உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
இந்தியா, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அனைத்துல ஊடகமான பி.பி.சி மற்றும் இந்திய பத்திரிகையான ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது. மேலதிக விபரங்கள் தமிழ்செய்தியில் எதிர்பாருங்கள்......... http://www.tamilseythi.com/world/Delhi-air...2008-12-04.html
-
- 2 replies
- 2.1k views
-
-
பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற போர்க்களமான காட்சிகளை அமெரிக்க ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட நிலையில் தற்போது அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் வென்ட்ரில் கூறுகையில், டெல்லியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் பெண்ணுக்காகவும் அவர்தம் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கிறோம். இந்த சம்பவமானது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பாலின ரீதியான வன்முறைக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=72682&category=IndianNews&l…
-
- 1 reply
- 988 views
-
-
உய்குர் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படவில்லை: உறுதிப்படுத்த சீனா வருமாறு பொம்பியோவுக்கு அழைப்பு! உய்குர் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படவில்லை என்பதை அறிந்துக் கொள்வதற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவை நாட்டுக்கு வருமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு, அமெரிக்க அரசு அண்மையில் சில தடையுத்தரவுகளை அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய சீன அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் (கொவிட்-19) விவகாரத்தில் நீடித்துவரும் மோதலுக்கு இடையில், இந்த விடயமும…
-
- 0 replies
- 242 views
-
-
உலக அளவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில், பாதியளவுக்கு விரயமாகிறது என்று பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஒரு பொறியியல் அமைப்பு கூறியுள்ளது. வறிய நாடுகளில் உணவுப் பொருட்களின் உற்பத்திகள் திறம்பட இல்லாததும், செல்வந்த நாடுகளில் இருக்கும் நுகர்வோர்கள் அதீதமான அளவில் பொருட்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுமே இதற்கு முக்கிய காரணங்கள் என்று பிரிட்டனிலுள்ள இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மெக்கானிக்கல் இஞ்ஜினியர்ஸ் எனும் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்படியாக உணவு தானியங்கள் விரயமாவதை மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் சரிசெய்ய இயலும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உலகளவில் படிப்படியாக விவசாய நிலங்களும் நீராதரங்களும் குறைந்து வரும் நிலையில் உணவு …
-
- 0 replies
- 390 views
-
-
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள, சாங்ஷா என்ற இடத்திலிருந்து, குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு, இறைச்சிக்காக, 600க்கும் அதிகமான பூனைகள், 50 மூங்கில் கூடைகளில் அடைத்து எடுத்துச் செல்லப்பட்டன. பூனைகளை சுமந்து சென்ற லாரி, நேற்று, ஒரு இடத்தில் விபத்துக்குள்ளாகி நின்றுவிட்டது. உடனடியாக இந்த லாரியும் மீட்கப்படவில்லை. கூடைகளில் அடைக்கப்பட்டிருந்த பூனைகள் பல நாட்களாக பட்டினி கிடந்ததால், 100 பூனைகள் இறந்து விட்டன. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதை அறிந்த மிருக பாதுகாப்பு ஆர்வலர்கள், மீதமுள்ள பூனைகளை மீட்டுள்ளனர். இந்த பூனைகளை பாதுகாக்கும் பொருட்டு, அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். http://tamil.yahoo.com/600-%E0%AE…
-
- 0 replies
- 466 views
-
-
2050-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 1000 கோடியை எட்டும் - இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் உலக மக்கள் தொகை எதிர்வரும் 2050-ம் ஆண்டில் 1000 கோடியை எட்டிவிடும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு உலக மக்கள் தொகை மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும் கடந்த சில நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை அதிகரிப்பு மிக அதிகமாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளதார சமூக விவகாரங்களுக்கான திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடி எட்டும் போது ஆசிய நாடுகளின் மக்கள் தொகை 5.30 கோடியாக அதிகரிக்கும் என்றும் ஆப்பிரிக்கா நாடுகளின் மக்கள் தொகை 250 கோட…
-
- 2 replies
- 445 views
-
-
வெலவெலத்துப் போயிருக்கிறது மென்பொருள் துறை. ஐயாயிரத்து சொச்சம் கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிஜமான கையிருப்பு வெறும் 320 கோடி மட்டுமே என்ற ரகசியம் சமீபத்தில் அம்பலமாகி உள்ளது. அதுவும் நிறுவனத்தின் தலைவரான ராமலிங்க ராஜுவின் வாக்குமூலமாக. ஆமாம். கணக்கு வழக்குக் குறிப்பேட்டில் சிலபல மோசமான திருத்தங்களைச் செய்து சத்யம் நிறுவனம் கடந்த சில வருடங்களில் அதிக லாபம் சம்பாதித்ததாகக் கணக்கு காட்டினேன். உண்மை அதுவல்ல. எங்களிடம் இருப்பது வெறும் முந்நூற்று இருபது கோடி மட்டுமே என்று அப்ரூவர் அவதாரம் எடுத்திருக்கிறார் ராமலிங்க ராஜு. மேலோட்டமாகப் பார்த்தால் ஆழமான கிணறு என்பது மட்டும்தான் பு…
-
- 0 replies
- 956 views
-
-
அமெரிக்க தேர்தல் வெற்றி வாய்ப்பு கருத்துக்கணிப்பில் ஹில்லறியை முந்தும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி வாய்ப்புக்கான கருத்துக்கணிப்பில் முதல் தடவையாக குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கத் தொடங்கியிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் பிரகாசமான வெற்றி வாய்ப்போடு அனைத்து கருத்துகணிப்புகளிலும் முன்னிலை வகித்த ஹில்லறி கிளின்ரன் தற்போது பின்னடைவை எதிர்கொள்வதாக சில கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகை அவதானிப்பு அறிக்கையாளர்கள் (White House Watch Report) கடந்த வாரம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் 40 வீதமானவர்களின் ஆதரவோடு டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாகவு…
-
- 0 replies
- 419 views
-
-
ஐ.நாவில் அதிகாரம் செலுத்தும் அமெரிக்கா-அச்சத்தில் உலக நாடுகள்? உலகளாவிய தொற்று நோயான கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்தக்கால கட்டத்தில், அனைத்து நாடுகளும் இதனைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகின்றன. ஐ.நாவும் அதன் துணை அமைப்புக்களும் அனைத்து நாடுகளுடன் சேர்ந்து இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், அமெரிக்காவோ ஐ.நாவின் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் ஹெல்லி கிராஃப்ட் , அமெரிக்க குடியரசின் செனட்டர் மார்ஸாவுடனான(Marsha Blackburn) உரையாடலின் போது ஐ.நாவின் தலைமைச் செயலகத்தை போர்க்கலமாகவும் அதில் பிற நாடுகளை அமெரிக்கா வெற்றி கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 353 views
-
-
தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தூக்குத் தண்டனை பற்றிய கருத்துகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. வீரப்பனின் நண்பர் என, குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தத் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டிருந்தால், அவர்கள் கடந்த, 9 ஆண்டுகளாக, சிறையிலே உழன்று உருக்குலைய வேண்டி இருந்திருக்காது. அவர்கள், 9 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் அனுபவித்து விட்டு, தற்போது மேலும் தூக்குத் தண்டனை என்றால், ஒரே குற்றத்திற்காக இரண்டு கடும் தண்டனைகள் என, ஆகிவிடாதா என்பதையும், நமது சட்டம் அனுமதிக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த, 2007ல் ஐ.நா., சபை தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன் வைத்தபோது,…
-
- 0 replies
- 699 views
-
-
தாய்லாந்து ஆர்ப்பாட்டம்; டெலிகிராம் செயலியை தடை செய்ய நடவடிக்கை தாய்லாந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட டெலிகிராம் செய்தியிடல் செயலியை தடுக்க இணைய வழங்குநர்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த திட்டங்களை கோடிட்டுக் காட்டிய ஒரு ஆவணம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரணிகளை தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டங்களுக்கு கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட அவசரகால ஆணையை மீறியதற்காக நான்கு செய்தி நிறுவனங்களை மூடுவதாகவும் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். தாய்லாந்தில் அந்நாட்டு மன்னராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் ஜனநாயக ஆதரவாளர்கள் பல மாதங்களாக போ…
-
- 0 replies
- 411 views
-
-
பிரான்ஸ் நாட்டில் 48 வயதுடைய தந்தை ஒருவர் தனது 12 வயது மகனுடன் Alps என்ற மலையில் நூறடி உயரத்தில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைகுலைந்து 12 வயது சிறுவன் நூறடி பள்ளத்தில் விழுந்துவிட்டார். உடனே சிறப்பு அதிரடிப்படையினர்களுக்கு தகவல் கொடுத்த தந்தை, மகனை காப்பாற்றும் முயற்சியில் தானே ஈடுபட்டார். இதில் அவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்துவிட்டார். ஒரே நாளில் தந்தை மகன் என இருவரையும் இழந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கறைய வைப்பதாக இருந்தது. அதிரடிப்படையினர் விரைந்து வந்து இருவரது பிணங்களையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரான்ஸில் Chamonix Valley என்ற இடத்தில் உள்ள Alps என்ற மலையில் பயிற்…
-
- 0 replies
- 402 views
-
-
தலிபான் பயங்கரவாதிகள் விடுத்த கொலை மிரட்டலை புறக்கணித்து விட்டு பாகிஸ்தான் திரும்பியுள்ளார் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப். துபையில் இருந்து விமானம் மூலம் கராச்சி நகருக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் வந்தார். பாகிஸ்தானில் மே 11-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின் அவர் நாடு திரும்பியுள்ளார். கொலை மிரட்டலை மீறி... முஷாரப், பாகிஸ்தானுக்கு வந்தால் அவர் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்று தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர். எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் முஷாரப், நாடு திரும்பியுள்ளார். ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 150 பேர் அவருடன் வந்துள்ளனர். உற்ச…
-
- 1 reply
- 419 views
-
-
புதுடெல்லி: ஈரானை மையமாக கொண்டு இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் தாக்கம் பாகிஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது. ஈரானை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரானையொட்டிய பாகிஸ்தான் எல்லை மற்றும் டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததால், மக்கள் அலறியடித்தபடி வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். குறிப்பாக டெல்லியின் புறநகரான நொய்டா மற்றும் குர்காவ் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரி…
-
- 4 replies
- 553 views
-
-
சிரிய அதிபரை எதிர்த்து அந்நாட்டில் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. இப்போராட்டத்தால் இதுவரை 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சிரியாவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான போரில் ராணுவத்திற்கும், போராட்டக்காரர்களுக்கும் இதுவரை நடந்த சண்டையில் மொத்தம் 70 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். அதனால் சிரிய மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள லெபனான் மற்றும் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சிரியாவில் இருந்து வெளியேறி மற்ற அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் சுமார் 2 லட்சம் மக்கள். 4 லட்சத்து 28 ஆயிரம் பேர் லெபனான் நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. இவர்க…
-
- 0 replies
- 456 views
-
-
இந்தோனேசியாவில் பாரிய பூமியதிர்ச்சி இந்தோனேசியாவின் கிழக்கு பாலி பிரதேசத்தில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பூமியதிர்ச்சி 6.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும் இப் பூமியதிர்ச்சினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14898
-
- 0 replies
- 333 views
-
-
சீனா கடந்த 2007 முதல் 2011ஆம் ஆண்டு வரை 11 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சீனா கடந்த 2007 முதல் 2011ஆம் ஆண்டு வரை, சுமார் 11 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களைப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. கடந்த 2012 மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் சீனாவின் ஆயுத ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும். சீனப் பாதுகாப்பு நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஆயுதங்களை விற்கின்றன. அவை பெரும்பாலும் ஆசிய, மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக…
-
- 0 replies
- 340 views
-
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் உள்ளிட்ட 329 பேரின் பெயர்கள் பரிந்துரை! அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசிற்கு 234 தனிநபர்களுடன், 95 அமைப்புகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைப் பட்டியலில் 376 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்தநிலையில் 3வது முறையாக அதிகளவில் இம்முறையே இவ்வளவ…
-
- 0 replies
- 297 views
-
-
தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள் 51 Views காலனீயக் குடியேற்றங்களை நிறுவும் நோக்குடன் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இஸ்ரேல் யூத தேசிய நிதியம் மேற்குக் கரையிலுள்ள பாலஸ்தீன நிலங்களை வாங்கி, அவ்வாறு நிலங்களைக் கையகப்படுத்துவதைச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயற்பாடு எனப் பெயரிட்டு அழைக்கிறது. தீவிர வலதுசாரிகளான இந்துத்துவ தேசிய அமைப்புகள் பாசிசத் தன்மையுள்ள தங்கள் கொள்கைகளை உலகம் பூராவும் பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் அதனைக் காலனீயத்திலிருந்து மீளுதல் என்றும் இனவாதத்துக்கு எதிரானதென்றும் அழைக்கிறார்கள். அதேவேளை மியன்மாரில் இனவழிப்பை நியாயப்படுத்துகின்ற பௌத்த துறவிகள் ‘அமைதிக்கான சமயம்…
-
- 0 replies
- 960 views
-
-
இலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண்ணிற்கு நேர்ந்த கதி இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை மையமாக வைத்து எடுத்த ஆவணப்படத்திற்கு, முறையான அனுமதி பெறப்படாத குற்றத்திற்காக பெண் பட இயக்குனர் ஒருவரை மலேசிய நீதி மன்றம் குற்றவாளியாக இனம் கண்டுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் நகரை சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான லீனா ஹென்றி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற 26 வருட கால யுத்தத்தை ஒரு ஆவணப்படமாக எடுத்து, பட தணிக்கை குழுவின் அனுமதி ஏதும் பெறாமல் படத்தை திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். மேலும் குறித்த ஆவணப்படத்தில், தணிக்கை கட்டுப்பாடுகளை மீறி, யுத்த நிறுத்த வலயங்கள் மற்றும் யுத்தகள கொலைகளை காண்பி…
-
- 0 replies
- 527 views
-
-
அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் மொசூலில் ஐ.எஸ். இயக்க தலைவர்கள் 3 பேர் பலி மொசூலில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மொசூல்: ஈராக்கில் மொசூல் நகரை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து முழுமையாக மீட்பதற்காக ஈராக் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையில், ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை நடத்தி, ஈராக் படைகளுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன. மொசூல் நகரின் கிழக்கு பகுதிகள் கடந்த ஜனவரி மாதம் ஈராக் படைகள் வசம் வந்து விட்டன. மேற்கு பகுதிகளையும் தங்கள் வசப்படுத்துவதற்காக ஐ.எஸ். இயக்கத்தினரை எதிர்த்து ஈராக் …
-
- 0 replies
- 247 views
-
-
சீனாவில்... ஆலங்கட்டி மழை- வேகமான காற்றில் சிக்கி 21 ஓட்டப் பந்தய வீரர்கள் உயிரிழப்பு! சீனாவில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் வேகமான காற்றில் சிக்கி, மரத்தன் ஓட்டப் பந்தய வீரர்கள் 21பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணி தலைமையகம் தெரிவித்துள்ளது. போட்டியில் பங்கேற்ற மற்ற 172 பேரில் 8 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் உள்ள கன்ஷு மாகாணத்தில் மலைப் பகுதியில் 100 கி.மீ. தொலைவு மரத்தன் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. போட்…
-
- 0 replies
- 769 views
-
-
மும்பை: மும்பையின் வெர்சோவா பகுதிக்குப் போனால்.. அங்குள்ள ஜேபி சாலைக்கு மறக்காமல் போங்கள்.. அங்கு ஒரு பெண் சாலையோரம் உள்ள குருத்வாரா அருகே பரிதாப நிலையில் அமர்ந்திருப்பார்.. அவர் வேறு யாருமல்ல, ஒரு காலத்தில் கோடீஸ்வரியாக வலம் வந்த ஒரு பிரபலமான பத்திரிக்கையாளர் சுனிதா நாயக்.. 65 வயதாகும் சுனிதா நாயக்.. இன்று எல்லாவற்றையும் இழந்து கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகப் பரிதாபமான சோகக் கதை. எத்தனையோ பிச்சைக்காரர்களைப் பார்த்து விட்ட மும்பை மக்களுக்கு இவர் இன்னொரு பிச்சைக்காரர்... ஆனால் இவரது கதை மிகப் பரிதாபமாகரமானது, சோகமயமானது. நிரம்பப் படித்தவர் சுனிதா நாயக். பெரும் பணக்காரர். அருமையான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தவர். பை நிறையப் பணத்துடன் வாழ்ந்த அவர்…
-
- 7 replies
- 2.2k views
-
-
சில அமெரிக்கர்கள்... சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே இருதரப்பு உறவு விரிசலுக்கான காரணம்! சில அமெரிக்கர்கள் சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடுமையான சிரமங்களை எதிர் கொள்வதற்கான அடிப்படை காரணம் என சீன துணை வெளியுறவு அமைச்சர் ஸீ பெங் தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் வெண்டி ஷெர்மன், சீனா சென்றுள்ள நிலையில், இந்த கருத்து வெளிவந்துள்ளது. வெண்டி ஷெர்மன் அங்கு அமெரிக்கா- சீனா உறவுக்கு பொறுப்பான சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஸீ பெங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இதுகுறித்து சீன துணை வெளியுறவு அமைச்சர் ஸீ…
-
- 0 replies
- 362 views
-
-
துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகள் தடுத்து நிறுத்தம்! துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகளை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக வீடுகளை இழந்த இலட்சக்கணக்கானோர் அண்டைய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரான் எல்லை வழியாகத் துருக்கி வந்தடைந்த சரக்கு லொரியை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டபோது சிறுவர்கள், பெண்கள் என 300இற்கும் மேற்பட்டோர் பதுங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அவர்களைத் தற்காலிக முகாம்களில் தங்கவைத்துள்ளனர். ஆப்கான் அகதிகளைக் கையாளத் துருக்கி அரசு தெளிவான நெறிமுறைகளை இன்னும் வகுக்காதத…
-
- 0 replies
- 310 views
-