உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27043 topics in this forum
-
ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அப்பதவிக்கான வேட்பாளர் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் பாஜக காலூன்ற நடிகர் ரஜினிகாந்தை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக. அப்படி ரஜினிகாந்தை நிறுத்தும் போது எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்பதும் பாஜகவின் கணக்கு. நன்றி தற்ஸ் தமிழ்.
-
- 4 replies
- 648 views
-
-
பெண் பயணியை தாக்கிய விமான ஊழியர்! அதிரடி காட்டியது நிறுவனம் விமானங்களில் பயணிகளை ஊழியர்களே தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸில் கைக்குழந்தையுடன் உள்ள பெண் பயணி ஒருவரை அந்த விமானத்தின் ஊழியர் தாக்கிய வீடியோ காட்சி ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. ஏர்லைன்ஸ் விமானத்தில் குழந்தையுடன் இருக்கும் பெண் ஒருவர் தனது குழந்தையின் ‘பேபி ஸ்ட்ரோலை’ பாதுகாக்க முயலும்போது விமான ஊழியரால் தாக்கப்பட்டார். அப்பெண்ணுக்கு ஆதரவாக பேசிவந்த மற்றொரு பயணியையும் தாக்கிவிடுவது போல் மிரட்டியுள்ளார் அந்த ஊழியர். இதனிடையே, அந்த விமானத்தில் பயணம் செய்த சுரைன் ஆத்யநாத்யா என்ற பயணி வீடியோ எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதில…
-
- 0 replies
- 621 views
-
-
13 பிரித்தானிய பிரதமர்கள், 12 அமெரிக்க ஜனாதிபதிகள், 10 இலட்சத்துக்கும் அதிகமான தூரம் பயணம் : 91ஆவது அகவவையில் கால்பதிக்கும் மகாராணி பிரித்தானிய மகாராணி எலிசபத்தின் 91 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியின் 91 ஆவது பிறந்தநாளை ஒட்டி, உத்தியோகபூர்வ வாசஸ்தலமான பக்கிங்காம் அரண்மனையில் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். மேலும் 1926 ஆம் ஆண்டு பிறந்த எலிசபத், தந்தை 4ஆம் ஜோர்ஜின் மறைவிற்கு பிறகு 1952ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணியாக முடிசூட்டப்பட்டார். அத்தோடு உலகிலுள்ள மன்னர் மற்றும் மகாராணிகளில் இவரே மிக வயதானவர் எனும் பெருமையை பெறுவதோடு, பிரித்தானிய அரச குடும்பத்தில் முடிசூட்டப்பட்டவர்களில் மிக ந…
-
- 1 reply
- 411 views
-
-
-
மாறுவேடத்தில் வந்த தலிபான்கள் ஆப்கான் முகாமில் தாக்குதல்; பலி எண்ணிக்கையில் குழப்பம்! ஆப்கான் இராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐம்பது இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மஸார் இ ஷரீப் என்ற இடத்தில், பள்ளிவாசல் ஒன்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இந்த இராணுவ முகாம், வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் பயன்பாட்டுக்கானது. உள்ளூர் நேரப்படி நேற்று பகல் ஜும்மா தொழுகைக்காக இராணுவ வீரர்கள் பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆறு தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் இராணுவ வீரர்களின் சீருடையை அணிந்துகொண்டு இரண்டு இராணுவ வாகனங்களில் முகாமின் சோதனைச்சாவடிக்குச் சென்றுள்ளனர். அன…
-
- 1 reply
- 394 views
-
-
கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் தோன்றிய 150 அடி உயர ராட்சத பனிப்பாறை கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து - லேப்ராடோர் பகுதிக்கிடையில் 150 அடி உயர ராட்சத பனிப்பாறை திடீரென தோன்றியதால், மக்கள் பரவசமாக பார்வையிட்டு வருகின்றன. கனாடாவின் கிழற்கு கடைற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து - லேப்ராடோர் பகுதிகளுக்கு இடையில் ஒவ்வொரு கோடைக்காலம் - குளிர்காலத்திற்கு இடையிலான வசந்த காலத்தின்போது ஆர்ட்டிக்கடல் பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பனிப்பாறைகள் நகர்ந்து வருவது இயல்பானது. பொதுவாக கடலுக்கடியில் அல்லது கடலின் மேற்பரப்…
-
- 1 reply
- 835 views
-
-
இன்றைய (21/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு; பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஞாயிறன்று திட்டமிட்டபடி நடக்குமென பிரதமர் அறிவிப்பு. * அல்சைமர்ஸ் உள்ளிட்ட மூளையைத் தாக்கும் மோசமான நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு; மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற முடியுமென நம்பிக்கை. * கனடா கடலோரம் கரையொதுங்கியிருக்கும் மிகப்பெரிய பனிப்பாறையால் சுற்றுலாப் பயணிகள் குதூகலம்; ஆனால் மீனவர்களோ நெருக்கடியில். என்ன காரணம்?
-
- 0 replies
- 214 views
-
-
பாரீசில் துப்பாக்கிச்சூடு: ஒரு போலீஸ் அதிகாரி பலி - மர்ம நபர் தற்கொலை பாரீசில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாரீஸ்: பாரீசின் வர்த்தக நகரமான சாம்ப்ஸ்-எலிசிஸில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் மற்றொரு நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது…
-
- 2 replies
- 604 views
-
-
உயிரியல் தீவிரவாதத் தாக்குதல் ; 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகும் அபாயம் ; பில் கேட்ஸ் எச்சரிக்கை உயிரியல் தீவிரவாத தாக்குதலொன்றால் உலகிலுள்ள 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கக் கூடிய அபாயம் உள்ளதாகவும் அந்தத் தாக்குதலானது அணு ஆயுதத் தாக்குதலொன்றை விடவும் பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடியது எனவும் மைக்ரோ சொப்ட் ஸ்தாபனத்தின் ஸ்தாபகரும் உலகின் மிகப் பெரிய செல்வந்தருமான பில் கேட்ஸ் தெரிவித்தார். த ரெலிகிராப் ஊடகத்திற்கு அளித்த விசேட பேட்டியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தீவிரவாதிகள் உலகளாவிய ரீதியில் அழிவை ஏற்படுத்தும் முகமாக பெரியம்மை போன்ற நோய்த் தடு…
-
- 0 replies
- 517 views
-
-
வடகொரியாவுக்கு பதிலடி கொடுப்பது எப்படி? அமெரிக்கா - சீனா தீவிர ஆலோசனை வடகொரியாவின் அணு மற்றும் ஏவுகணை திட்டம் பதற்றத்தை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது பற்றி பல தரப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionதலைவர் கிம் ஜாங்-உன் இதுப்போன்ற சூழல் தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்பதில் பலருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதாக ஏ பி சி செய்தி நிறுவனத்திடம் ராணுவ தளபதி எச் ஆர் மெக்மாஸ்டர் கூறினார். வட கொரியா தோல்வி…
-
- 7 replies
- 625 views
- 1 follower
-
-
டயானா இறந்த பின் மன நலம் பாதிக்கப்பட்டேன்: மனம் திறந்தார் இளவரசர் ஹாரி தனது தாய் டயானாவின் திடீர் மரணத்தால் மனநலம் எப்படி பாதிக்கப்பட்டது? அதில் இருந்து மீள எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது குறித்து இளவரசர் ஹாரி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ‘த டெய்லி டெலிகிராப்’ நாளிதழுக்கு இளவரசர் ஹாரி (32) அளித்த அந்த பேட்டி நேற்று பிரசுரமானது. அதில் அவர் கூறியதாவது: எனது தாய் டயானா 1997-ல் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த தும், அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தேன். சுமார் 20 ஆண்டுகள் வரை அந்த சோகத்தை நினைத்து மன ரீதியான பாதிப்புக்கு ஆளானேன். பலமுறை முழுமையாக மனம் உடைந்து காணப்பட்டேன். அந…
-
- 7 replies
- 721 views
-
-
இன்றைய (20/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிரான்ஸின் அடுத்த அதிபராக வரக்கூடியவர் யார் யார்? தேர்தலில் போட்டியிடும் நான்கு முன்னணி வேட்பாளர்கள் யார்? அவர்களின் நிலப்பாடுகள் என்ன? விளக்குகிறது பிபிசி. * அரசியல்வாதிகள் தங்களை கைவிட்டுவிட்டதாக குமுறும் பிரெஞ்சு வாக்காளர்கள்; இவர்களின் வாக்குகள் தேர்தல் முடிவை திசைமாற்றுமா? பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு * உலக எரிமலைகள் அனைத்தையும் கண்காணிக்க புதிய வழி கண்டுபிடிப்பு; ஏழைநாடுகளின் எரிமலைகளை சுற்றிவாழ்பவர்களின் உயிர்காக்க உதவுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை.
-
- 0 replies
- 275 views
-
-
அமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல்: ‘அனிமேஷன்’ காணொளி வெளியீடு அமெரிக்கா - வடகொரியா இடையே பதற்ற நிலை முற்றியுள்ள நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று அமெரிக்க நகர் ஒன்றில் விழுந்து வெடிப்பதுபோன்ற காட்சியொன்றை வடகொரியா வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் பாட்டனார் கிம் இல் சங்கின் பிறந்த நாள் நேற்று (18ஆம் திகதி) கொண்டாடப்பட்டது. ‘சூரியனின் தினம்’ என்ற பெயரில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் இந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மற்றும் இராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது வடகொரியாவின் வழக்கம். அதன்படி, நேற்று …
-
- 1 reply
- 815 views
-
-
லண்டனில் கைதானார் தொழிலதிபர் விஜய் மல்லையா! கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா, லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கடனாக வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைதுசெய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு. இதனிடையே, கடந்த 13-ம் தேதி விஜய் மல்லையாவுக்கு, பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக, விஜய் மல்லையா மீத…
-
- 12 replies
- 1.3k views
-
-
சண்டை வேண்டாம்: வடகொரியாவுக்கு அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே வேண்டுகோள் வாஷிங்டன்: வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஐ.நா. சபையும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளபோதும், வடகொரியா தொடர்ந்து தனது சோதனையை செய்து வருகிறது. இந்நிலையில், 6–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடகொரியாவை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன் பங்குக்கு வரிந்து கட்டிக்கொண்டு செய…
-
- 1 reply
- 499 views
-
-
பிரிட்டனில் கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமை : 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கீடு பிரிட்டனில் கால்பந்து விளையாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரித்துவரும் அதிகாரிகள், குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 250-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களையும், பாதிக்கப்பட்ட560 நபர்களையும்கண்டறிந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமை : 560 பேர் பாதிப்பு? சுமார் 311 கால்பந்து கிளப்கள் மற்றும் விளையாட்டின் அனைத்து வரிசைகளிலும் அங்கம் வகிப்பவர்கள் ஆகியோர் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள…
-
- 2 replies
- 402 views
-
-
பிரிட்டனில் பொதுத் தேர்தல்: பிரதமர் தெரீசா மே 'திடீர்'அறிவிப்பு Image captionநாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை வெளீயிடும் பிரிட்டிஷ் பிரதமர் பிரிட்டனில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திட்டத்தை பிரதமர் தெரீசா மே அறிவித்துள்ளார். தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் அவரது இன்றைய 'திடீர் அறிவிப்பு' வெளியாகியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதன் பின்னணியில், புதிய பொதுத் தேர்தல் மட்டுமே அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர முடிய…
-
- 2 replies
- 488 views
-
-
இன்றைய (18/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளின் பிரத்யேக நோய்களை ஒழிப்பதில் அடைந்திருக்கும் வெற்றி என்ன? தொடரும் தோல்விகள் எவை? ஆராய்கிறது சர்வதேச மாநாடு. * இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்தாவின் கிறித்தவ ஆளுநர் தேர்தலில் தோல்வி; சகிப்புத்தன்மைக்குப்பேர்போன நாட்டின் தலைநகரத்தேர்தல்,, மத உணர்வுகளைத் தூண்டியதா? பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு. * ஆபத்துக்கு மத்தியில் ஆரம்பக்கல்வி; பள்ளியில் படிக்க தினமும் படகில் செல்லும் உகாண்டா குழந்தைகளின் கதை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 243 views
-
-
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே திடீர் பொதுத்தேர்தலை அறிவித்திருப்பது குறித்த செய்தி; வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரிக்கும் மோதல் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம், லண்டனில் உருவாகும் பிரம்மாண்ட பாதாள சாக்கடைத்திட்டம் மற்ற நகரங்களுக்கு வழிகாட்டுமா? என்பது குறித்த நேரடி செய்தி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லப்பிராணிகளை கொண்டுவரும் போக்கு அதிகரிப்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 315 views
-
-
3 மாத குழந்தைக்கு தீவிரவாத விசாரணை அழைப்பாணை..! விசா விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக பிறந்து 3 மாதமான குழந்தையை தீவிரவாதி என கருதி விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பியுள்ள சம்பவம் லண்டனிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரிட்டனின் லண்டன் நகரை சேர்ந்த பயே கென்யன்- கெய்ர்ன்ஸ். அவரது 3 மாத குழந்தை ஹார்வி கென்யன்-கெய்ர்ன்ஸ் ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒர்லாண்டோவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். குறித்த சுற்றுலாப்பயணத்திற்காக 3 மாத குழந்தை ஹார்வி கென்யன்-கெய்ர்ன்ஸ்க்கு விசா பெறப்பட்டுள்ளது. குறித்த விசாவை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தில், நீங்கள் தீவிரவாத நடவடிக்கைகள், உளவு ப…
-
- 1 reply
- 687 views
-
-
உலகையே திரும்பிப்பார்க்கவைத்த புகைப்படக் கலைஞர்! சிரியாவில் நடந்த வன்முறைத் தாக்குதலின்போது, செய்தி சேகரித்துக்கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர், தன் கேமராவைக் கீழேவிடுத்து, தாக்குதலில் காயமடைந்த ஒரு சிறுவனைத் தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி, தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. Photo Credit: Muhammad Alrageb சிரியாவில் உள்நாட்டுப் போர் வலுத்துவரும் நிலையில், வன்முறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்து சிரிய மக்களை வதைத்து வருகின்றன. இந்த நிலையில், போரினால் முற்றுகையிடப்பட்ட பல கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறிவருகின்றனர். பலரும் அகதிகளாக இடம்பெயர்கின்றனர். இதேபோல சிரியாவில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து பேருந்துகளில் இடம்பெயரும்போது நடந்த…
-
- 0 replies
- 475 views
-
-
"வாரந்தோறும் எவுகணை சோதனை நடத்துவோம்": வடகொரியா அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம் சர்வதேச அளவிலான கண்டனங்கள் மற்றும் அமெரிக்காவுடனான இராணுவ நடவடிக்கைகள் ஏற்படலாம் என்ற பதற்றங்கள் அதிகரித்திருக்கும் சூழலிலும், வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionசனிக்கிழமை மாபெரும் ராணுவ அணிவகுப்பை நடத்தியது வடகொரியா "நாங்கள் வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர அடிப்படையில் மேலும் பல ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வோம் என்று வடகொரிய துணை வெளியுறவு அமைச்சர் ஹான் சாங்-ரையோல், பியாங்யாங்கில் பி.பி.சி செய்தியாளர் ஜான் சுட்வொர்த்திடம் தெரிவித்தார். "அமெரிக்கா கண்மூடித்தனமாக ராணு…
-
- 0 replies
- 487 views
-
-
துருக்கி நாட்டில் அரசியல் சாசன திருத்தம்: இன்று பொது வாக்கெடுப்பு துருக்கி அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தை திருத்துவதற்காக இன்று பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அங்காரா: துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதை பொதுமக்கள் உதவியுடன் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் முறியடித்தார். அதைத் தொடர்ந்து 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோரும் அதில் அடங்குவர். ராணுவ புரட்சியை தொடர்ந்து துருக்கி அரசியல் சாசனத்தில் அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும…
-
- 2 replies
- 340 views
-
-
இன்றைய (17/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தன் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் துருக்கி அதிபர் எர்துவான் வெற்றி; ஆனால் வாக்கெடுப்பு முடிவை ரத்து செய்யும்படி பிரதான எதிர்கட்சி கோரிக்கை. * காங்கோ ஜனநாயக குடியரசில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஆதாரங்களை நேரில் கண்டது பிபிசி; இராணுவமும் ஆயுதக்குழுக்களும் ஆட்கொலைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு. * நியூசிலாந்திலுள்ள காட்பரீஸ் சாக்லேட் தொழிற்சாலையை மூடுவதற்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு; உலகின் முன்னணி இனிப்பு உற்பத்தி நிறுவனம் உள்ளூர் மக்களிடம் கசப்பை உருவாக்குவது ஏன்?
-
- 0 replies
- 292 views
-
-
வடகொரியா சவால்: அமெரிக்க துணை அதிபர் தென்கொரியா விரைந்தார் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார். சியோல்: வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, அந்த நாடு உலக அரங்கை…
-
- 0 replies
- 440 views
-