உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
ஆப்கானின் முக்கிய விமான நிலையத்தை விட்டு அமெரிக்க- நேட்டோ படைகள் வெளியேறின! அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு சக்திகளை முழுமையாக வெளியேற்றும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு துருப்புக்கள் வெளியேறியிருப்பது அரசாங்கத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் போய்விடும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரி…
-
- 1 reply
- 458 views
-
-
பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த 751 சிறுவர்கள் புதைக்கப்பட்ட பெயரற்ற புதைகுழிகள் கனடாவைத் தொடர்ந்து உலுக்கி வருகின்ற வதிவிடப் பாடசாலை விவகாரம் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கனடாவில் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்கள் அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு வதிவிடப் பாடசாலைகளில் சேர்க்கப் பட்டார்கள். இவ்வாறான ஒரு வதிவிடப் பாடசாலை அமைந்திருந்த காம்லூப்ஸ் என்னும் இடத்தில் கடந்த மே மாதத்தின் இறுதியில் 215 பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்ட ஒரு பொதுப் புதைகுழி றேடார் கருவிகளின் உதவியோடு இனங் காணப்பட்டது. கனடா அரசின் நிதி உதவியோடும் கத்தோலிக்க திருச் சபையின் நிர்வா…
-
- 0 replies
- 332 views
-
-
‘யூரோ 2020’: ஸ்கொட்லாந்தில் 2,000 கொவிட் தொற்றுகள்! ஸ்கொட்லாந்தில் கிட்டத்தட்ட 2,000 கொவிட் தொற்றுகள், ‘யூரோ 2020’ கால்பந்து போட்டிகளைப் பார்க்கும் மக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 1,991 தொற்றுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஜூன் 18ஆம் திகதி, இங்கிலாந்து – ஸ்கொட்லாந்து போட்டியை காண லண்டனுக்குச் சென்றவர்கள் என ஸ்கொட்லாந்து பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த போட்டியை வெம்ப்லி விளையாட்டரங்கினுள் இருந்து 397 இரசிகர்கள் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிளாஸ்கோவில் உள்ள ஃபான்சோன் அல்லது ஹாம்ப்டனில் நடந்த இரு போட்டிகளை காண கலந்துகொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், இது குறைந்த எண்ணிக்கையிலான தொற்றாகும். கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக வெம்ப்லியில் நடந்த போட…
-
- 0 replies
- 336 views
-
-
வேல்ஸ் இளவரசி... டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவச்சிலை திறப்பு! கேம்பிரிட்ஜ் மற்றும் சசெக்ஸ் இளவரசர்கள், அவர்களின் தாய் வேல்ஸ் இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளில் சிலை ஒன்றை திறந்து வைக்கவுள்ளனர். 2017ஆம் ஆண்டில் சகோதரர்களால் ஆணையிடப்பட்ட இந்த சிலை, கென்சிங்டன் அரண்மனையின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சுங்கன் கார்டனில் நிறுவப்படவுள்ளது. இந்த நேரத்தில், அரண்மனைக்கு வருபவர்களுக்கு ‘அவருடைய வாழ்க்கையையும் அவருடைய மரபையும் பிரதிபலிக்க’ இது உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த நிகழ்வின் மூலம், கடந்த ஏப்ரல் மாதம் எடின்பர்க் இளவரசரின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் சந்தித்துக் கொள்கின்றனர். இன்று (வியாழக்கிழ…
-
- 0 replies
- 386 views
-
-
ரஷ்யா எந்த அளவு பொறுமையுடன் நடந்துகொள்கிறது என பிரித்தானியா சோதிக்கின்றது: புடின்! பதற்றத்தை ஏற்படுத்தினால் ரஷ்யா எந்த அளவு பொறுமையுடன் நடந்துகொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே பிரித்தானியா போர்க்கப்பல், ரஷ்யாவின் ஒரு பகுதியான கிரீமியாவுக்குள் அத்துமீறியதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். கிரிமீயா அருகே கருங்கடல் பகுதியில் பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான ஹெச்.எம்.எஸ் டிஃபண்டர் கப்பல் கடந்த 23ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இதையடுத்து, …
-
- 1 reply
- 527 views
-
-
சீன அரசு தமிழை ஊக்குவிக்கிறது! கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவற்றை பார்க்கும் இணைய பயன்பாட்டாளர்களுக்கு ஆச்சர்யம் மட்டுமின்றி, அவர்களது பின்னணி குறித்த பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.சீனாவிலுள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு 2017ஆம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்ப…
-
- 4 replies
- 1k views
-
-
கனடாவில்... நூற்றுக் கணக்கான, மனித புதைகுழிகள் கண்டுபிடிப்பு! கனடாவின் சஸ்கட்செவான் மாகாணத்தில் உள்ள ஒரு முன்னாள் உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில், நூற்றுக்கணக்கான மனித புதைக்குழிகளை கண்டுபிடித்துள்ளதாக ‘தி கவொசெஸ் ஒஃப் ஃபஸ்ட் நேஷன்ஸ்’ எனும் பூர்வகுடிகள் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுநாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழிகளிலேயே இதுதான் மிகவும் முக்கியத்துவம் பெறும் அளவுக்குக் கணிசமான எண்ணிக்கை உடைய கண்டுபிடிப்பு என குறித்த பூர்வகுடிகள் உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில் எத்தனை மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை அந்த அமைப்பு தெரிவிக்கவில்லை. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண…
-
- 0 replies
- 499 views
-
-
போர்... மண்டலம் போல காட்சியளிக்கும் செக் குடியரசின் பல கிராமங்கள்! செக் குடியரசின் பல கிராமங்களில் வீசிய கடும் சூறாவளியினால், இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு வீசிய இந்த சூறாவளி, தென்கிழக்கு ப்ரெக்லாவ் மற்றும் ஹோடோனின் மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் உள்ள கூரைகள் தூக்கி வீசப்பட்டதோடு, மரங்கள் வேர்களோடு சாய்ந்தது. கார்கள் கவிழ்ந்தது. குறைந்த பட்சம் மணிக்கு 219 கிமீ (136 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகள் ஒரு போர் மண்டலம் போல இருப்பதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் ஆலங்கட்டி கற்கள் டென்னிஸ் …
-
- 0 replies
- 500 views
-
-
அமெரிக்காவில்12 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – பலர் காணாமல் போயுள்ளதாக தகவல் 3 Views அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 102 பேரை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். 99 பேர் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது. கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதில் சில இலத்தின் அமெரிக்க குடியேறிகளும் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. பராகுவே நாட்டின் அதிபரின் மனைவி சில்வான லோபெஸ் மொரெய்ராவின் சகோதர…
-
- 20 replies
- 1k views
-
-
பிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிப்பு: விசாரணைகள் ஆரம்பம்! பிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் இங்கிலாந்தின் தெற்கில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகும் அங்கு பிரித்தனிய படையினர் இருந்தால் என்னவாகும்; கிரைமியா கடல் பகுதியில் போர்க் கப்பலை செலுத்தினால் ரஷ்யா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது போன்ற பல்வேறு இரகசிய திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கென்டில் ஒரு பேருந்து நிறுத்தத்தின் பின்னால், மழை நனைத்த குவியலில் 50 பக்க ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறை ஊழியர் ஒருவரால் தவ…
-
- 0 replies
- 351 views
-
-
அணுசக்தி மையங்களின் படங்களை ஐ.ஏ.இ.ஏ.விடம் ஒப்படைக்க முடியாது: ஈரான் அறிவிப்பு! தங்களது அணுசக்தி மையங்களின் படங்களை ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் (ஐ.ஏ.இ.ஏ.) ஒப்படைக்க முடியாது என்று ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பக்கீர் காலிபாஃப் கூறுகையில், ‘அணுசக்தி மையங்களின் உள்ளே எடுக்கப்படும் படங்களை ஐ.ஏ.இ.ஏ-வுடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே, இனி அத்தகைய படங்கள் எதுவும் அந்த அமைப்பிடம் வழங்கப்படாது. அந்தப் படங்களை ஈரானே கைவசம் வைத்திருக்கும்’ என கூறினார். இதற்கிடையே, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தாவிட்டால் தங்களது அணுசக்தி மையங்களுக்குள் ஐ.ஏ.இ.ஏ. பொருத்தியுள…
-
- 0 replies
- 630 views
-
-
ஈராக்- சிரியாவில் ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா வான் தாக்குதல்! ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து, அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. சமீபத்திய மாதங்களில் ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்கு வைத்து பல்வேறு ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதற்கமைய அந்த நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும் வளாகங்கள், ஆயுத கிடங்குகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பென்டகன…
-
- 0 replies
- 339 views
-
-
ஈராக் - சிரியாவில் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சுற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஈராக்கில் அமெரிக்க பணியாளர்கள் மற்றும் நிலையங்களுக்கு எதிராக போராளிகள் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க இராணுவம் சிரியாவில் இரு இடங்களிலும், ஈராக்கில் ஒரு இடத்திலும் செயற்பட்டு வந்த போராளிகளின் ஆயுத சேமிப்பு நிலையங்கள் குறிவைத்ததாக அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. எனினும் தாக்குதல் காரணமாக யாரா…
-
- 0 replies
- 484 views
-
-
ஹாங்காங்கின் சுதந்திரத்துக்கு தைவான் தொடர்ந்து ஆதரவு வழங்கும்- தைவான் ஜனாதிபதி தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் , ஹாங்காங்கில் ஆப்பிள் டெய்லி செய்தித்தாள் மூடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் மேலும் ஹாங்காங்கிற்கான சுதந்திரத்திற்கு தைவான் தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிள் டெய்லி தனது கடைசி பதிப்பை கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட பின்னர், சாய் தனது கருத்துக்களை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றி இருந்தார். இதேவேளை சர்வாதிகார ஆட்சிக்கு அஞ்சாதவர்களுக்கும், ஜனநாயகத்திற்காக நீண்ட காலமாக, சுதந்திரத்தைத் தொடரவும் தினசரி ஒரு கடற்கரைத் தலையாக இருந்தது என்று என்.எச்.கே.வேர்ல்ட் தெரிவித்துள்ளது. மேலும் தைவான் தொடர்ச்சியாக ஆதரவு வழ…
-
- 0 replies
- 348 views
-
-
பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்டதால், பதவியை இழந்த இங்கிலாந்து அமைச்சர்..! முழு உலகையுமே கொரோனா தொற்று ஆக்கிரமித்துள்ள நிலையில், சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டும், பின்பற்றப்பட்டுர் வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்திலும், சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இச்சூழலில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். குறித்த சம்பவம், அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுகாதார விதிமுறைகள் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், மாட் ஹான்க் தனது உதவ…
-
- 37 replies
- 1.8k views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் உடல் பருமனை அதிகரிக்கும் உணவுப்பொருட்களின் விளம்பரங்களை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள்! சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு. பிரித்தானியா அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்குள் சாக்லேட், பர்கர்கள், குளிர்பானம், கேக்குகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், பிஸ்கட், இனிப்பு சாறுகள், சிப்ஸ்கள் மற்றும் பீஸ்ஸாக்கள் அடங்கும். முன்னதாக குறித்த விளம்பரங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை 60 சதவீதம் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஆனால் புதிய கட்டுப்பாட்டின் படி, இந்த விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒன்லைன் விளம்ப…
-
- 0 replies
- 200 views
-
-
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக... பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை! கறுப்பின அமெரிக்கரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக, பொலிஸ் அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், இனவெறி மற்றும் பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களுக்கான வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது. இதனிடையே, இந்த தீர்ப்பை ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் குடும்பத்தினரும் அவரின் ஆதரவாளர்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து ஃப்ளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் ஃப்ளாய்ட் கூறுகையில், ‘பொலிஸாரின் அட்டூழியம் தீவிரமாக கருத்தில் கொள்ளப்ப…
-
- 0 replies
- 222 views
-
-
கனடாவில் மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்களில் தீ விபத்து மேற்கு கனடாவில் நேற்று சனிக்கிழமை அதிகாலை மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் செயின்ட் ஆன் தேவாலயம் மற்றும் சோபகா தேவாலயத்தில் சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு தேவாலயங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ள நிலையில் இந்த தீவிபத்து சந்தேகத்திற்குரியவை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை தேசிய பழங்குடி மக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டபோது மாகாணத்தில் உள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எனவே முந்தைய தீ விபத்து மற்றும் புதிய தீ விபத்து பற்றிய விசாரணைகள் எந்தவொரு கைதுகளும் குற்றச்சாட்டுகளும் இன்…
-
- 0 replies
- 710 views
-
-
ஜேர்மனியில் சோமாலியா இளைஞர் வெறியாட்டம் மூவர் பலி; பலர் காயம்! June 26, 2021 கத்தியுடன் காணப்பட்ட நபர் ஒருவர் பொதுமக்கள் மீது மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்தனர். பத்துப்பேர் வரை காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் பவேறியா மாகாணத்தில் (Bavarian State) Würzburg நகரில் பொது இடம் ஒன்றில் இன்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலாளி கத்தியுடன் தோன்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. பொலீஸார் விரைந்து வந்து காலில் சுட்டுக் கைது செய்யும் வரை அந்த நபர் எதிர்ப்பட்ட அனைவரையும் வெறித் தனமாக வெட்டிக் கொத்தித் தாக்கியுள்ளார். சம்பவம் நடந்த பகுதியை பொலீஸார் சுற்றிவளைத்து மூடினர். மக்கள் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். கா…
-
- 0 replies
- 286 views
-
-
அமெரிக்காவில்... துப்பாக்கி வன்முறை கலாசாரத்துக்கு, முடிவு? ஜனாதிபதி பைடன் புதிய நடவடிக்கை! அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜனாதிபதி ஜோ பைடன் புதிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளார். துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக, ஜனாதிபதி ஜோ பைடன் 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளார். இந்த 5 பணிக்குழுக்கள் நியூயோர்க், சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, வொஷிங்டன் ஆகிய இடங்களில் துப்பாக்கி கடத்தல் பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தும். இதுகுறித்து அமெரிக்க சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 18 மாதங்களில் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பதில் துப்பாக்கி வன்முறை ஒரு முக்கிய உந்துதலாக அமை…
-
- 0 replies
- 287 views
-
-
வரி ஏய்ப்பு செய்து வாழ்வை முடித்த பணக்கார முட்டாள். Anti virus மென்பொருள் உலகின் முதல் கால் பதித்தவர், John Macfee. Macfee என்ற பெயரில் இவர் 1980களில் அறிமுகப்படுத்திய மென்பொருள், சந்தையில் சக்கை போடு போட்டது. இறுதியில் அதனை intel நிறுவன,$7.6 பில்லியன் க்கு வாங்கியது. இவரும் பெலிஸ் நாட்டுக்கு சென்று அங்கெ 17 வயது இளம் பெண்ணுடன் தங்கி இருந்தார். நாய் வளர்ப்பில் பிரியமான இவர் வளர்த்த நாய்களில் ஒன்றை பக்கத்து வீட்டு காரர் நஞ்சு வைத்து கொன்றதாக குற்றம் சாட்டி வந்தார். ஒருநாள் அந்த பக்கத்து வீட்டுக்காரர், சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இவரோ கௌதமாலா நாட்டுக்கு ஓடி விட்டார். இவர் இருந்த வீட்டினுள் பல துப்பாக்கிகள் இருந்தன என்று போலீசார் சொன்னார்கள்…
-
- 1 reply
- 702 views
-
-
முகக் கவச, கட்டுப் பாடுகளை... நீக்கியது இத்தாலி! எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வடமேற்கு இத்தாலியில் ஒரு சிறிய பகுதியைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் பாதுகாப்பான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் க…
-
- 0 replies
- 264 views
-
-
30 க்கும் மேற்பட்ட ஈரானிய வலைத்தளங்களை கைப்பற்றிய அமெரிக்கா தவறான தகவல்கள் பகிர்வினை மேற்கொள்காட்டி அமெரிக்க நீதி மற்றும் வர்த்தகத்துறை சுமார் 30 க்கும் மேற்பட்ட ஈரானிய அடிப்படையிலான வலைத்தளங்களை செவ்வாயன்று கைப்பற்றியுள்ளது. கைப்பற்றப்பட்ட சுமார் 36 வலைத்தளங்களில் இரண்டு ஈரானிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களான பிரஸ் தொலைக்காட்சி மற்றும் அல்-ஆலம் ஆகியவையும் அடங்கும். தளங்களைப் பார்வையிடுவது செவ்வாயன்று ஒரு அமெரிக்க அரசாங்க எச்சரிக்கையை உருவாக்கியது. அமெரிக்க தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பணியகம், ஏற்றுமதி அமலாக்க அலுவலகம் மற்றும் எப்.பீ.ஐ. ஆகியவற்றால் “சட்ட அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக” வலைத்தளங்கள் கைப்பற்றப்பட்டதாக இது தொடர…
-
- 0 replies
- 323 views
-
-
சுவீடனில்... பிரதமருக்கு, எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி- பதவியை துறக்கும் ஸ்டீபன் லோஃப்வென்! சுவீடனில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் ஒரு வாரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 63 வயதான சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஸ்டீபன் லோஃப்வென்;, புதிய அரசாங்கம் அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சுவீடனில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசாங்கம் திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசாங்கத்துக்கான …
-
- 0 replies
- 259 views
-
-
அமெரிக்க போர்க்கப்பல் பயணம்: சீனா கடும் கண்டனம். சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப் போக்குவரத்தை நடத்தியதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் தாய்வான் நீரிணை வழியான போக்குவரத்து ஒரு இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மீதான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இருப்பினும் அமெரிக்கா வேண்டுமென்றே அதே பழைய தந்திரங்களை கையாள்வதாகவும் தாய்வான் நீரிணையில் சிக்கல்களை உருவாக்குகிறது என்றும் சீனா குற்றம் சா…
-
- 0 replies
- 446 views
-