உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26885 topics in this forum
-
பிரிட்டனில் கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமை : 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கீடு பிரிட்டனில் கால்பந்து விளையாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரித்துவரும் அதிகாரிகள், குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 250-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களையும், பாதிக்கப்பட்ட560 நபர்களையும்கண்டறிந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமை : 560 பேர் பாதிப்பு? சுமார் 311 கால்பந்து கிளப்கள் மற்றும் விளையாட்டின் அனைத்து வரிசைகளிலும் அங்கம் வகிப்பவர்கள் ஆகியோர் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள…
-
- 2 replies
- 401 views
-
-
இன்றைய (18/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளின் பிரத்யேக நோய்களை ஒழிப்பதில் அடைந்திருக்கும் வெற்றி என்ன? தொடரும் தோல்விகள் எவை? ஆராய்கிறது சர்வதேச மாநாடு. * இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்தாவின் கிறித்தவ ஆளுநர் தேர்தலில் தோல்வி; சகிப்புத்தன்மைக்குப்பேர்போன நாட்டின் தலைநகரத்தேர்தல்,, மத உணர்வுகளைத் தூண்டியதா? பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு. * ஆபத்துக்கு மத்தியில் ஆரம்பக்கல்வி; பள்ளியில் படிக்க தினமும் படகில் செல்லும் உகாண்டா குழந்தைகளின் கதை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 235 views
-
-
அமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல்: ‘அனிமேஷன்’ காணொளி வெளியீடு அமெரிக்கா - வடகொரியா இடையே பதற்ற நிலை முற்றியுள்ள நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று அமெரிக்க நகர் ஒன்றில் விழுந்து வெடிப்பதுபோன்ற காட்சியொன்றை வடகொரியா வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் பாட்டனார் கிம் இல் சங்கின் பிறந்த நாள் நேற்று (18ஆம் திகதி) கொண்டாடப்பட்டது. ‘சூரியனின் தினம்’ என்ற பெயரில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் இந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மற்றும் இராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது வடகொரியாவின் வழக்கம். அதன்படி, நேற்று …
-
- 1 reply
- 811 views
-
-
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே திடீர் பொதுத்தேர்தலை அறிவித்திருப்பது குறித்த செய்தி; வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரிக்கும் மோதல் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம், லண்டனில் உருவாகும் பிரம்மாண்ட பாதாள சாக்கடைத்திட்டம் மற்ற நகரங்களுக்கு வழிகாட்டுமா? என்பது குறித்த நேரடி செய்தி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லப்பிராணிகளை கொண்டுவரும் போக்கு அதிகரிப்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 314 views
-
-
3 மாத குழந்தைக்கு தீவிரவாத விசாரணை அழைப்பாணை..! விசா விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக பிறந்து 3 மாதமான குழந்தையை தீவிரவாதி என கருதி விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பியுள்ள சம்பவம் லண்டனிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரிட்டனின் லண்டன் நகரை சேர்ந்த பயே கென்யன்- கெய்ர்ன்ஸ். அவரது 3 மாத குழந்தை ஹார்வி கென்யன்-கெய்ர்ன்ஸ் ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒர்லாண்டோவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். குறித்த சுற்றுலாப்பயணத்திற்காக 3 மாத குழந்தை ஹார்வி கென்யன்-கெய்ர்ன்ஸ்க்கு விசா பெறப்பட்டுள்ளது. குறித்த விசாவை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தில், நீங்கள் தீவிரவாத நடவடிக்கைகள், உளவு ப…
-
- 1 reply
- 684 views
-
-
பிரிட்டனில் பொதுத் தேர்தல்: பிரதமர் தெரீசா மே 'திடீர்'அறிவிப்பு Image captionநாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை வெளீயிடும் பிரிட்டிஷ் பிரதமர் பிரிட்டனில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திட்டத்தை பிரதமர் தெரீசா மே அறிவித்துள்ளார். தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் அவரது இன்றைய 'திடீர் அறிவிப்பு' வெளியாகியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதன் பின்னணியில், புதிய பொதுத் தேர்தல் மட்டுமே அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர முடிய…
-
- 2 replies
- 487 views
-
-
உலகையே திரும்பிப்பார்க்கவைத்த புகைப்படக் கலைஞர்! சிரியாவில் நடந்த வன்முறைத் தாக்குதலின்போது, செய்தி சேகரித்துக்கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர், தன் கேமராவைக் கீழேவிடுத்து, தாக்குதலில் காயமடைந்த ஒரு சிறுவனைத் தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி, தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. Photo Credit: Muhammad Alrageb சிரியாவில் உள்நாட்டுப் போர் வலுத்துவரும் நிலையில், வன்முறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்து சிரிய மக்களை வதைத்து வருகின்றன. இந்த நிலையில், போரினால் முற்றுகையிடப்பட்ட பல கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறிவருகின்றனர். பலரும் அகதிகளாக இடம்பெயர்கின்றனர். இதேபோல சிரியாவில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து பேருந்துகளில் இடம்பெயரும்போது நடந்த…
-
- 0 replies
- 475 views
-
-
லண்டனில் கைதானார் தொழிலதிபர் விஜய் மல்லையா! கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா, லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கடனாக வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைதுசெய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு. இதனிடையே, கடந்த 13-ம் தேதி விஜய் மல்லையாவுக்கு, பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக, விஜய் மல்லையா மீத…
-
- 12 replies
- 1.3k views
-
-
டயானா இறந்த பின் மன நலம் பாதிக்கப்பட்டேன்: மனம் திறந்தார் இளவரசர் ஹாரி தனது தாய் டயானாவின் திடீர் மரணத்தால் மனநலம் எப்படி பாதிக்கப்பட்டது? அதில் இருந்து மீள எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது குறித்து இளவரசர் ஹாரி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ‘த டெய்லி டெலிகிராப்’ நாளிதழுக்கு இளவரசர் ஹாரி (32) அளித்த அந்த பேட்டி நேற்று பிரசுரமானது. அதில் அவர் கூறியதாவது: எனது தாய் டயானா 1997-ல் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த தும், அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தேன். சுமார் 20 ஆண்டுகள் வரை அந்த சோகத்தை நினைத்து மன ரீதியான பாதிப்புக்கு ஆளானேன். பலமுறை முழுமையாக மனம் உடைந்து காணப்பட்டேன். அந…
-
- 7 replies
- 719 views
-
-
"வாரந்தோறும் எவுகணை சோதனை நடத்துவோம்": வடகொரியா அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம் சர்வதேச அளவிலான கண்டனங்கள் மற்றும் அமெரிக்காவுடனான இராணுவ நடவடிக்கைகள் ஏற்படலாம் என்ற பதற்றங்கள் அதிகரித்திருக்கும் சூழலிலும், வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionசனிக்கிழமை மாபெரும் ராணுவ அணிவகுப்பை நடத்தியது வடகொரியா "நாங்கள் வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர அடிப்படையில் மேலும் பல ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வோம் என்று வடகொரிய துணை வெளியுறவு அமைச்சர் ஹான் சாங்-ரையோல், பியாங்யாங்கில் பி.பி.சி செய்தியாளர் ஜான் சுட்வொர்த்திடம் தெரிவித்தார். "அமெரிக்கா கண்மூடித்தனமாக ராணு…
-
- 0 replies
- 487 views
-
-
இன்றைய (17/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தன் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் துருக்கி அதிபர் எர்துவான் வெற்றி; ஆனால் வாக்கெடுப்பு முடிவை ரத்து செய்யும்படி பிரதான எதிர்கட்சி கோரிக்கை. * காங்கோ ஜனநாயக குடியரசில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஆதாரங்களை நேரில் கண்டது பிபிசி; இராணுவமும் ஆயுதக்குழுக்களும் ஆட்கொலைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு. * நியூசிலாந்திலுள்ள காட்பரீஸ் சாக்லேட் தொழிற்சாலையை மூடுவதற்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு; உலகின் முன்னணி இனிப்பு உற்பத்தி நிறுவனம் உள்ளூர் மக்களிடம் கசப்பை உருவாக்குவது ஏன்?
-
- 0 replies
- 291 views
-
-
வடகொரியா சவால்: அமெரிக்க துணை அதிபர் தென்கொரியா விரைந்தார் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார். சியோல்: வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, அந்த நாடு உலக அரங்கை…
-
- 0 replies
- 439 views
-
-
அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பு வெற்றி: துருக்கி பிரதமர் பினாலி அறிவிப்பு துருக்கியில் அதிபருக்கு அதிக அதிகாரம் தரும் அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் பிரதமர் பினாலி யெல்டிரிம் அறிவித்துள்ளார். அங்காரா: துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதை பொதுமக்கள் உதவியுடன் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் முறியடித்தார். அதைத் தொடர்ந்து 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோரும் அதில் அடங்குவர். ராணுவ புரட்சியை தொடர்ந்து துருக்கி அ…
-
- 0 replies
- 326 views
-
-
வடகொரியாவுக்கு பதிலடி கொடுப்பது எப்படி? அமெரிக்கா - சீனா தீவிர ஆலோசனை வடகொரியாவின் அணு மற்றும் ஏவுகணை திட்டம் பதற்றத்தை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது பற்றி பல தரப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionதலைவர் கிம் ஜாங்-உன் இதுப்போன்ற சூழல் தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்பதில் பலருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதாக ஏ பி சி செய்தி நிறுவனத்திடம் ராணுவ தளபதி எச் ஆர் மெக்மாஸ்டர் கூறினார். வட கொரியா தோல்வி…
-
- 7 replies
- 624 views
- 1 follower
-
-
சிரியா பேருந்து தாக்குதல்; கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகள் சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் நகரங்களிலிருந்து வெளியேறிய பொதுமக்களை சுமந்து சென்ற பேருந்து மீது சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறைந்தது 68 பேர் குழந்தைகள் ஆவர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சனிக்கிழமையன்று, அலெப்போவுக்கு அருகே அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து வெளியேறிய பேருந்து தொடரணி மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று மோதியது. வெளியேறிய மக்களில் 109 பேர், தொண்டு நிறுவன பணியாளார்கள் மற்றும் போராளி படையினர் கொல்லப்பட்டதாக பிரிட்டனிலிருந்த…
-
- 0 replies
- 346 views
-
-
துருக்கி நாட்டில் அரசியல் சாசன திருத்தம்: இன்று பொது வாக்கெடுப்பு துருக்கி அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தை திருத்துவதற்காக இன்று பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அங்காரா: துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதை பொதுமக்கள் உதவியுடன் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் முறியடித்தார். அதைத் தொடர்ந்து 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோரும் அதில் அடங்குவர். ராணுவ புரட்சியை தொடர்ந்து துருக்கி அரசியல் சாசனத்தில் அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும…
-
- 2 replies
- 337 views
-
-
ஆத்திரமூட்ட வேண்டாம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை கொரியப் பிராந்தியத்தில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டாம் என்றும், தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தாங்களும் அணுஆயுதத் தாக்குதல் நடத்தத் தயார் என்றும் வடகொரியா எச்சரித்துள்ளது. வடகொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாட்டங்கள் அங்கு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, தலைநகர் பியாங்யோங்கில் வடகொரிய ராணுவத்தின் பலத்தைப் பறைசாற்றும் விதத்தில் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிலையில் வடகொரிய ராணுவ அதிகாரி சோய ரொங் ஹெய, வடகொரியா மீது முழுமையானதொரு போர் தொடுக்கப்பட்டால், திருப்பி தாக்கத் தயாராக இருக்கிறோம். அணு ஆயுத தாக்…
-
- 1 reply
- 376 views
-
-
"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை அணு ஆயுத தாக்குதல் மூலம் திருப்பி தாக்க தயாராக இருப்பதாக தெரித்துள்ள வட கொரியா, கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS வட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. வட கொரியாவின் வலிமையை வெளிகாட்டும் வகையில், படைவீரர்கள், பீரங்கிகள் மற்றும் பிற ராணுவ ஆயுதங்கள் அனைத்தும் தலைநகர் பியாங்யோங்கில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றன. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES …
-
- 0 replies
- 500 views
-
-
அமெரிக்கா - வடகொரியா இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்: சீனா வடகொரியா தொடர்பாக பதற்றம் அதிகரித்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்று சீனா எச்சரித்துள்ளது. போர் ஏற்பட்டால் யாரும் வெற்றி பெற முடியாது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ எச்சரித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP Image captionசீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்ற எண்ணம்தான் உருவாகியுள்ளதாகவும், சிக்கலை மேலும் அதிகரித்து, நிலைமையை சமாளிக்க முடியாத அளவிற்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்று இரு தரப்பினருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "வார்த்தைகளினாலோ…
-
- 0 replies
- 686 views
-
-
இன்றைய (14/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட மிகப்பெரிய குண்டுத்தாக்குதலில் முப்பத்தி ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் அரசு அறிவித்திருப்பது குறித்த செய்தி; தாம் உயிர்வாழவே கடற்கொள்ளையில் ஈடுபடுவதாக கூறும் சொமாலியர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்; சனிக்கிரகத்தின் நிலவுகள் ஒன்றில் உயிர்கள் வாழக்கூடிய சிறப்பான சூழல் நிலவுவதாக நாசா செய்திருக்கும் பரபரப்பான கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 277 views
-
-
உலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள் படத்தின் காப்புரிமைPUBLIC DOMAIN "வெடிகுண்டுகளின் தாய்" என்று கருதப்படும் வெடிகுண்டை அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் பயன்படுத்தி, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை பயன்படுத்தப்படாத, தன்னிடமுள்ள அணு ஆயுதமில்லாத மிகப்பெரிய வெடிகுண்டை பயன்படுத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்திருக்கிறது. விமானத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஜிபியு-43/பி என்ற மிகப்பெரிய வெடிகுண்டுதான் "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என்று அறியப்படுகிறது. 2003ல் முதன்முறையாக பரிசோதிக்கப்பட்ட இந்த வெடிகுண்டு, இதுவரை எந்தப் போரிலும் பயன்படுத்தப்படவில்லை. மேலும், எம்.ஒ.ஏ.பி…
-
- 1 reply
- 671 views
-
-
அமெரிக்காவின் அடுத்த இலக்கு வட கொரியாவா? சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது அமெரிக்கா. இந்த இரு நாடுகளின் மீதான தாக்குதல்களுக்கு முன்பே அணு ஆயுத சோதனை தொடர்பாக வடகொரியாவுக்கு, அமெரிக்கா பல முறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை வடகொரியா கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, வட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக, அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வட கொரியா மீண்டும்…
-
- 8 replies
- 1.4k views
-
-
பறக்கும் விமானத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட 3 சடலங்கள்: பதற வைக்கும் சம்பவம் மெக்சிகோவில் பறக்கும் விமானத்திலிருந்து மூன்று நபர்களின் சடலங்கள் தூக்கி வீசப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் Sinaloa மாகாணத்தில் நேற்று காலையில் ஒரு விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விமானத்தில் இருந்து மூன்று நபர்கள் கீழே தள்ளப்பட்டனர். மூன்று பேருமே கொலை செய்யப்பட்டு கீழே தள்ளபட்டனர். அதில் ஒருவரின் சடலம் ஒரு மருத்துவமனை கட்டிடத்தின் மேலே விழுந்தது. மீதி இருவரின் சடலங்கள் அங்கிருந்த ஒரு வீட்டின் வாசலில் விழுந்துள்ளது. இது குறித்து கூறிய பொலிசார், இந்த மூவரும் ம…
-
- 0 replies
- 499 views
-
-
சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்: ரத்து செய்த ரஷ்யா சிரியாவில் நச்சு வாயுக்களைப் பயன்படுத்தியது தொடர்பாக, அந்த நாட்டு அரசை விசாரணைக்கு உட்படுத்தக் கோரி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்யா ரத்து செய்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள செய்க்கூன் நகரில் ஏப்ரல் 4ஆம் திகதி அரசு படையினர் நடத்திய தாக்குதலில் சரின் என்னும் நச்சு வாயுக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து சிரியாவில் அரசு படைத்தளங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் நச்சு வாயுக்களைப் பயன்படுத்தியது தொடர்பாக…
-
- 1 reply
- 323 views
-
-
அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி சடலமாக மீட்பு அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக கடமையாற்றிய ஷீலா அப்துஸ் ஸலாம் என்பவரின் சடலம் ஹட்சன் கங்கையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதியாக இவர் கருதப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவருடைய கணவரினால் நிவ்யோர்க் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸாருக்குக் கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் சடலம் உள்ள இடம்கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதுவரை இவரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லையெ…
-
- 0 replies
- 310 views
-