Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லடாக்கின் சிக்கீம் பகுதியில் இந்திய சீன துருப்பக்களிடையே மீண்டும் மோதல் கடந்த 20 ஆம் திகதி, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையிலான இந்தியாவின் சிக்கீம் பகுதியில் சீனாவுடனான எல்லையில் மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. வடக்கு சிக்கீமின் நாகு லா எனும் இந்திய எல்லைப்பகுதியூடாக ஊடுருவ முயன்ற சீனத் துருப்புக்களுக்கும் இந்தியத் துருப்புக்களுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 20 சீன மக்கள ராணுவத்தின் வீரர்களை தாம் காயப்படுத்தியுள்ளதாகவும், தமது தரப்பில் நான்கு வீரர்கள் காயமடைந்ததாகவும் இந்தியா தெரிவித்திருக்கிறது. கடுமையான காலநிலையிலும்கூட சீன ஆக்கிரமிப்பினை தமது வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து அவர்களை விரட்டியடித்துவிட்டதாகக் கூ…

  2. 10 கோடியைக் கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..! உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அதன் வீரியம் குறைந்தபாடில்லை என்பதுடன் வைரஸ் உருமாற்றம் அடையத் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 10 கோடியே 2 இலட்சத்து 84 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7 கோடியே 22 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தொற்றால் இத…

  3. ரஷ்யாவின் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் நவல்னியின் மனைவி உட்பட மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மிக முக்கிய அரசியல் எதிரியான எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடு தழுவிய ரீதியான ஆர்ப்பாட்டங்களின் போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சனிக்கிழமை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த தகவலை ரஷ்யாவின் அரசியல் தடுப்புக் காவல்களைக் கணக்கிடும் ஒரு குழு உறுதிப்படுத்தியுள்ளது. மொஸ்கோவின் நகர மையத்தில் உள்ள புஷ்கின் சதுக்கத்திலும் அதைச் சுற்றியும் 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், அங்கு பொலிசாருடன் மோதல்கள் வெடித்தன. இதன் விளைவாக தடியடி தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டனர். …

  4. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது? பட மூலாதாரம், EPA புகைப்படத்தில் இருப்பவை: 1. அமெரிக்கக் கொடி 2. சீசர் சாவேஸ் சிலை 3. அதிபர் முத்திரையிடப்பட்ட கொடி 4. குடும்பப் புகைப்படங்கள் 5. நிர்வாக உத்தரவுகள் 6. ரிசல்யூட் மேஜை 7. பெஞ்சமின் பிராங்க்ளின் ஓவியம் 8. ஹேரி ட்ரூமென் சிலை வெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க அதிபரின் அலுவலகம் ஓவல் ஆஃபிஸ் என்று அழைக்கப்படும். புதிய அதிபராக பதவியேற்கும் நபர், ஓவல் அலுவலகத்தில் தனக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்வார். அந்த வகையில், புதிதாக அதிபர் பதவி ஏற்று இருக…

  5. பைடனின் உத்தரவை அடுத்து அமெரிக்கா-மெக்சிகோ இடையே எல்லைச்சுவர் கட்டும் பணி நிறுத்தம் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்லைச் சுவர் கட்டுமான பணிகள் ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் இரு நாட்டுக்கும் இடையே எல்லைப்பகுதியான நியூ மெக்சிகோவின் Sunland Park இல் சுமார் 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லைச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் பைடன் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே பலவேறு உத்தரவுகளை பிறப்பித்தார்…

  6. இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள் அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளதை தமிழ்நாட்டில் உள்ள அவரது பூர்வீக கிராமம் கொண்டாடியுள்ளது. நெல்வயல்களிற்கு மத்தியில் காணப்படும் சிறிய கிராமத்தை சேர்ந்த மக்கள் கமலா ஹாரிஸ் பதவிப்பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னர் புதன்கிழமை இந்து ஆலயங்களிற்கு சென்றார்கள்,பட்டாசுகளை கொழுத்தினார்கள் பிரார்ததனைகளில் ஈடுபட்டார்கள். வண்ணமயமான சேலைகள் அணிந்த பெண்களும் வேட்டியுடன் காணப்பட்ட ஆண்களும் கோவிலிற்கு சென்று கமலா ஹாரிசின் வெற்றிக்காக வழிபாடுகள…

  7. கொரோனா வைரஸ் புதிய திரிபு: "நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்" - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை ஜேம்ஸ் கல்லேகர் சுகாதார & அறிவியல் செய்தியாளர் பட மூலாதாரம், GETTY IMAGES பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஒப்பீட்டளவில் நோயாளிகளின் உயிரை அதிகம் பறிக்கலாம் என தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் தரவுகளில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது. இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வை…

  8. ஆட்சியில் இருந்து வெளியேறிய இறுதிநாளில் 73பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய ட்ரம்ப்! ஆட்சியில் இருந்து வெளியேறும் இறுதிநாளிலும் டொனால்ட் ட்ரம்ப், தனக்கு நெருக்கமான 73 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இதனிடையே முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அரசாங்க மரியாதையுடன் வெள்ளை மாளிகையிலிருந்து விடைபெற்றார். இதற்கு முன்னதாக, அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். இதில், பண மோசடி வழக்கில் சிக்கிய தனது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட 73 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். …

  9. பைடன் நிர்வாகத்தில் 23 இற்கும் மேற்பட்ட தென்னாசிய அமெரிக்கர்கள்! அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக, நேற்று (புதன்) பதவியேற்ற ஜோ பைடன் நிர்வாகத்தில் உதவி ஜனாதிபதி கமலா ஹரிஸ் தவிர்ந்த 23 இற்கும் மேற்பட்ட இந்திய, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேச அமெரிக்கர்கள் பல்வேறு பதவிகளிலும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 20 பேர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஜமைக்கா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தந்தைக்கும், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தாய்க்கும் பிறந்த கமலா ஹரிஸ், உப-ஜனாதிபதியாகத் தெரியப்பட்டதன் மூலம், அப்பதவியிலமரும் முதலாவது பெண், முதலாவது கறுப்பினப் பெண், முதலாவது தெற்காசியப் பெண் என்ற வகையில் அமெரிக்க வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர…

  10. 15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்! நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் 15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலாவதாக மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அவர் உத்தரவிட்டார். இச் சுவர் திட்டம்தான், 2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதாவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார். அடுத்ததாக குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் பைடன் கையெழுத்திட்டுள்ளார். மேலும் பரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் …

  11. வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் Digital News Team 2021-01-20T19:58:58 ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக இறுதியாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் டிரம்ப் ஹெலிக்கொப்டரில் தற்போது வெள்ளை மாளிகையிலிருந் வெளியேறி அன்ரூ தளத்திற்கு சென்றுள்ள டிரம்ப் அவர் அங்கு உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவர் அதன் பின்னர் விமானப்படை விமானத்தில் புளோரிடா செல்லவுள்ளார் Thinakkural.lk

  12. நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது! ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி, கடந்த வருடம் விசத்தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நாடு திரும்பிய அவரது விமானம், மொஸ்கோவில் இருந்து ஷெரெமெட்டியோ விமான நிலையம் நோக்கி திருப்பிவிடப்பட்டு, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீது மேற்கொள்ளப்பட்ட விசத்தாக்குதலுக்கு ரஷ்ய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என நவால்னி குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இந்த கருத்தை முற்றாக மறுப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானதும், …

  13. பதவியேற்பு நாளிலேயே ட்ரம்பின் முதல் 10 நாள் திட்டத்தை தலைகீழாக மாற்றப்போகும் பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதன் நாளிலேயே ஜோ பைடன் பல நிறைவேற்று உத்தரவுகளை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார். அதில் அவரது முன்னோடி (டெனால்ட் ட்ரம்ப்) பிறப்பித்த பல முஸ்லிம் நாடுகளின் சர்ச்சைக்குரிய பயணத் தடையை இரத்து செய்வது என்பது பிரதான விடயமாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் 10 நாட்களில் அமல்படுத்திய கொள்கைகளை மாற்றியமைப்பதை புதிய அமெரிக்க நிர்வாகம் தொடங்கும் என்று ஜோ பைடனின் உள்வரும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றில் புதிய கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகள், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்…

  14. ட்றம்பின் பழிவாங்கல் | இரவிரவாகக் கொலைக் களங்களாகும் அமெரிக்கச் சிறைகள் மாயமான் தனது பதவிக்காலம் முடிவதற்குள்ளாக, அமெரிக்க மத்திய சிறைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டு நீதிக்காகவும் மன்னிப்புக்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் கைதிகளை இரவோடிரவாக ‘முடித்து’ விடுவதில் இன்பம் கண்டுவருகிறார் ட்றம்ப். இரண்டாம் உலகப் போரிற்குப் பிறகு அதிக மரணதண்டனைகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதியென்ற பெயர் அவருக்குப் போகிறது. இந்த அவசரக் ‘கொலைகளுக்கு’ ட்றம்ப் மட்டுமல்ல தம்மை நாணயஸ்தராகக் காட்டிக்கொண்டு பதவியைத் துறக்கும் சட்டமா அதிபர் வில்லியம் பார் முதல் ‘கண்ணீர் மன்னன்’ பராக் ஒபாமா வரையில் எல்லோரும் காரணகர்த்தாக்கள் தான். இதில் கொடுமை என்னவென்றால் இந்த அவசர பலிபீடத்துக்கு இன்றிரவு யார…

    • 0 replies
    • 619 views
  15. உறைய வைக்கும் பனி நீரில் புனித நீராடினார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்! Digital News Team 2021-01-20T10:00:55 ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினின் (Vladimir Putin) உடல் நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் உறைபனி நீரில் அவர் புனித நீராடிய வீடியோவொன்று தற்போது வைரலாகி வருகின்றது. ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் பெற்ற நாளில் பாரம்பரிய முறையில் கிறிஸ்தவர்கள், நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கமான ஒன்றாகும். அந்தவகையில் 68 வயதான விளாடிமிர் புட்டினும் எபிபனி என அழைக்கப்படும் குறித்த நாளில் மாஸ்கோ தேவாலயத்தில் சிலுவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் புனித நீர…

  16. பிரியாவிடை உரையில் பைடனின் பெயரை குறிப்பிடாது வாழ்த்துக்களை தெரிவித்தார் ட்ரம்ப் பல தசாப்தங்களாக புதிய போர்களைத் தொடங்காத முதல் ஜனாதிபதியாக நான் திகழ்கிறேன் என்று தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், நான்கு ஆண்டு காலம் தன்னுடன் இணைந்து பணியாற்றிய தனது நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றியினை கூறினார். வெளிச்செல்லும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் புதிய ஜனாதிபதி பதவியேற்புக்கு முன்னதாக செவ்வாயன்று வொஷிங்டனிலிருந்து காணொளி மூலமாக ஆற்றிய பிரியாவிடை உரையின்போதே இதனைக் குறிப்பிட்டார். அமெரிக்க நாடானது, ஒளி மிகுந்த, நம்பிக்கை வாய்ந்த மற்றும் அமைதியை விரும்பும் குடிமக்களை கொண்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய நாட்டை மறுகட்டமைப்பு செய்…

  17. வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப் தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரையாற்றியுள்ளார். அதில், "நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் பதில் அல்ல, வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்" என அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 6 ஆம் திகதி, ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்…

  18. 45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு 1 Views 45,500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் ஓவியம் ஒன்றை தொல்லியல் நிபுணர்கள் இந்தோனீசியாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள். உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்டுள்ள இந்த காட்டுப்பன்றி ஓவியத்தை ஆச்ரே எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள். மேலும் இந்த ஓவியத்தில் இருக்கும் காட்டுப்பன்றி சூலவேசி வார்டி பன்றி என தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஓவியம் சூலவேசி தீவில் இருக்கும் லியாங் டெடாங்கே என்கிற குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மனிதர்கள் தங்கி வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் அறியப்பட்டுள்ளது. …

  19. ஊழல் குற்றம்; Samsung தலைவருக்கு சிறை தென் கொரியாவின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான Samsung நிறுவனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-yong) ஊழல் குற்றத்துக்காக இன்று(18) இரண்டரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்த, நீண்ட நாள்களாக நீடித்த வழக்கு, இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. லீயின் தந்தை, சென்ற ஆண்டு இதய நோயால் உயிரிழந்தார் அதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சொத்துகள் அவரது வாரிசுகளின்கீழ் வந்தன. வாரிசுரிமைச் சட்டப்படி, மூத்த லீயின் சொத்துகளைப் பெறுவதற்குப் பெருந்தொகையை வாரிசு வரியாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக லீ, அதிகாரிகளுக்கு லஞ்ச…

    • 0 replies
    • 519 views
  20. இந்தோனேசிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டடங்கள் கடுமையாக இடிந்து தரைமட்டமானது. இந்த நிலநடுக்கத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். அதேநேரம், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர்…

  21. ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்! ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin Laschet) இன்று (சனிக்கிழமை) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர், செப்டம்பர் மாதம் கூட்டாட்சித் தேர்தல்களில் அதிபருக்கான வேட்பாளராக அர்மின் லாசெட் போட்டியிடுவார் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ற்பாலியாவின் (North Rhine-Westphalia) பிரதமரான லாசெட்டுக்கு ஆதரவாக கட்சியின் ஆயிரத்து ஒரு பிரதிநிதிகளில் 521 பேர் வாக்களித்துள்ளனர். இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரீட்ரிக்…

  22. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிறீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்தொகை ஐஸ் கிறீம் அடங்கிய பெட்டிகள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் வைரஸ் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகருக்கு சென்றுள்ளனர். மேலும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவிவருகிறது. சீனாவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிலும் வைரஸ் த…

  23. ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு ஜனவரி 20: அமெரிக்காவின் புதிய அரசியல் தலைமை குறித்த சுவாரசிய செய்திகள் பட மூலாதாரம்,EPA/BIDEN CAMPAIGN/ADAM SCHULTZ அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கின்றனர். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை, பூர்விகம், குடும்பம் உள்ளிட்டவை குறித்து பிபிசி தமிழில் சமீபத்தில் வெளியான சில சுவாரசியமான செய்திக் கட்டுரைகளை உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம். ஜோ பைடனுக்கு தமிழகத்துடன் தொடர்பு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க ஜனநாயகக் கட்…

  24. முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு - திணறும் இந்தோனீசியா பட மூலாதாரம்,GETTY IMAGES திணறும் இந்தோனீசியா: முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு இந்தோனீசியாவின் செமெரு மலையில் இருக்கும் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஜாவா தீவின் வான்பகுதியில் சுமார் 5.6 கிலோமீட்டர் உயரம் அளவுக்கு சாம்பல் மற்றும் புகையை அது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தீவுதான் இந்தோனீசியாவிலேயே அதிக அளவில் மக்கள் வாழும் தீவு. இதுவரை மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை. எந்த உயிரிழப்புகளும் இதுவரை தெரியப்படுத்தவில்லை. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.