Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரிட்டன் பிரதமர் தேர்தல் ; இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு By T. SARANYA 02 SEP, 2022 | 02:48 PM பிரிட்டன் பிரதமருக்கான தேர்தல் பிரச்சாரம் 6 வாரங்களாக நடந்த நிலையில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜோன்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். அவருக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் பிரச்சா…

  2. கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி By RAJEEBAN 02 SEP, 2022 | 04:55 PM ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்ணான்டஸ் டி கிச்னர் கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளார். துணைஜனாதிபதியை நோக்கிய துப்பாக்கியை நீட்டிய நபர் ஒருவர்கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுவதையும் அவ்வேளை நபர் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் பிரேசிலை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீத…

  3. ருவாண்டாவிற்கு அனுப்பப்படும்... புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர், சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம்! ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. குடியேற்றவாசிகளின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவர்களை அனுப்பும் ஒரு தொண்டு நிறுவனமான ‘மருத்துவ நீதி’ நிறுவனம், ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் என்று உட்துறை அலுவலகம் கூறிய 51 பேரை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியது. அவர்களில், 36 பேர் பற்றிய கூடுதல் தகவல்களை சேகரிக்க முடிந்தது, அவர்கள் அனைவரும் கென்ட் கடற்கரைக்கு டிங்கிகளில் வந்ததாக அறியப்பட்டது. மருத்துவர்கள் இதுவரை 17 பேரை மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்த…

  4. மிகையீல் கோர்பச்சேவ் காலமானார்: சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் மேட் மர்ஃபி & ராபர்ட் கிரீன் ஆல் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகையீல் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தில் நிலவிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தியவர், அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்குமான பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர், கம்யூனிஸ்ட் நாடுகளின் தொகுப்பை முன்னின்று நடத்திய சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் என்று வரலாற்றில் பல அடையாளங்கள் கொண்ட மிகையீல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார். 1985ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலை…

  5. சேகுவேராவின் மகன் திடீர் மரணம் By DIGITAL DESK 5 31 AUG, 2022 | 03:08 PM புரட்சியாளர் சேகுவேராவின் மகன் கமீலோ சேகுவேரா தனது 60 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவேரா. கியூபாவை சேர்ந்த சேகுவேரா புரட்சியாளர், வைத்தியர், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர். சேகுவேராவின் இளைய மகன் கமீலோ சேகுவேரா. இவர் சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கமீலோ சேகுவேரா வெனிசூலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். உயிரிழக்கும் போது அவருக…

  6. சீனாவின் 3 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய தாய்வான்! -சி.எல்.சிசில்- தாய்வானுக்குச் சொந்தமான சிறிய தீவுகளின் மீது பறந்து கொண்டிருந்த மூன்று சீன ட்ரோன்களை தாய்வான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன ஆளில்லா விமானங்களை நோக்கி அவர்கள் சுடுவது இதுவே முதல் முறை. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சில வாரங்களுக்கு முன்பு தாய்வானுக்கு விஜயம் செய்தபோது இந்த இரு தரப்புக்கும் இடையேயான பதற்றம் மேலும் தீவிரமானது. பெலோசியின் வருகையை சீனா கடுமையாக எதிர்த்தது, ஆனால் எதிர்ப்பையும் மீறி அவர் தாய்வானுக்கு விஜயம் செய்தார். தாய்வா…

  7. ஐரோப்பாவிற்கான... எரிவாயு விநியோகத்தை, முற்றிலுமாக நிறுத்தியது ரஷ்யா! பழுதுபார்ப்பு தேவை என்று கூறி, ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்ட்ரீம்- 1 குழாய்த் திட்டம் மீதான கட்டுப்பாடுகள், அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான போர் ஆயுதமாக எரிசக்தி விநியோகத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர், பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள் தான் ரஷ்யாவை குழாய் வழியாக எரிவாயு வழங்குவதைத் தடுக்க…

  8. "முஸ்லிம்" இன சிறுபான்மையினரை... சீனா தடுத்து வைத்திருப்பது, மனிதகுலத்திற்கு எதிரானது: ஐ.நா. மனித உரிமைகள்! சின்ஜியாங்கின் வடமேற்குப் பகுதியில் உய்குர் மற்றும் பிற பெரும்பான்மையான முஸ்லிம் இன சிறுபான்மையினரை சீனா தடுத்து வைத்திருப்பது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) பிற்பகுதியில் நீண்ட தாமதமான அறிக்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இதனைத் தெரிவித்தது. 45-பக்க அறிக்கையில், சீனா தன்னிச்சையாக சுதந்திரம் பறிக்கப்பட்ட அனைத்து நபர்களையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களது குடும்பங்களை கண்டுபிடிக்க முடியாமல் போனவர்களின் இருப்பிடத்தை தெளிவுபடுத்…

  9. சீன Vs தைவான்: தீவுக்குள் பறந்த ட்ரோன்களை சுட்டு விரட்டிய படையினர் பிரான்சஸ் மாவோ பிபிசி நியூஸ் 31 ஆகஸ்ட் 2022, 11:40 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கின்மென் என்பது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒரு பகுதி. சீனாவுக்கு அருகில் உள்ள தமது தீவுகளுக்கு மேலே பறந்து சென்ற சீன ட்ரோன்களை எச்சரிக்கும் விதமாக தைவான் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு மூன்று ட்ரோன்களும் மீண்டும் சீன நிலப்பகுதியை நோக்கி திரு…

  10. நைஜீரிய முன்னாள் ஆட்சியாளர் சானியினால் பதுக்கப்பட்ட 23 மில்லியன் டொலர்களை மீள வழங்க இணக்கம் By VISHNU 31 AUG, 2022 | 03:38 PM நைஜீ­ரி­யாவின் முன்னாள் இரா­ணுவ ஆட்­சி­யாளர் சானி அபாச்­சா­வினால் திரு­டப்­பட்டு, பதுக்­கப்­பட்ட மேலும் 23 மில்­லியன் டொலர்­களை நைஜீ­ரிய அர­சுக்கு மீள வழங்­கு­வ­தற்கு அமெ­ரிக்கா முன்­வந்­துள்­ளது. இதற்­கான ஒப்­பந்தம் கடந்த 23 ஆம் திகதி கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. ஆபி­ரிக்க கண்­டத்தின் மிக அதிக சனத்­தொ­கையை கொண்ட நாடான நைஜீ­ரியா, எண்ணெய் ஏற்­று­ம­தி­யிலும் முன்­னிலை வகிக்­கி­றது. அந்­நாட்டின் இரா­ணுவத் தள­ப­தி­யா­கவும் பின்னர் பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்த ஜெனரல் சானி…

  11. உக்ரைன் போருக்கு மத்தியில்... ரஷ்யாவும், சீனாவும்... பிரமாண்ட போர் பயிற்சிக்கு ஆயத்தம்! உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவும் சீனாவும் பிரமாண்ட போர் பயிற்சிக்கு ஆயத்தமாகி வருகின்றன. இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகளை வெளிப்படுத்த சீனாவின் படைகளுடன் சேர்ந்து பெரும் இராணுவப் பயிற்சிகளை நடத்தப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. வோஸ்டாக் 2022 (கிழக்கு 2022) பயிற்சியானது செப்டம்பர் 1-7 திகதிகளில் ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் ஜப்பான் கடலில் பல்வேறு இடங்களில் நடைபெறும். இந்த கூட்டுப்பயிற்சி 50,000 துருப்புக்கள் மற்றும் 140 விமானங்கள், 60 போர்க்கப்பல்கள் உட்பட 5,000 ஆயுதப் பிரிவுகளை உள்ளடக்கியது. பாரிய பயிற்சிக்கு தயாராகும…

  12. உக்ரைனில் இருந்து... ரஷ்யா வரும் மக்களுக்கு, நிதியுதவி: புடின் அறிவிப்பு. உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இவ்வாறு நிதி சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சனிக்கிழமை கையெழுத்திட்டார். ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட உக்ரைனை விட்டு ரஷ்யா வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கும் 10 ஆயிரம் ரூபிள் மாதாந்த ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு உக்…

    • 58 replies
    • 2.3k views
  13. டயானா- ' மக்கள் இளவரசி' மறைந்து 25 ஆண்டுகள் 31 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இளவரசி டயானா இறந்து ஆகஸ்ட் 31, 2022-உடன் இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் வாழ்வின் சில தருணங்களில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறோம். பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, டயானா ஃபிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் நாள் , நார்ஃபோக்கில் பிறந்தார். ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுண்டஸ்ஸிற்க்கு இளைய மகளாக பிறந்தார் டயானா. பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, அவரின் பெற்றோரின் விவா…

  14. 40 வருடங்களிற்கு பெண்ணொருவர் காணாமல்போனது குறித்து அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று தீர்ப்பு - கணவரே குற்றவாளி By RAJEEBAN 30 AUG, 2022 | 01:02 PM சிட்னியின் முன்னாள் ஆசிரியர் கிறிஸ்டோவ்சன் தனது மனைவியை 40 வருடங்களிற்கு முன்னர் கொலை செய்தார் நியுசவுத்வேல்சின் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 1982ம் ஆண்டு ஜனவரிமாதம் லினட்டே டோவ்சன் சிட்னியின் வடபகுதி கடற்கரையிலிருந்து காணாமல்போனமை குறித்தே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தனது குழந்தைகளை பராமரிப்பதற்காக வந்த பெண்ணுடன் தடையற்ற உறவைபேணுவதற்காக டோவ்சன் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டினார் என வழக்கு விசாரணையின் அரச தரப்பு குற்றம்சாட்டியது. …

  15. லிபியாவில்... அரசியல் பிரிவுகளுக்கு இடையே, மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்! லிபியா தலைநகர் திரிபோலியில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கொடிய மோதலில், 32பேர் உயிரிழந்துள்ளதோடு 159பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் இளம் நகைச்சுவை நடிகர் முஸ்தபா பராக்காவும் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சனிக்கிழமையன்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆயுதப் படைகள், கிழக்குப் நாடாளுமன்றத்தால் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் கட்டுப்பாட்டிற்கு போட்டியிடுகின்ற ஃபாத்தி பாஷாகாவிற்கு விசுவாசமான போராளிகளின் தொடரணியை பின்னுக்குத் தள்ள முயன்ற போது இந்த மோதல் வெடித்தது. இந்த மோதலின்…

    • 21 replies
    • 1.1k views
  16. உலகிலேயே... முதல் முறையாக, "ஹைட்ரஜனை" எரிபொருளாகக் கொண்டு.. இயங்கும் ரயில் சேவை, ஜேர்மனியில் ஆரம்பம்! உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இரயில்களின் சேவை ஜேர்மனியில் நேற்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது. லோயர் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகரங்களை இணைக்கும் 100 கி.மீ. இரயில் பாதையில் இந்த சேவை வழங்கப்படுகிறது. பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டோம் தயாரித்த ரயில்கள், குக்ஸ்ஹவன், ப்ரெமர்ஹேவன், ப்ரெமர்வோர்டே மற்றும் பக்ஸ்டெஹூட் ஆகிய வடக்கு நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் பிராந்திய ரயில் நிறுவனமான எல்.என்.வி.ஜி.ஆல் இயக்கப்படுகிறது. இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் இரயில்களுக்…

  17. "நேட்டோ" நாடுகளுக்கிடையே... மோதல்: துருக்கிய போர் விமானங்களை, கிரேக்கம் குறிவைத்ததாக குற்றச்சாட்டு! எஸ்.-300 ஏவுகணை அமைப்பின் ரேடார் துருக்கிய போர் விமானங்களை குறிவைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக ஆதாரங்களை மேற்கோள் காட்டி துருக்கி அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவின் மேற்கே 3,000 மீட்டர் (10,000 அடி) உயரத்தில் பறந்த போது, கிரேக்கத்தின் துருக்கிய எஃப்.-16 போர் விமானங்களை, ரஷ்ய தயாரிப்பான எஸ்.-300 இன் இலக்கு-கண்காணிப்பு ரேடார் குறி வைத்ததாக துருக்கி கூறிள்ளது. எனினும், துருக்கிய விமானங்கள் தங்கள் பணியை முடித்துவிட்டு எதிரியான சூழலையும் மீறி தங்கள் தளங்களுக்குத் திரும்பியதாக அது மேலும் கூறியது. ரேடார் லொக்-…

  18. ஐரோப்பா வியாழக்கிழமை பாரிய கதிரியக்க விபத்தை மயிரிழையில் தவிர்த்துள்ளது - உக்ரைன் ஜனாதிபதி அதிர்ச்சி தகவல் By RAJEEBAN 26 AUG, 2022 | 01:01 PM ஐரோப்பா கதிரியக்க விபத்தொன்றை மயிரிழையில் தவிர்த்துக்கொண்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை ரஸ்யா ஆக்கிரமித்துள்ள ஜபோரிஜியாஅணுமின்நிலையம் உக்ரைனின் மின் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டதால் ஐரோப்பா கதிர்வீச்சு பேரழிவு ஆபத்தை எதிர்கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். இன்னுமொரு மின் இணைப்பு இருந்ததால் ஜபோரிஜியா அணுஉலை மீண்டும் செயற்பட ஆரம்பித்தது என அவர் தெரிவித்துள்ளார். தீமூண்டதால் மேல்நிலை மின்கம்பிகள் சேதமடைந்தன அணுமின்ந…

  19. அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தம் குறித்து இணக்கப்பாடு ஏற்படுவதை ரஸ்யா குழப்பியது - அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு By RAJEEBAN 28 AUG, 2022 | 12:23 PM அணுசக்தி உடன்படிக்கை குறித்த ஐநா உச்சிமாநாட்டை ரஸ்யா வேண்டுமென்றே தடுக்கின்றது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் குற்றம்சாட்டியுள்ளார் உக்ரைன் அணுஉலைக்கு அருகில் கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நியுயோக்கில் ஐநாவில் 151 நாடுகள் மத்தியில் நான்குவார பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற பின்னரும் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தம் குறித்த மறு ஆய்வு மாநாடு வெற்றியளிக்காமமை குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆ…

  20. நீருக்கடியில் உள்ள... கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, உக்ரைனிய கடற்படையினருக்கு... ட்ரோன் பயிற்சி! உக்ரைனிய கடற்படையினருக்கு நீருக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ட்ரோன் பயிற்சிகளை றோயல் கடற்படையினர் அளித்து வருகின்றனர். இது ரஷ்ய துருப்புகளால் கடற்பகுதியில் நிரப்பப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அழிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும். பத்துக்கும் மேற்பட்ட உக்ரைனிய பணியாளர்கள் ஏற்கனவே தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு பயிற்சி குழாமில் மூன்று வார பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளனர். கப்பல்களில் இருந்து தரவை எவ்வாறு இயக்குவது மற்றும் பகுப்பாய்வு செய்வது என்பதைக் கற்றுக்கொண்டனர். சோனார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ட்ரோன்கள் கடற்பரப்புகளை…

  21. பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீப்பிடித்த பயணிகள் கப்பல் -80 பேர் மீட்பு Digital News Team 2022-08-27T14:51:45 -சி.எல்.சிசில்- பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரிலிருந்து பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் இருந்தனர். துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில் தீப்பிடித்தது. அப்போது கப்பல் துறைமுகத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இருந்தது. கப்பல் முழுவதும் தீ பரவியதால் பலர் கடலில் குதித்தனர். உடனே கடலோர காவல்படையினர் விரைந்து சென்று மீட்புப் …

  22. சீன விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா: பொறுப்பற்ற செயல் என சீனா கண்டிப்பு! அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் விமானங்களை அமெரிக்க விமான நிறுவனங்கள் ரத்து செய்த நிலையில் இது பொறுப்பற்ற செயல் என சீன தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது அமெரிக்கா ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 விமான சேவைகளை சீனா ரத்து செய்துள்ளது இதற்கு பதிலடியாக சீனாவின் 4 விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகளை அமெரிக்கா ரத்து செய்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்ற செயல் என வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது ஆனால் அமெரிக்காவில் இருந்து புறப்படும் கொரோனா தொற்று இல்லாத பயணிகளுக்கு சீனா சென்ற ப…

  23. ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவை விலைக்கு வாங்குகிறதா சீனா? ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவு ஒன்றை சீனா விலைக்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது ஆஸ்திரேலியா அருகில் உள்ள கான்க்லிட் என்ற தீவின் சொந்தகாரர் ஸ்மித் என்பவர் இந்த தீவை ஆஸ்திரேலிய அரசுக்கு விற்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர் கூறிய விலையை கொடுக்க ஆஸ்திரேலியா அரசு தர தயாராக இல்லை என்றும் கூறப்பட்டது இந்த நிலையில் தங்களுடைய தீவு வழியாகத்தான் ஆஸ்திரேலியாவின் ரகசிய கேபிள்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த தீவை ஆஸ்திரேலியா வாங்கவில்லை என்றால் சீனாவுக்கு விற்றுவிடுவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனா இந்த தீவ…

    • 0 replies
    • 224 views
  24. பிரித்தானியா.. வெளியுறவுத் துறை அமைச்சர், லிஸ் ட்ரஸின்... சர்ச்சையான, கருத்து: மக்ரோன் பதில்! அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் திகழும் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பதிலளித்துள்ளார். நார்விச்சில் நடந்த இறுதித் தலைமைத்துவக் கூட்டத்தில் உரத்த கரவொலி எழுப்பும் வகையில், ‘மக்ரோன் பிரித்தானியாவின் நண்பரா, பகைவரா என்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். அவரது சொல்லைவிட செயலைக் கொண்டுதான் முடிவெடுக்க முடியும்’ என கூறினார். அத்துடன், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ‘சொற்கள் அல்ல செயல்களால்’ அவரைத் கையாளுவேன் என்று அ…

  25. புடினின்.. நெருங்கிய நண்பரின் மகள், கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார். 29 வயதான தர்யா டுகினா மாஸ்கோவிற்கு வெளியே ஒரு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ‘புடினின் மூளை’ என்று அழைக்கப்படும் அவரது தந்தை ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டுகின், ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் ஒரு முக்கிய அதி-தேசியவாத சித்தாந்தவாதி ஆவார். அலெக்சாண்டர் டுகினும் அவரது மக…

    • 65 replies
    • 3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.