உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
இஸ்ரேலிய மென்பொருளை பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் குறிவைப்பு இஸ்ரேலிய கண்காணிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ குழுமத்தால் விற்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நிருபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வணிக நிர்வாகிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் வருங்கால மனைவி ஆகியோருக்கு சொந்தமான டஜன் கணக்கான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை ஹேக் செய்ய தனியார் இஸ்ரேலிய உளவு மென்பொருளான 'பெகாசஸ் ஸ்பைவேர்' பயன்படுத்தப்பட்டது என்று வொஷிங்டன் போஸ்ட் மற்றும் 16 பிற செய்தி நிறுவனங்கள் நடத்…
-
- 3 replies
- 688 views
- 1 follower
-
-
சமரசத்தை தலிபான்கள் உருவாக்க வேண்டும் : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா அமைதியான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானுக்கு தோஹா , இஸ்தான்புல் செயல்முறைகள் மற்றும் மாஸ்கோ வடிவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமரசத்தை உருவாக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் அறிவுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பான துஷன்பேவில் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெளியுறவு அமைச்சர்களின் குழு கூட்டத்தில் இதனை வலியுறுத்திய நிலையில் இதன் போது பாகிஸ்தான் மற்றும் சீனா வெளிவுறவு அமைச்சர்களும் கலந்துக்கொண்டிருந்தனர். மேலும் பாகிஸ…
-
- 2 replies
- 445 views
-
-
நெருக்கடிக்களுக்கு மத்தியில் ஹெய்டிக்கு புதிய பிரதமர் நியமனம் ஹெய்டியின் புதிய பிரதமராக ஏயல் ஹென்றி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸின் படுகொலை ஆழ்ந்த பிளவுபட்ட கரீபியன் தேசத்தை அதிக அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளிய இரண்டு வாரங்களுக்குள் இந்த நியமனம் வந்துள்ளது. முன்னாள் பிரதம அமைச்சர் கிளாட் ஜோசப் இந்த வார தொடக்கத்தில் "தேசத்தின் நன்மைக்காக" பதவி விலகுவதாகக் கூறினார். சனிக்கிழமையன்று சர்வதேச இராஜதந்திரிகளின் ஒரு முக்கிய குழு ஹென்றிக்கு ஆதரவாக வந்து புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு வலியுறுத்தியது. இந் நிலையிலேயே செவ்வாயன்று தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் நடைபெற்ற விழாவின்போது ஹென்றி, பிரதமர் பதவியை முறையாக ஏற்றுக்கொண்டார். …
-
- 2 replies
- 505 views
-
-
சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்களாக நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 பேர் மீட்பு வடமேற்கு நைஜீரியாவின் பாதுகாப்பு அதிகாரிகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்களாக சுமார் 100 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த குழு ஜூன் 8 அன்று ஜம்பாரா மாநிலத்தில் கடத்தப்பட்டது. இதன்போது நால்வரும் கொல்லப்பட்டனர். ஜம்பாரா மாநில அரசு எந்தவிதமான மீட்கும் தொகையும் இன்றி கடத்தப்பட்டவர்களை மீட்டுள்ளதாக கூறியுள்ளது. எனினும் அது தொடர்பான மேலதிக விபரங்களை வழங்கவில்லை. இந் நிலையில் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்கும், அதன் பின்னர் அவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்புவதற்கும் நைஜீரிய பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை…
-
- 0 replies
- 358 views
-
-
புலம் பெயர்ந்தோரின்... எண்ணிக்கையைத் தடுக்க, பிரான்ஸ் – இங்கிலாந்து ஒப்பந்தம் ஆங்கிலக் கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்காக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் தனது கடற்கரைகளில் ரோந்து செல்லும் பொலிஸாரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க தீர்மானித்துள்ளது. லண்டன் மற்றும் பாரிஸில் உள்ள அமைச்சர்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்காக இங்கிலாந்து 54 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை வழங்க திட்டமிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டும் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயை கடந்ததாகவும் செவ்வாய்க்கிழமை 287 பேர் இங்கிலாந்தை வந்தடைந்ததாகும் அந்நாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டு…
-
- 0 replies
- 328 views
-
-
1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மழை – 12 பேர் உயிரிழப்பு சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல பகுதிகள் இன்று புதன்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1,000 ஆண்டுகளில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும் சுமார் 100,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சீனாவின் முக்கிய தளவாட மையமான ஹெனான் முழுவதும் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டு விமானங்கள் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகுதி வரை, 617.1 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவானதாகவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2…
-
- 0 replies
- 567 views
-
-
ரஷ்யாவில் பொங்கி எழும் காட்டுத்தீ: 100,000 ஹெக்டேர் நிலம் தீக்கிரை! பொங்கி எழும் காட்டுத்தீயில் இருந்து வரும் கடுமையான புகை, ரஷ்ய நகரமான யாகுட்ஸ்க், 50 பிற சைபீரிய நகரங்கள் மற்றும் குடியிருப்புகளை மூடியுள்ளது. வடகிழக்கு சைபீரியாவில் உள்ள சாகா-யாகுடியா பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பரவலாக ஏற்பட்ட இந்த காட்டுத் தீ, வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை மற்றும் தீ பாதுகாப்பு விதிகளை புறக்கணித்தல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் அவசர அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இப்பகுதியில் 187 தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலத்தில் மொத்தம் 100,000 ஹெக்டேர் (சுமார் 247,000 ஏக்கர்) ஏரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்…
-
- 1 reply
- 417 views
-
-
லெபனானிலிருந்து... இஸ்ரேல் நோக்கி, ரொக்கெட் தாக்குதல் லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவ்வாறு ஏவப்பட்ட ரொக்கெகெட்டுகளில் ஒன்றை இஸ்ரேலின் இரும்பு டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியது. இரண்டாவது ஏவுகணை கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு திறந்த பகுதியில் வீழ்ந்தாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும் இஸ்ரேலை அனைத்து முனைகளிலும் பாதுகாக்க நாங்கள் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு படை உறுதிபடுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் மற்றும் சேதவிபரங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ரொக்கெட்ட…
-
- 0 replies
- 521 views
-
-
ஆகஸ்ட் 9 முதல், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். கனடாவிற்கு அத்தியாவசியமற்ற பயணம் மார்ச் 2020 முதல் தடைசெய்யப்பட்டுள்ளது, கோவிட் -19 பரவுவதைத் தணிக்க கனேடிய அரசாங்கம் அவசியம் என்று கூறியது. "COVID-19 தொற்றுநோய் சாதகமாக இருந்தால், செப்டம்பர் 7 முதல் சர்வதேச பயணிகள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம்" என்று கனேடிய அரசாங்கம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி போடாத அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கனடாவுக்குள் நுழைவது தடைசெய்யப்படும். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து அமெரிக்க குடிமக்களும் நிரந்தர குடியிரு…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில்... நிரந்த அமைதியை, ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்! ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை நாளை (வெள்ளிக்கிழமை) கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி வரும் நிலையில், இந்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில் ஆப்கான் நல்லிணக்க சபைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில், ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தானில், …
-
- 3 replies
- 338 views
-
-
ஐரோப்பாவை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்; முற்றிலும் அழிந்த கிராமங்கள் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கு ஐரோப்பாவில் பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் குறைந்தது 120 பேர் இறந்துள்ளனர். வரலாறு காணாத மழையால் நதிகளில் உடைப்பு ஏற்பட்டு, அப்பிராந்தியமே பெருமளவு சேதமடைந்துள்ளது. ஜெர்மனியில் பலி எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தீர்மானிக்கப்பட்ட போருக்கு அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல். பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. …
-
- 3 replies
- 547 views
- 1 follower
-
-
ஹவானா சிண்ட்ரோம்: அமெரிக்க தூதரக அதிகாரிகளைத் தாக்கும் நோய் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இருக்கும் அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு உண்டாகியுள்ள மூளைக் கோளாறு குறித்து அமெரிக்க அரசு விசாரித்து வருகிறது. ஜனவரி மாதம் ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதற்குப் பிறகான காலத்தில், 'ஹவானா சிண்ட்ரோம்' எனும் மர்மமான மூளைக் கோளாறு போன்ற பாதிப்பு தங்களுக்கும் வந்துள்ளது என 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு கியூபாவில் 2016 - 17 காலகட்டத்தில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டது. கியூபாவின் தலைநகர் ஹவானாவின் பெயரால…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
பருவநிலை மாற்றம்: வெள்ளத்தையும், வெப்பத்தின் தீவிரத்தையும் முன் கணிக்கத் தவறிய அறிவியல் ரோஜர் ஹர்ராபின் பிபிசி சுற்றுச்சூழல் பகுப்பாய்வாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஐரோப்பிய வெள்ளம். ஜெர்மனி வெள்ளப்பெருக்கையும், வட அமெரிக்காவில் வீசிய வெப்ப அலையையும் கணிக்கத் தவறிவிட்டதாக முன்னணி சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால், புவி வெப்பநிலை வேகமாக அதிகரிப்பது நாசம் விளைவிக்கும் வெப்ப அலைகளையும், பெரு வெள்ளத்தையும் கொண்டுவரும் என்று பல பத்தாண்டுகளாக சரியாகவே எச்சரித்து வந்தனர். ஆனால், அது போன்ற வா…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
பாகிஸ்தான், பேருந்து குண்டுவெடிப்பில்... 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு வடக்கு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மற்றும் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பயங்கரவாத தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 4 பொறியியலாளர்கள் உட்பட குறைந்தது 8 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 30 பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்தில் காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால்உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் மேல் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தாசு நீர் மின் நிலையம் அருகே இன்று புதன்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2021/1228…
-
- 18 replies
- 899 views
-
-
ஆஃப்கானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்! ஆஃப்காஸ்தானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இம்மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதற்கான ‘Operation Allies Refuge’ என்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் மீட்கும் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி கூறுகையில், ‘அவர்கள் துணிச்சலானவர்கள். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் செய்த மதிப்புமிக்க பணியை அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்’ என கூறினார். முதற்கட்டமாக விசா விண்ணப்பங்கள் அனுமதிக்க…
-
- 0 replies
- 235 views
-
-
அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு யுரேனியத்தை எங்களால் செறிவூட்ட முடியும்: ஈரான்! அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கேற்ப யுரேனியத்தை தங்களால் 90 சதவீதம் வரை செறிவூட்ட முடியும் என ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி, எதிர்வரும் தனது ஆட்சியில் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கலாம் என்று வல்லரசு நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஹஸன் ரௌஹானி இந்த கருத்து அமைந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துதெரிவித்த ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி, “ஈரான் நினைத்தால், அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு 90 சதவீதத்துக்கும் மேல் யுரேனியம…
-
- 0 replies
- 230 views
-
-
கியூபாவில் கம்யூனிஸ அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - சரிகிறதா காஸ்ட்ரோ எழுப்பிய சாம்ராஜ்ஜியம்? 13 ஜூலை 2021, 08:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போராட்டக்காரர்களை சிலரை பாதுகாப்புப் படையினர் இழுத்துச் சென்றனர் கியூபாவில் நெடுங்காலத்துக்குப் பிறகு கம்யூனிஸ அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்துள்ளனர். பொருளாதாரச் சரிவு, உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக அரசின் மீது மக்கள் கோபத…
-
- 2 replies
- 500 views
- 1 follower
-
-
சீனாவில்... ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழப்பு ஐந்து பேர் காயம் கிழக்கு சீன நகரமான சுஜோவில் ஹோட்டல் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் பதினேழு பேர் உயிரிழந்துள்ளனர். 36 மணிநேர மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் 23 பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் உயிருடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உரிமையாளர் கட்டிடத்தின் கட்டமைப்பை மாற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. உயிருடன் காணப்பட்ட ஆறு பேரில், ஐந்து பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது இருப்பினும் ஆபத்தான நிலையில் அவர்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. https://athavannews.com/2021/1228574
-
- 0 replies
- 305 views
-
-
தம்மிடம் சரணடைந்த ஆப்கான் அரச ராணுவக் கொமாண்டோக்களைச் சுட்டுக்கொன்ற தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமஎரிக்கத் துருப்புக்கள் முற்றாக வெளியேறியுள்ள நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதத் தீவிரவாதிகளான தலிபான்கள் அரச ராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை முடுக்கி விட்டிருக்கின்றனர். அரச ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பல நகரங்கள் தற்போது தலிபான்களால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறானதொரு சண்டயில், தம்மிடமிருந்த ரவைகள் தீரும்வரை போரிட்ட அரச ராணுவத்தின் சிறப்புக் கொமாண்டோப் படையணியின் 22 ராணுவ வீரர்கள் தாம் சரணடைய விரும்புவதாகக் கூறி தலிபான்களின் முன்னால் வரும்போது, அவர்களை அருகிலிருந்து சுட்டுக்கொன்றுள்ளனர் தலிபான்கள். அத்துடன் தலிபான்களில் ஒருவர் இக்க…
-
- 3 replies
- 511 views
-
-
தென்னாபிரிக்க வன்முறையால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட அமைதியின்மை செவ்வாய்க்கிழமை தீவிரமடைந்தது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போராடி வரும் பொலிஸார் ஆயிரக்கணக்கான பொலிஸ் வீரர்களை வீதிகளில் நிறுத்தியுள்ளனர். நிறவெறி ஆட்சி முடிவடைந்த 27 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடூரமான வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெப்போதும் இல்லாதது என்று ஜனாதிபதி சிரில் ரமபோசா விவரித்தார். ஏறக்குறைய ஒரு வார அமைதியின்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியும் உள்ளனர். அதேநேரம் 1,300 வன்முறையாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
-
- 2 replies
- 366 views
-
-
கரீபியன் நாட்டின் தலைநகருக்கு வெளியே தனது தனியார் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் ஒரு ஆயுதமேந்திய தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார் என்று நாட்டின் செயல் பிரதமர் புதன்கிழமை தெரிவித்தார். முதல் பெண்மணி மார்ட்டின் மோஸும் அதிகாலை வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார். https://www.nydailynews.com/news/world/ny-haitian-president-jovenel-moise-killed-attack-home-20210707-q4dxxwwmnvfftp5atncwsterzm-story.html#nt=pf-double%20chain~top-version1~flex%20feature~curated~haiti-703a~Q4DXXWWMNVFFTP5ATNCWSTERZM~1~1~3~7~art%20yes ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் புத…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஈராக்கில்... கொரோனா வைரஸ் மருத்துவமனையில், தீவிபத்து: 60பேர் உயிரிழப்பு- 70க்கும் மேற்பட்டோர் காயம்! ஈராக்கின் தெற்கு நகரமான நாசீரியாவில் உள்ள கொரோனா வைரஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில், குறைந்தது 60பேர் உயிரிழந்துள்ளதோடு 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீவிபத்தில் பல நோயாளிகளைக் காணவில்லை என்பதால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என்று சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன. இறந்தவர்களில் இரண்டு சுகாதார ஊழியர்களும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். கோபமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்னால் கூடி பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் இரண்டு பொலிஸ் வாகனங்கள…
-
- 0 replies
- 132 views
-
-
இங்கிலாந்தில் வரும் 19ந்தேதி முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு; பிரதமர் அறிவிப்பு இங்கிலாந்து நாட்டில் வருகிற 19ந்தேதி முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பதிவு: ஜூலை 13, 2021 09:44 AM லண்டன், இங்கிலாந்து நாட்டில் டெல்டா வகை கொரோனாவால் 2வது அலையில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. சமீப நாட்களாக ஒரு நாளில் 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததை கருத்தில் கொண்டு ஜூன் 21ந்தேதி முதல் கட்டுப்பாடு…
-
- 2 replies
- 293 views
-
-
ஆப்கானில்... நிலை கொண்டிருந்த, அமெரிக்க- நேட்டோ படைகளின் உயர் தளபதி பதவி விலகல்! ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி ஜெனரல் ஆஸ்டின் ஸ்கொட் மில்லர், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் பதவியில் இருந்து விலகி, அவரது பொறுப்புக்களை பிராந்தியக் கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் கீழ்நிலை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடந்த எளிமையான நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பொறுப்புகளை இரு அமெரிக்க ஜெனரல்களிடம் ஒப்படைத்தார். அவர்களில் ஒருவர் புளோரிடாவில் இருந்தபடி வெளிநாட்டில் அமெரிக்கப் படைகளை வழிநடத்துபவர். மற்றொருவர் படை விலக்கலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கப்போகும் சுமார் 650 வீரர்களுக்கு தளபதியாக இருப்பவர். …
-
- 1 reply
- 644 views
-
-
பெர்லின் பேரணி: மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவுக்கு ஈரான் கண்டனம்! ஈரான் ஆட்சியாளர்களுக்கெதிரான பேரணியில், மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவு அளித்தமைக்கு ஈரான் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பேரணியில் காணொளி வாயிலாக ஸ்லோவேனியா பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஸ்லோவேனியா தூதருக்கு ஈரான் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஒரு காலத்தில் சதாம் ஆதரவுடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சர்க்கஸுக்கு அவர்கள் தங்களை மலிவான விலைக்கு விற்றுவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்லோவேனியா பிரதமர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. இருதரப்பு தூதரக உறவுக்கு…
-
- 0 replies
- 250 views
-