Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. நேர்காணல் பெரியாரிடம் ஜனநாயகத் தன்மை இல்லை: தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன் இரண்டாம் பகுதியின் தொடர்ச்சி... சிறையில் இருந்து வெளியே வந்ததும் சி.பி.எம்மில் சேருகிறீர்கள். அங்கு உங்கள் செயல்பாடு என்னவாக இருந்தது. அங்கிருந்து வெளியேற என்ன காரணம்? நான் கட்சியில் சேர்ந்த நேரம் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருந்தது. சி.பி.எம். தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். மற்றக் கட்சிகளைப் போல, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு, ஈ.எம்.எஸ், பி.ராமமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஏ.பாலசுப்பிரமணியம் போன்ற இடைநிலைத் தலைவர்களை அரசு கைது செய்தது. கேரளாவில் நெருக்கடி நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்பு போ…

    • 0 replies
    • 790 views
  2. ஜீவகாருண்ய ஒழுக்கம் (Part-1) சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம் - முதற் பிரிவு ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும். அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:- எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப…

    • 0 replies
    • 833 views
  3. இலிங்கோத்பவர் முன்னொரு காலத்தில் நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், "நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்" என்றார். திருமால், "நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்" என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது. அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று …

    • 4 replies
    • 1.6k views
  4. மரண யோகம், சித்த யோகம் என்றால் என்ன? ஜோதிட ரத்னை முனைவர் க.ப. வித்யாதரன்: குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் சேர்ந்து அந்த கிழமையும் வந்தால் அது மரண யோகம், அதுபோலவே குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் வந்தால் சித்த யோகம். எல்லாமே ஒரு கணக்குத்தான். ஞாயிற்றுக்கிழமை உத்திரட்டாதி அமாவாசை திதி என இன்று மூன்றும் சேர்ந்தால் அன்று அமிர்தயோகம். அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வேறு ஒரு திதி மற்றும் நட்சத்திரம் அன்று வேறு யோகம் வரும். ஒரு சில யோக நாட்களில் சுப காரியங்கள் செய்யலாம். மரண யோகம் போன்ற நாட்களில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது. மரண யோகம் என்று ஏன் பெயர் வைத்தார்கள்? மரண யோகம் என்பது மரணத்தைக் குறிப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாத…

    • 0 replies
    • 7.2k views
  5. உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சிவரகசியம் இதிகாசப் படலம் விஷ்ணுவானவர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த் ஓர் பெரிய யுத்தத்தில் தேவர் தோல்வி கண்டது கொண்டு அவ்வசுரர்களைக் கொல்வதற்காக அப்போது, மகா பயங்கரமான யுத்தம் செய்கையில், அசுரர்கள் விஷ்ணுவால் மிகுதியாயக் கண்டிக்கப் படலான போது, அவர்கள் விஷ்ணுவால் மிகுதியாய்க் கண்டிக்கப் படலான போது, அவர்கள் விஷ்ணுவால் தோல்வி அடையப் பெற்றவர்களாகிப் பிருகுமுனிவர் ஆசிரமத்துக்கு ஓடி அம்முனிவரின் மனைவிபால் சரணடைந்தார்கள். அப்போது விஷ்ணுவானவர் சக்கரத்தை எடுத்துக் கொண்டு தாமும் அவ்வாசிரமத்துக்கு வந்து அங்கு அவ்வசுரர்களைக் கொல்ல எத்தனிக்கையில், பிருகு பத்தினியானவள் ஓ! விஷ்ணுவே! முனிவர் இல்லாத சமயத்தில் நீர் ஆ…

    • 11 replies
    • 3.7k views
  6. "கதிர்காமத்தில் முருகனுக்கு வேல் அஷ்டோத்திரம்' என்று அர்ச்சனைகள் செய்வார்களாமே நான் அறிந்ததில்லை.. அறிந்தவர்கள் யாரேனும் இருக்கின்றீர்களா? அந்த அஷ்டோத்திரம் எங்கு கிடைக்கும் தெரிந்தவர்கள் உதவுங்களேன். இணையத்தில் கிடைக்குமா? மிக்க நன்றி...

  7. "நானும் சைவ சமயத்தில் பிறந்து சைவ சமயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் ஆனால் இறை தூதர் இயேசுவின் தீவிர இரசிகன். அவர்தம் போதனைகளை அதிகமாக நேசிப்பவன். சின்ன வயதில் எனது அப்பா எனக்கு சொன்ன ஒரு கதை எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல்...!" இயேசுவாக அவதரித்திருக்கிறார்....! உலகில் பாவங்களை நீக்குவதற்கான நம் தேவன் தன் படைப்பின் ஒவ்வொரு முக்கியத்துவத்தினையும் நமக்காக செலவிடுபவராக அவதரித்தவர். அவரை மறந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம் இறைவன் நம்மை இரட்சிப்பவராகின்றார். பல வேளைகளில் நாம் அவரை மறப்பினும் நம்மை என்றும் மறக்காதவரான தேவன் நமக்காக…

    • 0 replies
    • 1k views
  8. பன்னிரு திருமுறைகளும், அவற்றின் பொருளும் கீழேயுள்ள இணைப்பில் உள்ளன. விரும்புவோர் இணைப்பை அழுத்திப் பயன் பெறுக. இணைப்பு ;- http://www.thevaaram.org/thirumurai_1/song...1&padhi=001

  9. அய்யப்பா எல்லாமே பொய்யப்பா! அய்யப்பன் - கையப்பன் - அரிகரபுத்திரன் - என்ற்லலாம் ஓர் இந்துமதக் கடவுளைச் சொல்லி அது திருமணமாகாத ஆண் கடவுள்; ஆகவே பெண்கள் பார்ப்பதற்கு வரக்கூடாது எனக் கூறி விட்டார்கள். பார்த்தால் யாருக்குப் பேதலிக்கும்? கடவுளுக்கா? பெண்களுக்கா? விளக்கம் இல்லை. ஆனாலும் நடிகை ஜெயமாலா தனது 20 வயதில் கருவறைக்கே போய்க் கடவுளைத் தொட்டுத் தழுவிக் கும்பிட்டதாகச் சேதி. விசாரணை நடக்கிறது. கடவுளைத் தொட்டுப் பூஜை செய்யும் தலைமைப் பூஜாரி கொச்சியில் விபச்சாரி வீட்டில் பிடிபட்டார். பூஜை செய்யக் கூடாது எனத் தடை. உண்டியல் காசை எண்ணுபவர்கள் வெறும் முண்டு மட்டுமே கட்ட வேண்டும். காரணம், உள்ளடையில் ரூபாய் நோட்டுகளைக் கட்டி எடுத்துச் சென்று விட்டனர். கடவுளி…

  10. இது பெரியாரின் வெற்றி! என்கிறது ஆனந்த விகடன்! சின்னகுத்தூசி தந்தை பெரியார் அவர்கள் பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அப்போதும் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று விரும்பினார்; அதற்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் பிரகடனம் வெளியிட்டிருந்தார். இன்று அவரது விருப்பம் நிறைவேற்றி வைக்கப்படாத நிலையில் நாம் அவரை அடக்கம் செய்கிறோம். பெரியாரின் நெஞ்சில் ஒரு முள் போல அந்த நிறைவேற்றப்படாத அறிவிப்போடு சேர்த்து அவரை நாம் அடக்கம் செய்கிறோம் என்று கண்களில் நீர் பனிக்க துக்கம் தொண்டையை அடைக்க தழுதழுத்த குரலில் கூறினார். 2006ல் தி.மு.கழகம…

  11. http://www.dailymotion.com/related/9226761...6-seeman-1_news

  12. இன்று பல கிறிஸ்தவர்கள் சைவ சமயத்தை பல வேறாக நிந்தனை செய்து வருவதைக் காண்கிறோம். அவர்கள் விபூதி அணிவதையும், உருத்திராக்கம் அணிவதையும் நிந்தனை செய்வர். அவர்களுக்கு தக்க மறுப்பு கொடுத்த புத்தகம் யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை எழுதிய "சைவ பூஷண சந்திரிகை" என்னும் புத்தகம். அந்த புத்தகத்தின் ஒரு பகுதி உங்களது பார்வைக்கு கிறிஸ்தவர்கள் "மாட்டுச் சாம்பர் பாவத்தைப் போக்குமா" என்றும், "இலந்தைக் காய்போன்ற உருத்திராக்கக் காய்கள் மோக்ஷத்தைக் கொடுக்குமா" என்றும், உங்கள் ஞானிகளாகிய பட்டினத்தடிகள் முதலாயினோரே "நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன" என்றின்னன போன்ற வாக்கியங்களால் நீறு உருத்திராக்கங்களாற் பிரயோசனமில்லை யென்றுங் கூறியிருக்கின்றனர் என்றும், நம்மவர்…

    • 15 replies
    • 4.2k views
  13. Wednesday, June 18, 2008 கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன? இதோ ஆதாரங்கள்:ஜாதி (வர்ணமதர்ம) பாதுகாப்பு, கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள், ``இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்தி லிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது. கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;பெண்ணின் துர்புத்தியால் தான்இங்கு வருணாசிரம தர்மம்அழியப் போகிறது என்று!அப்படியானால…

  14. Started by ArumugaNavalar,

    உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சமய அறிவு திரு. T.R.திருவாய்மொழிப்பிள்ளை B.A., சிரஸ்தார், கலக்டர் ஆபீஸ், திருநெல்வேலி -------------------------------------------------------------------------------- சமயம் ஆவசியகம் சமயம் என்றாலும் மார்க்கம், மதம் என்றாலும் பொருள் ஒன்றே, உயிரின் அறிவை மறைத்து நிற்கும் அறியாமை என்னும் நோயை நீக்கி உயிரை மேல் நிலைக்குச் செலுத்துவது சமய ஞானமாகையால், உண்மைச் சமயஞானத்தையும் அச்சமயக் கொள்கைகளையும் ஆராய்ந்து கடைப்பிடித்து ஒழுகவேண்டியது அறிவுடைய மக்கள் கடமையாகும். நம் உடம்பில் ஒரு நோய் காணப்படுமாயின், அனுபவமுதிர்ந்த வைத்தியர் ஒருவரை அழைத்துக் கையைக் காட்டுகிறோம். வைத்தியர் நம்முடை…

    • 18 replies
    • 3.3k views
  15. தசாவதாரம் படத்தில் குலோத்துங்க சோழன் பெருமாள் சிலையை கடலில் வீசியது போல் வருவதாக அறிகிறோம். உண்மையில் நடந்தது என்ன? இதை விளக்கவே இந்தக் கட்டுரை......... உ சிவமயம் திருச்சிற்றம்பலம் தில்லை நடராசர் திருக்கோயிலில் கோவிந்தராசப் பெருமான் இடம் பெற்ற வரலாறு செந்தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் தில்லைப் பெருங்கோயில் சைவசமயத்தார்க்குச் சிறப்புரிமையுடைய தலைமைக கோயிலாகவே போற்றப் பெற்றுள்ளது. வியாக்கிர பாதராகிய புலிக்கால் முனிவர் திருமூலட்டானப் பெருமானை வழிபட்டுப் போற்றினமையால் பெரும் பற்றப்புலியூர் எனவும், தில்லைவனமாகிய இத்திருத்தலத்திலே பதஞ்சலி முனிவர் செய்த தவத்திற்கு அருள்கூர்ந்து எல்லாம் வல்ல சிவபெருமான் ஞான மயமான அம்பலத்திலே…

    • 27 replies
    • 8.3k views
  16. "மாற்றம் தேவை" -------------------------- இன்றைய பள்ளிச்சாலைகளில் நாம் பயிலும் விஷயங்கள் நமது ஆன்ம லாபத்திற்கு எந்த அளவு துணை புரிகிறது என்று அறிதல் இன்றியமையாதது. தனிப்பட்ட மதபோதனை கல்வி நிலையங்களில் இடம் பெறக் கூடாதாம். ஆனால் அறநெறிப் போதனையை (Moral Instruction) அலட்சியம் செய்தலும் கூடாதாம். இது இப்போது நிலவும் கொள்கை. கல்வியின் பயன் என்ன என்பது பற்றி நன்கு சிந்தியாத, சிந்திக்க மறுக்கும் மாந்தரின் செயலால், சமயபோதனையை முற்றிலும் மறந்து நிற்கிறது நமது தமிழ் இனம். திருவள்ளுவரின் "கற்றதனால் ஆயபயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழா அரெனின்" என்ற பாடல் கல்விக் கொள்கையை உருவாக்குவோர் உளத்தில் அழியா இடம் பெறவேண்டிய பாடலாகும்.

  17. அறிவும் திருவும் (சித்தாந்தப் புலவர் மாமணி, பாலகவி, வைநாகரம், வே. இராமநாதன் செட்டியார் அவர்கள், தேவகோட்டை) உலகத்திலே உள்ள உயிர்த்தொகுதிகள் அனைத்திற்கும் அறிவையும் திருவையும் ஆண்டவன் வழங்கியிருக்கிறான். ஆனால் அனைத்துயிர்களிடத்திலும் அவை ஒரே படித்தானவையாக அமைந்திருக்கவில்லை உடல்கொண்டு பிறக்கின்ற உயிர்கள் நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதங்களுக்கு உட்படுகின்றன என்று நூல்கள் கூறும். மரம், செடி, கொடிகளிலிருந்து மனிதர்வரை காணப்பெறுகின்ற உயிர்த் தொகுதிகளின் அறிவு நிலை படிப்படியாக உயர்ந்திருப்பதை நாம் அறிவோம். உயிர்களின் அறிவுக்குக் கருவியாயிருந்து உதவுவன பொறிகள். அவற்றால் அறியும் அறிவைப் புலமென்று சொல்லுவர். …

  18. உலகின் சிவன் கோவில்கள் சைவ சமயம் இமயம் முதல் குமரி வரை பரவியிருக்கின்றது. தமிழ்நாட்டில் சைவசித்தாந்தம் என்றும், கன்னட நாட்டில் சைவசித்தாந்தம் என்றும், கன்னட நாட்டில் வீரசைவம் அல்லது இலிங்காயதம் என்றும், காஷ்மீரில் காஷ்மீரசைவம் அல்லது பிரத்ய பிக்ஞா சைவம் என்றும் சைவசமயம் ஆங்காங்கே தனிச்சிறப்பாக நிலவி வருகின்றது. சைவசமயம் மிகத் தொன்மை வாய்ந்த்து ஹரப்பா, மொகஞ்சதாரோ என்னும் இடங்களில் அகழ்வு ஆராய்ச்சிகள் நிகழ்த்திய சர்ஜான் மார்ஷல் போன்ற பேரறிஞர்கள் சைவசமயமானது உலகத்திலேயே மிகவும் பழைமையான உயிர்ப்பாற்றல் மிக்க சமயமாக இருந்து வருகின்றது என்று ஆராய்ந்து கூறியுள்ளனர்.

    • 11 replies
    • 4.8k views
  19. கணேசரும் சிவபெருமானும் ஒருவரே தேவர்களை வருத்திய நஞ்சை அடக்கி இடரை நீக்கிய மகேசுரமூர்த்தியின் திருவருளாகிய திருக்கண்டத்தினின்றும், பிரதம சிருட்டியாரம்பத்தில் அடியார்களுடைய இடரை நீக்குங் காரணமாக, விநாயகக் கடவுள் தோன்றியருளினாரென வாதுளாகமம் கூறுகின்றது, அவர் யானை முகத்தையும், மூன்று திருக்கண்களையும், ஐந்து திருக்கரங்களையும், அவைகளில் தந்தம், பாசம், அங்குசம், பண்ணியமாகிய இவைகளைத் தரித்தவராயும், கிம்புரிப்பூணணிந்த ஒற்றைத்தந்தத்தையும், இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி யென்னும் மும்மதத்தையும், இரண்டு திருவடிகளையும் உடையவராய் இருந்தருளுகின்றனர். கயமுக சம்மாரத்தின் பொருட்டு முரிக்கப்பட்டதாகிய ஒரு கொம்பை ஏந்தியருளியது, மும்மலங்களையும் நீக்கியருளுபவர்தா மென்பதை…

    • 21 replies
    • 4.3k views
  20. வாழவா பிறந்தான்?-------------------------- மனிதன் மல மூத்திரங்களிற் புரள்கிறான், அவற்றை வாயிலும் வைத்துக் கொள்கிறான். பாடத்தேர்வில் தோற்கிறான், வெட்கத்தால் நஞ்சை உண்டு விடுகிறான், வறுமை, நோய் முதலியவற்றில் உழல்கிறான். கடு வெயிலில் நெற்றி வியர்வை நிலத்தில் விழச் சோற்றுக்கு உழைக்கிறான். அடிமை வேலையில் அழுங்குகிறான், வைத்தியஞ் செய்து கொள்வதற்கு அவகாச மில்லாமலே துள்ளித் துடித்துப் போய்விடுகிறான். குத்துப்படுகிறான், கொலையுண்கிறான், கொள்ளை கொடுக்கிறான். இரயில் மோட்டார் வண்டி, வானவூர்தி முதலியவற்றால் விபத்துக்குள்ளாகிறான், நீரில் அமிழ்கிறான், தீயில் வேகிறான், உறவினரை யிழந்து தவிக்கிறான், வேலை கிடையாமல் அலமருகிறான், மற்றைப் பிராணிகளாற் கடிபடுகிறான், குற்றஞ் செய்த…

    • 2 replies
    • 1.2k views
  21. உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஏகபாதமூர்த்தி "வெய்யதிரி சூலம் விழைவோ டினிதேந்தும் கைகளொரு நான்குமலர் கண்களொரு மூன்றும் செய்யமலர் வென்றவொரு நாளுமுறு தேவை யொய்யென அமைத்தவர்கள் முத்தியுறுவாரே" - இலிங்க புராணம்

  22. Started by ArumugaNavalar,

    பிறவாமை 'சிங்கடி யாரைப் பிறப்பித்தெடுத்த பிதா' என்றார்கள் ஸ்ரீமத் சேக்கிழார் சுவாமிகள். பிதா பிள்ளையைத் தாய் வயிற்றிற் பிறப்பித்தான். பிள்ளையைத் தாய் பத்தாமாசம் வெளிப்படுத்தினாள். பிள்ளை பிறந்தான். பிறகு அவனைத் தந்தையெடுத்துத் தன் பிள்ளையென உரிமை கொண்டு கொஞ்சினான். அவ்வுண்மை அம்மேற்கோளால் தெரிகிறது. பிள்ளையைப் பிறப்பித்தாள் எனத் தாயையுஞ்சொல்லலாம். பிறப்பித்தாள் - வயிற்றிலிருந்து வெளிப்படுத்தினாள். ஆனால் தந்தை அவள் வயிற்றிற் பிறப்பித்த பிள்ளையைத் தான் அவள் பத்து மாதம் வைத்திருந்து வெளிப் படுத்தினாள். அதனால் பிறப்பித்த தந்தை தாயருள் ஆதிவினை முதல் தந்தையே. தாய்வயிறு பிள்ளை பத்து மாசம் தங்குவதற்கோரிடைப்பட்ட நிலமாகும். ஆகலின் பிள்ளையின் பிறப்புவிஷயத்தில் …

    • 3 replies
    • 1.5k views
  23. நாத்திகம் என்பது நம்பிக்கையா? மாடர்ன் டிரஸ் சாமியாரின் ஆன்மீக மோசடி - சார்வாகன் வாசுதேவன் என்றொருவர். ஜக்கி வாசுதேவ் எனத் தன்னை அழைத்துக் கொள்பவர். சத்குரு (சத்தியமான குரு) என்று இவரை அழைக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டவர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய துணைவி திடீர் என இறந்து போனது பற்றிப் பலப்பல செய்திகளும் உலா வந்தன. நமக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. மாடர்ன் ஆக உடை உடுத்திப் பேசி வரும் சமயப் பிரச்சாரகர். சமயம் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை என்றும் சத்தியமான செய்திகளைச் சொல்லி வருவதாகவும் சொல்லிக் கொள்பவர். இது உண்மையா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். உலகிலேயே உயரமான லிங்கம் என்னுடைய ஈஷா லிங்கம் தான் என்று பெருமை பேசிக் கொள்பவர், ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.