நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
தாவரவியல் பெயர்: Centella asiatica அடையாளம்: வல்லாரை தரையோடு படர்ந்து வளரும் செடி வகை. இலைகள் தவளையின் காலை ஒத்திருக்கும். நீர்நிலைகளுக்கு அருகில் இந்தச் செடியை அதிகம் பார்க்கலாம். இனப்பெருக்கம்: கிளைகளைக் கொண்டு இதை இனப்பெருக்கம் செய்யலாம். ஒரு வாரத்தில் புதிய கிளைகள் துளிர்த்துவிடும். வரலாற்றில்: ஆசிய நாடுகளின் நீர்நிலைப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. ஆயுர்வேதம், ஆப்பிரிக்க, சீனப் பாரம்பரிய மருத்துவங் களில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைமருத்துவம்: இலங்கை சமையலில் சோறு குழம்புடன் சேர்த்து வல்லாரை சாப்பிடப்படுகிறது. அரைக்கப்பட்டுப் பானமாகவும் அருந்தப்படுகிறது. தெற்காசியச் சமையலில் சாலட், பானங்கள் செய்வதற்குப் புகழ்பெற்றது. இதில் உ…
-
- 0 replies
- 585 views
-
-
மூளைக்கும் முண்ணானுக்கும் தெடர்பில்லாமல் எழுதுபவர்களுக்கும் இப்படி நோய் வர சாத்தியம் கூட மூளைய மென்சவ்வு அழற்சி (Meningitis) மூளைய மென்சவ்வு அழற்சி என்பது மூளை மற்றும் முண்ணாணினை போர்த்தியுள்ள மென்சவ்வுகளில் பற்றீரியா, வைரஸ், மற்றும் பங்கஸ் கிருமிகளின் தொற்று காரணமாக உருவாகும் அழற்சி நோயாகும். இது 90% பற்றீரியாக்களாலேயே ஏற்படுகின்றது. அத்துடன் கிருமித்தொற்றல்லாத மூளைய மென்சவ்வழற்சியும் காணப்படுகிறது. அநேகமானோரில் மூளைய மென்சவ்வு அழற்சி உருவாகும் போது குருதியிலும் கிருமித்தொற்று உருவாகிறது.(Septicaemia). முக்கியமாக மெனிங்கோகொக்கஸ் எனும் பற்றீரியா தொற்றின் போது இந்நிலை ஏற்படுகின்றது.. பற்றீரிய கிருமிகளால் உருவாகும் மூளையமென்சவ்வு அழற்சி மிகவும் அரிதாகவே …
-
- 0 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஓரோபோச் வைரஸ் இயற்கையாகவே வன்மக்கரடி, குரங்குகள் போன்ற விலங்குகளிலும் காணப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரே பீயர்நத் பதவி, பிபிசி நியூஸ், பிரேசில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபகாலமாக, தொடர்ந்து அதிகரிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள், இதைத் தடுக்க தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் இல்லாத நிலை, வைரஸ் குறித்த போதிய தரவுகள் இல்லாதது என ஓரோபோச் காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஜூலை மாத இறுதியில் பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலமான பஹியாவைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் ஓ…
-
- 0 replies
- 631 views
- 1 follower
-
-
யோகா--சுப்த - வஜ்ராசனம் வியாழன், 6 மார்ச் 2008( 17:02 IST ) வஜ்ராசன நிலையில் அமரவும் . முதலில் இடது முழங்கை முட்டியையும், பிறகு வலது முழங்கை முட்டியையும் ஒன்றன் பின் ஒன்றாக மிக மெதுவாக பின் பக்கத் தரையில் வைக்கவும். 2. மெதுவாக உடலை பின் பக்கமாகச் சாய்த்து - முதுகையும், பிறகு தலையையும் தரையில் வைக்கவும். கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் நேராக வைக்கவும். 3. தோள்கள் இரண்டும் தரையை தொட்ட நிலையிலும், முழங்கால் முட்டிகள் இரண்டும் அருகருகே சேர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். புதிதாகத் துவக்குபவர்கள் கைகள் இரண்டையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளலாம். 4. இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்றதும், இரண்டு கைகளையும் மேல் நோக்கி மடக…
-
- 0 replies
- 5.7k views
-
-
வறட்டு இருமலை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம் Posted By: ShanthiniPosted date: December 22, 2015in: ஆரோக்கியம் தேவையான பொருட்கள் எள்ளு – 50 கிராம் நல்ல மிளகு- 3 தேக்கரண்டி வெள்ளைப் புண்டு – 8 பல் சுக்கு – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை எள்ளுவை வாணலியில் போட்டு சிறு தீயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து அம்மியில் (மிக்சி) போட்டு பொடி செய்து கொள்ளவும். இதனுடன் மிளகு, பூண்டு மற்றும் சுக்கு இவற்றையும் பொடி செய்து கொள்ளவும். பின் அடுப்பில் வாணலியை வைத்து இவற்றை அதில் போட்டு தேவையான அளவு தண்ணீர் 2 டம்ளர்) சேர்த்து தேவையான அளவு உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பதத்திற்கு வந்ததும் இம்மருந்தை சற்று சூடாக குடிக்கவும். இரண்டு நாள் தொடர்ந…
-
- 0 replies
- 625 views
-
-
ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன முகப்பூச்சு பவுடரைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக விக்கி பாரெஸ்ட் என்பவர் மிசௌரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் நகர நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், விக்கி பாரெஸ்ட் தொடர்ந்த வழக்கை விசாரித்த அந்நாட்டின் நீதிமன்றம் அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்கு நிறுவனத்தின் முகப்பவுடர் காரணமல்ல என்று தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் தங்கள் நிறுவன முகப்பவுடர் பாதுகாப்பானது என்பதையு…
-
- 0 replies
- 304 views
-
-
கார்டியாக் அரெஸ்ட்(இதய நிறுத்தம்) என்றால் என்ன? எப்படி அது ஹார்ட் அட்டாக்கிலிருந்து (மாரடைப்பு) வேறுபடுகிறது? ஹார்ட் (heart.org) இணையதளத்தின் தகவலின்படி, கார்டியாக் அரெஸ்ட் என்பது உடலில் எந்தவொரு எச்சரிக்கையையும் காட்டாமல் திடீரென்று ஏற்படுவது. இதயத்தில் ஏற்படும் மின் இடையூறுகள்தான், பொதுவாக, கார்டியாக் அரெஸ்ட்டுக்கு காரணம். இந்த இடையூறு, இதயத் துடிப்பில் ஆதிக்கம் செலுத்தி, அதன் நிகழ்வுத் தன்மையில் குறிக்கிடுகிறது. இது இதய ரத்த ஓட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி, மூளை, இதயம் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது. கார்டியாக் அரெஸ்டால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்த சில நொடிகளில் தங்கள் சுயநினைவை இழக்கிறார்கள். …
-
- 0 replies
- 357 views
-
-
இறைச்சி உணவை விட வீகன் உணவு ஆரோக்கியமானதா? - இரட்டையர்கள் மேற்கொண்ட ஒரு பரிசோதனை முயற்சி இரட்டையர்களான ஹியூகோவும் ரோஸ் டர்னரும், ஒரு பரிசோதனை முயற்சியாக 12 வாரங்கள் டயட்டில் இருந்தனர். ஹியூகோ 'வீகன்' உணவு உண்பவராக மாறினார். ரோஸ் தொடர்ந்து இறைச்சி சாப்பிட்டார். என்ன நடந்தது? " நாங்கள் மரபணு ரீதியில் இரட்டையர்களாக இருப்பதால், பல்வேறு உணவுகள், உடற்பயிற்சி முறைகளை ஒப்பிட்டுப் பார்த்து, எங்களுக்கு எது சரியாக இருக்கிறது என்பதை கண்டறியலாம். அதனால், தாவர வகை உணவுகள், இறைச்சி வகை உணவுகளில் எது எங்களுக்கு சிறந்தது என்பதையும் சோதிக்க விரும்பினோம்," என்று சாகச தடகள வீரரான ரோஸ் டர்னர் கூறுகிறார். இந்த இரட்டையர்கள் 12 வார பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஹி…
-
- 0 replies
- 412 views
-
-
ஆரோக்கியமற்ற எதிர்காலத்தையும் பொருளாதாரப் பேரழிவையும் நொறுக்குத்தீனிகள் ஏற்படுத்திவிடும் நொறுக்குத்தீனிகளை இடைவெளியின்றித் தின்று, மென்பானங்களை வரம்பின்றிக் குடிப்பதால் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் உடல்நலனைக் கெடுத்துக்கொள்கின்றனர். இது அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலி. இதுகுறித்து, நாடு முழுக்க இருந்த கவலையை அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் 'நாம் செயல்படுவோம்' என்ற இயக்கத்தைத் தொடங்கினோம். அடுத்த தலைமுறைக் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வளர வேண்டும் என்ற அக்கறைதான் இதற்கு அடிப்படைக் காரணம். நொறுக்குத்தீனி கடைகள் X நல்ல உணவுக்கான கடைகள் இந்த லட்சியத்தை எட்ட, எது சாத்தியமோ அதை நடைமுறைப்படுத்துவது என்ற முடிவை எடுத்தோம். ஆதாரங்களின் அடிப்படையில், அறிவியல்பூர…
-
- 0 replies
- 377 views
-
-
எட்டு வடிவ நடைபயிற்சி எப்படி போகணும்? யாரெல்லாம் போகணும்?
-
- 0 replies
- 738 views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2025, 01:53 GMT இந்தியாவின் நகர்ப்புற குடும்பங்களில் 56% பேர் கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை மாதத்திற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை உட்கொள்கிறார்கள், இதில் 18% பேர் தினமும் அவற்றை உட்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஆய்வில் பங்கேற்ற கணிசமானோர் (55%) இனிப்புகளைத் தவிர்க்க முடியாது என்றும் ஆனால் அதில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கவேண்டுமென விரும்புவதாகவும் கூறியுள்ளனர். இப்போதெல்லாம், எந்த உணவுப் பொருளை எடுத்தாலும் அதில் எவ்வளவு சர்க்கரை அளவு உள்ளது என தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கிறோம். 'அதிக சர்க்கரை' உடலுக்கு கேடு என்பதை பலரு…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
Autism பற்றி பலரும் அறியாத தகவல்கள்
-
- 0 replies
- 491 views
-
-
துரித உணவுகளில் உயிர்க்கொல்லி கொழுப்பு "இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லுங்க? ஏன்னா Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கணும்" என்று விடுமுறைக்கு வந்த எங்கள் குடும்ப நண்பரின் மகன் கடையில் இப்படி சொன்னான், போன மாதம் அவன் காய்ச்சலில் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வை° பொருள் வாங்குமுன் அதை கவனிக்க வேண்டும் என்பது.. Zero Added Hydrogenated என்பது செயற்கையாக செய்யப்படும். இது பசு, எருது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும் சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப் படுகிறது! இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து. இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL) சத்தை குறைத…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாதவிடாய்க் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய அன்றாடக் கடமைகளைச் செய்யவிடாமல் முடக்குவதில் அதிக இரத்தப் போக்கும் பங்கு வகிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு இரத்தப் போக்கு மற்றும் அது அதிக நாட்கள் நீடித்தால் அதை மெனோராஜியா என்று குறிப்பிடுகிறார்கள். மெட்ரோராஜியா என்றால் இரு மாதவிடாய்களுக்கு இடையிலும் ரத்தப் போக்கு ஏற்படுதலைக் குறிக்கிறது. அதிக அளவு இரத்த இழப்பால் இரத்த சோகையும் ஏற்படுகிறது. மாத விலக்கின் போது அதிக இரத்தப் போக்கினால் அடிக்கடி நாப்கின்களை மாற்ற வேண்டிவரும். இதனால் தொடைகளில் உராய்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும். எங்கே சென்றாலும் இரண்டுமணி நேரத்திற்கு ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்று பேடை மாற்றவேண்டி வருவதால் வெளியே செல்வதே சிரமம் கொடுப்பதாய் இருக்கும்.…
-
- 0 replies
- 798 views
- 1 follower
-
-
மனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை. “10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர், திடீரென போய் விட்டாரே. நேற்று நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே’ என்று பலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்ன? இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புதான். இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது மாரடைப்பாக உருமாறி உயிரை மாய்க்கிறது. மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாகப் பரிணாமம் எடுத்து மனிதனை முடக்கி விடுகிறது. துடிக்கும் மனித இதயம், மனிதனுக்கும் வாழ்வை வழங்குகிறது. மனிதன் வாழ வேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 ம…
-
- 0 replies
- 427 views
-
-
தண்ணீர் மாசுபாடு எதிரொலி: மத்தியப் பிரதேசத்தில் மீன்களுக்கும் கேன்சர்?! தண்ணீர் மாசுபாடு மனிதர்களை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக, நீர் வாழ் உயிரினங்களுக்கும் அது பெரும் ஆபத்தாகிவிடுகிறது. ஜபல்பூரில் உள்ள ஃபிஷரி சயின்ஸ் கல்லூரி நடத்திய ஆய்வில் தண்ணீர் மாசுபாடு மீன்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இறந்த மீன்களை பரிசோதித்தபோது, அதிகப்படியான மீன்கள் தோல் புற்றுநோயால் இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகள் மட்டுமல்லாது, ஆறுகளில்கூட இந்த அபாயம் உள்ளது. மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் மீன்கள் இறப்புகளுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மீன் ஒன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 657 views
-
-
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்? ஆஸ்துமா குணமாக: முட்டைக் கோஸ், முருக்கைக்காய், புதினா, வெள்ளைப்பூண்டு, மணத்தக்காளி, பசலைக்கீரை, தக்காளி, லெட்டூஸ், செலரி. இருமல் குணமாக: சுரைக்காய், வெண்டைக்காய், இஞ்சி, புதினா, வெள்ளைப்பூண்டு, முட்டைக்கோஸ். இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு முதலியவற்றைக் குணப்படுத்த: காரட், பச்சைப் பட்டாணி, காலிஃபிளவர், புடலங்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம், காளான், பூசணி, பசலைக்கீரை, லெட்டூஸ், சோயா, செலரி, கொத்துமல்லி. இளமைத்துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் உட…
-
- 0 replies
- 890 views
-
-
[size=4]முட்டை சைவமா? அசைவமா? என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள்.[/size] [size=4]இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொழுப்பு இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொழுப்பு அதிகரிக்கவில்லை.[/size] [size=4]அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற…
-
- 0 replies
- 497 views
-
-
கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் உடல்நலத்துக்கு நல்லதா? உடல் எடை குறைக்க உதவுமா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இணையத்தில் அதிகம் தேடப்படும் உணவுமுறைகளாக, ஆட்கின்ஸ் முதல் கீட்டோ வரையிலான கார்போஹைட்ரேட் குறைவான உணவுமுறைகள் உள்ளன. இந்த உணவுமுறைகள் உடல் எடை குறைப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைப்பு, அவ்வளவு ஏன் டைப் 2 வகை நீரிழிவு நோயைக்கூட குணமாக்கிவிடும் என கூறப்படுகிறது. ஆனால், கார்போஹைட்ரேட்டுகளை முழுவதும் நம் உணவிலிருந்து நீக்கிவிடுவது, நாம் பின்பற்றுவதற்கான ஆரோக்கியமான உணவுமுறைதானா? கார்போஹைட்ரேட்டுகள் என்றால் என்ன? கார்போஹைட்ரேட்டுகள் உணவு மற்றும் பானங்களில் காணப்படும் மூன்று மேக்ரோ-நியூட்ரியண…
-
- 0 replies
- 603 views
- 1 follower
-
-
பொதுவாக காலை உணவு சாப்பிடுவதை தற்போதைய காலக்கட்டத்தில் பலர் தவிர்த்துவிடுகின்றனர். அலுவலம் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் காலை உணவை சாப்பிடாமல் செல்கின்றனர். சிலர் ஆரோக்கியமற்ற உணவை வெளியிலும் சாப்பிடுகின்றனர். ஆனால் காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே காலை உணவை தினந்தோறும் சாப்பிட வேண்டும். மேலும் சில காலை உணவுகள் நம் அரோக்கியத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இட்லி இட்லியை காலையில் சாப்பிடுவதால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், அத்தியாவசிய கலோரிகள் உடலுக்கு கிடைக்கும். இதனால் அன்றைய பொழுது நன்கு ஆரோக்கியமாக செல்லும். தோசை இதில் புரோட்டீன், கார்போஹைட்ரேட் அதிகமாகவும், க…
-
- 0 replies
- 2.3k views
-
-
தலைவலி, முதுகுவலி மாதிரி பரவலாக பலரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கிட்னி ஸ்டோன் எனப்படுகிற சிறுநீரகக்கல். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சிறுநீரகக் கல் பாதிப்பின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தன். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே சிறுநீர் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆ…
-
- 0 replies
- 498 views
-
-
அளவுக்கு அதிகமாக திரவ உணவு உயிருக்கு ஆபத்தானதா? உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவர்கள் பெரும்பாலும் நோயாளிகளை திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுமாறு ஆலோசனை வழங்குவார்கள். ஆனால், அதிக தண்ணீரை விரைவாக அருந்தினால் அது ஆபத்தில் முடிவடையும் என்பது 59 வயது பெண் ஒருவரைப் பொருத்தவரை உண்மையாகியிருக்கிறது. சிறுநீர் தொற்று ஒன்றை தவிர்க்க எடுத்த முயற்சிகளை தொடர்ந்து, அந்த பெண்மணி ஹைபோனேடேரேமியா அல்லது நீர் போதை என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் நோய்கள் குறித்த கட்டுரைகளை எழுதும் மருத்துவர்கள், ஆரோக்கியமான மனிதர்களிடையே ஏற்படும் ஓர் அரிதான நிகழ்வு என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், நோயாளிகள் திரவ உணவு…
-
- 0 replies
- 310 views
-
-
நிலவேம்பு குறித்த தவறான தகவல் - சித்த மருத்துவ அமைப்பினர் விளக்கம். நிலவேம்பு குடிநீர் அனைத்து வித காய்ச்சலையும் குணப்படுத்தும் என சித்த மருத்துவ அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். நெல்லையில் சித்த மருத்துவ நண்பர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜோசப் தாஸ் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது, நிலவேம்பு குடிநீர் பற்றிய விவாதங்களால் தமிழக மக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. நிலவேம்பு என்ற மூலிகை சித்த மருத்துவம் மட்டுமல்லாது எல்லா வித மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.100 ஆண்டுகளுக்கு முன்பே இந்த எளிய மூலிகை பற்றி டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் வங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலவேம்பு, சீரகம், ஏலக்காய் கொண்டு தயாரித்த ஆலூயி என்ற மருந்து வீட்டுக…
-
- 0 replies
- 610 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுப்ரியா ராஜசேகர் பதவி,பிபிசி தமிழ் 19 ஏப்ரல் 2023, 02:39 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 19ஆம் தேதி கல்லீரல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும். இந்த வருடத்திற்கான கருப்பொருள், “விழிப்புடன் இருக்க வேண்டும், தகுந்த இடைவெளிகளில் கல்லீரல் சோதனையை மேற்கொள்ள வேண்டும், 'ஃபேட்டி லிவர் பிரச்னை யாருக்கு வேண்டுமென்றாலும் ஏற்படலாம்” என்பதுதான். எனவே நமது உடல் இயக்கத்திற்கு கல்லீரல் எவ்வளவு முக்கியம், அதை…
-
- 0 replies
- 848 views
- 1 follower
-
-
நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. அதே சமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். …
-
- 0 replies
- 2.3k views
-