Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சார நாள் ========================================= பிரான்ஸின் அரசியலை தலைகீழாக புரட்டிப் போடும் உக்கிரமான தேர்தல் பிரச்சாரம் இது. ஞாயிறன்று வாக்கெடுப்புக்கு முன்னதாக அந்த நாட்டு வாக்காளர்களிடம் தமது கோரிக்கையை முன்வைக்க அதிபர் வேட்பாளர்களுக்கு இது இறுதி வாய்ப்பு. முன்னணியில் திகழ்வதாக கருதப்படும் மையவாத சுயேச்சை வேட்பாளர் இமானுவல் மெக்ஹோனுக்கு மேலும் ஒரு உற்சாகமாக, அறுபத்தியிரண்டு வீத வாக்குகளை பெற்று போட்டியாளர் தேசியவாத மரின் லு பென்னை அவர் தோற்கடிப்பார் என்று கருத்துக்கணிப்புகள் கூருகின்றன. பிபிசியின் காணொளி. BBC

  2. உக்ரைனின்... நகர மேயர்கள், கடத்தப்பட்ட விவகாரம்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்! உக்ரைனின் நகர மேயர்கள் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தென்கிழக்கு நகரமான டினிப்ரோ நகர மேயரான யேவென் மட்வியேவ் என்பவரை, ஆயுதமேந்திய நபர்கள் கடத்திச் சென்றதாக உக்ரைனிய அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர். அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமையன்று மெலிடோபோலின் மேயர் இவான் ஃபெடோரோவ் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்ல…

  3. ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்! ஹொங்கொங்கில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தானது புதன்கிழமை (26) இரவு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 44 பேர் உயிரிழந்ததுடன், 279 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் இன்னும் தீப்பரவிய உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து குடியிருப்பாளர்களை மீட்டு வருகின்றனர். நியூ டெரிட்டரிஸின் புறநகர்ப் பகுதியான தாய் போ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு கட்டிடங்களில் புதன்கிழமை பிற்பகல் இந்த தீ விபத்து தொடங்கியது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (27) காலை வரை, தீ இன்னும் அணைக்கப்படவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்தன. அதேநேரம்…

  4. சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொலை-சந்தேக நபர் கைது! அமெரிக்காவின் சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் அந்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது இதேவேளை 2024 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 378 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்ட…

  5. போர் சூழலில் வாழும் 35.7 கோடி குழந்தைகள் : அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் உலகளவில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆறுக்கு ஒரு குழந்தை வாழ்ந்து வருவதாக "சேவ் த சில்ரன்" என்ற குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS போர் சூழலில் வாழுகின்ற குழந்தைகள், இதற்கு முன்னர் 20 ஆண்டுகளில் இல்லா…

  6. 6 மணி நேரத்தில் 102 மொழிகளில் பாடல்களை பாடிய கேரள மாணவி துபாயில் 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணி நேரம் 15 நிமிடங்கள் சளைக்காமல் பாடல்களை பாடிய கேரள மாணவி கின்னஸ் அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தார். கின்னஸ் சான்றிதழுடன் மாணவி சுதேசா துபாய்: துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சுதேசா (வயது 12). இவர் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சதீஷ், தாயார் ஜாலியாத் சுமித்தா. சுதேசாவுக்கு ஏற்கன…

    • 0 replies
    • 205 views
  7. நாளிதழ்களில் இன்று: ஆதார் ரகசியங்களை பாதுகாக்க வருகிறது புதிய 16 இலக்க எண் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதார் எண்களின் ரகசியம் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை எனும் செய்தி வெளியாகிவரும் நிலையில், ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைக்கும் நோக்கில் மெய்நிகர் பாதுகாப்பு அம்சம் ஒன்றை யுஐடிஏஐ அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி, ஆதார் எண் தேவைப்படும் இடங்களில், ஆதார் பயன்பாட்டாளர்கள் ஒரு 16 இலக்க தற்காலிக, எண்ணை ஆதார் இணையதளம், சேவை மையங்கள் அல்லது செல்பேசி செயலி ஆகியவற்றின்மூலம் உருவாக்கி, ஆதார் எண்களுக்கு…

  8. உக்ரைன், மால்டோவா, ஜோர்ஜியா... ஐரோப்பிய ஒன்றியத்தின், உறுப்பினர் நாடுகளாக மாறுமா? உக்ரைன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகளாக வரவேற்க வேண்டுமா என்பதை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இந்த மாத இறுதியில் முடிவு செய்ய உள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மூன்று முன்னாள் சோவியத் குடியரசுகளை போரின் முதல் வாரங்களில் அவசரகால விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தூண்டியது. உக்ரைனின் வாய்ப்புகள் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. மேலும் மால்டோவாவுக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஜோர்ஜியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கடுமையாக முயற்சிக்கின்றது. அரசியல் சீர்திருத்தங்கள் முதல் தடையற்ற வர்த்தகம் வரை அனைத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்…

  9. டிரோன்கள் நவீன போர் சூழலை எவ்வாறு மாற்றுகின்றன என்பது குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.

  10. தீவிரவாதத்திற்கு ஏதிராக உலகநாடுகள் ஒன்றுபட்டு போரிட ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கனடாவில் வலியுறுத்தி உள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கனடா சென்றார். கடந்த 1973–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்ற பிறகு, அங்கு செல்லும் இந்திய பிரதமர் மோடியே ஆவார். ஒட்டாவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவரது விமானம் தரை இறங்கியது. விமான நிலையத்தில் அவரை கனடா ராணுவ மந்திரி ஜேசன் கென்னடி, சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான மந்திரி எட் பாஸ்ட், கனடாவுக்கான இந்திய தூதர் விஷ்ணு பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். ஏராளமான இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கனடா பிரதமர் ஸ்…

    • 0 replies
    • 205 views
  11. தெரெஸா மேவின் முதல் சவால்: ஏங்கலா மெர்கல் கருத்து பிரட்டன் பிரதமராக பதிவியேற்கவிருக்கும் தெரெஸா மே எதிர்கொள்ளும் முதல் சவால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் எவ்வகையான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவெடுப்பதே என ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார். அனைத்து உறுப்பு நாடுகளும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் ஏற்படும் சேதம் குறைக்கப்பட வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் வரப்போகும் முடிவு லண்டனைச் சார்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெரெஸா மே வரும் புதன் கிழமையன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியை விட்டு விலகும் டேவிட் கேமரன் தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டினார். …

  12. பிரான்ஸ் ஜனாதிபதியும் பிரித்தானிய பிரதமரும் யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எதுவும் செய்யவில்லை - அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்! பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அடுத்த வாரம் இரு நாட்டுத் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்துரைத்த அவர், யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை எனத் தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.…

  13. ஈக்வடார் சிறைச்சாலை கலவரத்தில் 31 பேர் உயிரிழப்பு. ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும…

  14. பெய்ஜிங், சீனா ராணுவம் அவ்வப்போது ஊடுருவி வருவதால் இந்திய-சீன எல்லையில் 100 போர் பீரங்கிகளை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்திய ராணுவம் நிலை நிறுத்தியுள்ளது. இதற்கு சீன ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:- இந்தியாவில் சீன நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய ராணுவம் 100 போர் பீரங்கிகளை நிலை நிறுத்தியிருப்பது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் பீரங்கிகளை நிறுத்திவிட்டு சீனாவின் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா விரும்புவது நகைப்புக்குரியதாக உள்ளது. பீரங்கிகளை நிறுத்தியிருப்பதன் எதிரொலியாக இந்…

  15. அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டில், அந்நாட்டைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் மீது, பயங்கரவாதக் குற்றச்சாட்டுச் சமத்தப்பட்டுள்ளது. அவனது செயற்பாடுகள் தொடர்பாக, சமூக ஊடக இணைத்தளப் பகிர்வுகளூடாக அறிந்துகொண்ட பொலிஸார், சிட்னியிலுள்ள அவனது வீட்டில் வைத்து, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் கைது செய்தனர். 'பயங்கரவாத நடவடிக்கைக்குத் தயார்படுத்தினார் அல்லது திட்டமிட்டார் என்ற அடிப்படையில், அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பாரிய குற்றத்தைப் புரியும் நோக்குடன் தொலைத்தொடர்பு வலையமைப்பைப் பயன்…

  16. நாடு முழுக்க நடந்து வரும் சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற குடிமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர தனது அரசு எந்த விதமான நடவடிக்கைளையும் எடுக்கத் தயாராக இருப்பதாக வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். வங்கதேச போலீசார் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்த்து நடத்திய ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டையின் தொடர்ச்சியாக பிரதமரிடம் இருந்து இந்தக் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழன் நள்ளிரவின் போது தொடங்கப்பட்ட இந்த அதிரடி சோதனையில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதன் சமீபத்திய எண்ணிக்கையில் சாதாரண குற்றவாளிகளும் இடம் பெற்றிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெர…

    • 0 replies
    • 205 views
  17. ஈராக் தலைநகர் பாக்தாதிலும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் இன்று 17 கார் குண்டுகள் வெடித்ததில் 55 பேர் கொல்லப்பட்டனர். 168 பேர் காயமடைந்தனர். பாக்தாதிலும், ஷியா பிரிவு மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் இன்று 17 கார் குண்டுகள் வெடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஒரு மணிநேரத்துக்குள் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இவற்றில் மிகவும் சக்திவாய்ந்த 2 குண்டுகள் பாக்தாதின் கிழக்குப்பகுதி புறநகரான சதர் நகரில் வெடித்தன. இத்தாக்குதலில் 9 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் 33 பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, ஹரியா புறநகர்ப் பகுதியில் 2 தனித்தனி கார் குண்டுகள் வெடித்ததில் 6 பேர் இறந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.…

  18. இன்றைய (24/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மாற்றத்துக்காக வாக்களித்த பிரான்ஸ்; அதிபர் தேர்தலில்- புதுவரவான இமானுவேல் மக்ஹோ(ன்)- அதிதீவிர வலதுசாரியான மரீன் லூபென்னை இரண்டாவது சுற்றில் எதிர்கொள்கிறார். * சிரியாவில் ரக்கா நகருக்கு வெளியே ஐ எஸ் குழு வலுவாக இருந்த பகுதி அரசபடைகளிடம் வீழ்ந்துள்ளது; அங்கிருந்து பிபிசி தரும் பிரத்தியேகச் செய்திகள். * உணவு வீணாகும் உலக பிரச்சனைக்கு உள்ளூர் தீர்வை முன் வைக்கிறது லண்டன் சந்தை ஒன்று; மற்ற நகரங்களால் பின்பற்ற முடியுமா?

  19. இஸ்ரேல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றாா் நெதன்யாகு By DIGITAL DESK 2 30 DEC, 2022 | 09:27 AM இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6ஆவது முறையாக வியாழக்கிழமை (டிச.29) பொறுப்பேற்றாா். 73 வயதாகும் அவா், நாட்டில் மிக நீண்ட காலமாக பிரதமராக இருந்தவா் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுள்ளாா். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அமைக்கப்பட்ட அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. இந்த நிலையில், மூன்றே ஆண்டுகளில் 4-ஆவதாக கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் நெதன்யாகுவின் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன. ஆட்சிமைக்க 61 இடங்கள் தேவையான…

  20. கனடா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தடைகளை எதிர்த்து போராட்டம் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கனடா முழுவதிலும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவாவில் சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோவிலும் நூறுகணக்கானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு போராட்டத்தை தொடங்கியது. போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, தற்போது 1000-க்கு மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனர்…

  21. பிரித்தானிய பாராளுமன்ற வை-பையில் (Wi Fi) இருந்து 24,473 தரம் ஆபாச இணையதளங்களுக்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது…. பிரித்தானியாவின், பாராளுமன்ற வை-பை வலைப்பின்னலில் இருந்து ஒரு நாளைக்கு 160 முறை ஆபாச இணையதளங்களிற்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. பிரிரித்தானிய பாராளுமன்றத்தில் உள்ள கணனிகள் தனியான வலைப்பின்னலில் இயங்கி வருகின்றன. இந்த வலைப்பின்னல்களில், ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இருந்தும், அந்த தளங்களுக்கு செல்ல ஒரு நாளைக்கு குறைந்தது 160 முறை முயற்சி நடந்துள்ளதாக பிரித்தானியாவின், ப்ரெஸ் கூட்டமைப்பு அறிக்கையளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இது வரை 24,473 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்த…

  22. இன்றைய நிகழ்ச்சியில்.. *மோசுல் புறநகர்ப்பகுதில் ஐ எஸ் அமைப்பு உருவாக்கிய சுரங்க பதுங்கு குழிகள். *அமெரிக்கத் தேர்தலில் ஆசிய வாக்காளர்களின் நிலைப்பாடு குறித்த காணொளி. *மூன்று நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான விக்டோரியா ஏரி அதே மீனவர்களை பலி கொள்வதன் மர்மத்தை விளக்கும் செய்தித் தொகுப்பு ஆகியவை குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.

  23. லிபிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் 160 க்கும் மேற்பட்டோர் பலி கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நா குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் அகதிகள் சம்பந்தப்பட்ட மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகரமான சம்பவம் இதுவாகும். இந்த இறப்புகளினால் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்வடைந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் திரிபோலியில் அகதிகள் மீதான அடக்குமுறையை அந் நாட்டு அதிகாரிகள் முடுக்கிவிட்டதால், லிபியாவிலிருந்து ஐரோப்பிய நடுகள…

  24. சமீபத்தில் ஓர் தொண்டு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரிட்டனில் சராசரி நபர் ஒருவர் தனது வாழ்நாளில் அல்கொஹொலுக்காக செலவழிக்கும் தொகை குறைந்தது 50 000 பவுண்ட்ஸ் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஏனைய பாகங்களை விட லண்டனில் மதுபானம் அருந்துபவர்கள் அதிகம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மக்மில்லன் புற்றுநோய் எதிர்ப்பு அறக்கட்டளையான இவ்வமைப்பு 18 வயதுக்கு மேற்பட்ட 2000 பேரிடம் மேற்கொண்ட திறந்த கருத்துக் கணிப்பில் ஒவ்வொரு பிரிட்டன் குடிமகனும் 787 பவுண்டுக்கள் மதுபானத்துக்காக ஒவ்வொரு வருடமும் சராசரியாக செலவழிக்கின்றனர் எனக் கண்டு பிடித்துள்ளது. இதில் ஆண்கள் செலவழிக்கும் தொகை 934.44 பவுண்டுக்கள் என்றும் பெண்கள் செலவழிக்கும் தொகை 678.60 பவுண்டுக்கள் என்றும் கூடத் தெரிவிக்க…

  25. சர்வதேச அளவில்... பொது சுகாதார அவசர நிலையாக, "குரங்கு அம்மை நோய்" பாதிப்பு அறிவிப்பு! குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது. சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும். கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன. தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.