Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. குவைத் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருட சிறை By DIGITAL DESK 5 28 OCT, 2022 | 05:14 PM குவைத்தின் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருடங்களுக்கு அதிகமான சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. லஞ்சம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் குவைத் மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிபதிகளுக்கு இத்தண்டனைகளை விதித்துள்ளது. நீதிபதிகள் 7 பேருக்கு 7 முதல் 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டதாக குவைத் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நீதிபதிகள் இருவரை பணியிலிருந்து நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. மற்றொரு நீதிபதி நிராபராதி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபத…

  2. ஐரோப்பாவில் 2035ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல்- டீசல் கார்களுக்கு தடை! எதிர்வரும் 2035ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையை தடைசெய்யும் சட்டத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இது மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்துவதையும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டது. அத்துடன், மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்தவும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த தசாப்தத்தில் புவி வெப்பமடைதலுக்கு காரணமான வாயுக்களின் உமிழ்வை 55 சதவீதம் குறைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை இலக்குகளை அடைவதற்கா…

  3. உலக அமைதி- வளர்ச்சியைப் பாதுகாக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட சீனா இணக்கம்! உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பாதுகாக்க சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செல்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாடு மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போரைக் சீனா கண்டிக்க மறுப்பது குறித்து அமெரிக்கா என்ன கருதுகிறது என்பது குறித்து இருநாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக பதற்றம் நிலவி வருகின்ற நிலையில், சீன ஜனாதிபதியின் இந்த சமரச கருத்து வந்துள்ளது. சீன ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக பதவியேற்ற ஸி ஜின்பிங், தாய்வானில் ‘வெளிநாட்டு தலையீடு’ என்று கூறிய…

  4. மனிதகுல வரலாறு: பண்டைய உலகின் மர்மமான 5 புனித இடங்கள் கிரேம் கிரீன் . ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,CHRIS RAINIER மங்கோலியாவின் மர்மமான மான் கற்கள் முதல், இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் நகரங்கள் வரை, மக்கள் தங்களது வாழ்க்கை, மரணம் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளும் பல முயற்சிகள் பூமி முழுவதும் கிடக்கின்றன. வாழ்க்கையின் அர்த்தம் என்பது மர்மமாக இருக்கிறது. இது காலங்காலமாக கலாசாரங்களுடன் மல்லுக்கட்டியே வந்திருக்கிறது. இது கிரகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் கடவுள்களை கெளரவப்படுத்த கட்டடக்கலை அற்புதங்களைக் கொண்ட புனித ஸ்தலங்களை உருவாக்குவதை …

  5. ரேடியம்: பல பெண்களுக்கு பயங்கரமான மரணத்தைக் கொடுத்த இருட்டில் ஒளிரும் பொருள் வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர் 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேரி கியூரி - பியரி கியூரி மூக்கை சுத்தம் செய்யும் போது இருட்டில் பளபளத்த கைக்குட்டை கிரேஸ் ஃப்ரீருக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால் தன் வாழ்க்கையில் இருளின் ஆரம்பம் இது என்று அவர் அறிந்திருக்கவில்லை. கிரேஸ் 1917 வசந்த காலத்தில் 70 பெண்களுடன் சேர்ந்து ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் அமெரிக்கா முழுவதும் நிறுவப்பட இரு…

  6. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகிப்போட்டியின் பின்னர் நடந்த மோதல் சம்பவம் காரணமாக அந்த போட்டி நடத்தப்பட்ட மண்டபத்தை இனிவரும் காலங்களில் இலங்கையர்கள் ஒழுங்கு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு வழங்குவதில்லை என அதன் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கடந்த 21 ஆம் திகதி குறித்த மண்டபத்தில் நடந்த மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகிப்போட்டியின் போது இரண்டு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதுடன் பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அழகியாக தெரிவு செய்யப்படட ஏஞ்சலியா குணசேகர இந்த போட்டியில் மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகி…

  7. அணு ஆயுத தாக்குதல் தடுப்புப் படையின் தயார் நிலை குறித்து புடின் ஆய்வு: உலக நாடுகள் அச்சம்! ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் தடுப்புப் படையின் தயார் நிலை குறித்து, அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆய்வு செய்துள்ளார். அணு ஆயுதத்தை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் மற்றும் குறைந்த உயரத்தில் அதிக வேகத்தில் பறந்து விமானப்படை மற்றும் கடற்படை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளின் தயார் நிலை குறித்த ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது. இதனை ஜனாதிபதி புடின் ஆய்வு செய்ததாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை கிரெம்ளின் தெரிவித்துள்ளது. முன்னதாக, சக்தி குறைந்த அணு ஆயுதங்களை தங்கள் நாட்டிற்கு எதிராக பயன்படுத்த உக்ரைன் திட்டமிட…

  8. உகண்டாவில் பார்வையற்றோர் பாடசாலையில் தீ : 11 பேர் பலி ! By DIGITAL DESK 5 26 OCT, 2022 | 10:38 AM உகண்டாவில் பார்வையற்றோர் பாடசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலா அருகில் முகோனா என்ற இடத்தில் பார்வையற்றோருக்காக சலாமா என்ற பெயரில் ஒரு பாடசாலையொன்று இயங்கி வருகிறது. குறித்த பாடசாலை, நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென தீப்பிடித்து பாடசாலை முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை போராடி அணைத்துள்ளனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 11 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப…

  9. யுக்ரேன் - ரஷ்யா போர்: அணுக்கழிவு வெடிகுண்டு எனப்படும் 'டர்ட்டி பாம்' என்றால் என்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் அதே போல ரேடியோ கதிர்வீச்சு பொருட்கள் அடங்கிய கருவியை கொண்டு உருவாக்கப்படும் 'டர்ட்டி பாம்' எனப்படும் அணுக்கழிவு வெடிகுண்டை யுக்ரேன் பயன்படுத்த உள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிரடி தகவலை வெளியிட்டார். அதே நேரத்தில் அவர் அதற்கான ஆதாரம் எதையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் யுக்ரேன், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றன. ரஷ்யா என்ன சொல்கிறது? ரஷ்யா…

  10. மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தெரிவு ! ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாவோ சேதுங்கிற்குப் பின்னர் நாட்டில் அதிக காலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ஜின்பிங் பெற்றுள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இன்று அதன் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங்கை ஐந்தாண்டு காலத்திற்கு தெரிவு செய்துள்ளது. சீனப் பொருளாதாரத்திற்கு அதிகரித்து வரும் சவால்களுக்கு மத்தியில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜி ஜின்பிங் தனது பதவிக்காலத்தில் தாய்வானை சீனாவின் நிலப்பரப்புடன் இணைப்போம் என்ற பிரசாரத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வந்த…

  11. ரிஷி சூனக்: நிதியமைச்சர் முதல் 'பிரிட்டிஷ் ஆசியர்' பிரதமராவது வரை - படங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமராகும் முதலாவது 'பிரிட்டிஷ் ஆசியர்' என்ற வகையில் ரிஷி சூனக் வரலாறு படைத்திருக்கிறார் பிரிட்டன் பிரதமராகும் முதலாவது பிரிட்டிஷ் ஆசியராக ரிஷி சூனக் வரலாறு படைத்துள்ளார். அவர் புதிய கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக வாக்களித்து தேர்வான பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக, கடந்த கோடை காலத்தில் கட்சிக்குழுவுக்கு தலைமை தாங்கும் போட்டியில் சூனக் தோல்வியுற்ற பிறகு, லிஸ் டிரஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரானார். ஆனால், பதவிக்…

  12. அமெரிக்காவில் உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் உட்பட மூவர் உயிரிழப்பு: 7பேர் காயம்! அமெரிக்காவின் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி 09:00 மணிக்கு சென்ட்ரல் விஷுவல் அண்ட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பாடசாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாடசாலைக் கட்டடத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. துப்பாக்கிதாரியின் ஆயுதம், தாக்குதலின் இடைநடுவே செயலிழந்ததால், பல உயிர்கள் …

  13. தரையிறங்கும் போது புல்வெளியில் பாய்ந்த விமானம் தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் பயணிகள் விமானம், பிலிப்பைன்ஸ் நாட்டின் மேக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்தது. விமானம் நேற்று இரவு மேக்டன்-செபு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, அங்கு கனமழை பெய்துகொண்டிருந்ததால் 2 முறை விமானத்தை தரையிறக்க நடந்த முயற்சி தோல்வியடைந்தது. மூன்றாவது முறையாக விமானத்தை விமானி தரையிறக்க முற்பட்டார். அப்போது, கனமழை காரணமாக மழைநீர் தேங்கியதால் விமான ஓடுதளம் வழுவழுப்புடன் இருந்துள்ளது. விமானி தரையிறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்வெளி…

    • 0 replies
    • 519 views
  14. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் பல மாதங்களாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், 1 இலட்சம் தொன் விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்று அழிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செர்காசி பகுதியில் உள்ள சிம்லா கிராமத்தில் உள்ள ஒரு எரிபொருள் கிடங்கில் உக்ரைன் விமானப் படைகளுக்கு உபயோகப்படுத்த 1 இலட்சம் தொன்களுக்கும் அதிகமான விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த எரிபொருள் கிடங்கு அழிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://…

  15. சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து வெளியே இட்டுச் செல்லப்பட்ட முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவ் 46 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருந்து ஹு ஜின்டாவ் வெளியே இட்டுச் செல்லப்படும் காட்சி. அதிகாரம் மிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், மேடையில் அதிபர் ஷி ஜின்பிங் அருகே அமர்ந்திருந்த முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவ் திடீரென அங்கு வந்த அதிகாரிகளால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கு விளக்கம் ஏதும் தரப்படவில்லை. 2003 முதல் 2013 வரை சீனாவின் அதிபராக இருந்த ஹு ஜின்டாவுக்கு தற்போது வயது 79. இவருக்கு அடுத்தபடியாகவே, ஷி ஜின்பிங் பதவிக்கு வந்தார். …

  16. யுக்ரேன் போர்: ரஷ்யா-இரான் இடையேயான உறவால் ஏற்பட்டுள்ள புதிய அபாயம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கருவிகள் இரானுக்கு அனுப்பப்பட்டபோது இது தொடர்பான சர்ச்சைகள் பல ஆண்டுகள் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்தன. ஆனால், இப்போது இந்த இரு நாடுகள் இடையிலான ஆயுத போக்குவரத்தானது எதிர் திசையை நோக்கி பயணிக்கிறது என, எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் வியூகம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் ஜோனாதன் மார்கர்ஸ் எழுதுகிறார். இரான் விநியோகித்த ட்ரோன்களை ரஷ்ய ராணுவம், யுக்ரேனிய மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், யுக்ரேனின் மின்சாரம் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் கட…

  17. ஆபாச வீடியோவில் முகத்தை இணைத்து மோசடி: எதிர்த்துப் போராடும் பெண்ணுக்கு நேர்ந்த கதி சாரா மெக்டெர்மோட் மற்றும் ஜெஸ் டாவிய்ஸ் பிபிசி நியூஸ் 9 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கேத் ஐசக் உங்கள் சம்மதம் இன்றி உங்கள் முகத்தை டிஜிட்டலில் எடிட் செய்து ஒரு ஆபாச வீடியோவுடன் அதை இணைத்து இணைய வெளியில் பகிர்ந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? இப்படி ஓர் அனுபவத்தை எதிர்கொண்ட ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பேசினார். கேத் ஐசக் தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தை வழக்கம் போல பார்த்துக் கொண்டிருந்தபோது, இதையும் பாருங்கள் என்ற அவருக…

  18. "இரானிய சிறையில் பெண் கைதிகளின் நிலையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை" பெட்ரா ஜிவிக் பிபிசி வெர்ல்ட் சர்வீஸ் 19 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானிய மிசான் செய்தி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட படம் - எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின் இருக்கும் நிலை இரானின் எவின் சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிறையில் தீ எப்படி தொடங்கியது என்பதும் இதற்கும் நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ப…

  19. மனிதகுல வரலாறு: 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மர்மக் கோபுரங்களும், புதிரான கோயில் கட்டுமானங்களும் கிகி ஸ்ட்ரெய்ட்பெர்கர் . 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SUE WILLOUGHBY/ALAMY ஒரு காலத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வெண்கலக் காலத்தைச் சேர்ந்த வானளாவிய கட்டிடங்கள் இந்த இத்தாலிய தீவில் இருந்தன. தற்போது, அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் சர்டினிய நுராஜிக் நாகரிகத்தினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. பெரிய கற்குவியலைத் தவிர வேறு எதையும் எதிர்பாராமல், நெடுஞ்சாலையைக் கடந்து கார் நிறுத்தும் இடத்திற்கு நான் சென்றேன். அங்கு கல்லறை வடிவில் நுராகே லோசா எனப்படும் வரலாற…

  20. இந்தோனேசியாவில் மருத்துவ சிரப்பினால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 133ஆக உயர்வு! இந்தோனேசியாவில் மருத்துவ சிரப்பில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் தொடர்புடைய கடுமையான சிறுநீரக காயத்தால் (AKI) இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, முன்னர் அறிவிக்கப்பட்ட 99 இறப்புகளில் இருந்து 133ஆக உயர்ந்துள்ளது என்று நாட்டின் சுகாதார அமைச்சர் குணாடி சாதிகின் தெரிவித்துள்ளார். இந்தோனேசிய சுகாதார அதிகாரிகள் இந்த வாரம் கடுமையான சிறுநீரக காயத்திலிருந்து குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையில் ஜனவரி முதல் விபரிக்க முடியாத அதிகரிப்பு குறித்து விசாரித்து வருவதாகவும், அனைத்து சிரப் அடிப்படையிலான மருந்துகளின் விற்பனை மற்றும் பரிந்துரைகளை தற்காலிகமாக தடை செய்துள்ளதாகவும் தெரிவ…

  21. இம்ரான்கான் ஐந்து வருடங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை- தேர்தல் ஆணையம் அதிரடி By RAJEEBAN 21 OCT, 2022 | 03:14 PM பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு பாக்கிஸ்தானின் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இம்ரான்கானின் சட்டத்தரணியொருவர் இதனை உறுதி செய்துள்ளார். இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பதவியிலிருந்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்தார் ஊழலில் ஈடுபட்டார் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ள நிலையி…

  22. 1962 இந்திய-சீன போர்: நம்பிக்கை துரோகமா? கோழைத்தனமா? 21 அக்டோபர் 2017 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த யுத்தம் பற்றிய வரலாறு ஏற்கனவே மிகவும் விரிவாக எழுதப்பட்டது, எனவே அதைப் பற்றி மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை. இந்தப் போர் பற்றி ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ வரலாற்றை எழுதிய எஸ்.கோபால் இவ்வாறு கு…

  23. இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா தினத்தந்தி லண்டன், இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அ…

  24. ஈரான் மீதான விசாரணைக்கு எதிராக ஐ.நா.வை எச்சரிக்கும் ரஷ்யா! ஈரானில் இருந்து வந்த ஆயுதங்கள் மத்திய கிழக்கு நாடு மீதான ஐ.நா ஆயுதக் கட்டுப்பாடுகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், உக்ரைனில் தனது ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதை விசாரணை செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையை ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ரஷ்யாவின் துணை ஐ.நா தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி, ஆயுதங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என்று வலியுறுத்தினார் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக…

  25. பசுமை ஐதரசனில் இந்தியா - பிரான்ஸ் ஒப்பந்தம் By NANTHINI 20 OCT, 2022 | 11:49 AM (ஏ.என்.ஐ) இந்தியாவும் பிரான்ஸும் 'பசுமை ஐதரசனின் வளர்ச்சிக்கான இந்தோ-பிரெஞ்சு திட்ட வரைபடத்தை' ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. ஆற்றல், அதிக அறிவுப்பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக தொழில்துறை கூட்டாண்மை உட்பட பல துறைகளில் பணியாற்றும் வகையிலேயே இந்த திட்டம் அமைந்துள்ளது. அபிவிருத்தி மற்றும் சர்வதேச கூட்டாண்மைக்கான மாநில அமைச்சர் கிறிசோலா ஜக்கரோபௌலூ, இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர். பிரான்ஸ் தூதரக அறிக்கையின்படி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.