Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் முரசம்

கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..

  1. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 23ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2022) 24ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கோவிட்-19ல் இருந்து உலகம் முற்று முழுதாக மீள முடியாது தொடர்ச்சியாக ஒரு நெருக்கடிக்குள் இன்றும் உள்ள நிலையில் உலகின் ஒரு பகுதியில் நடைபெறும் யுத்தமானது மொத்த உலகத்தினையும் புதியதொரு நெருக்கடியில் தள்ளியுள்ளது. சில நாடுகளின் அவரசமான முடிவுகள் இந்த நெருக்கடியை பொருளாதார ரீதியில் உலக மக்கள் ஒவ்வொரின் மேலும் நேரடியாகவே மறைமுகமாகவே திணிக்கின்றது. குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் இன்னமும் நெருக்கடியினைச் சந்திக்கின்றார்கள் சந்திக்கப் போகின்றார…

  2. தொழில்நுட்பக் கோளாறினால் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ள போதும் மீண்டும் தடங்கல்கள் வரலாம். முழுமையாக சரி செய்த பின்னர் அதுபற்றி அறியத் தரப்படும்.

  3. வணக்கம். அன்பிற்கினிய அனைத்து கள உறவுகளுக்கும் யாழ் இணையத்தின் இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள். இந்த தமிழர் திருநாளில், தாயக மக்கள் மண்ணில் சுதந்திரத்துடனும் மதிப்புடனும் வாழ்வதற்கும், தம்மை தாமே நிர்வகிக்கும் உரிமைகளை அடைவதற்கும் எம்மால் முடிந்தவற்றை செய்வோம் என உறுதி எடுப்போம். யாழ் இணையம் கால மாற்றங்களுக்கு ஏற்ப தன் வடிவமைப்பில் மாற்றங்களைக் செய்து கொண்டு வந்துள்ளது. அதே வழியில் இந்த பொங்கலுடன் பொங்கல்2013 எனும் புதிய வடிவமைப்பினை சனிக்கிழமை, சனவரி 12, 2013 அன்று வெளியிட இருக்கின்றோம். புதிய வடிவத்தினை வெளியிட்டவுடன் ஒரு சில தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்கள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பதனால் கள உறவுகள் அடுத்த சில தினங்களுக்கு சில பிரச்சனைகளை எதிர்க…

  4. Started by மோகன்,

    களம் update செய்ய வேண்டிய தேவையிருப்பதால் இன்றிரவு 20:30 மணி முதல் சில மணிநேரங்களுக்கு களம் இயங்காது என்பதை அறியத் தருகின்றோம். அச்சந்தர்ப்பந்தில் பரீட்சார்த்த Chat இனை முயற்சித்துப்பாருங்கள் பதிவு செய்து கொள்ள: http://www.yarl.com/chat/profile.php?register=true பதிவு செய்த பின் chatல் அரட்டையடிக்க: http://www.yarl.com/chat/ajax/

  5. திண்ணை பகுதியில் எழுத குறைந்த பட்சம் கருத்துக்கள உறுப்பினர்கள் உரிமை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு உறுப்புரிமை இல்லாதவர்கள் திண்ணை பகுதியில் எதுவும் எழுத முடியாது.

  6. சிறுவர்களுக்கு என்று யாழ் இணையத்தில், களத்தில் ஒரு பகுதி திறக்கப்பட வேண்டும் என்று பல காலமாக இங்கு வேண்டுகோள்கள் விடப்பட்டு வந்தது. களத்தில் சிறுவர்களை இணைப்பது பல சிக்கல்களைக் கொண்டு வரும் என்ற காரணத்தினால் சிறுவர்களுக்கென்று தனியாக ஒரு பகுதி இங்கு http://www.yarl.com/kids/ தொடங்கியுள்ளோம். இங்கு சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள், பாடல்கள், புதிர்கள், ஒலி / ஒளிப்பதிவுகள் போன்றவற்றுடன் தமிழ் கற்பதற்கான சில விடயங்களும் இணைக்கத் தீர்மானித்துள்ளோம். ஏற்கனவே சிறுவர்களுக்கான தொகுப்புக்களை வைத்திருப்பவர்கள் தங்கள் விடயங்களை நேரடியாக அப்பகுதியிலோ அல்லது suddi@yarl.com என்னும் முகவரியிற்கு அனுப்புவதன் மூலம் இணைத்துக் கொள்ள முடியும். ஆக்கங்கள் எனும்போது காப்புரிமை…

  7. வணக்கம், அண்மைக் காலமாக யாழ் களத்தில் புதிதாக இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு இணையும் உறுப்பினர்களை இலகுவாக உள்வாங்கிக் கொள்வதற்காக, இணைந்தவுடன் உடனடியாக பதில் எழுதும் உரிமையை வழங்க உத்தேசித்துள்ளோம். அதாவது புதிதாக இணைந்து கொண்டவர்கள் அரிச்சுவடியில் தம் ஆரம்பப் பதிவுகளை இட்டு பின் அதனை நிர்வாகப் பிரிவினர் பார்த்து அனுமதிக்கும் முறையில் மாற்றத்தினைக் கொண்டுவந்து, இணைந்தவுடன் அவர்களை எல்லாப் பகுதிகளிலும் பதில் எழுத அனுமதிப்பதற்கு முடிவெடுத்துள்ளோம். இதன்படி புதிதாக இணைந்து கொண்டவர்கள், உடனடியாக திரிகளுக்கு பதில் எழுத முடியும். ஆனால் கள பொறுப்பாளர்களில் ஒருவர் அனுமதிக்கும் வரை புதிதாக திரிகளை திறக்க மு…

  8. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 25ஆவது ஆண்டினை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2024) 26ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கருத்தாளர்களே யாழ் இணையத்தின் மிகப் பெரும் பலம். அந்த வகையில் யாழ் இணையத்தின் கருத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு மற்றும் சகிப்புத் தன்மை இன்னும் மேலதிகமாக இருக்க வேண்டும் என்றும் யாழ் இணையம் விரும்புகின்றது. கருத்தாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருத்தாட வேண்டும் என்றும் அவ்வாறு நிபந்தனைக்கு உட்படும் போது கருத்தாடல்கள் ஆரோக்கியமாக அமையும் என்பதுடன் தேவையற்ற கசப்புணர்வுகள் தவிர்க்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில…

  9. நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.

  10. கடந்த சில தினங்களாக யாழ் இணையத்தின் பல பகுதிகள் செயலிழந்து போனதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதனால் ஏற்பட்ட சிரமங்கள் பற்றி பலரும் பல வழிகளிலும் அறியத் தந்திருந்தார்கள். யாழ் இணையத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அவ்வப்போது மலிவாகக் கிடைக்கப்பெறும் இணைய வழங்கிக்கு மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையில் இருக்கின்றோம். இறுதியாகக் கடந்த வாரம் புதிய இணைய வழங்கிக்கு அனைத்து விடயங்களையும் மாற்றினோம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எதுவிதத்திலும் யாழ் இணையம் தடங்கலில்லாது இருக்கும் என நம்பியிருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக முதலில் முகப்பு பக்கத்தில் இணைக்கப்பட்ட script மூலம் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது. அதன் பின்னர் சிலருக்கு dns பிரச்சனையால் யாழ் இ…

  11. COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு என புதிய பகுதி ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். இங்கு அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள். https://yarl.com/forum3/forum/222-covid-19-coronavirus-பாதுகாப்பு-வழிமுறைகள்-மற்றும்-ஆலோசனைகள்/

  12. அன்பான யாழ் இணைய உறவுகளுக்கு, தாயகத்தின் இன்றைய அவலச் சூழலை யாவரும் அறிவீர்கள். அவசரமும் - மிக அவசியமானதுமான செயற்பாடுகளை முன்னெடுத்து எமது மக்களின் அவலங்களை சர்வதேசத்துக்கு எடுத்தியம்பி, சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இனவழிப்புப் போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டியதும் எமது கடமையாகும். எனவே, இதனைக் கருத்திற் கொண்டு கருத்துக்களத்திலும் சில விடயங்களை நாம் அறிவுறுத்த விரும்புகிறோம். அவசிமற்ற + பொழுதுபோக்கு விடயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து - தாயக நிலைமை தொடர்பாக வெளியுலகின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுகிறோம். இன்றைய தொழில்நுட்ப உலகின் வளங்களை - குறிப்பாப இணையத்தை - எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்ச…

  13. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 21ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2020) 22ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. இன்று முழு உலகமுமே ஒரு நெருக்கடியான காலத்திலும் பதட்டத்திலும் இருக்கின்ற இவ்வேளையில் எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவக் குறிப்புகளினைக் கவனத்தில் கொண்டு அவைகள் இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான செய்திகள் பணம் உழைக்கும் நோக்கில் பரபரப்பிலேயே வைத்…

  14. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மெளனத்தோடும் - ஏக்கத்தோடும் - விடுதலைக்காய் வீழ்ந்தவர் நினைப்போடும் - கடந்த ஆண்டின் துயரத்தோடும் - எதிர்காலத்தை எண்ணிய பயத்தோடும் - எங்காவது தெரியாதா நம்பிக்கையின் சிறு கீற்று என்கிற எதிர்பார்ப்போடும்... யாழ் இணையம் தனது 11ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2010) 12ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம்" என்பதைத் தவிர சொல்வதற்கெதுவும் இல்லை. மண்ணோடும் மக்களோடும் மாவீரர் நினைவோடும் என்றென்றும் இணைந்திருப்போம். நன்றி யாழ் இணைய நிர்வாகம்

  15. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 22ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2021) 23ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து முழு உலகமுமே ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முன்னர் குறிப்பிட்ட விடயத்தினையே மீண்டும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். அதாவது எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவ…

  16. கருத்துக்கள விதிமுறைகளை மீறுவதாகக் கருதும் கருத்துக்களை கருத்துக்கள நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரல் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களும் ஆக்கங்களும் மட்டுறுத்தினர்களால் கவனிக்கப்பட்டு, அவை கருத்துக்கள விதிமுறைகளை மீறுவதாயின் தணிக்கை செய்யப்படுகின்றன. நீண்ட நேரம் மட்டுறுத்தினர் இணைப்பில் இல்லாதிருக்கும்போது எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வாசித்தே இவ்வாறான கருத்துக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். சில வேளைகளில் விதிமுறைகளை மீறும் கருத்துக்கள் மட்டுறுத்தினர்களின் கவனத்திலிருந்து விலகியிருக்கலாம். இப்படியான சந்தர்ப்பங்களில், அதாவது தலைப்புக்கு பொருத்தமில்லாத வலிந்த திணிப்புகள் இடம்பெறுவதாகவோ அல்லது கருத்துக்கள விதிமுறைகள் மீற…

  17. திண்ணை தொடர்பான விதிகள்: யாழ் உறவுகள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணை பகுதியில் இன்றில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் கள விதிகள் யாழ் களத்தின் பொதுவான விதிகள் அனைத்தும் திண்ணைக்கும் பொருந்தும் (உதாரணமாக தனிநபர் தாக்குதல், வா போ போன்ற ஒருமையில் சக உறுப்பினரை அழைப்பது, அநாகரீகமாக உரையாடுவது..), இவற்றுடன் மேலதிகமாக கீழே உள்ள விதிகள் திண்ணை பயன்பாட்டுக்கான பிரத்தியேகமான விதிகள் 1. திண்ணையில் கதைப்பவை வெளியில் கொண்டு செல்லவோ, பரப்புவதோ, பிரதி பண்ணுவதோ தவறு 2. திண்ணையில் உரையாடப்பட்டவற்றை களத்தில் உள்ள திரிகளில் ஒட்டுதலும், தனியாகத் திரி திறந்து இடுவதும் கூடாது 3. திண்ணையில் தமது அடையாளங்களை (பெயர் / முகவரி / பால் / தொலைபேசி இலக்கம…

  18. யாழ் இணையம் - 8 ஆவது அகவை யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்... வருகிற 30ம் நாள் மார்ச் மாதம் அன்று யாழ் இணையம் தனது 8 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி அன்று யாழ் இணையம் தொடங்கப்பட்டது. இன்று அது வளர்ந்து ஒரு பெரும் தளமாக - பல பார்வையாளர்களைக் கொண்ட தளமாக உயர்ந்து நிற்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னை வளப்படுத்திக்கொண்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு முயற்சிகளை யாழ் இணையம் முன்னெடுத்தது: யாழ் முற்றம் இணைய சஞ்சிகை, விம்பகம், மின்னஞ்சல் சேவை, வாழ்த்து அட்டை, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, கருத்துக்களம், அரட்டை அறை, வலை…

  19. வணக்கம், கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் மீளாய்வு செய்யப்பட்டு தெளிவற்றவை சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 3.0 கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் 15 டிசம்பர் 2014 ஞாயிறு முதல் (15.12.2014 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆகவே யாழ் கள உறுப்பினர்கள் விதிமுறைகளை உள்வாங்கி ஆக்கபூர்வமான கருத்துக்களை வைத்து யாழின் வளர்ச்சிக்குத் துணைபுரியுமாறு வேண்டிக்கொள்கின்றோம். மேலும் கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதும், பதிவர்கள் மீதும் மட்டுறுத்துதலும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். அ) உறுப்பின…

  20. யாழ் களத்தின் இணைய வழங்கியில் சில தொழில்நுட்ப வேலைகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறியத் தந்துள்ளனர். இதன் காரணமாக இன்று இரவும் (14-May-2013) நாளையும் (15-May-2013) யாழ் இணையத்தில் சில தடங்கல்கள் ஏற்படலாம் என கள உறவுகளுக்கு அறியத் தருகின்றோம். நன்றி.

  21. அனைத்து யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் இணையம் தனது 10ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று 11ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் - பல மேடு பள்ளங்களைக் கடந்து - தடைகளைத் தாண்டி - இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாய் - தமிழர்களின் விடுதலை உணர்வையும், தேசிய எழுச்சியையும் வெளிப்படுத்தும் களமாய் - உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாய் - யாழ் இணையம் உள்ளது. தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது - பல்வேறு வளர்ச்சிப் படிகளை தாண்டி வந்துள்ளது. தொடங்கிய சில காலங்களிலேயே மறைந்து போகும் இணையத்தள…

  22. வணக்கம், யாழ் கருத்துக்களத்திற்கான விதிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த விதிமுறைகள் காலத்துக்குக் காலம் தேவைகளைப் பொறுத்து செப்பனிடப்படும். விதிமுறைகளை மாற்றியமைக்கப்படவும், புதிய விதிமுறைகள் சேர்த்துக்கொள்ளப்படவும் முடியும். கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (13.04.2007 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதோ, பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும். அ) கருத்துகள் 1. கருத்து/விமர்சனம் கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும். சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங…

  23. மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 17ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2016) 18ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். கூட்டுமுயற்சியினால் கடந்த காலத்தில் ஒரு சில விடயங்களை தாயக ம…

  24. வணக்கம், கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0 இல் இருக்கும் கள விதிகளுக்கு மேலதிகமாக இன்றில் இருந்து நடைமுறைக்கு வரும் விதிகள் / அறிவித்தல் இவை: ---------------------------------------------- குழுக்களாக இயங்குதல் தொடர்பான முக்கிய அறிவித்தல் யாழ் இணையத்தின் கருத்துக் களத்தில் குழுக்களாகச் சிலர் இணைந்து இயங்குவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. யாழில் கடந்த சில மாதங்களாக இடம்பெறுகின்ற பல விரும்பத்தகாத விடயங்களுக்கு முக்கிய காரணமாக இந்த குழுக்களாக சேர்ந்து இயங்கும் தன்மையே அமைகின்றது. இந்த நிலை தொடர்ந்து அனுமதிக்கப்படுவது கடுமையான ஆரோக்கியமற்ற சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்பதால் உடனடியாக இத்தகைய குழுக்களாக சேர்ந்து இயங்குவதை தவிர்க்குமாறு கோருகின்றோம். …

  25. வணக்கம், கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (11.04.2012 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதோ, பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும். 1. கருத்து/விமர்சனம் கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும். தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.