உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26606 topics in this forum
-
ஜெர்மனியின் பொருளாதாரம் மந்த நிலையில்! ஜேர்மன் பொருளாதாரம் 2024 இன் இறுதிக் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சுருங்கியதுடன் மீண்டும் பொருளாதார மந்தநிலை அச்சத்தை தூண்டியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கூட்டாட்சி தேர்தல்களுக்கு முன்னதாக நிச்சயமற்ற தன்மையுடன் போராடுகிறது. ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய மூன்று மாத காலத்துடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 0.2% குறைந்துள்ளது என்று அந் நாட்டு புள்ளியியல் அலுவலகத்தின் ஆரம்ப தரவு வியாழக்கிழமை (30) வெளிக்காட்டியது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி எதிர்மறையாக இருந்தால், பொருளாதாரம் மீண்டும் மந்தநிலையில் விழும் – பொதுவாக இரண்டு தொடர்ச்சியான காலாண்டு சுருக்க…
-
-
- 5 replies
- 522 views
-
-
DeepSeek க்குப் போட்டியாக Qwen2.5 Max ஐ களமிறக்கிய அலிபாபா! DeepSeek, ChatGPT, Llama ஆகிய மனிதர்களைப் போன்று பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் போட்டியாக சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா தனது செயலியான Qwen2.5 Max ஐ அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “Qwen 2.5-Max செயற்கை நுண்ணறிவு செயலியானது DeepSeek, ChatGPT, Llama ஆகியவற்றை விட சிறப்பாக செயற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச AI தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மொடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவுசெய்து பிரபலமடைந்து வரும் நிலையில், அதற்கு நேரடி போட்டியை ஏற்பட…
-
- 0 replies
- 241 views
-
-
இந்திய மாணவர்களைக் குறிவைக்கும் ட்ரம்ப்! அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விபரங்களைத் திரட்ட அந்நாட்டு அரசு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் இந்திய மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றார். இதன் முதற்கட்டமாக கொலம்பியாவைச் சேர்ந்த பலரை இராணுவ விமானங்கள் மூலம் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் செயற்பாட்டில் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் பக்கம் …
-
- 0 replies
- 190 views
-
-
கனடா பெண் பிரதமர் வேட்பாளர் ரூபி தல்லா காணொளிக்கு விமர்சனம் கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியான ரூபி தல்லா, “நான் கனடா பிரதமரானால் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் 5 லட்சம் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவேன்” என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் பலரும், ‘இவரென்ன கனடாவின் பெண் ட்ரம்ப்பா?’ என்று தங்களது கேள்விகளை எழுப்பி உள்ளனர். கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி. ரூபி தல்லா களமிறங்கி உள்ளார். லிபரெல் கட்சியை சேர்ந்த இவர் பிரதமராக தேர்வாகும் பட்சத்தில், கனடா நாட்டின் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை பெறுவார். இந்நிலையில்தான் இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் சட்டவி…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
Published By: VISHNU 30 JAN, 2025 | 03:36 AM (நா.தனுஜா) அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராகவிருப்பதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடாவின் டொரன்டோ நகரில் 'ஹார்வெஸ்ட் ஒஃப் ஹோப்' எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் மேற்கொண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொல…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
பாங்க் ஆஃப் கனடா வர்த்தகப் போருக்குத் தயாராகிறது இன்று எதிர்பார்த்தபடி BoC விகிதங்களை 25bp குறைத்தது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சில முன்னேற்றங்கள் கொடுக்கப்பட்டால் விகிதங்கள் அடிமட்டத்தில் அல்லது அதற்கு அருகில் இருக்கும், ஆனால் அமெரிக்க-கனடா வர்த்தகப் போரின் மிகப்பெரிய கேள்விக்குறி இன்னும் வெட்டுக்களுக்கான கதவைத் திறந்து வைக்கிறது. இறுதியில், கட்டணங்களின் ஒப்பீட்டு வளர்ச்சி-பணவீக்கம் தாக்கம் BoC இன் எதிர்வினையைத் தீர்மானிக்கும். அதிக USD/CAD உயர்வை எதிர்பார்க்கிறோம் படம் இந்த கட்டுரையில் BoC வெட்டி QTயை முடிக்கிறதுவர்த்தகத்தில் அதிகரித்த நிச்சயமற்ற தன்மைUSD/CAD டிப்ஸில் கவர்ச்சிகரமானதாக உள்ளது …
-
- 1 reply
- 254 views
-
-
29 JAN, 2025 | 01:02 PM அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூதஇலக்கொன்றை தாக்குவதற்கான சதிதிட்டத்தை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பொலிஸார் பெருமளவுவெடிபொருட்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜனவரி 19ம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கரவன் ரக வாகனமொன்றை வீடொன்றில் மீட்டனர் என தெரிவித்துள்ள நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தின் பிரதிபொலிஸ் ஆணையாளர் டேவிட் ஹட்சன் அந்த கரவனில் வெடிபொருட்கள் பெருமளவில் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வெடிபொருட்களை யூதஇலக்கினை தாக்குவதற்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் இந்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளத…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 JAN, 2025 | 03:02 PM ஆசியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பிரார்த்தனைகள் மற்றும் ஏராளமான உணவுகளுடன் சீனப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் வைக்கப்படும் நிலையில், இவர்கள் டிராகன் ஆண்டுக்கு விடைகொடுத்து பாம்பு ஆண்டை வரவேற்றுள்ளனர். "வசந்த விழா" என்றும் அழைக்கப்படும் லூனார் புத்தாண்டு அல்லது சந்திரப்புத்தாண்டு இன்று 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வரை 15 நாள் நாட்கள் சீன மக்களால் கொண்டாடப்படுகிறது. சீனாவிலும் பிற இடங்களிலும் உள்ள சீன மக்கள் இந்த ஆண்டின் மிக முக்கியமான பண்டிகையாகக…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு ட்ரம்பின் விசேட இராஜினாமா திட்டம்! கூட்டாட்சி பணியாளர்களின் அளவை கணிசமாகக் குறைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம், அலுவலகத்தில் பணிக்குத் திரும்ப விரும்பாத அனைத்து ஊழியர்களுக்குமான விசேட இராஜினாமா திட்டத்தை வெளியிட்டது. அமெரிக்க பணியாளர் மேலாண்மை அலுவலகம் செவ்வாய்க்கிழமை (28) இது குறித்து மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் இந்த சலுகையை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கூட்டாட்சித் தொழிலாளர்கள் பெப்ரவரி 6 ஆம் திகதிக்குள் இராஜினாமா செய்தால், அவர்கள் செப்டம்பர் வரை எட்டு மாத ஊதியம் மற்றும் பலன்களைப் பெறுவார்கள். அதேநேரம், இதில் பங்கேற்பதா என்பதை முடிவு செய்ய மத்திய அ…
-
- 0 replies
- 208 views
-
-
காசா மக்களை ஜோர்தான் எகிப்தில் மீள்குடியேற்றும் டிரம்பின் யோசனை - இரு நாடுகளும் நிராகரிப்பு Published By: Rajeeban 29 Jan, 2025 | 11:18 AM காசாவின் மக்களை எகிப்து ஜோர்தானில் மீள்குடியேற்றவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை எகிப்தும் ஜோர்தானும் நிராகரித்துள்ளன. எகிப்திய அரசாங்கம் பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலங்களில் வசிக்கவேண்டும்,அவர்களின் நியாயபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவேண்டும்,சர்வதேச சட்டங்களை மதிக்கவேண்டும் என்பதை ஆதரிக்கின்றது என அறிக்கையொன்றில் எகிப்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனியர்களை எகிப்தில் மீள்குடியே…
-
- 0 replies
- 147 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பால் ஆடம்ஸ் பதவி,பிபிசி ராஜ்ஜீய செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடை பயணமோ அல்லது கார் பயணமோ, தங்கள் வீடுகளை நோக்கிய பயணத்தை பாலத்தீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 15 மாதங்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸா மக்களுக்கு இது அதிக தூரம் இல்லை, ஏனெனில் காஸா ஒரு சிறிய பகுதிதான். போரால் கடுமையாக சேதமடைந்துள்ள இந்த பகுதியை நோக்கிய இவர்களது பயணம் என்பது ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தின் தொடக்கம் மட்டுமே. இந்தப் பகுதியில் நிலவக்கூடிய மனிதாபிமான நெருக்கடியின் அளவைப் புரிந்துகொள்வது கடினம். "இங்கு எந்த வசதிகளும் இல்லை, பொதுச் சேவைகள் இல்லை, மி…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20-ம் திகதி பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அதன்படி சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 538 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் நுற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவிக்கயைில், சட்டவிரோதமாக குடியேறிய 538…
-
-
- 12 replies
- 637 views
- 1 follower
-
-
ட்ரம்ப் மீதான விசாரணையை மேற்கொண்ட சட்டத்தரணிகள் குழு பணி நீக்கம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அவருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய பத்துக்கும் மேற்பட்ட நீதித்துறை சட்டத்தரணிகளை பணிநீக்கம் செய்துள்ளது. பதவி நீக்கமானது திங்கட்கிழமை (27) முதல் அமுலுக்கு வந்துள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் இவர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருப்பதால், ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலை நம்பிக்கைத் தன்மையாக செயல்படுத்துவதை நம்ப முடியாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதை அடுத்து சட்டத்தரணிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக செயல் சட்டமா அதிபர் ஜேம்ஸ் மெக்ஹென்றி சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தரணிகள் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்ம…
-
- 0 replies
- 201 views
-
-
ரஷ்யாவின் சுகோய் 35 போர் விமானங்களை வாங்கிய ஈரான்! ஈரான் ரஷ்ய தயாரிப்பான சுகோய்-35 போர் விமானங்களை வாங்கியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஒருவர் திங்கள்கிழமை (27) தெரிவித்தார். தெஹ்ரானுக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்து மேற்கு நாடுகளில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஈரானிய அதிகாரி ஒருவர் Su-35 ஜெட் விமானங்களை வாங்குவதை உறுதி செய்வது இதுவே முதல் முறை. எனினும், எத்தனை ஜெட் விமானங்கள் வாங்கப்பட்டன, அவை ஏற்கனவே ஈரானுக்கு வழங்கப்பட்டதா என்பது போன்ற விடயங்களை IRGC தளபதி அலி ஷத்மானி அவரது அறிவிப்பில் தெளிவுபடுத்தவில்லை. 2023 நவம்பரில் ஈரானின் Tasnim செய்தி நிறுவனம், ரஷ்ய போ…
-
- 0 replies
- 248 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர். கடலோர பாதையில் பெருந்திரளான மக்கள் வடக்கு நோக்கி நடந்து செல்வதை டிரோன் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,EPA பட மூலாதாரம்,GETTY IMAGES …
-
-
- 5 replies
- 255 views
- 1 follower
-
-
ஐரோப்பாவில் தமது பானங்களை திரும்பப் பெறும் கோக கோலா! குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனமான கோக கோலா (Coca-Cola) ஐரோப்பா முழுவதும் உள்ள சில நாடுகளில் அதன் பானங்களில் “குளோரேட்டு” எனப்படும் அதிக அளவு இரசாயனங்கள் இருப்பதால் அவற்றை திரும்பப் பெறுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தயாரிப்புகளில் கோக், ஃபாண்டா, மினிட் மெய்ட், ஸ்ப்ரைட் மற்றும் டிராபிகோ பிராண்டுகள் அடங்கும் என்று கோக கோலாவின் சர்வதேச பாட்டில் மற்றும் விநியோக நடவடிக்கையின் பெல்ஜியக் கிளை தெரிவித்துள்ளது. 2024 நவம்பர் முதல் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தில் அதிக அளவு குளோரேட்டு கொண்ட கேன்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களில் கோகோ கோலா பானங்கள் விநியோ…
-
- 0 replies
- 255 views
-
-
விடுவிக்கப்படவிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழப்பு! காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள் தொடர்பான ஹமாஸின் பட்டியலை மேற்கோள் காட்டி இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதன்படி, ஏனைய 25 பேர் உயிருடன் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸிடமிருந்து பணயக் கைதிகளின் தகவல்களைப் பெற்ற இஸ்ரேல், அவர்களின் நிலைமை குறித்து குடும்பங்களுக்கு அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளில…
-
- 0 replies
- 201 views
-
-
தென் கொரிய விமான விபத்து; விமானத்தின் என்ஜின்களில் பறவை இறகுகள்! கடந்த டிசம்பர் மாதம் தென் கொரியாவில் விபத்துக்குள்ளாகி 179 நபர்களின் மரணத்துக்கு வழி வகுத்த பயணிகள் விமானம் மீது பறவை மோதியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜெஜு ஏர் விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் வாத்து வகையைச் சேர்ந்த பறவைகளின் இறகுகள் மற்றும் இரத்தக் கறைகள் காணப்பட்டிருந்தாக திங்களன்று (27) வெளியிடப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது இப்போது விபத்துக்குள்ளான விமானத்தின் பறவை தாக்குதலின் பங்கு மற்றும் விமானம் ஓடுபதையின் முடிவில் அமைக்கப்பட்டிருந்த கொன்கிரீட் சுவர் என்பவற்றின் முக்கிய பங்கினை எடுத்துக் காட்டுகிறது. ஜெஜு ஏர…
-
- 0 replies
- 156 views
-
-
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வீசிவரும் பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகின்றது. குறிப்பாக டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,அடர்பனியால் டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியா மற்றும் மில்வாகீ, புளோரிடா உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய …
-
-
- 11 replies
- 583 views
- 2 followers
-
-
டயானாவுக்கு சொந்தமான 13,000 ஏக்கர் எஸ்டேட் ஒன்று, அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியமுக்கோ அல்லது ஹரிக்கோ செல்லாமல் வேறு ஒரு நபருக்கு கிடைக்க இருக்கிறது. டயானாவின் எஸ்டேட்டைப் பெறும் நபர் அந்த நபர் வேறு யாருமில்லை, டயானாவின் தம்பியான சார்லஸ் ஸ்பென்சர் (Charles Spencer)இன் மகனான லூயிஸ் ஸ்பென்சர்தான் (Louis Spencer, 30). அதாவது, ஸ்பென்சர் குடும்ப மரபுப்படி, ஒருவரது சொத்துக்கள், அவருக்கு முதலில் பிறந்த பிள்ளைக்குச் செல்லாமல், அந்தக் குடும்பத்தில் பிறந்த முதல் ஆண் பிள்ளைக்குத்தான் செல்லும். ஆக, டயானாவின் குடும்பச் சொத்து, அவரது தம்பியான சார்லஸ் ஸ்பென்சருக்கு (Charles Spencer) மூத்த பெண் பிள்ளைகள் மூன்று பேர் இருந்தும், அவரது முதல் மன…
-
- 0 replies
- 305 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிஐஏவின் புதிய இயக்குநர் ஜான் ரட்கிளிஃப் கட்டுரை தகவல் எழுதியவர், ஹோலி ஹோண்டெரிச் பதவி, வாஷிங்டனிலிருந்து 26 ஜனவரி 2025, 14:31 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உளவு முகமையான சிஐஏ சனிக்கிழமை வெளியிட்ட பகுப்பாய்வு முடிவின்படி, கொரோனா பெருந்தொற்று விலங்குகளிலிருந்து அல்லாமல் சீன ஆய்வகத்திலிருந்து ஏற்பட்டிருக்கதான் "வாய்ப்புகள் அதிகம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் முடிவுகள் குறித்து தங்களுக்கு "அதிக நம்பிக்கை" இல்லை என உளவு முகமை தெரிவித்துள்ளது. "ஏற்கனவே உள்ள தரவுகளின்படி, கொரோனா பெருந்தொற்றுக்க…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைத்துவிடுமாறு ட்ரம்ப் விடுத்த மிரட்டலையடுத்து, கனேடியர் ஒருவர் பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளார். டொனால்டு ட்ரம்பிற்கு பதிலடி கொடுக்கும் அதே சமயம், அதனையொரு வியாபாரமாக மாற்றும் வகையில் லியாம் மூனி (Liam Mooney) எனும் கனேடியர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். "Canada is Not for Sale" என்ற வாசகத்துடன் கூடிய தொப்பிகளை தயாரித்து வெளியிட்டுள்ளார் மூனி. இந்த முயற்சியால் ஈர்க்கப்பட்ட Ontario Premier டக் ஃபோர்ட் (Doug Ford), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒட்டாவாவில் நடந்த கூட்டத்தில் இந்த தொப்பியை அணிந்தது மிகவும் பிரபலமாகியுள்ளது. இதனால் இத்தொப்பிகளுக்கான ஓன்லைன் ஆர்டர்கள் திடீரென பன்மடங்கு அதிக…
-
- 0 replies
- 432 views
-
-
ஹமாஸ் அமைப்பில் புதிதாக 15000 உறுப்பினர்கள் - அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தகவல் Published By: Rajeeban 26 Jan, 2025 | 10:27 AM reuters இஸ்ரேலுடனான யுத்தம் ஆரம்பித்த பின்னர் பாலஸ்தீனிய போராளி அமைப்பான ஹமாஸ் புதிதாக 15000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக்கொண்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்ததாக அமெரிக்க காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் ஈரான் ஆதரவு அமைப்பு இஸ்ரேலிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக விளங்கலாம் என அமெரிக்க புலனாய்வு பிரிவுகள் தெரிவித்துள்ளன. இதேயளவு - 15000 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுடனான மோதலின் போது கொல்லப்பட்டனர் என அமெர…
-
- 0 replies
- 130 views
-
-
இஸ்ரேலிய யுவதியை ஹமாஸ் விடுதலை செய்யும் வரை காசாவின் வடபகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை - இஸ்ரேல் 26 Jan, 2025 | 11:54 AM ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் முக்கிய வீதியொன்றை மூடியுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகளையும் இஸ்ரேல் 200 பாலஸ்தீனியர்களையும் விடுதi செய்துள்ள நிலையிலேயே இந்த முட்டுகட்டை நிலை எழுந்துள்ளது. ஆர்பெல் யெகுட் என்ற இஸ்ரேலிய பெண்ணை விடுதலை செய்வது குறித்த திட்டத்தினை ஹமாஸ் வெளியிடும் வரை பாலஸ்தீனி…
-
- 0 replies
- 158 views
-
-
Published By: RAJEEBAN 26 JAN, 2025 | 09:47 AM அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை நிறுத்திவைப்பதற்கும் எதிர்காலத்தில் வெளிநாட்டு உதவிகளை அரைவாசியாக குறைப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதால் இலங்கை உட்பட பல நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் மைக்ரூபியோ இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்காவின் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். இதன் காரணமாக வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தி;ட்டங்களிற்கு யுஎஸ்எயிட் அமைப்பும் அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் வழங்கிவந்த நிதி நிறுத்தப்படும் நிலை நிலை எழுந்துள்ளது. …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-