மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1239 topics in this forum
-
பகவத் கீதை கற்று தரும் பாடங்கள் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும். காரணம் இல்லாமல் ஏன் கவலைப்படுகின்றாய்? யாரைக் கண்டு காரணம் இல்லாமல் பயப்படுகின்றாய்? யார் உன்னை கொல்ல முடியும்? ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. ஆக இந்த தேவையற்ற கவலைகளைத் தாண்டி விடுங்கள். மிரட்டும் கவலைகளை மறந்து விடுங்கள். உங்கள் வேலைக்கான இன்டர்வியூ சரியாகப் போகவில்லையா விட்டுத் தள்ளுங்கள். அன்பான உறவிலே திடீரென விரிசலா? வேதனைப்படாதீர்கள். எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நன்மை நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் ஒரு காரணம்…
-
- 0 replies
- 729 views
-
-
-
- 0 replies
- 536 views
-
-
உளவியல்: பாராட்டுகளைவிட விமர்சனங்களின் நினைவுகள் ஆயுள் முழுதும் நம்மோடு வருவது ஏன்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FREDERIC CIROU/GETTY IMAGES நம்மில் பெரும்பாலானோர் அன்றாட வாழ்க்கையில் அவமானங்கள், கேலிகள், மோசமான கருத்துக்களை எதிர்கொண்டிருப்போம். ஆனால், அப்படி மலைபோல் குவியும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நமக்கு சொல்லித் தரப்படவில்லை. குழந்தைகளாக இருக்கும்போது நம்மிடம் ஒருவர் நம்மை தாக்கினால் மட்டுமே நமக்கு வலி ஏற்படும், வார்த்தைகள் நம்மை காயப்படுத்தாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால், நாம் வளரும்போது ஏற்படும் அனுபவங்களின் வாயிலாக, இது உண்மைக்கு அப்பாற்பட்டது என்பதைய…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
"எனது பார்வையில் 'ஓம்' [ௐ]" வேத மதத்தின் [vedic religion] - ஆரிய அல்லது பிராமண இந்து சமயத்தினரின் -ஆதார நூல்களான வேதங்களில் இறுதியாக வந்த உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்களில் (Upanaishads) முதன் முதலில் 'ஓம்' என்ற மந்திரம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. உபநிடதங்கள் கி.மு. 700 ஆம் ஆண்டில் இருந்து கி.மு. 100 ஆம் ஆண்டுவரை படிப் படியாக உருவாக்கப் பட்டவை. உதாரணமாக, முன்பு என்ன நடந்தது, இப்ப என்ன நடக்கிறது, இனி என்ன நடக்கும் - எல்லாம் 'ஓம்' தான் [What had happened before, What is now and What will be later - Everything is just 'OM'] என்கிறது மாண்டூக்கிய உபநிடதம் [”மாண்டூகம்” என்பதற்கு சமற்கிருத மொழியில் தவளை என்று பொருள்]. இந்த 'ஓம்' என்ற சத்தம் [ஒலி], இ…
-
- 0 replies
- 488 views
-
-
குப்பிழான் அன்னை ஈன்று எடுத்த அற்புதம் தான் எங்கள் விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார். அம்மையாரின் முத்து விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா கடந்த 04-02-2012 சனிக்கிழமையன்று குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய மணி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் தலைவராக ஆலய பரிபாலன சபை தலைவர் திரு சீ.குணலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மிகப் பெரிய பொது நிகழ்வாக இது கணிக்கப்படுகிறது. குப்பிழான் மக்கள் மட்டுமல்ல இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர், ஆலய குரு ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். வரவேற்புரையை திரு.செ.ரவிசாந் அவர்களும், த…
-
- 0 replies
- 894 views
-
-
புதுவாழ்வு தரும் இயேசுவின் உயிர்ப்பு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று (4-ந்தேதி) கொண்டாடுகின்றனர். இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து பைபிள் தரும் நிகழ்வுகளை இங்கு காண்போம். இந்த உலகில் இறையரசை நிறுவும் நோக்கத்துடன் மனித உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த இறைமகன் இயேசுவை, ரோமானியரின் உதவியுடன் யூத சமய குருக்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். உண்மையையும், உரிமைக்குரலையும் கொன்று புதைத்து விட்டதாக பெருமைப்பட்ட அவர்களால், ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்க முடியவில்லை. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மீண்டும் உயிரோடு வந்து விடுவாரோ என்ற பயம் அவர்களைத் தொ…
-
- 0 replies
- 650 views
-
-
ஈழ மணித் திருநாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள தனிச்சைவ கிராமம் குப்பிழான். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,சிங்களவர் ஆகியோரால் ஈழநாடு அடிமை கொள்ளப்பட்ட போது பல ஊர்கள் தங்கள் தனித்துவத்தை இழந்தது. ஆனாலும் குப்பிழான் கிராமம் தன் தனித்துவத்தை என்றும் இழக்கவில்லை. எமது கிராமம் ஆனது தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய பங்கு மிக அதிகமாகும். சின்னஞ் சிறிய எமது கிராமத்தில் பல சைவ ஆலயங்கள் உள்ளன. இது தான் எமது மக்களின் தனித்துவமான அடையாளத்திற்கு சாட்சி. இன்றும் புலம்பெயர்ந்தாலும் எமது ஆலயங்களை கை விடவில்லை பலர் நிதி உதவிகளை வாரி வழங்கி ஆலயங்களின் புனர்நிர்மானத்திற்கு செய்யும் பங்களிப்பு அளப்பரியது. எமது பாரம்பரிய பண்பாடுகள் அழிந்து விடாமால் எமது புலம்பெயர் உறவுகள் கர்னனிடம் உள…
-
- 0 replies
- 687 views
-
-
பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கியது பெரியார் என்றாலும் அந்த இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலும் அதன் சித்தாந்தங்களைத் தொடர்ந்து வடிவமைப்பதிலும் ஆண்களும் பெண்களுமாக பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து செயல்பட்டனர். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் ஒரு தொகுப்பு. (சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு பிபிசி தமிழ் வெளியிடும் சிறப்புத் தொடரின் மூன்றாவது கட்டுரை இது.) 1925ஆம் ஆண்டில் காங்கிரசில் இருந்து வெளியேறியதும் சுயமரியாதை இயக்கத்தை பெரியார் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் நீதிக் கட்சியினருடன் இணைந்து செயல்பட்டார் பெரியார். பல தருணங்களில் அவர்க…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
இன்றைய காலகட்டத்தில் கோயில்கள் அனைத்தும் நவநாகரீகத் தன்மை மிக்கதாகவும் பொருளாதார ரீதியில் உயரிய வருமானங்களைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களையும் மாறியுள்ளதோடு வருமானத்தினைக் கொண்டு எவ்வாறு செலவு செய்வது எனத் தெரியாமல் ஆடம்பரமான செயற்பாடுகளுக்கு அதனை பயன்படுத்தும் வகையில் அமைவதோடு கோயில்சார் நிர்வாகக் குழுக்களுக்கு இடையேயான சுரண்டலும் அதன் காரணமான மனக்கசப்புக்களும் போட்டி மனப்பாங்குகளும் மிகஅதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால் இங்கு தெய்வங்களின் அருள்வாக்குகள் தெய்வங்கள் பேசுவது என்பது இவ்வகை கோயில்களில் மந்தகதியாகவே காணப்படுகிறன. ஆனாலும் பழமை வாய்ந்த ஆடம்பர, அலங்காரங்கள் இல்லாத எளிமையான கோயில்களில் காணப்படும் மனச்சந்தோஷம் மேற்குறித்த வகைக்கு உட்ப்பட்ட கோயில்களில் கிடைப்பத…
-
- 0 replies
- 745 views
-
-
செங்கற்பட்டு மாவட்டம் உத்தரமேரூரிலுள்ள முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டொன்று குடவோலைத் தேர்தல் முறையைப்பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறது. ஊர்க்குழுவில் நிற்பவர்க்குறிய தகுதிகளையும், தேர்தல் விதிமுறைகளையும் அக்கல்வெட்டில் காணலாம். ஊர்க்குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்க தகுதிகள்:- 1. கால்காணி நிலத்துக்கு மேல் அரைக்காணி நிலத்தை உடையவர். 2. தனக்கு உரிமையுள்ள மனையில் வாழ்பவர். 3. 35 வயதுக்கு மேல் 75 வயதுக்குட்பட்டவர். 4. வேத சாத்திரங்களை கற்று பிராமணியத்தில் வல்லவர். 5. வேதாகம விருத்திகளை ஓதுவிக்கும் பயிற்சியை பெற்றவர். 6. அரைக்கால் காணி நிலமுடையவராக இருந்தாலும், நான்கு பாடியத்திலும் ஒரு பாடியத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர். …
-
- 0 replies
- 968 views
-
-
-
மத நோய் எல்லா மதங்களிலும் கட்டுக்கதைகளும் மூடநம்பிக்கைகளும் ஏராளம்! தாராளம்! கடவுள் நம்பிக்கையுள்ள எவராலும் பதில் சொல்ல முடியாத கன்னா பின்னா சமாசாரங்கள் ஆயிரமாயிரம் உண்டு! ஒரு மதத்தையோ ஒரு புனித நூலையோ நம்புகிறவருக்கு அடுத்த மதத்தையோ அவர்களது புனித நூலையோ விமர்சிக்க எந்த தார்மீக உரிமையுமில்லை! தன் முதுகிலுள்ள அழுக்கை பார்க்க முடியாதவனுக்கு அடுத்த முதுகிலுள்ள அழுக்குதான் உறுத்துகிறது! அய்யோ பாவம் இந்த மத நம்பிக்கையாளர்கள்! தங்கள் கடவுளே உண்மை என தட்டுத் தடுமாறி மூக்குடைந்து போகிறார்கள் ! முட்டாள் கூட்டங்களே பொய்களுக்கு முட்டுக் கொடுத்து தொலைந்து போங்கள் !மண்ணோடு மண்ணாக போகும் வரை சண்டையிட்டுக் கொண்டிருப்பதே மதங்களுக…
-
- 0 replies
- 426 views
-
-
http://virakesari.lk/content/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE
-
- 0 replies
- 674 views
-
-
-
கேள்வி : “சூனியகாரி” என்பவள் யார் ? “சூனியக்காரி” என்பது மிகவும் மரியாதிக்குரிய ஒர் சொல் அதைக் கிறிஸ்தவம் கேவலப்படுத்தி இருக்கிறது. அதன் மூல அர்த்தம் “ஞானப்பெண்” (wise woman) என்பதே. ஆனால் கிறிஸ்தவ மதம் அதற்கு மிகவும் திரிபான அர்த்தத்தைக் கொடுத்தது. ஏனென்றால் கிறிஸ்த்தவ மதத்தின்படி சாத்தான் முதலில் ஏவாளின் மனதைக் கெடுத்தான். அன்றிலிருந்து அவன் பெண்ணுடன் சேர்ந்து கூட்டுசதி செய்துவருகிறான். ஆகவே பெண் ஞானமுள்ளவளாக இருக்க முடியாது. ஏனென்றால் அவளுடைய ஞானம் கடவுளிடமிருந்து வரவில்லை. சாத்தானிடமிருந்தே வருகிறது. இந்த அர்த்தத்தை அவர்கள் ஏற்றியதுமே பெண்ணை அதிகமாக சபிப்பதற்கான வழி செய்ததாகிறது. உண்மையில் ஞானமுள்ள பெண்கள் இருக்கவே செய்தார்கள். குறிப்பாக சித்தர் மரபில் அல்லத…
-
- 0 replies
- 897 views
-
-
"மரணத்தை தள்ளி போடலாமா?" & "முடிவுரை" எமக்கு முன்பு இந்த பூமியில் ஏறத்தாழ 100 பில்லியன் மக்கள் வாழ்ந்து இறந்து இருக்கலாம். ஆனால் அவர்களில் ஒருவர் கூட திரும்பி வந்து, மறுமை இருக்கிறது என்பது [existence of an afterlife] பற்றி எந்தவித ஐயப்பாடும் இன்றி, தெளிவான ஆக்கபூர்வமான சாட்சியம் அளித்ததாக வரலாறு இல்லை. என்றாலும் பல சமய புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் இவைபற்றி பல தரவுகளை, கதைகளை தம் கற்பனைக்கு ஏற்றவாறு கூறுகின்றன. நாம் ஏன் இறக்கிறோம் என்பதற்கு இறையியலாளர்கள் மற்றும் மத விசுவாசிகள் [Theologians and religious believers] நீண்ட காலமாக இரண்டு அடிப்படையில் பதிலை கூறுகிறார்கள். முதலாவது இறப்பு என்பது இந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாற்றம் அடைதல் என்கிறார்கள் [d…
-
- 0 replies
- 522 views
-
-
ஆழ்படிமமும் இந்து மரபும் - ஆசானின் பொய்ப்பிரச்சாரம் ஆர். அபிலாஷ் ஆசான் பல ஆண்டுகளாக திரும்பத் திரும்ப சொல்லி வரும் ஒரு கருத்து இந்து மதமே நமது பண்பாட்டை கட்டிக் காக்கிறது, நமது கோயில் வழிபாட்டு பண்பாட்டுக்குள்ளே ஆழ்படிமங்கள் உள்ளன, பகுத்தறிவுவாதிகள் இந்த மரபை தாக்குவதன் வழியாக ஆழ்படிமங்களை இல்லாமல் பண்ணி, இந்தியாவின் ஆன்மாவை அழித்து விடுவார்கள் என்பது. இப்போது “படிமங்களின் உரையாடல்” என இதையே திரும்பவும் எழுதியுள்ளார். எந்த தர்க்க நியாயமும் இல்லாத கற்பிதம் இது. ஏனென சொல்கிறேன். ஆழ்படிமம் / தொல்படிமம் (archetype) என்பதை உளவியலில் முக்கியமான ஒரு கருத்தாடலாக உருவாக்கியவர் கார்ல் யுங். அவர் எங்குமே …
-
- 0 replies
- 504 views
-
-
மரண யோகம், சித்த யோகம் என்றால் என்ன? ஜோதிட ரத்னை முனைவர் க.ப. வித்யாதரன்: குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் சேர்ந்து அந்த கிழமையும் வந்தால் அது மரண யோகம், அதுபோலவே குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் வந்தால் சித்த யோகம். எல்லாமே ஒரு கணக்குத்தான். ஞாயிற்றுக்கிழமை உத்திரட்டாதி அமாவாசை திதி என இன்று மூன்றும் சேர்ந்தால் அன்று அமிர்தயோகம். அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வேறு ஒரு திதி மற்றும் நட்சத்திரம் அன்று வேறு யோகம் வரும். ஒரு சில யோக நாட்களில் சுப காரியங்கள் செய்யலாம். மரண யோகம் போன்ற நாட்களில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது. மரண யோகம் என்று ஏன் பெயர் வைத்தார்கள்? மரண யோகம் என்பது மரணத்தைக் குறிப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாத…
-
- 0 replies
- 7.2k views
-
-
`வேலுண்டு வினையில்லை’ - இலங்கை, நல்லூர் கோயிலில் வேல்தான் முருகப் பெருமான்! நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில், இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது கோயில். கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன. தெற்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் அமைந்திருக்கிறது. கிழக்கு கோபுரத்தின் முன்பு, அழகிய வேலைப்பாடு…
-
- 0 replies
- 651 views
-
-
வல்லிபுர மாயவ னின் கொடியேற்றம். http://youtu.be/W5KO5AoEpXQ
-
- 0 replies
- 942 views
-
-
பாரம்பரிய பெருமை மிகுந்த காசி ! நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது! கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியா…
-
- 0 replies
- 2.6k views
-
-
கார்த்திகை தீபம்! தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டுவரும் கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. தமிழ் இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருக்கார்த்திகை நாள், தமிழர்கள் தமது இல்லங்களிலும், கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவன் என்ற போர் பல வருடங்களாக நடந்துவந்தது. இவர்களின் கர்வத்தை அட…
-
- 0 replies
- 856 views
-
-
இதை முன்னர் யாழில் இணைத்தார்களோ தெரியவில்லை: புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்! ------------------------------------- 1 கவிஞர் ஷெல்லி தன் தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை : சப்தமிட்டு நடக்காதீர்கள் இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்!. 2 உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம். ‘உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப் பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருக்கும்’. 3 மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்: "இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது.". 4 ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளியின் கல்லறை வாசகம் "இங்கும் புதை குழியில் கூ…
-
- 0 replies
- 2.6k views
-
-
-
- 0 replies
- 675 views
-
-
தற்பெருமை கொள்ளல் தகாது! - மனத்துக்கினியான் தர்மோ ரக்ஷதி ரக்ஷித:' என்பது ஆன்றோர் வாக்கு. தர்மத்தை நாம் கடைப்பிடித்துக் காத்தால், தர்மம் நம்மைக் காக்கும் என்பது அனுபவ உண்மை. இப்படி தர்மத்தைப் போதிக்க வந்தவையே இதிகாசங்கள். இரு கண்களான அவை நமக்குக் காட்டாத தர்ம நெறியா...? மனிதன் சுக துக்கங்களை தனக்குத் தானே தேடிக் கொள்கிறான். ஒருவரின் சொல்லும் செயலுமே அவரை சுக துக்கங்களின்பால் அமிழ்த்துகிறது என்பது அனுபவம். ஆனால் சிலர் தம் தகுதியை மீறி சுய தம்பட்டம் அடிப்பதும், தற்பெருமை பேசித் திரிவதும், சாயம் வெளுத்தால் மனதை மீறிய சுமை அழுத்தி மாய்வதும் சக மனிதர் வாழ்வில் காண்கிறோம். இந்த உண்மையை விளக்க மகாபாரதத்தில் ஒரு சூழ்நிலைக் கதையை ஆன்றோர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.…
-
- 0 replies
- 1.4k views
-