Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடா-சனிக்கிழமை அதிகாலை சட்பெரிக்கு வடக்கில் இரண்டரை மணித்தியால தொலைவில் கோகமா என்ற இடத்திற்கருகில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் வண்டி தடம்புரண்டதால் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவரும் காயமடையவில்லை என கனடிய தேசிய ரயில்வே தெரிவித்துள்ளது. சிரேஸ்ட நடவடிக்கைகள், பொறியியல் பிரிவினர் ,ஆபத்தான பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உட்பட்ட பல அணியினர் சம்பவ இடத்தில் காணப்படுகின்றனர். தடம்புரண்ட பகுதிக்கு அண்மித்த நெடுஞ்சாலை 144 மற்றும் நெடுஞ்சாலை 560ற்கு இடைப்பட்ட பகுதி மற்றும் மற்றகமி றிசேவ் வீதி பகுதிகள் பாதுகாப்பு கருதி 24முதல் 36-மணித்தியாலங்களிற்கு மூடப்பட்டிருக்கும் என ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.…

    • 0 replies
    • 216 views
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எப்-35 போர் விமானம் என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும் 15 பிப்ரவரி 2025, 01:22 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், பாதுகாப்பு, குடியேற்றம் போன்ற விஷயங்கள் குறித்து பேசிய அவர்கள் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டனர். பாதுகாப்பு தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப், "இந்த ஆண்டு, இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களின் விற்பனை பில்லியன் கணக்கான டாலர்கள் அதிகரிக்கும். …

  3. ரொறொன்ரோவில் வெள்ளம்! ரொறொன்ரோ டவுன் ரவுன் பகுதியில் பெய்த கடும் மழையினால் டொன் வலி பார்க்வே பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதுடன் டொன் வலி பார்க்வே மூடப்பட்டது. இரவு பூராகவும் மூடப்பட்டிருந்த பாதையின் ஒரு பகுதி இன்று காலை திறக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை 12.35மணிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரொறொன்ரோவின் பெரும்பாகத்தில் வியாழக்கிழமை மாலை 10மில்லி மீற்றர்கள் அளவிலான மழை பெய்துள்ளது. மழை காரணமாக பனி உருகியதால் நீர் மட்டம் மேலும் உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பல வாகன மற்றும் பாதசாரிகள் மோதல்களும் வி…

  4. 🇯🇵 ஜப்பானில் பரபரப்பு: கூர்மையான ஆயுதத்துடன் இலங்கையர் கைது! 🚔 written by admin December 25, 2025 ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள பிரபல ஷினகாவா (Shinagawa) புகையிரத நிலையத்திற்கு அருகில், இலங்கையர் ஒருவர் ஜப்பானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் விபரம்: சம்பவம்: குறித்த இலங்கையர் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தனது கழுத்தை அறுக்க முற்பட்ட நிலையில், அங்கிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். காவல்துறை நடவடிக்கை: சுமார் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கைது: கைகள் மற்றும் கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர்…

  5. அன்னை தெரசாவுக்கு செப்டம்பர் 4ல் புனிதர் பட்டம் சமூக சேவகர் அன்னை தெரசா செப்டம்பர் 4ஆம் தேதியன்று புனிதராக அறிவிக்கப்படுவார் என போப் ஃப்ரான்சிஸ் அறிவித்திருக்கிறார். அன்னை தெரசாவின் இரண்டு அற்புதங்கள் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. கொல்கத்தாவின் ஏழை மக்களுக்காகப் பணியாற்றிய அன்னை தெரசா, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதர் வரிசையில் இனி இடம்பெறுவார். அன்னை தெரசா தனது சக்தியின் மூலம் ஒருவரை குணப்படுத்தியதாகச் சொல்லப்படும் இரண்டாவது சம்பவத்தை வத்திகானின் மூத்த மதகுருக்கள் அங்கீகரித்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருக்கும் அன்னை தெரசா, அல்…

  6. ISIS இயக்கத்தின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு சிரியாவில் அமெரிக்கா MQ 9 டிரோன்கள் மூலமாக வெள்ளிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் ISIS தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் உஸ்மா அல் முஹாஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா நேற்றைய தினம் அறிவித்துள்ளது. கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த குறித்த தீவிரவாதத் தலைவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2023/1338351

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விவாதம் நீடிக்கிறது. குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இது நமது நலன்களை பாதிக்கக் கூடும் என்றும் செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தற்போது தெரிவித்துள்ளார். அமெரிக்க செய்திச் சேனல் ஏபிசி நியூஸிடம் பேசிய செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம், "எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் …

  8. Published By: RAJEEBAN 17 FEB, 2025 | 10:38 AM உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரை போர்களத்திற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையின் படி உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ்படையினரை பயன்படுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதி எதிர்காலத்தில் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது அவசியம் என பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் எமது படையினரை அனுப்புவதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நான் தயார், நான் இதனை சாதாரணமாக தெரிவிக்கவில்லை என ஒப்சேவரில் எழுதியுள்…

  9. ஆப்கானில் இளவரசர் ஹரி 25 பேரைக் கொன்றதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல்! இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் அப்பாச்சி ஹெலிகொப்டர் விமானியாக இருந்த காலத்தில் 25 பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் வெளியிடப்படவிருக்கும் ‘ஸ்பேர்’ என்ற அவரது சுயசரிதையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2007-2008 வரையிலான வான்வழித் தாக்குதல்களில் முதலில் ஆப்கானிஸ்தானில் முன்னோக்கி விமானக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய அவர், 2012-2013ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாக்குதல் ஹெலிகொப்டரை ஓட்டினார். 38 வயதான அவர் விமானியாக ஆறு பயணங்களை மேற்கொண்டார், அது மனித உயிர்களை எடுக்க வழிவகுத்தது என்று டெய்லி டெல…

  10. சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா இடம்பெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னர் இரண்டு நாட்களில் புதிய மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பின்னர் பல ஆரவாரங்களுக்கு மத்தியில், மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. முன்னதாக, ராணி இரண்டாம் எலிசபெத்…

  11. 20 நாட்களுக்கு பிறகுதான் கொரோனா வைரஸ் அறிகுறி தெரியும்: சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் அறிகுறி, பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகுதான் தெரியும் என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆறாயிரம் உயிர்களை காவுகொண்டுள்ள கொரோனா வைரஸின் பரவலை தடுக்க, உலக நாடுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இதற்கிடையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இன்று (திங்கள் கிழமை) அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் தாக்கினால், அந்த வைரஸ் அவரது உடலில் எத்தனை நாட்கள் வரை இருக்கும் என்பதை சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 ந…

  12. ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது முதன் முறையாக நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன்! 16 Dec, 2025 | 11:45 AM நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறிய நிலையில், உக்ரைன் தனது முதல் நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் நேட்டோவில்(NATO) இணைய முயன்றதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் மூலம் போர் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இறுதிகட்ட தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைன் மீ…

  13. மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் – 20 பேர் உயிரிழப்பு மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மார் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்தது. இதனை தொடர்ந்து இராணுவ …

  14. சுவிஸில் நாளொன்றுக்கு சுமார் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்! சுவிஸில் நாளொன்றுக்கு சுமார் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுவிஸில் மாத்திரம் தினமும் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக பெடரல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவ துறையில் மட்டும் 1.5 முதல் 2 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகளுக்கு செல்லும் மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்துகின…

  15. 2025 தேசிய பாதுகாப்பு உத்தியை (NSS) வெளியிட்டது. கீழே, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இந்த ஆவணத்தின் தாக்கங்களைப் பற்றி ப்ரூக்கிங்ஸ் அறிஞர்கள் சிந்திக்கிறார்கள். மேலே திரும்பு ஸ்காட் ஆர். ஆண்டர்சன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை முன்னுரிமையாக இருந்த பெரிய சக்தி போட்டி மறைதல் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தி, அதன் இரண்டு முன்னோடிகளால் பகிர்ந்து கொள்ளப்பட்ட பெரிய சக்தி போட்டியின் மீதான வெளிப்படையான கவனத்திலிருந்து விலகிச் செல்கிறது . முதல் டிரம்ப் மற்றும் பைடன் நிர்வாகங்கள் இரண்டும் சீனா மற்றும் ரஷ்யாவின் " அமெரிக்க மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு எதிரான ஒரு உலகத்தை வடிவமைக்கும் " விருப்பத்தை ஒரு முன்னணி வெளியுறவுக் கொள்கை கவலையாக வடிவமைத்தன. உலகளாவி…

    • 0 replies
    • 216 views
  16. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, 2009-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் மோகன். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இவர் முறையீடு செய்தபோது, அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டேன் என்று சொன்னார். இந்நிலையில், தற்போது அந்தப் பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ள நிலையில், 'இருவரும் சமரச மையத்தில் தீர்வு காணலாம்' என்று சொல்லி மோகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை நாம் சந்தித்து பேசினோம். பயந்தபடியே தயக்கத்துடன் அவர் பேச தொடங்கினார். ''மோகனின் மேல்முறையீட்டு மனு குறித்து உயர்நீதிமன்றம் எங்களிடம் எந்தவொரு கருத்தையும் கேட்கா…

  17. ஆங் சான் சூகியை விடுவிக்கக் கோரி ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம் By Sethu 22 Dec, 2022 | 11:54 AM மியன்மாரின் முன்னாள் அரசு தலைவர் ஆங் சான் சூகியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களைக் கோரும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்புச் சபை நிறைவேற்றியுள்ளது. 2021 பெப்ரவரி முதல் மியன்மாரில் இராணுவ ஆட்சி நிலவுகிறது. நோபல் பரிசு பெற்ற 77 வயதான ஆங் சான் சூகி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் அவருக்கு சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்…

  18. Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 10:55 AM வெப்ப அலையில் தத்தளிக்கும் நான்கு பால்கன் நாடுகளில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதன்படி, அல்பேனியா, போஸ்னியா, மொண்டினீக்ரோ மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளின் கரையோரப் பகுதிகள் பிற்பகலில் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நிலவும் கடும் வெப்பத்தினால் வீடுகளில் குளிரூட்டும் கருவிகளை பயன்படுத்தியமையின் பின்னர் மின்பாவனை அதிகரித்த நிலையில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மின் தடையினால் போஸ்னியா மற்றும் குரோஷியாவில் போக்குவரத்து சமிக்ஞைகள் தடைப்பட்டு, சரஜேவோ, ஸ்பிலிட் மற்றும் பிற பெரிய …

  19. ஈரானில் ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள் ஈரானின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் அடுத்தடுத்து இன்று ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானின் மேற்குப் பகுதியிலுள்ள எல்லைப்புறத்தில் கெர்மன்ஷா மாகாணத்திலேயே இவ்வாறு அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தலைநகர் டெஹ்ரானிலிருந்து சுமார் 700 கி.மி. தொலைவில் கெர்மான் மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் ஏனைய இடங்களில் ரிக்டர் அளவில் 5 அளவில் நிலறடுக்கங்கள் ஏற…

  20. பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரெசா மே, ஆசிய – பசுபிக் விவகாரங்களைக் கையாளும், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சர்மாவை நியமித்துள்ளார். அண்மையில் பதவி விலகிய டேவிட் கமரூன் அரசாங்கத்தில், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக இருந்த, ஹியூகோ ஸ்வயருக்கு, புதிய அரசாங்கத்தில் இடமளிக்கப்படவில்லை. ஹியூகோ ஸ்வயர், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக இருந்த போது, சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துபவரான இருந்து வந்தார். இந்த நிலையில், புதிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக, நியமிக்கப்பட்டுள்ள அலோக் சர்ம…

  21. அமெரிக்க இந்து ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்! கடந்த ஜூன் மாதத்தில் பல இரவுகளில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் ஸ்பானிஷ் ஃபோர்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், ஆலயத்தின் கட்டிடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சந்தேகத்திற்குரிய வெறுப்பு குற்றமாக நம்பப்படுகிறது. இரவு நேரங்களில் பக்தர்களும் மற்றவர்களும் உள்ளே இருந்ததால், கட்டிடம் மற்றும் அருகிலுள்ள சொத்துக்களை குறிவைத்து கிட்டத்தட்ட 20 முதல் 30 தோட்டாக்கள் வளாகத்தில் சுடப்பட்டன. இது ஆயிரக்கணக்கான டொலர்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை இந்தியா கண்டித்துள்ளது மற்றும் விரைவான…

  22. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகம் எடுக்கிறது: ஜெர்மனியில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு Posted on November 12, 2021 by தென்னவள் 10 0 பிரான்ஸ் நாடு கொரோனாவின் 5-வது அலையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஆலிவர் வேரன் தெரிவித்தார். அங்கு இதுவரை இந்த தொற்றுக்கு 73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். சீனாவில் உகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய், ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இங்கு 55 சதவீதத்துக்கும் கூடுதலாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 20 நாட்களாகவே ரஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தொற…

    • 0 replies
    • 215 views
  23. 17 APR, 2025 | 10:38 AM அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உணரப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வொங் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது புதியவரிகளை இடைநிறுத்திவைத்துள்ளமை குறித்து சிறிதும் நிம்மதிபெருமூச்சு விடமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவின் அறிவிப்புகள் ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக போரினால் இரண்டு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் முற்றாக நின்றுபோகும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இதனால் ஏற்படும் மிக மோசமான பாதிப்பினை அந்த இரு நாடுகளும் மாத்திரம் அனுபவிக்கப்போவதில்லை முழு உலகமும்…

  24. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,நெதர்லாந்தில் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச்17 விமானத்தின் புனரமைக்கப்பட்ட மாதிரியை நீதிபதிகள் ஆய்வு செய்கிறார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ஓல்கா இவ்ஷினா பதவி, பிபிசி ரஷ்யன் 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஜூலை 17, 2014 அன்று மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் (MH17) ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது, அதில் ஏறக்குறைய 300 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பற்றிய நான்கு முக்கிய கேள்விகள் இங்கே முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தற்போது வரை பதிலளிக்கப்படவில்லை. 'எம்எச் 17' விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தப…

  25. அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வழங்கியதெல்லாம் பொய்களும் வஞ்சகமும்தான்: அதிபர் ட்ரம்ப் கடும் சாடல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். - கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ். இந்த ஆண்டின் தன் முதல் ட்வீட்டிலேயே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்புப் புகலிடம் அளிக்கிறது என்று சாடியுள்ளார். கடுமையான வார்த்தைகளில் அமைந்த ட்வீட் இதோ: கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களை உதவி என்ற பெயரில் வழங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் நமக்குத் திருப்பிக் கொடுத்ததோ பொய்களும் வஞ்சகமும்தான். ஆப்கானிஸ்தானில் நாம் தேடும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் புகலிடம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.