அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் 10 ஆயிரம் பேரை சீனா உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு! இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் உட்பட 10 ஆயிரம் பேரை சீனா உளவுப்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து உலக நாடுகள் சீனா மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், சீனா உளவு பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பட்டியலின்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், எதிர்கட்சி தலைவர் சோனியா காந்தி, இந்திய தலைமை நீதிபதி பாப்டே, இராணுவத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 10 ஆயிரம் முக்கிய அதிகாரிகளை சீன உளவுப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவ…
-
- 0 replies
- 340 views
-
-
போர் சூழ்நிலையை சீனா விரும்பினால் உளவியல் ரீதியில் கடினப்படுத்தப்பட்ட வீரர்களை சந்திப்பார்கள் – இந்திய இராணுவம் எச்சரிக்கை! சீனா போர்கள் இன்றி வெல்வதையே நோக்கமாக கொண்டிருக்கும். எனவே அவர்கள் போருக்கான சூழ்நிலையை உருவாக்கினால் உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை சந்திப்பார்கள் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் இந்தியாவால் குளிர்காலத்தில் திறம்பட செயற்பட முடியாது என இந்திய படை பலத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா மேற்படி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வடக்கு பிராந்திய இராணுவ கட்டளையின் செய்தி தொடர்பாளர், “ லடாக்கில் உயரமானது முதல் மிக உயரமானது வரையிலான …
-
- 0 replies
- 298 views
-
-
இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல் ANI இந்தியா, சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றத்தை குறைக்க, அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. வியாழக்கிழமை அன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இருவரும் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, கிழக்கு லடாக் பகுதியில் சமீ…
-
- 3 replies
- 937 views
-
-
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் நேற்று திங்கட்கிழமை, மிக மோசமான பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு ரசாயன விதைநீக்கம செய்து தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தாயொருவர் வாகனத்தில் எரிபொருள் முடிந்த நிலையில் தவிப்பதை வாய்ப்பாக பயன்படுத்தி பிள்ளைகளுக்கு முன்னாலேயே துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை நாடுமுழுவதும் எதிர்ப்பாளர்களை உருவாக்கியது. ஒரு ஆண் துணையில்லாமல் இரவில் வாகனம் ஓட்டியதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு பொலிஸ் அதிகாரி குற்றம் சாட்டியதால் இந்த வழக்கு கூடுதல் கோபத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இந்த வழக்கைப் பற்றி கேட்டபோது பதிலளித்த பிரதமர் இம்ரான் கான், மிக மோசமான பாலியல் குற்றங்கள் பொது தூக்கிலிடப்பட்ட…
-
- 1 reply
- 376 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் சட்டமூலம் அறிமுகம்! கொரோனா பாதிப்பால் அதிகரித்த செலவினங்களை ஈடுகட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டமூலத்தை நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மக்களவையில் தாக்கல் செய்தார். கொரோனா பாதிப்பின் போது மக்களுக்கு விரைவான நிவாரணம், உதவிகள் வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டமானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் திகதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஏப்ரல் 7-ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாடாளுமன்ற-உறுப்பினர்க-18/
-
- 1 reply
- 318 views
-
-
பூடான் மீதும் கண் வைத்த சீனா.. அடுத்த ஆக்கிரமிப்பு.. . இந்தியாவுக்கு பாதகமாகும் பகீர் முயற்சி.! திம்பு: லடாக் மற்றும் தென்சீனக் கடலை தொடர்ந்து பூடானின் சில பகுதிகளை ஆக்கிரிமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ராணுவ உள் கட்டமைப்பை உருவாக்கி எல்லை நிலையை சீனா மாற்ற முயற்சிக்க உள்ளதாகவும், வரவிருக்கும் 25 வது சுற்று எல்லை பேச்சுவார்த்தைகளில் இதை சாத்தியப்படுத்த சீனா திட்டமிடுவதாகவும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்தியாவின் சிலிகுரி பகுதிக்க அடுத்தபடியாக பூட்டான் இருப்பதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மையமாக உள்ளது. ஆனால் சீனாவுடன் நடத்த உள்ள ச்சுவார்த்தையில் பூட்டான் மேற்கொள்ளப்போகும் எந்தவொரு பிராந்திய சமரசமும…
-
- 0 replies
- 377 views
-
-
லடாக் எல்லையில் இந்திய – சீன இராணுவத்தினர் நேருக்கு நேர் அணிவகுத்துள்ளதாக தகவல்! லடாக் எல்லையில் ஸ்பாங்கர் கேப் எனுமிடத்தில் இந்திய – சீன இராணுவத்தினர் நேருக்கு நேராக கைக்கெட்டும் தூரத்தில் அணி வகுத்திருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் சீனா இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் படைகளைத் திரும்பப்பெற மறுத்து வருகிறது. சீனாவின் ஏராளமான பீரங்கிகளும் அங்கு அணிவகுத்துள்ளன. சிகரங்களில் இந்தியா தனது தேசியக் கொடியைப் பறக்கவிட்ட நிலையில் அந்த சிகரங்களில் உள்ள இந்தியப் படையினரை அங்கிருந்து வெளியேற்ற சீனா முயன்று வருகிறது. சீனப்படைகள் முன்னேற விடாமல் தடுக்க இந்தியாவும் பெருமளவுக்கு படைகளைக் குவித்துள்ளது. …
-
- 0 replies
- 341 views
-
-
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கில் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. ஆனால், ஒரு சில சம்பவங்கள்தான் மிக ஆழமாக மனதுக்கு சங்கடத்தை தரக்கூடியவையாக இருக்கின்றன. அத்தகைய ஒரு சம்பவம்தான் இந்திய தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது. இதில் முப்பதுகளை கடந்த நபர், 86 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். இது பற்றி பிபிசியிடம் விவரித்த டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், கடந்த திங்கட்கிழமை மாலையில் வழக்கமாக தனது வீட்டுக்கு வரும் பால் வியாபாரிக்காக காத்திருந்த மூதாட்டியை புதிதாக வரும் நபர் அணுகியதாக கூறினார். "வழக்கமாக வரும் பால் விநியோக நபர் இன்று வரமாட்டார். அதனால் என்னுடன் வாருங்கள். நான் உங்களுக்கு பால் எங்கு கிடைக்கும்…
-
- 6 replies
- 1.2k views
-
-
குழந்தைகள் மீதான வன்முறைக்கு தீவிரவாதமே காரணம் – ஐ.நாவில் இந்தியா வலியுறுத்து! உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தீவிரவாதமே காரணமாக இருப்பதாக இந்தியா ஐ.நா மாநாட்டில் தெரிவித்துள்ளது. ஆகவே உலக நாடுகள் குழந்தைகளை பாதுகாக்க தீவிரவாதத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் ஆயுதப் போராட்டங்கள் என்ற தலைப்பில் ஐ.நாவில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா மேற்படி குறிப்பிட்டுள்ளது. தீவிரவாதத்தை தூண்டுவோர், அதற்கு நிதியுதவி அளிப்போர், தீவிரவாதத்திற்கு துணை நிற்போரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் விடுத்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதத்தால் எல்…
-
- 0 replies
- 282 views
-
-
லடாக்கின் எல்லையில் சீன இராணுவத்தினர் படைகளை குவித்து வருவதாக தகவல்! லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீன இராணுவம் தங்களது படைகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ரெச்சின்லா என்னும் இடத்தில் ஒரு படையணியையும், ஸ்பாங்குர் ஏரி அருகில் மற்றொரு படையணியையும் சீன இராணுவம் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை முக்ரி என்ற இடத்தில் சீன இராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய இராணுவத்தினர் தடுத்துள்ளதாகவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது. இருநாட்டுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் மிகப்பெரிய தாக்குதல் வரும் நாட்களில் நிகழ்க்கூடும் என அரசியல் அவதானிகள் எதிர்வுக்கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 1 reply
- 498 views
-
-
அதிவேக ஏவுகணை வாகனம் ; வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அறிவிப்பு! ஹைபா்சோனிக் தொழில்நுட்பத்திலான ஏவுகணை செலுத்து வாகனம் நேற்று (திங்கட்கிழமை) வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒலியின் வேகத்தைவிட சுமாா் 6 மடங்கு வேகத்தில் ஏவுகணையை ஏவும் திறன் கொண்ட குறித்த வாகனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணை வாகனம் நீண்ட தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பரிசோதனையின்போது எந்தவித குறைபாடுகளுமின்றி ஹைபா்சோனிக் வாகனம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்…
-
- 3 replies
- 478 views
-
-
வாயில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை - நடந்தே உயிரை மாய்த்து கொண்ட சோகம்; யானைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள மக்களால் புல்டோசர் என அழைக்கப்பட்ட மக்னா யானை வாயில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் மக்னா யானை, தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளில் மாறி மாறி இடம் பெயர்ந்து வந்ததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மக்னா யானைக்கு கேரள வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயன்ற போது, யானை நாக்கு சேதமடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் மக்னா வந்ததை அடுத்து, 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை வனத்துறையினர…
-
- 0 replies
- 448 views
-
-
சீனாவுடனான எல்லைப் பிரச்சினை ; வழக்கத்திற்கு மாறான போர் வாய்ப்புகளை உருவாக்கும் அச்சம் காணப்படுவதாக தகவல்! சீனாவுடனான எல்லைப் பிரச்சினை அணுவாயுதம் உள்ளிட்ட வழக்கத்திற்கு மாறான போர் வாய்ப்புகளை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் அச்சம் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் காணொலி காட்சி வழியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தற்போது சீனாவுடனான எல்லைப் பிரச்சினை மிகவும் சிக்கலானதாக உள்ளது. பிரச்சினை மிகவும் தீவிரமாக உள்ளது. அணு ஆயுதம் உட்பட வழக்கத்துக்கு மாறான போர் வாய்ப்புகளை உருவாக…
-
- 5 replies
- 617 views
-
-
மக்களின் பாதுகாப்பிற்காக எல்லைப் பகுதியில் பதுங்குக் குழிகளை அமைத்தது இந்தியா! இந்திய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூஞ்ச் மாவட்டத்தில பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஜம்மு – காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலைகளையும், மக்கள் வசிக்கும் பகுதிகளையும் குறிவைத்து சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பிற்காக பதுங்குக் கு…
-
- 1 reply
- 475 views
-
-
-
- 2 replies
- 393 views
-
-
மோடியின் ருவிட்டர் தளம் மீது சைபர் தாக்குதல்! பிரதமர் நரேந்திர மோடியின் ருவிட்டர் தளம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள narendramodi_in என்ற ட்விட்டர் பக்கத்தை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். குறித்த கணக்கு மீது அதிகாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கிரிப்டோ கரன்சியை தாராளமாக நன்கொடை வழங்குமாறு போலிச் செய்தியொன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த ருவிட்டுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் ருவிட்டர் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ருவிட்டர் செய்தித் தொடர்பாளர், ‘நாங்கள் நிலைமையை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம…
-
- 0 replies
- 275 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா, இந்தோனீசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விசா பெற்றிருப்பவர்களுக்கும் இந்த தடை பொருந்தும். இம்மூன்று நாடுகளிலும் அண்மைக் காலத்தில் 'கோவிட்-19' நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை மலேசிய அரசு சுட்டிக் காட்டியுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இந்த தடை அறிவிப்பு அமலுக்கு வருவதாக மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார். இதையடுத்து மலேசியாவில் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான விசா வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்த…
-
- 0 replies
- 318 views
-
-
குற்றவாளி என்றுமே குற்றவாளிதான் நீண்டநேர – பலத்த யோசனைக்குப் பிறகே இப்பதிவினை இடுகிறேன். முதலில் எங்கள் தமிழ் மரபுப்படி உயிரிழந்த ஒருவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 2008-9 காலக்கட்டங்களில் தாய்த் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருந்த தமிழினம் ஓலமிட்டு ஒப்பாரி வைத்து கதறி துடித்துக்கொண்டிருந்தது முள்ளிவாய்க்காலில் நடந்துகொண்டிருந்த இனப்படுகொலையை செரிக்க முடியாமல். …
-
- 1 reply
- 498 views
-
-
லடாக்கில் மீண்டும் பதற்றம்: சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு தயார் – இந்தியா லடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு இந்தியா தயாராக இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இராணுவ அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் பாங்காங்சோ ஏரியின் தென்கரையில் சீன வீரர்கள் கடந்த 29ஆம் திகதி இரவு மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அதை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் இந்திய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அமன் ஆனந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மூத்த இராணுவ அதிகாரிகள் தவிர, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புலனாய்வு செய்யும் …
-
- 9 replies
- 851 views
-
-
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார் பிடிஐ குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி : கோப்புப்படம் முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிசிச்ைச பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி(வயது86) மூளையில் சிறிய கட்டி இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது பிரணாப் முகர்ஜியின் மூளையில் இரு…
-
- 6 replies
- 1.2k views
-
-
நாங்கள் டெல்லிக்கோ.. பாகிஸ்தானுக்கோ கைப்பாவை கிடையாது.. பாக்கிற்கு பரூக் அப்துல்லா கடும் பதிலடி.! ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆறு அரசியல் கட்சிகள் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கு எதிராக கூட்டாகப் போராடுவதாக அறிவித்ததற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த தேசிய மாநாட்டு கட்சியின் (என்.சி) தலைவர் பரூக் அப்துல்லா "நாங்கள் யாருடைய கைப்பாவைகளும் இல்லை" என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப…
-
- 0 replies
- 339 views
-
-
சீன ஆன்லைன் சூதாட்ட செயலிகளை நடத்தும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: பெரிய வலைப்பின்னல் அம்பலம்- அமலாக்கத்துறை அதிரடி புதுடெல்லி சீன ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் செயலியை நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் ரூ.46.96 கோடி பெறுமான வங்கிக் கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கி உத்தரவிட்டுள்ளது. இந்த ஆன்லைன் சீன சூதாட்டச் செயலிகள் 90க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்நிலையில் அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமையன்று இந்த நிறுவனங்களின் அலுலவகங்களில் ரெய்டு நடத்தியது. இதோடு மட்டுமல்லாமல் இந்நிறுவனங்களின் இயக்குநர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள் வீடுகளிலும் டெல்லி, குருகிராம், மும்பை, புனே…
-
- 0 replies
- 264 views
-
-
தேச விரோத மற்றும் ஏழை விரோத சக்திகள் இந்தியாவில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய சட்டமன்ற கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், இந்திய ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதியையோ அவரது அரசையோ நேரடியாகக் குறிப்பிடாத அவர், "இந்திய மக்கள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் தங்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். கருத்துரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனநாயகம் அழி…
-
- 0 replies
- 282 views
-
-
அந்தமான் தீவுகள்: அருகிவரும் பழங்குடியினரை தாக்கியது கொரோனா வைரஸ் - விரிவான தகவல்கள் Getty Images கொரோனா வைரஸ் இந்தியாவின் அந்தமான் தீவுக்கூட்டத்தின் தொலைதூரத்தில் வசிக்கும் பழங்குடியினரைத் தாக்கியுள்ளது. அருகி வரும் பழங்குடி இனமான கிரேட்டர் அந்தமானீஸை சேர்ந்த பத்து பேருக்கு கடந்த ஒரு வாரத்தில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக பிபிசியிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொலைதூர தீவில் வசிக்கும் அவர்களில் நான்கு பேருக்கு கடந்த வாரம் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. முன்னதாக, நகர்ப்புற பகுதியில் வசித்த மேலும் 6 பேருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 372 views
-
-
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 25 வயதான பெண் ஒருவர் கடந்த 9 ஆண்டுகளில் தன்னை 139 பேர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஹைதராபாதின் புஞ்ஜகுட்டா காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காட் பவர் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் நல்கொண்டா பகுதியை சேர்ந்த அந்த பெண் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண் மற்றும் காட் பவர் பவுண்டேஷனை சேர்ந்த ராஜசேகர ரெட்டியுடன் பிபிசி தெலுங்கு சேவை செய்தியாளர் தீப்தி பத்தினி தொலைபேசியில் பேசினார். புகார் அளித்த பெண்ணிற்கு 15 வயதில் குழந்தை திருமணம் நடந்துள்ளது. அவர…
-
- 0 replies
- 329 views
-