உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26594 topics in this forum
-
சென்னை: திருமணம் தங்களைப் பிரித்து விடுமே என வேதனைப்பட்ட சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அக்காவும், தங்கையும் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். ராயபுரத்தைச் சேர்ந்த கேவசராம் என்பவ>ன் மகள் குமரேஸ்வரி. 22 வயதாகும் இவர் பட்டப் படிப்பு முடித்தவர். அதே பகுதியில் வசிப்பவர் சந்திரமோகன். இவரது மகள் பெயர் மீனு. இவருக்கு வயது 20. இருவரும் ஒன்று விட்ட சகோதரிகள். சிறு வயது முதலே இருவரும் பாசத்துடன் பழகி வந்தனர். ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டார்களாம். இந் நிலையில் குமரேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கின. இதை அறிந்த அக்காவும், தங்கையும் கவலை அடைந்தனர். திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்று விட்டால், மீனுவைப் பிரிய வேண்டுமே என குமரேஸ்வ> …
-
- 3 replies
- 1.9k views
-
-
போலி கிரெடிட் கார்டுகள் ரூ.30 லட்சம் மோசடி இலங்கை வாலிபர் கைது சென்னை, ஜன. 20: போலி கிரெடிட் கார்டுகள் மூலம் 30 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த இலங்கையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிட மிருந்து 28 போலி கிரெ டிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி வாங்கப்பட்ட 2 சொகுசு கார் களை யும் கைப் பற்றி னார்கள். கைதான இளங்கோ. இலங்கையைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 30). லண்டனில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சுற்றுலா விசா பெற்று அவர் சென்னைக்கு வந்துள்ளார். ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். போரூர் எஸ்ஆர்எம்சி மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஒரு ஏடிஎம் தானியங்கி பணம் வழங்கும் நிலையத்திற…
-
- 10 replies
- 2.1k views
-
-
மும்பையில் வெடிகுண்டுகளுடன் 4 பேர் பிடிபட்டனர்: ரெயில் நிலையங்களை தகர்க்க வந்தவர்களா? மும்பை, ஜன. 20- மும்பையில் கடந்த ஆண்டு புறநகர் ரெயில்களில் தொடர் குண்டு வெடித்தது. இந்த வெடி குண்டு தாக்குத லில் 200 பேர் வரை பலியானார் கள். பாகிஸ்தான் ஆதரவு லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள்தான் இந்த நாசவேலைக்கு காரணம் என்று விசாரணையில் தெரிய வந்தது. இந்த கும்பலை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீண்டும் சதிகாரர்கள் எந்த நேரத்திலும் மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் மும்பையில் இன்று வெடிகுண்டுகளுடன் 4 பேர் போலீசாரிடம் சிக் கினார்கள். வடமேற்கு மும்பையில் அந்தேரி பகுதியில் பஸ…
-
- 0 replies
- 860 views
-
-
கிரையோஜெனிக் இயந்திர சோதனை வரும் ஜனவரி 19 நாள்,2007ல் , திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூர் அருகில் அமைந்துள்ள மகேந்திரமலையில் அமைந்துள்ள திரவ எரிபொருள் செலுத்துவிசை மையத்தில் கிரையோஜெனிக் இயந்திர பரிசோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் , இந்தியா 2000 கிலோ நிறையுள்ள செயற்கைகோள்களை 36000 கிலோ மீட்டா தூரம் ஏவ, மற்ற நாடுகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த சோதனையில்,கிரையோஜெனிக் இயந்திரம் 720 செகண்ட் வரை இயங்க, பற்ற வைக்கப்படும்.மேலும் 12 டன் செலுத்துவிசையும்(propellants),7.5 டன் தள்ளு விசையும்(thrust) கூடிய பறக்கும் சக்தியும் பரிசோதிக்கப்படும்.இம்முறைய
-
- 4 replies
- 1.7k views
-
-
துபாய் கட்டடத்தில் தீ நான்கு இந்தியர்கள் பலி துபாய்:துபாயில் புதிதாக கட்டப்பட்டு வரும் 37 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு இந்தியர்கள் பலியாயினர்.துபாயில் 37 மாடிக் கட்டடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்திய தொழிலாளர்கள் 350 பேர் கட்டடத்தை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டடத்தின் மேலிருந்து நான்கு மற்றும் ஐந்தாவது மாடிகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தீயிலிருந்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக மாடியிலிருந்து குதித்த இரண்டு பேர் உட்பட நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர். மற்றொருவர் மாடியிலிருந்து இறங்க கிரேனை பயன்படுத்தியபோது, அதிலிருந்த ஒ…
-
- 1 reply
- 981 views
-
-
மகள் திருமணத்துக்கு கிட்னி விற்றோம்: பெண்கள் பேட்டி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மீனவ பெண்களில் பலர் தாங்கள் கிட்னி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு கணவன்மார்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்கள். இங்குள்ள மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழில் தவிர கூலி வேலை செய்தும் சம்பாதிக்கிறார்கள். அவர்களது வருமானம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லை. பெரும்பாலானவர்களுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அவர்கள் சம்பாதிக்கும் சிறிய அளவு பணம் கூட வீடு வந்து சேராது என்று பெண்கள் குமுறலுடன் கூறினார்கள். சுனாமிக்கு முன்பும் காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் சிலர் கிட்னி விற்று ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என சம்பாதித்து இருக்கிறார்கள். அவர்கள் கையில் மொத்தமாக பணத…
-
- 4 replies
- 4.9k views
-
-
திருவாளர்கள் வக்லவ்ஹவெல், டெஸ்மன்ட் டூடு ஆகியோர் கொண்ட அமைப்பு 2005 ம் ஆண்டு அளித்த "பர்மா அறிக்கை" யின் அடிப்படையில், மியான்மர் ராணுவ ஜெனரல் பியன்மனா(Piynmana)வின் ஆட்சிக்கு எதிராக, படைகளை பயன்படுத்த, அமெரிக்கா, ஐ.நா சபையில் கொண்டு வந்த வரைவு தீர்மானம், சைனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள்,தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க கருதியதால், அமெரிக்கா அவ்வரைவினை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனரல் பியன்மனாவின் ஆட்சிக்கு எதிராக படைகளை பயன்படுத்தினால் அது அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாகிவிடும் என சைனாவின் ஐநா சபைக்கான தூதர் தெரிவித்துள்ளார். கடைசியில் ஐநாவின் பாதுகாப்பு சபை, நாடுகளின் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான குழுவிடம்(State Peace and Develo…
-
- 0 replies
- 764 views
-
-
ஒரு கட்சியிலிருந்து மூன்றில் ஒரு பங்கு உறுப்பினாகள் விலகி னால் அது அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக கருதப்பட்டு தனியாக அடையாளம் காணப்பட்டு புதியாக கட்சியாக அங்கரிக்கப்படும் ( அல்லது தாய்கட்சியாகவோ பொதுகுழு செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவை பொருத்து முடிவு எடுக்கப்படும்) . மூன்றில் ஒரு பங்கு உறுப்பினாகளுக்கு குறைவாக விலகினால் அது கட்சி மாற்றமாக கருதப்பட்டு பதவி இழக்க நேரிடும் . இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து 13 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகினார்கள். அவர்களை கட்சி மாறல் தடை சட்டத்தின்படி பதவி இழப்பு செய்ய வேண்டுமாறு பகுஜன் சமாஜ் கட்சி சபாநாயகரை கேட்டுகொண்டது.சபாநாயகர் எந்த நடவடிக்கையும் உடனடியாக எடுக்காது அப்பட…
-
- 0 replies
- 686 views
-
-
உலக வல்லரசின் அடுத்த ஜனாதிபதி யார்? வார இறுதியில் ஹில்லரி கிளின்டனின் தேர்தல் அறிவிப்பு வீரகேசரி இணையத்தளம் ஈராக்கிற்கு மேலதிக துருப்புக்களை அனுப்பும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஹில்லரி கிளின்டன்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் போட்டியிடும் தனது முடிவை இவ்வார இறுதியில் அறிவிப்பாரென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரனின் பாரியாரான ஹில்லரி கிளின்டன் தற்போது செனட்சபை உறுப்பினராக உள்ளார். தற்போதைய ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலம் அடுத்த வருடத்தில் முடிவுக்கு வருவதையடுத்து அடுத்தவருடம் அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் குடியரசுக்கட்சியும், எதிர்க்கட்…
-
- 1 reply
- 833 views
-
-
குடும்ப சண்டைகப்பலிலிருந்து குதித்து தற்கொலை ஜனவரி 18, 2007 சென்னை: கப்பலில் பயணித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கணவர் நடுக் கடலில் கப்பலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பீமய்யா. அந்தமானில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவி, மகள், மகனுடன் கப்பல் மூலம் அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். கப்பல் நடுக் கடலில் வந்து கொண்டிருந்தபோது 7வது மாடியில் பயணித்துக் கொண்டிருந்த பீமய்யாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பீமய்யா திடீரென கப்பலிலிருந்து கடலில் குதித்தார். அப்போது கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்தது. பீமய்யா கட…
-
- 0 replies
- 1.1k views
-
-
டோக்கியோ: பொருளாதாரரீதியில் தடுமாறி வரும் அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் விரும்பினால், அந்த நிறுவனத்துடன் வர்த்தக ரீதியாக இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக ஜப்பானின் டொயட்டோ நிறுவன தலைவர் கடாசுகி வட்டனாபே கூறியுள்ளார். டொயட்டோ நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தையும் கையகப்படுத்தவுள்ளது. நிக்கி பிசினஸ் இதழுக்கு வட்டனாபே அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இரு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அது மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இருப்பினும் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஃபோர்டுதான். கூட்டுச் செயல்பாடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தை ஏதும…
-
- 3 replies
- 1.4k views
-
-
சென்னை: திருட வந்த இடத்தில் ஒரு பொருளும் கிடைக்காததால் கடுப்பான திருடன், வீட்டின் நடுவே மலம் கழித்து தனது கோபத்தை காட்டிவிட்டுப் போனான். சென்னை அருகே மூவரசம்பட்டு செந்தூரன் காலனியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் படாளத்தில் தோல் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது அண்ணன் பரமேஸ்வரன் சௌதியிலிருந்து சென்னைக்கு வந்தார். ரவிச்சந்திரன் வீட்டு மாடியில் தங்கியிருந்தார். பின்னர் சௌதி திரும்பிச் சென்றார். அதன் பின்னர் மாடி பகுதிக்கு ரவிச்சந்திரன் குடும்பத்தினர் யாரும் போகவில்லை. இந்த நிலையில் 2 நாட்களுக்கு மாடிப் பக்கம் ரவிச்சந்திரன் போனார். அப்போது அறையின் கதவு உடைந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டி…
-
- 0 replies
- 959 views
-
-
அரித்திராவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நளினியை விடுதலை செய்ய வேண்டும் - கவிஞர் தாமரை. எழுதியவர் ஆர்த்தி Wednesday, 17 January 2007 ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை நிறைவேற்றப்பட்ட நளினியை விடுதலை செய்யக் கோரி மனிதநேயத் தமிழ்ப் படைப்பாளிகள் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளார்கள். இக்கையெழுத்து இயக்கத்தின் அமைப்பாளர் கவிஞர் தாமரை அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். முழுமையான செய்தியை வாசிக்க.... http://tamilnews24.com//index.php?option=c...27&Itemid=2
-
- 1 reply
- 922 views
-
-
ஈராக்கில் 70 மாணவிகள் உடல் சிதறி சாவு: பல்கலைகழகத்தில் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் பாக்தாத்,ஜன.17- ஈராக்கில் முன்னாள் அதிபர் சதாம் உசேன் 148 ஷியா பிரிவினரை கொன்ற வழக்கில் கடந்த 30- ந்தேதி தூக்கிலிடப்பட்டார். இதை தொடர்ந்து சதாம்உசேன் ஆதரவு சன்னி தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் சதாம் உசேனின் தம்பி பர்சான் இப்ராகிம், முன்னாள் நீதிபதி அவதாத் அமீது ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் தூக்கில் போடப்பட்டனர். இதில் தூக்கு கயிறு இறுகி சதாம் உசேனின் தம்பி தலை துண்டாகிவிட்டது. ஏற்கனவே ஆத்திரத்தில் இருக்கும் தீவிரவாதிகளிடம் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீவிரவாதிகளை ஒடுக்க கூடுதலாக 20 ஆயிரம் ராணுவத்தினரை அனுப்ப போவதாக அமெரி…
-
- 3 replies
- 1.5k views
-
-
பாஸ்டன்: பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கிறார் என்று கூறி அமெரிக்க விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டவருக்கு 4 லட்சம் டாலர்கள் நிவாரணத் தொகையாக வழங்க விமான நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்தவர் ஜான் செர்குய்ரா. இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இவர் பாஸ்டனிலிருந்து புளோரிடாவின் போர்ட் லாடரேல் நகருக்குச் செல்ல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிப்பதற்காக வந்தார். ஆனால் இவரும், மேலும் இரண்டு இஸ்ரேலியர்களையும் தீவிரவாதிகளாக இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் விமானத்திலிருந்து இறக்கி விட்டனர். இரு இஸ்ரேலியர்களும் ஆங்கில மொழியில் இல்லாமல் வேறு மொழியில் மிக சத்தமாக பேசியபடி இருந்ததால் அவர்கள் …
-
- 0 replies
- 904 views
-
-
மொஸ்கோ: ஈரானுக்கு அதி நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது. மேலும் ஈரானின் தற்காப்புக்காக கூடுதலாக ஆயுதங்கள் வழங்கவும் தயாராக இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் இவானோவ் தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந் நாட்டின் மீது ராணுவ தொழில்நுட்பத் தடைகளை ஐ.நா. மூலம் பிறப்பித்தது அமெரிக்கா. இருப்பினும் அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான உதவிகளைப் பெற மட்டுமே ஈரானுக்கு இந்தத் தடை இடைஞ்சலாக உள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்களைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கியுள்ளது ரஷ்ய…
-
- 0 replies
- 945 views
-
-
அமெரிக்காவில் பெரும்பனிப்பொழிவு, கடுங்குளிர் இயல்புவாழ்க்கை முற்றாக செயலிழப்பு;45 பேர் பலி வீரகேசரி நாளேடு அமெரிக்காவின் மத்திய பகுதியில் கடும்பனிமழை பெய்து வருகிறது. வீதியெங்கும் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. மேலும் அங்கு இடை க்கிடையே பனிப்புயலும் வீசிவருகின்றது, இம்மோசமான காலநிலைகாரணமாக அங்கு இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான காலநிலையில் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ள ஒக்லாகொமா மாநிலத்தில் ஜனாதிபதி புஷ் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். கடும்பனிப்பொழிவு காரணமாக இடம் பெற்ற வீதி விபத்துக்களால் கடந்த நான்கு நாட்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டி க்கப் …
-
- 4 replies
- 1.4k views
-
-
சென்னை: பாஜகஜெயலலிதாவிஜய்காந்த் மூவரும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என 'துக்ளக்' சோ கூறினார். துக்ளக் இதழின் 37வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பாஜக தலைவர் அத்வானி, அவரது மகள் பிரதீபா, பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினி காந்த், நடிகர் நாகேஷ், அதிமுக சார்பில் மைத்ரேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகளை அளித்தனர். அதை முழுமையாக செய்ய முடியாமல் பார்ட் பார்ட்டாக செய்கிறார்கள். 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்ன கருணாநிதி, இப்போது உள்ளங் கை அளவேனும் தருவேன் என்கிறார். இலவச திட்டங்களால் பிக…
-
- 1 reply
- 969 views
-
-
நொய்டா கொலைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அருகில் உள்ள நித்ரி எனும் ஊரில் 31 செக்டரில் அமைந்துள்ள ஒரு பணக்கார விட்டில் அவ்வூரில் காணாமல் போன குழந்தைகளின் எலும்புகள் கண்டு எடுக்கப்பட்டன. இது தொடர்பாக மொய்ந்தர்சிங் எனும் வீட்டு சொந்தக்காரனும் அவனது வீட்டு வேலையாள் சுரேந்தர் சிங் என்பவனும் கைது செய்யப்பட்டு போலிஸ் விசாரணையில் உள்ளனர். இந்நிகழ்வு இந்தியாவில் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் குற்றத்தை ஒத்துக்கொண்டு உள்ளான்ர். கற்பழித்து கொலை செய்தாக ஒத்துக் கொண்டு உள்ளானர் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிகழ்வில் காவல் துறையினர், ஏழைக்குழந்தைகள் காணாமல்…
-
- 5 replies
- 3.8k views
-
-
இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரர் பர்ஸான் அல் திக்ரிதி, முன்னாள் நீதிபதி அவாத் அல் பாந்தர் ஆகியோர் நேற்று அதிகாலை பாக்தாத்தில் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிட்டபோது பர்ஸானின் தலை துண்டித்து தனியாக விழுந்தது. துஜைல் நகரில் 143 ஷியா முஸ்லீம்களைக் கொன்ற வழக்கில் சதாம் உசேன், பர்ஸான், பாந்தர் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் சதாம் டிசம்பர் 30ம் தேதி தூக்கில் போடப்பட்டார். இந்த நிலையில், சதாமுடன் சேர்த்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பர்ஸான், பாந்தர் ஆகியோருக்கு எப்போது தண்டனை நிறைவேற்றப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இதுகுறித்து இராக் அரச…
-
- 0 replies
- 931 views
-
-
உலகின் முதல் 'டெஸ்ட் ட்யூப் பேபிக்கு' பிரசவம்! ஜனவரி 14, 2007 லண்டன்: உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை என்ற பெருமை கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த லூயிஸ் பிரவுனுக்கு அழகான ஆண் குழந்தை இயற்கையான முறையில் பிறந்துள்ளது. பிரவுனின் தாயார் லெஸ்லிக்கு திருமணமான பிறகு கர்ப்பம் தரிக்கவில்லை. 9 வருடங்களாக குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் அவர். அப்போதுதான் இங்கிலாந்தில் சோதனைக் குழாய் மூலம் குழந்தையை உருவாக்கும் முறை சோதனைரீதியாக வெற்றியை நெருங்கிக்ö காண்டிருந்தது. இதையடுத்து சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்க விருப்பம் தெரிவித்தார் லெஸ்லி. ஓல்தாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் லெஸ்லிக்கு சோதனைக் குழாய் மூலம் கரு உட் செலுத்தப்பட்டது. டாக்டர்கள் ராபர்ட்…
-
- 0 replies
- 872 views
-
-
தொடர்ந்து 126 நாட்கள் சூரிய நமஸ்காரம் கடலுõரில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி கடலுõர்:கடலுõரில் தொடர்ந்து 126 நாட்கள் சூரிய நமஸ்காரத்தை கின்னஸ் சாதனையாளர் ஜெயராமன் நேற்று துவக்கினார். கடலுõர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(79). இவர் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். ஜெயராமன் உலக அமைதிக்காக வட சென்னையில் தொடர்ந்து 200 மணிநேரமும், கோல்டன் பீச்சில் 360 மணிநேரமும் பேசி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் உலக அமைதி வேண்டி சிதம்பரத்திலிருந்து தரையில் உருண்டபடி (அங்கபிரதட்சணம்) சென்னை வரை 250 கி.மீ., துõரம் சென்றும், மெரினா கடற்கறையில் ஆயிரத்து 8 மணிநேரமும், சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் 508 மணி நேரமும் தொடர்ந்து பேசி சாத…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈரான் உடனான ஈராக்கின் குரிதிஸ்தான் வட கிழக்கு எல்லைகளில் ஈராக் பகுதிகளில் இயங்கிவரும் ஈரானிய கமியூனிஸ்ற் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பியுள்ளது. இவர்கள் உலகப் போர் 1 இன் பின்னர் கிட்டத்தட்ட 3 அல்லது 4 ஆகா பங்கு போடப்பட்ட குரிதிஸ்தான் தேசத்தின் ஈரானிய ஆக்கிரமிப்பிலுள்ள பகுதிகளின் விடுதலைக்காக போராடுகிறார்கள். ஈரானிய அரசை கவிழ்பதற்கா இவர்களினை பலப்படுத்தி உதவி வழங்குவதில் அமெரிக்கா தீவிரம் காட்டுகிறது. ஈராக்கில் இயங்கிவரும் கிளர்ச்சியாளர்கள் எல்லைகளை கடந்து சென்று ஈரானுக்குள் கொரிலாத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். புலம்பெயர்ந்துள்ள ஈரானிய அதிருப்த்தியாளர்களையும் ஒன்று திரட்டுவதில் அமெரிக்கா மும்மரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் இன்றய அரசு …
-
- 3 replies
- 1.6k views
-
-
கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றலாம்.. எழுதியவர் துரைரத்தினம் Monday, 15 January 2007 - தொல்.திருமாவளவன் சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு செவ்வி - "கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றி ஈழத்தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்த முடியும்''... தொடர்ந்து படிக்க......................... http://tamilnews24.com//index.php?option=c...06&Itemid=2
-
- 0 replies
- 876 views
-
-
சோமாலியாவில் இஸ்லாமிய கடும்போக்குப் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது அமெரிக்க ஏசி 130 ரக விமானம் கடுமையான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டது. கடந்த சில வாரங்களாக சோமாலியப்படைகளும் எதியோப்பியப் படைகளும் இணைந்து சோமாலியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்திப் பல பிரதேசங்களை மீட்டும் இருந்தன. இன்னும் அவற்றின் தாக்குதல் தொடரும் தறுவாரில் அமெரிக்க இராணுவத் தலையீடு திடீர் என்று முளைத்திருக்கிறது. இந்தத் தாக்குதலில் 27 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிறுவர்களும் இதில் அடங்குவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் அல் கொய்டா தீவிரவாதிகளுக்கும் தொட…
-
- 3 replies
- 1.2k views
-