அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3312 topics in this forum
-
ஆஸி. பிரதமருடன் மோடி இன்று பேச்சு: தமிழக சிலைகளை ஒப்படைக்க வாய்ப்பு புதுடெல்லி கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் சோக்ட் மோரிஸன்இந்திய பயணம் மேற்கொள்ள இருந்தார். கரோனா வைரஸ் பரவலால் அவரது வருகை ரத்தானது. இதையடுத்து, மோரிஸன் - பிரதமர் மோடி இருவரும் இன்று காணொலியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, மரியாதை நிமித்தமாக இந்தியாவில் திருடப்பட்டு தற்போது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பில் உள்ள பழங்கால சிலைகளை ஒப்படைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் வெளிர் சிகப்பு நிற மணற்கல்லால் ஆன நாகராஜா சிலையும் உள்ளது. இது, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளை 6 முதல் 8-ம் நூற்றாண்டு வரை ஆண்ட பிரத்திஹாரா வம்சத்தை சேர்ந்ததாகக…
-
- 0 replies
- 240 views
-
-
இம்ரான் குரேஷி பிபிசி இந்தி படத்தின் காப்புரிமை MOHAN KRISHNAN / FACEBOOK Image caption மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை கர்ப்பமாக இருந்த யானைக்கு சிலர் கொடுத்ததில், அதை உண்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அடையாளம் அறியப்படாத நபர்களின் இந்தக் கொடூரச் செயலுக்கு உள்ளான, அந்த யானைக்கு சுமார் 14-15 வயது இருக்கும் என கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை என்றும் பிறகு மருத்துவ உதவிக்…
-
- 24 replies
- 2.7k views
-
-
சைக்கோ’ பாணி தலை துண்டிக்கப்பட்டு, கைகள் அறுக்கப்பட்டு இளம்பெண் கொலை- ஓராண்டுக்குப் பின் சிக்கிய கொலையாளி ஓராண்டுக்கு முன்பாக பஞ்சாபைச் சேர்ந்த பணக்காரப் பெண்ணின் உடல் தலை துண்டிக்கப்பட்டு, கைகள் வெட்டப்பட்ட நிலையில் மீரட்டில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலை போலீஸாருக்குக் கடும் சவாலாக இருந்தது, துப்பு கிடைக்காமல் தவித்து வந்தனர், ஆனாலும் விசாரணையை பல கோணங்களில் நடத்தி வந்தனர். இந்நிலையில் ஓராண்டுக்குப் பின் கொலையாளி செவ்வாயன்று சிக்கியதாக தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் போலீஸார் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் லூதியானாவைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணின் பெயர் ஏக்தா ஜஸ்வால், இவரது குடும்பத்துக்கு மிகப்பெரிய டாக்ஸி வர்த்தகத் தொழில் இருந்தது, பணக்காரப் பெண், வயது 19…
-
- 0 replies
- 633 views
-
-
லடாக் எல்லை பிரச்சினை: ஜூன் 6 ஆம் தேதி இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை இந்திய லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500 கி.மீ எல்லைய பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை மற்றும் ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை. அதுபோல் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் இராணுவ மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக…
-
- 1 reply
- 364 views
-
-
நரேந்திர மோதி 2.0: நடுத்தர குடும்பத்திற்கு மத்திய அரசாங்கம் என்ன செய்தது? அலோக் ஜோஷி முன்னாள் ஆசிரியர், சி.என்.பி.சி ஆவாஸ் Getty Images மோதி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக்காலம், அதாவது 2019 க்குப் பிறகு நடுத்தர வர்க்கத்தின் மீது மத்திய அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளதா? இந்த கேள்வி என்னவோ மிகவும் எளிதானதுதான். இந்தக் கேள்வியை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ கேட்டால், 'நிச்சயமாக இல்லை!' என்ற பதிலே ஒரு நொடியில் கிடைக்கும்... ஆனால் உண்மையில் இந்த வினாவுக்கான விடை நேரடியானதா? உண்மையில் பதிலளிக்க சுலபமானதா? அப்படியானால், பிரதமர் மோதியின் புகழ் அதிகரித்து வருகிறது, கைதட்டுவது தொடங்கி விளக்கேற்ற சொன்னது வரை அவரது கோரிக்கைக்கு பெரிய அளவில் ஆதரவ…
-
- 0 replies
- 337 views
-
-
இந்திய ஜனநாயகத்தின் ’காணொளி அரசியல்’ எம். காசிநாதன் / 2020 ஜூன் 01 கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், தினமும் சென்னையில் உச்சநிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. இந்நேரத்தில், இந்திய ஜனநாயகத்தின் செயற்பாடுகள், டிஜிட்டல் மயமாகி வருகின்றன. வழக்கமான பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சட்டமன்ற விவாதங்கள், நாடாளுமன்ற விவாதங்கள் போன்றவற்றைத் தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டே, இவ்வாறு டிஜிட்டல் மயமாகி வருகிறது. ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும், இந்த நவீன களத்துக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள, கொரோனா வைரஸ் பேரிடர், ஒரு வழியில் உதவியிருக்கிறது என்றே எண்ண வேண்டியிருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசார யுக்திகளில், வரலாறு காணாத மாற்றங்களைக் காண முடிகிறது. அனைத்து மாநி…
-
- 0 replies
- 362 views
-
-
இந்தியாவின் பெயரை.... மாற்றுமாறு, வலியுறுத்தும் மனு மீது இன்று விசாரணை! நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனு இன்று (செவ்வாய்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் நாட்டின் பெயரான இந்தியா என்பது ஆங்கில சொல் எனவும் இது ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தை நினைவு படுத்துவதுபோலவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு ஏதுவாக நாட்டின் பெயர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை கை…
-
- 6 replies
- 589 views
-
-
அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல் – மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை அரபிக் கடலில் இன்று உருவாகும் நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர், புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று உருவாகவுள்ள புயலுக்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது. நிசர்கா புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூ…
-
- 3 replies
- 755 views
-
-
அமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன? கரோனாவால் நிலைகுலைந்து போயிருக்கும் அமெரிக்காவை ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை உலுக்கியெடுத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தப் படுகொலையைப் பேசுகின்றன. சட்டரீதியாக அமெரிக்காவில் நிறப் பாகுபாடு ஒழிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது இன்னும் தொடர்ந்துகொண்டேயிருப்பதைத்தான் ஜார்ஜ் ஃப்ளாய்டுகளின் மரணங்கள் சொல்கின்றன. ஒரு ஜனநாயக நாடாக அமெரிக்கா தலைகுனிந்து நிற்கிறது. வடக்கு கரோலினா மாகாணத்தின் ஃபேயட்வில் நகரத்தில் 1973-ல் பிறந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு, வளர்ந்ததெல்லாம் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத்தில். பள்ளிப் பருவத்தில் கால்பந்து, கூடைப்பந்து அணிகளில் விளையாடியிருக்கிறார். 2014-ல் மின்ன…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை! கொரோனா சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லாத செயல் என எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (திங்கட்கிழமை) நிலைவரப்படி 1.9 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 16 பேர் கொண்ட மருத்துவர் நிபுணர் குழு அறிக்கையொன்றை தயாரித்து பிரதமர் நரேந்திர மோடியிட…
-
- 2 replies
- 329 views
-
-
கண்ணுக்கு தெரியாத எதிரி கொரோனாவை எமது மருத்துவர்கள் வீழ்த்துவர் – மோடி நம்பிக்கை கொரோனா வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் அதனை வீழ்த்துவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்ளூரில் உள்ள ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை பிரதமர் நரேந்திர மோடி இ…
-
- 0 replies
- 287 views
-
-
ஒரு மாணவி தேர்வு எழுத, 70 பேர் பயணிக்கும் தனிப்படகையே இயக்கிய கேரள அரசு கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கரிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்திரா பாபு. இவர் ஆலப்புழாவில் உள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்புத் தேர்வை எழுத இருந்தார். ஆனால் இவர் தேர்வு எழுதச் செல்ல வேண்டுமென்றால் படகு போக்குவரத்தில் செல்ல வேண்டும். தனிப்படகு எடுத்துச்சென்றால் அதிக செலவாகும் என்பதால் அரசின் உதவியை நாடினார் சந்திரா. கேரள மாநில நீர்வழிப் போக்குவரத்துத் துறையை அணுகிய சந்திரா, தான் தேர்வு எழுத வேண்டுமென்பதால் உதவ முடியுமா? எனக் கேட்டுள்ளார். மாணவியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்த கேரள அரசு, சந்திரா பாபாவுக்காக மட்டுமே 70 பேர் பயணிக்கக் கூடிய படகை இயக்கியது. காலை 11…
-
- 0 replies
- 311 views
-
-
இந்திய எல்லைப்பகுதிகளை இணைத்து புதிய வரைப்படத்தை உருவாக்கியது நேபாள அரசு! இந்தியா, நேபாளம் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரும் சட்ட மூலத்தை நேபாள அரசு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி இந்திய – நேபாள எல்லையில் அமைந்துள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்தப் பகுதிகள் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா கூறிவருகிறது. அதேபோல் நேபாளத்தின் தாா்சுலா மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று அந்நாட்டு அரசும் கூறி வருகிறது. இதனிடையே உத்தரகண்ட் மாநிலத்தில் லிப…
-
- 0 replies
- 299 views
-
-
இழப்புகளை சந்திப்பீர்கள்.. அதிர்ச்சியை தாங்க முடியாது.. இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை.! பெய்ஜிங்: இந்தியா பெரிய இழப்புகளை சந்திக்கும், இந்தியாவால் இதற்கு மேலும் அதிர்ச்சியை தாங்க முடியாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. களமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள். இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள். முதல் முறையாக சீனா எல்லை பிரச்சனையில் இந்தியாவிற்கு எதிராக பேசி இருக்கிறது.இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனை மோசம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இதனால் போர் வெடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மத்தியஸ்தம் இந்த பிரச்சனையில் மத்தியஸ்தம் பேச விருப்பப்படுவதா…
-
- 1 reply
- 438 views
-
-
கொரோனா வைரஸ்: ‘’பொறுமை இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றனர்’’ - நரேந்திர சிங் தோமர் ஜுகல் புரோஹித் பிபிசி செய்தியாளர் Getty Images இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பொறுமையில்லாததால் சாலைகளில் நடந்தும், கூட்டமான ரயில்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் என மத்திய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முதல் கட்ட பொது முடக்கநிலையை அரசு திட்டமிடும் போது, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனையை அரசு கணித்ததா என கேட்டதற்கு,'' சிறந்த பொருளாதார வாய்ப்புகளுக்காக மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் புலம் பெயர்ந்து செல்கின்றனர். பொது முடக்கம் அறிவிக்கப்படும் போது புலம்பெ…
-
- 0 replies
- 301 views
-
-
கொரோனா தொற்று அதிகரிக்கும் போது இந்திய அரசு ஊரடங்கை தளர்த்துவது ஏன்? DIPTENDU DUTTA / Getty இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை மத்திய சுகாதாரத்துறை வெளியிடும் தரவுகள் காட்டுகின்றன. எனினும் ஊரடங்கை இந்திய அரசு தளர்த்தியிருப்பது ஏன்? இதுகுறித்து விரிவாக எழுதுகிறார் பிபிசி செய்தியாளர் அபர்ணா அல்லூரி. கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டுவருவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஜுன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தரைவழி போக்குவரத்து, விமான போக்குவரத்து எல்லாம் கடந்த 10…
-
- 0 replies
- 312 views
-
-
இந்தியா - சீனா எல்லை பதற்றம் எங்கு போய் முடியும்? அடுத்து என்ன நடக்கும்? அன்பரசன் எத்திராஜன் மற்றும் விகாஸ் பாண்டே பிபிசி AFP ஆசியாவின் இரு முக்கிய நாடுகளின் ராணுவங்களும் இமயமலையில் குவிக்கப்பட்டுள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. நிலைமை மேலும் மோசமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் தலைவர்களுக்கும், ராணுவ உத்தியாளர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ…
-
- 0 replies
- 320 views
-
-
நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிச் சென்ற குரங்குகள்! ஆய்வுகூட ஊழியர் ஒருவரை தாக்கிய குரங்குகள் கொரோனா நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் கொரோனா பரவக் கூடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக குருதி மாதிரிகள் எடுக்கப்பட்டு அங்குள்ள பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஆய்வுகூட ஊழியர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை குரங்குகள் தாக்கின. அவரிடமிருந்து 4 பேரின் இரத்த மாதிரிகளையும் பரிசோதனை கருவிக…
-
- 2 replies
- 432 views
-
-
தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி? Bharati May 31, 2020 தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி?2020-05-31T05:36:25+00:00Breaking news, அரசியல் களம் நிலாந்தன் சுமந்திரனின் பேட்டியில் அவர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுமந்திரனை விமர்சித்த பலரும் பேட்டியின் ஓரிடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்குரிய முக்கியமான பதிலை உற்று கவனிக்கத் தவறி விட்டதாகவே தெரிகிறது. நீங்கள் மறுபடியும் வெல்வீர்கள் என்று நம்புகிறீர்களா? என்று கேட்கப்பட்ட பொழுது சுமந்திரன் கூறுகிறார் “ஆம்” என்று. ஆணித்தரமாக அவர் அந்தப் பதிலைக் கூறுகிறார். எந்த துணிச்சலில் அவர் அந்த பதிலை கூறுகிறார…
-
- 0 replies
- 358 views
-
-
கொரோனா பொது முடக்கம்: மே 31 க்குப் பிறகு இந்தியாவில் என்ன நடக்கும்? - விரிவான தகவல்கள் சரோஜ் சிங், பிபிசி இந்தி Getty Images கோவிட் -19 பாதிப்பின் வேகத்தையும், விளைவுகளையும் கருத்தில் கொண்டு பொது முடக்கநிலையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். "உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்தேன், முடக்க நிலையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற எனது கருத்தை அவருடன் பகிர்ந்துக் கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார். எது எவ்வாறாயினும், 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவகங்களை திறக்க அனுமதிக்கலாம் போன்ற சில தளர்வுகளையும், இந்த முடக்க நிலையின்போது அறிவிக்க வேண்டுமென்று நாங்கள…
-
- 0 replies
- 268 views
-
-
கொரோனா வைரஸ்: தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியின் நிலை என்ன? படத்தின் காப்புரிமை Photography Promotion Trust கொரோனா வைரஸால் இந்தியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக மும்பை இருக்கிறது. அங்கு இதுவரை 35,000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்க கூடிய பகுதிகளில் ஒன்றான தாராவியில் மட்டும் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான தாராவியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நீண்டகாலமாக வசித்து …
-
- 0 replies
- 331 views
-
-
இந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்றக்கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 2-ல் விசாரணை கோப்புப்படம் புதுடெல்லி இந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்து இந்தியா எனும் வார்த்தையை மாற்றி இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு வரும் ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இல்லாததால், அந்த மனு நேற்று பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. வரும் ஜூன் 2-ம் தேதி விசாரிக்…
-
- 0 replies
- 341 views
-
-
இந்தியா முன்னுதாரணமாக மாறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம். டெல்லி: நரேந்திர மோடி தலைமையில், பாஜக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த, முதலாவது ஆண்டு நிறைவு தினம் மே 30ம் தேதியான இன்று அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ அரசு முதன்முதலில் 2014 மே 26 அன்று ஆட்சிக்கு வந்தது. பின்னர், கடந்த 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அந்த தேர்தலில், பாஜக மகத்தான வெற்றியைப் பெற்று பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் மோடி. பாஜக ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அனைத்து முன்னணி பத்திரிகைகளில் வெளியாகும் வகையில் ஒர…
-
- 0 replies
- 288 views
-
-
கொரோனா பாதிப்பு: மும்பை அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை மும்பை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை 1,65,799 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 71,105 ஆக உயர்ந்துள்ளது. 89,987 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது. ''மராட்டிய மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,982 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 960 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 321 ஆகவும் அதிகரித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 18,616 ஆக உயர்ந்துள…
-
- 0 replies
- 689 views
-
-
கொரோனா மரணங்களில் ஹிந்தியா தற்போது சீனாவை வென்று விட்டது. சீனா கொரோனா தொற்று ஏற்பட்டு.. 3 - 4 மாதங்களுக்குள் அதனை பெருமளவு கட்டுப்படுத்திய பின்னும்... கடந்த ஜனவரியில் இருந்து தொற்றுக் கண்டு வரும் ஹிந்தியாவில் இன்னும் தொற்றுக்கள் அதிகரிப்பதுடன்.. மொத்தக் கொரோனா மரண எண்ணிக்கை தற்போது சீனாவையும் தாண்டி விட்டது. ஆனால்.. இன்னும் கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை. Posted at 5:165:16 BREAKINGIndia's death toll passes China More people have now died with Covid-19 in India than China, according to latest figures from India's health ministry. The number of deaths has increased to 4,706 - in comparison, China has confirmed 4,638. Wi…
-
- 1 reply
- 494 views
-