உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
அமெரிக்காவில் பயங்கரம் : மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், எனவும் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1355686
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
காசாவின் நிலை -எங்கள் கூட்டு மனச்சாட்சி மீதான கறை – நாளாந்தம் 400 சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் – காயமடைகின்றனர் – யுனிசெவ் Published By: RAJEEBAN 25 OCT, 2023 | 07:43 AM காசாவில் கடந்த 18 நாட்களில் கொல்லப்பட்ட சிறுவர்கள் குறித்த விபரங்களை யுனிசெவ் அமைப்பின் மத்திய கிழக்கிற்கான இயக்குநர் வெளியிட்டுள்ளார். காசாவில் கடந்த 18 நாட்களில் 2346 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 5364 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அடெலே கொடர் நாளாந்தம் 400 பாலஸ்தீன சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவில் காணப்படும் நிலை எங்கள் கூட்டு மனச்சாட்சி மீதான கறையாகும் என தெரிவித்துள்ள யுனிச…
-
- 1 reply
- 652 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 25 OCT, 2023 | 12:03 AM ஹமாஸ் ஒக்டோபர் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதலிற்கான வரலாற்று சூழ்நிலைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆற்றிய உரைக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டமொன்றில் உரையாற்றிய அன்டனியோ குட்டரஸ் ஹமாசின் தாக்குதல் வெற்றிடமொன்றில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்கள் 56 வருட மூச்சுதிணறவைக்கும் ஆக்கிரமிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளனர். தங்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பாளரினால் பறிபோவதையும் வன்முறையில் சிக்குண்டுள்ளதையும் பார்த்துள்ளனர் என ஐக்கியநாடுகள் நாடுகள் செயலாளர் நாயகம…
-
- 6 replies
- 409 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் பேலி பதவி, பாதுகாப்பு செய்தியாளர், இஸ்ரேல் 25 அக்டோபர் 2023, 10:12 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா தடையற்ற ஆதரவை இஸ்ரேலுக்கு தொடர்ந்து தருவதாக உறுதியளித்துள்ளது. அதற்காக தனது ராணுவ உதவியையும் அளித்துள்ளது. ஆனால் இப்பகுதியில் கடந்த காலச் சிக்கல்களின் வடுக்கள் இன்னும் உணரப்படுவதால், அமெரிக்காவின் ஈடுபாட்டிற்கான வரம்பு எவ்வளவு தூரம் உள்ளது? இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு தனது முதல் எதிர்வினையில், அமெரிக்க அதிபர் பைடன், அமெரிக்கா யார் பக்கம் என்பதை தெளிவுபடுத்தினார்: "அமெரிக்கா இஸ்ரேலுக்கு பின்னே பக்கப…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் பனிப்பொழிவால் விபரீதம்: 168 வாகனங்கள் மோதி சங்கிலித்தொடர் விபத்து – 8 பேர் பலி அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தெற்கு பகுதியில் மிகப்பெரிய சதுப்பு நிலம் காணப்படுகிறது. இங்கு ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே அங்கு காலையில் கடும் பனிப்பொழிவு உருவானது. இந்த பனிப்பொழிவுடன் தீயில் இருந்து வெளியேறிய புகையும் சேர்ந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. ஒன்றன்பின் ஒன்றாக மோதின இதனால் சாலையில் முன்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாத அளவுக்கு மூடுபனி உருவானது. அப்போது அபாயகரமான வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று அந்த வழியாக சென்றது. மூடுபனி காரணமாக எதிரே வந்த வா…
-
- 1 reply
- 464 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 நிமிடங்களுக்கு முன்னர் அக்டோபர் 23-ஆம் தேதியின் 24 மணி நேரத்தில் மட்டும் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே 24 மணிநேரத்தில் 400 ‘பயங்கரவாத இலக்குகளைத்’ தாக்கி ஹமாஸ் குழுவின் பல தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 23-ஆம் தேதிகாஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தெற்கு சீன கடல் அல்லது மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவும் பிலிப்பைன்ஸும் போட்டியிட்டு வருகின்றன. 19 நிமிடங்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை சீன கடற்படையின் கடலோரக் காவல் கப்பலுக்கும் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் கப்பலுக்கும் இடையே நடைபெற்ற மோதல் வீடியோவைக் கவனமாகக் கவனியுங்கள். மோதலின் போது, ஒரு கப்பலின் பின்புறம் மற்றொரு கப்பலின் மேல் மோதும்போது, அதற்கிடையில் ஒரு பிலிப்பைன்ஸ் தொலைக்காட்சி குழுவினர் இதனை படமாக்க கடுமையாக முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. தென் சீன கடலில் உள்ள மூழ்கிய பவளத் திட்டுகள் தொடர்பாக மணிலாவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான மோதல் பல தசாப்…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
ஹமாஸ் பெண்களை எவ்வாறு நடத்துகிறது? சுரங்கப் பாதையில் உணவு, பாதுகாப்பு எப்படி? மீண்டு வந்தவர் பேட்டி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 2 பேரை இன்று அதிகாலை விடுவித்தது. அவர்கள் 79 வயதான நூரித் கூப்பர் மற்றும் 85 வயதான யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் ஆகியோர் ஆவர். ஆனால் இவர்களது கணவர்கள் இன்னும் ஹமாஸ் பிடியிலேயே இருக்கிறார்கள். இதன் மூலம் ஹமாஸ் விடுவித்திருக்கும் பணயக் கைதிகளின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்திருக்கிறது. அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற திடீர் தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் குழுவினரால் 222 பேர் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 2…
-
- 24 replies
- 1.3k views
- 1 follower
-
-
அமெரிக்காவில் 5ஆம் வகுப்பிலிருந்து 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களின் விஞ்ஞான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், உலகில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய கண்டுபிடிப்புகளில் அவர்கள் தங்கள் அறிவாற்றலை செலுத்தவும், “3 எம் அண்ட் டிஸ்கவரி எஜுகேஷன்” (3M and Discovery Education) எனும் அமைப்பால் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. PauseUnmuteFullscreen இதில் அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தின் அன்னண்டேல் பகுதியை சேர்ந்த 14 வயதான ஹேமன் பெகேல் (Heman Bekele) எனும் 9ஆம் வகுப்பு மாணவன் கலந்து கொண்டான். ஆபிரிக்க நாடான எதியோப்பியாவில் பிறந்து, 4 வயதில் அமெரிக்காவிற்கு பெற்றோருடன் வந்த ஹேமன் அமெரிக்காவிலேயே தொடர்ந்து கல்வி பயின்று வருகிறான். ஹேமன், உயிரி…
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 24 OCT, 2023 | 04:49 PM ஜேர்மனியின் கடற்பரப்பில் இரண்டுசரக்குகப்பல்கள் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன. ஜேர்மனியின் வடக்குகிழக்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரிட்டன் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த வெரிட்டி என்ற கப்பல்பஹாமாவை சேர்ந்த பொலைசி என்ற கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரிட்டி கப்பல் மூழ்கியுள்ளது அதன் ஏழு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என ஜேர்மன் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆறுபேர் காணாமல்போயுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/167667
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
1980 களின் பிற்பகுதியில் ஹிந்தியாவின் பிராந்திய நலனை முன்னிலைப்படுத்தி.. புளொட் கும்பலை வைத்து.. ஹிந்திய உளவு அமைப்பின் உதவியோடு செய்யப்பட்ட இராணுவப் புரட்சி.. பின் அதை ஒடுக்கப் போவதாகச் சொல்லி மாலைதீவில் இறங்கிய ஹிந்தியப்படை.. இது நாள் வரை அங்கு பல்வேறு இராணுவ விமானப்படை தேவைகளுக்காகத் தங்கி இருக்கிறது. இந்தச் சம்பவத்தை வைத்து ஹிந்தியா உலக அரங்கில் தமிழீழ விடுதலைக்காகப் போராடிய.. அனைத்து ஈழத்தமிழ் இயக்கங்களையும் பயங்கரவாதிகள் என்று சித்தரித்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது மாலைதீவு அதிபராக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும். மொகமட் முய்ஸ்சு.. இவ்வாறு தங்கியுள்ள ஹிந்தியப் படைகளை வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ளதுடன்.. இந்த அறிவிப்பை சீனா வரவேற்றிருக்கிறது. …
-
- 6 replies
- 684 views
- 1 follower
-
-
இலங்கையை இராணுவ தளபாட விநியோக தளமாக பயன்படுத்துவதற்கு சீனா முயற்சி- பென்டகன் அறிக்கை Published By: RAJEEBAN 23 OCT, 2023 | 11:36 AM இலங்கையை இராணுவ தளபாட விநியோகத்திற்காக பயன்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்துள்ளது என பென்டகன் தெரிவித்துள்ளது. சீனா தனது உலகளாவிய இராணுவ தளங்களை விஸ்தரிக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் சீனா தனது இராணுவ தளபாட விநியோகத்திற்காக 18 நாடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. இராணுவ நடவடிக்கைகளிற்கான தேவை எழும்போது சீனா இராணுவம் பயன்படுத்தக்கூடிய தளங்களை உருவாக்குவது குறித்தே சீனா கவனம் செலுத்துகின்றது. சீனா இராணுவ தளபாட விநியோகத்திற்கான தளங்கள…
-
- 3 replies
- 339 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் (வெடிமருந்தைக் கண்டுபிடித்தவரும், நோபல் பரிசை நிறுவியவருமான ஆல்ஃப்ரட் நோபலின் பிறந்த தினம் அக்டோபர் 21) உலக அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் செயல்படும் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் உலகிலேயே வழங்கப்படும் மிக உயரிய விருது அமைதிக்கான நோபல் பரிசு. ஆனால் இந்த விருதை நிறுவியவர்தான் பல போர்களுக்காகவும் வெடிகுண்டுகளைத் தயாரிக்க உதவிய டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். அவர் தான் ஆல்ஃப்ரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர். இந்த முரண் எப்படிச் சாத்தியமானது? யார் இந்த ஆல்ஃப்ரட் நோபல்? அவர் தன் வாழ்நாளில் செய்தது என்ன? யார் இந்…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்கு கரையில் குடியேறிய இஸ்ரேலியர்கள் பாலத்தீன விவசாயியை கற்களால் தாக்கும் காட்சி. (2020 அக்டோபரில் எடுக்கப்பட்டது) 22 அக்டோபர் 2023, 09:01 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் அபேத் வாடிக்கு தனது தொலைபேசியில் செய்தி வந்தபோது, அவர் இறுதிச் சடங்கிற்காக தனது வீட்டில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார். முகமூடி அணிந்த ஒரு குழுவினர் கோடரிகள், பெட்ரோல் டப்பா மற்றும் செயின்சாவுடன், ஹீப்ரு மற்றும் அரேபிய மொழியில் மிரட்டும் ஒரு வீடியோ அது. "குஸ்ரா கிராமத்தின் சாக்கடையில் உள்ள அனைத்து எலிகளுக்கும், நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறோம், நாங்கள் உங்களுக்காகத் துக்…
-
- 2 replies
- 366 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தாட் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு 2 விமானம் தாங்கிக் கப்பல், மற்றும் ஜெட் விமானங்களை அமெரிக்கா அனுப்பியிருந்தது. தற்போது, அவற்றுடன் தாட்(THAAD) என்னும் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது தாட் அமைப்பு, குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கக் கூடியது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், கூடுதல் படையினர் எந்த நேரத்தில…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 22 OCT, 2023 | 10:15 AM கடந்த இரண்டு வாரகாலமாக இஸ்ரேல் தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் காசா சிறுவர்கள் முன்னரை விட அதிகளவு மன அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றனர் என பெற்றோர்களும் உளவியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். காசாவின் 2.3 மில்லியன் சனத்தொகையில் சிறுவர்கள் என குறிப்பிட்டுள்ள ரொய்ட்டர் இவர்களில் பலர் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடியுள்ள நிலையில் ஐநா அகதி முகாமில் குடிநீரும் உணவும் இன்றி தொடர்ச்சியான குண்டுவீச்சின் கீழ் வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளது. சிறுவர்கள் வலிப்பு படுக்கையில் சிறுநீர்கழித்தல் பயம் ஆக்ரோசம் நடவடிக்கைகளில் பதற்றம் பெற்றோர் அருகிலேயே இருக்கவேண்டும…
-
- 2 replies
- 211 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ‘பொன்ஸி’ மோசடியில் ஈடுபட்ட ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தை முடக்கும் நடவடிக்கைக்கு அனுமதி பெற்றுள்ளதாக அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன்(எஸ்இசி) அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொன்ஸி என்பது ஒரு முதலீட்டு மோசடி திட்டம். அதாவது, புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதிலிருந்து பணத்தை எடுத்து பழைய முதலீட்டாளர்களுக்கு கொடுப்பது. இந்தியாவில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கோபால கிருஷ்ணன், மணிவண்ணன் சண்முகம், சக்திவேல் பழனி ஆகியோர் இணைந்து அமெரிக்காவில் நண்பன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை …
-
- 0 replies
- 488 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூத அமைப்புக்களைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைதுகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். நாடாளுமன்ற பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில், அங்குள்ள நாடாளுமன்ற அலுவலக கட்டடமான "கேனான் ஹவுஸ்" அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டக்காரர்கள் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், நாடாளுமன்றமும் …
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 20 OCT, 2023 | 12:41 PM ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. அய்ன் அல்அசா விமானப்படை தளத்திற்குள் பாரியவெடிப்பு சத்தங்கள் கேட்டன ஈராக்கிய படையினர் அந்த விமானதளத்தை மூடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ள ரொய்ட்டர் உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் வெளியாகவில்லை எனவும் செய்தி வெளியி;ட்டுள்ளது. கடந்த வாரம் ஈரானிற்கு நெருக்கமான ஈராக்கிய குழுக்கள் ஹமாஸ்விவகாரத்தில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அமெரிக்காவின் நிலைகளை தாக்கப்போவதாக எச்சரித்திருந்தது. ஈரா…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். இந்தியா இரண்டு வாரங்களுக்கு முன்பு கனடாவை அதன் தூதரக ஊழியர்களை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. அவர்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கான ராஜாங்க சட்ட விலக்குகளை நீக்கிவிடப் போவதாகவும் இந்தியா கூறியிருந்தது. கனடா இதை "சர்வதேச சட்ட மீறல்" என்று கூறியது ஜூன் 18 ஆம் தேதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து உறவுகளில் பதற்றம் ஏற்பட்டது. இந்த குற்…
-
- 6 replies
- 451 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாட் மர்ஃபி பதவி, பிபிசி செய்தி, வாஷிங்டன் 18 நிமிடங்களுக்கு முன்னர் சீனா கடந்த ஆண்டு அதன் அணு ஆயுத இருப்புகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. மேலும் தற்போது சுமார் 500 செயல்பாட்டு அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், பெய்ஜிங் 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் ஆயுத இருப்புகளை இரட்டிப்பாக்கி 1,000 அணுகுண்டுகளுக்கு மேல் வைத்திருக்கும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா "முதலில் தாக்க மாட்டோம்" கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது என்று அது கூறியது…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் இன்று -19- கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் டாக்டர் சுனில் ராவ், மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
-
- 23 replies
- 1.3k views
-
-
Published By: DIGITAL DESK 3 19 OCT, 2023 | 03:02 PM பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இன்று வியாழக்கிழமை (19) இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7 ஆம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இரு பகுதிகளிலும் தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சு வார்த்தை நடத்த அங்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் சென்றுள்ளார். குறித்த சந்திபின் போது, இஸ்ரேலிலும் பாலஸ்தீனப் பகுதியிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கலை தெரிவிப்பதோடு, மோதல் அதிகரிப்பதற்கு எதிர…
-
- 11 replies
- 827 views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹெஸ்பொல்லா என்பது ஈரான் ஆதரவு கொண்ட ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் லெபனானில் உள்ள துணை ராணுவக் குழு ஆகும். இது 1992 முதல் ஹசன் நஸ்ரல்லாவால் வழிநடத்தப்படுகிறது. ஹெஸ்பொல்லா பெயரின் பொருள் கடவுளின் கட்சி. 1980 களின் முற்பகுதியில் லெபனானை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது ஈரானின் நிதி மற்றும் இராணுவ உதவியுடன் ஹெஸ்புல்லா உருவானது. லெபனானின் பாரம்பரியமாக அதிகாரம் இழந்த ஷியாக்களை தெற்கில் பாதுகாப்பதற்கான ஒரு சக்தியாக அது இருந்தது. அதன் கருத்தியல் வேர்கள் 1960 மற்றும் 1970 களில் லெபனானில் ஷியா இஸ்லாமிய மறுமலர்ச்சி வரை நீண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் இஸ்ரேல் பின்வாங்கிய பிறகு, ஹெஸ்பு…
-
- 1 reply
- 687 views
- 1 follower
-
-
ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்திலுள்ள யூத வழிபாட்டு தலத்தில் திடீர் தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்துள்ளதோடு அவர்கள் வெடிக்கும் தன்மை உடைய பொருட்களை வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் நடவடிக்கை இந்நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அயடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பின்னர் தப்பியோடிய மர்மநபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உள்ளதோடு, ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்த தாக்…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-