Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வடகொரியாவின் ராக்கெட் திட்டத்துக்கு மேற்குலகம் கண்டனம் விண்வெளிக்கு செய்மதியைக் கொண்டுசெல்லும் நெடுந்தூர ராக்கெட் ஒன்றை ஏவவுள்ள வடகொரியாவின் திட்டத்தால் மேற்குலக அணி நாடுகள் கடும் விசனம் அடைந்துள்ளன. வடகொரியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அண்மையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு முரணானது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தனக்குக் கிடைக்கவுள்ள உணவு உதவித் திட்டங்களுக்கு பதிலாக தனது ஏவுகணை மற்றும் அணு பரிசோதனை நடவடிக்கைகளை இடைநிறுத்திக் கொள்வதாக வடகொரியா அண்மையில் உடன்பாட்டுக்கு வந்திருந்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. வடகொரியாவின் ஸ்தாபகர் கிம் இல்-சுங் இன் நூறாவது பிறந்த தின நினைவை குற…

    • 0 replies
    • 423 views
  2. வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள் வடகொரியாவில் இருந்து தப்பி தென் கொரியாவுக்கு வந்த ராணுவ வீரர் குடலில் ஏராளமான ஒட்டுண்ணிப் புழுக்கள் இருந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமனிதக் குடலுக்குள் ஒட்டுண்ணிப் புழுக்கள் வாழ முடியும். விளம்பரம் கடந்த திங்கள் கிழமை தங்கள் நாட்டில் இருந்து தப்பி வந்தபோது இவர் வட கொரிய ராணுவத்தினரால் பல முறை சுடப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நிலையாக இருந்தாலும், அவரது உடலில் இருக்கும் ஏராளமான புழுக்களால் அவரது காயங்கள் ஆறுவதும், உடல் நிலையும் மோசமாக ஆவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வட கொரியாவில் வாழ…

  3. வடகொரியாவில் ஏவுகணைகள் இடமாற்றம்; சந்தேகத்தில் சர்வதேசம் வடகொரியத் தலைநகர் பியோங்யேங்கில் உள்ள ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் இருந்து ஏவுகணைகள் சில எடுத்துச் செல்லப்பட்டதாக தென்கொரிய மற்றும் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடுத்துச் செல்லப்பட்ட ஏவுகணைகள் மத்திய தர அல்லது கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைகளாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஏவுகணைகள் எங்கு எடுத்துச் செல்லப்பட்டன, எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தென்கொரிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜப்பான்…

  4. வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை: அதிபர் கிம் ஜாங் ஆலோசனை வடகொரிய நாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக் சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். வடகொரியா அணு ஆயுதத்திற்கு அதிகம் செலவிட்டு வருவதாவும் பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழு…

  5. வடகொரியாவில் கால் பதித்த கொரோனா: முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டதாக தகவல் பையோங்யாங், சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என உலகம் முழுவதும் பரவியது. உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவுக்கு 1 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் க…

  6. வடகொரியாவில் தயார் நிலையில் இருந்த ஏவுகணைகள் அகற்றம் தென்கொரியா இடையே சமீபத்தில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. தென்கொரியா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் வடகொரியாக மிரட்டியது. அதற்காக ஏவுகணைகளையும் நிலைநிறுத்தியது. தற்போது தாக்குதலுக்கு தயாராக வைத்திருந்த இரண்டு ஏவுகணைகளையும் வடகொரியா விலக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசியாவின் வடக்குப் பகுதியில் நிலவிய பதற்றம் குறைந்துள்ளது.வடகொரிய அரசு சென்ற முறை, அணுஆயுதப்போர் குறித்து பிரச்சினைகளை ஏற்படுத்தியது போன்று இந்த முறை 3,500 மைல்கள் தூரம் வரை சென்று வெடிக்கக்கூடிய ‘முசுடன்’ ஏவுகணைகளை ஏவலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வடகொ…

  7. வடகொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு மாநில ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன. பொதுவாகவே நாடாளும் அதிபரின் ஆணைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாகவே இந்நாட்டு நாடாளுமன்றம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இதன் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். எனினும் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுவதால் தேர்தல் என்பது இந்நாட்டில் ஒரு சம்பிரதாயமாகவே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டின் இறுதியில் அதிபர் கிம் ஜோங்-2 இறந்து அவரது மகன் கிம் ஜோங் உன் பதவி ஏற்றபின்னர் நடக்கவிருக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இவர் கடந்த மாத இறுதியில் அரச த…

  8. வடகொரியாவில் நிலநடுக்கம்: 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனை காரணமா? சியோல்: பேரழிவை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதால் வடகொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா,ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளில் மட்டும் ராணுவ உபயோகத்திற்காக ஹைட்ரஜன் குண்டுகள் இருக்கும் நிலையில், வடகொரியாவின் முதல் 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனை வெற்றிகரமாக இன்று(புதன்) நடத்தப்பட்டுள்ளது.இது வடகொரியாவின் அணுசக்தி வளர்ச்சியில் ஒருமுக்கிய படியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ”வடகொரியா ஜனவரி 6-ம் தேதி காலையில் முதல் 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது,” எ…

  9. வடகொரியாவில் ராணுவ தளபதிகள் திடீர் மாற்றம் கிம் ஜாங் உன் - REUTERS வடகொரிய ராணுவத்தின் மூத்த தளபதிகள் திடீரென மாற்றப் பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர். இந்தப் பின்னணியில் வடகொரிய ராணுவத்தின் 3 மூத்த தளபதிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். கிம் ஜாங் உன் தலைமையிலான கொரிய மக்கள் கட்சி வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறது. கட்சியின் ஆதிக்கத்தை மீறி ராணுவம் செயல்படக்கூடாது என்பதற்காக முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரிய ராணுவ தளபதிகள் மாற்றப்பட்டிருப்பதை தென்கொரிய அர…

  10. வடகொரியாவில் ராணுவ புரட்சியை நடத்த முயன்ற ராணுவத் தளபதி மீன்களுக்கு இரையாக்கப்பட்டாரா? June 11, 2019 வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு அவர் பிரானா மீன்களுக்கு இரையாக்கப்பட்டுள்ளதாக மேற்கத்தேய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன. சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்ற வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதனை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் ராணுவ புரட்சி நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், வடகொரிய ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறைய…

  11. வடகொரியாவில் வாரிசு அரசியல் வடகொரியாவின் ஆட்சித் தலைவரான கிம் ஜாங் இல்லின் இளைய மகனான கிம் ஜாங் உன்னுக்கு நாட்டின் இராணுவத்தில் நான்கு நட்சத்திர ஜெனரலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு அங்குள்ள ஒரே கட்சியான தொழிலாளர் கட்சியில் இரண்டு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பதவி உயர்வுகள், வடகொரியாவில் தனது தந்தைக்கு அடுத்தபடியாக தலைமைப் பொறுப்புக்கு அவர் நியமிக்கப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. சர்வாதிகார நாட்டின் அளவுகோல்களின் படி பார்த்தால் கூட இந்த பதவி உயர்வு அசாத்தியமானது தான். சிறிது காலம் முன்பு வரை வடகொரிய மக்களுக்கு, தமது தலைவருக்கு மூன்றாவதாக ஒரு மகன் இருப்பது கூடத் தெரியாது. ந…

  12. வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இராணுவத்துக்கு உத்தரவு வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்துக்குப் பின் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் உணவு தொடர்பாக “பதற்றமான” சூழல் ஏற்பட்டதாக கிம் ஜோங் உன் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில் தானிய உற்பத்தி இலக்குகள் தவறிப்போயின. அதனால் இந்த ஆண்டு அறுவடையை…

  13. வடகொரியாவில்... முதன் முறையாக, கொவிட் தொற்று: முழு பொது முடக்கம் அமுல்! வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் (பிஏ.2 வகை வைரஸ்) தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பியோங்யாங்கில் பிஏ.2 எனப்படும், அதிக அளவில் பரவக்கூடிய ஓமிக்ரோன் வைரஸின் துணை மாறுபாடு கண்டறியப்பட்டதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, வடகொரிய தலைவர் கடுமையான தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளார். அத்துடன் தொற்று நோயை விரைவாக அகற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார். ஓமிக்ரோன் மாறுபாட்டின் கண்டுபிடிப்பு வட கொரியாவிற்கு ஒரு தீவிரமான ஆபத்தை அளிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அதன் 25 மில்லியன் மக…

  14. வடகொரியாவுக்கு உணவு வழங்கி ஆயுதங்களை ஈடாக பெறும் ரஷ்யா- அமெரிக்கா குற்றச்சாட்டு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில், ரஷ்யா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி கூறுகையில், “வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷ்ய…

  15. உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அந்த நாடு, இப்படி தான் நினைத்ததை நடத்திக்காட்டி வருவது உலக அரங்கை அதிர வைத்து வருகிறது. இதுவரை அணுக்குண்டுகளையும், அணு ஏவுகணைகளையும் சோதித்து பார்த்து வந்த வடகொரியா முதல் முறையாக அணுக்குண்டை விட அதிபயங்கரமான ஹைட்ரஜன் குண்டினை வெடித்து நேற்று சோதித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, “வடகொரியா ஹைட்ரஜன் குண்டுவெடித்து சோதித்திருப்பது நமது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதை முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது” என கூறினார். மேலும் அவர் கூறும்போத…

  16. வடகொரியாவுக்கு எண்ணை அளித்த ஹாங்காங் கப்பலை பறிமுதல் செய்தோம்: தென் கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP சர்வதேச தடைகளை மீறி வட கொரியாவுக்கு எண்ணெயை எடுத்து சென்றதாக சந்தேகிக்கப்படும் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட கப்பலொன்றை சென்ற மாதம் பறிமுதல் செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது. லைட்ஹவுஸ் வின்மோர் என்ற அக்கப்பலில் இருந்த 600 டன் சு…

  17. வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை நிறுவத் துவங்கியது அமெரிக்கா அண்டை நாடான வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியாவில் உள்ள ஓர் இடத்தில் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் துவக்கியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionஏவுகணை தடுப்பு சாதனங்கள் ராணு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன தாட் எனப்படும் இந்த முறை, வடகொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும். தென் கொரியாவின் தென்பகுதியில் இருக்கும் அந்த இடத்துக்கு, ஏவுகணைப் பாதுகாப்…

  18. வடகொரியாவுக்கு எதிராக சதி? அமெரிக்க பிரஜை கைது தங்கள் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு அமெரிக்க பிரஜையை வடகொரியா கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவடகொரியாவுக்கு எதிராக சதி? அமெரிக்க பிரஜை கைது பியூஎஸ்டி என்றழைக்கப்படும் பியோங்யாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த கிம் ஹாக்-சாங், கடந்த மே 6-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டதாக கேசிஎன்ஏ செய்தி ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பியூஎஸ்டி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த கிம் சாங்-டக் உள்பட மூன்று அமெரிக்க ப…

  19. வடகொரியாவுக்கு எதிராக போர் பயிற்சியில் அமெரிக்கா, தென் கொரியா? கோப்புப் படம் அமெரிக்காவின் குவாம் தீவை தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்காவும், தென்கொரியாவும் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவுக்கு எதிரான இப்போர் பயிற்சிகள் ஆகஸ்ட் 21 - 31 வரை நடைபெறவுள்ளதாகவும் இதில் 10,000க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினருடன் தென் கொரிய படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட தயராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்பயிற்சிகள் வடகொரியாவின் தாக்குதலை சமாளிப்பதற்கான இயற்கையான தற்காப்பு முறை மட்டுமே என்று அமெரிக…

  20. வடகொரியாவுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது April 26, 2019 அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சர்வதேச கட்டமைப்புக்குள் இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கிம் ஜாங்-உன்னுடன் நிகழ்ந்த முதல் உச்சிமாநாட்டில் புட்டின் இதனைத் தெரிவித்துள்ளார். அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறையை விமர்சித்துள்ள புட்டின் அச்சுறுத்தல்களுக்கு பதிலாக நம்பிக்கையும் மரியாதையையுமே தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை விளாடிமிர் புட்டினுடன் நடைபெற்ற உ…

  21. வடகொரியாவுக்கு பதிலடி கொடுப்பது எப்படி? அமெரிக்கா - சீனா தீவிர ஆலோசனை வடகொரியாவின் அணு மற்றும் ஏவுகணை திட்டம் பதற்றத்தை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது பற்றி பல தரப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionதலைவர் கிம் ஜாங்-உன் இதுப்போன்ற சூழல் தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்பதில் பலருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதாக ஏ பி சி செய்தி நிறுவனத்திடம் ராணுவ தளபதி எச் ஆர் மெக்மாஸ்டர் கூறினார். வட கொரியா தோல்வி…

  22. வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை சோதனை நடத்திய தென்கொரியா கொரிய தீபகற்பத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. சியோல்: தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது. ஐ.நா. பொருள…

    • 0 replies
    • 383 views
  23. வடகொரியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறும் சரக்கு கப்பலை வழிமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்சிஜிசி மிட்கெட் கப்பல். - (கோப்பு படம்) வடகொரியாவுடன் வர்த்தகம் செய்ய விதிக்கப்பட்ட தடை மீறப்படுவதை கண்காணிக்க, சரக்கு கப்பல்களை இடைமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, அந்த நாட்டுக்கு ஐநா பொருளாதார தடை விதித்துள்ளது. இதுதவிர அந்த நாட்டுடன் கச்சா எண்ணெய், நிலக்கரி உட்பட சில குறிப்பிட…

  24. வடகொரியாவுக்கெதிரான ஒலிபரப்புகளை தென்கொரியா மீளத் தொடங்கியது வடகொரியாவின் ஐதரசன் குண்டைச் சோதித்ததான அறிவிப்புக்கு பதில் நடவடிக்கையாக, ஒலிபெருக்கிகள் வழியாக வடகொரியாயாவுக்கெதிரான பிரசார ஒலிபரப்பை தென்கொரியா மீள ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை, கடந்த காலங்களில் வடகொரியாவை ஆத்திரமூட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் வேளையிலும் ஜி.எம்.டி நேரப்படி 0300 மணிக்கும் ஒலிபெருக்கிகளுடான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்டு எல்லையுடன் அமைந்த 11 இடங்களில் இருந்து ஒலிபெருக்கிகளிலிருந்து ஒலிபரப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் கொரிய பொப்பிசை, செய்தி, வானிலை அறிக்கை, வடகொரியாவுக்கு எதிரான பிரசாரம் என்பன இடம்பெற்றுள்ளதாக தெர…

  25. வடகொரியாவுடனான சந்திப்பிற்கு நேரம்-இடம் நிர்ணயிக்கப்பட்டது: அமெரிக்கா அறிவிப்பு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னுடனான சந்திப்பிற்கான நேரம்- இடம் என்பன நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உற்பத்தி துறைக்கான செயலாக்க ஆணையில் ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். வடகொரிய தலைவருடனான இரண்டாவது உச்சிமாநாட்டிற்கான இடம், நேரம் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாம் வடகொரியாவுடன் பாரிய முன்னேற்றகர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.