உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
முகக் கவச, கட்டுப் பாடுகளை... நீக்கியது இத்தாலி! எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வடமேற்கு இத்தாலியில் ஒரு சிறிய பகுதியைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் பாதுகாப்பான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் க…
-
- 0 replies
- 264 views
-
-
30 க்கும் மேற்பட்ட ஈரானிய வலைத்தளங்களை கைப்பற்றிய அமெரிக்கா தவறான தகவல்கள் பகிர்வினை மேற்கொள்காட்டி அமெரிக்க நீதி மற்றும் வர்த்தகத்துறை சுமார் 30 க்கும் மேற்பட்ட ஈரானிய அடிப்படையிலான வலைத்தளங்களை செவ்வாயன்று கைப்பற்றியுள்ளது. கைப்பற்றப்பட்ட சுமார் 36 வலைத்தளங்களில் இரண்டு ஈரானிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களான பிரஸ் தொலைக்காட்சி மற்றும் அல்-ஆலம் ஆகியவையும் அடங்கும். தளங்களைப் பார்வையிடுவது செவ்வாயன்று ஒரு அமெரிக்க அரசாங்க எச்சரிக்கையை உருவாக்கியது. அமெரிக்க தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பணியகம், ஏற்றுமதி அமலாக்க அலுவலகம் மற்றும் எப்.பீ.ஐ. ஆகியவற்றால் “சட்ட அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக” வலைத்தளங்கள் கைப்பற்றப்பட்டதாக இது தொடர…
-
- 0 replies
- 323 views
-
-
சுவீடனில்... பிரதமருக்கு, எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி- பதவியை துறக்கும் ஸ்டீபன் லோஃப்வென்! சுவீடனில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் ஒரு வாரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 63 வயதான சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஸ்டீபன் லோஃப்வென்;, புதிய அரசாங்கம் அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சுவீடனில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசாங்கம் திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசாங்கத்துக்கான …
-
- 0 replies
- 259 views
-
-
அமெரிக்க போர்க்கப்பல் பயணம்: சீனா கடும் கண்டனம். சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப் போக்குவரத்தை நடத்தியதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் தாய்வான் நீரிணை வழியான போக்குவரத்து ஒரு இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மீதான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இருப்பினும் அமெரிக்கா வேண்டுமென்றே அதே பழைய தந்திரங்களை கையாள்வதாகவும் தாய்வான் நீரிணையில் சிக்கல்களை உருவாக்குகிறது என்றும் சீனா குற்றம் சா…
-
- 0 replies
- 446 views
-
-
கொவிட் வைரஸ் குறித்து... அமெரிக்காவை, வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கையிலேயே பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்சௌ லிஜியாங் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் தோன்றியது என்ற விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டும் முன்பு முதலில் தமது நாட்டில் அது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்த வேண்டும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 முதல் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட நாட்களில் அமெரிக்காவி…
-
- 0 replies
- 209 views
-
-
பிரபல மனித உரிமை ஆர்வலர் ஆலா அல்-சித்திக் கார் விபத்தில் பலி பிரபல எமிரேட்ஸின் மனித உரிமை ஆர்வலரும், விமர்சகருமான அலா அல்-சித்திக் சனிக்கிழமை லண்டனில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். சித்திக், ஐக்கிய இராச்சியம் மற்றும் பரந்த வளைகுடா பிராந்தியத்தில் அதிக சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட ALQST இன் நிர்வாக இயக்குநரும் ஆவார். அவரது தந்தை மொஹம் அல்-சித்திக், ஒரு முக்கிய ஆர்வலர் ஆவார். அவர் 2013 முதல் எமிராட்டி அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் சித்திக்கின் மரணம் ஒரு விபத்து என்றும் அவரது குடும்பத்தினர் எந்தவொரு குற்றவியல் நோக்கத்தையும் சந்…
-
- 0 replies
- 650 views
-
-
சீனாவில் 100 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து பட மூலாதாரம், Getty Images சீனாவில் 100கோடிக்கும் அதிகாமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு. சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய பிறகு தடுப்பு மருந்து செலுத்தும் பணி மெதுவாக தொடங்கியது. இருப்பினும் இலவசமாக முட்டைகளை வழங்குவது, டெல்டா திரிபு பரவும் ஆபத்து ஆகியவற்றால் தடுப்பு மருந்து செலுத்தி கொள்வது வேகம் அடைந்தது. சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாகும் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கையில் 40 சதவீதத…
-
- 0 replies
- 376 views
-
-
பெல்ஜியத்தில்... பாடசாலை கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில், ஐந்து பேர் உயிரிழப்பு ! பெல்ஜிய நகரமான அண்ட்வெர்பில் பாடசாலைக் கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து வீழ்ந்ததாகவும் இதனை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் எடுத்துள்ளதாகவும் உளூர் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் போர்த்துக்கல் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் பெல்ஜிய ஊடகங்களுக்கு தெரிவித்தனர். மேலும் …
-
- 0 replies
- 417 views
-
-
அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ; குறைந்தது 15 பேர் பலி அமெரிக்க - மெக்ஸிகோவின் எல்லை நகரமான ரெய்னோசாவில் சனிக்கிழமையன்று பல வாகனங்களில் துப்பாக்கி ஏந்தியவர்கள் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். பரவலான பீதியை ஏற்படுத்திய இந்த வன்முறையில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சட்ட அமுலக்கா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டெக்சாஸின் மெக்அலன் எல்லையில் உள்ள நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பல சுற்றுப்புறங்களில் இந்த தாக்குதல்கள் சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. குறித்த பகுதியில் அமைந்துள்ள எல்லைப் பாலம் அருகே பொலிசார் நடத்திய தாக்குதலின் போது ஒருவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றவர்கள் சீர…
-
- 0 replies
- 481 views
-
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை- மோதல் என இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும்: வடகொரியா தலைவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் என இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும் என வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய குழுவில் வொஷிங்டனுடனான எதிர்கால திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில், ‘வொஷிங்டனுடனான உறவுகளுக்கான தனது மூலோபாயத்தையும், புதிதாக உருவான அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை போக்கையும் கிம், கோடிட்டுக் காட்டினார். மேலும், உரையாடல் மற்றும் மோதல் ஆகிய இரண்டிற்கும் தயாராக இருக்க வேண்…
-
- 0 replies
- 389 views
-
-
ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வு! ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 72 வயதான ஆன்டனியோ குட்டரெஸின் பதவிக்காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் ஆன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொது செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகத…
-
- 0 replies
- 384 views
-
-
இரான் நாட்டு அதிபர் தேர்தலில் கடுமையான போட்டிக்கு பிறகு எப்ராஹீம் ரையீசி, அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிகப்படியான வாக்குகள் பெற்று அவருக்கு சாதகமான சூழல் நிலவும் நிலையில், அவர் இரானியர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். இரானின் உச்ச நீதிபதியும் போட்டியிடும் 4 வேட்பாளர்களில் ஒருவருமான எப்ராஹீம் ரையீசி 62 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அவருக்கு வீழ்த்தமுடியாத முன்னிலையை தந்துள்ளது. எனவே கடும்போக்காளரான ரையீசி இரானின் அடுத்த அதிபர் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பல வேட்பாளர்கள் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்பட்ட நிலையில், மற்ற மூன்று வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு ரையீசி முன்னிலை பெற்றுள்ளார். மிகப் பழமைய…
-
- 0 replies
- 403 views
-
-
வடகொரியா... பதற்றமான உணவு பற்றாக்குறையை, எதிர்கொண்டுள்ளது: கிம் ஜோங் உன்! வடகொரிய பதற்றமான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதனை அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். தலைநகர் பியோங்யாங்கில் இந்த வாரம் தொடங்கிய ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய குழுவில் உணவு நிலைமை குறித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாகி வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது தேசிய தொழில்துறை உற்பத்தி கால் பகுதி அதிகரித்துள்ளது’ என கூறினார். கடந்த ஆண்டு சூறாவளி காரணமாக விவசாயத் துறை அதன் தானிய இலக்குகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் 45 டொலர்கள் ஆகு…
-
- 1 reply
- 538 views
-
-
பிரான்ஸில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை! பிரான்ஸில் ஒருசில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். இதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் கட்டாய முகக்கவசம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது. இதுதொடர்பாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று அமைச்சர்களுடனான சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘இரவு நேர கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இனிமேல் முடக்கநிலை கட்டுப்பாடுகள் இல்லை. அதேவேளை, முகக்கவசம் அணிவதும் இனிமேல் கட்டாயமில்லை. ஆனால், அதில் சில விதிவிலக்குகள் உண்டு. நெருக்கமான இடங்கள், நீண்ட வரிசையின் போது, அதிக மக்கள் கூட்ட…
-
- 0 replies
- 503 views
-
-
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தூதர்களை மீண்டும் பணியமர்த்த முடிவு! அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கிடையில் அணு ஆயுதங்களைக் குறைப்பது தொடர்பாக எஞ்சியுள்ள ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவும், இருநாடுகளின் தூதர்களை மீண்டும் பணியமர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளின் தலைவர்களான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கும் இடையில் சுவிஸ்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நேரடி பேச்சுவார்த்தையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை 4 மணித்தியாலங்கள் முதல் 5 மணித்தியாலங்கள் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 மணித்தியாலங்களுக்குள் பேச்சுவார்த்தை…
-
- 0 replies
- 294 views
-
-
போர்ச்சுக்கல்- ஹங்கேரி இடையிலான போட்டிக்கு முன்னதாக ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். யூரோ கால்பந்து போட்டியில் கோக-கோலா நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதால் அதன் 2 பாட்டில்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அப்போது மேஜை மீது இருந்த இரண்டு கோககோலா பாட்டில்களை எடுத்து ஓரமாக வைத்த ரெனால்டோ, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து, எல்லோரும் தண்ணீர் குடியுங்கள் என்பதுபோல் உயர்த்திக் காட்டினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி கோக-கோலா நிறுவனத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்நிறுவன பங்குகள் விலை குறைந்து, அதன் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் 29,316.40 கோடி ரூபாய் வரை சரிந்தது. https://www.maalaimalar.com/news/sports/2021/0…
-
- 5 replies
- 911 views
-
-
ஜேர்மனியில்... கொரோனா, தொற்று வீதத்தில் வீழ்ச்சி. ஜேர்மனியில் கொரோனா தொற்று வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக சமீபத்தைய தரவுகள் காட்டுகின்றன. அதன்படி ஏழு நாட்களில் கொரோனா தொற்று வீதம் 100,000 பேரில் 13.2 ஆக பதிவாவதாகவும் இது கடந்த வாரத்தில் இது 20 க்கு மேல் இருந்தது என்றும் தரவுகள் காட்டுகின்றன. இருப்பினும் கொரோனா தொற்றுடன் தொடர்புடைய இறப்புகளின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 137 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2021/1223054
-
- 0 replies
- 567 views
-
-
தாய்வான் வான் பாதுகாப்பு பகுதிக்குள் 28 சீன இராணுவ விமானங்கள் சுமார் 28 சீன இராணுவ விமானங்கள் செவ்வாயன்று தாய்வானின் வான் பாதுகாப்பு பகுதிக்குள் பறந்தன என்று அதன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விமானங்களில் ஜே -16 விமானங்கள் பதினான்கும் ஜே -11 விமானங்கள் ஆறும் அணுசக்தி திறன் கொண்ட குண்டு வீச்சு விமானங்கள் உட்பட பல்வேறு வகையான போர் விமானங்களும் இருந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேட்டோ தலைவர்கள் திங்களன்று சீனா முன் வைக்கும் இராணுவ சவால் குறித்து எச்சரித்ததைஅடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜனநாயக தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பார்க்கும்போதிலும் பீஜங், தாய்வானை பிரிந்து செல்லும் ஒரு மாகாணமாக கருதுகிற…
-
- 0 replies
- 480 views
-
-
போர் நிறுத்தத்திற்குப் பின்னர்... காஸா பகுதியில், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல்கள் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸின் போராளிகளுக்குச் சொந்தமான தளங்கள், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் இஸ்ரேலின் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று காஸாவிலிருந்து பல பலூன்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டதால் பல தீ விபத்துக்கள் ஏற்பட்டதாக இஸ்ரேலிய தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இருதரப்பிற்கும் இடையே கடந்த மே 21 ஆம் திகதி அன்று முன்னெடுக்கப்பட்ட யுத்த நிறுத்தம் 11 நாள் தாக்குதலை …
-
- 0 replies
- 485 views
-
-
நேட்டோவுக்கு.... சீனா, மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது! நேட்டோ அமைப்புக்கு எதிராக சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என நேட்டோ தலைவர்கள் எச்சரித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சீனா, அதன் அணு ஆயுதங்களை விரைவாக விரிவுபடுத்தி வருகின்றது. ரஷ்யாவுடன் இராணுவ ரீதியாக ஒத்துழைத்து வருகின்றது. அத்துடன், இராணுவ மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் சீனா நேட்டோவுடன் நெருங்கி வருகிறது. ஆனால் கூட்டணி சீனாவுடன் புதிய பனிப்போரை விரும்பவில்லை’ என கூறினார். நேட்டோ 30 ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான ஒரு சக்திவாய…
-
- 0 replies
- 675 views
-
-
ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக... சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம் சீனாவை எதிர்த்து நிற்கும்வகையில், சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சீனத் திட்டத்திற்கு உயர்தர மாற்றாக அமெரிக்க ஆதரவுடன் பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் (பி 3 டபிள்யூ) திட்டம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முயற்சி என்ற திட்டம் பல நாடுகளில் ரயில்கள், வீதிகள் மற்றும் துறைமுகங்களுக்கு நிதியளிக்க உதவியுள்ள அதேவேளை சில நாடுகளை கடனுக்குள் தள்ளும் முயற்சி என விமர்சிக்கப்பட்டது. இருப்பினும், ஜி 7 திட்டத்திற…
-
- 4 replies
- 688 views
-
-
எலிசபெத் ராணியை சந்தித்தனர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் சந்தித்துள்ளனர். பிரிட்டனில் ஜூன் 11 முதல் 13 வரை 'ஜி 7' நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேரடியாக கலந்து கொண்டார். ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவரின் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இப்பயணத்தின் போதே நேற்றையதினம் (13.06.20321) இங்கிலாந்தின் பெர்க் ஷயர் பகுதியில் அமைந்திருக்கும் விண்ட்சர் கோட்டையில் (Windsor castle) பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் ப…
-
- 0 replies
- 734 views
-
-
இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார் இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், இஸ்ரேலில் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் 2009, மார்ச் 31 ஆம் திகதி பெஞ்சமின்-நெடன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்றத் தேர்தல் நடந்தும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்- நெடன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்த போதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இதற்கிடையே, அங்கு 8 எத…
-
- 0 replies
- 230 views
-
-
செயற்கை.. பூச்சிக்கொல்லி மருந்துகளை, தடை செய்ய சுவிஸில் வாக்கெடுப்பு ! செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த சுவிஸர்லாந்து தீர்மானித்துள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக சுவிஸர்லாந்து விளங்கும். விவசாய வளம் நிறைந்த ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான சுவிஸர்லாந்தில் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் முழுவதுமாக தடை செய்ய்யப்படவுள்ளது. இத் தடைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தண்ணீரில் பூச்சிக்கொல்லிகளின் அளவு மற்றும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகளுக்கு சேதம் ஏற்படுவதை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதுபோன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு …
-
- 0 replies
- 398 views
-
-
இஸ்ரேலின் புதிய அரசு எப்படி இருக்கும்? இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஒருங்கிணைந்துள்ள எதிா்க்கட்சிகளின் திட்டப்படி எல்லாம் நடந்தால், புதிய அரசு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) பதவியேற்கும். நெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சியும், இரு ஆண்டுகளில் 4 தோ்தல்களைச் சந்தித்ததால் ஏற்பட்ட அரசியல் குழப்பமும் முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாஃப்டாலி பெனட் தலைமையிலான அடுத்த அரசு, நாட்டின் பிளவுகளை குணப்படுத்துவதையும் இயல்பான உணா்வை மீட்டெடுப்பதையும் நோக்கமாக கொண்ட புதிய திட்டத்தை வகுப்பதாக உறுதியளித்துள்ளது. இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக 8 கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதில் ஒரு சிறிய…
-
- 0 replies
- 407 views
-