உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
இந்திய இலங்கை ஒப்பந்தம் தோல்வியடைந்த போதிலும் தீர்வில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் வீரகேசரி நாளேடு இந்திய இலங்கை ஒப்பந்தம் தோல்வியடைந்த போதிலும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று பெரும்பான்மையான தமிழ் மக்கள் நம்புவதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டோன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவ
-
- 1 reply
- 798 views
-
-
நியூசிலாந்து அருகே கடலில் மாபெரும் பூகம்பம்: கட்டடங்கள் சேதம்- சுனாமி பீதியில் தீவுகள்! ஆகஸ்ட் 02, 2007 வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் வடக்கே உள்ள வனாது தீவுக்கு அருகே தென் பசிபிக் கடலில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது, இதனால் நியூசிலாந்து உள்பட அப் பகுதியில் உள்ள பல தீவுகள் குலுங்கின. சுனாமி ஏற்படலாம் என்ற பீதியும் பரவியது. Shot at 2007-08-01 நியூசிலாந்து நேரப்படி இன்று அதிகாலை 4.08 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.2 என்ற அளவுக்கு பதிவானது. இதனால் நியூசிலாந்தின் பல பகுதிகள் அதிர்ந்தன. சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டன. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
ஞாயிறு 29-07-2007 23:38 மணி தமிழீழம் [மயூரன்] தியாகம் செய்த இந்திய அமைதிப் படையினரைக் கெளரவிக்க சிறீலங்கா அரசு தவறிவிட்டது - கல்கத் இலங்கையின் இறைமையை பாதுகாக்கும் நோக்கில் இந்திய அமைதிப்படை வீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ள போதிலும் ஸ்ரீலங்கா அரசும் மக்களும் இந்திய அமைதிப்படையின் தியாகங்களை கௌரவிக்க தவறிவிட்டதாக இந்திய அமைதிப் படையின் தபதியாக பதவி வகித்த ஓய்வு பெற்ற லெப்ரினற் ஜென்ரல் கல்கத் விசனம் தெரிவித்துள்ளார். 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது நாட்டின் இறைமைக்காக போராடிய அயல் நாட்டு படையினரின் திய…
-
- 8 replies
- 1.4k views
-
-
பரத முனிவர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தைத் திரும்பப்பெறு! 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலான தொல்காப்பியமும், ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரமும் தமிழர்களுக்கே உரிய ஆடல் கலையின் சிறப்பினை விவரிக்கின்றன. ஆனால் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பரதமுனிவரை தமிழக நடனக்கலைக்குத் தந்தை எனக் கற்பித்து, பொய்யான ஒரு கூற்றினை தொடர்ந்து தமிழ்ப்பகைவர்கள் பரப்பிவருகிறார்கள். இந்தப் பொய்மையை நிலைநிறுத்த பரதமுனிவருக்கு தமிழ்நாட்டில் கோயில்கட்டவும் முற்பட்டிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இக்கோயில் கட்டுவதற்கு அரசு நிலத்தையும், பணத்தையும் வாரி வழங்கினார். பொய்யை மெய்யாக்கவும் தமிழர்களை இழிவுபடுத்தவும் நடைபெறும் இந்த முயற்சியைக்…
-
- 5 replies
- 2.2k views
-
-
4 ஆயிரம் பேரை நாடு கடத்துவோம் இங்கிலாந்து அறிவிப்பு வீரகேசரி நாளேடு அந்நியநாட்டு கிரிமினல்கள் 4 ஆயிரம் பேரை நாடு கடத்துவோம் என்று இங்கிலாந்து நாட்டு பிரதமர் கோர்டன் பிரவுன் அறிவித்தார். வெளிநாட்டிலிருந்து இங்கே குடியிருப்பவர்கள் வேலை செய்யலாம், குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள். சட்டப்படி அவர்கள் நடந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டும். நிலைமை கைமீறி போவதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 4 ஆயிரம் கிரிமினல்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பிரதமர் பிரவுன் கூறினார்.
-
- 8 replies
- 2.3k views
-
-
வேலூர் அகதி முகாம்களில் விடுதலைப்புலிகள் ஊடுருவலா? - போலீசார் விடிய விடிய சோதனை வேலூர், ஜுலை. 30- வேலூர் மாவட்டத் தில் இலங்கை அகதி களுக்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வாலாஜா, பானாவரம், வேலூர் கருக முத்தூர், ஆம்பூர், திருப்பத்தூர், குடியாத்தம் ஆகிய 6 இடங்களில் செயல்படுகிறது. அகதி முகாம்களில் இலங் கையில் இருந்து அகதிகளாக திரும்பிய தமிழ் குடும்பங்கள் தங்கி இருக்கிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்து 50 பேர் அகதி களாக உள்ளனர். அகதிகள் முகாம்களில் அகதிகள் போர்வையில் விடுதலைப்புலிகள் ஊடுருவலாம் என்று `கிï' பிரிவு போலீசுக்கு உளவு பிரிவு போலீசார் ரகசிய தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அகதி கள் முகாம்களை தீவிர மாககண்காணிக்கும்படி கிï பிரிவு போ…
-
- 1 reply
- 888 views
-
-
அணுச் சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்தாகும் : அமெரிக்கா! இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, எதிர்காலத்தில் இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்துமானால் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் ரத்தாகிவிடும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியுள்ளது! இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்தின் உள்ளீடுகளை விளக்கி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் சார்புச் செயலரும், அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவருமான நிக்கோலாஸ் பர்ன்ஸ் இவ்வாறு கூறியுள்ளார். "சமூக ரீதியிலான அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்வதே இந்த ஒப்பந்தமாகும். அதன் விதிமுற…
-
- 0 replies
- 882 views
-
-
எகிப்தில் புராதன நகரம் கண்டுபிடிப்பு [29 - July - 2007] [Font Size - A - A - A] எகிப்தின் மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள அலெக்சாண்டரியா நகருக்கு அடியில் புராதன நகரம் இருந்ததை அமெரிக்க தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஜீன்-டேனியன் ஸ்டான்லி தலைமையிலான குழுவினர் இந்த புராதன நகரை கண்டுபிடித்துள்ளனர். ஸ்மித்சோனியன் குழுவினர் எகிப்தில் அலெக்சாண்டர் நிறுவிய அலெக்சாண்டரியா நகரில் உள்ள துறைமுகத்தில் நீருக்கு அடியில் தோண்டியபோது இந்த பழைய நகரம் இருப்பது தெரியவந்தது. அலெக்சாண்டர், கி.மு. 331 இல் அலெக்ஸாண்டரியா நகரை நிறுவினார் என்பது வரலாறு. அங்கு உலகிலேயே மிகப்பெரிய நூலகத்தை நிறுவினார். அங்குள்ள…
-
- 0 replies
- 1.3k views
-
-
விஜயகாந்த் பட பாணியில் 'செல்போன் வெளிச்சத்தில்' நடந்த ஆபரேஷன்! பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் உள்ள ஒரு நகரில், மருத்துவமனையில் திடீரென மின்சாரம் கட் ஆகி விட்டதால் செல்போன் விளக்கொளியில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. சமீபத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான படம் சபரி. இப்படத்தில் செல்போன் விளக்கொளியில், அறுவைச் சிகிச்சை நடப்பது போல காட்சி இடம் பெற்றிருந்தது. இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா என்று பலரும் அந்தக் காட்சியை விமர்சித்தனர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிஜமாகவே அர்ஜென்டினாவில் நடந்துள்ளது. மத்திய அர்ஜென்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தில் உள்ள சிறிய நகரம் வில்லா மெர்சிடீஸ். இந்த நகரில் உள்ள பாலிகிளினிக்கோ ஜூன் டி பெரோன் என்ற மருத்துவமனையில், லியானோர்…
-
- 4 replies
- 1.2k views
-
-
வாஷிங் மெஷினுக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தை! ஜூலை 27, 2007 கோலாலம்பூர்: மலேசியாவில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தெரங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த பயங்கரம் நடந்துள்ளது. அந்த வீட்டில் உள்ள அப்தில்லா அல் ஹாடி (7) என்ற சிறுவன் தனது தம்பி நஸ்ருல் ஹபீஸுடன் (14 மாதம்) விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டில் வாஷிங் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த ஹபீஸ், வாஷிங் மெஷினுக்கு அருகே உள்ள மாடிப் படியில் ஏறியுள்ளான். சில படிகள் ஏறியவுடன், அவனது கைக்கு வாஷிங் மெஷின் எட்டியுள்ளது. இதையடுத்து அதன் மேல் புற மூடியைத் திறந்து பார்த்துள்ளான். வாஷிங் மெஷினுக்குள் துணிகள் சு…
-
- 15 replies
- 2.9k views
-
-
ஜனாதிபதி வெப்சைட்டில் இருந்த அப்துல்கலாம் கட்டுரைகள் மாயம் [Friday July 27 2007 11:13:08 AM GMT] [Naffel] அப்துல்கலாம் ஜனாதி பதி பதவியில் இருந்த போது www.presidentofinelia.nic.in என்ற வெப்சைட்டில் ஏராளமான கட்டுரைகள், கவிதைககள் வெளியிட்டிருந்தார். இது தவிர மாணவ- மாணவியர்கள், பொதுமக்களிடம் இருந்து வரும் இ- மெயில்களை படித்து அவர்களுக்கு பதில் அனுப்பி வந்தார். இதில் குழந்தைகளுக்கான பகுதியையும் உருவாக்கி அவர்களை கவர்ந்தார். இதனால் அந்த வெப்சைட்டை தினந்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்து படித்து வந்தனர். சில சமயம் ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் பேர் வரை இதை பார்த்து பயனடைந்து வந்தனர். இந்த மாதம் மட்டும் ஒரு கோடி பேர் இந்த வெப்சைட்டை பார்த்தனர். …
-
- 4 replies
- 1.8k views
-
-
முகம் முழுக்க முடி.. துயரத்தில் சிறுவன் மகாராஷ்டிராவில் ஒரு சிறுவனுக்கு முகம் முழுவதும் முடி வளர்ந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சாங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்தவன் பிருத்விராஜ் பாட்டீல்(11). பிறவியிலேயே எல்லோருக்கும் தலையில் தான் முடியிருக்கும். ஆனால் இந்த சிறுவனுக்கு தலையில் மட்டுமல்லாது முகம் முழுவதும் முடியாக இருந்தது. இது நாளடைவில் சரியாகிவிடும் என பெற்றோர்கள் எண்ணினார்கள். ஆனால் வித்தியாசமாக பிருத்விராஜூக்கு முகத்தில் முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது. சிகிச்சைக்காக பெற்றோர்கள் அலையாத டாக்டர்கள் இல்லையாம். ஆனால் பாவம் டாக்டர்களுக்கே இந்த பிரச்சனை சவாலாக அமைந்து விட்டது. இதுவரை இதற்கான தீர்வு காண முடியா…
-
- 8 replies
- 2.4k views
-
-
அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்ந்து இழுபறி நிலையில். அமெரிக்கா இந்தியாவிற்கு இடையிலான அணுசக்தி பரவல் ஒத்துழைப்பை பரஸ்பரம் இருநாடுகளும் பகிர்ந்துகொள்ளக்கூடிய அணுசக்தி ஒப்பந்தமொன்றை செய்து கொள்ள நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளன. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் கடந்த வாரம் இராஜதந்திர மட்டப்பேச்சுகள் முடிவேதும் எட்டப்படாத நிலையில முடிந்துள்ளன. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ,வெளிவிவகார செயலாளர்கள் என முக்கியமான பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவாதித்தனர். அணுச்தி ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த முட்டுக்கட்டைகளைப் போக்க அமெரிக்க அதிபர் ஜோர்ஜ்புஸ்சும்,இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் தொலைபேசிய…
-
- 0 replies
- 736 views
-
-
பாமக ஒரு புலி; அதை சீண்டினால்...கருணாநிதி ஜூலை 26, 2007 டெல்லி: தென்னிந்திய நதிகளை இணைப்பது குறித்து முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்ேபாது அவர் கூறுகையில், பிரதமரை சந்தித்தபோது நதிகள் இணைப்பு குறித்து விவாதித்தேன். கடந்த முறையை விட இந்த முறை விரிவாகவே பேசினேன். இந்தப் பிரச்சினை தொடர்பாக மாநில முதல்வர்களை அழைத்து மாநாடு நடத்தி கருத்தறிய வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அனைவரு…
-
- 5 replies
- 1.8k views
-
-
அப்துல் கலாம் [26 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திருமதி பிரதீபா பட்டீல் நேற்று புதன்கிழமை பதவியேற்றிருக்கிறார். சுதந்திர இந்தியாவில் முதற்தடவையாக பெண்மணியொருவர் ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்திய அரசியல்வாதிகள் பெருமை பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அது பெருமைப்பட வேண்டியதுதான். ஆனால், அதையும் விட பெறுமதியான பெருமைக்குரிய முன்னுதாரணத்தை வகுத்து பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எளிமையான வாழ்வு மற்றும் நேர்மைப் பண்புகள் குறித்து இந்திய அரசியல்வாதிகள் பெரிதாகப் பேசுவார்களா என்பது சந்தேகமே. அப்துல் கலாம் அரசியல்வாதி அல்ல. அவர…
-
- 0 replies
- 848 views
-
-
ஐ.நா.வின் முயற்சியும் தோல்வி - நவம்பர் 28 இல் தனிநாடு பிரகடனம்: கொசோவோ அதிரடி அறிவிப்பு. சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினை அமைப்பதற்கான ஒரு தலைப்பட்சமான விடுதலைப் பிரகடனத்தை எதிர்வரும் நவம்பர் 28 ஆம் நாளில் வெளியிட உள்ளதாக கொசோவோ பிரதமர் அஜிம் சேக்கு அறிவித்துள்ளார். கொசோவா தலைநகர் பிறிஸ்டினாவில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அஜீம் சேக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மையத்தில் கொசோவோவிற்குரிய ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இழக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தலைப்பட்சமாகத் தனிநாட்டினைப் பிரகடனப்படுத்துவதைத் தவிர வேறு வழி எமக்குத் தென்படவில்லை. கொசோவோவிற்கான …
-
- 3 replies
- 1.4k views
-
-
ஒரிசா ஆஸ்பத்திரி அருகில் 25 பச்சிளம் குழந்தைகள் உடல்கள் கண்டுபிடிப்பு- பாலிதீன் பையில் சுருட்டி புதைத்த கொடூரம் நயகர் (ஒரிசா), ஜுலை. 23- ஒரிசா மாநிலம் நயகர் மாவட்டத்தில் ஒரு மலை அடி வாரத்தில் கடந்த 14-ந்தேதி 7 பச்சிளம் குழந்தைகளின் பிணங்கள் வீசப்பட்டு இருந்தன. அவை பெண் குழந்தைகள் என்றும், பிறந்த உடன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பிணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஒரிசா மாநில அரசு உத்தரவிட்டது. போலீசார் நயகர் மாவட்டம் முழுவதும் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது நபகன் பூர் கிராமத்தில் உள்ள 36 தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏ…
-
- 1 reply
- 933 views
-
-
Posted on : Sun Jul 22 7:56:22 EEST 2007 இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பிரதீபா பட்டேல் தெரிவானார் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பட் டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் பதின் மூன்றாவது ஜனாதிபதியாவார். இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த முடிவுகளை நேற்று அறி வித்தது. 72 வயதான பிரதீபா பட்டேல், ஆளும் காங்கிரஸ் கூட்டணி யின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதற்கு முன் னர் அவர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித் தார். இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரும் துணை ஜனாதிபதியுமான பைரோன் சிங் ஷெகாவத்தை 3 லட்சத்துக் கும் அதிகமான வாக்குகளால் பிரதீபா பட்டேல் வெற்றிகொண்டார். பிரதீபா பட்டேல் 6 லட்சத்து 38 ஆயிரம் வாக்குகளையும் பைர…
-
- 0 replies
- 880 views
-
-
""உன்னதமான 5 ஆண்டுகளை கழித்த பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து 25-ம் தேதி வெளியேறுகிறேன். எனக்கு உடைமை என இருப்பது 2 சூட்கேஸ்கள். அந்த 2 சிறிய சூட்கேஸ்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறுவேன்'' என்று வியாழக்கிழமை கூறியுள்ளார் அப்துல் கலாம்.இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் வியாழக்கிழமை உரையாற்றிய கலாம், 2 சூட்கேஸ்களுடன் எனக்குச் சொந்தமான ஏராளமான புத்தகங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என உருக்கமாகக் குறிப்பிட்டார்.குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் (75) கலந்து கொள்ளும் கடைசிப் பொதுநிகழ்ச்சியாக இருக்கலாம் என்ற நிலையில் நாட்டு மக்களுக்கு அவர் தனது ஆலோசனைகளை வழங்கத் தவறவில்லை.""உள்நோக்கத்துடன் வழங்கப்படும் பரிசுப்பொருள்களைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்; குட…
-
- 13 replies
- 2.9k views
-
-
ஜுலை 20-இல் தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகம் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்து ஜுலை 20ஆம் நாளன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார். சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திரிகோணமலையில் பேசிய சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச, விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தால் ஒழிய இலங்கையில் அமைதி திரும்பாது என்று கூறியிருக்கிறார். பல நாடுகள் ராணுவ நடவடிக்கை மூலம் ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அரசியல் தீர்வு தான் ஒரே வழி என்று சொன்னதை ராஜபக்ச கேட்க தயாரில்லை. ஓர் இறுதிப் போராட்டத்துக்கு சிறிலங்கா ராணுவமும் புலி…
-
- 5 replies
- 1.2k views
-
-
மேலதிக தகவல்கள் தொடரும்..
-
- 26 replies
- 3.9k views
-
-
தமிழக மீனவர்களை சுட்டு விரட்டிய இலங்கை! ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை துப்பாக்கியால் வானில் சுட்டு மிரட்டி இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி மீனவர்களிடையே அச்சம் நிலவுகிறது. தனுஷ்கோடியைச் சேர்ந்த மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று இரவு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட அவர்கள், உடனடியாக இங்கிருந்து ஓடி விடுமாறு எச்சரித்தனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் உயிரைக் காத்துக் கொள்ள அங்கிருந்து விரைந்து கரைக்குத் திரும்பினர். …
-
- 3 replies
- 1.5k views
-
-
பிரேசிலில் தரையிறங்கிய விமானம் பெட்ரோல் நிலையத்தில் மோதி 200 பேர் பலி ஜூலை 18, 2007 சா பாலோ: பிரேசிலின் சா பாலோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, நிலை தடுமாறி ஓடி, விமான நிலையத்தின் வெளியே இருந்த பெட்ரோல் நிலையத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது. இதில் 200 பேர் பலியாகிவிட்டனர். பிரேசிலின் போர்ட்டோ அலிக்ரே நகரிலிருந்து டாம் லின்ஹாஸ் ஏரியேஸ் நிறுவனத்தின் ஏர் பஸ் 320 விமானம் 170 பயணிகளுடனும், 6 ஊழியர்களுடனும் புறப்பட்டது. சா பாலோ நகரில் உள்ள காங்கோஹாஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு பலத்த பெய்து கொண்டிருந்ததால் விமான ஓடு தளம் மிக ஈரமாக இருந்தது. இதனால் ரன் வேயில் ஓடிக் கொண்டிருந்த அந்த விமானம் பாதையை …
-
- 3 replies
- 1.4k views
-
-
ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவால் பொது மேடையில் கட்டிப் பிடித்து, மடக்கி, மடங்கி முத்தமிடப்பட்டு பரபரப்பில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டிக்கு, 'கலாச்சார மேம்பாட்டுக்கு' உழைத்ததற்காக இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. http://thatstamil.oneindia.in/specials/cin...lpa_070718.html
-
- 0 replies
- 1k views
-
-
சிப்ஸ் திண்ற மகனை கொன்ற தந்தை ஜூலை 16, 2007 கட்டாக்: தான் சாப்பிட வாங்கி வந்த உருளைக்கிழங்கு சிப்ஸை தனது மகன் எடுத்துச் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், 6 வயது மகனை கொடூரமாக அடித்துக் கொன்றார். ஒரிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் நரசிங்கபூர் அருகே உள்ள நிமசாஹி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் நாயக் (28). நேற்று இவர் சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி வந்தார். வீட்டில் சிப்ஸை வைத்து விட்டு அந்தப் பக்கமாக சென்றிருந்தார் நாயக். அப்போது அவரது 6 வயது மகன் அந்த சிப்ஸை எடுத்து சாப்பிட்டு விட்டான். திரும்பி வந்து பார்த்த ரமேஷ், சிப்ஸைக் காணாமல் திடுக்கிட்டார். தனது மகன்தான் எடுத்துச் சாப்பிட்டு விட்டான் என்பதை அறிந்த அவர், கோபத்தில…
-
- 6 replies
- 1.8k views
-