நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
நடிகர் அஜித்தை பாதித்துள்ள 'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும் பட மூலாதாரம், X/Ajithkumar Racing கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 8 அக்டோபர் 2025, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 8 அக்டோபர் 2025, 02:44 GMT தூக்கம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது. நடிகர் அஜித்குமார் தற்போது 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற பெயரில் கார் பந்தயப் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் இந்தியா டூடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தனக்கு தூக்கமின்மை பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தார். தன்னால் அதிகபட்சமாக 4 மணி நேரம் தான் தொடர்ந்து தூங்க முடிவதாக தெரிவித்த அஜித் குமார், "எனக்கு திரைப்படங்கள…
-
-
- 1 reply
- 347 views
- 1 follower
-
-
தயிர் ஓர் அருமருந்து !நமது பாரம்பரிய உணவுகளில் நிறைய மருத்துவமும் சேர்ந்திருந்தது என்பதை பல ஆய்வுகள் மூலம் அறிகிறோம். உணவே மருந்து என்ற முறைக்கு ஏற்றபடி பண்டைய தமிழர்களின் உணவு முறை இருந்தது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் தயிர் என்பது. வெப்பப்பகுதியில் வாழும் நமக்கு இந்த தயிர் எத்தனை நன்மை பயக்கிறது என்பதை விரிவாக சொல்லும் காணொளி இது !நமது பாரம்பரிய உணவுகளில் நிறைய மருத்துவமும் சேர்ந்திருந்தது என்பதை பல ஆய்வுகள் மூலம் அறிகிறோம். உணவே மருந்து என்ற முறைக்கு ஏற்றபடி பண்டைய தமிழர்களின் உணவு முறை இருந்தது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் தயிர் என்பது. வெப்பப்பகுதியில் வாழும் நமக்கு இந்த தய…
-
- 0 replies
- 346 views
-
-
சமூக வலைத் தளங்களில் தினசரி 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரத்தைச் செலவிடும் இளவயதினருக்கு மனநலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகமாகவுள்ளதாக புதிய ஆய்வொன்று எச்சரிக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் உள்ளடங்கலான சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் இளவயதினர் மனப் பதற்றம், மன அழுத்தம் என்பவற்றுக்கு தாம் உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க மேரிலான்ட்டில் பல்ரிமோரிலுள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினரால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் இள வயதினரிடையே ஆக்கிரமிப்புண…
-
- 0 replies
- 345 views
-
-
உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்க்கான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கையில், பா.ஜ.க பிரமுகர்கள் வழக்கம்போல் பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா வைரஸுக்கு மருந்தாகப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர். எங்கோ சீனாவில்தானே பாதிப்பு என்றிருந்த கொரோனா வைரஸின் வீரியம் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி விட்டது. இந்தியாவில் மட்டும் 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய நிலவரம். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்க்கு இன்றுவரை 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 95,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சீனாவைத் தாண்டியும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 3,286 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவ…
-
- 0 replies
- 344 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி பதவி, 11 மே 2025 அல்சைமர் முதல் புற்றுநோய் வரை ஒருவரின் ஆரோக்கியம் குறித்த அனைத்து முக்கியமான அறிகுறிகள் காதில் படியும் அழுக்கு (earwax) மூலம் அறிந்து கொள்ளலாம். காதில் படியும் அழுக்கில் உள்ள வேதிப் பொருட்களை பகுப்பாய்வு செய்வதன் மூலமாக புதிய நோய் அறியும் முறைகளை கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சாம்பல் நிறத்தில் இருக்கும் இதைப் பற்றி நீங்கள் எந்த ஒரு உரையாடலிலும் பேச விரும்பமாட்டீர்கள். ஆனாலும், ஆராய்ச்சியாளர்கள் இதைப் பயன்படுத்தி புற்றுநோய், இதய நோய், டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தி வரு…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
உலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல் உலகம் முழுவதும் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளாலேயே இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது. த லான்ஸெட் ஒன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது, “உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும், பிரிட்டன் 23ஆவது இடத்திலும், சீனா 140ஆவது மற்றும் இந்தியா 118 ஆவது இடத்திலும் உள்ளன. விதைகள், பால் மற்றும் முழ…
-
- 0 replies
- 343 views
-
-
கொரோனா பாதிப்பு ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமா? - பாலியல் மருத்துவரின் விளக்கம் கை, கால் போன்ற ஏதேனும் உடல் உறுப்பில் ரத்த உறைவு ஏற்படும்போது அந்த உறுப்பின் செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாகச் செல்கள் இறக்கத் தொடங்கும். டோனி விருதுக்குப் (Tony Award) பரிந்துரைக்கப்பட்ட நடிகர் நிக் கோர்டரோ கனடாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானார். அவரின் மனைவி அமண்டா க்ளுட்ஸ் தன் கணவரின் உடல்நிலை குறித்த தகவல்களை ரசிகர்களுக்குத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார். சமீபத்தில் அவர் அளித்துள்ள தகவலின்படி கொரோனா வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கும் கோர்டரோ வெகுவாகப் பா…
-
- 0 replies
- 342 views
-
-
அண்மையில் மறைந்த கியூப பொதுவுடைமைத் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு முதுமையில் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை. காஸ்ட்ரோவுக்கு முருங்கை செய்த உதவி தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் உலாவரும் செய்திகள், அதன் ஒரு பாகத்தை மட்டுமே சொல்கின்றன. காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே முருங்கைத் தோட்டத்தை வளர்த்துவந்தார். முதுமையில் தன்னைக் காப்பாற்றிய முருங்கை தாவரத்தின் அற்புதத் திறன்கள் பற்றி, தன் நாட்டு மக்களிடையே காஸ்ட்ரோ உரையாற்றியுள்ளார். அதை அதிசயமான தாவரம் என்று புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல், வீடுதோறும் முருங்கை…
-
- 0 replies
- 342 views
-
-
நியோகோவ்’ வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை – விஞ்ஞானிகள் ஆறுதல் தகவல் சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான்.உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்று பாதிப்பின் வீரியம் சற்று தணிந்தாலும் அச்சுறுத்தல் முழுமையாக …
-
- 0 replies
- 340 views
-
-
வெற்றிகரமாக நடந்த அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மருத்துமனை மருத்துவர்கள், அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இது அறுவை சிகிச்சை வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். ஆணுறுப்பு தொடர்பான புற்று நோயால் பாதிப்படைந்த 64 வயதாகும் தாமஸ் மானிங் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது. அண்மையில் அவருக்கு ஆணுறுப்பு தானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. உலகளவில் பரிசோதனை ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள மூன்றாவது நபர் என்ற பெருமையை தாமஸ் மானிங் பெற்றுள்ளார். …
-
- 0 replies
- 340 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முளைகட்டிய பயறு கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் ஷியா பதவி, பிபிசி உலகச் சேவை 6 மணி நேரங்களுக்கு முன்னர் உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞரான பில் மார்லர் கடந்த 30 ஆண்டுகளாக உணவு கலப்படத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடி வருகிறார். ஈ.கோலை (E.coli), சால்மோனெல்லா, லிஸ்டீரியா மற்றும் பிற வகையான உணவு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் போராடி வருகிறார். அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றுள்ள `விஷம்: உங்கள் உணவைப் பற்றிய அசுத்தமான உண்மைகள்` (Poisoned: The Dirty Truth About Your Food) என…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
உணவு, உடல்நலம், சமையல்: புரதம் நிறைந்த ஆனால் புறக்கணிக்கப்படும் அற்புத உணவு இசபெல்லா கெர்ஸ்டென் பிபிசி ஃப்யூச்சர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பெரும்பகுதியில், புரதம் நிறைந்த உணவுகளான பூச்சிகள் ஆசையாக உண்ணப்படுகின்றன. நம்மில் சிலருக்கு அது ஏன் அருவருப்பைத் தருகிறது? க்ரிக்கெட் பூச்சிகளாலான பர்கர், மீல் புழுக்கள் கலந்து செய்யப்பட்ட ஃப்ரைட் ரைஸ் ஆகிய உணவுகளை எந்தவித வித்தியாசமும் இன்றி உண்பதற்குக் கொஞ்சம் பழக்கப்படவேண்டியிருக்கும். ஆனால் இப்போதைக்கு இது உங்களுக்கு அருவருப்பைத் தந்தாலும், நமது உணவில் இது எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கலாம். சில ஆராய்ச்சியாளர்கள் இது முக்கியப் பங்கு வக…
-
- 0 replies
- 339 views
- 1 follower
-
-
புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டும் துல்லிய வீடியோ ஒவ்வொரு செல்லிலும் புற்றுநோய் பரவுவதை துல்லியமாக விடியோவில் படம் பிடித்துள்ளனர் ஜப்பான் குழுவினர். இந்த வீடியோவில், இயல்பான உடல் திசுக்கள் பச்சை நிறமாகவும் புற்றுநோய் திசுக்கள் அடர் சிவப்பு நிறமாகவும் காட்டப்பட்டுள்ளது. அந்த ஆபத்தான முறையை விளக்க இந்த தொழில்நுட்பம் பயன்படும் என டோக்கியோ பல்கலைக்கழகத்தின் குழு மற்றும் ரிகென் க்வாண்டிடேடிவ் உயிரியல் மையத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர். எலியின் மீது இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். உடல் முழுவதும் புற்றுநோய் பரவும் ஆபத்தான நிலையை `மெடாசிஸ…
-
- 0 replies
- 338 views
-
-
தாத்தா பாட்டிகளும் யாழ்களம் வந்தால் இளைஞராகி விடுவது வழமை. சூட்சுமம் என்ன? இதோ👇
-
- 0 replies
- 337 views
-
-
'ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange 20 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'ஸ்டெம் செல்' தானம் குறித்த விழுப்புணர்வு ஏன் முக்கியம்? #iamthechange (Be the Cha…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முதியோர்களுக்கு மட்டுமே ஆஸ்டியோபோரோசிஸ் நிலை ஏற்படும் என்று பரவலாக கருதப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. நமது உணவு , வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக, எந்த வயதிலும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு ஒருவருக்கு ஏற்படக்கூடும். ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன? எலும்புகள் அதன் வலுவை இழப்பதும், தடுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு பலவீனமாக இருக்கும் நிலையே எலும்பு வலு இழப்பு ஆகும். இது ஆங்கிலத்தில் 'ஆஸ்டியோபோரோசிஸ்' என்று அழைக்கப்படுகிறது. எலும்பு வலிமை இழப்பதால் ஏற்படும் எலும்பு முறிவுகள் 'பிளேகிலிட்டி ஃபிராக்சர்ஸ்' என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த எலும…
-
- 0 replies
- 336 views
- 1 follower
-
-
பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்குவீர்களா? ஆய்வில் அதிர்ச்சி தகவல் பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்குவது நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயத்தை 45 சதவீதத்தால் அதிகரிப்பதாக ஜப்பானிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வின் பெறுபேறுகள் உலகமெங்குமுள்ள 307,237 பேரை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட 21 ஆய்வுகளை அடிப்படை யாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பகல் பொழுதில் சுமார் 60 நிமிடங்கள் உறக்கத்தில் ஆழ்பவர்களுக்கு அவ்வாறு உறங்காதவர்களுடன் ஒப்பிடுகையில் நீரிழிவு ஏற்படும் அபாயம் 45 சதவீதம் அதிகமாகவுள்ளதாக டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் யமடா த…
-
- 0 replies
- 336 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று பரவி உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய உடலின் வெப்பநிலையை கண்டறிய இன்ஃபராரெட் தெர்மா மீற்றர் என்ற பரிசோதனை கருவி பயன்படுத்தப்படுகிறது. எம்முடைய உடலின் வெப்ப நிலையை அறிய அகச்சிவப்பு கதிர்களை காரணியாக கொண்டிருக்கும் இந்த கருவியின் பயன்பாடு, குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் பாதுகாப்பானதா? என்ற வினா தற்பொழுது எழுந்திருக்கிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/140566/image_health_9_12_2020.jpg இதற்கு மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில், “ கொரோனா வைரஸ் பெரும் தொற்று பரவலிருந்து காப்பாற்றவும், அந்த தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறியவும், ஒவ்வொருவருக்கும் அவர்களின் உட…
-
- 0 replies
- 335 views
-
-
கோடைக் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கும் உணவு வகைகள் என்னென்ன? அவற்றை சமைப்பது எப்படி? குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்? - Explained by Ramya Ramachandran(உணவியல் ஆலோசகர்)
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 3 மார்ச் 2025, 04:50 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் உங்களால் ஒருநாளைக் கூட கடக்க முடியாதா? 'அப்படியென்றால் உங்களுக்கு நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படும்' எனக் கூறுகிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை. பாதுகாப்பற்ற இயர்போன்களின் பயன்பாடு மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பொது சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது. 'இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பை மாத்திரைகள் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது' என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். இயர்போன் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல் என்ன? ஆய்வு …
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SIDDIQUI படக்குறிப்பு,பெற்றோருடன் அஃப்னான் ஜாசிம் கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி இந்திக்காக, பெங்களூருவில் இருந்து 28 ஜூலை 2024 சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட ஒரு பொது விழிப்புணர்வுப் பிரசாரத்தால், கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மூளையை உண்ணும் அமீபா தாக்கத்திலிருந்து தப்பியுள்ளார். அஃப்னான் ஜாசிம் என்ற அந்த மாணவர் இந்தக் கிருமியிடமிருந்து உயிர் பிழைத்த ஒன்பதாவது நபர் ஆவார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் இருந்து 22 நாட்களுக்குப் பிறகு அஃப்னான் ஜாசிம் வீடு திரும்பியுள்ளார். அவர் உயிர் பிழைக்க காரணம், இந்தக் கிருமித் தொற்று இருந்தது ஆரம்பத்திலேயே க…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
சுவாச கோளாறு காரணமாக திடீரென்று ஏற்படும் மூச்சுத்திணறல் தொடர்பான acute respiratory distress syndrome என்ற பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிவதற்காக தற்பொழுது ஸ்மார்ட் ஸ்டெதாஸ்கோப் என்ற கருவி கண்டறியப்பட்டிருக்கிறது. சுவாசப் பாதையில் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளால் மூச்சுத் திணறல், இதய பாதிப்பு, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக சிலருக்கு இதயத்துடிப்பு சீரற்றதாக இருக்கும். தற்போதுள்ள நடைமுறையில் இத்தகைய நோயாளிகளை மருத்துவர்கள் தங்களிடமுள்ள ஸ்டெதாஸ்கோப்பினால் தான் இதய துடிப்பை கண்டறிவார்கள். ஆனால் தற்போது கண்டறியப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட் ஸ்டெதாஸ்கோப்பால் நோயாளி தொலைவில் இருந்தாலும் இத்தகைய பாதிப்பை கண்டறிய இயலும். அதே தருணத்தில…
-
- 1 reply
- 334 views
-
-
மலைவேம்பு பூ ஆண்டு முழுவதும் பருவநிலை மாறிக்கொண்டே இருப்பதால், பல்வேறு நோய்கள் தலைதூக்கி மக்களை அச்சுறுத்துகின்றன. மழைக்காலத்தில் அபரிமிதமாகப் பெருகும் கொசுக்களால் உண்டாகும் `டெங்கு’ காய்ச்சல், இப்போது பரபரத்துக் கிடக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முறைகளையும், நோய் ஏற்பட்டால் அதைப் போக்கும் வழிமுறைகளையும் பார்ப்போம். தற்காப்பு முறைகள் "பகல் நேரத்துல கொசு கடிச்சா, கண்டிப்பா அது டெங்குதான்" என அலறுவதும், உடலின் வெப்பநிலை சற்று அதிகரித்தாலே, "டெங்கு ஜுரமா இருக்குமோ?" என்று சிலர் பீதியைக் கிளப்பிவிடுவதும், அதிக அசதி காரணமாகக் கை, கால்களில் வலி ஏற்பட்டாலும்கூட, "டெங்கு காய்ச்சலின் அறிகுறியோ?" என மக்கள் மனதுக்குள் புலம்புவதையும் அநேக இடங்களில் பார்க்க முடிகி…
-
- 0 replies
- 333 views
-
-
நடந்து பாருங்கள், நண்பர்களே...! நடக்க, நடக்க... நமக்குள், நடப்பது... என்ன? நம்ப முடியாத, ஆச்சரியங்கள் !!! அடுத்தடுத்து நிகழும் அற்புதங்கள் !!! அனைத்தும் ஆதாரபூர்வ... அறிவியல் உண்மைகள் !!! நிமிடம் ஒவ்வொன்றிலும்... நீங்களே உணரலாம்; நாள் ஒவ்வொன்றையும்... நலமாய்த் தொடங்கலாம்... ஒன்றாம் நிமிடத்திலேயே ஒவ்வொரு செல்லுக்குள்ளும்... ஓர் ஆற்றல் ஊற்றெடுக்கிறது !!! அடுத்த நிமிடத்தில் அங்கம் எங்கும் ஊக்கத்துடன்... அருவி போல் குருதி பரவுகிறது !!! மூன்றாம் நிமிடத்திலேயே மூட்டுக்களின் இறுக்கம்... முற்றிலுமாகத…
-
- 4 replies
- 333 views
-
-
இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அத…
-
- 0 replies
- 332 views
-