் இரவில் வாகனம் ஓட்டியதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு பொலிஸ் அதிகாரி குற்றம் சாட்டியதால் இந்த வழக்கு கூடுதல் கோபத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இந்த வழக்கைப் பற்றி கேட்டபோது பதிலளித்த பிரதமர் இம்ரான் கான், மிக மோசமான பாலியல் குற்றங்கள் பொது தூக்கிலிடப்பட்ட…

  12. முஸ்லிம்களை லத்தியால் தாக்கும் உ.பி போலீஸ் - இந்தியாவை உலுக்கிய வைரல் காணொளி ரஜினி வைத்தியநாதன் & தில்நவாஸ் பாஷா பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, போலீஸார் தாக்கும் காணொளியில் இடம்பெற்றவர்களில் சிலரை அடையாளம் கண்டு பிபிசி அவர்களின் குடும்பத்தினரோடு பேசியுள்ளது இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் இருக்கும் இஸ்லாமியர்கள் சிலரை காவல்துறையினர் லத்தியால் கடுமையாகத் தாக்கும் காணொளி ஒன்று லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகியிருக்கிறது. அதை அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பகிர்ந்து, அந்தக் க…

  13. குழந்தைகள் பாலியல் காணொளிகள் கொரோனா காலத்தில் அதிகரித்தது ஏன்? வினீத் கரே பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2020 ஆம் ஆண்டு ஜூலையில், அசாம் மாநில காவல்துறைக்கு 'சந்தேகத்திற்கிடமான' ஃபேஸ்புக் பக்கம் தொடர்பாக புகார் வந்தது. அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் மூலம் இந்தப்புகார் கிடைத்தது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் குழந்தைகளின் வீடியோக்கள் மற்றும் இடுகைகள் உள்ளன என்றும், அந்தப்பக்கம் சிறார் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் அல்லது CSAM (Child Sexual Abuse Material) ஐ ஊக்குவிப்பதாக இருக்கலாம் என்றும் அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கப்பட…

  14. 1980களில் மோடி இ- மெயில் அனுப்பினார்? டிஜிட்டல் கேமரா வெச்சிருந்தார்?.. ட்விட்டரில் ‘தெறி’சர்ச்சை. 1980களில் தாம் டிஜிட்டல் கேமரா மற்றும் டிஜிட்டல் பேட் வைத்திருந்ததாக பிரதமர் மோடி அளித்த பேட்டி ட்விட்டரில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மேகங்களுக்கு இடையே விமானங்கள் சென்றால் ரேடாரில் அது தெரியாது என பிரதமர் மோடி பகிரங்கமாக அளித்த பேட்டி பெரும் கேலிக்குரியதாகிவிட்டது. சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். தற்போது நியூஸ் நேஷன் டிவிக்கு மோடி அளித்த பேட்டி மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியூஸ் நேஷனுக்கு அளித்த பேட்டியில், 1990களின் தொடக்கத்திலேயே டிஜிட்டல் பேட் வைத்திருந்தேன். இப்போது அனைவரும் அதனை பயன்படுத்துகிறார்கள். அத…

  15. மும்பையில் தொடரும் கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு…. July 3, 2019 மும்பையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. 5-ஆவது நாளாக நேற்றும் மழை நீடித்ததனால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் கடலோர படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை கிழக்கு மலாட்டி…

  16. பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – மரண தண்டனை வழங்க ஒப்புதல்!! பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், மரண தண்டனை வழங்கும் சட்டமூலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பல்வேறு சட்டமூலங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், போக்சோ சட்டத்தில் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரணதண்டனை விதிக்கும் வகையில், சட்டமூலங்களில் 4,…

  17. அணு ஆயுதப் பயன்பாட்டில் இந்தியா முழுமை பெற்றுள்ளது: பிரதமர் மோடி இந்தியாவின் முப்படைகளும் அணு ஆயுதப் பயன்பாட்டில் முழுமை பெற்றுள்ள இந்நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ஐ.என்.எஸ் அரிஹந்த் என்ற அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பலானது இன்று (திங்கட்கிழமை) வெற்றிகரமாக இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இது தொடர்பாக தனது டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்தியாவின் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகிய இரண்டும் அணு ஆயுதங்களைக் கையாளும் திறன் பெற்ற, அதனைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் திறனுடைய படைக்கலன்களை தன்னகத்தே கொண்டிருக்கின…

  18. நாட்டு மக்களிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். 17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தப்பின், பிரதமர் மோடி கடந்த மார்ச் 27-ம் தேதி, நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன். அப்போது, முக்கிய தகவல்களை தெரிவிக்க உள்ளேன், அதனை அனைவரும் டிவி, ரெடியோ, ஊடகங்கள் மூலம் கவனிங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தேர்தல் விதி அமலில் உள்ளதால் அரசின் கொள்கை முடிவை வெளியிட முடியாது என்றாலும், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிழவியது. பொதுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மிஷன் சக்தி சோதனை இந்தியாவின் செயற்க…

  19. காஷ்மீர் விவகாரம் ; பயங்கரவாதிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என போர்க் கப்பல்கள் ஆயத்தபடுத்திய இந்தியா ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்பதற்காக இந்திய கடற்படையினர் போர்க் கப்பல்களை கிழக்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் எச்சரிக்கையுடன் நிறுத்தி வைத்துள்ளனர். அத்துடன் ஜம்முகாஷ்மீர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளனர். அப் பகுதியின் நிலைமை அமைதியாக இருந்தபோதிலும், எந்தவொரு அசம்பாவித நடவடிக்கைகளும் இடம்பெறாமல் தடுப்பதற்கே இவ்வாறு பாதுகாப்பு படையினர் கடைமையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை காஷ்மீர் வி…

  20. போரில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்களை இருப்பில் வைக்கும் இந்தியா போரில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை இருப்பு வைக்கும் பணியில் இந்திய இராணுவம் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆயுத திரட்டலில் ஈடுபட்டுள்ள இந்திய இராணுவம், ஏவுகணைகள், உயர்திறன்மிக்க டாங்கிகள், பீரங்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை இருப்பு வைத்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் இவை அனைத்தும் 10 நாட்களுக்கு போர் புரிவதற்கு போதுமானதாகும். ஆனாலும் இந்த கையிருப்பை 40 நாட்களுக்கு போதுமான அளவுக்கு உயர்த்தும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை பாகிஸ்தான் மற்றும் சீனாவை மனதில் வைத்தே இந்தியா ஆயுத திரட்டலில் ஈடுபட்டு வரு…

  21. சத்தீஸ்கரில் ஆயுதங்களுடன் 62 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் : November 6, 2018 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படையினரால் தேடப்பட்டு வந்தவர்களில் 62 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களுடன் காவற்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் புரட்சியின்மூலம் தமது கோரிக்கைகளை அடைத்ந்த விட முடியும் எனக் கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்களை கைதுசெய்வதற்கும், அழிப்பதற்கும் காவற்துறையின் தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு எதிர்வரும் 12ஆம், 20ஆம் திகதிகள…

  22. காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் தலையிடுவதை அனுமதிக்க முடியாது – இந்தியா திட்டவட்டம் காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மீண்டும் இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. ட்ரம்ப்பின் சமரச முயற்சி தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், “காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காஷ்மீர், இரு நாடுகள் இடையேயான பிரச்சினை. இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடமுடியாது. பயங்கரவாத ஆதரவை முதலில் பாகிஸ்தான் கை விடட்டும். அதன் பின்னர் எந்த பேச்சுவார்த்தைக்கும் இந…

  23. அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்: தி.மு.க. பலவீனமாக இருக்கிறது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தி.மு.க. பலவீனமாக இருப்பதால் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். பதிவு: அக்டோபர் 22, 2020 04:36 AM சென்னை, தி.மு.க.வை பொறுத்தவரை அக்கட்சி பலவீனமாக இருக்கிறது. எனவே தான் அடிக்கடி ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இன்றைக்கு (நேற்று) கூட ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். இது அக்கட்சியின் பலவீனத்தைத்தானே உணர்த்துகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை நாங்கள் வலுவாகவே இருக்கிறோம். ஆரம்ப கட்டத்தில் இருந்தே மக்களோடு மக்களாக பயணிக்கிறோம். தேர்தல் நேரத்தில் தைரியமாக தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். த…

  24. எல்லைப் பிரச்சினை விவகாரம் : பாதுகாப்பு துறைக்காக 500 கோடி ரூபாயை ஒதுக்கியது இந்தியா! by : Krushnamoorthy Dushanthini சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை தொடர்ந்து பாதுகாப்புத்துறைக்கு அவசரகால நிதியாக 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் ஆயுத அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் வெடிமருந்துகளையும், ஆயுதங்களையும் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்காக மேற்படி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறுகிய கால அறிவிப்பில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ பொருட்களை வாங்குவதற்கும் எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோதலுக்கும் அல்லது தற்செயலுக்கும் அவர்களின் செயல்பாட்டுத…

    • 0 replies
    • 377 views
  25. இந்தியாவில் தீவிரமடைந்து வரும் வைத்தியர்களின் போராட்டம்! கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கோரி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் மற்றும் பொது மக்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் போது வன்முறைச் சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இன்று(17) காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.