உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிறீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்தொகை ஐஸ் கிறீம் அடங்கிய பெட்டிகள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் வைரஸ் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகருக்கு சென்றுள்ளனர். மேலும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவிவருகிறது. சீனாவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிலும் வைரஸ் த…
-
- 0 replies
- 413 views
-
-
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு ஜனவரி 20: அமெரிக்காவின் புதிய அரசியல் தலைமை குறித்த சுவாரசிய செய்திகள் பட மூலாதாரம்,EPA/BIDEN CAMPAIGN/ADAM SCHULTZ அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கின்றனர். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை, பூர்விகம், குடும்பம் உள்ளிட்டவை குறித்து பிபிசி தமிழில் சமீபத்தில் வெளியான சில சுவாரசியமான செய்திக் கட்டுரைகளை உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம். ஜோ பைடனுக்கு தமிழகத்துடன் தொடர்பு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க ஜனநாயகக் கட்…
-
- 0 replies
- 527 views
-
-
முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு - திணறும் இந்தோனீசியா பட மூலாதாரம்,GETTY IMAGES திணறும் இந்தோனீசியா: முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு இந்தோனீசியாவின் செமெரு மலையில் இருக்கும் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஜாவா தீவின் வான்பகுதியில் சுமார் 5.6 கிலோமீட்டர் உயரம் அளவுக்கு சாம்பல் மற்றும் புகையை அது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தீவுதான் இந்தோனீசியாவிலேயே அதிக அளவில் மக்கள் வாழும் தீவு. இதுவரை மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை. எந்த உயிரிழப்புகளும் இதுவரை தெரியப்படுத்தவில்லை. …
-
- 0 replies
- 433 views
-
-
வைத்தியசாலையில் விஷவாயு கசிந்ததில் 5 நோயாளிகள் பலி! -இத்தாலியில் சம்பவம் இத்தாலியில் ரோம் அருகேயுள்ள வைத்தியசாலையில் விஷவாயு கசிந்ததில் 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை குறித்த வைத்தியசாலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதனை சுவாசித்த நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 5 நோயாளிகளும், ஊழியர்கள் 2 பேரும் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. Thinakkural.lk
-
- 0 replies
- 533 views
-
-
ஒத்திகையின் போது இந்துசமுத்திரத்தை நோக்கி ஏவுகணையை செலுத்தியது ஈரான் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் இராணுவ ஒத்திகையொன்றின் போது இந்து சமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர ஏவுகணையொன்றை செலுத்தியுள்ளனர். ஈரானின் புரட்சிகர காவல்படையினர் மேற்கொண்டுள்ள ஒத்திகையின் இரண்டவாது நாளான இன்று இந்துசமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர ஏவுகணையொன்று செலுத்தப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் மத்திய பாலைவன பகுதியில் ஈரான் இந்த ஒத்திகையை நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை சோதனை செய்துள்ளது. …
-
- 0 replies
- 558 views
-
-
புலம் பெயர்தோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியர்கள் முதலிடம் –ஐ.நா உலகளவில், புலம் பெயர்ந்து வசிப்போரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து, வெளிநாடுகளில் வசிப்போர் குறித்து, 2020ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை, ஐ.நா., மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு அண்மையில் வெளியிட்டது. இவ் அறிக்கையின் அடிப்படையில் ” இந்தியாவைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், வெளிநாடுகளில் வசித்துவருவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் தான், இந்தியர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அனைத்து கண்டங்கள் மற்றும் பிராந்த…
-
- 0 replies
- 454 views
-
-
ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்! ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin Laschet) இன்று (சனிக்கிழமை) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர், செப்டம்பர் மாதம் கூட்டாட்சித் தேர்தல்களில் அதிபருக்கான வேட்பாளராக அர்மின் லாசெட் போட்டியிடுவார் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ற்பாலியாவின் (North Rhine-Westphalia) பிரதமரான லாசெட்டுக்கு ஆதரவாக கட்சியின் ஆயிரத்து ஒரு பிரதிநிதிகளில் 521 பேர் வாக்களித்துள்ளனர். இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரீட்ரிக்…
-
- 9 replies
- 717 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு: ஆயுதம் தாங்கியவரால் பரபரப்பு – வொஷிங்டனில் பலத்த பாதுகாப்பு அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வொஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து வொஷிங்டன் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையைச் சுற்றி 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதமேந்திய காவலர்கள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் வர்ஜீனியாவைச் சேர்ந்த வெஸ்லி ஆலன் பீலர் என்பவர் போலிச் சான்று மூலம் வொஷிங்டனுக்குள் நுழைய முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரைத் தடுத்து…
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கை விவகாரம் :: சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு.! இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த கடுமையான சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர ஏதுவாக ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை (IIM) உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமரிடம் அந்நாட்டு லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவடைந்த ஆயுதப் போராட்டத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறைகளை ஏற்க இலங்கை தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருகிறது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் ஏற்க மறுத்து அதிலிருந்து இலங்க…
-
- 0 replies
- 368 views
-
-
கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; ஜோ பைடன் திட்டம் உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி ப…
-
- 0 replies
- 589 views
-
-
புதிய நீர்மூழ்கிப் கப்பல் ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இராணுவ அணி வகுப்பின்போது வடகொரியா புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை என்று சந்தேகிக்கப்படும் ஏவுகணைகளை காட்சிப் படுத்தியுள்ளது. பியோங்யாங்கின் கிம் இல் சுங் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த இராணுவ அணி வகுப்பினை கோட் மற்றும் ஃபர் தொப்பி அணிந்திருந்த வடகொரியத் தலைவர் கிம்யொங் உன் தனது கைகளை அசைத்த வன்னம் புன்னகைத்து பார்வையிடும் காட்சிகளையும் வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த அணிவகுப்பில் அணிவகுப்பு படையினரின் வரிசைகள் மற்றும் டாங்கிகள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகள் உள்ளிட்ட பல இராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. உலகின் மிக சக்திவாய்ந்த…
-
- 0 replies
- 574 views
-
-
இந்தோனீசியா நிலநடுக்கம்: சுலவேசி தீவில் ஏற்பட்ட 6.2 அதிர்வு, 26 பேர் மரணம், சுனாமி ஏற்படுமா? 15 ஜனவரி 2021, 06:09 GMT பட மூலாதாரம், EPA இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. வெள்ளிக்கிழமை இந்த பெரிய நிலநடுக்கம் நிகழ்வ…
-
- 0 replies
- 439 views
-
-
45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு 1 Views 45,500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் ஓவியம் ஒன்றை தொல்லியல் நிபுணர்கள் இந்தோனீசியாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள். உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்டுள்ள இந்த காட்டுப்பன்றி ஓவியத்தை ஆச்ரே எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள். மேலும் இந்த ஓவியத்தில் இருக்கும் காட்டுப்பன்றி சூலவேசி வார்டி பன்றி என தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஓவியம் சூலவேசி தீவில் இருக்கும் லியாங் டெடாங்கே என்கிற குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மனிதர்கள் தங்கி வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் அறியப்பட்டுள்ளது. …
-
- 30 replies
- 3k views
-
-
ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை: அரசியல் வல்லுநர்கள்! அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானத்திற்குள்ளாகியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக செனட் சபை கூட வாய்ப்பில்லை என்பதால் ட்ரம்ப்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு சபை தல…
-
- 1 reply
- 732 views
-
-
சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம் பீஜிங் சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அவசர நிலையால் 3.7 கோடி மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனர்.இதனிடையே தலைநகர் பீஜிங் அருகே அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவினூடே மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 551 views
-
-
அணு ஆயுதத் தாக்குதல்; பென்டகனுக்கு எச்சரிக்கை - ட்ரம்ப்பைத் தொடரும் சர்ச்சை! அதியமான் ப ட்ரம்ப் தொடர்ச்சியாக ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை சர்வேதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு, சர்ச்சையாகி, பின் நீக்கியவற்றைத் தொகுத்தால், அவை பல்வேறு அத்தியாயங்களைப் பெறும் என்பதில் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்குத் தனது நான்காண்டு ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகளை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். வலதுசாரி நிலைப்பாடுகளை உடைய ட்ரம்ப், தனது சர்ச்சைக்குரிய செயல்களால் மக்களின் மத்தியில் அவப்பெயரைப் பெற்றிருக்கிறார். H1B விசா தொடங்கி, தற்போது நிகழ்ந்துவரும் ஆட்சி மாற்றம் …
-
- 0 replies
- 617 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் ஏன்? by : Anojkiyan பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை விட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் இதுவரை தனது ஒன்பது மில்லியன் மக்கள்தொகையில் 22 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸில் அதன் மக்கள்தொகையில் 0.29 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது. டிசம்பர் மாதம் 300 மில்லியன் டோஸ் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் விநியோக சங்கிலி பிரச்சினைகள் காரணமாக 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதியளித்த 12.5 மி…
-
- 2 replies
- 718 views
-
-
கொரோனாவைரஸ் குறித்த விசாரணைகளிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் குழுவினர் சீனா சென்றடைந்தனர் கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு வுகான் சென்றடைந்துள்ளது. இன்றுகாலை வுகான் சென்றடைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினா இரண்டு வாரம் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர். சீனா அதிகாரிகள் வழங்கவுள்ள மாதிரிகள் ஆதாரங்களின் அடிப்படையிலேயே உலக சுகாதார நிறுவனத்தின் குழுவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். பல தடங்களிற்கு பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனாவைரசின் தோற்றுவாயை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள…
-
- 1 reply
- 681 views
-
-
மேற்கு எத்தியோப்பியாவில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 80 க்கும் மேற்பட்டோர் பலி மேற்கு எத்தியோப்பியாவை பாதிக்கும் சமீபத்திய தாக்குதலில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந் நாட்டு தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. சூடான் மற்றும் தெற்கு சூடானின் எல்லையான பெனிஷங்குல்-குமுஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை இந்த படுகொலை நடந்ததாக எத்தியோப்பியன் மனித உரிமைகள் ஆணையத்தின் (ஈ.எச்.ஆர்.சி) செய்தித் தொடர்பாளரும் சிரேஷ்ட ஆலோசகருமான ஆரோன் மாஷோ குறிப்பிட்டுள்ளார். 2 முதல் 45 வயது வரையிலான 80 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் தலைநகர் அட…
-
- 0 replies
- 825 views
-
-
அமெரிக்க கேபிடல் கலவரத்தை தூண்டியமைக்காக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு கிளர்ச்சியை தூண்டுவதற்கு வழிவகுத்தமைக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது அமெரிக்க பிரநிதிகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் ஒரு கும்பல் கடந்த வாரம் அமெரிக்காவின் கேபிடல் ஹில் கட்டிடத்திற்கு நுழைந்து வன்முறையை ஏற்படுத்த வழிவகுத்தமையினை மேற்கொள் காட்டியே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஜனாதிபதி இரண்டு முறை குற்றச்சாட்டுக்கு ஆளானது இது முதல் சந்தர்ப்பமாகும். கடந்த நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி ட்ரம…
-
- 0 replies
- 671 views
-
-
அமெரிக்க சனநாயகம் பிரத்தியேகமானதா? அண்மைய நாடாளுமன்றக் கலவரம் கூறும் செய்தி என்ன? – தமிழில் ஜெயந்திரன் 46 Views அமெரிக்கத் தேர்தலின் பின்னர் மாநிலங்கள் ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் செலுத்திய வாக்கை எண்ணி, ஜோ பைடனே ஐக்கிய அமெரிக்காவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்ற விடயத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு தற்போது துணை அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் மைக் பென்ஸ் (Mike Pence) ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்க காங்கிரசின் இரண்டு சபைகளையும் கூட்டினார். வழமையாக இந்த நிகழ்வு மிக எளிமையான ஒரு நிகழ்வாகவும் ஒரு மணித்தியாலத்தில் நடந்து முடிகின்ற முழுக்க முழுக்கச் சம்பிரதாயபூர்வமான ஒரு நடைமுறையாகவுமே இதுவரை இருந்து …
-
- 0 replies
- 525 views
-
-
கொரோனா மருந்து வழங்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமானாலும் 2021க்குள் பெருமளவு மக்கள் நோய்எதிர்ப்பு சக்தியை பெறப்போவதில்லை- உலக சுகாதார ஸ்தாபனம் உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத் ஆரம்பித்தாலும் இந்த வருடம் பெறுமளவு மக்களிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்ப்போவதில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் நாடுகளும் மக்களும் சமூகவிலக்கல் நடவடிக்கைகளையும் நோயை கட்டுப்படுத்துவதற்கான ஏனைய நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பது முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மருந்துகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களிற்கு பாதுகாப்பை வழங்கினாலும் 2021ற்…
-
- 1 reply
- 382 views
-
-
1953க்கு பின்னர் முதல்தடவையாக அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பிட்ட பெண் சித்தசுவாதீனமற்றவர் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுவந்ததன் காரணமாக இந்…
-
- 4 replies
- 797 views
-
-
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த கிரிக்கெட் வீரரே புதிய கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்- சுகாதார அதிகாரி Digital News Team 2021-01-13T21:50:25 வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் பிரிட்டன் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார சேவையின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கிரிக்கெட் வீரர் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 327 views
-
-
ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட குட்டெரெஸ் முடிவு by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Antonio-Guterres.jpg ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளார். இது குறித்து தமது விருப்பத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் மற்றும் பாதுகாப்பு சபைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக அவரது ஊடகப் ஸ்டெஃபானி துஜாரிக் கூறினார் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஐ.நா. பொதுச் செயலராக இருந்து வரும் குட்டெரெஸின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி உடன் நிறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது. ஐ…
-
- 0 replies
- 415 views
-