Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. காபி ஒரு கோப்பை, புற்று நோய்க்கு குட்பை! மார்ச் 05, 2007 சென்னை: தினசரி காஃபி அருந்துவோருக்கு புற்று நோய், சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் காபி குடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்று கருதப்பட்டது. காபி அருந்தினால் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வின்படி காஃபி சாப்பிட்டால் பல்வேறு வகையான புற்று நோய், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய்க் கட்டிகள், வயிற்று புற்றுநோய், ஈரல் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவது குறையுமாம். மும்பை, பாபா அண…

    • 10 replies
    • 6.6k views
  2. எலும்புகளை வலுவடையச் செய்யும் பீர்: ஆய்வில் தகவல்! வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால் எலும்புக்கு ஆரோக்கியமளிப்பதும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு: மதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் …

  3. கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர். இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து? பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிற…

  4. மைக்ரோ வேவ் சமையல்- உஷார் மைக்ரோ வேவ் இல்லத வீடு தற்ப்போது தேடி பார்த்தால் குறைவு தான். அந்த அளவுக்கு இந்த அவன் அத்தியாவசியம் ஆகிவிட்டது. மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாகDr.மெர்கோலா தெரிவிக்கிறார். அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள். *** புரொக்கொலி (broccoli) எனும் உணவுப் பொருளில் உள்ள மூன்று முக்கிய புற்று நோய்த் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் (antioxidant)கள் ஆவியில் வேக வைப்பதை விட மைக்ரோ வேவ் அவனி…

  5. நோய்களை குணமாக்கும் தாமரைக்கிழங்கு. நீர்த்தாவரங்களின் ஒன்றான தாமரை கொடி இனத்தைச் சேர்ந்தது. நீருக்குள்ளேயே படர்ந்து வளரக்கூடியது. இதில் எத்தனையோ வகை உள்ளன. அவற்றில் வெண்தாமரை, செந்தாமரை குறிப்பிடத்தக்கவை. இந்த தாமரையின் அடிப்பகுதியில் கிழங்குகள் காணப்படுகின்றன.தாமரை மலரைப்போல தாமரைக்கிழங்குகளுக்கும் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது. கண்நோய், கண் எரிச்சல், போன்று கண்கள் தொடர்புடைய நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. கண்பார்வையும் தெளிவடையும். அடங்கியுள்ள சத்துக்கள் தாமரைக்கிழங்கில் வைட்டமின் சியும் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடென்டலும் உள்ளது. இதில் உள்ள பி – 6 வைட்டமின் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தேவையற்ற டென்சன் அதன்மூலம் ஏற்பட…

  6. பலரையும் பாடாய்படுத்தி வரும் மனஅழுத்தத்தை தீர்ப்பதற்கான வழிகள் [Thursday, 2011-09-29 11:44:06] பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள். அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உட…

  7. 'முட்டை சைவமா..? அசைவமா?' என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா? அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்…

  8. வணக்கம் அனைவருக்கும்... எனக்கு கொஞ்ச நாட்களாக சரியாக நித்திரை வரவில்லை... நித்திரை குளிசை பாவிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்... மருத்துவரிடம் இப்படியே சொன்னால் நித்திரை குளிசை தருவரா...இல்லை எப்படி சொன்னால் மருத்துவர் தருவார்.... சீரியஸாக கேட்கும்போது சீரியஸாக எல்லோரும் பதில் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்... இல்லை களவாக லண்டனில் வாங்கலாம்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

    • 41 replies
    • 3.1k views
  9. இலங்கையில் 10 பேரில் ஒருவருக்கு மன நோய் இலங்கையில் வாழும் மக்களில் 10 பேரில் ஒருவர் சில வகையான மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மன ஆரோக்கிய நிறுவகம் தெரிவித்தது. இந்த கணிப்பீடு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய மன ஆரோக்கிய நிறுவகம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் மன நோய் பரவுவதற்கு 30 வருட கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றனவே காரணம் என நிபுணர்கள் பலர் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 100 இலங்கையருக்கு இருவர் என்ற விகிதத்தில் தீவிர மன நோய்களுக்கு ஆளாவர் என இந்நிறுவகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய்களுக்கு சிகிச்சை பெறுவதன் மூலம் தீர்வு காண முடியும் என தேசிய மன ஆரோக்கிய நிறுவகத்தின் அதிகாரியொரு…

  10. Posted by சோபிதா on 19/08/2011 in புதினங்கள் | 0 Comment “நாளும் ஒரு அப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது. கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய அய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார். அப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய அப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின. அப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போன…

    • 2 replies
    • 1.1k views
  11. காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான் விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான். விளக்கம் அடியில் இருக்கிறது. ஓம் பூர் புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத் என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது. இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் …

  12. தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட அது குறைக்கிறது என்றும் சிலிர்ப்பூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கின்றனர் பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள். இதயநோய் தடுக்கப்படுகிறது: உறவின் போது உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் உணவின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். தாம்பத்ய உறவின் மூலம் உடல் வலிமையடையவதோடு இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்தியா மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழ…

  13. உடல் பருமனை தவிர்ப்போம் வெள்ளி, 08 ஏப்ரல் 2011 10:31 உடல் பருமன் என்பது ஒரு மனிதன் சராசரியாக இருக்க வேண்டிய எடையை விட 20 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் நிலையாகும். உடல் பருமன் உடல் நலத்தைக் கெடுக்கும். உடல் பருமன் மூலம் ஒருவருக்கு இரத்த அழுத்தம், இருதய நோய், நீரிழிவு நோய், சில புற்று நோய், முடக்குவாதம், தூக்கமின்மை போன்ற எண்ணற்ற பின் விளைவுகள் தோன்றி ஆயுட்காலமும் குறையும். உடல் பருமனின் காரணங்கள்: 1. பரம்பரை உடல் வாகு.2. உடல் உழைப்பின்மை, எந்த வித உடற் பயிற்சியிலும்/நடைப்பயிற்சியிலும் ஈடுபடாதிருத்தல்.3. அசைவ உணவு, எண்ணெய் உணவு பொருட்கள், ஜாம், ஜெல்லி, கேக், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், சாக்லேட் ஆகியவற்றை அதிகமாக உண்ணுதல்.4. மாறிவரும் கலாச்சாரமும், அடிக்கடி …

  14. தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது. தோற்றம் : அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும். அடங்கியுள்ள பொருட்கள் : ஈரப்பதம் _ 73 ச…

  15. அழகு குறிப்புகள்:பெண்களின் வயிற்று சதை குறைய.....! அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம். முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம். உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம் கிச்சிலி கிழங்கு பொடி…

  16. இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா Posted by சோபிதா எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர். தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.தினசரி 200ம் அதற்கு மேலும் வைட்டமின் “ஈ” எடுத்துக் கொள்வர்களுக்கு சர்வ தேச அளவில் 77 சதவீதம் இதய நோய்கள் வர வாய்ப்பில்லை என்கின்றனர் 2 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஆராய்ந்த ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600 யூனிட் …

  17. பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள். Posted by: on Sep 5, 2011 ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத…

  18. புற்று நோயைக் குணப்படுத்த புதுவகை வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது புற்றுநோய் பரவுவதைத் தடுக்கிறது அதேவேளை அதை பூரணமாக குணப்படுத்தும் வீரியமும் கொண்டுள்ள புதிய வைரஸ்.. மனித குலத்திற்கே மாபெரும் சவாலாக இருப்பது புற்றுநோய் என்ற கருத்து இன்றுவரை உலக வெளியில் மறையவில்லை. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்றுவரை போதிய வெற்றியைத் தரவும் இல்லை. இந்த நிலையில் புதுவகை வைரஸ் ஒன்று புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதென்று விஞ்ஞானிகள் டென்மார்க் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். வி.எஸ்.வி என்ற குறியீட்டு பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரசிற்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வி.எஸ்.வி வைரசிற்கு இர…

    • 0 replies
    • 515 views
  19. மூளைக்கும் முண்ணானுக்கும் தெடர்பில்லாமல் எழுதுபவர்களுக்கும் இப்படி நோய் வர சாத்தியம் கூட மூளைய மென்சவ்வு அழற்சி (Meningitis) மூளைய மென்சவ்வு அழற்சி என்பது மூளை மற்றும் முண்ணாணினை போர்த்தியுள்ள மென்சவ்வுகளில் பற்றீரியா, வைரஸ், மற்றும் பங்கஸ் கிருமிகளின் தொற்று காரணமாக உருவாகும் அழற்சி நோயாகும். இது 90% பற்றீரியாக்களாலேயே ஏற்படுகின்றது. அத்துடன் கிருமித்தொற்றல்லாத மூளைய மென்சவ்வழற்சியும் காணப்படுகிறது. அநேகமானோரில் மூளைய மென்சவ்வு அழற்சி உருவாகும் போது குருதியிலும் கிருமித்தொற்று உருவாகிறது.(Septicaemia). முக்கியமாக மெனிங்கோகொக்கஸ் எனும் பற்றீரியா தொற்றின் போது இந்நிலை ஏற்படுகின்றது.. பற்றீரிய கிருமிகளால் உருவாகும் மூளையமென்சவ்வு அழற்சி மிகவும் அரிதாகவே …

  20. நம்பிக்கை இழக்காதே! மனம் தளராதே! என்பது தான் அறிவியல் அறிஞர் ஒருவர் அனைவருக்கும் தரும் யோசனை! நமது மூட், ஆசைகள் மற்றும் உணர்வுகளுக்கு ஏற்ப நம்முடைய உடல் மாறிவிடும் தன்மை படைத்தது. நல்ல உணவை நினைத்தால் ஜீரண சுரப்பிகள் சுரக்கும், வாயில் எச்சில் ஊறும்! ஒரு துயரகரமான நிகழ்ச்சியை நினைத்தாலே சிலர் அழுது விடுவர்! ஒரு பேரழகியைக் கண்ணால் கண்டவுடனே கண்கள் பளபளக்கும்! ஆக, நமது சுவாசம் ‘மூடு'டன் மிக நெருங்கிய தொடர்புடையது! விஞ்ஞானி ஃப்ராய்ட், தான் ஆல்ப்ஸ் மலையில் பார்த்த ஒரு இளம்பெண்ணைப் பற்றி விவரித்துள்ளார். அவளுக்கு அடிக்கடி நரம்புத் தளர்ச்சி உருவாகும். தலைசுற்றல், காதில் ஓசை இடைவிடாமல் கேட்டல், மார்பில் எரிச்சல், தொண்டை அடைப்பு, சாவு உடனே வந்து விடுவது போன்ற உணர்வு இவை எல்லாம் தொ…

  21. இசை, மொழி இனம் மதம் கடந்து அனைவரையும் இணைக்கக் கூடியது, அதிலும் குறிப்பாக இந்தியாவில், இந்து மதத்தில் "இசையால் தமிழாய் இருப்பவனே" என்றும், "இசையால் வசமாகா இதயம் எது, ஈசனே இசைவடிவம் எனும்போது" என்றும் இசை இறைவடிவாகவே நோக்கப் படுகிறது. கலைமகள் வீணையிசைப்பதாகவும், நாரதர் கந்தருவர்கள் முதலியவர்கள் இசையில் தேர்ந்தவர்கள் எனவும், கண்ணனின் குழலிசையில் பசுக்களும், பறவைகளும், ஏன்... செடி கொடிகள் கூட மயங்கி நின்றதாகவும் இசை தொடர்பான ஏராளமான தகவல்கள் காணக்கிடைக்கின்றன. உலகெங்கிலும் இசை என்பது ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்காகக் கருதப்படுகின்ற அதே நேரத்தில் இசைக்கு நோய்களை விரைவாகக் குணப்படுத்தும் தன்மை இருப்பதாகவும் நம்பப் பட்டு வருகின்றது. இன்று உலகின் பல பகுதிகளில் இசை சிகிச்சை (Musi…

  22. இயற்கையின் படைப்பில் கிடைக்கும் எண்ணற்ற பழவகைகளை உட்கொள்வதால் கிடைக்கும் பயன்களைக்குறித்து இப்பகுதியில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இங்கு பேரீச்சை மற்றும் சப்போட்டாப் பழங்களின் சிறப்புக்களை நாம் காணப்போகிறோம். பேரீச்சையின் பெரும் பயன்கள்: 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பார்களே! அது பேரீச்சைக்கு மிகவும் பொருத்தமான பழமொழி. வேறெந்தப்பழங்களையும் விட மிக மிக இனிப்பானது இது. பாலைவனத்திற்குக் கிடைத்த பேறு இப்பழம். இயற்கையின் அன்பும் அக்கறையும்தான் என்ன? வறண்ட பாலையிலும் இனிமை ததும்பும் பழம், 'ஏழ்மையிலும் காணக்கிடைக்கும் கொடைத்தன்மை போல்'. பனையின் இனத்தைச் சேர்ந்தது பேரீச்சை. யூப்ரடிஸ் நதிக்கரைகளை ஆதியாகக் கொண்டது இதன் வரலாறு. வறண்ட தட்பவெப்பமுடைய எல்லாப் …

  23. மனமும் தியானமும் -கிருஷ்ணன், சிங்கப்பூர். அலைந்து அலைந்து களைத்துக் கிடக்கிறது மனித மனம். எதற்காக என்றே தெரியாத, காட்டு நாய்த்தனம்...! வன்மம், கோபம், ஏமாற்றம், விரக்தி, ஆசை, கவலை, இன்பம், சோகம், மகிழ்ச்சி என்றெல்லாம் மாறி மாறி மோதிய அலையில், மனதின் ஓரங்களில் கப்பிக் கிடக்கிறது உப்புப்பாளங்கள். அடித்தவனை கடிக்கப் பார்க்கும் ஆவேசம்- அறியாமல், காலை மிதித்தவனை நசுக்கி வைக்கும் மிருகரோஷம் மண்டிக் கிடக்கிறது. இதிலிருந்து எப்படி விடுபடப் போகிறான் மனிதன் ? விடுபடுவதையோ, விரயப்படுவதையோ உணராத உன்மத்த மனம்... 'சுய அறிதல்' இன்றி, மனம் இன்றி கரைந்து கொண்டிருத்தலைத் தடுத்துக் கரை சேர வழி காணவே இருப்பது பிறவிப்பயன்.....! இந்த உலகின் தூய்மை அழிந்து கொண்டே போகிறது. பொய்மையும்,…

  24. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில் பிரகாரம்.. திருமணம் மற்றும் விவாகரத்துச் செய்து கொள்ளும் பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் உடல் நிறை அதிகரிப்பது அல்லது அதிகரிப்பதற்கான வாய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறை அதிகரிப்பு.. உடல் உபாதைகளை நோக்கியும் அவர்களை கொண்டு செல்கிறது. ஆண்களைக் காட்டிலும் இந்தப் பாதிப்பு பெண்களிடத்தில் சற்று அதிகமாகவே அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர் கொண்ட குடித்தொகை மாதிரி பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 22 ஆண்டுகள் தொடர்ச்சியான கண்காணிப்பையும் செய்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆராய்ச்சியின் நம்பகத்தன்மை ஓரளவுக்கு உறுதி செய்யக் கூடியதாகவும் அமைகிறது. உடல் திணிவுச் சுட்டெண் (BMI) அடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.