Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கூகுள் நிறுவனத்துக்கு இந்தியா ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கூகுள் நிறுவனம் இந்தியாவில் தொடர்ச்சியான நம்பிக்கை மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு தளத்தை பன்படுத்தி சந்தையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதத்தை இந்திய போட்டிகள் ஆணையம் விதித்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் தனது செயலிகள் ஆதிக்கம் செலுத்து வகையில் ஒரு தரப்பான ஒப்பந்தங்களை உலகின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மேற்கொள்வதாக இந்திய போட்டிகள் ஒழுங்குமுறை அமைப்பு குற்றம்சாட…

  2. இம்ரான்கான் ஐந்து வருடங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை- தேர்தல் ஆணையம் அதிரடி By RAJEEBAN 21 OCT, 2022 | 03:14 PM பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு பாக்கிஸ்தானின் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இம்ரான்கானின் சட்டத்தரணியொருவர் இதனை உறுதி செய்துள்ளார். இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பதவியிலிருந்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்தார் ஊழலில் ஈடுபட்டார் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ள நிலையி…

  3. "இரானிய சிறையில் பெண் கைதிகளின் நிலையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை" பெட்ரா ஜிவிக் பிபிசி வெர்ல்ட் சர்வீஸ் 19 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானிய மிசான் செய்தி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட படம் - எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின் இருக்கும் நிலை இரானின் எவின் சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிறையில் தீ எப்படி தொடங்கியது என்பதும் இதற்கும் நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ப…

  4. 1962 இந்திய-சீன போர்: நம்பிக்கை துரோகமா? கோழைத்தனமா? 21 அக்டோபர் 2017 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த யுத்தம் பற்றிய வரலாறு ஏற்கனவே மிகவும் விரிவாக எழுதப்பட்டது, எனவே அதைப் பற்றி மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை. இந்தப் போர் பற்றி ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ வரலாற்றை எழுதிய எஸ்.கோபால் இவ்வாறு கு…

  5. ஈரான் மீதான விசாரணைக்கு எதிராக ஐ.நா.வை எச்சரிக்கும் ரஷ்யா! ஈரானில் இருந்து வந்த ஆயுதங்கள் மத்திய கிழக்கு நாடு மீதான ஐ.நா ஆயுதக் கட்டுப்பாடுகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், உக்ரைனில் தனது ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதை விசாரணை செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையை ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ரஷ்யாவின் துணை ஐ.நா தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி, ஆயுதங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என்று வலியுறுத்தினார் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக…

  6. பசுமை ஐதரசனில் இந்தியா - பிரான்ஸ் ஒப்பந்தம் By NANTHINI 20 OCT, 2022 | 11:49 AM (ஏ.என்.ஐ) இந்தியாவும் பிரான்ஸும் 'பசுமை ஐதரசனின் வளர்ச்சிக்கான இந்தோ-பிரெஞ்சு திட்ட வரைபடத்தை' ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. ஆற்றல், அதிக அறிவுப்பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக தொழில்துறை கூட்டாண்மை உட்பட பல துறைகளில் பணியாற்றும் வகையிலேயே இந்த திட்டம் அமைந்துள்ளது. அபிவிருத்தி மற்றும் சர்வதேச கூட்டாண்மைக்கான மாநில அமைச்சர் கிறிசோலா ஜக்கரோபௌலூ, இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர். பிரான்ஸ் தூதரக அறிக்கையின்படி…

  7. சூட்கேஸூக்குள் 12 வயது சிறுமியின் சடலம் : 24 வயது யுவதி கைது By VISHNU 19 OCT, 2022 | 12:08 PM பிரான்ஸின் தலை­நகர் பாரிஸில், 12 வய­தான சிறு­மியை கடத்தி, கொலை செய்­த­தாக 24 வய­தான யுவதி ஒருவர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இச்­சி­று­மியின் சடலம் சூட்கேஸ் ஒன்­றுக்குள் அடைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. லோலா டேவியட் எனும் இச்­சி­றுமி, பாட­சா­லை­யி­லி­ருந்து வீடு திரும்­ப­வில்லை என இச்­சி­று­மி­யியின் பெற்றோர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தி­ருந்­தனர். தமக்கு அறி­மு­க­மில்­லாத ஒரு யுவ­தி­யுடன் இறு­தி­யாக அச்­சி­று­மியை கண்­ட­தாக பேஸ்­புக்கில் சிறு­மியின் தாயார் தெரி­வி…

  8. இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா தினத்தந்தி லண்டன், இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அ…

  9. ‘பபா’ வேண்டாம்: ஜனாதிபதி அறிவுரை கிழக்கு ஆபிரிக்கா நாடான டான்ஸானியாவில் (Tanzania) கடந்த சில வருடங்களாக குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள அந்நாட்டின் ஜனாதிபதி சமியா சுலுஹு ஹசான் (Samia Suluhu Hassan)” டான்ஸானியாவில் உள்ள கேடா (Geita) நகரில் மட்டும் ஒரு சுகாதார மையத்தில் மாதத்திற்கு 1,000 குழந்தைகள் பிறக்கின்றன. இவ்வாறு குழந்தைப் பிறப்பு அதிகரித்துக்கொண்டே சென்றால் இன்னும் மூன்று ஆண்டுகளில் உணவு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைப்பது சிரமமாகி விடலாம்” எனத் தெரிவித்து…

    • 0 replies
    • 317 views
  10. இராக்கில் ஐஎஸ் அமைப்பால் அழிக்கப்பட்ட மாஷ்கி கேட் பகுதியில் 2,700 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இராக்கின் வடக்கு பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2700ஆம் ஆண்டு பழமையான பளிங்கு பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர். மொசூலில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் அமைப்பால் 2016ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பழமையான மாஷ்கி கேட்டின் மறு சீரமைப்புப் பணியில் அமெரிக்க - இராக் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. பாபிலோன் உட்பட உலகின் பழமையான நகரங்கள் இராக்கில் அமைந்துள்ளன. ஆனால் அங்கு …

  11. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்: புடின் அறிவிப்பு! ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) முதல் அந்தப் பகுதிகளில் அவசரக் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புடின் கூறுகையில், ‘4 பிராந்தியங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் ரஷ்யாவின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகவும் சிக்கலான மற்றும் பிரம்மாண்டமான பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த இக்…

  12. பிரித்தானிய உள்துறை அமைச்சர் பதவி விலகல்! பிரித்தானிய உள்துறை அமைச்சர் சூவெல்லா பிரேவர்மன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமைச்சக தகவல் பரிமாற்றங்களுக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தியதற்குப் பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். மின்னஞ்சல் தகவல் பரிமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுடன் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, தனது இராஜினாமா கடிதத்தை டுவிட்டர் பக்கத்தில் பிரேவர்மன் பதிவிட்டார். உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற 43 நாட்களில், அவர் பதவி விலகியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘தவறு செய்துள்ளேன். அதற்கு பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்திருக்கிறேன்’…

  13. ஆஸ்டெக் பழங்குடிகள் வரலாறு: மீண்டும் உயிர் பெறும் 700 வருட மிதக்கும் தோட்டங்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மெக்சிக்கோ நகரில், 700 ஆண்டுகள் பழமையான ஆஸ்டெக் பண்ணை தொழில்நுட்பம் நவீன விவசாயத்திற்கு ஒரு நிலையான அம்சத்தை அளிக்கிறது. அது ஒரு ஞாயிறு அதிகாலை நேரம். மெக்சிக்கோ நகரின் தெற்கே 28 கி.மீ தொலைவில் உள்ள வரலாற்று மையமான எக்ஸோசிமில்கோ(Xochimilco)வின் மிதக்கும் தோட்டங்கள் பகுதியில் நான் இருந்தேன். அங்கிருந்த முடிவற்ற கால்வாய்கள், நீர் வழிகள் ஏற்கனவே வண்ண மயமான தட்டையான படகுகள் நிறைந்திருந்திருந்தன. மெக்சிக்கோ நகரில் இருந்து ஒரு நாள் சுற்றுப்பயணத்துக்காக வந்திருந்த பயணிகளால் அவை…

  14. ஆடை களையப்பட்ட அகதிகள்: ஐ.நா. அதிர்ச்சி ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இற்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி எல்லை அருகே ஆடைகள் களையப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களில் குழந்தைகளும் இருந்தனர் என்பது மேலும் வேதனை தரும் விஷயம். மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து துருக்கி வரை செல்லும் அகதிகள் அங்கிருந்து கிரேக்க நாட்டின் மூலம் ஐரோப்பாவுக்குள் செல்கின்றனர். அகதிகள் சட்டவிரோதமாகவே இப்படிச் செல்கிறார்கள் என்றாலும், சர்வதேச அகதிகள் சட்டத்தின்படி அவர்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலும் அவர்கள் வெவ்வேறு நாடுகளின் அரசுகளால், சட்டப்பட…

  15. உக்ரைனின் எரிசக்தி வசதிகளை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல்! உக்ரைனின் எரிசக்தி வசதிகளை குறிவைத்து தலைநகர் கிவ் மற்றும் பிற முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. தலைநகர் கிவ்வில் மூன்று வெடிப்புகள் நடந்ததாக ஜனாதிபதி உதவியாளர் கைரிலோ திமோஷென்கோ கூறினார். மத்திய நகரமான டினிப்ரோவில் இரண்டு வசதிகள் கடுமையாக சேதமடைந்தன மற்றும் சைட்டோமைரில் மின்வெட்டுகள் பதிவாகியுள்ளன. ஈரானின் காமிகேஸ் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு சமீபத்திய தாக்குதல்கள் வந்துள்ளன. ஈரானில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் ஆளில்லா ஆளில்லா விமானங்கள் தலைநகர் மற்றும் வடக்கு நகரமான சுமியில் குறைந்தது எட்டு ப…

  16. சீன இராணுவத்தால் கவர்ந்தீர்க்கப்படும் பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள்! பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்திற்கு பயிற்சிகளை வழங்குவதற்காக பெருமளவிலான பணத்துடன் சீனாவிற்கு இழுக்கப்படுகின்றனர். 30 முன்னாள் பிரித்தானிய இராணுவ விமானிகள் வரை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க சென்றதாக கருதப்படுகிறது. சீன இராணுவத்தில் பணிபுரியும் முன்னாள் இராணுவ விமானிகளுக்கு பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விமானிகளை கவர்ந்தீர்க்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், சமீபத்தில் அது அதிகரித்து வருவதாகவும் மேற்கு அதிகாரிகள் கூறுகின்றனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாள…

  17. நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் இல்லாத மிக மோசமான வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் காணப்படாத மிக மோசமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600பேரைக் கடந்துள்ளது என்று நாட்டின் மனிதாபிமான விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கன மழை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 603ஆக அதிகரித்துள்ளது. அமைச்சின் கூற்றுப்படி, 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது குறிப்பாக மழைக்காலத்திற்குப் பிறகு நாட்டின் தெற்கின் சில பகுதிகளில் பரவியுள்ளது. 200,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்…

  18. உக்ரேன் போரில் ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்படுகிறது ; ஐ.நா. விசேட தூதுவர் பிரமிளா பட்டேன் தெரிவிப்பு By T. SARANYA 17 OCT, 2022 | 11:29 AM உக்ரேனில் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினர், பாலியல் வல்லுறவை ஒரு போரியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், அப்படையினருக்கு வயாகராவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாலியில் வன்முறைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட தூதுவர் பிரமிளா பட்டேன் தெரிவித்துள்ளார். ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் இதனைத் தெரிவிததுள்ளார். உக்ரேன் யுத்தத்தில் ஓர் ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டுள்ளதா என இச்செவ்வியின்போது பிரமிளா பட்டேனிடம் கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு அவர் …

  19. ஷி ஜின்பிங்: சீனாவின் வீழ்த்த முடியாத தலைவராக உருவாக இவரால் எப்படி முடிகிறது? கிரேஸ் சோய் மற்றும் சில்வியா சாங் பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்திய தசாப்தங்களின் வலுவான சீனத் தலைவராக ஷி ஜின்பிங் உருவெடுப்பார் என சிலர் கணித்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். சீனாவின் புரட்சிகர தலைவர் ஒருவரின் மகன் என்பதைத் தவிர அவர் கடந்த தசாப்தத்தில் பெரிய அளவில் அறியப்படவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஓய்விற்குப் பிறகும் தலைவர்கள் ஆதிக்கம் கொ…

  20. காய்ச்சல், சளி, இருமல்: பாதுகாப்பு குறித்து கவலை உண்டாக்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் சௌதிக் பிஸ்வாஸ் இந்திய செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 42 பில்லியன் டாலர் வருவாயில் பகுதி அளவு ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் மருந்துகள் தயாரிப்பு தொழில் துறை, தரக்குறைவான மருந்துகள், குழந்தைகளின் துயர மரணங்கள் ஆகியவற்றின் மூலம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. 2019ம் ஆண்டின் குளிர்காலத்தில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இது ஒரு மர்மமான உடல்நலக்கோளாறு என்று பலரும் …

  21. Jodie Comer : உலகிலேயே அழகான பெண்மணி இவர்தான்! அறிவியல் பூர்வமாக கண்டறிந்தது எப்படி? உலகின் முன்னணி பத்திரிகையான டைம்ஸ் தொடங்கி சிறு பத்திரிகைகள், வலைதளங்கள், அழகுசாதனப் பொருள் நிறுவனங்கள் வரை நடிகைகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்களின் பெயரை உலகின் அழகான பெண்மணி என்று பட்டியலிடுவர். சில வலைதளங்கள் இப்போது கூட ஜெனிஃபர் லோபஸை உலகின் அழகி என போற்றிப்பாடுகிறது. சிஎன்பிசிடிவி 18 போன்ற செய்தித் தளங்கள் பெல்லா ஹதித், தீபிகா படுகோன் போன்ற நடிகைகளைப் பட்டியலிடுகிறது. சில வலைதளங்…

  22. மீண்டும் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா வான்வழித்தாக்குதல்! உக்ரைன் தலைநகர் கீவ்வில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததைத் தொடர்ந்து குறைந்தது மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கள்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி சுமார் 07:00 மணிக்கு வெடிப்புகள் நடந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஒன்று நகர மையத்திற்கு அருகில் வெடித்தது. எனினும், இந்த தாக்குதல்களின் போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. தலைநகரில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 19பேர் உயிரிழந்தனர். ரஷ்ய …

  23. தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்! னாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில் 69 வயதான ஸி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகத் தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜின்பிங், ஹொங்கொ…

  24. உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல்: இரண்டு மாவட்டங்களில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு! உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரண்டு மாவட்டங்களில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருவதால் முபெண்டே மற்றும் அதன் அண்டை மாவட்டமான கசாண்டாவில் உள்ள மதுபானக்கூடங்கள், இரவு விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மூடப்படும். அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டாலும், சரக்கு லொரிகள் மாவட்டத்திற்குள் நுழையவும், வெளியேறவும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எபோலா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய மருத்துவர்களுக்கு தடை விதி…

  25. இரான் நாட்டின் 'கொடூரமான' எவின் சிறையில் பெரும் தீ - வேண்டுமென்றே நிகழ்த்திய சம்பவமா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, ஆன்லைனில் பதியப்பட்ட புகைப்படம் இரானில் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் மோசமான சிறைச்சாலையான எவின் சிறையில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டு நான்கு கைதிகள் மரணமடைந்ததாகவும், 61 கைதிகள் காயமடைந்திருப்பதாகவும் இரானின் அரசு ஊடகம் தெரிவிக்கிறது. ஆனால், பிபிசிக்கு நெருக்கமான சிறைத்துறை வட்டாரத்தினர், இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகம் என்கின்றனர். ஆன்லைனில் பகிரப்பட்ட காணொளிகளில் தீப்பிழம்புகள் மற்றும் புகையைப் பார்க்கமுடிகிறத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.