உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26670 topics in this forum
-
வட ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்கொய்தா அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் தேர்வு! வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இணையதளத்தில் சர்வேதச பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து வரும் ‘சைட்’ குழு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் முன்னாள் தலைவர் அப்தெல்மாலெக் துரூக்தெல் கொல்லப்பட்டதையடுத்து, ‘ஏக்யூஐஎம்’ என்றழைக்கப்படும் வட ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, மாலியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களால் கடத்திச் செல்லப்பட்ட சுவிஸ்லாந்…
-
- 1 reply
- 395 views
-
-
இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன? கார்த்திகேசு குமாரதாஸன் “இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. “1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப்போவதைக் கண்டு வியந்தேன்.ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை…” – என்று ஒபாமா எழுதியுள்ளார். …
-
- 2 replies
- 1.2k views
-
-
போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி! போயிங் 737 மக்ஸ் நிறுவனத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு அபாயகரமான பேரழிவுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட 20 மாத தடைக்கு பின்னர் குறித்த விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மக்ஸ் விமான விபத்துக்கள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐந்து மாதங்களுக்குள் 346 பேரைக் கொன்ற நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் ஒப்புதலை எதிர்பார்த்து, அமெரிக்கன் எயார்லைன்ஸ் டிசம்பர் 29 ஆம் திகதி வணிக நடவடிக்கைகளுக்காக மக்ஸ் விமானத்தை பயன்படுத்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இன்று புதன்கிழமை அமெரிக்க …
-
- 1 reply
- 572 views
-
-
அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் ஸவாஹிரி உயிரிழந்ததாகத் தகவல்! November 21, 2020 அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஸவாஹிரி (Ayman al-Zawahiri) உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011ல் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் ஸவாஹிரி அல்கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனைத் தொடர்ந்து இவரின் தலைக்கு 25 மில்லியன் டொலர்களை விலையாக வைத்தது அமெரிக்கா. ஆனால் ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஸவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி உயிரிழந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/913…
-
- 0 replies
- 824 views
-
-
மறுபரிசீலனை முடிவுகள் ஜோர்ஜியாவிலும் பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுமார் 5 மில்லியன் வாக்குகள் ஜோர்ஜியாவில் பதிவாகிய பின்னர் மாநில தேர்தல் அதிகாரிகள், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் ஜோர்ஜியாவில் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிக வாக்குகளை பெற்றதாக உறுதிப்படுத்தினர். தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளின்படி, பைடன் 12,284 வாக்குகள் முன்னிலை வகித்த ஜோர்ஜியா மாநிலத்தில் தேர்தல் வாக்களிப்பின் முடிவில் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்காக, தணிக்கைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக பதிவான வக்குகளை மறுபரிசீலனை செய்ய மாநிலச் செயலாளர் உத்தரவிட்டார். இதன் விளைவாக முன்னர் வெளியான ஜோர்ஜியா தேர்தல் முடிவுகளில் 0.0099 சதவீதம் மாத்திரம் …
-
- 0 replies
- 595 views
-
-
பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் புதிய கார்கள்- வேன்களுக்கு 2030ஆம் ஆண்டு முதல் தடை! பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் புதிய கார்கள் மற்றும் வேன்கள் 2030ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் விற்பனை செய்யப்படாது என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஆனால், சில hybrids இன்னும் அனுமதிக்கப்படும், அவர் உறுதிப்படுத்தினார். புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியாகியுள்ளன. இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மிகவும் மாறுபட்ட பாதையை எடுத்து இருந்தாலும் பிரித்தானியா, எதிர்காலத்தை நோக்கி பசுமையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது. நமது பொர…
-
- 0 replies
- 618 views
-
-
ஹாங்காங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அணி திரளும் உலக நாடுகள் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்த ஹாங்காங்கை 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. அதையடுத்து சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் இருந்து வருகிறது. ஆனால் அதன் தன்னாட்சியை சின்னாபின்னமாக்குகிற வகையில் சீனா அடாவடி செய்கிறது. குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு கொடிய சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வந்துள்ளது. அதை எதிர்த்து போராடுகிறவர்களை தனது நிர்வாகம் மூலம் ஒடுக்குகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக போராடிய சட்டசபை உறுப்பினர்களை சீன நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …
-
- 0 replies
- 649 views
-
-
ட்ரம்பின் கூற்றை நிராகரித்த அமெரிக்க பாதுகாப்புத் துறையின் சைபர் தலைவர் பதவி நீக்கம்! வெளிநாட்டு தலையீடு மற்றும் ஒரு விரிவான தேர்தல் பாதுகாப்பு முயற்சிக்கு தலைமை தாங்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் சைபர் தலைவர் கிறிஸ் கிரெப்ஸை, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜோ பைடனுக்கு எதிராக ட்ரம்ப் முன்வைத்து வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தமைக்காகவே அவர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என அறிவித்த கிறிஸ் கிரெப்ஸை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்துள்ளதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் செவ்வ…
-
- 1 reply
- 939 views
-
-
ஆப்கானில் பதிவான 39 படுகொலைகளுக்கு மன்னிப்புக் கோரிய அவுஸ்திரேலியா அவுஸ்திரேலிய சிறப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்ட அவுஸ்திரேலியாவின் உயர் ஜெனரல், ஆப்கானிஸ்தானிடம் வியாழக்கிழமை மன்னிப்பு கோரியுள்ளார். அந்த அறிக்கையில் 23 சம்பவங்களில் 39 ஆயுதமேந்த நபர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2005 மற்றும் 2016 க்கு இடையில் ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய சிறப்புப் படை வீரர்களின் நடத்தை குறித்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணையின் தொகுப்புகளை விவரித்த ஜெனரல் அங்கஸ் ஜோன் காம்ப்பெல், போரின் மத்தியில் படுகொலைகள் இடம்பெற்றதாற்கான ஆதராங்கள் உள்ளதாகவும் கூறினார். …
-
- 1 reply
- 590 views
-
-
இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்கிய கூலிப்படைகளுக்கு பிரிட்டன் ஆதரவு -முக்கிய ஆவணங்களை வழங்குவதற்கு பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு பின்வாங்குகின்றது- கார்டியன் இலங்கை இராணுவத்தினரிற்கு ஆதரவாக 1980களில் செயற்பட்ட கூலிப்படையினருக்கு பிரிட்டன் இராஜதந்திர உதவகளை வழங்கியமை குறித்த ஆவணங்களை வழங்குவதற்கு பிரிட்டனின் வெளிவிவகார அமைசசு மறுத்து வருகின்றது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கூலிப்படையினர் யுத்த குற்றங்கள் உட்பட பல வகை குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் விசாரணைனகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும்; வெளிவிவகார அமைச்சு அவர்களிற்கு அவசியமான ஆவணங்களை வழங்க மறுக்கின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது. இலஙகையில் கினிமினி கூலிப்படையினரின்…
-
- 3 replies
- 715 views
-
-
அசர்பைஜானுடனான போரில் தோல்வியை ஏற்றுக்கொண்டது ஆர்மீனியா ஆர்மீனிய பிரதமர் நிகோல் பஸினியன், நாகோர்னோ-கராபாக் மீதான சமீபத்திய போரில் தோற்றதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆர்மீனிய அரசாங்கத்தின் ஜனநாயக ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான ஆறு மாத நடவடிக்கையை அவர் வெளியிட்டார். நாகோர்னோ-கராபாக் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அசர்பைஜான் மற்றும் ஆர்மீனிய இனங்களுக்கிடையில் ஆறு வார காலமாக கடும் மோதல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் போரை பேரழிவுகரமான முறையில் கையாண்டதாகத் தெரிவித்து தன்னை இராஜினாமா செய்ய வலியுறுத்தப்படுவதை நிகோல் பஸினியன் நிராகரித்துள்ளார். எனினும், ஆர்மீனியாவை உறுதிப்படுத்துவதற்கும் அதன் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் தான் பொ…
-
- 0 replies
- 833 views
-
-
கோலான் குன்றில் வெடிபொருட்களை புதைத்த சிரிய படையினர் – சிரியாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் வான்தாக்குதல் இஸ்ரேல் சிரியாவில் சிரிய இராணுவ இலக்குகள் மீதும் ஈரானிய இலக்குகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் குன்றுகள் மீது வெடிபொருட்கள் வைக்கப்பட்டதை தொடர்ந்து சிரியாவின் வடபகுதியில் உள்ளநிலைகள் மீதும் சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகள் மீதும் வான்தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வன்முறை காரணமாக சிரிய படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் ஒருவர் காயமடைந்துள்ளார் என சிரிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சிரிய இராணுவநிலைகளையும் ஈரானின் குட்ஸ்படையணியையும் இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அவர்கள…
-
- 0 replies
- 701 views
-
-
கொவிட்-19 நெருக்கடி: கருத்தடை செய்ய முடியாமல் தவிக்கும் பெண்கள்! தற்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பல பெண்கள் கருத்தடை செய்ய முடியாமல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரித்தானியாவிலுள்ள அபார்ஷன் சப்போர்ட் நெட்வொர்க் என்ற அமைப்பின் தலைவர் மாரா கிளர்க் இதுகுறித்து கூறுகையில், “ஆரம்ப கட்டத்தில் கருவை கலைக்க தங்களது அமைப்பு பெண்களுக்கு தபால் மூலமாக மாத்திரைகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், சரியாக வளர்ச்சி அடையாத சிசுவை சுமக்கும் தாய்மார்கள் கருத்தடை செய்ய முடியாமல் தவிக்கும் அவலமும் தற்போது ஏற்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் போலந்து நாட்டில் துவங்கப்பட்ட க…
-
- 2 replies
- 683 views
-
-
95 வீதம் பாதுகாப்பான மருந்தினை உருவாக்கியுளோம் – மொடேர்னா மருந்து உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவின் மொடேர்னா மருந்து உற்பத்தி நிறுவனம் தான் உருவாக்கியுயள்ள கொரோனா வைரஸ் மருந்து 95 வீதம் பாதுகாப்பளிக்ககூடியது என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 30,000 பேரை அடிப்படையாகவைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இது தெரியவந்துள்ளது என மொடேர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனைகள் 94.5 வீதம் பாதுகாப்பை அளிக்கின்றது என்பது உறுதியாகியுள்ளது என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது மிகச்சிறந்த நாள் என தெரிவித்துள்ள மொடேர்னா அடுத்த சில வாரங்களில் மருந்தினை பயன்படுத்துவதற்கான அனுமதியை கோரி விண்ணப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பாதிக…
-
- 0 replies
- 535 views
-
-
ஜேர்மனி அரசாங்கத்தின் கொவிட்-19 விழிப்புணர்வு விளம்பரம்! மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், அரசாங்கம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு விளம்பரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்தும் வகையில், ஜேர்மனி அரசாங்கம், 90 வினாடிகள் ஓடும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுபரவல் காலத்தில், 22 வயது இளைஞர் ஒருவர், வீட்டில் தனித்து இருந்து, நாட்டிற்கு தான் அளித்த சேவை குறித்து, வயதான பின், அவர் கூறும் வகையில், இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. ஜேர்மனியில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-1…
-
- 0 replies
- 676 views
-
-
எதியோப்பிய அரசிற்கு எதிராகத் திரும்பிய இராணுவ வீரர்கள்550 பேர் பலி 99 Views கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள எதியோப்பியாவில், நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகின்றார். இவர் 2018இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார். எதியோப்பியாவில் டிக்ரே என்ற மாகாணத்தில் சூடான், எரித்திரியா ஆகிய நாடுகளின் எல்லையோரம் அமைந்துள்ளது. இப்பகுதி தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் டிக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்தப் பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எதியோப்பிய அரசில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர். மேலும் அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலரும் எதியோப்பிய இராணுவத்தில் பெரும் பங்காற்றி வந்…
-
- 4 replies
- 1k views
-
-
பிரிட்டன் பிரதமர் சுய தனிமைப்படுத்தலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, அவருடன் தொடர்புகளை கொண்டமைக்காகவே போரிஸ் ஜோன்சன் இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த மார்ச் மாத இறுதியில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அம் மாத இறுதியில் குணமடைந்தார். எனினும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் கொரோனா தொடர்பான எந்தவிதமான அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்ல…
-
- 1 reply
- 755 views
-
-
நேரடிச் செய்தி பிரசுரிக்கப்பட்ட நேரம் 8:548:54 வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் என்ன செய்வார்கள்? வேட்பாளர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இந்த வாக்குப்பதிவு நாளானது ஒரு காத்திருப்பு நாள் போலதான் அமையும். என்ன செய்து கொண்டிருப்பார் டிரம்ப்? அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருப்பார். அல்லது தொலைக்காட்சியில் வாக்குப்பதிவு குறித்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருப்பார். கடந்த மூன்று தினங்களாக 14 தேர்தல் பேரணிகளில் கலந்து கொ…
-
- 203 replies
- 22.5k views
- 1 follower
-
-
மலிவான பொருட்களை விற்கும் நாட்டின் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளம்! ஒன்றாரியோவில் சில வித்தியாசமான மற்றும் மலிவான பொருட்களை விற்கும் நாட்டின் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிசிசர்பிளஸ் (GCSurplus) எனும் வலைத்தளத்தின் ஊடாக லாரிகள் மற்றும் வேகப் படகுகள் மற்றும் அட்டைப் பெட்டிகள், பல் உபகரணங்கள் மற்றும் பழுதுபார்க்கும் கடை உபகரணங்கள் போன்றவற்றினை கொள்வனவு செய்யலாம். சில பொருட்கள் உபரி. அதாவது அரசாங்கம் தங்கள் கைகளில் அதிகமான பொருட்களை வைத்திருந்தது. பிற பொருட்கள் ஒரு குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாக அல்லது சட்டவிரோதமாக சம்பாதித்த நிதியுடன் வாங்கப்பட்டதாக சந்தேகித்து ஆர்சிஎம்பி அல்லது ஒன்றாரியோ மாகாணக் பொலி…
-
- 7 replies
- 873 views
-
-
ஒசாமாவின் மகனின் மனைவி அல்ஹைதாவில் மிக முக்கிய உறுப்பினராக மாறுவார் என கருதிய புலனாய்வு அமைப்புகள் – ஈரானில் அவரையும் இலக்கு வைத்தது இஸ்ரேலின் இரகசிய புலனாய்வு அமைப்பு Rajeevan Arasaratnam November 15, 2020 ஒசாமாவின் மகனின் மனைவி அல்ஹைதாவில் மிக முக்கிய உறுப்பினராக மாறுவார் என கருதிய புலனாய்வு அமைப்புகள் – ஈரானில் அவரையும் இலக்கு வைத்தது இஸ்ரேலின் இரகசிய புலனாய்வு அமைப்பு2020-11-15T19:50:26+05:30அரசியல் களம், உலகம் LinkedInFacebookMore ஸ்வாட்டுடே – சிஎன்என் தினக்குரல் இணையம் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இணைந்து அல்ஹைதாவின் மிக முக்கிய உறுப்பினர் ஒருவரைஈரானில் கொலை செய்துள்ளன. டிரம்ப்…
-
- 0 replies
- 546 views
-
-
ஃபைசெர் கோவிட் தடுப்பு மருந்து வறிய நாடுகளுக்கு உதவாது மில்லியன் அளவுகளைக் கனடா வாங்கியுள்ளது ஜேர்மனியைத் தளமாகக் கொண்டியங்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஃபைசெர் (Pfizer), BioNtech எனும் கோவிட் நோய்க்கான தடுப்பு மருந்தொன்றைத் தயாரித்துள்ளதாகவும் அது நோய்த்தடுப்பில் 90% வெற்றியைத் தருமெனவும் கடந்த திங்களன்று அறிவித்திருந்தது. ஆனால் அது அறிவிக்காத முக்கிய விடயம், அம் மருந்தைப் பாதுகாக்க 70 பாகை செல்சியஸுக்குக்கீழ் உறை நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை. நோய்த் தடுப்புக்கான மருந்தைத் தயாரிக்கும் போட்டியில் பல உலக மருந்து நிறுவனங்கள் இரவு பகலாக உழைக்கின்றன. மக்களின் பாதுகாப்பை முன்நிறுத்தாமல் பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டு இந் நிறுவனங்கள் செயற்படுகின…
-
- 1 reply
- 676 views
-
-
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே மூண்ட போர் காரணமாக குழந்தையோடு சூடான் நாட்டுக்குள் நுழைந்த எத்தியோப்பியப் பெண். எத்தியோப்பியா நாட்டின் டீக்ரே பிராந்தியத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகள் மீதும், பக்கத்து நாடான எரித்ரியா தலைநகர் மீதும் ராக்கெட் வீசி தாக்குதல் நடந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்களும், ராஜீயத் துறையினரும் தெரிவிக்கின்றனர். இந்த சண்டையில் மாட்டிக்கொண்ட மக்கள் எத்தியோப்பியாவில் இருந்து வெளியேறி பக்கத்து நாடான சூடானுக்கு அகதிகளாக செல்கின்றனர். எத்தியோப்பிப் பிரதமர் அபிய் அகமது அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவரது தலைமையிலான…
-
- 0 replies
- 526 views
-
-
சீனாவுக்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தில் 15 ஆசிய நாடுகள் கையெழுத்து பெய்ஜிங், தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள், அதனுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள பிற கூட்டணி நாடுகளுக்கு, (FTA) இடையில் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்தான் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு(RCEP). ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய பிற நாடுகள் என மொத்தம் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஆர்சிஈபி தற்போது இந்தியா விலகியுள்ளத்தைத் தொடர்ந்து 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டமைப்பாக மாறியுள்ளது. உலக மக்கள் தொகையில் சுமார் பாதி அளவைக் கொண்டிருந…
-
- 0 replies
- 857 views
-
-
ருமேனியா: கொரோனா வைத்தியசாலையில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பின்னர் அதை ஒட்டிய அறைக்கு தீ பரவியது என்றும் இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கிழக்கு ருமேனிய நகரமான ஐயாசியில் உள்ள கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைக்கு எஞ்சியிருக்கும் ஆறு நோயாளிகள்…
-
- 0 replies
- 445 views
-
-
Million Mega March.
-
- 7 replies
- 971 views
- 1 follower
-