Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. குமுதம் தேர்தல் கணிப்பு - இரண்டாவது ரவுண்ட் - Thursday, March 30, 2006 நாகை மாவட்டம் மெதுவாக சூரியன் கீழ்வானில் கிளம்பிக் கொண்டிருக்க, மெலிந்த விவசாயிகள் முண்டாசை இறுக்கியபடி டீக் கடைகளுக்கு நடந்து கொண்டிருந்தார்கள். அது சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட சிறிய ஊரான கொள்ளிடம். மழையின்போது ஏக்கருக்கு மூவாயிரம் வீதம் நிவாரணம் கிடைத்தது இந்த மக்களுக்குப் பெரிய திருப்தியைத் தந்துள்ளது. அதேசமயம் கிராம நிர்வாக அதிகாரியும், உள்ளூர்ப் பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவரும் அதை முழுமையாக சென்றடையவிடாமல் சொந்த ஆதாயம் தேடப் பார்த்ததையும் சிலர் வருத்தத்துடன் சொன்னார்கள். தைக்கால் கிராமத்தில் பாய் நெசவு செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் ஓட்டளித்தார்கள். இங்கே இஸ்லாமியப் பெண…

    • 0 replies
    • 1.1k views
  2. பிரான்ஸ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இனவெறி கொண்டவர்கள் என்பது கடந்தாண்டு நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள் ளது. பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைக் கழக அமைப்பின் தேசிய ஆலோசனைக் குழுவினர் (சி.எஸ்.ஏ.,) கடந்தாண்டு கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டனர். ஆயிரத்து 11 பேரை நேருக்கு நேர் சந்தித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தினர். இதில், 33 சதவீத பிரான்ஸ் மக்கள் இனவெறியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது கடந்தாண்டை விட இனவெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையே காட்டுகிறது என இந்த அமைப்பினர் தெரிவித்தனர். சி.எஸ்.ஏ., அமைப்பினர் கருத்துக்கணிப்பின் போது பிரான்ஸ் நாட்டு மக்களிடம் பின்வருமாறு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. "உங்களால் சொல்ல முடியுமா? உங்களுக்கு............'…

  3. யப்பானில் புத்தமதம் பரப்பிய தமிழர் http://thatstamil.oneindia.in/specials/art...poongulali.html

    • 0 replies
    • 996 views
  4. கரூரில் 3 கொலை செய்த கல்லுõரி மாணவி நவீனா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் நள்ளிரவில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றத்திற்காக, தனது தாயை கொலை செய்து விட்டு, கொலையை நேரில் பார்த்த குற்றத்திற்காக தனது 2 சகோதரிகளையும் கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருந்த நவீனா என்ற கல்லுõரி மாணவியை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். நவீனாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். Thanks:dinamalar....

    • 16 replies
    • 2.9k views
  5. காங்கிரஸ் கோஷ்டி பூசல்கள்.. - Sunday, March 26, 2006 * இரண்டு தினங்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்பு கட்சித்தலைவர்களை வாழ்த்தி விளம்பர கட்-அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன அவை நள்ளிரவு திடீர் என்று அகற்றப்பட்டன. * இரண்டு நாள் முன் வீரப்பமொய்லி கொடும்பாவி எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. செல்லக்குமாரை காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்து தமிழக காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த காங்கிரசார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உருவபொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். காங்கிரசில் அதிருப்தி தி.மு.க.…

  6. உளவுத்துறை எடுத்த சர்வேயில் அதிமுக படுதோல்வி அடையும் என ரிசல்ட் வந்ததை கண்டு எரிச்சல் அடைந்த ஜெ. தனியார் நிறுவனம் மூலம் ஒரு சர்வே எடுத்திருக்கிறார்.... இந்த சர்வே தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதன் படி இந்தியாவின் நெ. 2 சர்வே நிறுவனத்தால் செய்யப்பட்ட சர்வே.... தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலுமே திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதாக வந்த சர்வே ரிசல்ட்டால் ஜெ. வெறுத்துப் போயிருக்கிறார்...... உளவுத்துறை கொடுத்த ரிசல்ட்டும், இந்த தனியார் நிறுவனம் கொடுத்த ரிசல்ட்டும் துல்லியமாக இருக்கிறதாம்.....

    • 44 replies
    • 6.4k views
  7. அறிவாலயத்தில் ஜெ.வுக்கு 'பாராட்டு'! - Saturday, March 25, 2006 இன்று தினமணியில் வந்த செய்தி. அதிமுக பொதுச் செயலாளரைப் பாராட்டிப் பேசுகின்றனர் திமுகவினர். அதுவும் அண்ணா அறிவாலய வளாகத்துக்குள்ளேயே இது நடக்கிறது. இது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் அறிவாலயத்தில் நடந்து வருகிறது. நேர்காணலுக்கு வந்திருந்த கட்சிக்காரர்கள் தான் ஜெயலலிதாவை பாராட்டி வெளியில் பேசினர். எதற்காகப் பாராட்டு? ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ வர முடியும் என்ற நிலை அதிமுகவில் இல்லை. தேர்தல் பிரசாரத்துக்கு சுவரில் வெள்ளையடித்துக் கொண்டிருந்தவரை அதே தொகுதியின் எம்.எ…

    • 0 replies
    • 796 views
  8. வேலூர் மாவட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், தனது கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராததால் அப்செட் ஆகியுள்ளார். வழக்கமாக விஜய்காந்த் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூடி வந்த நிலையில் சில நாட்களாகவே அதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. பாமக பெல்ட் எனப்படும் வேலூர் மாவட்டத்தில் 3 நாள் பிரசாரத்தை விஜயகாந்த் புதன்கிழமை காலை தொடங்கினார். முதலில் ஓச்சேரி என்ற இடத்தில் அவர் பேசினார். ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் திரண்டிருந்தனர். பொது மக்களில் யாரையும் காணவில்லை. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்ட அவர் மிக வேகமாக பேசி முடித்து விட்டு அங்கி…

    • 45 replies
    • 5k views
  9. துரியோதனன் கதிதான் ஜெ.க்கு ஏற்படும்": வைகோ ஆவேசம் நாகப்பட்டினம்: மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத்தின் வீடு இடிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார். மயிலாடுதுறையில் கடந்த 1984ல் ஸ்ரீவில்லிபுத்துõர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வைகோ நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் வரும் 28ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதி மீனாட்சி சுந்தரம் வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில்…

  10. ஜூலை 12, 2002 தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு புலிகள் உதவி: ஜெயலலிதா சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து வரும் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். வைகோ மீதான பொடா வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் இயங்கி வரும் தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கு விடுதலைப் புலிகள் உதவி செய்து வருவதாகவும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, வைகோவைக் கைது செய்ததில் அரசியல் காரணங்கள் ஏதும் இலலை. கொடூரமான இயக்கமான விடுதலைப் புலிகளை வைகோ ஆதரித்ததால் தான் கைது செய்யப்பட்டார். எனக்கோ அல்லது அதிமுகவுக்கோ மதிமுக ஒரு அரசியல் எ…

  11. வைகோவுக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் தர வேண்டும்: மதிமுக சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைதைக் கண்டித்து திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவார்கள் என்று மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் நம்பிக்கை தெரிவித்தார். வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து மதிமுக சார்பில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்பட்டது. கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் துவங்கிய இந்தப் பேரணி மாலையில் பூந்தமல்லியில் முடிவடைகிறது. அங்கு கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில், எல். கணேசன், மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள். முன்னதாக பேரணியைத் துவக்கி வைத்த பிறகு நிருபர்களிடம் கணேசன் பேசுகைய…

  12. அதிர்ச்சி அடைய வைக்கும் செய்தி !அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- எதிரிகளும் இல்லை என்று சொல்வதை கேட்டிருக்கிறோம்- சந்தர்ப்பவாத அரசியல், அரசியல் வியாபாரம் எல்லாமே நாம் அறிந்த ஒன்றுதான் - ஆனால் வைகோ, அ.தி.மு.கவிடம் சேர்ந்துள்ள கூட்டு இவை எல்லாவற்றையும் தாண்டியது- அரசியல் விபச்சாரம் என்று சொல்வது கூடச் சரியாகாது- இதைவிட அதிகக் காரமான வார்த்தை ஒன்று தமிழில் இருக்கிறதா? அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும்போதே, எப்போது விமானத்தை விட்டு இறங்குவார், என்று காத்திருந்து- பாய்ந்து கைது செய்த அ.தி. மு.க - அப்போது கழுத்து நரம்புகள் புடைக்க ·பாசிச ஜெயலலிதா ஆட்சியை அகற்றுவோம் என்று குமுறிய வைகோ.- ஓரிடத்திலிருந்து மற்றொரு சிறை என்று மாற்றி மாற்றி வை.கோவை அலைக்கழித்த ஜெயலலிதா …

  13. தாய்லாந்தில் இந்துக் கோவில் சிலையை சேதப்படுத்தியவர் அடித்துக் கொலை பாங்காக், மார்ச்.22- தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இந்து மதக் கோவில் ஒன்று உள்ளது. இறவான் கோவில் என்ற இந்த வழிபாட்டுத் தலத்தில் 50 ஆண்டு பழமையான பிரம்மதேவனின் சிலை உள்ளது. இந்தக் கோவிலுக்கு பல்வேறு மதத்தினரும் சென்று வழிபடுவது வழக்கம். இந்தக் கோவிலுக்குள் நள்ளிரவு ஒரு மணிக்கு 27 வயது தனகோர்ன் பக்டீபோல் என்ற முஸ்லிம் வாலிபர் நுழைந்தார். அவர் தன் கையில் வைத்து இருந்த சுத்தியலால், சிலையை உடைத்து சேதப்படுத்தினார். இதைப் பார்த்த சாலையோர வியாபாரி ஒருவர் சத்தம் போட்டு அருகில் தூங்கியவர்களை எழுப்பினார். அவர்கள் அந்த வாலிபரை அடித்துக் கொன்றனர். இது தொடர்பாக 2 சுத்திகரிப்பு தொழில…

    • 0 replies
    • 800 views
  14. குமுதம் தேர்தல் கணிப்பு - முதல் ரவுண்ட் - Wednesday, March 22, 2006 கலைஞரை டென்ஷன் படுத்திய குமுதம் தேர்தல் கணிப்பு இது சட்டமன்றத் தேர்தல் நேரம். முதல் கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சாம்பிளுக்காக சில முக்கியமான தொகுதிகளில் குமுதம் டீம் சர்வே நடத்தியது. மாதிரி வாக்குச் சீட்டில் வாக்காளர்கள் முன் நாம் வைத்த கேள்வி, யாருக்கு உங்கள் ஓட்டு? அ.தி.மு.க. கூட்டணி தி.மு.க. கூட்டணி விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி மற்றவர்கள் இப்படி ஒரே ஒரு கேள்விதான். பதிலைக் கட்டத்துக்குள் சிம்பிளாக டிக் அடித்தால் போதும். கடந்த பாராளுமன்றத் தேர்தல் சர்வேயில், தி.மு.க. கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்களித்த மக்கள், இந்தமுறை சர்வேயின் முதல் ரவுண்டில் அ.தி.ம…

    • 0 replies
    • 1.1k views
  15. தொலைக்காட்சிப் பேட்டியில் வைகோவின் அண்டப்புளுகுகள்! ``தி.மு.க.வினர் வாஜ்பாய் மந்திரி சபையில் இருந்துகொண்டே, கடைசி நிமிடம் வரைக்கும் அதை அனுபவித்துக்கொண்டே காங்கிரசுடன் உறவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்" என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் வைகோ புளுகியிருக்கிறார். ``இரண்டரை மாதகாலமாக அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தோம்-இது திடீர் முடிவு அல்ல" என்று முன்பு ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார். இப்போது கல்கிக்கு அளித்துள்ள பேட்டியில் ``இரண்டரை மாத காலமாக அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக நான் கூறவில்லை. இரண்டரை மாத காலமாகவே எனது கட்சித் தொண்டர்கள்-அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்வது பற்றி என்னிடம் கூறி வந்தார்கள் என்றுதான் கூறினேன்"- எ…

  16. தனது தாயின் பேச்சை மீறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 'தாய் சொல்லைத் தட்டிய தனயன்' என்ற அவப்பெயரை சம்பாதித்துவிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்று 'தலைமறைவு' சென்னை மாகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். கடந்த பல மாதங்களாகவே தலைமறைவாக இருக்கும் கராத்தே தியாகராஜன் தற்போது இந்தியாவுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் அவர் பதுங்கியிருப்பதாக தெரிகிறது. இந் நிலையில் டெல்லியிலிருந்து கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நேரத்தில் அரசியல் அணி மாற்றம் என்பது சாதாரண விஷயம்தான். திமுக வாரிசு அரசியலில் ஈடுபடுகிறது, குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுகிறது என்று கூறும் வைகோ, தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் ஈடுபட்டி…

  17. நாஞ்சிலுக்கு சங்கர மட பக்தர்கள் எச்சரிக்கை! காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை விமர்சித்துப் பேசிய மதிமுக கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு சங்கர மட பேரவை என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேரவையின் பொதுச் செயலாளர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில், சங்கராச்சாரியாரையே தள்ளாட வைத்த சர்க்கார் இது என்று நாஞ்சில் சம்பத் பேசியிருக்கிறார். எந்தக் கூட்டணியில் நாம் இருக்கிறோம் என்று கடைசி வரை தள்ளாட்டத்துடனேயே இருந்து, தாங்களும் தள்ளாடி, எதிரிகளையும் தள்ளாட வைத்து சாதனை புரிந்தவர்கள் இவ்வாறு பேசுவதற்கு அருகதையற்றவர்கள். இவர்களின் தன்மானத் தலைவர் வைகோ, யாருக்கும் தெரியாமல் காஞ்சிப் பெரியவரை சந்தித்தது நல்ல நிலையிலா? அல்லது த…

  18. நல்லபாம்பை விழுங்கிய இன்னொரு நல்ல பாம்பு ஜ×னாகட், மார்ச்.21- குஜராத் மாநிலம் ஜ×னாகட் என்ற நகரத்தில் ஒரு மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு 8 கண்ணாடி அறைகளில் வித விதமான பாம்புகள் காட்சிக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு அறையில் 6 அடி நீள நல்ல பாம்பும், 7 அடி நீள நல்ல பாம்பும் ஒன்றாக வைக்கப்பட்டு இருந்தன. நேற்று திடீரென 7 அடி நீள நல்ல பாம்பு உடன் இருந்த 6 அடி நீள நல்ல பாம்பை அதன் தலையில் தாக்கியது. இதில் அந்த பாம்பு செத்தது. பின்னர் அந்த பாம்பை முதலில் தாக்கிய 7 அடி நீள நல்ல பாம்பு மெல்ல மெல்ல விழுங்கி முடித்தது. இந்த சம்பவம் சுற்றுச் சூழல் வல்லுனர்களிடையே ஆச்சரியத்தையும், திகிலையும் ஏற்படுத்தி உள்ளது. சில நிபுணர்கள் கூறுகையில் கடும் பசி காரணமாக அ…

    • 0 replies
    • 2.4k views
  19. தமிழீழத்தில் சிறிலங்கா தேர்தல் இரத்து: உத்தியோகபூர்வ அறிவிப்பு தமிழீழப் பகுதிகளில் சிறிலங்கா உள்ளுராட்சி சபை தேர்தல் இரத்துச் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பில் இதற்கான அறிவிப்பு இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் அறிக்கைகளுக்கு அமைய 45 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் 30 ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அம்பாறை மற்றும் திருகோணமலை பகுதியில் 31 சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 30ஆம் நாள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மொத்தம் 3…

    • 2 replies
    • 834 views
  20. நேபாளத்தில் புத்தரின் மறுபிறவியாக கருதப்பட்ட பையனைக் காணவில்லை கௌதம புத்தரின் மறுபிறவி என்று அவரைப் பின்பற்றுபவர்களால் நம்பப்படும் ஒரு பையனை தேடும் பணியை நேபாள பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். காட்டில் மரத்தின் விழுதுகளுக்கு இடையே கடந்த மே மாதம் முதல் தியானத்தில் அமர்ந்திருந்த ராம் பகதூர் பன்ஜன் என்னும் அந்த பையன், அங்கிருந்து காணாமல் போயுள்ளான். தியானம் செய்துகொண்டிருந்தபோது அவன் உணவோ அல்லது தண்ணீரோ அருந்தவில்லை என்று அவனது உதவியாளர்கள் கூறியுள்ளனர். அவனை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கனக்கானவர்கள் அங்கு வருகிறார்கள். அந்த பையன் கடத்தப்பட்டானா அல்லது தானாகவே எங்காவது சென்றுவிட்டானா என்பது குறித்து புலன்விசாரணை செய்து வருவதாக பாரா பிராந்தியத்தில் உள்ள …

  21. தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை அமைதி திரும்பும் வரை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம் பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழர்களை இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பும் வரையில் அங்கு அனுப்பகூடாது என்று கோரி லண்டனில் இன்று இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். லண்டன் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் நடந்த இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் கலந்து கொண்டனர். இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படும் வரை அங்கு தமிழர்களை பிரித்தானிய அரசு திரும்ப அனுப்ப கூடாது என்றும், திருப்பி அனுப்புவதற்காக கைது செய்யபடும் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் சொந்த நாட்டுக்கு திரு…

    • 0 replies
    • 713 views
  22. இலங்கை சமாதான தூதர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் எரிக் சொல்ஹைம் இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகளின் தலைமை அனுசரணையாளரான எரிக் சொல்ஹைம் தான் இப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் என்ற தனது புதிய பொறுப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இந்த முடிவு என்றும் ஆனாலும் இலங்கைய்ல் ஒரு நிரந்தர சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தான் தொடர்ந்தும் ஈடுபடுவேன் என்றும் எரிக் சொல்ஹைம் கூறியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கை சமாதான முயற்சிகளுக்கான நோர்வே தூதுக்குழுவின் தலைமை மத்தியஸ்தராகவும் சிறப்புத் தூதராகவும் இருந்துவருபவர் எரிக் சொல்ஹைம்தான். நோர்வேயில் சென்ற வருடம் பிற்பகுதியில் புதிய அரசு அமைந…

    • 0 replies
    • 647 views
  23. "கருணாநிதி ஓர் சூழ்நிலைக் கைதி" - வைகோ தமிழக அரசியலின் லேட்டஸ்ட் பரபரப்பு வைகோ. சட்டென்று அணி மாறி தமிழக அரசியலின் போக்கையே மாற்றிவிட்டார். பொடா, தி.மு.க. என அனைத்து விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார். திடீரென இப்படி ஒரு முடிவு ஏன்? "இதற்கு நீண்ட பதில் ஒன்றைத் தர வேண்டும். நானோ, எனது சகாக்களோ திட்டமிட்டு உருவாக்கிய இயக்கமல்ல மறுமலர்ச்சி தி.மு.க. 1993_ல் எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் நிகழ்ந்திராத சம்பவமாக கொலைப்பழி சுமத்தப்பட்டு நான் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டேன். தி.மு.க. தொண்டர்கள் ஐந்து பேர் தீக்குளித்து மாண்டனர். இந்தத் துயரச் சூழலில் லட்சக்கணக்கான தொண்டர்களும், எனது சகாக்களும் பாதாளத்தில் விழ இருந்த என்னைத் தாங்கிப் பிடித்ததினால் உரு…

  24. ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்தியா "பல்டி" அடிக்குமா? தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கட்சிகளின் புதிய வியூகங்கள் தொடர்பான செய்திகள் எல்லாம் "அரசியலில் எதிரியும் இல்லை..நண்பனும் இல்லை" என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. தமிழகத் தேர்தல் களம் இரண்டு அணிகளைக் கொண்டது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான 7 கட்சி கூட்டணி. இதில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கட்சி, தமிழக கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை பிரதான கட்சிகள். இவர்களுக்கு எதிர் அணியான தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம்…

    • 98 replies
    • 18.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.