உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
76 பேரின் உயிரை காவுகொண்ட விமான விபத்து ; கணவரை காப்பற்றியமைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் வீரரின் மனைவி பிரேசில் நாட்டின் செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் 76 கொல்லப்பட்டதுடன், 6 உயிருடன் மீட்கப்பட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் தற்போது கால்பந்தாட்ட அணி வீரர் எலன் ரொச்சல் காப்பாற்றப்பட்டு ஸ்பெயினில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்நிலையில் இவர் காப்பாற்றப்பட்டமைக்கு அவரது மனைவி “ கணவரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி”, “நாங்கள் அவர் குணமாவதற்காக தொடர்ந்தும் கடவுளை பிராத்திக்கின்றோம்”…
-
- 0 replies
- 333 views
-
-
இரான் அரசுக்கு எதிரான இளம் ஊடகவியலாளர் ஒருவர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரான் தலைநகர் டெஹ்ரானில் நடக்க இருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து நான்கு ஐரோப்பிய நாடுகள் விலகியுள்ளன. ரூஹுல்லா ஜாம் எனும் செய்தியாளர் செய்திகள் அனுப்பும் செயலி மூலம் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தார். அவர் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார். ஜாமின் மரணம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இரான் இடையே வெளியுறவு விவகாரம் மோதலை ஏற்படுத்தியுள்ளது. ரூஹுல்லா தூக்கிலிடப்பட்ட பின்பு இந்த இணையவழி சம்மேளனத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளன. இ…
-
- 0 replies
- 803 views
-
-
கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; ஜோ பைடன் திட்டம் உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி ப…
-
- 0 replies
- 588 views
-
-
இன்றைய (05-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பதவி விலகும் அமெரிக்க அதிபர் ஒபாமா அதை மூட விரும்புகிறார்; ஆட்சிக்கு வரும் டொனால்ட் ட்ரம்போ அதை தொடர விரும்புகிறார். குவாண்டனமோ முகாமின் இன்றைய நிலவரம் என்ன? அதன் எதிர்காலம் என்னவாகும்? * மாதவிடாய் காலத்தில் மகளிருக்கு விடுப்பளிக்க ஜாம்பியாவில் புதுசட்டம்; அது தவறாக பயன்படுத்தப்படலாம் என்று முதலாளிகள் கவலை. * கணினி யுகத்திலும் மியன்மாரில் நீடிக்கும் தட்டச்சு இயந்திர ஆட்சி; அதை அழியவிடாமல் பாதுகாக்க தட்டச்சு பணியாளர்கள் தீவிர முயற்சி.
-
- 0 replies
- 227 views
-
-
இந்த கோடையில்... அமெரிக்கர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும்: உர்சுலா வான் டெர் லேயன்! இந்த கோடையில் அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்கர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டால் மாத்திரமே இது சாத்தியம் என அவர் தெரிவித்தார். நியூயோர்க் டைம்ஸிடம் வழங்கிய செவ்வியில், ‘இரு தரப்பினரும் ஒரே தடுப்பூசி போடும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் இது சாத்தியமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார். இருப்பினும், அவர் சரியான கால அட்டவணையை வழங்கவில்லை. இது தொற்றுநோயியல் நிலைமையை சார்ந்தது என்று கூறினார். ஐரோப்பிய நாடுகள் ஒரு வரு…
-
- 0 replies
- 209 views
-
-
அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி சடலமாக மீட்பு அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக கடமையாற்றிய ஷீலா அப்துஸ் ஸலாம் என்பவரின் சடலம் ஹட்சன் கங்கையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதியாக இவர் கருதப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவருடைய கணவரினால் நிவ்யோர்க் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸாருக்குக் கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் சடலம் உள்ள இடம்கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதுவரை இவரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லையெ…
-
- 0 replies
- 309 views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை ஈத் தொழுகையின் பின்னர் மோதல்கள் வெடித்துள்ளன இந்திய நிர்வாக காஷ்மீர் பிராந்தியத்தில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்ட நகரமொன்றில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக இராணுவத்தினர் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து எச்சரித்துள்ளனர். பிராந்தியத்தின் முக்கிய நகரான ஸ்ரீநகரிலிருந்து தென்கிழக்காக சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிஷ்ட்வார் நகரில் இரண்டு சமூகங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலையடுத்து கிஷ்ட்வார் நகரமெங்கிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மூண்ட இந்த மோதல்களில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈத் தொழுகைக்கு பின்னர் முஸ்லிம்கள்…
-
- 0 replies
- 202 views
-
-
எகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதிபர் மொஹமத் மோர்ஸியின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டுள்ள போராட்ட முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள ராபா அல் அடாவியா பள்ளிவாசலுக்கு வெளியே இருக்கும் ஒரு போராட்ட முகாமுக்கு அருகிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் அங்கு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்படுவதாக கூறுகிறார். அங்கு வீதிகளில் டயர்கள் எரிக்கப்படுகின்றன, வான் வெளியில் ஹெலிக்காப்டர்கள் வட்டமிட்ட வண்ணம் உள்ளன. போரட்டம் நடைபெற்ற மற்றொரு இடமான அல் நஹ்டா சதுக்கத்தில் இருந்தவர்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டுள்ளனர். இஸ்லாமிய …
-
- 0 replies
- 503 views
-
-
ஈராக்கில்... இஸ்லாமிய அரச பயங்கரவாதிகளை, எதிர்த்துப் போராட இனி அமெரிக்க துருப்புக்கள் தேவையில்லை! நாட்டில் இஸ்லாமிய அரச பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு, அமெரிக்க போர் துருப்புக்கள் இனி தேவையில்லை என ஈராக் பிரதமர் முஸ்தஃபா அல்-காதிமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கவுள்ள நிலையில், அவரது இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வாரம் பைடன் நிர்வாக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, மறுசீரமைப்பிற்கான கால அட்டவணை இருக்கும். ஈராக்கின் பாதுகாப்புப் படைகளும் இராணுவமும், அமெரிக்க தலைமையிலான கூட்டணி துருப்புக்கள் இல்லாமல் நாட்டைக் காக்கும் திறன் கொண்டவை. ஈராக் பாதுகாப்புப…
-
- 0 replies
- 231 views
-
-
9/11 விசாரணையின் முதல் ஆவணத்தை வெளியிட்டது எஃப்.பி.ஐ 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களை முன்னிட்டு சவுதி அரேபியாவினால் கடத்தல்காரர்கள் இருவருக்கு வழங்கப்பட்ட தளவாட ஆதரவு தொடர்பான புதிதாக வகைப்படுத்தப்பட்ட 16 பக்க ஆவணத்தை எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட இந்த ஆவணம், கடத்தல்காரர்களுக்கு அமெரிக்காவில் உள்ள சவுதி கூட்டாளிகளுடன் இருந்த தொடர்புகளை விவரிக்கிறது. ஆனால் சவுதி அரசு, சதிக்கு உடந்தையாக இருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. அமெரிக்காவிற்கு எதிரான செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சில ஆவணங்களை ஆறு மாதங்களுக்குள் வகைப்படுத்த ஒரு இடைக்கால மதிப்பாய்வைத் தொடங்குமாறு பைடன் முன்பு ஒரு நிர்வாக உ…
-
- 0 replies
- 304 views
-
-
ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு: பல்கலைக்கழகத்தில் எட்டு பேர் உயிரிழப்பு ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில மாணவர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மாணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர…
-
- 0 replies
- 195 views
-
-
மத்தியதரைக்கடலில் இயங்கும் மனிதாபிமான மீட்புப்படகுகள் சட்டவிரோத ஆட்கடத்தலை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு! மனிதாபிமான தொண்டு அமைப்புகள் கடுமையாக மறுப்பு, துருக்கி அதிபர் எர்துவானுக்கு எதிரான நாடளாவிய நடைபயணம்! பல்லாயிரம்பேர் பங்கேற்பு ; மற்றும் மாஸ்கோநகர நதிகள் தூய்மையாய் இருப்பதன் ரகசியம் என்ன? குப்பை லாரிகளைப்போல குப்பையள்ளும் படகுகள் குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 340 views
-
-
மோடியால் இந்தியாவின் பிரதமராகவும் முடியாது, நாட்டின் நிலையை மாற்றிவிடவும் முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி ஜெயந்தி நடராஜன் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் அரசுக்கு மக்கள் ஓட்டளித்து விடக் கூடாது என்பதே வகுப்புவாத அரசியல் நடத்தும் மோடியின் விருப்பம்; அதை நிறைவேற்ற அவர் தொடர்ந்து முயற்சி செய்கிறார்; ஆனால் நல்லதொரு இந்தியாவை உருவாக்குவது காங்கிரசின் கலாச்சாரம்; மோடியால் இந்தியாவின் பிரதமராகவும் முடியாது; நாட்டின் நிலையை மாற்றி விடவும் முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார். http://www.dinamani.com/latest_news/2014…
-
- 0 replies
- 363 views
-
-
மதுரை, முத்துராமலிங்க தேவரின் முக்கிய கொள்கையான காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைவதற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா விழாவில் பேசியதாவது:– தேவரின் பொன்மொழிகள் ‘‘இங்கு பெருந்திரளாக கூடியுள்ள சகோதர சகோதரிகளே கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் எனது அன்புகலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அனைத்திந்திய அ.தி.மு.க. சார்பில் அணிவித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்ட தேவர் திருமக…
-
- 0 replies
- 642 views
-
-
கெடலோனியா பிராந்தியத்தில் ஸ்பெய்னின் நேரடி ஆட்சி, இன்று அறிவிக்கப்படுமென பெருகும் எதிர்பார்ப்பு! கெடலான் அரசும் கலைக்கப்படுமா? இராக்-குர்துப்படைகளுக்கு இடையில் முற்றும் மோதல்! சுதந்திர குர்திஸ்தானுக்கு ஆதரவான குர்துக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பால் இராக்கில் இன்னொரு உள்நாட்டுப்போர் மூளுமா? ஒருபாலுறவாளர்களை கைது செய்யும் இந்தோனேஷிய காவல்துறை! பாலின ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 443 views
-
-
அம்மா பகவான் மகிமைகள் http://www.youtube.com/watch?v=x7jchazQxWA http://www.youtube.com/watch?v=Ghl8y9_5e4c&feature=related http://www.youtube.com/watch?v=AKUxyun_fWg&feature=related http://www.youtube.com/watch?v=LXFHnqUSfP0&feature=related http://www.youtube.com/watch?v=cKTm2UIDH7g
-
- 0 replies
- 1.3k views
-
-
வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்தார் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒன்பது ஆண்டுகளுக்கு பின், வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் (இடது) மற்…
-
- 0 replies
- 351 views
-
-
டெல்லி ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 41 சிறுமிகள் மீட்பு… இந்தியத் தலைநகர் டெல்லியும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பெண்கள் சிறுமிகளும்…. இந்தியாவின் டெல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 41 சிறுமிகள் காவல்துறையினரினர் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி பெண்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இயங்கிவரும் பாபா விரேந்தர் திக்சித்துக்கு சொந்தமான அத்யாத்மிக் விஷ்வா வித்யாலயா என்னும் ஆசிசரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக கிடைத்த தகவலினையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி பெண்கள் ஆணையகம் மற்றும் குழந்தைகள் நலக்…
-
- 0 replies
- 647 views
-
-
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் இந்துபுரம் அமகத் நகரைச் சேர்ந்தவர் மஸ்தான். டிரைவர். இவருக்கு மனைவியும், 3 வயதில் நசீனா என்ற மகளும் இருந்தனர். 10 நாட்களுக்கு முன் மனைவி இறந்துவிட்டார். இதனால் 3 வயது குழந்தை அனாதையானது. இதையடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு மஸ்தான் ரோட்டுக்கு வந்தார். என் குழந்தையை யாராவது விலைக்கு வாங்கி கொள்ளுங்கள் என்று கூவி கூவி விற்றார். கடைசியாக ஒருவர் வந்து ரூ.7 ஆயிரத்துக்கு குழந்தையை விலை பேசினார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மஸ்தானை கைது செய்து குழந்தையை மீட்டனர். இது பற்றி மஸ்தான் கூறுகையில், நான் கார் ஓட்ட வெளியில் சென்று விடுவேன். அந்த நேரத்தில் குழந்தை தனியாக இருக்கும். எனவே குழந்தையை யாருக்காவது விற்று ஒப்படைத்…
-
- 0 replies
- 546 views
-
-
மகளை பாலியல் வல்லுறவு கொண்ட தந்தைக்கு 14,400 ஆண்டு ஜெயில்; பிலிப்பைன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு Manila சனிக்கிழமை, செப்டம்பர் 25, 12:58 PM IST மணிலா, செப். 25- பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரது மனைவி வேலைக்காக ஹாங்காங் சென்று விட்டார். இந்த நிலையில் அந்த நபர் தனியாக இருந்த தனது 13 வயது மகளை 386 நாட்கள் கற்பழித்து “செக்ஸ்” சித்ரவதை செய்து வந்தார். இதற்கிடையே 2002-ம் ஆண்டு அந்த சிறுமியின் தாய் திரும்பி வந்தாள். அவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி கதறி அழுதாள். இதைத்தொடர்ந்து அந்த நபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. எனவே அவரை கைது செய்து மணிலாவில் உள்ள க…
-
- 0 replies
- 757 views
-
-
புதுடெல்லி: மரண தண்டனை விதிக்கப்பட்ட சுரேந்தர் கோலி உள்ளிட்ட 5 பேரின் கருணை மனுக்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. நொய்டா அருகே உள்ள, நித்தாரி கிராமத்தில், பல்வேறு இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மத்திய அரசுக்கு கருணை மனு அனுப்பினார். இதேபோல், பல வழக்குகளில் தொடர்புடைய மேலும் 4 குற்றவாளிகளும் கருணை அனுப்பியிருந்தனர். இந்நிலையில், சுரேந்தர் கோலி உள்ளிட்ட 5 பேரின் கருணை மனுக்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. http://news.vikatan.com/article.php?module=news&aid=29155
-
- 0 replies
- 514 views
-
-
பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு திபெத். திபெத் பண்பாடு நடு ஆசியாவின் மலைப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் வாழும் மக்களின் பண்பாடு ஆகும். திபெத் பண்பாடு என்பது திபெத்திய பெளத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள், இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடு என உலக இனவரைவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள். திபெத் பண்பாட்டின் ஒரு சின்னமாக வெளி உலகால் நன்கு அறியப்பட்ட முகம் திபெத்திய பெளத்த சமயத்தின் தலைவராகக் கருதப்படும் பாரம்பரிய தலாய் லாமா ஆவார். ஆனால் பேராசை கொண்ட சீனா, இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் இருந்ததால், அதனை தனதாக்கிக் கொள்வதன் மூலம், இந்தியாவை,…
-
- 0 replies
- 3.8k views
-
-
உலகப் பார்வை: சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் படத்தின் காப்புரிமைREUTERS தொடர்ச்சியாக போர் நடைபெற்றுவரும் சிரியாவில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ ரீதியான தேவை உடையவர்களை வெளியேற்றவும…
-
- 0 replies
- 405 views
-
-
எங்கெங்கும் இசைவில்லாத சூழல். தலைசுற்றுகிறது. டெக்குவாவில் உள்ள பிரதான சாலை ஒன்றிலிருந்து, தள்ளி அமைந்திருக்கும் ஃபெலாஃபெல் கடை அது (ஃபெலாஃபெல்: உருண்டையாக இருக்கும் ஒரு வகை தின்பண்டம்). கடையிலுள்ள சுவரின் ஒரு மூலையில் மாட்டப்பட்டிருக்கும் தொலைக்காட்சியில் செய்திகள் அரபி மொழியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் காஸாவைப் பற்றிய செய்திகள். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கும் பெண் ஒருத்தியைக் காட்டுகிறார்கள்; அவள் முகமெல்லாம் சின்னச் சின்னதாக ஏராளமான காயங்கள்; சில காயங்கள் மிகவும் மோசம்; அநேகமாக வெடிகுண்டுச் சிதறலால் ஏற்பட்டிருக்கலாம். அவளால் பேச முடியவில்லை; தூங்கித் தூங்கி விழுவதுபோல் தெரிகிறது (அது தூக்கம்தான் என்றும், மரணம் இல்லை என்றும் நம்புவோம்). அவளுக்கு அருகே, இ…
-
- 0 replies
- 534 views
-
-
வடகொரியா உதவியுடன் மியான்மர் (Burma) ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் ஆவணம் தெரிவிக்கிறது. பர்மாவை சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவர், தனது நாட்டில் வடகொரியாவின் உதவியோடு ரகசியமாக அடர்ந்த காட்டுப்பகுதியில் அணு ஆயுதம் மற்றும் அணு உலை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளதை தான் நேரில் பார்த்ததாக அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இத்தகவல் அமெரிக்க தூதரக அதிகாரி தனது நாட்டு தலைமைக்கு அனுப்பிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. http://www.newsonews.com/view.php?22cQ0ESc2e2VZBZb2e2cAOJ7acd3eQAA0cde4KMCC0b4edlmA2a4dndnB4202dq86A40
-
- 0 replies
- 517 views
-