Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத், கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனும், பட்டத்துக்கு இளவரசருமான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர் மன்னராக முடிசூட்டும் விழா அடுத்த மாதம் 6 ஆம் திகதி லண்டனில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்விழாவில் அரசு குடும்பத்தினர் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2ஆவது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10 ஆவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர் அரச குடும்பத்தினரில் 10ஆவது வரிசைக்கு பின்னால் அமர்ந்திருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை சார்லஸ், சகோதரரான இளவரசர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபா…

  2. பட மூலாதாரம்,CENYDD OWEN படக்குறிப்பு, கேட்டி(இடது) மற்றும் லூசி கட்டுரை தகவல் எழுதியவர்,ஜாரெட் எவிட்ஸ் பதவி,பிபிசி நியூஸ் 18 நிமிடங்களுக்கு முன்னர் கண்டதும் காதல் என்று தமிழ் சினிமாவில் பார்த்து இருப்போம். பார்த்த முதல் சந்திப்பிலேயே அறிமுகமாகி நண்பர்களான கதைகளை கேட்டு இருப்போம். அவசர காலத்தில் முன்பின் தெரியாத நபர் செய்த உதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்து இருப்போம். ஆனால் முதல் சந்திப்பிலேயே யாரென்று தெரியாத ஒரு நபருக்கு உங்கள் சிறுநீரகத்தை தர ஒப்புக் கொள்வீர்களா? கேட்க விசித்தரமாக இருக்கலாம், ஆனால் இது உண்மையில் நடந்த கதை. பிரிட…

  3. பட மூலாதாரம்,CORTESA CITY OF HOPE படக்குறிப்பு, கலிபோர்னியாவில் சிட்டி ஆஃப் ஹோப் கேன்சர் சென்டரில் எட்மண்ட்ஸ் 2019ம் ஆண்டு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையைப் பெற்றார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2022 ஜூலையில், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு அமெரிக்க நோயாளி, நோயிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக அறிவிக்கப்பட்டபோது, எச்.ஐ.வி. வைரஸுக்கு மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையாக உலகம் முழுவதும் இது பார்க்கப்பட்டது. ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் எச்.ஐ.வி மற்றும் லுகேமியா முழுமையாக குணமான உலகின் ஐந்து பேரில் இந்த நோயாளியும் ஒருவர். 66 வயதான இவருக்கு 1988 இல் எய்ட்ஸ் நோய் இருப…

  4. Published By: T. SARANYA 25 APR, 2023 | 03:32 PM (நா.தனுஜா) இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் உலகளாவிய ரீதியில் வாழும் 300 க்கும் மேற்பட்ட தமிழர்களின் கையெழுத்துடன்கூடிய மனுவின் ஊடாக இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான பிரிட்டன் …

  5. சூடானிலிருந்து 50 நாடுகளின் 1,687 பேருடன் வந்த கப்பல் சவூதி அரேபியாவை அடைந்தது Published By: Sethu 26 Apr, 2023 | 10:03 AM சூடானிலிருந்து வெளியேறிய, 50 நாடுகளைச் சேர்ந்த 1,687 பேருடன் வந்த கப்பல், இன்று புதன்கிழமை சவூதி அரேபியாவை அடைந்துள்ளதாக சவூதி வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவினால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை இதுவாகும். சவூதி அரேபியாவின் கப்பல் ஒன்றினால், இவர்கள் ஏற்றிவரப்பட்டனர். வெளிநாட்டவர்கள் புறப்படுவதற்குத் தயார்படுத்தல்களுக்கான அடிப்படை வசதிகள் சவூதி அரேபியாவினால் வழங்கப்பட்டன என சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு…

  6. Published By: RAJEEBAN 25 APR, 2023 | 04:39 PM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோபைடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சுதந்திரம் மற்றும் உரிமைகள் அச்சுறுத்தலிற்குள்ளாகும் ஒரு தருணம் இது என தெரிவித்துள்ள பைடன் இது அலட்சியமாக இருக்கவேண்டிய தருணம் இல்லை அதனால் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார் நான்கு வருடங்களிற்கு முன்னர் நான் தேர்தலில் போட்டியிட்டவேளை நாங்கள் அமெரிக்காவின் ஆன்மாவிற்கான மோதலில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தோம் தற்போதும் அந்த நிலையிலேயே உள்ளோம் என பைடன் மூன்று நிமிட வீடியோவில் தெரிவித்துள்ளார். ஜோ பைடனிற்கு தற்போது 80 வயது - அவ…

  7. Published By: SETHU 25 APR, 2023 | 05:38 PM துருக்கிய படையினர் 110 குர்தியர்களை இன்று கைது செய்துள்ளனர். செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் ஆகியோர் இவர்களில் அடங்கியுள்ளனர். துருக்கியில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. 21 மாகாணங்களில் ஏக காலத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு முற்றுகைகளில் இவர்கள் கைதாகியள்ளனர் என துருக்கிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குர்திஷ் தொழிலாளர்; கட்சிக்கு (பிகேகே) நிதி அளித்தவர்கள், அல்லது புதிய அங்கத்தவர்களை சேர்த்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக…

  8. Published By: RAJEEBAN 25 APR, 2023 | 03:26 PM அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற அன்ஜாக் தின நிகழ்வுகளில் பெருமளவு அவுஸ்திரேலியர்கள் கலந்துகொண்டுள்ளனர். முதலாம் உலக யுத்தகாலத்தில் பகுதியில் அவுஸ்திரேலிய நியுசிலாந்து படையினர் கலிபொலியில் தரையிறங்கியதை குறிக்குமுகமாகவே அன்ஜாக் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. எட்டுமாதம் கடுமையாக போரிட்ட பின்னர் அன்ஜாக்குகள் தோல்வியை சந்தித்தனர் ஆனால் அவர்களின் வீரம் இராணுவதியாகத்தின் நிலையான அடையாளமாக மாறியுள்ளது. அன்ஜாக் என்பது அவுஸ்திரேலியா நியுசிலாந்து ஆர்மிகோப் என்பதை குறிக்கின்றது. 1915ம் ஆண்டு அவுஸ்திரேலிய நியுசிலாந்து படைகள் இணை…

  9. 22 பிப்ரவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஏப்ரல் 7 1926ஆம் ஆண்டு. இருபதாம் நூற்றாண்டில் மிகவும் மோசமான அவப்பெயரை சந்தித்திருந்த சர்வாதிகாரிகளில் ஒருவரான முசோலினியை ரோம் நகரத்தில் இருந்த கூட்டம் ஒன்றுக்குள் இருந்து வந்த ஐரிஷ் பெண்மணி (அயர்லாந்தை பூர்வீகமாக கொண்டவர்) ஒருவர் சுட்டார். அவற்றில் ஒரு புல்லட் பெனிட்டோ முசோலினியின் மூக்கை உரசிக் கொண்டு சென்றது. ஆனால் அந்த இத்தாலிய சர்வாதிகாரி அந்த கொலை முயற்சியிலிருந்து தப்பினார். இருபதாம் நூற்றாண்டில் பாசிசத்திற்கு எதிராக ஐரோப்பாவில் பல தனிமனிதர்கள் வீரதீர செயல்களை செய்துள்ளனர். அவற்றில் வயலட் …

  10. Published By: RAJEEBAN 24 APR, 2023 | 11:29 AM சிங்கப்பூரில் கஞ்சா வைத்திருந்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றத்தை எதிர்கொண்டுள்ள தங்கராஜூ சுப்பையா என்ற 46 வயது நபரின் குடும்பத்தினர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர். இந்த வழக்கை மீள்விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கஞ்சாகடத்தல் முயற்சியில் ஈடுபட்டமைக்காக சுப்பையாவிற்கு 2018 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. எனது சகோதரர் குறித்த வழக்கு நியாய…

  11. Published By: SETHU 24 APR, 2023 | 05:20 PM வளி மாசமடைதலினால் வருடாந்தம் 1,200 இற்கும் அதிகமான சிறார்கள் ஐரோப்பாவில் உயிரிழக்கின்றனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் முகவரம் இன்று தெரிவித்துள்ளது. அண்மைக் காலங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டபோதிலும, பல ஐரோப்பிய நாடுகளில் வளி மாசு மட்டமானது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல் அளவை விட கூடுதலாக உள்ளதாகவும் குறிப்பாக, மத்திய – கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் இத்தாலியில் இந்நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகள் உட்பட 30 இற்கும் அதிகமான நாடுகளில் ஐரோப்பிய சுற்றாடல் முகவரம் தெரிவித்துள்ளது. முக்கிய கைத்தொழில்துற…

  12. Published By: RAJEEBAN 24 APR, 2023 | 10:41 AM சீனாவை எதிர்கொள்வதற்காக அவுஸ்திரேலியா நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளது. அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஏவுகணை யுகத்தில் அவுஸ்திரேலியா புவியியல் ரீதியிலான தனிமைப்படுத்தல் மூலம் தன்னை பாதுகாக்க முடியாது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 110 அறிக்கையை இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பாரிய மாற்றம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாம் உலகபோருக்கு பின்னர் எந்த நாட்டிலும் காணப்படாத அளவிற்கு சீனா…

  13. கென்யாவில் இறைவனை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்த 47 பேரின் சடலங்கள் மீட்பு: மதபோதகர் கைது Published By: Sethu 24 Apr, 2023 | 10:40 AM கென்யாவில் இறைவனை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் என சந்தேதிக்கப்படும் 47 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மத குரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெக்கன்ஸி எனும் 58 வயதான மத போதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'நற்செய்தி சர்வதேச தேவாலயம்' எனும் இயக்கத்தின் தலைவர் இவர். இயேசுவை சந்திக்கச் செல்வதற்காக பட்டினி கிடக்குமாறு தன்னை…

  14. உக்ரைன் – ரஷ்ய போர் ஏன் இன்னமும் தொடர்கிறது? உக்ரைன் – ரஷ்ய போர் ஏன் இன்னமும் தொடர்கிறது? Maatram MAATRAM on February 13, 2023 NO COMMENTS. SHARE ON FACEBOOK SHARE ON TWITTER EMAIL THIS ARTICLE Photo, NEWSTATESMAN ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி தொடர்ந்த போர் புத்தாண்டில் தொடர்ந்து நீடிப்பது உலக அளவில் கவலை தரும் விஷயம். ஏற்கனவே, போரின் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு கோதுமை, சோளம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிகள் தடைப்பட்டுள்ளன. அதன் விளைவாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளும் பெருமள…

  15. Published By: SETHU 23 APR, 2023 | 08:38 AM சொந்த நாட்டில் ஊழல், பணச்­ச­லவை குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டுள்ள பெருவின் முன்னாள் ஜனா­தி­பதி அலெ­ஹான்ட்ரோ டொலேடோ, அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளிடம் சர­ண­டைந்­துள்ளார். அவர் விரைவில் நாடு கடத்­தப்­ப­ட­வுள்ளார். 2001 முதல் 2006 ஆம் ஆண்­டு­­வரை பெரு­வின் ஜனா­தி­ப­தி­­யாக பதவி வகித்­தவர் அலெ­ஹான்ட்ரோ டொலேடோ (77). ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த காலத்தில் பிரே­ஸிலின் கட்­டு­மான நிறு­வ­ன­மொன்­றி­ட­மி­ருந்து 20 மில்­லியன் டொலர்­களை லஞ்­ச­மாக அவர் பெற்றார் என டொலேடோ மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு 20 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும் என பெரு அதி­கா­ரிகள் எதிர்­பா…

  16. திருத்தந்தை பிரான்சிஸ் முதல் பில்கேட்ஸ் வரை முக்கிய பிரபலங்களின் புளூ டிக்கை நீக்கிய டுவிட்டர் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதன்படி டுவிட்டர் கணக்குகளை சரிபார்க்கும் சேவைக்கு நிறுவனம் கட்டணம் நிர்ணயித்தது. இதற்காக ஒரு பயனர் ஒரு மாதத்திற்கு 8 டொலர் கட்டணம், அதாவது இலங்கை ரூபாயில் ஏறக்குறைய 2500 செலுத்த வேண்டும் என்றும் அறிவித்தது. இதற்கு டுவிட்டர் வாடிக்கையாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் இந்த அறிவிப்பை வரவேற்றனர். டுவிட்டர் கணக்கு சரிபார்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த வாடிக்கையாளர்கள் அதற்கான கட்டணத்தை…

    • 3 replies
    • 728 views
  17. ஸ்பெயினைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் பீட்ரிஸ் ஃப்ளாமினி. கொரோனா தொற்று காரணமாக உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, இவர் தனியாக ஒரு குகைக்குள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார். இவரது எண்ணத்தை அறிந்த ஆராய்ச்சியாளர்கள், வெளியுலகத் தொடர்பின்றி ஒரு மனிதரால் வாழ முடிமா, அப்படி வாழும்போது மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை எல்லாம் அறிந்துகொள்ள முடிவெடுத்தனர். 48 வயது ஃப்ளாமினி ஸ்பெயினில் கிரானடா பகுதியில் உள்ள குகைக்குச் சென்றார். 70 மீற்றர் (230 அடி) ஆழமுள்ள குகைக்குள் 2021 நவம்பர் மாதம் நுழைந்தார். குகையின் வாயிலுக்கு வேலி போடப்பட்டது. 500 நாள்களுக்குப் பிறகு 2023 ஏப்ரலில் ஃப்ளாமினி வெளியே வந்தபோது, பெருந்தொற்று காலம் முடிந்து உலகம் இயல்பு நிலைக்குத் தி…

  18. ஸ்டார்ஷிப் பிரமாண்ட ரொக்கெட் முதல் சோதனைப் பயணத்தில் வெடித்துச் சிதறியது Published By: Sethu 21 Apr, 2023 | 10:28 AM அமெரிக்க கோடீஸ்வரர் இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்த, ஸ்டார்ஷிப் எனும் பிரமாண்ட ரொக்கெட் முதல் சோதனைப் பயணத்தில் வெடித்துச் சிதறியது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில கரையோரத்திலிருந்து உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை இந்த ரொக்கெட் ஏவப்பட்டது. விண் ஓடமும் அதன் முதறகட்ட ரொக்கெட் பூஸ்டரும் பிரிய வேண்டிய தருணத்தில் அது நடைபெறவில்லை. ஏவப்பட்டு 4 நிமிடங்களின் பின் இந்த ரொக்கெட் வெடித்துச் சிதறியது. இந்த ரொக்கெட்டில் எவரு…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பிபிசி முண்டோ பதவி,பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்ரிக்காவில் பரந்து விரிந்து கிடக்கும் நாடான சூடான், கடந்த வார இறுதியில் கடுமையான சூழலை எதிர்கொண்டது. அங்கு வன்முறை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த வார இறுதியில் நிகழ்ந்த மோதலில் 180க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், 1800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சூடான் ராணுவத்துக்கு துணை ராணுவத்துக்கும் (RSF) இடையேயான மோதலே இந்த இறப்புகளுக்கு காரணம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2019 ஏப்ரலில் உமர் அல் பஷீரின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் தொடங்கிய அரசியல் போராட்டங்கள், பதற…

  20. Published By: SETHU 20 APR, 2023 | 12:48 PM உக்ரேனின் தலைநகர் கியேவ்வின் வான்பரப்பில் காணப்பட்ட பிரகாசமான வெளிச்சம் என்ன என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது. கியேவ் நகரின் வான்பரப்பில் நேற்று புதன்கிழமை இரவு 10.00 மணியளவில் பிரகாசமான பிரகாசமான வெளிச்சமொன்று காணப்பட்டதாக அந்நகர இராணுவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது பூமியை நோக்கி வரும், நாசா நிறுவனத்தின் செய்மதி ஒன்றாக இருக்கலாம் முதலில் கருதப்பட்டது. எனினும், அதை நாசா நிராகரித்துள்ளது. ஓய்வு பெற்ற 300 கிலோகிராம் எடையுடைய தனது செய்மதி ஒன்று பூமிக்குத் திரும்பவிருப்பதாகவும் ஆனால், குறித்த நேரத்தில் அது விண்வெளியில் பூமியை சுற்றிவருவதாகவும் நாசா தெரிவித்துள்…

  21. நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த கூட்டத்தில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு! ஏமனில் நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த கூட்டத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர். ரமலான் மாதத்தை முன்னிட்டு அந்நாட்டு தலைநகர் சனாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனுடன் பணம், உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழுந்தனர். இந்த நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழந்ததாக ஹவுதி தலைமையிலான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனவும் கூறப…

  22. Published By: SETHU 19 APR, 2023 | 05:54 PM அமெரிக்காவின் பேட்ரியட் வான் பாதுகாப்புப் பொறிமுறையின் முதல் தொகுதி தனக்கு கிடைத்துள்ளதாக உக்ரேன் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. 'உக்ரேனின் அழகிய வானம் இன்று மேலும் பாதுகாப்பானதாக உள்ளது. ஏனெனில் பேட்ரியட் வான் பாதுகாப்புப் பொறிமுறைகள் உக்ரேனை வந்தடைந்துள்ளன' என உக்ரேனிய பாதுகுhப்பு அமைச்சர் ஒலேக்சி ரெஸ்னிஸ்கோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகியன தமது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். உக்ரேனின் வலுசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்துவதால், உக்ரேனுக்கு பேட்ரியட் வான் பாதுகாப்பு பொறி…

  23. Published By: SETHU 18 APR, 2023 | 11:14 AM உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கேர்சன் பிராந்தியத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விஜயம் செய்துள்ளார். கேர்சன் பிராந்தியத்தில் நடைபெற்ற ரஷ்ய இராணுவத் தளபதிகளுடனான கூட்டத்தில் ஜனாதிபதி புட்டின் பங்குபற்றினார் என ரஷ்ய அரசாங்கம் இன்று (18) தெரிவித்துள்ளது. எனினும் எப்போது இச்சந்திப்பு நடைபெற்றது என்பது தெரிவிக்கப்படவில்லை. கேர்சன் பிராந்தியத்தின் தலைநகரான கேர்சன் உட்பட அப்பிராந்தியத்தின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருந்தன. 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் ரஷ்யா கைப்பற்றிய முதலாவது உக்ரேனிய மாநகரம் கேர்…

  24. Published By: SETHU 18 APR, 2023 | 03:40 PM உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் கடந்த சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன. அதையடுத்து, உக்ரேனிய உணவுப் பொருட்கள் அதன் அயலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஊடாக ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், விநியோக சிக்கல்கள் …

  25. 18 மார்ச் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மனைவியிடம் மோசமாக நடந்து கொண்டாரா? பட மூலாதாரம்,AFP உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்களை பட்டியலிடும்போது அதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற பெயர் கட்டாயம் இடம்பெறும். 1879, மார்ச் 14ஆம் தேதி பிறந்த ஐன்ஸ்டைன் 1955 ஏப்ரல் 18 இல் உலகில் இருந்து விடைபெற்றார். ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் போலவே, 76 வயதில் மறைந்தார் ஐன்ஸ்டைன். இயற்பியலின் மிகச் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்பட்ட ஐன்ஸ்டைனின் தனிப்பட்ட வாழ்க்கை மாறுபட்டது. 2012 ஆம் ஆண்டில் வால்டர் இசாக்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.