Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மரணத்துக்குப் பின்னர் மன்னராக பதவியேற்றுள்ள 3ஆம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லுட்டன் நகரத்துக்கு நேற்று முன்தினம் சென்ற(06) அவர், அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்து மன்னரை நோக்கி முட்டையொன்று வீசப்பட்டது. இதனையடுத்து உடனடியாக மன்னரை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரி…

  2. அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு! அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வருடாந்திர மனித உரிமைகள் கூட்டத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். உக்ரைனில் நடக்கும் போர் ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம் என்றும் கூறினார். ரஷ்யா எந்த சூழ்நிலையிலும் ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது என்றும், அதன் அணு ஆயுதங்களால் யாரையும் அச்சுறுத்தாது என்றும் அவர் உறுதியளித்தார். ரஷ்யாவிடம் உலகின் அதிநவீன மற்றும் மேம்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதன் அணுசக்தி மூலோபாயத்தை அமெரிக்காவுடன் ஒப்பிடுவதாகவும் புடி…

    • 12 replies
    • 1.3k views
  3. ஜேர்மனியில் அரசை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது By SETHU 07 DEC, 2022 | 02:14 PM ஜேர்மனியில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சதி செய்தனர் என்ற சந்தேகத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலதுசாரி குழுவொன்றையும், முன்னாள் இராணுவ அங்கத்தவர்களும், ஜேர்மனிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இவர்கள் திட்டமிட்டனர் எனக் கூறப்படுகிறது. 13 ஆம் ஹெய்ன்றிக் இளவரசர் (Prince Heinrich XIII) எனக் கூறப்படும் 71 வயதான ஒரு நபர் இக்குழுவின் திட்டத்தில் முக்கிய நபராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  4. பெண்களிடையே அதிகரித்து வரும் கோபம், மன அழுத்தம், கவலை – என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேல்லப்பின் வருடாந்திர கருத்துக்கணிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் பெண்களிடையே கோபம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கிறது. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தஹ்ஷா ரெனி தனது சமையலறையில் நின்று கொண்டிருந்தபோது, அவருடைய நுரையீரலின் ஆழத்திலிருந்து ஓர் ஆழமான, இருண்ட, வெற்று அலறல் வெளிப்பட்டது. அது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “கோபம், நான் எளிதில் அடையக்கூடிய உணர்ச்சியாக இரு…

  5. வருடம்தோறும் டைம் சஞ்சிகை ஆண்டின் சிறந்த மனிதர் என ஒருவரை தெரிவு செய்யும். இந்த ஆண்டு உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் செலன்ஸ்கியையும் உக்ரேனிய ஓர்மத்தையும் ஆண்டின் சிறந்த மனிதராக தெரிவுசெய்துள்ளது டைம். ஒப்பிட முடியாத பெரும் எதிரிக்கு எதிராக, பெரும் உலக ஆதிக்க சக்திகளின் தன்னலனை, உக்ரேனிற்கு ஆதரவாக திசைதிருப்பி, இராஜதந்திரத்திலும், பேச்சு திறமை மூலம் மக்களை போரில் ஆர்வமாக ஈடுபடசெய்து, உத்வேகத்தை கட்டி எழுப்பி தலைமைதுவத்திலும், இன்னும் பிற அரிய தலைமைத்துவ பண்புகளை வெளிகொணர்ந்தும் போரின் போக்கை, நாட்டின் தலைவிதியை, உலக வராற்றின் ஒரு கணப்பொழுதை தீர்மானிப்பதில் கணிசமான பங்கை செலன்ஸ்கி வகித்தார் என்கிறது டைம் (நேரடி மொழி மாற்றம் அல்ல). இந்த கெளரவத்திற்கு பரிசீலிக்கப…

    • 45 replies
    • 3.1k views
  6. பணக்கார நாடான கத்தாரில் ஏன் இந்த அளவுக்கு வறுமை? பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டேடியங்களை கட்டும்போது உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை கத்தார் குறைத்தே சொல்வதாக ஐஎல்ஓ கூறுகிறது. 8 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தாரில் ஏழ்மையை காண்பதும் அதைப் பற்றிப் பேசுவதும் எளிதான காரியமல்ல. அதைப் பற்றிப் பேசுபவர்களும் மிகவும் கவனமாகவே பேசுகிறார்கள். "இது மிகவும் கடினமான பிரச்னை. முதலில் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நிர்வாகம் இதில் மிகவும் கண்டிப்பாக உள்ளது," என்று தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு டாக்சி டிரைவர் பிபிசி முண்டோவிட…

  7. பாடசாலை மாணவர்கள் இருவருக்கு மரண தண்டனை..! கிம் ஜோங் அதிரடி – வெளியாகிய காரணம் வடகொரியாவில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாணவர்கள் இருவரும் தென் கொரியா மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நாடகங்களை கண்டுகளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வடகொரியாவில் நாடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாணவர்கள் இருவரும் கடந்த ஒக்டோபர் மாதம் பாடசாலையில் வைத்து நாடகங்களை பார்த்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த இரு மாணவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த ஒக்டோபர் மாதத்திலேயே இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணையும் முடித்து மரண தண்டனையும் நிறைவ…

  8. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த புடின் தன்மீதான வதந்திகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தலைநகர் மொஸ்கோவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) மாடி படிக்கட்டில் தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புடின் பொது வெளியில் தோன்றினார். குண்டு வெடிப்பில் சேதமடைந்த கிரீமியா பாலத்தை சீரமைக்கும் பணி முடிந்து திறக்கப்பட்டுள்ளது. இந்த ப…

    • 10 replies
    • 1.1k views
  9. நாடகம் பார்த்த இரு சிறுவர்களுக்கு வடகொரியாவில் மரண தண்டனை? தென்கொரிய நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு, வடகொரியா மரண தண்டனை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. K-Drama series என உலகம் முழுதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது, விநியோகிப்பது வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வட கெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சேர்ந்து, ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுவர்களை பொதுஇடத்தில் வைத்து உள்ளூர்வாசிகள் முன்னிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறத…

  10. எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்! எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. முக்கியமாக கிழக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கில், ஒடேசா மின்சாரம் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த இந்த ஏவுகணை தாக்குதல்கள், முந்தைய சந்தர்ப்பங்களில் இருந்ததை விட குறைவான சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. ரஷ்யா வீசிய 70 ஏவுகணைக…

  11. ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் மாணவிபலி - புகலிடக்கோரிக்கையாளர் மீது குற்றச்சாட்டு By RAJEEBAN 06 DEC, 2022 | 12:29 PM ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பாடசாலை மாணவியொருவர் கொல்லப்பட்டுள்ளார். ஜேர்மனியின் தென்பகுதியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 14 மற்றும் 13 வயது மாணவிகள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இல்லர்கிர்ச்பேர்க் என்ற கிராமத்தில் உள்ள அகதிகளிற்கான நிலையமொன்றிலிருந்து வெளியே வந்த நபர் ஒருவர் இந்தகத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன்போது 14 வயது மாணவி உயிரிழந்துள்ளார். எரித்திரியாவை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே இந்த கத்திக…

    • 13 replies
    • 659 views
  12. மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள நியூயார்க்கர்கள் இன்னும் பெரிய பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது சாலைகளை மூடியுள்ளது, வாகனம் ஓட்ட தடைகளை ஏற்படுத்தியது மற்றும் நன்றி விடுமுறைக்கு முந்தைய வார இறுதியில் விமானங்களை ரத்து செய்துள்ளது. தேசிய வானிலை சேவையின்படி, வெள்ளிக்கிழமை மாலைக்குள், நியூயார்க்கின் ஆர்ச்சர்ட் பார்க் நகரில், எரி கவுண்டியில் உள்ள பஃபேலோவுக்கு அருகிலுள்ள தெருக்களில் 5.5 அடிக்கு பனி மூடியிருந்தது. பனிப்பொழிவு தீவிரமடைந்ததால், இரண்டு மாவட்ட குடியிருப்பாளர்கள் மண்வெட்டி மற்றும் மைதானத்தை அழிக்க முயற்சிப்பது தொடர்பான இருதய சிக்கல்களால் இறந்தனர் என்று கவுண்டி நிர்வாகி மார்க் போலன்கார்ஸ் கூறினார். "நாங்கள் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை அனுப்புகிறோம், இந்த பனி …

  13. அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதாக கிம் ஜாங் அறிவிப்பு! அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதாக கிம் ஜாங் அறிவிப்பு! அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களோடு சந்திப்போம் என்றும் தாக்குதல்களை எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்காவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக தலைநகர் பியான்யாங்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை அவர் நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=167872

  14. மகளை உலகுக்குக் காட்டிய வடகொரிய அதிபர் கிம் - புகைப்படங்களால் எழும் புதிய கேள்விகள் பட மூலாதாரம்,KCNA VIA REUTERS படக்குறிப்பு, வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் அவருடைய மகள் கிம் சூ-ஏ 59 நிமிடங்களுக்கு முன்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தனது இளம் மகளுடன் முதன்முறையாக பொதுவெளிக்கு வந்ததன் மூலம், அவருடைய மகளின் இருப்பு குறித்து நிலவி வந்த வதந்தி உறுதியாகியுள்ளது. அவர் பெயர் கிம் சூ-ஏ என நம்பப்படுகிறது. கடந்த வெள்ளியன்று நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ஆய்வு செய்த போது கிம் ஜாங்-உன்னுடன் அவர் இருந்தார். அப்போது இருவரும் கைகோர்த்து நின்றனர். உ…

  15. கத்தார் பணக்கார நாடாக மாறுவதற்குக் காரணமான 3 நிகழ்வுகள் இவைதான்! கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோஸ் கார்லோஸ் கியூட்டோ பதவி,பிபிசி முண்டோ சேவை, சிறப்பு செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அண்மைகாலம் வரை கத்தார் தலைநகர் தோஹா, நவீன தொழில்நுட்பம், வடிவமைப்பு ஆகியவற்றுக்கு நீண்ட தொலைவில் இருந்தது. உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தத் தொடங்கி சில நாட்கள் கழிந்த நிலையில், ஏறக்குறைய சமூக அநீதி பிம்பத்தைத்தான் இப்போதைய 2022ஆம் ஆண்டு வரை கத்தார் கொண்டிருந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அதாவது 1922ஆம் ஆண்டில், இது ஒரு சிறிய வளைகுடா நாடாக 30 லட்சம்…

  16. “உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை”: அமெரிக்கா அறிவிப்பு உக்ரைன் மீது ரஷியா மாதக்கணக்கில் போர் செய்து வருகிறது. இந்த நிலையில், ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “(ரஷிய அதிபர் விளாடிமிர்) புடின் தனது படைகளை வெளியேற்றுவதற்கு அடுத்த சிறந்த விஷயம் ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுவது என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். “பேச்சுவார்த்தைகளுக்கு எப்போது தயாராக இருக்கிறார் என்பதையும், அந்த பேச்சுவார்த்தைகள் எப்படி இர…

  17. அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா! வட கொரியாவில் இருந்து அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு திறன் உள்ள ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தலைநகர் பகுதியில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு ஏவப்பட்ட இந்த ஏவுகணை அந்நாட்டின் வடகிழக்கு பகுதி முழுவதையும் கடந்து ஜப்பானின் ஹகாய்டோ தீவின் வடக்குப் பகுதியில் விழுந்தது என்றும் இந்த ஏவுகணை நிலப்பரப்பில் இருந்து அதிகபட்சமாக 1,000 கி.மீ. மேல்நோக்கி சுமார் 6,000 முதல் 6,100 கி.மீ. தொலைவுக்கு பறந்துள்ளது என்றும் தென் கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை உயரமான பகுதியில் இருந்து ஏவப்ப…

  18. ஊடகவியலாளர் ஜமால் கஷோகி படுகொலை: சவுதி பட்டத்து இளவரசருக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு! ஊடகவியலாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நாட்டின் உயரிய பொறுப்பான பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு அமெரிக்காவில் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நீதிமன்றங்களில் இருந்து சவுதி இளவரசருக்கு பாதுகாப்பு அளிப்பது முழுக்க முழுக்க சட்ட ர…

  19. ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களால் 10 மில்லியன் உக்ரைனியர்களுக்கு மின்சாரம் தடை! ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களால் 10 மில்லியன் உக்ரைனியர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளுமன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது இரவு உரையில் கூறினார். உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு, 6 கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஐந்து ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். …

  20. அமெரிக்காவில் சீன ரகசிய காவல் நிலையங்கள் - கவலையில் எஃப்பிஐ பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுடன் தொடர்புடைய ரகசிய "காவல் நிலையங்கள்" அமெரிக்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன என்ற தகவலால் அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கவலை" கொண்டுள்ளது. Safeguard Defenders என்ற அரசு சாரா அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய ரகசிய நிலையங்கள், நியூயார்க் உட்பட உலகம் முழுவதும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே, இது தொடர்பாக அமெரிக்க மூத்த அரசியல்வாதிகளிடம் பேசும்போது, நாடு முழுவதும் இதுபோன்ற மையங்கள் இருப்பதாக கூறப்பட்டும்…

  21. இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம்:இலங்கைக்கு பாதிப்பில்லை 18 NOV, 2022 | 08:48 PM இந்து சமுத்திரத்தில், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் சற்றுமுன் ஏற்பட்டுள்ளது. எனினும், இப்பூகம்பத்தினால் இலங்கை;கக பாதிப்பு எதுவுமில்லை என அனர்த்த முகாமைததவ நிலையம் தெரிவித்துள்ளது. சுமத்திரா தீவின் பேங்குலு நகருக்கு தென்மேற்கு திசையில் 202 கிலோமீற்றர் தொலைவில் 25 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பூகோளவியல் அளவையியல் மையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/140490

  22. ஈராக்கில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 15 பேர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 06:31 PM ஈராக்கில் எரிபொருள் கேஸ் சிலிண்டர் வெடித்ததையடுத்து கட்டடம் இடிந்ததால் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். சுலைமானியா நகரில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறார்களும் ஆவர் என மாகாண ஆளுநர் ஹவால் அபு பக்ர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/140488

  23. மெக்ஸிக்கோவில் ஹெலி வீழ்ந்ததால் ஐவர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 01:30 PM மெக்ஸிக்கோவில் ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்ததால் ஐவர் உயிரிழந்துள்ளனர். அகுவாஸ்கலியென்டிஸ் மாநிலத்தில் வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரேசா ஜிமேனெஸ் தெரிவித்துள்ளார். அகுவாஸ்கலியென்டிஸ் மாநில பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி போர்பிரியோ சான்செஸ் மென்டோஸாவும் அடங்கியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு விபத்தாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆளுநர் தெரேசா ஜிமேனெஸ் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/140444

  24. பலஸ்தீன அகதிகள் முகாமில் தீ! 9 சிறார்கள் உட்பட 21 ‍பேர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 09:17 AM பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் ஏற்பட்ட தீப் பரவலில் குறைந்தபட்சம் 21 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காஸாவின் வடபகுதியிலுள் ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது. இறந்தவர்களில் 9 சிறார்களும் அடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக காஸாவிலுள்ள இந்தோனேஷிய வைத்தியசாலையொன்றின் அவசரசேவைப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் சலேஹ் அபு லைலா தெரிவித்துள்ளார் குறித்த பகுதியில் பெருமளவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தீ விர…

  25. மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: 2 ரஷ்யர்கள்- ஒரு உக்ரைனியருக்கு ஆயுள் தண்டனை! மலேசியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, 2 ரஷ்யர்கள் மற்றும் 1 உக்ரைன் கிளர்ச்சியாளர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்தது. விசாரணை நடத்திய சர்வதேச விசாரணைக்குழு, தனது விசாரணை அறிக்கையில் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தியது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.