நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
எந்திரன்: முதியவர்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் சூப்பர் ஆடை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தினமும் பத்தாயிரம் அடி தூரம் நடப்பதை உறுதிப்படுத்த ஸ்மார்ட் வாட்ச் அணிவதிலிருந்து வங்கிக்கணக்கு தகவல்களை தெரிந்துகொள்வது வரை, வேரபிள் (wearable) டெக்னாலஜி எனப்படும் அணிசாதன தொழில்நுட்பம் நமக்கு வெகுவாக பயன்பட்டு வருகிறது. நமது உடலில் அணியக்கூடிய மின் சாதனங்கள் நமக்கு தனிப்பட்ட பல…
-
- 0 replies
- 447 views
-
-
வர வர எந்தெந்த உணவுப்பொருள்கள் சாப்பிடுவது நல்லது, எப்படி சாப்பிட்டால் நல்லது, எப்படி சாப்பிட்டால் கெடுதலானது என்பதை எத்தனை படித்தாலும் குழப்பமே மிஞ்சுகிறது! ரொம்ப நாளாக இதைப்பற்றி எழுத நினைத்திருந்தேன். சமீபத்திய சில அனுபவங்கள் இந்தப் பதிவை இப்போதே எழுத வேன்டுமென்ற முனைப்பை அதிகரித்து விட்டன. சமீபத்தில் ஒரு மருத்துவர் சொன்னார், ' ஆப்பிள் அதிகமாக உண்ணுங்கள், அனால் கவனம் இருக்கட்டும். தோலை நீக்கி உண்ணுங்கள். ஆப்பிள் பழங்களின் பளபளப்பு அதிகரிக்க ஒரு வித மெழுகு தடவுகிறார்கள்' என்று!! முன்பெல்லாம் மருத்துவர்கள் தோலோடு ஆப்பிளை சாப்பிட வேண்டுமென்று சொன்னது போய் இன்று இப்படி! இன்னொரு மருத்துவர் சொன்னார், ' வாழைப்பழங்களில் மலைப்பழம் தவிர எதையும் உண்ண வேண்டாம், மற்ற பழங்கள…
-
- 0 replies
- 1.4k views
-
-
மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புதிய முயற்சி வெற்றி! மனதளவில் தாம் நினைத்ததை யதார்த்தத்தில் செயல்படுத்த இயலாது தவிக்கும் மனக்கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகளாவிய ரீதியாக சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கு இதுவரையில் எந்தவொரு மருந்து வகையும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தநிலையில், ரஷ்யாவில் உள்ள ஃபாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வு கூடத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர். TAAR1 என தற்போது குறியீட்டு பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள புதிய மருந்தை ஆய்வு கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்தி பரிசோதித்துள்ள…
-
- 0 replies
- 378 views
-
-
உலக ரத்தக் கொதிப்பு நாள் மே 17 | ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்னும் பழமொழியைச் சொல்லிச் சொல்லி, சாப்பிடும் எல்லாப் பண்டங்களிலும் உப்பைச் சேர்த்துவிடுகிறோம். ஆனால், ``உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான்; தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்’’ என்றொரு பழமொழியும் இருக்கிறது. உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்சினைதான். நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இது குறித்துச் சென்னையைச் சேர்ந்த உடல் மூப்பு கட்டுப்பாட்டு (Anti Aging) நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன் விளக்குகிறார்: எங்கே இருக்கிறது? அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே இயற்கையான உப்பு வகையில் ஒன்றான சோடியம் …
-
- 0 replies
- 555 views
-
-
கடலை மிட்டாயும் எள்ளுருண்டையும் காணாமல் போய், நம் வயிற்றை நிரப்பிவரும் பாக்கெட் உணவுகள் நோயைப் பரவலாக்கிவருகின்றன. அதற்கு மாற்றாக நமது சிறுதானிய உணவுகள் எப்படி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கின்றன என்பது பற்றி திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரிய விதை, மூலிகை, வேளாண் திருவிழா கவனப்படுத்தியது. இதன் காரணமாக, திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் மரங்களின் நிழலில் ஜூலை 11, 12 ஆகிய இரண்டு நாட்களும் இயற்கை மணம் வீசியது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, தானியங்கள், காய்கறிகள், வரகு, சாமை, திணை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள், அரிய மூலிகை மருந்துகள், பாரம்பரிய விதை ரகங்கள் குவிந்திருந்தன. பசுமை சிகரம், கவிமணி பாரதி உழவர் மன்றம், கிரியேட் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந…
-
- 0 replies
- 379 views
-
-
'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் வேலூரை பூர்வீகமாகக் கொண்ட மணிஷா மனோகரனுக்கு திரைப்படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், முன்பெல்லாம் ஒவ்வொரு முறை திரையரங்கம் செல்லும்போதும் தன்னைப் பதற்றம் தொற்றிக் கொண்டதாகக் கூறுகிறார். அதற்குக் காரணம், அவரது கட்டுப்பாடின்றி தன்னியக்கமாக ஏற்படும் டிக்ஸ் (tics) என்ற உடல் இயக்கங்கள் அல்லது குரல் ஒலிகளே. "நான் படம் பார்க்கும்போது, உணர்ச்சி மிகுதியில் என் உடலில் தன்னியக்கமாக ஏற்படும் அசைவுகள் அல்லது எழுப்பப்படும் ஒலிகள் தங்களைத் தொந்தரவு செய்வதாகவும் அதைக் கட்டுப்படுத்துமாறும் ப…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
நெல்லிக்காய் சாறு குடிப்பதால் என்ன நன்மை? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால்…
-
- 0 replies
- 8.5k views
-
-
காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்....! வைத்தியர் சந்திரகுமார் எச்சரிக்கை....! Published By: T. SARANYA 23 MAR, 2023 | 04:52 PM காசநோய் அறிகுறியுடைய பலர் அதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்காமல் பொது வெளியில் உலாவித்திரிவதாக வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உலககாச நோய்தினம் நாளையதினம் நினவு கூரப்படவுள்ளது. சாதாரணமாக ஒரு நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு 63 நபர்கள் காசநோயாளர்களாக இருக்க வேண்டும். …
-
- 0 replies
- 670 views
- 1 follower
-
-
உலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது. தோன்றிய கால கட்டத்தில் மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கினான். அந்த சந்தர்ப்பங்களில் உணவுக்குச் சுவை சேர்க்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் …
-
- 0 replies
- 557 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனா இசபெல் கோபோ குவென்கா மற்றும் அன்டோனியோ சம்பீட்ரோ கிரெஸ்போ பதவி, தி கான்வர்சேஷன் 7 செப்டெம்பர் 2023 ஒரு நண்பரின் வயதான பெற்றோர் அவர்கள் நன்றாகத் தூங்குவதில்லை என்று கூறுகிறார்கள். இரவில் அவர்கள் கழிவறைக்குச் செல்ல பல முறை எழுகிறார்கள். அதனால் காலையில் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள். உண்மையில் இது பரவலான ஒரு பிரச்னை. இதன் பெயர்: adult nocturia, வயதானோர்க்கு வரும் நாக்டூரியா. மலம் மற்றும் சிறுநீரை அடக்குவது குறித்த சர்வதேச குழுவின் (International Continence Society) கூற்றுப்படி, இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு, இரவில் கு…
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி பதவி, 11 மே 2025 அல்சைமர் முதல் புற்றுநோய் வரை ஒருவரின் ஆரோக்கியம் குறித்த அனைத்து முக்கியமான அறிகுறிகள் காதில் படியும் அழுக்கு (earwax) மூலம் அறிந்து கொள்ளலாம். காதில் படியும் அழுக்கில் உள்ள வேதிப் பொருட்களை பகுப்பாய்வு செய்வதன் மூலமாக புதிய நோய் அறியும் முறைகளை கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சாம்பல் நிறத்தில் இருக்கும் இதைப் பற்றி நீங்கள் எந்த ஒரு உரையாடலிலும் பேச விரும்பமாட்டீர்கள். ஆனாலும், ஆராய்ச்சியாளர்கள் இதைப் பயன்படுத்தி புற்றுநோய், இதய நோய், டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தி வரு…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
அதீத நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் மருந்துக்கு மன அழுத்தத்தை போக்கும் சக்தி மனித உடலில், அதீதமாக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் மருந்துகளுக்கு, மன அழுத்தத்தைக் குணப்படுத்தும் சக்தி உள்ளதாக மூத்த விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 350 மில்லியன் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்; அதில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் அதீத நோய் எதிர்ப்பு செயல்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்மூளையின் செயல்பாடுஆகியவற்றின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தியிருப்பது அந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான புரட்சியின் தொடக்கம் எனக் கூறுகிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் கார்மன் பாரிய…
-
- 0 replies
- 266 views
-
-
உயர் ரத்த அழுத்தம்: புரிந்துகொள்ள எளிய வழிமுறைகள் உலகச் சுகாதார நிறுவனம் கவலை தரும் ஒரு தகவல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. 30-79 இடைப்பட்ட வயதுக்குள்ளானவர்களில் உலகெங்கும் 128 கோடிப் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லும் அது, அடுத்து சொல்லும் விஷயம்தான் கூடுதல் கவலைக்கு உரியது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் (46%) தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதையே உணராத நிலையில் இருப்பவர்கள் என்கிறது. நாம் ஏன் இந்த விஷயம் தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியம்? ஏனென்றால், உயர் ரத்த அழுத்தமே அகால மரணங்களில் கணிசமான உயிர்களைக் கவ்விச் செல்வதாக இருக்கிறது. இது இதயம், மூளை, சிறுநீரகம் தொடர்பான பல …
-
- 0 replies
- 441 views
-
-
உணவும் உடல்நலமும்: உணவு வேட்கைக்கும் மன அழுத்தத்திற்கும் என்ன தொடர்பு? எப்படி தடுக்கலாம்? 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு உணவின் மீதான வேட்கை (கிரேவிங்) (உடனே சாப்பிடத்தோன்றும் எண்ணம்) எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஒரு பிஸ்கெட் சாப்பிட காலை 11 மணிக்குக்கூட ஆசை தோன்றும்? மாலை 6 மணிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்? எப்போது உணவு வேட்கை தோன்றும் என சொல்ல முடியாது. உங்களுக்கு ஏற்படும் உணவு வேட்கை உங்களின் உணவுப்பழக்கம் குறித்தோ அல்லது உடல்நலம் குறித்தோ ஏதேனும் சொல்ல வருகிறதா? அவற்றை அறிந்துகொள்ள உணவியல் நிபுணர் செஜல் ஜேக்கப் உடன் பேசினோம். …
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
அதிகம் சாப்பிடாமலேயே முழுமையாக நிரம்பிய உணர்வுடன் பலூன் போல வயிறு இருப்பது மிகவும் பொதுவான ஒன்று. அடிவயிற்றின் அளவு அதிகரிப்பது, வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த மாற்றத்துடன் கூடுதலாக, வயிற்று வலி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில காரணங்களை நம்முடைய உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்தே நிவர்த்தி செய்யலாம். சில காரணங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் காணப்படும் பிரச்னை மற்றும் புற்றுநோய் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இதை எதிர்கொள்ள எந்தப் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும் மற்றும் எந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம். …
-
- 0 replies
- 372 views
-
-
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு குடிக்காதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 7 மார்ச் 2023, 03:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொழுப்புக் கல்லீரல் எனப்படும் ஃபேட்டி லிவர் (Fatty Liver) நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பதின்ம வயதினர் தொடங்கி குழந்தைகள்கூட பாதிக்கப்படுகின்றனர். …
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் போது இரத்த சோகை ஏற்படுகிறது. உணவில் சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களால் இந்நோய் ஏற்படுகிறது. எனவே சரியான உணவுகளை எடுத்துக் கொண்டு இரத்த சோகையிலிருந்து விடுபடுவது அவசியம். கைக்குத்தல் அரிசி கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த சாதத்தை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம். ஓட்ஸ் ஓட்ஸில் எண்ணற்ற சத்துக்களுடன், இரும்புச்சத்து உள்ளதால் காலை உணவாக ஓட்ஸை எடுத்து வருவதால் இரத்த சோகையை கட்டுப்படுத்தலாம். உருளைக்கிழங்கு உருளைக…
-
- 0 replies
- 611 views
-
-
கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே. வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது. தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட…
-
- 0 replies
- 951 views
-
-
புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் பெரும்பாலும் நுரையீரல் தான் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். மற்றும் நிகோடின் எனும் மூலப்பொருள் தான் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் முதல் கருவியாக இருக்கிறது. நீங்கள் மனம் திருந்தி புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும் கூட, அதன் பிறகு நுரையீரலில் புகையின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அந்த பாதிப்புகளை நீக்கும் பணிகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே, நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகளை, நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திய உடனே தினந்தோறும் உட்கொள்ள பழக்கிக் கொள்வது உங்கள் உடல் நலம் மேலோங்க வெகுவாக உதவும்…. வைட்டமின் சி சத்துள்ள உணவுகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க …
-
- 0 replies
- 870 views
-
-
கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இதன் மருத்துவ குணங்களுக்கு அடி…
-
- 0 replies
- 1.1k views
-
-
மூளை எந்த வயதில் மிக இளமையாக இருக்கும்? அதிக மாற்றங்களை சந்திக்கும் 5 முக்கிய கட்டங்கள் படக்குறிப்பு, மனித மூளை முப்பது வயதின் தொடக்க காலம் வரை இளமைக் கட்டத்தில் (adolescent phase) நீடிக்கிறது. அந்த காலகட்டத்தில்தான் மூளை தனது "உச்ச நிலையை" அடைகிறது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லேகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் X,@JamesTGallagher 27 நவம்பர் 2025, 01:43 GMT மனித மூளை வாழ்க்கையில் ஐந்து தனித்துவமான கட்டங்களை கடக்கிறது. இதில் 9, 32, 66 மற்றும் 83 வயதில் முக்கியமான மாற்றங்கள் நடக்கின்றன எனக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். 90 வயது வரையிலான சுமார் 4,000 பேரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களின் மூளை…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
ஆரோக்கியம் காக்கும் 6 உணவுகள் ஃபேஷன், டிரெண்ட் எனக் கருதி, தெருவோரக் கடைகளிலும் ஃபாஸ்ட்ஃபுட் கடைகளிலும் கிடைப்பதை உண்டு, உடலை நோய்க்காடாக மாற்றி இருக்கிறோம். பாரம்பரிய உணவுகளில்தான் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. அவற்றை உண்டுதான் நம் முன்னோர் உடல் வளர்த்து; உயிர் வளர்த்து இன்புற்று வாழ்ந்தனர். அப்படி, ஆரோக்கியம் காக்கும் ஆறு உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்... சோளம்: சோளத்தில் புரதம்,கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தயமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. வயிற்றுப்புண்ணுக்கு மிகவும் உகந்தது. சர்க்கரை நோய் , ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு சோ…
-
- 0 replies
- 723 views
-
-
நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர். இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும். இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது …
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒரு நபர் 13 ஆயிரம் அடிகள் வரை நடந்தால் நல்லது என கூற முடியும், இவை ஒருவரை ஊக்கப்படுத்தப்படுத்த உதவலாம். ஆனால், அனைவருக்கும் இது பொருந்தாது. பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெ…
-
- 0 replies
- 158 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களுக்கு கடைசியாக எப்போது விக்கல் ஏற்பட்டது என்பது நினைவில் இருக்கிறதா? சிலருக்கு அடிக்கடி விக்கல் ஏற்படும், சிலருக்கு எப்போதாவது ஒருமுறை விக்கல் வரும். ஆனால் இந்த விக்கல் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? விக்கல் என்றால் என்ன? டையபிராம் (diaphragm) என்ற தசையில் ஏற்படும் தன்னியல்பான சுருக்கங்களே மருத்துவ ரீதியாக 'விக்கல்' என்று குறிப்பிடப்படுகிறது. டையபிராம் என்ற இந்த தசை மார்பையும், வயிறையும் பிரிக்கும் இடத்தில் அமைந்திருக்கும். மனிதர்கள் சுவாசிப்பதில் இந்த தசையின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. …
-
- 0 replies
- 504 views
- 1 follower
-