Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நேட்டோ உச்சிமாநாட்டின் போது ட்ரம்ப்பின் நடத்தை குறித்து கேலி செய்த உலக தலைவர்கள் – வைரலாகும் வீடியோ பிரித்தானியாவில் இடம்பெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த உலக தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பற்றி நகைச்சுவையாக பேசிய வீடியோ தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இறுதி நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை), பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் டச்சு பிரதமர் மார்க் ருட்டே ஆகியோர் உச்சிமாநாட்டின் போது டிரம்ப்பின் நடத்தை குறித்து கேலி செய்து பேசியுள்ளனர். 25 வினாடிகள் மட்டுமே உள்ள குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதில் “அதனால்தான் நீங்கள் தாமதமாக வந்தீர்களா?…

  2. மிகப்பெரிய தங்கக் கட்டி, ஸ்கொட்லாந்து ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது பிரித்தானியாவின் மிகப்பெரிய தங்கக்கட்டி ஸ்கொட்லாந்து ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 121.3 கிராம் எடையுள்ள இந்தத் தங்கம் இரண்டு துண்டுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரில் சுழியோடும் கருவியைப் பயன்படுத்தி புதையல் வேட்டைக்காரர் ஒருவர் இந்தத் தங்கத் துண்டுகளைக் கண்டெடுத்ததாகக் கூறியுள்ளார். கண்டெடுக்கப்பட்ட இந்த இரண்டு துண்டுகளும் மிகவும் தூய்மையாக இருந்தன என்றும் அவை 22 கரட் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு துண்டுகளும் ஒன்றாகச் சேர்ந்து தி ரீயூனியன் நக்கற் (The Reunion Nugget) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய தங்கக்கட்டியைவிட இது பெ…

  3. சூடான் நாட்டில் செராமிக் டைல்ஸ் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 18 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். சூடான் நாட்டின் தலைநகரான கார்த்தோமின் வடக்கு புறநகர் பகுதியான பகரியில் சலோமி என்ற செரமிக் டைல்ஸ் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் பெரிய டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட எரிவாயுவை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக எரிவாயு கசிந்து தீப்பற்றிக் கொண்டது. இதில் அந்த லாரி பல நூறு அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. தொழிற் சாலையின் பல இடங்களிலும் தீப்பற்றிக் கொண்டது. இதனால் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிர் தப்ப எண்ணி ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைக்கும் படையினரும் போலீசாரும் விரைந்து வ…

    • 0 replies
    • 378 views
  4. தனது கனவு நகரை திறந்து வைத்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் Published by T Yuwaraj on 2019-12-04 16:46:14 வட கொரியாவின் கனவு நகரம் என பெயர் பெற்ற சம்ஜியோன் நகரத்தை அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் திறந்து வைத்துள்ளார். கிம் ஜோங் உன் குடும்பத்தினரின் பூர்வீகமாக கருதப்படும் பேக்ட் மலைக்கு அருகே, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சொகுசு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நகரத்தை கிம் ஜோங் உன் திறந்து வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 4000 குடும்பங்கள் வாசிக்க கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஹொட்டல்கள், சொகுசு விடுதிகள், கலாசார மையம் மற்றும் உயர்தர வைத்தியாசைகள் …

    • 0 replies
    • 484 views
  5. நேட்டோ மாநாட்டுக்கு இடையே லண்டனில் பிரெஞ்ச் அதிபர் இமானுவல் மேக்ரானை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதத்தில் இருந்து சிலரை திரும்ப ஏற்பது தொடர்பான விவகாரத்தில் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் செய்தியாளர்களை சந்தித்த போது, சில நல்ல ஐ.எஸ். போராளிகளை தரட்டுமா என டிரம்ப் கேட்க, நாம் சீரியஸாக பேசலாம் என மேக்ரான் பதற்றமாக பதிலளித்தார். ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தவர்களை திரும்பப் பெறுவதில் பிரான்ஸ் பதிலளிக்காமல் தவிர்ப்பதாகவும் டிரம்ப் கூறினார். ஆனால் ஐ.எஸ். இயக்கத்தை ஒழிப்பதுதான் தமது அரசுக்கு முக்கியம் என்று மேக்ரான் பதிலளித்தார். அமெரிக்காவின் ஆதரவு பெற்ற குர்திஷ் படையினர் சுமார் 2 ஆயிரம் வெளிநாட்டு படைவீரர்களை சிரியாவின் உள்ளே அடைத்து…

    • 0 replies
    • 510 views
  6. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் தவறான விதத்தில் நடந்துகொண்டார் என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக அரசியல் குற்ற பிரேரணையை கொண்டுவருவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன என விசாரணைகளை முன்னெடுத்துள்ள குழு தெரிவித்துள்ளது. சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களிற்கான அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள குறிப்பிட்ட குழு அமெரிக்காவின் தேசிய நலன்களை விட டிரம்ப் தனது தனிப்பட்ட நலன்களிற்கு முக்கியத்துவம் அளித்தார் என தெரிவித்துள்ளது. 2020 இல் தான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக வெளிநாட்டின் உதவியை பெறமுயன்றார்-உக்ரைனின் உதவியை பெற முயன்றார் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. டிரம்பினை ஜனாதிபதி பதவியிலிருந்து ஏன் வெளியேற்ற…

    • 0 replies
    • 357 views
  7. தடைகளுக்கு மத்தியில் வட கொரியாவில் நவீன நகரம்: வியப்பில் சர்வதேசம்! ‘நவீன நாகரிகத்தின் சுருக்கம்’ என்று அழைக்கப்படும் புதிய நகரத்தை வட கொரியா அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன், இன்று (செவ்வாய்க்கிழமை) சாம்ஜியோனில் சிவப்பு நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நகரம், நாட்டின் மிக முக்கியமான கட்டுமானத் திட்டங்களில் ஒன்றாகும். அத்தோடு, தனித்துவமான, அலங்காரமாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்த நகரம், வட கொரியாவின் வேறு எந்த நகரத்தையும் ஒத்திராத நகரம் என கூறப்படுகின்றது. 4,000 குடும்பங்களுக்கு இடமளிக்கக்கூடிய இந்த நகரம் – புதிய குடியிருப்புகள், ஒரு ஸ்கை சாய்வு…

  8. வெனிசுவேலா ஜனாதிபதிக்கு பதினைந்து நாடுகள் பயணத்தடை! வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு பதினைந்து நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன. ஆர்ஜென்டினா, பிரேஸில், அமெரிக்கா, கொலம்பியா, சிலி, பெரு உள்ளிட்ட அமெரிக்க நாடுகளே இவ்வாறு தடை விதித்துள்ளன. வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதனை ஏற்றுக் கொள்ள அவர் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றார். இந்தநிலையிலேயே குறித்த நாடுகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட சந்திப்பு ஒன்றினைத் தொடர்ந்து இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/வெனிசுவேலா-ஜனாதிபதிக்…

  9. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்து, விலகுகிறார் கமலா ஹாரிஸ்! 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டிக் களத்திலிருந்து வெளியேறவுள்ளதாக செனட்டர் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். நிதி பற்றாக்குறை காரணமாகவே அவர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 55 வயதான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்த ஒரேயொரு சிறுபான்மை இன பெண் வேட்பாளர் ஆவார். ஆனால் அவருடைய பிரசாரக் கொள்கைகள் ஆப்பிரிக்க – அமெரிக்க வாக்காளர்களிடையே பெரிதளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவருடைய சொந்த மாநிலமான கலிஃபோர்னியாவிலும் கமலா ஹாரிஸ் அதிகளவு வாக்கு வங்கியை பெறவில்லை. அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றி…

    • 3 replies
    • 622 views
  10. இங்கிலாந்து பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையை இரண்டு நாடுகளாக பிரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் இது நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதல் எனவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் இந்த மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக அந்நாட்டின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டது. இலங்கையில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வாக…

  11. விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமஷ்டி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு சமஷ்டி வழக்கு தொடுநர்களுக்கு கிடைத்த பெரிய அடி என சுவிஸர்லாந்து பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல. சமஷ்டி உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதுடன் இது சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்ட 12 பேர் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுவிஸர்லாந்தின் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 260 வது ஷரத்தை மீறி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேரில் 12 பேருக…

  12. நமீபியாவின் புதிய ஜனாதிபதியாக 2ஆவது தடவையாகவும் ஜெயிங்காப் தென்மேற்கு ஆபிரிக்க நாடான நமீபியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஹேக் ஜெயிங்காப் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளும் நமீபிய தென் மேற்கு ஆபிரிக்கா மக்கள் அமைப்பின் வேட்பாளரும், ஜனாதிபதியுமான 78 வயதான ஹேக் ஜெயிங்காப் 56 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும், இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த வாக்கு விகிதத்திலேயே ஹேக் ஜெயிங்காப் வெற்றிபெற்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதல் தடவை தெரிவின்…

    • 0 replies
    • 430 views
  13. ஈரானின் அறிவிப்பு: இஸ்ரேல் – அமெரிக்க தலைவர்கள் விசேட பேச்சு ஈரானின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப்பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது எனவும், எதிரிகளின் சதி முறியடிக்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்திருந்தது. இதனையடுத்தே இவர்களது சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. டிரம்ப் ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, கோலன் ஹைட்ஸ் பகுத…

    • 0 replies
    • 387 views
  14. ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்காவின் மசோதாவுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஹாங்காங்கில் அமெரிக்க கடற்படை பயணிப்பதற்கு சீனா தடை விதித்துள்ளதுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சீனா மீதான அமெரிக்காவின் காரணமில்லாத சமீபத்திய நடவடிக்கைக்கு எதிராக ஹாங்காங் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படைகள் பயணிப்பதற்கு தடை விதிக்க சீன அரசு முடிவு எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.மேலும் ஹாங்காங்கில் நடந்த போராட்டங்களை கண்காணித்து அறிக்கை அளித்து வரும் அமெரிக்காவின் அரசு சாரா மனித உரிமை அமைப்புகளுக்கும் சீனா பொருளாதார தடை விதிக்கும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் நடக்கும் போராட்டம் தொடர்பாக எந்த நாடும் தலையிட வேண்டாம் என்று சீனா தொட…

    • 0 replies
    • 318 views
  15. உலகிலேயே விமானப் பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடுகள் பட்டியலில் கொங்கோ முதலிடம்! உலகிலேயே விமானப் பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடாக கொங்கோ ஜனநாயகக் குடியரசு பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட இரண்டு விமான விபத்துகள் அங்கு விமானப் பாதுகாப்பு குறித்து அதிக கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த நவம்பர் மாதம், கொங்கோவின் கோமா நகரத்திலுள்ள வீடுகளில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 2003ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். விமானங்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களை நிர்வகித்து வரும் ‘ஏவியேஷன் சேப்டி நெட்ஒர்க்’ எனும் அமைப்பின் தரவுகளின்படி, 1945ஆம் ஆண்டிலிருந்து…

  16. பர்கினோ பாசோ நாட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர். ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் கிழக்குப்பகுதியின் ஹண்டொகுவோரா நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.‘ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதன் பின்னர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் தாக்கினர். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை’. https://www.polimernews.com/dnews/91113/கிறிஸ்தவ-ஆலயத்தில…

    • 0 replies
    • 541 views
  17. ஜீ 20 நாடுகளின் தலைமைப் பதவி முதல் தடவையாக சவுதிக்கு ஜீ 20 நாடுகளின் தலைமைப் பதவியை ஜப்பானிடமிருந்து சவூதி அரேபியா நேற்று (01) பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அடுத்த வருடம் நவம்பர் 21, 22 ஆம் திகதிகளில் இதற்கான மாநாட்டை சவூதிஅரேபியாவின் தலைநகர் ரியாதில் நடத்தவுள்ளது. இம்மாநாட்டில் வளர்ச்சியடைந்த நாடுகள் பங்கு பற்றவுள்ளன. இந்த மாநாட்டையொட்டிய நூறு விஷேட வைபங்களையும் சவூதிஅரேபியா நடாத்தவுள்ளது. வரலாற்றில் அரபு நாடு ஒன்றுக்கு ஜீ 20 அமைப்பின் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவைாகும். பழமைபேணும் நாடான சவூதி அரேபியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவுவதாகவும், சவூதியின் நடத்தைகள் தொடர்பில் சர்வதேச அளவில் …

    • 0 replies
    • 379 views
  18. பிரான்ஸ் ஜனாதிபதி குறித்து துருக்கி ஜனாதிபதி கடும் விமர்சனம்! பிரான்ஸ் ஜனாதிபதி குறித்து துருக்கி ஜனாதிபதி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்தின் செயற்பாடு மற்றும் துருக்கியுடனான சிக்கலான உறவுகளை புரிந்து கொள்வதற்குள் மூளை செயலிழந்தது போல உணர்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இஸ்தான்புல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள எர்டோகன், மூளை செயலிழந்து விட்டதா என மெக்ரான் பரிசோதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அத்துடன், இதே கருத்தை நேட்டோ மாநாட்டிலும் கூற போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/பிரான்ஸ்-ஜனாதிபதி-குறித்…

  19. மீண்டும் வந்த 'பிரபாகரன்'..! அதிர்ந்து போன ருவிட்டர் நிர்வாகம்..! இலங்கையில் இருந்து ஈழத்தை பிரித்து தனிநாடு அமைப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில் போராடி வந்தனர். இறுதியாக 2009 ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் கட்ட போரில் புலிகள் முற்றிலும் அளிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் உலககெங்கும் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் நிச்சயம் அவர் திரும்பி வருவார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 65 வது பிறந்தநாள் கடந்த 26 ம் தேதி தமிழர்களால் உற்சாகம…

  20. பாகிஸ்தானில் திடீரென ஒரு பகுதியில் பரவிய எச்.ஐ.வி: குழந்தைகளுக்கு பெருமளவு பாதிப்பு சுமைலா ஜாஃப்ரிபிபிசி 41 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாகிஸ்தானில் லர்கானா மாவட்டத்தில் ராட்டோடெரோ பகுதியில் ஊரக சுகாதார மையத்தில் ஏழு வயதான ஒரு ஆண் குழந்தைக்கு டாக்டர் முஸாபர் காங்ரோ மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். சிற…

  21. அணுக் கழிவுகளை நிரந்தரமாக புதைப்பதற்கான இடத்தை தேடும் ஜேர்மனி! ஜேர்மனியில் அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், அணுக் கழிவுகளை நிரந்தரமாக புதைப்பதற்கான இடத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டு ஜப்பானில் புகுஷிமா அணு உலை விபத்தை அடுத்து, அனைத்து அணு உலைகளையும் மூட ஜேர்மனிய அரசாங்கம் தீர்மானித்தது. இந்தநிலையில் எஞ்சியுள்ள 7 அணு உலைகளையும் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் மூட அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. கதிர்வீச்சு அபாயம் நிறைந்த அணுக் கழிவுகள் தற்போது 20இற்கும் மேற்பட்ட தற்காலிக இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரம் கொள்கலன்கள் அளவிலான அணுக் கழிவுகளை பாதுகாப்பாக நிரந்தர இட…

  22. அரசியல் எதிரிகளை கொலை செய்த வழக்கில், சூரிநாம் அதிபர் தேசி பட்டர்ஸ்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசை விமர்சித்து வந்த பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் என 16 பேரை கடத்தி, அதில் 15 பேரை 1982ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் தேசி பட்டர்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதற்கான வழக்கு விசாரணை 2007ஆம் ஆண்டில் தொடங்கி, பல்வேறு தடைகள் நீண்ட இழுபறிக்குப் பிறகு 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிபரின் மேற்பார்வையிலேயே இந்த கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நீதிமன்றம் அதிபர் தேசி பட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. சூரிநாம் அதிபர் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள…

    • 0 replies
    • 285 views
  23. ஈராக்கில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சதாம் உசேன் ஆட்சிக்குப் பின்னர் ஈராக்கில் அரசியல் நிலையற்ற தன்மை உருவானது. இதனையடுத்து அந்நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்ததால், வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்தது. மேலும் அதிகரித்த ஊழலால் மக்கள் அதிருப்தியடைந்து பிரதமர் அதெல் அப்துல் மஹதிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. கடந்த இரு தினங்களுக்கு முன் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக நடந்து வரும் போராட்டங்கள் விளைவாக 400க…

    • 0 replies
    • 432 views
  24. லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். லண்டனில் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆயுதமேந்திய பொலிஸார் பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரிடமிருந்து பொதுமக்களை மீட்பதையும் பின்னர் மிக அருகிலிருந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன. அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் பணியாளர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நபர் ஒருவர்…

    • 26 replies
    • 2.6k views
  25. சீனாவின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ஹாங்காங் ஜனநாயக போராட்டங்களுக்கு ஆதரவான மசோதாவில் கையெழுத்திட்டார். இந்த மசோதா சட்டமானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹாங்காங்கில் மனித உரிமைகளை மீறுவோர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அமரிக்காவில் நுழைய தடை விதிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. சீன அதிபர் சீ ஜின்பிங் மீதுள்ள மதிப்பை கடந்து இந்த மசோதாவில் தாம் கையெழுத்திட்டதாக கூறிய அதிபர் டிரம்ப், சீன தலைவர்களும் ஹாங்காங் ஜனநாயக பிரதிநிதிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதார். இதனிடையே பெய்ஜிங்கில் உள்ள அமெ…

    • 0 replies
    • 498 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.