உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்! உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்து 900ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 14 இலட்சத்து 31 ஆயிரத்து 706 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணங்கள் 80 ஆயிரத்தைக் கடந்து தற்போது 82 ஆயிரத்து 80 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு இதுவரை 3 இலட்சத்து 2 ஆயிரத்து 149 பேர் குணமடைந்துள்ள போது…
-
- 0 replies
- 324 views
-
-
கொரோனா வைரசுக்குச் சூட்டிய ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை கைவிடுகிறது அமெரிக்கா! கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறிவிட்டதாலும் அதைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவி வேண்டும் என்பதாலும் ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை விட்டுவிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, தனக்குத் தேவையான முகக் கவசங்கள் உள்ளிட்ட 50 சதவிகித தனிநபர் பாதுகாப்பு உபகரணங்ளுக்கு சீனாவை நம்பியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவும் அடிக்கடி பயன்படுத்தும் ‘வுஹான்’ வைரஸ் என்ற சொல் அமெரிக்காவின் அகராதியில் இருந்து மறைகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு இடையில் மிகுந்த ஒத்துழைப்பு தேவை என்பதால் சீனாவை குறிவைத்து பேசப்பட்ட குறித்த அ…
-
- 0 replies
- 293 views
-
-
மாடிசன்: அமெரிக்காவில், விஸ்கான்சின் மாகாண மக்கள், கொரோனா பரவல் அச்சமின்றி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான, 'பிரைமரி' தேர்தலில், பல மணிநேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, ஓட்டுப் போட்டனர். எனினும், மில்வாகீ நகரில்,180 வாக்குச்சாவடிகளில், ஐந்தில் மட்டுமே ஓட்டுப் பதிவு நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான தேர்தல் பணியாளர்கள், வைரஸ் பாதிப்பிற்கு அஞ்சி, பணிக்கு வருவதை தவிர்த்தனர். இந்த இக்கட்டான இத்தருணத்தில், ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைக்க, ஜனநாயக கட்சி கோருகிறது. ஆனால், டிரம்பின் குடியரசு கட்சி, திட்டமிட்டபடி, நவம்பரில் தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2517550
-
- 0 replies
- 361 views
-
-
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக பின்னர் வேகமாக உலக நாடுகளிலேயும் பரவி பல உயிர்களை கொன்றொழித்துவரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 708 பேர் உயிரிழந்துள்ளதாக இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் உயிரிழப்புக்களும் தொற்றுநோயாளார்களின் எண்ணிக்கையும் மிகமிக வேகமாக அதிகரித்து வருவது கண்கூடு. இந்நிலையில் 24 மணிநேரத்தினுள் எந்தவொரு சுகவீனமுமின்றி நல்ல சுகாதார நிலைமையைக்கொண்ட 5 வயது குழந்தை உட்பட 708 பேர் உயிரிழந்துள்ளமையோடு இதுவரையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4313 ஆக காணப்படுகின்றது. கொரோனா தாக்கத்தின் பிடியில் இருந்து விடுபடவேண்டும…
-
- 13 replies
- 853 views
-
-
https://m.facebook.com/iamPokkisham/videos/644747872738556/
-
- 0 replies
- 473 views
-
-
பிரான்ஸ் – சுவிஸ் – அரியாலை: பரவியது எப்படி? 👤by admin சுவிசில் இருந்து தமிழர் தாயகத்துக்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரினால் யாழ்ப்பாணம் அரியாலையில் நடந்த ஒன்றுகூடலின் ஊடாகவே தமிழர்தாயகப் பகுதிக்குள் “கொரோனா” புகுந்தது என்ற செய்தி தாயகத்தை மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களையும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. வளர்ந்த நாடுகள் பலவுமே கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழர் தாயகம் எவ்வாறு கொரோனாவுக்கு முகங்கொடுக்கப் போகின்றது என்ற கவலையும் அச்சமும் புலம்பெயர் தமிழர்களிடத்தில் பரவலாக காணப்படுகின்றது. இதுபோலவே பிரான்சிலும் போதகர் ஒருவரின் ஒன்றுகூடலினாலேயே பிரான்ஸ் முழுவதும் கொரோனா பரவக் க…
-
- 0 replies
- 585 views
-
-
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஒரே நாளில் திணறவைத்துள்ளது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2 மணிநேரங்களில் ஆயிரத்து 800ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்தச் செய்தி பதிவிடும்வரை ஒருநாளில் 1845 பேர் அங்கு மரணித்துள்ளதுடன் புதிய நோயாளர்கள் 27 ஆயிரத்து 178 பேர் அடையாளங்காப்பட்டுள்ளனர். அத்துடன் மொத்த உயிரிழப்பு 12ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, மொத்தமாக 3 இலட்சத்து 94ஆயிரத்து 182 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அமெரிக்காவில் இதுவரை 21ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோரில் ஆயிரத்து 169 பேர் கவலைக்குரிய நிலையில் உள…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஆபிரிக்க மக்கள் மீது, கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது- உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, இனவெறி பிடித்துள்ள சில ஆய்வாளர்களுக்கு இதுபோன்ற எதேச்சதிகார புத்தி மாறவேண்டும் என ஜெனிவாவில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “சில இனவெறி (பிரான்ஸ் ஆய்வாளர்கள் இருவர்) பிடித்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை ஆப்பிரிக்க மக்களின் உடலில் செலுத்திப…
-
- 2 replies
- 844 views
-
-
மோடி மிகப்பெரிய மனிதர்- பாராட்டிய ட்ரம்ப் by : Yuganthini இந்தியாவில் இருந்து 2.90 கோடி ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்கியுள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் பிரதமர் மோடி மிகப்பெரிய மனிதர் எனவும் பாராட்டியுள்ளார். மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், குறித்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் திகதி தடை செய்தது. னினும் கொ…
-
- 1 reply
- 570 views
-
-
கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்! by : Litharsan உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்து 900ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 14 இலட்சத்து 31 ஆயிரத்து 706 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணங்கள் 80 ஆயிரத்தைக் கடந்து தற்போது 82 ஆயிரத்து 80 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து வி…
-
- 0 replies
- 372 views
-
-
இயல்பு நிலைக்கு திரும்பியது சீனாவின் வூகான் நகரம் கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்த சீனாவின் வூகான் நகரில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் அடைபட்டு கிடந்த மக்கள் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைவடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மெல்ல மெல்ல அப்பகுதி கொரோனாவில் இருந்து விடுபடுகிறது. இதன் பலனாக வூகானில் இருந்து ஹூபேய் மாகாணத்திற்குள்ளாக ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முதல் ரயில் இன்று(புதன்கிழமை) காலை புறப்பட்டுச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் 276 பயணிகள் பயணித்தனர். இதே போன்று நெடுஞ்சாலைகளும…
-
- 3 replies
- 592 views
-
-
சீனாவிடமிருந்து பிற நாடுகள் ஆர்டர் செய்யும் மருத்துவ உபகரணங்களை அதிகப் பணம் கொடுத்து அமெரிக்கா தட்டிப் பறிப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலில் சர்வதேச பதற்றமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக அளவில் வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் போதிய மருத்துவப் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் இல்லாமலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமலும் அரசுகள் திணறி வருகின்றன. ஜெர்மனி AP அதிலும் குறிப்பாக முதல் இடத்தில் உள்ள அமெரிக்…
-
- 5 replies
- 1.4k views
-
-
சவுதி-ரஷ்யா பேச்சில் தாமதம்: கச்சாய் எண்ணெய் விலையில் சடுதியான வீழ்ச்சி! சவுதி அரேபியா, ரஷ்யா இடையே கச்சா எண்ணெய் வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கமின்றி தள்ளிப்போவதால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை இருபது டொலருக்கும் குறைவாகக் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்த நிலையில் எண்ணெய் வழங்கலில் சவூதி அரேபியா, ரஷ்யா இடையே ஏற்பட்ட போட்டியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விலை வீழ்ச்சியைத் தடுக்க வழங்கலைக் குறைப்பது தொடர்பாக சவூதி அரேபியா, ரஷ்யா இடையே இன்று (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் வியாழக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலை ஒ…
-
- 3 replies
- 523 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பதிவு: ஏப்ரல் 06, 2020 07:33 AM லண்டன், சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் வியாபித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயினால் இங்கிலாந்து நாட்டில் சுமார் 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்தில் பெரும் தலைவர்களையும் தாக்கியது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வைரஸ் தொற்றுக்கு ஆளானார். சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந…
-
- 2 replies
- 601 views
-
-
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் 7ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் சிங்கப்பூர்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, சமூக விலகலை கடைப்பிடிப்பதுதான் ஒரே வழி. இதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் சிங்கப்பூரில் வரும் 7-ம் தேதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் லீ சியங் லூங் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் தற்போது வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், மக…
-
- 3 replies
- 834 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி Report us Tamilini 2 hours ago பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கிங்ஸ்டன் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசகராக செயற்பட்ட 74 வயதான வைத்தியர் அன்ரன் செபஸ்டியன் (திலகன்) என்பவரே உயிரிழந்துள்ளார். வைத்திய துறையிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவையாளராக செயற்பட்ட அவர், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக தள்ளாத வயதிலும் மீண்டும் சேவையில் ஈடுபட்டு கொரோனா நோயாளர்களை குணப்படுத்தும் முயற்சிய…
-
- 2 replies
- 560 views
-
-
உயிரிழந்தவர்களின் உடல்கள் வீதியில்- மன்னிப்புக் கோரினார் ஈக்வடோர் துணை ஜனாதிபதி ஈக்வடோரில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் குயாகுவிலின் தெருக்களில் போடப்பட்ட சம்பவம் தொடர்பாக துணை ஜனாதிபதி ஓட்டோ சோனென்ஹோல்ஸ்னர் மன்னிப்புக் கோரியுள்ளார். தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் வீதிகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் குறைந்தது 150 சடலங்களை எடுத்திருந்தபோதும் அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தார்களா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இவ்வாறு உயிரிழந்த சுமார் 150 இற்கும் மேற்பட்டவர்களின் உடல் வீதியில் போடப்பட்டியிருந்தமை சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விடயம் தொடர்பாக கர…
-
- 0 replies
- 348 views
-
-
அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 06:58 AM நியூயார்க், உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 336,673 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 69,424- பேர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன. ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையி…
-
- 1 reply
- 448 views
-
-
உலக அளவில் குறைந்துவரும் கொரோனா ஏற்படுத்தும் மரணங்கள்: ஆறுதல் தரும் விடயம்..! கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மனிதப் பேரழிவை நடத்திவரும் நிலையில் கடந்த நாட்களில் இருந்து நேற்றைய மரணப் பதிவுகள் சற்று குறைந்துள்ளமை ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது. கடந்த நாட்களில் ஒரேநாளில் 6 ஆயிரம் உயிரிழப்புக்கள் பதிவாகிவந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 இலட்சத்து 73 ஆயிரத்து 712 ஆகக் காணப்படுவதுடன் உயிரிழப்பு மொத்தமாக 69 ஆயிரத்து 458ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 71 ஆயிரத்து 408 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே,…
-
- 0 replies
- 327 views
-
-
இத்தாலியில் கடந்த மார்ச் 19-ம் தேதிக்குப்பின் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை முதல்முறையாகக் குறைந்துள்ளது. அங்கு நேற்று 525 பேர் கரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர் கடந்த 2 வாரங்களுக்கு முன் மார்ச் 19-ம் தேதி மிகக்குறைவாக 427 பேர் உயிரிழந்திருதார்கள். அதன்பின் நேற்று உயிரிழப்பு குறைந்துள்ளது. கரோனா வைரஸின் இரக்கமற்ற தாக்குதலில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரதானமானது இத்தாலி. இங்கு கரோனா வைரஸ் 15 ஆயிரத்து 887 உயிர்களை காவுவாங்கியுள்ளது. 1.29 லட்சம் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு இதுவரை 21 ஆயிரத்து 815 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனார்கள். கடந்த ச…
-
- 1 reply
- 591 views
-
-
கொரோனாவுக்கு மத்தியிலும் வெளிநாட்டு பணியாளர்களுக்காக எல்லைகளை திறந்துவிடும் ஜேர்மனி: காரணம் இதுதான்! Report us Balamanuvelan 7 hours ago உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஒரு பெரும் பிரச்சினையாக உள்ள நிலையிலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜேர்மன் எல்லைகள் திறந்துவிடப்பட்டு 80,000 வெளிநாட்டு பணியாளர்கள் ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். அதற்கு காரணம், இது ஜேர்மனியில் அறுவடைக்காலம். ஆகவே, பழங்களையும் காய்கறிகளையும் அறுவடை செய்வதற்காக, கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கிழக்கு ஐரோப்பிய பண்ணை பணியாளர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். ஜேர்மனி உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடு…
-
- 3 replies
- 446 views
-
-
நேற்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி... இன்று டெஸ்கோ வாகன சாரதி: கொரோனாவால் மாறிய ஒரு தம்பதியின் வாழ்வு! Report us Balamanuvelan 2 hours ago நேற்று வரை விமானியாக இருந்த கணவர், விமான பணிப்பெண்ணாக இருந்த மனைவி... கொரோனா பரவியதால் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட, Peter Loginஆல் சும்மா வீட்டில் உட்கார முடியவில்லை. தான் ஒரு விமானி என்ற ஈகோ எல்லாம் இல்லாமல் அடுத்த வேலையைப் பார்க்க புறப்பட்டுவிட்டார். அவர் தேர்ந்தெடுத்த வேலை, டெஸ்கோ பல்பொருள் அங்காடி வாகன சாரதி வேலை. மனைவியுடன் ஹாயாக விமானத்தில் பறந்த Peter Login, டெஸ்கோவின் டெலிவரி பாயாக களத்தில் இறங்கிவிட்டார். அவரது மனைவி Marianne Whiston இன்னும் ஒரு படி மேலே…
-
- 0 replies
- 394 views
-
-
சுவிசில் கொரோனோ தொற்றால் உயிரிழந்த தமிழரை காப்பாற்றி இருக்கமுடியும்! தொலைக்காட்சி வெளியிடும் அதிர்ச்சித் தகவல்!! Report us Gokulan 1 hour ago சுவிஸில் வாழ்ந்த இலங்கைத்தமிழரான லோகநாதன் சதாசிவம் (வயது 59) , கொரோனோ தொற்றால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெலிசூரி (TELE ZURI) என்ற தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சதாசிவம் ஒரு நீரிழிவு நோயாளியாவார் . சுவிஸ் சுகாதாரதுறையால் ஏற்கனவே நீரிழிவு , இருதயநோய்கள் உள்ளோர் கொரோனோ தொற்றின் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது . இது தொடர்பான சுற்றுநிருபங்கள் வைத்தியசாலைகள் , குடும்பவைத்தியர் போன்றோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது . அத்தோடு மாகாணரீ…
-
- 0 replies
- 311 views
-
-
மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம் மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கத் தலைவர் ட்ரம்ப் உலகத் தலைவராக இல்லாமல் உள்நாட்டுத் தலைவராகச் சுருங்கிவிட்டார். எனவே, தங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரே தலைவர் ஜெர்மனியின் மெர்க்கெல்தான் என்று ஐரோப்பா நினைக்கிறது. ஏற்கெனவே சரிந்துவந்த பொருளாதாரம் இப்போது முற்றாகப் படுத்துவிட்டது. 1953-ல் ஜெர்மனி கடன் சுமையால் தத்தளித்தபோது அதைப் பிற ஐரோப்பிய நாடுகள் ரத்துசெய்ததையும், ஜெர்மனி ஒன்றுபட உதவியதையும் நினைவுபடுத்தியுள்ளார்கள் பிற நாடுகளின் தலைவர்கள். கூடவே, தங்களுக்குக் கொடுத்த கடன்களை ஜெர்மனி ரத்துசெய்துவிட்டு புதிய கடனைத் தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர். தனக்கு ச…
-
- 3 replies
- 653 views
-
-
கொரோனா கிருமிப்பரவலின் தாக்கத்தைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் 21 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் 600 வெள்ளி வழங்கப்படும் என துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார். வழங்குதொகையை அரசாங்கம் உயர்த்தியது இதுவே இரண்டாவது முறை. இதற்குமுன் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் 100 வெள்ளிக்கும் 300 வெள்ளிக்கும் இடையிலான வழங்குதொகைகளை தருவதாக அரசாங்கம் கடந்த பிப்ரவரி அறிவித்தது. மார்ச் மாதத்தில் இந்தத் தொகை மூன்று மடங்காக 300 வெள்ளிக்கும் 900 வெள்ளிக்கும் இடையே உயர்த்தப்பட்டது. அரசாங்கம் இந்த வழங்குதொகைகளை வரும் ஆக்ஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரைக்குள் தருவதாக இருந்தது. தற்போது இந்த வழங்குதொகையின் 300 வெள்ளியுடன் மேலு…
-
- 0 replies
- 341 views
-