Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சுவிஸ் மேதின ஊர்வலத்தின் போது புளொட் உறுப்பினர்கள் மீது தாக்குதல்: நால்வருக்கு கடும் காயம். சுவிஸ்லாந்தில் மேதின ஊர்வலத்தின் போது புளொட் உறுப்பினர்கள் மீது மர்ம நபர்கள் இரும்புக்கம்பிகள் பொல்லுகள் சிறிய கத்திகள் சகிதம் தாக்குதல் நடத்தினர். இதில் நால்வருக்கு கடும் இரத்தகாயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த சுவிஸ் பொலிஸார் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.. -Tamilwin-

    • 17 replies
    • 3.2k views
  2. "தமிழீழம் சிவக்கிறது"- நெடுமாறன் நூல் வழக்கு தள்ளுபடி - நூலைத் திருப்பித் தர அரசு மறுப்பு! "தமிழீழம் சிவக்கிறது" என்னும் தலைப்பில் பழ. நெடுமாறன் எழுதிய நூல் விடுதலைப்புலிகளை ஆதரித்து எழுதப்பட்ட நூல் என்றும் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவாக எழுதுவது சட்டப்படி குற்றம் என்றும் 2002ஆம் ஆண்டில் பழ.நெடுமாறன் மீதும் இந்த நூல்களை வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாக தமிழ் முழக்கம் ஷாகுல் அமீது மீதும் தமிழக அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 124 (ஏ) இந்திய குற்றவியல் சட்டம் 505 (1பி) மற்றும் 120ஆவது பிரிவு (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குத்தொடர்ந்தது. நான்கு ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த வழக்கு இறுதியில் தீர்ப்புக் கூறப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இ…

  3. உயர் வெப்பத்தால் உருகி நொறுங்கி விழுந்த பாலம் வீரகேசரி நாளேடு அமெரிக்காவின் பிரதான இரட்டை அடுக்குப் பாலமொன்று அதற்கு அண்மையில் எரிவாயு கொள்கலமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிப்பட்ட பாரிய வெப்பத்தால் பொருத்துக்கள் உருகியதன் காரணமாக நொறுங்கி விழுந்துள்ளது. விபத்துக்குள்ளாகிய எரிவாயு கொள்கலத்திலிருந்து வெளிப்பட்ட வெப்பம் காரணமாக சான் பிரான்சிஸ்கோஒக்லான்ட் பே என்ற மேற்படி பாலத்தின் பொருத்துகளும், உருக்கு கட்டமைப்பும் உருகி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்படி தீ விபத்தின்போது தீச்சுவாலைகள் 200 அடிக்கு மேற்பட்ட உயரத்திற்கு மேலெழுந்ததாகவும், இத்தீயின் காரணமாக 2750 பாகைக்கு அதிகமான வெப்பம் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பாலத்தில் தினச…

  4. காங்கிரசை ஆயுதமாக்கி என்னை கைது செய்ய துடிக்கிறார்கள்: வைகோ பரபரப்பு பேச்சு ] ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருவான்மிïரில் இன்று காலை ம.தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் கழக குமார் இல்ல திறப்பு விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு விஷயத்தில் உங்களை கைது செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டனர்.... ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருவான்மிïரில் இன்று காலை ம.தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் கழக குமார் இல்ல திறப்பு விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு விஷயத்தில் உங்களை கைது செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டனர். …

  5. பைக் தராததால் ஓடிய மணமகன் நின்றது கல்யாணம்-3 பேர் கைது திருவண்ணாமலை: வரதட்சணையாக தர வேண்டிய மோட்டார் சைக்கிள் வராததால், கோபமடைந்த மணமகன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் கல்யாணம் நின்று போனது. இதுகுறித்து மணமகள் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மகேஸ்வரி. இவர் சென்னையில் நர்சாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிறுபாக்கம் என்ற ஊரைச் சேர்ந்த ரிசர்வ் போலீஸ்காரர் ரவிக்கும் திருமணம் நிச்சயமானது. 30ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்தன்று மோட்டார் சைக்கிள் தருவதாக மணமகள் வீட்டார் வாக்களித்திருந்தினர்.…

  6. ராமர் பாலம் உள்ளதா?: சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆதாரம் தேடிய டி.ஆர்.பாலு தஞ்சாவூர்: ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்று தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆய்வு செய்து குறிப்புகளையும், நகலையும் எடுத்துச் சென்றார் மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு. ராமர் பாலம் தொடர்பாக சர்ச்சை வலுத்து வருகிறது. சமீபத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி கூறுகையில், ராமர் பாலம் உள்ளது தொடர்பாக தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆதாரப்பூர்வமான தகவல்கள் உள்ளன, வரைபடமும் உள்ளது என்றார். இந்த நிலையில் நேற்று திடீரென டி.ஆர்.பாலு சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு வந்தார். காலை 10.30 மணிக்கு வந்த பாலு, சுமார் 4 மணி நேரம் அங்க…

  7. ரிசர்வ் செய்தும் பயனில்லை: ரயிலில் சீட் இல்லாமல் நெல்லை மாணவிகள் பரிதவிப்பு திருநெல்வேலி: ரிசர்வ் செய்தும் பயனில்லை ரயிலில் சீட் இல்லாமல் நெல்லை மாணவிகள் 150 பேர் கடும் சிரமப்பட்டனர். நெல்லை ரஹ்மத்நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். பின்னர் நேற்று இரவில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை வர டிக்கெட் ரிசர்வ் செய்தனர். கொச்சியில் ரயிலில் ஏறியதும் ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில் கேரள பயணிகள் அமர்ந்து கொண்டு இடம் கொடுக்க மறுத்து விட்டனர். இது குறித்து டி. டி. ஆரிடம் புகார் தெரிவிக்கப்பட்டும் பயனில்லை. மாணவ, மாணவிகள் அமர இடம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாயினர். தமிழக பயணிகள் என்றால் கேரள பயணிகள் அவ்வப்போது இப்படி இடையூறு ச…

  8. சென்னை நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் மே 01, 2007 சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பேசியுள்ளார். அதில் பேசிய நபர், தோஹாவிலிருந்து சென்னைக்கு வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு மனித வெடிகுண்டு பயணிப்பதாகவும், விமான நிலையத்திற்கு வந்ததும் அந்த மனித வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மறு முனையில் பேசியவர் கூறியுள்ளார். இதையடுத்து இத்தகவலை கர்நாடக டிஜிபிக்கு அந்த சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அவர் தமிழக டிஜிபிக்கு தகவல் தெரிவ…

  9. விடுதலைப்புலிகள் தாக்குதல்: நடிகை பூஜா வீடு அருகே குண்டு வெடித்தது கொழும்பு,மே.1- பிரபல நடிகை பூஜா இலங்கையில் பிறந்தவர் சென்னை வந்து படங்களில் நடித்து விட்டு இலங்கை திரும்பிவிடுவார். தற்போது அவர் கொழும்பில் உள்ளார். பூஜா வீடு அருகே விடுதலைப்புலிகள் வீசிய குண்டு வெடித்தது. விடுதலைப்புலிகள் விமானத் தில் சென்று பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் சமீபத்தில் குண்டு வீசினார்கள் இந்த கிடங்கு பூஜா வீட்டில் இருந்து ஒருகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு பூஜா அதிர்ச்சி அடைந்தார். ஜன்னல் விழியாக வெளியே எட்டிப்பார்த்தார். குபு குபு வென்று புகை கிளம்பிக் கொண்டிருந்தது. தீயும் எரிந்தது. இதனால் மிகவும் பயந்தார். பூஜா வீட்டில் இருந்து உடனடியாக …

  10. இந்திய பெண்களை மணந்த வெளிநாட்டினர் கொடைக்கானல்: கொடைக்கானலில் இந்திய கலாசார முறைப்படி, வெளிநாட்டினர் இருவர் இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்டனர். கொடைக்கானல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் காமு. இவரது மகள்கள் செல்வி, சாந்தகுமாரி. கிரீசிலுள்ள ஏதென்ஸ் நகரைச் சேர்ந்தவர்கள் வாசிலியோஸ், மெலியோஸ். சுற்றுலா வந்த இவர்கள் இந்திய கலாசாரம் மீது பற்றுதல் ஏற்பட்டதால் தாங்கள் கொடைக்கானல் பெருமாள் மலை அருகே உள்ள அடுக்கம் பகுதியில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி வசித்து வருவதாகவும், இந்திய பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பாம்பார்புரம் ஆல்பர்ட் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களை பற்றி ஆல்பர்ட், காமுவிடம் தெரிவித்துள்ளார். காமுவின் மகள்கள் செல்வி, சாந்தகுமாரி ஆகிய…

  11. நீ...ண்ட சாதனை! சமஷ்டிபூர்: பீகார் மாநிலம், சமஷ்டிபூர் மாவட்டத்தில் உள்ளது மாணிக்கா கிராமம். அதைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லகான். கயிறு திரிப்பதுபோல இரண்டு பேர் இரண்டு பக்கம் இழுத்துப் பிடிப்பது, லகானின் தலைமுடி, தாடியைத்தான். அவரது தலைமுடி நீளம் 13 அடி. தாடியின் நீளமோ 19 அடி 7 அங்குலம். இத்தனை நீளத்தையும் இவ்வளவுநாள் சுருட்டி வைத்துப் பராமரித்துப் பாதுகாத்து வருகிறார் லகான். இதைவிட சிறிய விஷயங்கள் எல்லாம் வெளியே பெரிதாகிக் கொண்டிருப்பதாக கிராமத்தினர் சொல்லவே, தனது சாதனை முடி வளர்ப்பை வெளி உலகுக்கு காட்டப் புறப்பட்டு விட்டாராம் லகான். விரைவில் சாதனைப் புத்தகங்களின் கதவை அவர் தட்டப் போகிறார். தினகரன்

    • 3 replies
    • 1.3k views
  12. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 3 பேர் சாவு-மர்ம நபர் சுட்டுக் கொலை! கான்சாஸ் சிட்டி: அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் இறந்தனர். கடைசியில் அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த வெறித்னமான துப்பாக்கிச் சூடு சம்பவமே இன்னும் உலக மக்களின் நினைவிலிருந்து மறையவில்லை. இந்த நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம், கான்சாஸ் சிட்டி நகரில் உள்ள வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் நடந்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து கான்சாஸ் சிட்டி காவல் அதிகாரி டோனி சாண்டர்ஸ் கூறுகையில், ஒரு மர்ம நபர் நேற்று இரவு கான்சாஸ் சிட்டியில் உள்ள முக…

    • 2 replies
    • 1.1k views
  13. பிரதமர் பதவிக்கு ஏங்கும் ஜெயலலிதா; மூன்றாவது அணிக்கனவு நனவாகுமா? தமிழக முதல்வர் கதிரையில் அனாயாசமாக உட்கார்ந்த ஜெயலலிதா, அத்துடன் திருப்தி அடையத் தயாரில்லை. நெடுகாலமாகவே அவர் மனதிலுள்ள கனவு நாட்டின் பிரதமராவது என்பதாகும். அவரது முக்கிய குணாம்சங்களில் ஒன்றான பழி தீர்க்கும் பழக்கத்துடன் தொடர்புடையதே அவரது பிரதமர் கனவும். அதாவது மாநில மட்டத்தில் தன்னை சிறை அனுப்பிய கருணாநிதியை பழி தீர்க்க நள்ளிரவில் அவரை கைது செய்து நடுத்தெருவில் இழுத்துச் சென்றார். அவ்வாறே தேசிய அளவில் தன்னை எடுத்தெறியும் பி.ஜே.பி. யையும் காங்கிரஸையும் பழி தீர்க்க இந்த இரு தரப்பையும் சாராத மூன்றாவது அணியை உருவாக்கி அதன் மூலம் பிரதமராக நெடுநாட்களாக கனவு காண்கிறார். தி.மு.க.வும் காங்கிரஸ் க…

  14. வெடித்துச் சிதறும் குளோரின் நிரப்பரப்பட்ட வாகனங்கள் ஈராக்கில் குளோரின் வாயு நிரப்பப்பட்ட வாகனங்களை வெடிக்க வைப்பதன் மூலம் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் தீவிரவாதிகள், இரசாயன போர் முறையில் புதிய பரிணாமத்தை உருவாக்கி வருகின்றனர். ஈராக்கின் இஸ்லாமிய தீவிரவாதிகள் இரசாயன குண்டுகளை உருவாக்கும் திறன் படைத்தவர்களாக மாறியுள்ளனரா என்ற அச்சத்தை மேற்குலகில் இருந்து ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 28 இற்கு பின்னர், ஈராக்கில் தீவிரமாகியுள்ள குளோரின் வாயு தாக்குதல்களில் இதுவரை 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கின் அன்பர் பிராந்தியத்திலேயே முதன் முதலில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ரமாடி, பலுஜா என முக்கிய நகரங்கள் அனைத்தும் குளோரின…

  15. ஆயுத உதவி விவகாரத்திலும் கருணாநிதி நழுவல் போக்கு -(கலைஞன்) [29 - April - 2007] * ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்... இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு மீண்டும் ஆயுத தளபாட உதவிகளை வழங்கியிருப்பது தமிழக மக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இராணுவத்திற்கு இந்தியா வழங்கும் ஆயுதங்களினால் அப்பாவி ஈழத் தமிழர்களே கொன்று குவிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டும் தமிழகக் கட்சிகள் இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனாலும் தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பையும் ஈழத் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொன்றொழிக்கப்படுவதையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு, இலங்கை அரசு இராணுவ உதவி கோரும் போ…

  16. விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் ஆதரிப்போம் அரசின் அடக்கு முறையை எதிர்கொள்வோம் -வைகோ சூளுரை விடுதலைப் புலிகளை என்றும் ஆதரிப்போம் ஆனால் தமிழ்நாட்டில் எந்த வன்முறையிலும் சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோவை கைது செய்யுமாறு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே வைகோ இவ்வாறு தெரிவித்தார். இன்ப மின்னல் இதய வானில் பாயும் செய்தியை எண்ணும் பொழுதில் கவலை மறைந்து மகிழ்ச்சி பூக்கின்றது. தமிழ் இனம் குறித்த எதிர்கால நம்பிக்கை இமயமாய் நிமிர்கிறது. தமிழ் ஈழத்தில் விடுதலைக் கொடி பறக்கும் நாள் தொலைவில் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பலாலியில் முகாமிட்டு உள்ள இலங்கை விமானப்படையின் விமா…

  17. ஏப்ரல் 28, 2007 சென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது. சட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர…

  18. இங்கிலாந்தில் லேசான பூகம்பம் 28 ஏப்ரல் 2007 16:24 IST Blog this story இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் இன்று காலை லேசான பூகம்பம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த போதிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. லண்டனுக்கு 60 மைல் தொலைவில் உள்ள ஆஷ்போர்ட் என்ற இடத்தில் மையம் கொண்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோளில் 4.7 என பதிவானதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பம் காரணமாக பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சுமார் 10 முதல் 15 வினாடிகள் வரை இந்த பூகம்பம் உணரப்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் இந்த அளவிலான பூகம்பங்கள் ஆயிரக்கணக்கில் ஏற்படும் போதிலும் பிரிட்டன…

  19. [28 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஈராக் யுத்தத்திற்கான செலவீனங்களுடன் படை விலக்கலை தொடர்புபடுத்தும் சட்ட மூலமொன்றிற்கு அங்கீகாரம் வழங்கியதன் மூலம் அமெரிக்க காங்கிரஸ் ஜனாதிபதி புஷ்ஷிற்கு பாரிய சவாலொன்றை விடுத்துள்ளது. செனட் குறிப்பிட்ட சட்ட மூலத்திற்கு 51௪6 என்ற அளவில் ஆதரவாக வாக்களித்துள்ளது.ஜனவரிக்குப

    • 0 replies
    • 741 views
  20. ஊர் ஞாபகம்:வயிற்றைக் கிழித்து தற்கொலைக்கு முயன்ற இந்தியர் ஏப்ரல் 27, 2007 துபாய்: ஊர் திரும்ப வேலை பார்த்த நிறுவனத்தினர் மறுத்ததால், மனம் உடைந்த இந்தியர் ஷார்ஜாவில் வயிற்றை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இந்தியாவைச் சேர்ந்த குமார்(20-எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிவிக்கப்படவில்லை)என்பவர் ஷார்ஜாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். திடீரென ஊரை விட்டுப் பிரிந்ததால் அவருக்கு ஊர் ஞாபகம் வந்து வாட்டியது. இதனால் வேலையை விட்டு விட்டு மீண்டும் தாயகம் திரும்ப முடிவு செய்த குமார், தன்னை வேலைக்குச் சேர்த்து விட்ட ஸ்பான்சரை அணுகி கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த ஸ்பான்சர் வேலைக்கான பெர்மிட், குடியிருப்பதற்கான பெர…

  21. குமரி மீனவர்களை சுட்டது கடல் புலிகள்: புலிகள் பிடியில் 12 மீனவர்கள்-டிஜிபி தகவல் ஏப்ரல் 28, 2007 சென்னை: கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி ஐந்து மீனவர்களை சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போயுள்ள 12 குமரி மாவட்ட மீனவர்களும், விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் தமிழக டிஜிபி முகர்ஜி பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். ராமேஸ்வரம் மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். …

    • 7 replies
    • 2k views
  22. தினத்தந்தியில் ஒரு செய்தி வந்துள்ளது. அதன் உண்மைத்தன்மை தெரியாத படியால் இணைக்கவில்லை

  23. குடிகார கணவரை அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் கொன்ற மனைவி! குடித்து விட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை, தனது அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த பெண்ணையும், அவரது அக்காவையும் போலீஸார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவாராம். இதனால் மனைவி ஆதிலட்சுமி அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சீனிவாசன், கிண்டியில் வசித்து வந்தார். அதன் பின்னர் மயிலாப்பூருக்கு மாறினார். அங்கு போன பின்னர் தனது …

    • 24 replies
    • 7.4k views
  24. சென்னை துறைமுகத்திற்கு பலத்த பாதுகாப்பு சென்னை - ஏப்ரல் 27, 2007 : லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், சென்னை துறைமுகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியத் துறைமுகம் ஒன்றை லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் தாக்கி அழிக்கத் திட்டமிட்டுள்ளாகவும், இதற்காக கராச்சியில் பயிற்சி பெற்ற தற்கொலைப்படை ஒன்று ஊடுறுவியுள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதையடுத்து சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்…

  25. இலங்கைக்கு ஆயுதம் கடத்தல்: பாதுகாப்பு சட்டத்தில் கைதான 3 பேர் விடுதலை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக கடந்த ஜனவரி மாதம் தினகரன், விஜயகுமார், மொய்தீன்யாகு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் சிவகங்கை கலெக்டர் உத்தர வின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பு கூறியது. கியூ பிராஞ்ச் போலீசாரின் சிபாரிசை அப்படியே ஏற்று கலெக்டர் செயல்பட்டு இருக்கிறார். தேசிய பாது காப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை 7 நாட்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.