Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 27 பேர் பலி February 14, 2019 ஈரானின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகேயுள்ள சிஸ்டான் பலூசிஸ்தான் மாகாணத்தில் படையினர் சென்ற போக்குவரத்து பேருந்தினை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலுக்கு, சன்னி இஸ்லாமிய போராளிக்குழு மற்றும் ஜெய்ஸ் அல் அட்ல் ஆகியன பொறுப்பேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2019/113140/

  2. பெங்களூர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு வீட்டிற்கு சென்ற 24 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எச்.ஏ.எல் பகுதியில் வசிக்கும் அப்பெண்ணின் பேஸ்புக் நண்பனான ஆரிப் இன் பிளாட்டில் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.பேஸ்புக் நண்பர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான ஆரிப் மற்றும் எம்.பி.ஏ படித்து வரும் அப்பெண், ஆரிப் இன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா மற்றும் ஆரிப் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.பிறந்த நாள் கொண்டாட்டம்: ஆரிப், ஆதித்யா மற்றும் அப் பெண் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிறந்தால் கொண்டாட்டத்தில் கள…

    • 44 replies
    • 3.2k views
  3. பாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்! ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம வயது இளைஞரை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியதாக வெளிவந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஆண்டு, ஜூலை மாதம், மக்கேரிக் தமது பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிக்கொண்டார். இதன் பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம், அவர் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டதாகத் தெரிய வந்தது.பாலியல் குற்றங்களுக்காகப் பதவி விலகிய முதல் மதகுரு அவர் என்று தெரிவி…

  4. கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி கனடாவின் பிரம்ப்டன் பகுதியில் தந்தையால் கொடூரமாக கொல்லப்பட்ட 11 வயது சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சிறுமியின் பாடசாலை அருகே அமைந்துள்ள பூங்கா ஒன்றில் கூடிய அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பலரும் சிறுமியை நினைவு கூர்ந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அன்று மாலை குழந்தை மீண்டும் வீடு திரும்பாத நிலையில் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் பொலிஸார் மேற்கொண…

  5. பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு! தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளை மறந்து, பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணைந்து ஆதரவை வழங்குமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் கொன்சர்வேற்றிவ் கட்சியைச் சேர்ந்த 317 உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே இவ்விடயத்தை கூறியுள்ளார். அத்தோடு, பிரெக்ஸிற்றை கையாளும் விதம் தொடர்பாக வரலாறு தம்மை பற்றி தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரெக்ஸிற் மூலோபாயங்கள் தொடர்பான கணிசமான வாக்குகளை பெற்றுக்கொள்ள கொன்சர்வேற்றிவ் கட்சி தவறியுள்ளது. இந்நிலையில், பிரதமர் இக்கடிதத்தை எழுதியுள்ளார். அத்தோடு, அடுத்த வாரம் தாம் பிரசல்ஸ் பயணிக்கவுள்ளதாகவும் ஐரோப்பிய ஆணையக தலைவர் ஜீன் க்ளூட் ஜூங்கரை…

  6. ட்ரம்புடனான சந்திப்பு – 25 ஆம் திகதி வியட்நாமிற்கு கிம் ஜோங் உன் விஜயம்! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் எதிர்வரும் 25ஆம் திகதி வியட்நாமில் தரையிறங்குவார் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரண்டாம் உச்சநிலை சந்திப்பை நடத்தவே அவர் வியட்நாம் செல்லவிருக்கின்றார். இரு நாட்டுத் தலைவர்களும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வியட்நாமில் சந்தித்து பேசவுள்ளனர். இரு தலைவர்களுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் வரலாற்று முதல் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் வட கொரியத் தலைவர் கிம், ஹனொய்யில் தரையிறங்கியவுடன், வியட்நாமிய அதிகாரிகளைச் சந்திப்பார் என நம்பப்படுகிறது. அதன்பின்னர் அவர் வியட்நாமிய …

  7. சீதனம் – குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக, அவுஸ்ரேலிய சட்டத்தில் உள்ளடக்க பரிந்துரை.. February 15, 2019 அவுஸ்ரேலியாவில் சீதனம் வாங்குவதை குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக சட்டத்தில் உள்ளடக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட செனட் குழு, அரசிடம் இதனைப் பரிந்துரைத்துள்ளது. அவுஸ்ரேலியாவில் சீதனம் கொடுப்பது – வாங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் குறிப்பிட்ட செனட் குழுவினர் ( Senate Standing Committee on Legal and Constitutional Affairs) அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள இறுதி அறிக்கையிலேயே இந்த யோசனை பிரேரிக்கப்பட்டிருக்கிறது…

  8. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது, ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை…. February 16, 2019 அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் போதுமான நிதியைப் பெறுவதற்காக அமெரிக்காவில் அவசரநிலையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றையதினம் பிறப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் இந்த சுவர் எழுப்பும் திட்டத்துக்கு ட்ரம்ப் கேட்கும் தொகைக்கும் குறைவாக நிதி ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சியினர் சம்மதித்ததனால், பொறுமை இழந்த ட்ரம்ப் பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலே நிதிபெறுவதற்காக அவசர நிலையை அறிவித்துள்ளார். இந்தநிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனக்கு இருக்கும் அரசியலமைப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என மனித உரிமை ஆர்வலர்…

  9. வருடாந்தம் ஆயுத மோதல்களாலும் அதன் தாக்கத்தினாலும் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன : February 15, 2019 உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் ஆயுத மோதல்கள் மற்றும் அதன் தாக்கத்தினாலும் பசி பட்டினியாலும் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் குழந்தைகளைக் காப்போம் என்னும் தொனிப் பொருளுடன் இயங்கிவரும் சேவ் தி சில்ட்ரன்ஸ் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ ஜனநாயகக் குடிய…

  10. உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம் : February 15, 2019 உலகின் மிகப்பெரிய சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டுடன் நிறுத்த உள்ளதாக ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான எயர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 500 பயணிகள் அமரும் வண்ணம், 2 அடுக்குகளை கொண்ட சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டு முதல் நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்களை தயாரிக்க செலவு அதிகம் என்பதாலும், கடந்த சில ஆண்டுகளில் அதன் கொள்முதல் மிகவும் குறைந்துவிட்டமை காரணமாகவும் அதனை தயாரிப்பதனை நிற…

  11. சிம்பாப்வேயில் தங்கச் சுரங்கங்களுக்கு அருகே அணை உடைவு – 23 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் February 15, 2019 சிம்பாப்வே தலைநகர் ஹராரே அருகே உள்ள கடோமா என்னும் நகரில் அமைந்துள்ள 2 சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை உடைந்ததில் சிக்கிக் கொண்ட 23 தொழிலாளர்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 2 சுரங்கங்களும் நீண்ட காலமாக பயன்பாடின்றி காணப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக நுழைந்த சிலர் தங்க வேட்டையில் ஈடுபட்டு இருந்த நிலையிலேயே கடந்த 12ம் திகதி இவ்வாறு அணை திடீரென உடைந்துள்ளது. இதனையடுத்து அதிலிருந்து பாய்ந்தோடிய வெள்ளம் 2 சுரங்கங்களிலும் நிறைந்தமையால் 23 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நில…

  12. பொப் பாடகர் மீது துப்பாக்கிச் சூடு – கலிபோர்னிய பொலிஸாரின் இனவாத செயல் என குற்றச்சாட்டு! செயல் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்று நீண்டநேரம் அங்கு தரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விருந்தகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் காரின் அருகில் சென்று அவதானித்துள்ளார். காரின் சாரதி ஆசனத்தில் ஒருவர் அசைவற்று சரிந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேகம் கொண்டு காரை நெருங்கிச் சென்று ஆராய்ந்துள்ளனர். பூட்டி இருந்த காரின் கதவை திறந்தனர். அப்போது சாரதி ஆசனத்தில் ஒருவர் அசைவின்றி கிடப்பதையும், அவரது மடியில் துப்பாக்கி ஒன்று இருந்ததையும் அவதானித்தனர். கார் இயக்க நிலையிலேயே இருந்துள்ளது. …

  13. ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரி இராஜினாமா அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் மத்திய அவசர முகாமைத்துவ பிரிவின் தலைவர் ப்றொக் லோங் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பு வகிக்கும் பல அதிகாரிகளின் பதவி விலகலின் தொடர்ச்சியாக இந்த சிரேஷ்ட அதிகாரியின் விலகல் அமைந்துள்ளது. தனது பதவி விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது குடும்பத்தினருக்காக வீட்டிற்கு செல்ல வேண்டிய தருணம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவசர முகாமைத்துவ பிரிவில் பணியாற்றியமை தனது வாழ்நாளில் கிடைத்த முக்கிய வாய்ப்பாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இப்பதவியில் வகித்த அவர் பல தீவிர இயற்க…

  14. ட்ரம்பை எதிர்த்து 5 பெண்கள் போட்டி அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ட்ரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. தற்போது வரை அக்கட்சியை சேர்ந்த 12 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியை சேர்…

  15. மெக்ஸிகோவில், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான, 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டனர்… February 12, 2019 மெக்ஸிகோவில் கடந்த 9 வருடங்களில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்குள்ளான 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது வருடங்களில் மட்டும் 152 கத்தோலிக்க பாதிரியார்கள் சிறார்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக தேவாலயத்திலிருந்து நீக்கப்பட்டு அவர்களில் சிலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர் என மெக்ஸிகோ தேவலாயம் ஒன்றின் பேராயர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னர் சில பாதிரியார்களும் பேராயர்களும் பாலியல் பலாத்காரச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என போப் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார். அத்துடன் கடந்த வருடம் …

  16. ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது – ஈரான் ஈரானின் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி கூறியுள்ளார். ஈரானியப் புரட்சியின் 40ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். பகைமை பாராட்டும் நாடுகளின் நெருக்குதலுக்கு அடிபணியாமல், ஈரான் தொடர்ந்து அதன் இராணுவ வலிமையை விரிவுபடுத்துவதில் உறுதியாய் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா சென்ற ஆண்டு அணுச்சக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்ட பின்னர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது மீண்டும் தடை விதித்ததற்கு ஈரானிய ஜனாதிபதி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்…

  17. சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான வான்வழி தாக்குதலில் 70 பேர் பலி சிரியா நாட்டில் முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். எஞ்சியுள்ள சிலர் யூப்ரட்டஸ் நதிக்கரையின் ஓரத்தின் உள்ள மறைவிடங்களில் பதுங்கி வாழ்கின்றனர். அவ்வகையில், டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக பாகோவ்ஸ் நகரம் உள்ளிட்ட இடங்களில் வசித்துவந்த சுமார் 20 ஆயிரம் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இப்பகுதியில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான உள்நாட்டு விமானப்படை இன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது அங்குள்ள தற்காலிக முகாமின் மீது குண்டுகள் விழுந்ததில் பொ…

  18. சவுதி இளவரசர் பாகிஸ்தானில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்- 5 டிரக்குகளில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வர இருக்கிறார். இந்த வார இறுதிக்குள் சவுதி இளவரசர் பாகிஸ்தான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களினால் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் நேற்று இஸ்லாமாபாத்தை அடைந்தன. சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி பத்தி…

  19. படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்க அரசாங்கத்திற்கு எல்லைச்சுவர் தொடர்பாக நிதியுதவி அளிப்பது மற்றும் மற்றொரு நாடு தழுவிய அரசுப்பணிகள் முடக்கத்தை தடுக்கவும் ஜனநாயக கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர். திங்கள்கிழமை இரவில் கேபிடல் ஹில்லில் நடந்த ஒரு சந்திப்பில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அரசு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் காலாவதியாகின்ற, வரும் வெள்ளிக்கிழமைக்குள் சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்த வேளையில் தற்போது இந்த முன்னேற்றம் ஏற்பட்ட…

  20. கஷோக்கியின் படுகொலையை நாங்களே விசாரணை செய்வோம்: சவுதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டிய அவசியமில்லை எனவும் சவுதியின் திறமையான சட்ட அமைப்புமுறையால் இந்த விசாரணையை கையாள முடியுமெனவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல்-ஜுபெய்ர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கஷோக்கி கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்ட அடெல் அல்-ஜுபெய்ர், அந்த படுகொலைக்கு சவுதி அரசுக்கும் தொடர்புள்ளது என்பதை மறுப்பு தெரிவித்தார். சவுதி இளவரசர் மொஹம்மட் பின் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் சவுதி அதிகாரிகள் இப்படுகொலையை முன்னெடுத்திருக்க வாய்ப்பில்லையென அமெரிக…

  21. தாய்லாந்தில் இளவரசி பிரதமர் பதவிக்கு போட்டி February 9, 2019 இராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டின் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் வழமையாக நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடைபெற்ற போராட்டங்களில் பெரும் வன்முறையும் வெடித்திருந்தது. இந்தநிலையில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட…

  22. EUவில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த, பிரித்தானிய மக்கள் விருப்பம்… February 11, 2019 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தாமதப்படுத்துவதற்கு பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என பிரித்தானியா முடிவெடுத்தநிலையில் அப்போது இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். அதற்கேற்ப ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி விலகுவதற்கான நடவடிக்கைய…

    • 6 replies
    • 1.1k views
  23. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சவுதி அரேபியாவில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றுள் சன்னி மற்றும் ஷியா பிரிவு ஆகியவை முக்கியமானது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை சன்னிதான் மிகப்பெரும் பிரிவு. முகம்மது நபியின் வழிமுறையைப் பின்பற்றும் மக்கள் இந்தப் பிரிவைக் கடைப்பிடிப்பார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்களே ஷியா பிரிவினர். இவர்கள் முகமது நபியின் மருமகன்தான் அடுத்த வாரிசு என நம்புபவர்கள். அரேபியாவில் உள்ள அதிகமான மக்கள் ஷியா அமைப்பைச் சேர்ந்தவர்கள். கடந்த 7-ம் தேதி சவுதி அரேபியாவின், மதினா நகரில் உள்ள நபிகள் நாயகம் மசூதிக்கு ஸகாரியா அல் ஜபிர் என்ற 6 வயதுச் சிறுவன் தன் தாயுடன் சென்றுள்ளார். இது சன்னி அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழுகை முடித்து சிறுவனும் தா…

  24. ஐ.எஸ் பயங்கரவாதிகளை முற்றாக ஒழிக்க அமெரிக்கா திட்டம் உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள். அமெரிக்க நகரங்களில் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தி உலகையே பதற வைத்த அல்கொய்தா பயங்கரவாதிகளை விட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோசமானவர்கள் என்று அமெரிக்கா தெரிவித்தது. 2ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா, ஈராக் நாடுகளின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களை ஒழித்துக்கட்டுவது என்பது உள்நாட்டுப்படைகளுக்கு கடினமான காரியம் என்பதை அமெரிக்கா உணர்ந்தது. இதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் இவ்விரு நாடுகளிலும் களம் இறங்கின. உள்நாட்டுப்படைகளுட…

  25. சாரதி அனுமதி பத்திரத்தை மீளக்கையளித்தார் கோமகன் பிலிப்! கோமகன் பிலிப் பயணித்த கார் அண்மையில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில், அவர் தனது சாரதி அனுமதி பத்திரத்தை மீளக்கையளித்துள்ளார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான கோமகன் பிலிப் (97), ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயமடைந்தார். மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக கோமகன் பிலிப் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, கோமகன் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.