Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆப்கான் காபூல் இண்டர்கொன்டினன்ரல் விடுதிக்குள் தாக்குதல் ஐவர் பலி – 150 விருந்தினர்கள் மீட்பு ஆப்கானிஸ்தானில் ஆயுததாரிகள் பிடியிலிருந்த 150 ஹோட்டல் விருந்தனர்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஆயுதாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஹோட்டலில் தங்கியிருந்த 150 விருந்தினரை சில மணித்தியாலங்கள் ஆயுததாரிகள் பணயமாக வைத்திருந்தனர். நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினரை ஆயுதாரிகளின் பிடியிலிருந்து படையினர் மீட்டுள்ளனர். இவ்வாறு விருந்தினரை மீட்கும் முயற்சியின் போது ஐந்து சிவிலியன்களும், மூன்று ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான…

  2. ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 21 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இதில் முதலாவது குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகதிற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக அவ்விடத்திற்கு சென்ற ஊடகவியளாலர்களை குறிவைத்து இரண்டாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் பிரதான புகைப்படப்பிடிப்பாளர் உள்ளிட்ட 3 ஊடகவியளாலர்கள் இதன் போது உயிரிழந்துள்ள…

  3. ஆப்கான் தற்கொலை குண்டு தாக்குதலில் பத்துப்பேர் பலி [21 - June - 2008] ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பத்துப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் மாகாணத்திலுள்ள ஹெரஸ் மாவட்டத்தினூடு வாகனத் தொடரணியாகச் சென்று கொண்டிருந்த வெளிநாட்டு துருப்பினரை இலக்கு வைத்தே இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹெல்மண்ட் மாகாணமானது தலிபான்கள் அதிகமுள்ள பிரதேசமாக இருப்பதால் இப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன. ஆப்கானின் தெற்கு நகரான கந்தஹாரிலிருந்து தலிபான் போராளிகளை விரட்டி அடித்ததைத் தொடர்ந்தே இத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா…

  4. ஆப்கான் தற்கொலை குண்டுதாக்குதலில் 40 பேர் பலி ஆப்கான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காபுலின் உரனஸ் அரங்கில் இடம்பெற்றுக்கொண்டிருந்த மதஅறிஞர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலிலேயே பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் இடம்பெற்றவேளை அரங்கில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களிற்கு மத்தியில் தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்கவைத்தார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். http://www.virakesa…

  5. ஆப்கான் தலைநகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி ஆப்கானிய தலைநகர் காபூபில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் குறைந்தது 10 பேரின் உயிரை காவு கொண்டதுடன், நகரத்தை இருளில் மூழ்கடித்தாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மேற்கு காபூல் சுற்றுப்புறத்தின் தனித்தனி இடங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன, அதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர் என்று அந் நாட்டு உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் சையத் ஹமீத் ருஷன் உறுதிபடுத்தினார். மூன்றாவது குண்டு வெடிப்பு வடக்கு காபூலின் ஒரு மின்சார நிலையத்தை பெரிதும் சேதப்படுத்தியது என்று அரசாங்க மின்சாரம் துறையின் செய்தித் தொடர்பாளர் சங்கர் நயாசாய் தெரி…

  6. காபுலில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேட்டோ நேசப் படையினருக்கு தேவையான பொருட்களை வழங்கும் நிறுவனத்தின் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் குறைந்த்து 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாலிபான் பொறுப்பேற்றுள்ளது.இந்த வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த 4 பேரும், ஆப்கானிய ஒட்டுனர்கள் 2 பேரும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரும் இதே தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். காபுலில் முக்கிய இடங்கள் மீது சமீப காலங்களில் பல தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஆப்கானிய அதிபரின் அரண்மனை அருகே கூட கடந்த வாரம் குண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இந்தியா ஆப்கானிஸ்தானு…

  7. காபூல்: ஆப்கானிஸ்தானில் வாழும் ஹிந்துக்கள், சீக்கியர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் சிறப்பு பிரதிநிதித்தும் வழங்க வகை செய்யும் சட்டத்தை பிறப்பித்து அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கீழவையான Wolesi Jirgaவில் மொத்தம் 249 எம்.பிக்கள் உள்ளனர். Meshrano Jirga எனப்படும் மேல்சபையில் 102 எம்.பிக்கள் உள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் வாழும் ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதால் கீழவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 250ஆக அதிகரித்துள்ளது. ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையிலான சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டு எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெ…

  8. ஆப்கான் பாதுகாப்பு படையின் சிறப்பு நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் 262 தலிபானியர்கள் பலி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 24) தங்கள் பாதுகாப்புப் படையினர் பல்வேறு மாகாணங்களில் 262 தலிபான் பயங்கரவாதிகளை வெறும் 24 மணி நேரத்தில் கொன்றதாகக் கூறியுள்ளது. ஆப்கானிய படைகளின் விசேட நடவடிக்கைகளின் போது 176 தலிபான் பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும், 21 மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் செயலிழக்கம் செய்யப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் லக்மான், நங்கர்ஹார், நூரிஸ்தான், குனார், கஸ்னி, பக்தியா, காந்தஹார், ஹெராத், பால்க், ஜோவ்ஜன், ஹெல்மண்ட், குண்டுஸ் மற்றும் கபீசா ஆகிய மாகாணங்களில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரி…

  9. ஆப்கான் பெண்கள் பல்கலையில் கற்கத் தடை: தாலிபான் அரசுக்கு அமெரிக்கா கண்டனம் By Digital Desk 2 21 Dec, 2022 | 10:56 AM ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள இடைக்கால தடைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்த மோசமான முடிவுவானது ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கூடுதல் கட்டுப…

  10. ஆப்கான் பெண்கள் வெளியில் செல்லத்தடை : தலிபான்கள் புதிய உத்தரவு ஆண் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள முடியாது என ஆப்கானிஸ்தானை நிர்வகித்து வரும் தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை சில மாதங்களுக்கு முன் தலிபான் அமைப்பு கைப்பற்றியது. கடந்த 1990களில் பெண்களுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்திருந்தனர். தற்போது மீண்டும் நிர்வாகம் அவர்களிடம் வந்துள்ளதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். பாடசாலைகளில் மேல்நிலைப் படிப்புகளில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை. சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில், தொலைக்காட்சிகளில் பணிப்புரியும் பெண் நிருபர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், முழு உடலை மறைக்கும் …

  11. ஆப்கான் பொருளாதார வீழ்ச்சி அண்டை நாடுகளை பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம் ஆப்கானிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகள் அண்டை நாடுகளான துருக்கி மற்றும் ஐரோப்பாவை பாதிப்பதுடன் அகதிகள் நெருக்கடியை ஊக்குவிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆப்கான் பொருளாதாரம் 30% வரை பாதிப்படையும் -இது மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளும் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் வர்த்தகத்திற்காக அதன் நிதியை நம்பியிருப்பதால் மேலும் பாதிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற உதவிகள் நிறுத்தப்பட்டதால், ஆப்கானிஸ்தானுக்கு பண வரவுகள் அனைத்தும் வற…

  12. ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் மேற்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை தடுக்கும் அந்த நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அது திரும்பப் பெற்றுள்ளது. இதன்படி 2003 மே மாதம் தொடக்கம் தலிபான்கள், ஆப்கான் அரசு மற்றும் அமெரிக்க துருப்புகளின் செயற்பாடுகள் ஆய்வுக்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையாத நிலையில் அதன் அமெரிக்க பிரஜைகள் மீதான அதிகாரித்தை அமெரிக்க அங்கீகரிப்பதில்லை. எனினும் ஆப்கானிஸ்தான் அந்த நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக உள்ளது. …

    • 0 replies
    • 332 views
  13. ஆப்கான் மீதான... பொருளாதாரத் தடைகளை, உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும்: சீனா! ஆப்கானிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஜி20 உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானின் அந்நியச் செலாவணி அந்நாட்டின் சொத்து. அது அவர்களுக்கே சேர வேண்டும். ஆப்கான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகள் ஆப்கான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டும். ஆப்கானின் வெளிநாட்டு நிதி ஆதாரங்களை முடக்கி வைத்து அந்த நாட்டுக்கு அரசியல் அழுத்தம் தரக்கூடாது. அவர்களின் நிதியை அவர்களுக்கு எதிராகப் பயன்படு…

  14. ஆப்கான் மோதல்: அரசாங்கத்தின் கோட்டையான மசார்-இ-ஷெரீப்பும் தலிபான்கள் வசமானது !! அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஆப்கானிஸ்தானின் இறுதி பெரிய நகரான மசார்-இ-ஷெரீப்பை தலிபான் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகில் உள்ள பெரிய பொருளாதார மையமாக இருந்த குறித்த பகுதி சண்டையின்றி வீழ்ச்சியடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து தலிபான்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி தலிபான்கள் இப்போது நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தி தலைநகர் காபூலை நெருங்கி வருகின்றனர். வன்முறையால் கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன்…

  15. பிரிட்டிஷ் படையில் தற்கொலை செய்து கொண்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மோதல்களின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகம் என்று பிபிசியின் புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2012-ம் ஆண்டில் பணியிலிருந்த பிரிட்டிஷ் படைவீரர்களும் முன்னாள் வீரர்களும் அடங்கலாக 50 பேர் வரையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பிபிசியின் பனோரமா புலனாய்வு நிகழ்ச்சியில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. இதே ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபன்களுடனான மோதல்களின் போது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.போதுமான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காத நிலையிலேயே, படைவீரர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். இந்த ஒவ்வொரு தற்கொலையும் ஒரு பெருந்து…

  16. ஆப்கான் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: 19 பேர் பலி ஆப்கானிஸ்தான் விமான நிலையம் ஒன்றில் தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்குள் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. விமான நிலையத்திற்கு நுழந்த தலிபான்கள், ஆப்கான் இராணுவ அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை சேர்ந்த இராணுவ வீரர்கள் தங்கக் கூடிய குடியிருப்பு பகுதிகள் மீது நேற்றிரவு தாக்குதலில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற தலிபான் பயங்கரவாதிகளை விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை மீறி விமான ந…

  17. ஆப்கான் விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்: ஒருவர் பலி, 13 பேர் படுகாயம் காபூலில் தாலிபான்கள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்திய பகுதி.| படம்: ஏபி. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தற்கொலைப்படை தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காபூல் விமான நிலையம் அருகே காலை வேளையில் மர்ம நபர் ஒருவர் தான் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் ஒரு சிறிய ரக பேருந்து வெடித்துச் சிதறியது. இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் 13 பேர் காயமடைந்ததாக காபூல் போலீஸார் தெரிவித்தனர். தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானின் பல…

  18. ஆப்கான் ஹெலிகொப்டர் விபத்தில் இராணுவ ஜெனரல் உட்பட 13 பேர் பலி [17 - January - 2009] ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தொன்றில் அந்நாட்டின் உயர்மட்ட இராணுவ அதிகாரியுடன் மேலும் 12 பேர் பலியாகியுள்ளனர். ஜெனரல் பஸாலுதின் சயார் பயணித்த ஹெலிகொப்டர் சீரற்ற காலநிலை காரணமாக ஹெராட் மாகாணத்தில் விபத்திற்குள்ளானதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் பிராந்திய மட்ட 4 தலைவர்களில் ஒருவரான சயார் நாட்டின் மேற்குப் பகுதி நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தவர் ஆவார். பராஹ் மாநிலத்திலுள்ள இராணுவ முகாமிற்குச் செல்லும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 2001 இற்குப் பின்னர் இராணுவத்தினர் சந…

  19. ஆப்கான், பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: காஷ்மீர், டெல்லியிலும் லேசான தாக்கம் ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் வட இந்தியாவில் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.3 என்று பதிவான இந்த மிதமான நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் ஜார்ம் என்ற இடத்துக்கு தென் கிழக்கே 35 கிமீ தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2:07 மணியளவில் ஏற்பட்ட இந்த மித நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லை மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது. வட இந்தியாவின் சில பகுதிகள், அதாவது டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளில் இத…

  20. ஆப்கான்: இரண்டு பேருந்துகள்- டேங்கர் மோதி விபத்து, 50 பேர் பலி ஆப்கானிஸ்தானில் இரண்டு பேருந்துகளும் எரிபொருள் டேங்கர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தலைநகரான காபூலையும் தெற்கே காந்தஹாரையும் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில் நடந்துள்ள இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். மூன்று வாகனங்களும் தீப்பற்றி எரிந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் மோசமான வீதிகளின் நிலைமையாலும் போக்குவரத்து விதிகள் சரிவர கடைப்பிடிக்கப்படாமையாலும் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடப்பது வழமை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.com/tamil/global/2016/05/160508_afghan_accident

  21. ஆப்பரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்கள் மீது தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக இந்தியா அறிவிப்பு. இது இந்திய ஆக்கிரப்பு கஸ்மீரில் இருந்து நடப்பதாக தெரிகிறது. பாகிஸ்தானிய இராணுவ நிலைகள் மீது தாக்குதலை தவிர்த்துள்ளோம் என்கிறது இந்தியா. இது இந்திய வான் எல்லைக்குள் இருந்து நடந்த கோழைத்தனமான தாக்குதல் - நாம் தகுந்த பதிலடி கொடுப்போம் என்கிறது பாக்கிஸ்தான்: BBC NewsIndia says it has launched strikes on Pakistan and Pakist...A spokesperson for Pakistan's military tells local media that three locations have been hit by missiles.

  22. ஆப்பிரிக்க கிராமங்கள் ஏன் பின்தங்கியுள்ளன? நகரமயமாக்கலுக்கான அடையாளம் எதுவும் இல்லாமல்தான் உபுலு இப்போதும் இருக்கிறது. பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, நைஜீரியாவில் உள்ள எங்களுடைய கிராமத்துக்கு இந்த ஆண்டு சென்றிருந்தேன். நான் சார்ந்த இக்போ இனத்தார் பயணம் செல்வதில் ஆர்வம் மிக்கவர்கள். புதிய வாய்ப்புகளை நாடி சிறு நகரங்கள், பெரு நகரங்கள், நாடுகள், கண்டங்கள் என்று எல்லை கடந்து சென்றுகொண்டே இருப்போம். “வெளியூருக்குப் போன வீட்டாளி, ஒரு நாள் வீடு திரும்பியே ஆக வேண்டும்” என்ற பழமொழி மக்களிடையே பிரபலம். பிரிட்டனில் 10 ஆண்டுகளைக் கழித்த பிறகு உபுலு என்ற என் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பினேன். திடீரென்று எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். ஒரு பெரிய …

  23. டெல்லி: கடந்த வாரம் தெற்கு டெல்லியில் ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி மால்வியா நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சோம்நாத் பாரதி. அவர் தான் டெல்லியின் சட்ட அமைச்சராக உள்ளார். அவர், தனது ஆதரவாளர்களுடன் கடந்த புதன்கிழமை இரவு கிர்கி எக்ஸ்டென்ஷனுக்கு சென்று உகாண்டாவைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த 2 பெண்கள் என்று மொத்தம் 4 ஆப்பிரிக்க பெண்களை பிடித்து அவர்கள் விபச்சராம் செய்வதுடன் போதைப் பொருள் விற்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து அந்த பெண்கள் போலீசில் அளித்த புகாரில், சோம்நாத் பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நள…

  24. ஆப்பிரிக்க பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்:- ஆப்பிரிக்க பெண்கள் 8 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்வதனாலேயே அங்கு பிரச்சனை நிலவுகிறது என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் கடந்த வாரம் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் உரையாற்றினார். அந்த பேச்சு குறித்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டத்தில்…

  25. தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு நெதர்லாந்தில் வாழ்பவர்அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம் எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தை கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இருண்ட கண்டம் என்று எள்ளி நகைக்கப்படும் ஆப்பிரிக்காவின் உண்மைக் கதையை, அதை கூறு போட்டு குதறிய ஏகாதிபத்தியங்களின் சதியை இந்தத் தொடரில் எடுத்துரைக்கிறார். நமது கவனத்திற்கோ, கல்விக்கோ, தென்பட இயலாத இந்த விசயங்களை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படிக்குமாறும் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.