Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலக வானிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவிலிருந்து சீனா வரை கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல நாடுகளில் உணவு உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, தனது உள்நாட்டில் அரிசி விலையேற்றத்தை தவிர்க்க, அனேக வகை அரிசி ரகங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்திருக்கிறது. போர் காரணமாக, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து கோதுமை, சோளம் உட்பட தானிய ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கும் ‘கருங்கடல் ஒப்பந்தம்’ எனும் உடன்படிக்கையிலிருந்து ரஷ்யா வெளியேறியது. எல் நினோ எனப்படும் பருவகால வானிலை மாற்றங்கள் கடுமையாகியிருக்கிறது. இது இன்னும் தீவிரமடையலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். இது ஒரு புறமிரு…

  2. 05 SEP, 2024 | 02:47 PM ஜேர்மனியின் மியுனிச் நகரில் உள்ள இஸ்ரேலிய துணை தூதரகத்திற்கு அருகில் சந்தேகநபர் ஒருவர் மீது ஜேர்மனி பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இஸ்ரேலின் துணைதூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் ஆகியன அமைந்துள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் காயமடைந்துள்ளார் வேறு சந்தேகநபர்கள் இருப்பதாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிபோன்ற ஒன்றுடன் காணப்பட்ட நபர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/192925

  3. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை நோக்கி அதிபர் மக்ரோன் கோப்புப் படம்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவில், அந்நாட்டு அதிபர் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் இலக்கை நோக்கி அவரது கட்சி முன்னேறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் என் மார்ச் கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமையும் மக்ரோனுக்கு கிடைத்தது. அதிபர் தேர்தலை தொடர்ந்து பிரான்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. …

  4. உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா! தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா, மொஸ்கோ இப்பகுதியில் “திட்டமிட்டு” தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறினார். மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்துவது, உக்ரேனின் கடல்சார் தளவாடங்களுக்கான அணுகலைத் தடுககும் மொஸ்கோவின் முயற்சி என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். டிசம்பர் மாத தொடக்கத்தில், கருங்கடலில் ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக உக்ரேனின் க…

  5. அரிசியை இலவசமாகப் பெற்ற விவகாரம்: ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா! ஜப்பானின் விவசாய அமைச்சராக இருந்த டகு எடோ(Taku Eto) , “நான் அரிசியை வாங்குவதில்லை; ஆதரவாளர்களிடம் இருந்து இலவசமாகவே பெறுகிறேன்” எனத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜப்பானில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த கருத்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை அவரது கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தன. அத்துடன் தாகு எதோவை பதவியில் இருந்து நீக்க நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத…

  6. Published By: DIGITAL DESK 3 17 AUG, 2024 | 09:48 AM சூடானில் போரால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தில் துணை இராணுவப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னார் மாநிலத்தில் உள்ள ஜல்கினி கிராமத்தின் மீதே வியாழக்கிழமை காலை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த கிராமம் போரினால் பாதிக்கப்பட்டு 16 மாதங்கள் கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் போர் நிறுத்தப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகிறது. சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இராணுவத்துடன் போரிட்டு வரும் துணை இராணுவ படை சென்னார் மாநிலத் தலைநகரான சின்ஜாவை ஜூன் மாதம் கைப்பற்றியது.…

  7. சிரிய அரசின் விமானப்படைத்தளத்தின் மீது அமெரிக்கா ஏவுகணைத்தாக்குதல். சிரிய அரச எதிர்ப்பாளர்களின் வசமுள்ள நகர்மீதான ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியே இது என்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதை மறுக்கின்றன சிரியாவும் ரஷ்யாவும்; பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கை இதுவென குற்றச்சாட்டு. சிரியாவில் முற்றிவரும் மோதல் குறித்த முழுமையான தகவல்கள் இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  8. ஹொலிவூட் திரைப்படங்களுக்குச் சீனாவில் தடை விதிக்கத் தீர்மானம்! சீன அரசு ஹொலிவூட் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில் திரைப்படத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவித்து வருகின்றன. இதன்காரணமாக ஏராளமான ஹொலிவூட் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில்…

  9. உக்ரைனில் 13 குழந்தைகள் உட்பட 136 பேர் உயிரிழந்துள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்றுவரும் போரில் இருந்து குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 13 குழந்தைகளும் இருக்கலாம் என்றும் ஆனால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் 352 பொதுமக்கள் இறந்ததாகவும், 1,684 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1269969

  10. சிரியாவில் ரசாயன தாக்குதலில் சிக்கிய ஆறு வயது சிறுமி, கியூபாவில் முடிவுக்கு வரும் கேஸ்ட்ரோ ஆட்சி, சார்லி சாப்ளின் நிஜத் தோற்றத்தில் பிபிசிக்கு அளித்த நேர்காணல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  11. வேண்டுமென்றே... நெருப்பில், எரிபொருளைச் சேர்கின்றது... அமெரிக்கா: ரஷ்யா சாடல்! உக்ரைனுக்கு புதிய நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா வேண்டுமென்றே நெருப்பில் எரிபொருளைச் சேர்ப்பதாக ரஷ்யா சாடியுள்ளது. உக்ரைனிய தலைமையின் அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு இது போன்ற பொருட்கள் பங்களிக்காது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இதனிடையே தனித்தனியாக, ஜேர்மனி அரசாங்கம் உக்ரைனுக்கு ஒரு வான் பாதுகாப்பு அமைப்பை அனுப்புவதாக உறுதியளித்துள்ளது. ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஐசுஐளு-வு அமைப்பு மிகவும் நவீன ஜேர்மனியிடம் இருப்பதாகவும், ரஷ்ய வான் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு முழு நகரத்தை…

  12. உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் அரசு படைகளுக்கும் இடையே போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கு கடந்த சில நாட்களாக மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. கிளர்ச்சியாளர்களுக்கு, வீரர்களை அனுப்பியும், ஆயுதங்களை வழங்கியும் ரஷியா உதவி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் மாநாட்டுக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது - ‘உக்ரைன் நாட்டை ஒரு சுதந்திர நாடாக செயல்பட ரஷியா அனுமதிக்கும் என நான் இன்னும் நம்புகிறேன். உக்ரைனின் சுதந்திர விவகாரத்தில் சாதகமான போக்கை ரஷியா கையாண்டால்,…

  13. வடக்கு கலிபோர்னியாவின் யுரேகா பகுதியில் செவ்வாய்கிழமை அதிகாலை 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2:34 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம், ஹம்போல்ட் கவுண்டி நகரமான ஃபெர்ண்டேலில் இருந்து 7.5 மைல் தொலைவில் கடற்கரைக்கு சற்று அப்பால் பசிபிக் பகுதியில் மையம் கொண்டிருந்ததாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. அது யுரேகாவிற்கு தென்மேற்கே 20 மைல் பயணமும், சாக்ரமெண்டோவிற்கு வடமேற்கே 280 மைல் பயணமும் ஆகும். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹம்போல்ட் கவுண்டியில் பெரும்பாலான வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தன. PowerOutage.us என்ற பயன்பாட்டு கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, 64,000 க்கும் மேற்பட்ட செயலிழப்புகள்…

  14. அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளுவோமா? ராஜீய செயலர் டில்லர்சனுக்கு டிரம்ப் சவால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மூர்க்கர் என்று அந்நாட்டு ராஜீய செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சொன்னதாகக் கூறப்படுவதைப் பற்றி கேட்டபோது, அவருக்கும் எனக்கும் ஐ.க்யூ. டெஸ்ட் எனப்படும் அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டு டிரம்ப் சவால் விடுத்துள்ளார். படத்தின் காப…

  15. ஜப்பானின் கியூஷுவில் நிலநடுக்கம்! ஜப்பானின் கியூஷுவில் அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (02) இரவு 07.34 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உயிர் மற்றும் சொத்து இழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளில் உணரப்பட்டன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல இடிந்து விழுந்தன. சாலைகள் விரிசல் அடைந்தன,நிலநடுக்கத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்…

  16. 02 MAY, 2025 | 06:21 PM அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிவந்த மைக் வோல்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். யேமனில் ஹௌத்தி கிளா்ச்சியாளர்களின் தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடா்பாக அவரும், துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட் உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடா்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னா் மேற்கொண்ட தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தனா். அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டாா். இதனால் மிகுந்த ரக…

  17. யுக்ரேன் போர்: ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் - 22 பேர் பலி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சேப்லைனில் நடத்தப்பட்ட தாக்குதலில் மக்கள் குடியிருந்த வீடு ஒன்றும் நாசமானது. யுக்ரேன் ரயில் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி 6 மாதம் நிறைவடையும் நாளில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாகவும் யுக்ரேன் கூறியுள்ளது. யுக்ரேன் நாட்டின் கிழக்குப் பகுதியை சேர்ந்த சேப்லைன் நகரில் நடந்த இந்த தாக்குதலில், வண்டி ஒன்றில் வந்துகொண்டிருந்த 5 பேர் தீப்பிடித்து எரிந்து இறந்தனர். இந…

  18. கிறிஸ்துமஸுக்கு முன் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது – பிரதமர் அறிவிப்பு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அமுல்படுத்தப்படாது என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், தேவை ஏற்பட்டால் கிறிஸ்மஸுக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரலாம் என கூறினார். ஒமிக்ரோன் தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் தடுப்பூசிகளின் தாக்கம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்துகொண்டாலும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டார். ஸ்க…

  19. 16 நாடுகளில் 40 மலையேற்றம் புரிந்து சாதித்த அமெரிக்கப் பெண் ஹிலாரி நீல்சன் நவீன் சிங் கட்கா சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,NORTH FACE புகழ்பெற்ற பனிச்சறுக்கு மலையேற்ற அமெரிக்க வீராங்கனையான ஹிலாரி நீல்சன் இமயமலையில் ஒரு வாரத்துக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடல் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 2) அன்று பெளத்த முறைப்படி எரியூட்டப்பட்டது. ஒரு தலைமுறையை சார்ந்த பெண்களின் மத்தியில் அவர் ஒரு உந்து சக்தியாக விளங்கியது எப்படி என சக மலையேற்ற வீரர்கள் பிபிசியிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 2012ஆம் ஆண…

  20. அர்ச்சனா சுக்லா மற்றும் நிகில் இனாம்தார் பதவி,பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் பதிலடி வரி விதிப்பு இன்னும் ஒரு மாதத்தில் அமலாகும் சாத்தியக்கூறு உள்ள நிலையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் திடீர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகளுக்குப் பதிலடியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் இந்தியா மீது வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் பின்னர் அறிவித்தார். இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதித் தொழில்களாக இருக்கும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி மீதான…

  21. 200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்! மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங்கில் வியாழக்கிழமை பிற்பகல் தரையிறங்கியது. சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, தொலைத்தொடர்பு-இணைய மோசடிகளைத் தடுக்க சீனா, தாய்லாந்து மற்றும் மியன்மார் இடையேயான பன்னாட்டு சட்ட அமலாக்க முயற்சிகளில் இது ஒரு மைல்கல் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதியில் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட சீன சந்தேக நபர்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் வாடகை விமானங்களில் ஜியா…

  22. தாய்வானின் அருகே சீன போர்க் கப்பல்கள்; பாதுகாப்பினை அதிகரித்த தைபே! தாய்வானின் இராணுவம் திங்களன்று (09) அவசரகால பதிலளிப்பு மையத்தை அமைத்து அதன் எச்சரிக்கை நிலையை உயர்த்தியதுடன், போர் தயார் நிலைப் பயிற்சிகளையும் தொடங்கியுள்ளது. தாய்வான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் சீனா கிட்டத்தட்ட 90 கடற்படை, கடலோர காவல்படை கப்பல்களை வைத்திருப்பதாக தைபே பாதுகாப்பு வட்டாரம் ரொய்ட்டர் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது. போர்க்கப்பல்களைப் பொறுத்தவரை, வார இறுதியில் அதன் எண்ணிக்கை 08 இல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தாய்வானை தனது சொந்தப் பிரதேசம் என்று கூறிவரும் சீனா, தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தேவின் பசிபிக் பயணத்திற்கு ப…

  23. டோக்கியோ ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்: 10 பேர் படுகாயம் - சந்தேக நபர் கைது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில், ஜப்பானின் மேற்கு நகரிலுள்ள செடாகயா வார்டு பகுதியில் புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென சக பயணிகள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் 20 வயது இளம் பெண் ஒருவர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்த அந்நாட்டு பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதற்கிடையில், தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அத்தோடு, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து…

  24. பருவநிலை மாற்ற பிரச்சினை விவகாரம்: அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயற்படுவதாக அறிவிப்பு! எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு பருவநிலை மாற்ற பிரச்சினை தொடர்பான தீர்வு நடவடிக்கைகளில், சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமீப காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை நிலவி வருகின்ற நிலையில், இந்த அரிய உறுதிப்பாட்டு கூட்டு அறிவிப்பினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இதில், பரிஸ் ஒப்பந்தத்தில் 1.5 செல்சியஸ் வெப்பநிலை என்ற இலக்கை நோக்கி இருநாடும் இணைந்து செயற்படும் என்று வழங்கிய உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளன. அதேபோன்று …

  25. ரஷ்யாவின், போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை... சேகரிக்கும் திட்டத்தை, அமெரிக்கா தொடங்கியுள்ளது உக்ரைனில் ரஷ்யா நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பிற அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்களை திரட்டி ஆய்வு செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அந்தவகையில் புதிய திட்டத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. படையெடுப்பின் போது ரஷ்யப் படைகள் மேற்கொண்ட விடயங்கள் தொடர்பான ஆதாரங்களை ஆவணப்படுத்துதல், சரிபார்த்தல் மற்றும் கண்காணிப்புக்கள் இடம்பெறும் என அறிவித்துள்ளது. போர்க் குற்றங்களுக்கு ரஷ்யாவை பொறுப்பேற்க வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செயற்கைக்கோள் ம…

    • 1 reply
    • 216 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.