அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3313 topics in this forum
-
துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா! இந்திய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணைக் குடியரசு தலைவரான வெங்கையா நாயுடு வழக்கமான கொவிட் 19 வைரஸ் பரிசோதனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வைரஸ் அறிகுறியே இல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே சுயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். http://athavannews.com/துணைக்-குடியரசு-தலைவர்-வ/
-
- 0 replies
- 324 views
-
-
ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ` கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. இதிலிருந்தே `கேரள மாடல் முன்னுதாரணமானது' என்பது தெரியவரும்' என்கிறார் மலப்புரம் மாவட்ட ஆட்சியர். என்ன நடக்கிறது கேரளாவில்? மூன்று மடங்காக உயர்ந்த பாதிப்பு இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் கடந்த சில நாள்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 25 ஆம் தேதி நிலவரப்படி 37,593 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 46,164 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழு…
-
- 0 replies
- 324 views
-
-
டெல்லியில் தீ விபத்து: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதில் சிக்கியுள்ள ஏனையோரை மீட்கும் பணியில் படையினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லி தீ விபத்தில் 32 பேர் உயிரிழப்பு : மீட்பு பணிகள் தீவிரம் டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் சிக்கியுள்ள ஏனையோரை மீட்கும் பணிகளில் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெ…
-
- 0 replies
- 324 views
-
-
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு குறித்து அமெரிக்கா கோபத்தில்! உக்ரேனில் மொஸ்கோவின் போர் முயற்சிகளைத் தக்கவைக்க இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது உதவுவதாகவும், வொஷிங்டனுடனான புது டெல்லியின் உறவில் இது பாதிப்பினை ஏற்படுத்து விடயமாக அமைந்துள்ளதாகவும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ வியாழக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தார். ஃபாக்ஸ் ரேடியோவுக்கு அளித்த செவ்வியில் அவர், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் முயற்சிக்கு நிதியளிக்க உதவும் வகையில் இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை தொடர்கிறது என்பதில் அமெரிக்க ஜனாதிபதி விரக்தியடைந்துள்ளார். இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன, அதில் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு மற்றும் ஒவ்வொரு நாட்டையும் போலவே அதன் பொருள…
-
- 3 replies
- 324 views
-
-
அமெரிக்க டொலருக்கு, நிகரான... இந்திய ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி! அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பெறுமதி இன்று (திங்கட்கிழமை) 23 பைசா வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க டொலர் 76.65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 785 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசயி பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243.35 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,928.60 என்ற அளவில் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. https://athavannews.com/2022/1278469
-
- 0 replies
- 323 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல் – அத்வானி உள்ளிட்ட 4 மூத்த தலைவர்களுக்கு போட்டியிட அனுமதி மறுப்பு! இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட அத்வானி உள்ளிட்ட 4 மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.க. அனுமதி மறுத்துள்ளது. புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இடம்பெற்ற பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா, குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கொள்கை ரீதியான முக்கிய முடிவெடுக்கக் கூடிய பா.ஜ.க.வினது நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடந்தது. இதில், வரும் மக்களவைத் தேர்தலில் வேட்பாளராகக் களம் இறக்கப்படுவோர் 75 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், தற்போது அந்த வயது…
-
- 0 replies
- 323 views
-
-
புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2,500 பேருக்கான தனிப்பிரிவுகளை ஏற்படுத்த முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனா உட்பட 70 நாடுகளில் வேகமாக பரவி வரும் உயிர் கொல்லியான 'கொரோனா வைரஸ்' தாக்குதலுக்கு பலியானவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சீனாவில் கொரோனாவுக்கு இதுவரை 2,943 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது நேற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டில்லியில் ஒருவருக்கும், தெலுங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 18ம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெறவிருந்த சர்வதேச கடற்படை…
-
- 2 replies
- 323 views
-
-
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது சக்தி வாய்ந்த கன்னிவெடி தாக்குல் என்றும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட வீரர்கள் அனைவரும் மகாராஷ்டிரா …
-
- 0 replies
- 323 views
-
-
சர்வதேச மத சுதந்திரத்திற்கான 2020 ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது அமெரிக்கா. அதில் கூறிஇருப்பதாவது: மத சுதந்திர விசயத்தில் கவலைப்பட வேண்டிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினரை தாக்குவோர் மீது எந்தநடவடிக்கையும் இல்லை. மத சுதந்திரத்தை நசுக்குவதில் வடகொரியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. வழிபாட்டு தலங்களை தகர்க்க வேண்டாம் என வியட்நாமை கேட்டுக்கொண்டு வருகிறோம். உய்கூர்இஸ்லாமியர், கிறிஸ்தவர், கம்யூ., கட்சிக்கே உண்மையா இருக்க சீனாவின் விருப்பமாக இருக்கிறது என அந்த அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்து உள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2529808 https://www.uscirf.gov/sites/default/files/USCIRF 2020 Annual Report_42720_new_0.pdf …
-
- 0 replies
- 323 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது பாகிஸ்தான். கட்டுரை தகவல் எழுதியவர், உமர் ஃபரூக், நியாஸ் ஃபரூக்கி பதவி, பிபிசி உருது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டிசம்பர் 27, 2023 அன்று பாகிஸ்தான் ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளை ஏவும் "ஃபதா 2" ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்புத்துறை (ஐஎஸ்பிஆர்) தகவல்களின்படி, இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் வரை சென்று துல்லியமாக தாக்கக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 24, 2021 அன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "ஃபதா 1" ராக்கெட் பாகிஸ்தானில் சோதனை செய்யப்பட்டது. …
-
- 1 reply
- 323 views
- 1 follower
-
-
காஷ்மீர் விவகாரத்தில் சீனா அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், வேறுபாடுகள் பிரச்னையை ஏற்படுத்தி விடக் கூடாது என்று சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அமைப்பதற்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சர்வதேச அரங்கில் இந்த விவகாரத்தை எழுப்பியது. இதேபோன்று சீனாவும் அதிருப்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக லடாக் பிரதேசம் சீன எல்லையை ஒட்டி வருகிறது. இதனை யூனியன் பிரதேசமாக மாற்றுவதில் சீனாவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கிறது. இதுபற்றி சீனா கருத்து தெரி…
-
- 0 replies
- 323 views
-
-
நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு: ஜூலை 09, 2020 05:00 AM புதுடெல்லி, பிரதமர் மோடி கடந்த மாதம் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், நவம்பர் மாதம்வரை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 81 கோடி ஏழைகள் பலன் அடைவார்கள். இதற்க…
-
- 0 replies
- 323 views
-
-
நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது வருவாய் மற்றும் சொத்துக்களுக்கு அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டமை தொடர்பில் அவருக்கு எதிராக ஊழல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசாரணையின் போது குறித்த வழக்கில் மூன்று முறை பிரதமராக இருந்த அவர் சவூதி அரேபியாவில் உள்ள இரும்பு ஆலையின் உரிமை தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நிரூபிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு…
-
- 0 replies
- 323 views
-
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரே ஏவுகணையில் பல்வேறு வெடிபொருட்களுடன் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை நேற்று (11) மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகளுக்கு இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அக்னி-5 ஏவுகணை இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்…
-
- 1 reply
- 323 views
- 1 follower
-
-
சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் அகமதாபாத், குஜராத் மாநிலம் அகமதாபாத் மொட்டோராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் அகமதாபாத்தின் மோட்டேராவில் சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி 'பூமி பூஜை' செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்வ்ரத், விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோரும் க…
-
- 1 reply
- 322 views
-
-
விலங்குகள் போல அடைக்கப்பட்டுள்ளோம்- காஸ்மீரின் முன்னாள் முதல்வரின் மகள் காஸ்மீர் மக்கள் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ளனர் என மாநிலத்தி;ன் முன்னாள் முதல்வர் மெஹ்மூபா முவ்டியின் மகள் இல்ட்டிஜா ஜாவேட் இந்திய உள்துறை அமைச்சர் அமிட் சாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் வேதனை வெளியிட்டுள்ளார். இந்திய உள்துறை அமைச்சரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என தனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனது தாயார் கைதுசெய்யப்பட்ட பின்னர் நான் வீட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளேன் என முன்னாள் முதல்வரின் மகள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏனைய பகுதிகள் சுதந்திரதினத்தை கொண்டாடும் இந…
-
- 0 replies
- 322 views
-
-
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 3 ஆவது முறையாக மரண தண்டனை விதிப்பு! நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று மூன்றாவது முறையாக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனைக்கான ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3 ஆம் திகதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் மரண தண்டனையும், அதன்பின் பெப்ரவரி 1ஆம் திகதி 2 ஆவது மரண தண்டனைக்கானக்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் தங்களுக்கு இருக்கும் சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி தண்டனையைத் தள்ளிப்போட்டனர். இறுதியாக ஜனவரி 31 ஆம் திகதி, விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்…
-
- 0 replies
- 322 views
-
-
மம்தா பானர்ஜியினால் மாத்திரமே நாட்டை வழிநடத்த முடியும்: குமாரசாமி நாட்டை வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு உள்ளதென கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே குமாரசாமி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “மம்தா பானர்ஜி மிக எளிமையாகவும், சிறந்த நிர்வாகியாகவும் காணப்படுகின்றார். அந்தவகையில் நாட்டை தலைமை தாங்கி வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் அவரிடம் இருப்பதாக நம்புகிறேன். மேற்கு வங்காளத்தில் என்றுமில்லாதளவு சிறந்த ஆட்சியை நடத்தி, மம்தா பானர்ஜி அதனை நிரூபித்துள்ளார். இதேவேளை தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த பாரிய…
-
- 0 replies
- 322 views
-
-
தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF வலியுறுத்தியுள்ளது. பாரீசில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. FATF அளித்திருந்த 27 பரிந்துரைகளில் 14 அம்சங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க பாகிஸ்தான் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் குறித்து FATF முடிவெடுக்க உள்ள நிலையில், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட சாம்பல் பட்டியல் நீடிக்கும் என்றே தற்போதைய சூழ்நிலை உணர்த்துகிறது. …
-
- 0 replies
- 322 views
-
-
இமாச்சல் எல்லையில் இந்தியாவை நோக்கி புதிய வீதியை அமைக்கும் சீனா? இமாச்சல பிரதேச மாநிலத்தை அண்மித்த தனது எல்லை பகுதியில் இந்தியாவை நோக்கி 20 கிலோ மீற்றர் தூரத்துக்கு சீனா புதிதாக வீதி கட்டமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலால் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாநிலம், கின்னோர் மாவட்டம் சாரங் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், இந்தோ -திபெத் எல்லை காவல் படையினருடன் சீன எல்லைக்கு அண்மையில் சென்றிருந்தனர். இதன்போது இந்தியாவை நோக்கி புதிய வீதியை சீனா மிக வேகமாக கட்டமைத்தது தெரியவந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதத்தில் குறித்த பகுதியில் வீதி அமை…
-
- 0 replies
- 322 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் சட்டமூலம் அறிமுகம்! கொரோனா பாதிப்பால் அதிகரித்த செலவினங்களை ஈடுகட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டமூலத்தை நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மக்களவையில் தாக்கல் செய்தார். கொரோனா பாதிப்பின் போது மக்களுக்கு விரைவான நிவாரணம், உதவிகள் வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டமானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் திகதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஏப்ரல் 7-ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாடாளுமன்ற-உறுப்பினர்க-18/
-
- 1 reply
- 322 views
-
-
பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு தூக்கு – அமைச்சரவை ஒப்புதல் பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்குவோரைத் தூக்கிலிடுவது, அவா்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வது ஆகிய தண்டனைகளுக்கு வழி வகுக்கும் இரண்டு அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ‘பாலியல் பலாத்காரம்’ என்பதற்கான வரையறையையும் மாற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெர…
-
- 0 replies
- 322 views
-
-
கார்கில் வெற்றி தினத்தின் ஜோதி பயணம் ஆரம்பமானது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ‘கார்கில் வெற்றி ஜோதி’ பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதி’யை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்றி வைத்தார். காஷ்மீர் உட்பட 11 முக்கிய நகரங்களின் வழியாக கொண்டு செல்லப்படும் கார்கில் ஜோதி, வரும் 26ஆம் திகதி டெல்லியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் அணையாஜோதியுடன் சங்கமமாக்கப்படும். காஷ்மீர் எல்லைப் பகுதியான கார்கிலில் கடந்த 1999ஆம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடிக்க இந்தியா தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு மாதங்கள் மற்றும்…
-
- 0 replies
- 322 views
-
-
தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 98 ஆயிரத்தை நெருங்குகிறது. உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்க உள்ளது. இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7…
-
- 0 replies
- 321 views
-
-
4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழப்பு – ராகுல் காந்தி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், “முடக்கம் காரணமாக ஏப்ரல் தொடக்கம் ஜூலை மாதம் வரையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 இலட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 இலட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 இலட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 இலட்சம் பேருக்கும் ஜூலையில் 50 இலட்சம் பேருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 321 views
-