உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
'பிரெக்ஸிட்' பேச்சுவார்த்தையை ஞாயிறு வரை நீட்டிக்க ஒப்புதல் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பிரெக்ஸிட் வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். பிரஸ்ஸல்ஸில் பல மணிநேரம் நீடித்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இரு தரப்பினரும் புதன்கிழமை மாலை தாங்கள் முக்கிய விடயங்களில் வெகு தொலைவில் இருந்ததாகவும், பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்த முடிவு இந்த வார இறுதிக்குள் எடுக்கப்படும் என்றும் கூறினார். ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் டிசம்பர் 31 ஆம் திகதி பிரெக்ஸிட் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட முயற்சித்து வருகின்றன. இதற…
-
- 0 replies
- 437 views
-
-
கொரோனா தடுப்பூசி பெறுபவர்கள் 56 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது! by : Benitlas http://athavannews.com/wp-content/uploads/2020/12/uk-3-720x450.jpg கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான அனா போபோவா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை மக்களுக்கு இந்த வாரம் செலுத்த ரஷ்ய அரசாங்கம் தயாராகியுள்ளது. முதல்கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 4 replies
- 603 views
-
-
அமெரிக்காவில் அதிகரித்த மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள்... காரணம் என்ன தெரியுமா? #FauciEffect சு.கவிதா Coronavirus treatment in the emergency room, Los Angeles ( AP/ Jae C. Hong ) அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 50% அதிகரித்திருப்பதாக அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 18% கூடுதலாக வந்திருப்பதாகவும், இந்த மாற்றத்துக்கு `ஃபவுச்சி விளைவே (Fauci effect)' காரணம் என்று தெரியவந்துள்ளதாகவும் அந்த நாட்டின் தேசியப் பொது வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 628 views
-
-
அவுஸ்ரேலிய காட்டுத்தீயில் 60,000 கோலா கரடிகள் உயிரிழப்பு! அவுஸ்ரேலியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்ட காட்டுத் தீயில் 60,000 கோலா கரடிகள் உயிரிழந்துள்ளதாக உலகளாவிய நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலகளாவிய நிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவுஸ்ரேலியாவின் கிழக்குப் பகுதியில் காடுகள் அடர்ந்த 10 மில்லியன் ஹெக்டேர் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ பரவியது. இதில் 2,000 வீடுகள் எரிந்தன. 28 பேர் இறந்தனர். இந்த காட்டுத் தீயில் அரிய வகை விலங்குகள் உட்பட லட்சக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழந்தன. தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் காட்டுத் தீ பற்றி எரிந்தது. இதில் 3 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்தன. கோலா கரடி…
-
- 0 replies
- 377 views
-
-
கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு அமெரிக்கா தடையாகவுள்ளது – ஈரான் குற்றச்சாட்டு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கான தங்களின் முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரான் மத்திய வங்கியின் ஆளுநர் அப்தோல்நேசர் ஹேமதி கூறுகையில், ‘உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் கொரோனா தடுப்பூசியை பெறும் எங்கள் முயற்சிகளை அமெரிக்கா தடுக்கிறது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக எழும் பணப்பரிமாற்ற பிரச்சினைகளால் தடுப்பூசி வாங்கும் எங்கள் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன’ என தெரிவித்தார். மேலும் அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக ஈரானுக்கு மனிதாபிமான கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் மறுத்து விட்டதா…
-
- 0 replies
- 370 views
-
-
உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தாக கண்டறியப்பட்ட ஃபைசர் தடுப்பூசி, அடுத்த வாரம் 91 வயதை எட்டவிருக்கும் பிரிட்டன் மூதாட்டி மார்கரெட் கீனானுக்கு போடப்பட்டுள்ளது. இது தனக்கு முன்கூட்டியே கிடைத்த பிறந்த நாள் பரிசு போல உள்ளது என்று அவர் தெரிவித்தார். பிரிட்டன் உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் அவருக்கு வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது. "இந்த தடுப்பூசியை எல்லோரும் போட்டுக் கொள்ள வேண்டும். 90 வயதி் என்னால் இதை போட்டுக் கொள்ள முடியும் என்றால் இது உங்களாலும் முடியும்," என்று கீனான் தெரிவித்தார். பட மூலாதாரம்,PA MEDIA இவரைத…
-
- 0 replies
- 406 views
-
-
ஈரானின் அணு விஞ்ஞானி செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியாலேயே கொல்லப்பட்டார்: ஈரான்! ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே, செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியால் சுடப்பட்டே கொலைசெய்யப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. ரகசிய அணு ஆயுதத் திட்டத்தின் சூத்திரதாரி என்று மேற்கு மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தால் நீண்டகாலமாக சந்தேகிக்கப்படும் ஃபக்ரிசாதே, கடந்த மாதம் 27ஆம் திகதி தெஹ்ரான் அருகே ஒரு அருகிலுள்ள அப்சார்ட் நகரில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தநிலையில் இந்த தாக்குதலை, ஈரானின் மதகுரு மற்றும் இராணுவ ஆட்சியாளர்கள், இஸ்லாமிய குடியரசின் நீண்டகால எதிரியான இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என குற்றஞ்சாட்டுகின்ற போதிலும், இதற்க…
-
- 2 replies
- 535 views
-
-
ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் ஆண்டவர்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/cq5dam.thumbnail.cropped.750.422-720x450.jpeg போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போப்பின் முதல் அமையவுள்ள இந்த பயணம், வத்திக்கான் தனது முன்னோர்களைத் தவிர்த்த ஆபத்தான பயணம் என விபரிக்கப்பட்டுள்ளது. வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி இதுகுறித்து கூறுகையில், ’84 வயதாகும் போப்பாண்டவர், தலைநகரான பாக்தாத் மற்றும் உர், ஆபிரகாமுடன் இணைக்கப்பட்ட ஒரு நகரத்தையும், நினிவே சமவெளிகளில் எர்பில், மொசூல் மற்றும் காராகோஷ் ஆகிய …
-
- 1 reply
- 711 views
-
-
தீவு சிறையில் ஆயிரம் நாட்கள்: அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதி குடும்பம் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டம் 32 Views அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து பின்னர் விசா காலாவதியாகிய நிலையில் தடுப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் ஆயிரம் நாட்களை தடுப்பு முகாமில் கழித்திருக்கிறது. கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன. …
-
- 0 replies
- 492 views
-
-
பாதுகாப்புச் செயலாளராக கருப்பினத்தவரை தேர்வுசெய்தார் பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தனது பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற (ஜெனரல்) லாயிட் ஆஸ்டினை தேர்வு செய்துள்ளார் நம்கத் தகுந்த வட்டாரங்கள் திங்கட்கிழமை தெரிவித்துள்ளன. லாயிட் ஆஸ்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளை பார்வையிட்டவர் ஆவார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் கருப்பின பாதுகாப்புச் செயலாளராக லாயிட் ஆஸ்டின் தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்புத் துறை அதிகாரியான மைக்கேல் ஃப்ளோர்னாயை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த பதவியில் லாயிட் ஆஸ்டின் அமர்ந்தால் பென்டகன் தலைவராக பொறுப்பு ஏற்கும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க…
-
- 0 replies
- 552 views
-
-
மூன்று வயது முதல் பிள்ளைகள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும்: பிரான்ஸில் புதிய சட்டம்! மூன்று வயது முதல் பிள்ளைகள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும் என்ற சட்டத்தினை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். பாடசாலைகளில் இஸ்லாமியப் பிரிவினைகளைத் தடுப்பதற்கான சட்டச் சீர்திருத்தத்தினை (Séparatisme islamiste) உருவாக்கியிருக்கும் இமானுவல் மக்ரோன், அதன் பகுதியாக இந்த சட்டத்தினை வகைப்படுத்தியுள்ளார். சுகவீனக் காரணங்கள் தவிர்த்து, அனைத்துப் பிள்ளைகளும் மூன்று வயது முதல், பிரான்ஸின் கல்வி அமைப்பிற்குள் உள்வாங்கப்படுவது கட்டாயம். இது சட்ட இலக்கம் 18 (article 18) இன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50.0…
-
- 0 replies
- 343 views
-
-
பிரித்தானியாவின் ராணி- இளவரசர் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற முதல் நபர்களாக இருப்பார்கள்! பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோர் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற முதல் நபர்களாக இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, அரச உதவியாளர்கள் தடுப்பூசி பெறுவது ஒரு தனிப்பட்ட முடிவு மற்றும் தனிப்பட்ட விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பிரித்தானியா முழுவதும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபைசர்- பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசிக்கு பிரித்தானியா, டிசம்பர் 2ஆம் திகதி ஒப்புதல் அளித்தது. இதன்படி, முதல் சுற்று தடுப்பூசிகள் டிசம்பர் 8ஆம் திகதி முதல் போடப்படும் என்று புரிந்து கொள்ளப்பட…
-
- 0 replies
- 377 views
-
-
கொவிட்-19 தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் முனைப்பு காட்டும் சீனா! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/WireAP_90fa1484bd5745b181b5780609100e66_16x9_992-720x450.jpg கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் சீனா முனைப்பு காட்டி வருகின்றது. அந்த வகையில் தற்போது அங்கு 4 நிறுவனங்கள் சார்பில் 5 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை ரஷ்யா, எகிப்து, மெக்ஸிகோ உட்பட 12க்கு மேற்பட்ட நாடுகளில் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை விரைவில் வெளியிட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. மாகாண அரசாங்கங்கள் தடுப்பூசிகளுக்காக முன்பதிவுகளை பெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் (கொவிட்-1…
-
- 0 replies
- 571 views
-
-
இரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள் 22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, தாக்குதலுக்கு ஆளான ஃபக்ரிஸாதேவின் கார் இரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள இரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஸரீஃப், இது ஒரு நாட்டின் ஆதரவுடன் நடந்த தீவிரவாத செயல் என்று தெரிவித்துள்ளார். இரானிய அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாக ஃபக்ரிஸாதே இருந்ததாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன…
-
- 32 replies
- 3.2k views
-
-
கொரோனா – 100 கோடிக்கும் அதிகமானோர் வறுமையை எதிர்கொள்ளவார்கள் – ஐ.நா எச்சரிக்கை 80 Views கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் 100 கோடிக்கும் அதிகமானோர் வறுமையை எதிர்கொள்ளவார்கள் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஐ.நா.மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுளில் கொரோனா வைரஸின் பன்முக பாதிப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வது ஆகியவை குறித்து ஐ.நா மேம்பாட்டுத் திட்டம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்காவின் டென்வர் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.நா ம…
-
- 0 replies
- 507 views
-
-
கொரோனா வைரஸ் முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவுகாணமுடியும் – உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் Rajeevan ArasaratnamDecember 6, 2020 கொரோனா வைரஸ் முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவு காணமுடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் அதனோம் கெப்ரோயஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மருந்துகளின் சோதனை முடிவுகள் காரணமாக வைரஸ் ஆபத்து முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவுகாணமுடியும் என என அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவைரஸ் தொடர்பான ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் முதலாவது உயர்மட்ட அமர்வில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். பாதை இன்னமும் ஆபத்தானதாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக மனித குலத்தின் சிறந்த குணாதிசயங…
-
- 0 replies
- 543 views
-
-
மனிதர்கள் வாழ்ந்திராத தீவுக்கு அழைத்துச் செல்லப்படும் ரோஹிங்கியா அகதிகள்.! மனித உரிமை அமைப்புகளின் அறிவுரைகளை மீறி பாஷன் சர் எனும் தனித்தீவுக்கு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை அழைத்துச்செல்ல வங்கதேசம் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப்பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது. முதல்கட்டமாக, இத்தீவுக்கு 1,600 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இத்தீவுக்கு சுமார் 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை இடமாற்ற வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடல் மட்ட அதிகரிப்பால…
-
- 0 replies
- 698 views
-
-
அமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகிறது: அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநர்! அமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அதனை எதிர்கொள்ள நாமும் தயாராக இருக்கவேண்டும் என அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் ஜான் ராட்கிளிஃப் தெரிவித்துள்ளார். நாளிதலொன்றுக்கு எழுத்திய கட்டுரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘சீனாவால் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் குறித்து எங்களுக்குக் கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த தற்போதைய சூழலில், உலகில் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக சீனாதான் திகழும். அமெரிக்காவையும் உலகின் பிற…
-
- 1 reply
- 740 views
-
-
இளையோர் ‘ஒன் லைன்’ ஊடகத்துக்கு தன் நேர்காணலை வழங்கிய பிரெஞ்சு அதிபர் மக்ரோன் பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் பிரதான ஊடகங்களை விட சமூக ஊடகங்களே இளைய தலைமுறையை ஈர்க்கிறது. அவர்களுக்குச் சேர வேண்டிய விடயங்களை அவற்றின் ஊடாக அணுகிச் சொல்ல வேண்டிய மாற்றத்துக்குரிய கால கட்டம் இது. முழுக்க முழுக்க சமூகவலைத்தளங்கள் ஊடாக ஒளிபரப்பப்படும் ‘ஒன் லைன்’ வீடியோ மீடியா ஒன்றுக்குத் தனது நீண்ட நேர்காணலை வழங்கியிருக்கிறார் பிரெஞ்சு அதிபர் மக்ரோன். ருவீற்றர், முகநூல், ரிக்ரொக், யூரியூப் என முழுவதும் சமூகவலைத்தளங்களில் ஒளிபரப்பப்படுகின்ற ‘புறு மீடியா’ வில் (https://www.brut.media/fr) மக்ரோனின் செவ்வி நேற்று ஒளிபரப்பாகியது.. …
-
- 0 replies
- 497 views
-
-
அகதிகளின் வழக்குளை விசாரிக்க அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம்? 32 Views அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. இது தொடர்பான அவுஸ்திரேலிய அரசின் முறையீட்டில், புலம்பெயர்வு சட்டத்தின் அடிப்படையில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்பான விவகாரங்களை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்ட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. இம்முறையீடு தொடர்ந்து அவுஸ்திரேலிய உயர் நீத…
-
- 0 replies
- 366 views
-
-
பில் கிளின்டன், புஷ், ஒபாமா மூவரும் பகிரங்கமாகத் தடுப்பூசி ஏற்ற முடிவு கார்த்திகேசு குமாரதாஸன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான புஷ், கிளின்டன், பராக் ஒபாமா ஆகிய மூவரும் நாட்டு மக்கள் பார்க்கும் வண்ணம் கமராக்களின் முன்பாகப் பகிரங்கமாக வைரஸ் தடுப்பூசியைத் தங்களுக்கு ஏற்றிக்கொள்ள முன்வந்துள்ளனர். வைரஸ் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தடுப்பு மருந்து குறித்து மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையீனங்களைக் களைவதற்காகவும் அவர்கள் இந்த முயற்சியில் இறங்கவுள்ளனர். அவர்களது இந்த முடிவு தொடர்பான தகவல்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளன. சுமார் 50 வீதமான அமெரிக்கர்கள் மத்தியில் வைரஸ் தடுப்பு மருந்துகள…
-
- 2 replies
- 1.3k views
-
-
100 நாட்களுக்கு முகக் கவசத்தை அணியுமாறு அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள்! December 5, 2020 100 நாட்களுக்கு முகக் கவசத்தை அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் அந் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பதவியேற்றதும் இதனை அமுல்படுத்த இருப்பதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார். கொரோனாத் தொற்றானது மிகப்பெரிய அளவில் அமெரிக்காவில் பரவி வரும் நிலையில் முகக்கவசம் மூலமே மக்களை பாதுகாக்க முடியும் என்று ஜோ பைடன் பிரசாரம் செய்து வருகிறார். குறிப்பாக முகக் கவசம் அணியாதவர்கள் அடுத்தவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் முகக்கவசம் அணிவது தேசியக் கடமை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/953…
-
- 0 replies
- 438 views
-
-
அர்மீனியா உடனான மோதலில் 2,783 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாக அசர்பைஜான் அறிவிப்பு! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/929816-azerbeijan-war-new-720x450.jpg அர்மீனியா உடனான நாகோர்னோ-கராபாக் பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான மோதலில், 2,783 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாக அசர்பைஜான் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், 103 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியவில்லை எனவும், 100-க்கும் மேற்பட்ட வீரகள் காணவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேசத்திற்கான போரில் ஆர்மீனியாவிற்கு எதிராக, தங்களது வீரர்கள் தைரியத்தையும், வீரத்தையும் வெளிக்காட்டியதாக அசர்பைஜன் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த மோதல…
-
- 0 replies
- 847 views
-
-
இங்கிலாந்து- வேல்ஸிற்கு உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதற்கு அனுப்ப தடை புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ், இங்கிலாந்து மற்றும் வேல்ஸிற்கு உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதற்கு அனுப்ப தடை விதிக்கப்படும். சுற்றுச்சூழல் செயலாளர் ஜோர்ஜ் யூஸ்டிஸ், 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக விதிகளிலிருந்து பிரெக்சிட் பிந்தைய முறிவில் இந்த தடை அமுலில் இருக்கக்கூடும் என கூறினார். ஆர்எஸ்பிசிஏ இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது. இது விலங்கு நலனுக்கான ஒரு முக்கிய சாதனை என்று கூறியது. ஆனால், பெரிய மாற்றங்கள் இங்கிலாந்தின் உணவு விநியோகச் சங்கிலியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரித்தது. இந்தத் திட்டம் குற…
-
- 0 replies
- 811 views
-
-
அதிர்வலைகளை ஏற்படுத்தும் அமெரிக்க அரசியல் :நிதி முறை கேடு அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பிடம் விசாரணை அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவின் போது திரட்டப்பட்ட நிதி சுமார் ரூ.790 கோடியில் இருந்து குறிப்பிட்ட தொகை தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தொகையானது அதிபர் டிரம்பின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் இருந்து டிரம்ப் குடும்பம் ஆதாயம் தேடியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள டிரம்ப் ஓட்டலானது, அரசு தொடர்பான கூட்டங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்ததாகவும், பெரும்பாலான கூட்டம் நிர்பந்தம் காரணம் டிரம்ப் ஓட்டலில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும்…
-
- 0 replies
- 417 views
-