உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26687 topics in this forum
-
ஜேர்மனியில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட ஊர்வலமொன்றிற்குள் நபர் ஒருவர் வாகனத்தை செலுத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர். வோல்க்மார்சென் என்ற நகரில் இந்த சம்;பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள காவல்துறையினர் இது திட்டமிட்ட சம்பவமா என்பதை உடனடியாக சொல்லமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் சிலர் படுகாயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் குழந்தைகளும் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரோஸ் திங்கட்கிழமை என்ற நிகழ்வை கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலேயே நபர் ஒருவர் தனது வாகனத்தை செலுத்தியுள்ளார். குறிப்பிட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த மாநிலத்தி…
-
- 1 reply
- 485 views
-
-
மதுப்பழக்கம் அறவே இல்லை! டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான சில தகவல்கள் S.P. Thas அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பிற்கு புகைப்பிடித்தல், போதை வஸ்துகளை பயன்படுக்காது என்றும் இதுவரை காலமும் அவரை போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஜனவரியில் டொனால்ட் ட்ரம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உயரம் 6 அடி 3 அடியாகவும் உடல் எடை 239 பவுன்ட்டாகவும் இருந்தது. இந்த உயரத்திற்கு ஏற்ற உடல் எடை என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்திருந்தார். பொதுவாக காலை உணவை உண்ணும் பழக்கத்தை கொண்ட…
-
- 6 replies
- 933 views
-
-
அழிவின் விளிம்பில் சீனா- அனைத்தும் கையை மீறிவிட்டன! ஒப்புக் கொள்கிறேன்- துன்பத்தில் சீன ஜனாதிபதி Sumithiran கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவில் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் இது சீனாவின் "மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை" என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் என இரட்டை முயற்சிகளுக்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெய்ஜிங்கில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சீனப் பிரதமர் லி கெக்கியாங் தலைமை தாங்கினார்.. இதில் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் பங்கேற்றார்கள். இந்த கூட்…
-
- 5 replies
- 1.1k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சி: புடினுக்கு கடும் கண்டனம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க் கட்சி வேட்பாளர் பெர்னீ சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கலிபோர்னியா மாகாணம், பேக்கர்ஸ்பீல்ட் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில், “எனது பிரசாரத்துக்கு உதவுவதற்கு ரஷ்யா முயற்சிகள் செய்கிறது என கடந்த மாதம் அமெரிக்க அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ரஷ்யா எவ்வாறு தலையிட முயற்சி செய்தது என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட எந்தவொரு முயற்சியையும் நான்…
-
- 0 replies
- 197 views
-
-
2020: உலகை மிரட்டும் பலம்கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியல் வெளியானது உலகில் போர்க் களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலரை தங்கள் இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்கின்றன. இவ்வாறு, ஆயுதப் படைகளுக்கு மிக உயர்வான பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் ஆயுத வளத்தை அதிகரிப்பதற்காக பெருமளவான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இராணுவ வலிமையைக் கண்காணிக்கும் வலைத்தளமான குளோபல் ஃபயர்பவர் (Global Firepower) பின்வரும் ஐந்து நாடுகளின் படைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று கூறுகின்றது. அவை இராணுவ வலிமை, நிதி முதல், தளவாட திறன் என்பவற்றுடன் ஒப்பிடப்பட்டு குறித்த…
-
- 8 replies
- 3.3k views
-
-
கொரானா வைரஸ் விவகாரம் தொடர்பான அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரிகள் அளித்த பேட்டியில், கொரானா வைரஸ் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஆயிரகணக்கான போலி கணக்குகள் வாயிலாக பல மொழிகளில் ரஷ்யா பொய் பிரசாரம் மேற்கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தனர். கொரானா வைரஸ் குறித்து பொய் தகவலை பரப்புவதன்மூலம், மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கையில் மீண்டும் ரஷ்யர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த குற்றச்சாட்டை மறுத்து, டாஸ் செய்தி நிறுவனத்துக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா அளித்துள்ள பேட்டியில் வேண்டுமென்ற…
-
- 0 replies
- 362 views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸால் பல பிராந்தியங்களை தனிமைப்படுத்திய அரசு! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகையானது இத்தாலியில் 79 ஆக உயர்வடைந்துள்ளது. இதனால் அந்நாட்டு பிரதமர் கியிசெப் கோன்டே நேற்று (சனிக்கிழமை) அவசரகால திட்டத்தை அறிவித்துள்ளார். இத்தாலியில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தாலியின் லோம்பார்டி மற்றும் வெனெட்டோவின் வடக்கு பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த இரண்டு பிராந்தியங்களிலும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதேவேளை கொரோனா பரவியுள்ள குறித்த பகுதிகளுக்கு சிறப்பு அனுமதியின்றி …
-
- 0 replies
- 460 views
-
-
கனடாவில் ரயில் தண்டவாளங்களில் பேரிகாடுகள் (barricades) வைப்பது முடிவுக்கு வர வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வலியுறுத்தியுள்ளார். கடற்கரையோர பகுதியில் எரிவாயு பைப் லைன் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பெர்டா, க்யுபெக், ஆன்டாரியா (British Columbia, Ontario, Alberta and Quebec ) பகுதிகளில் தண்டவாளங்களின் குறுக்கே பேரிகார்டுகளை அப்பகுதியினர் அமைத்துள்ளனர். இதனால் ரயில் சேவையும், சரக்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ட்ருடோ, பேரிகாடு விவகாரத்தில் சொந்த கனடா மக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த விரும்பவில்லை என்றும், அமைதி வழியில் அவை அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப…
-
- 1 reply
- 639 views
-
-
மூட்டைப்பூச்சி தொல்லை அதிகமானதால் பிரான்ஸ் நாட்டில் அரசாங்கம் நிபுணர்களின் உதவிக்கு அழைப்பு விடுக்கும் அவசர எண்ணையும், இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் மூட்டைப்பூச்சி தொல்லையை அகற்றியதாக பிரான்ஸ் நினைத்தது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகள் மீண்டும் வந்துள்ளன. இந்த விரும்பத்தகாத மீள் எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, பிரான்ஸ் அரசாங்கம் வியாழக்கிழமை மூட்டைப்பூச்சி எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது, இதற்கு ஒரு பிரத்யேக இணையதளம் மற்றும் தகவல் ஹொட்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் அனைவரும் பாதிக்கப்படலாம்" என்று அரசாங்கம் இணையதளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய பிரச்சாரத்தில் தொற்றுநோயைத் தடுப்பது மற்ற…
-
- 0 replies
- 313 views
-
-
வினீத் கரே பிபிசி செய்தியாளர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து முதல்முறையாக இந்தியா வரும் அவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு வரும் திங்கட்கிழமையன்று டிரம்ப் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக பயணிக்க உள்ள டிரம்பை ஆயிரக்கணக்கான மக்கள் சாலை ஓரங்களில் இருந்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை டிரம்ப் திறந்து வைக்கிறார். அகமதாபாத்தில் டிரம்ப் இருக்கவுள்ள மூன்று மணி நேரத்திற்க…
-
- 1 reply
- 750 views
-
-
2020 ஜனாதிபதி தேர்தலில் டொனால்டிரம்பை வெற்றிபெறச்செய்வதற்கான முயற்சிகளை ரஸ்யா மீண்டும் ஆரம்பித்துள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் தேர்தல்கள் தொடர்பான சிரேஸ்ட அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிற்கு தெரிவித்துள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்பினை தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்திருப்பதற்கான இலக்குடன் ரஸ்யா மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது என அவர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த வாரம் தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து காங்கிரஸ் உறுப்பினர்களிற்கு முழுமையான தகவல்களை வழங்கியுள்ளனர். ஹக்கிங்,சமூக ஊடகங்களை ஆயுதமாக்குதல்,தேர்தல் உள்கட்டமைப்புகளை தாக்குதல் உட்பட பல விடயங்கள் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரஸ்யா டி…
-
- 1 reply
- 528 views
-
-
ஐக்கிய அமெரிக்க 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது போட்டியாளாரான ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனின் பிரசார முகாமின் மின்னஞ்சல்களை ரஷ்யா கசிய விடவில்லை என விக்கிலீக்ஸின் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்சே மறுத்தால் அவருக்கு பொதுமன்னிப்பளிப்பதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார் என பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள நீதிமன்றமொன்றில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரான டனா றொஹ்ரபச்சர் மூலம் இவ்விடயத்தை ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியதாக ஜூலியன் அசாஞ்சேயின் வழக்கறிஞர் ஜெனிஃபர் றொபின்ஸன் ஆவணமொன்றில் தெரிவித்ததாக பிரித்தானியாவின் உள்ளூர் ஊடகச் சங்க செய்தி முகவரகம் செய்தி வெளி…
-
- 0 replies
- 516 views
-
-
விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட 12 பேரிற்கும் எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கு மலேசிய சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடரவேண்டிய தேவையில்லை என்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என சட்டமாஅதிபர் டன் சிறீ தொமி தோமஸ் தெரிவித்துள்ளார். 12பேருக்கும் எதிரான 34 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களிற்கு எதிராக தண்டனை வழங்குவதற்கான யதார்த்தபூர்வமான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நபர்களை துதிப்பதும் போற்றுவதும் கொண்டாடுவதும் வழமையான விடயம் …
-
- 5 replies
- 591 views
-
-
கோவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236ஆக உயர்வு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 118 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சீனா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸிற்கு புதிதாக 889பேர் பாதிப்படைந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 75,465 பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 411பேர் தொற்றுநோயின் மையப்பகுதியான ஹூபேயிலிருந்து வந்தவர்கள் என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான…
-
- 11 replies
- 690 views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்! ஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இதன்போது குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அம்புலன்ஸ்களையும் பொலிஸ் ஹெலிக்கொப்டர் ஒன்றையும் காணமுடிவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. முதலாவது துப்பாக்கி பிரயோகம் மதுபானசாலையொன்றில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பொலிஸார் இனந்தெரியாத எண்ணிக்கையானவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பி…
-
- 9 replies
- 1.5k views
-
-
சீன ஊடகங்கள் மீது புதிய விதிமுறைகளை அமுல்படுத்துகின்றது அமெரிக்கா! சீன ஊடகங்கள் மீது அமெரிக்கா புதிய விதிமுறைகளை அமுல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இயங்கும் 5 சீன ஊடகங்களுக்கே இந்தப் புதிய விதிமுறைகள் அமுலாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 5 சீன ஊடகங்களும் சீன அரசினால் நடத்திச் செல்லப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய குறித்த சீன ஊடக அமைப்புகள், தமது சொத்துக்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/சீன-ஊடகங்கள்-மீது-புதிய-வ/
-
- 0 replies
- 292 views
-
-
சீனாவை விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு உத்தரவு சீனாவை ‘ஆசியாவின் நோய்’ என்று அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீற் (Wall Street) என்ற பத்திரிகையின் செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பாக அந்தப் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவரை சீனாவை விட்டு வெளியேறுமாறு சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. “China is the Real Sick Man of Asia” என்ற அந்தத் தலையங்கத்தை சீனாவின் வெளியுறவு அமைச்சகம், ‘நிறவெறி’ தன்மை கொண்டதாகவும் ஒரு குறிப்பிட்ட நாட்டை பாகுபடுத்திப் பிரிப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. அத்துடன், அமெரிக்காவில் சீன அரச ஊடகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் சுட்டிக் காட்டி அமெரிக்காவை சீனா விமர்சித்துள்ளது. இதேவேளை, வோல் ஸ்ட்ரீற் ஜேர்னல் பத்திரிகை க…
-
- 1 reply
- 816 views
-
-
துருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது! துருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரிய அரசுப் படைகள் ரஷ்யப் படையின் உதவியுடன் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றின. இதன் காரணமாக தற்போது சிரிய படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. குறித்த பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிரியா – துருக்கி இடையே மோதல் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் சிரியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 448 views
-
-
அமெரிக்க அதிபரே இனி என் கடவுள்.... https://nypost.com/2020/02/19/indian-man-prays-to-life-size-statue-of-donald-trump-his-god/
-
- 2 replies
- 830 views
-
-
பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற விதிகளில் பிரிட்டன் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி திறன் குறைவான தொழிலாளர்களுக்கு இனிமேல் பிரிட்டன் விசா வழங்கப்பட மாட்டாது. குறைந்த சம்பளத்தில் ஐரோப்பிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதை விட்டுவிட்டு, இருக்கும் தொழிலாளர்களின் திறனை வளர்ப்பதுடன் கூடுதல் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துமாறு தொழில் நிறுவனங்களை பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும், இதர நாட்டவர்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார். திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆண்டொன்றுக்கு 30 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து 25,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக…
-
- 0 replies
- 839 views
-
-
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிலிருந்து கொரோனா என்ற கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவியதால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பாதிக்கப்பட்ட நபர் தும்மினாலோ, இருமினாலோ வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இவர்கள் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக 29 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸை விட …
-
- 0 replies
- 648 views
-
-
அமெரிக்க அதிபராக தேர்வானால் ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என்று அந்நிறுவன அதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க் (Michael Bloomberg) அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் மைக்கேல் ப்ளும்பெர்க்கும் களத்தில் உள்ளார். நியூயார்க் நகர முன்னாள் மேயரான அவர், அதிபராக தேர்வு செய்யப்பட்டால், ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.ப்ளும்பெர்க் உலக அளவில் செய்திகளையும், பைனான்சியல் தகவலையும் அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2019ம் ஆண்டில் மட்டும் சுமார் 71 ஆயிரத்து 593 கோடி ரூபாய் ( $10 billion in revenue) வருவாய…
-
- 0 replies
- 377 views
-
-
கனடாவில் மக்கள் வீதத்தில் அசுர வளர்ச்சியை கண்டுள்ள லண்டன்! கனடாவில் மக்கள் வீதத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நகரமாக லண்டன் மாறியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2018-19ஆம் ஆண்டில் லண்டனின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2.3 சதவீதமாக உள்ளது. கனடாவில் கிச்சனர்-வாட்டர்லூவுக்கு 2.8 சதவீதமாக உள்ளது. லண்டனின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை 2019ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி 545,441 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இது அரை மில்லியன் மக்களைத் தொட்டுவிட்டது. இந்த அபரீத வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதில் லண்டன் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்குவதே காரணம் என குடியேற்றம் மற்றும் இன உறவுகளில் கனடா ஆராய்ச்சித் தலைவராக இருக்கும் ம…
-
- 3 replies
- 925 views
-
-
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவு: 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 50இற்க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த் 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என மொத்தம் 3,711 பேருடன் கடந்த 3ஆம் திகதி ஹொங்கொங்கிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பல், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்து கடந்த மாதம் ஹொங்கொங்கில் இறங்கிய பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்ற…
-
- 0 replies
- 276 views
-
-
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுகொண்ட கொரோனா வைரஸ்! சீனாவில், வேகமாகப் பரவி வரும், கோவிட் 19 எனப்படும் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,004 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 74,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் ஹூபய் மாகாணம் வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ‘கொரோனா’ பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தாக்கம் தொடர்ந்து நாட்டின் 34 மாகாணங்களில், 31 மாகாணங்களில் வேகமாகப் பரவியது. இதைத்தவிர, ஜப்பான், ஹொங்கொங் என, 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பு முதல் முதலில் தெரிய வந்து, நேற்றுடன் 50 நாட்களாகிறது. இதுவரை, சீனாவ…
-
- 0 replies
- 232 views
-