உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26889 topics in this forum
-
பிரான்ஸ் குடியரசு கட்சியின் ஆரம்பகட்ட தேர்தலில் சர்கோசி தோல்வி பிரான்ஸ் மத்திய வலது சாரி குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஆரம்பகட்ட தேர்தலில் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி மூன்றாவது இடத்தையே பிடித்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். "தோல்வியடைந்ததால் எவ்வித கசப்புணர்வும் இல்லை. கவலையும் இல்லை. எனது நாட்டிற்கு நல்லதையே விரும்புகிறேன்" - சர்கோசி இந்த தோல்வியை ஒப்புக்கொண்ட சர்கோசி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் முதலாவதாக வந்த பிரான்சுவா ஃபியோங்கிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார். மற்றுமொரு முன்னாள் பிரதமரான அலாங் யுபே இரண்டாவதாக வந்துள்ளார். அடுத்த ஞாயிற்றுக்க…
-
- 0 replies
- 521 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு அமைப்புடன் நடக்கும் மோதல்களில் பெரும் பொதுமக்கள் இழப்பை எதிர்கொள்ளும் மொசூல் நகரில் இருந்து பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பாகிஸ்தானில் அப்பாவிகள் மரண தண்டனைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கிறதா? பாகிஸ்தானில் இருந்து பிபிசியின் புலனாய்வு. * உலகின் சரிபாதிப்பேரான பெண்களின் குரல்களை பிரதிபலிக்கும் பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் முதல் பகுதி; உலகின் புகழ்பெற்ற மாடலான வின்னி ஹார்லோ, வெண்புள்ளி நோயை எதிர்கொண்டது குறித்த மனம் திறந்த பேட்டி.
-
- 0 replies
- 412 views
-
-
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு முன்பு, மோடி ஒழிக்க வேண்டியது எதை...? ( வீடியோ) காதலில், எப்படி நல்ல காதல்... கள்ளக்காதல் கிடையாதோ, அப்படிப் பணத்திலும் நல்ல பணம்... கறுப்புப் பணம் என்பது கிடையாது... பிறகு, நம் நாட்டில் கறுப்புப் பணம் தோன்றியது எதனால்... யாரால்? 1,000, 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தால் மோடியால், கறுப்புப் பணத்தை உருவாக்கும் கறுப்பு உயிர்களைத் தடுக்க முடியுமா? நம் அருகிலே இருக்கும் அந்தக் கறுப்பு உயிர்கள் இப்போது எப்படி எல்லாம் தப்பிக்க முயல்வார்கள்? மோடியின் இந்த நடவடிக்கையைக் கறுப்புப் பணம் வைத்திருக்கும் சினிமா பிரபலங்களும், தொழிலதிபர்களும் ஆதரிப்பது ஏன்? மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தற்போது நட்டாற்றில் ந…
-
- 0 replies
- 479 views
-
-
புரட்சியின் நூற்றாண்டில் சில கேள்விகள்! முதலாளித்துவம் முடிவுறும் என்ற எண்ணமே சுகமாகத்தான் இருக்கிறது வானைப் பிளக்கின்றன குரல்கள்.. ‘சோஷலிஸம் வீழ்ந்துவிட்டது, சோவியத் ஒன்றியம் சிதறுண்டதுடன் கனவுகள் சிதறிவிட்டன. பெர்லின் சுவரின் இடிபாடுகளில் சோஷலிஸம் புதைக்கப்பட்டுவிட்டது. இனி, முதலாளித்துவத்துக்கு முடிவில்லை’ என்று எக்காளமிடுகிறார்கள். ‘முதலாளித்துவத்துக்கு மாற்று ஏதும் இல்லை’ என்ற அகங்கார முழக்கம் எழுப்புகிறார்கள். அதேசமயம், இவற்றையெல்லாம் மறுக்கும் எதிர்மறை உணர்வுகளும் கொந்தளிக்கத்தான் செய்கின்றன. அனைத்துக் கொடுமைகளுக்கும் மூலாதாரம் மூர்க்கத்தனம் கொண்ட இன்றைய முதலாளித்துவம்தான் என்கின்ற உண்மையு…
-
- 0 replies
- 388 views
-
-
ஜெர்மனி: சான்சலர் பதவிக்கு நான்காவது முறையாக போட்டியிடும் மெர்கல் நான்காவது முறையாக சான்சலர் பதவிக்குப் போட்டியிட போவதை தன்னுடைய சிடியு கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்கிறார். இன்று மாலையில் இது பற்றி முறையான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பாப்பதாக ஜெர்மனி செய்தி நிறுவனமான டிபிஏ அறிவித்திருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக ஏங்கெலா மெர்கல் ஜெர்மனியின் சான்சலராக பதவி வகித்து வருகிறார். பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்த பிறகு ஏற்பட்ட ஸ்திரமற்ற நேரத்திலும், அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலுக்குப் பிறகும் ஐரோப்பாவை நி…
-
- 3 replies
- 429 views
-
-
[Sunday 2016-11-20 18:00] துருக்கி நாட்டில் இளம்பெண்களை கற்பழிக்கும் ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களையே திருமணம் செய்துக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை கிடையாது என்ற புதிய சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.துருக்கி நாட்டின் ஜனாதிபதியான Recep Tayyip Erdogan என்பவரின் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தது.அதில், ‘18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை ஆண்கள் கற்பழித்து விட்டு பிறகு அவர்களையே கற்பழித்தவர்கள் திருமணம் செய்துக்கொண்டால் அதற்கு தண்டனை கிடையாது’ என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.இருப்பினும், இதில் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.அதாவது, சிறுமியை மிரட்டி அல்லது பலவந்தமாக கற்பழித்தால் மட்டு…
-
- 2 replies
- 678 views
-
-
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சுவிஸ் மக்கள்: - வெளியான பகீர் ஆதாரங்கள்! [Saturday 2016-11-19 15:00] சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தாலும் அந்நாட்டிலும் வறுமை கோட்டிற்கு கீழ் இன்றளவும் மக்கள் வசித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சுவிஸ் நாட்டை சேர்ந்த Caritas என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் நாடு முழுவதும் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.இதில், கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ஒவ்வொரு 20 வாலிபர்களில் ஒருவர் வறுமையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.அதாவது, நாடு முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ள இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களில் 73,000 பேர் வறுமையில் இருந்துள்ளனர்.இதே நிலை கடந்த 2013-ம் ஆண்டு 55,000 எனவும், 2007…
-
- 0 replies
- 440 views
-
-
டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம் – ஒபாமா அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப்புக்கு தகுதி இல்லை என தவறாக எண்ண வேண்டாம் எனவும் டிரம்ப்பை மோசமானவராக கருத வேண்டாம் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார் டிரம்ப் எவ்வாறு நிர்வாகம் நடத்துகிறார் என்பதை காத்திருந்து பார்க்குமாறும் உலக நாடுகள் அமைதியுடன் செழிப்பாக ஒற்றுமையாக வாழும் வகையில் அவரது நிர்வாகம் இருக்கிறதா என்பனை இவரது ஆட்சியை பார்த்த பின்னர் தீர்மானியுங்கள் என ஒபாமா தெரிவித்துள்ளார். டிரம்ப் குறித்து உலக நாடுகள் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் எனவும் இது உலக நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முக்கியமானதாகும் எனவுத் அவர் குறிப்பட்டுள்…
-
- 0 replies
- 358 views
-
-
டொனால்ட் ட்ரம்பின் வெற்றியும் அமெரிக்க ஜனநாயகத்தின் மெய்த்தோற்றமும் சர்வதேச விவகாரம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று பல நாட்கள் கழிந்து விட்டன. அந்தத் தேர்தல் மூலம் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலின் பெறுபேறுகள் தந்த அதிர்ச்சியில் இருந்து அமெரிக்க வாக்காளர்கள் மீளவில்லை. அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சிகரமான முடிவைத் தந்த தேர்தல் இதுவாகும். இதன் பெறுபேறுகள் குறித்து பல வியாக்கியானங்கள். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் அம்மையர் பிரசாரத்தை சரியாக வழிநடத்தியிருந்தால் ட்ரம்ப்…
-
- 0 replies
- 328 views
-
-
பக்கிங்ஹாம் அரண்மனை புதுப்பிக்கும் பணிகள் : 369 மில்லியன் பவுண்டு செலவில் தொடங்குகின்றன பிரிட்டிஷ் அரசி எலிசபத்தின் அதிகாரபூர்வ லண்டன் இல்லமான, பக்கிங்ஹாம் அரண்மனை , 369 மில்லியன் பவுண்டு அரச செலவில் புதுப்பிக்கப்படவுள்ளதாக பிரிட்டிஷ் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 10 ஆண்டு காலம் இந்த புதுப்பிக்கும் பணி நீடிக்கும். வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ள இந்தப் பணிகளின்போது, ராணி எலிசபத், பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே தங்கியிருப்பார். பழையதாகிப்போன கேபிள்கள், ஈயக் குழாய்கள், வயர்கள் மற்றும் கொதிகலன்கள் ஆகியவை புதிதாக மாற்றப்படவேண்டும். இவைகளில் பல, இனியும் விட்டுவைத்தால், தீப்பிடிக்கலாம் அல்லது தண்ணீரால் சேதம் ஏற்படலாம் என்ற அச்சங்களுக்கிடையே, 60 ஆண்…
-
- 1 reply
- 338 views
-
-
பிரான்ஸில் அதிபர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க கட்சிகள் மும்முரம் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடக்க 5 மாதங்களுக்கு முன்னால், நடைபெறுகின்ற ஆரம்பகட்ட தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான மத்திய வலது சாரி குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள், அவர்களின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாமதமாகப் பெருகிய ஆதரவு இந்த வேட்பாளர் தேர்தலை மும்முனை போட்டியாக மாற்றியிருக்கிறது. இதில் போட்டியிடுகின்ற 7 வேட்பாளர்களில் பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி மற்றும் முந்தைய பிரதமர் அலாங் யுபே ஆகியோர் முன்னிலை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்தனர். ஆனால், முன்னாள் பிரதமர் பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாம…
-
- 0 replies
- 207 views
-
-
மக்கள் கொந்தளிப்பு எதிரொலி.. ரூ 500, 1000 செல்லாது என்ற உத்தரவை மறு ஆய்வு செய்வதாக மோடி அறிவிப்பு. ஆக்ரா: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவி வருவதாலும், நாட்டில் கலவரச் சூழல் நிலவுவதாக சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளதாலும், அதுகுறித்து தேவையான மாற்றம் செய்யப் போவதாகவும், இதுகுறித்து மறு பரிசீலனை செய்யவுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நவம்பர் 8ம் தேதி திடீரென இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து அறிவித்தார் மோடி. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று முதல் இன்று வரை மக்கள் போதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமல் தெருத் தெருவாக அலைந்து வருகிறார்கள். அரசின் திட்டம் நல…
-
- 2 replies
- 748 views
-
-
இந்திய ரயில் விபத்து : பலியானோரின் எண்ணிக்கை 100ஆக உயர்வு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் (காணொளி இணைப்பு) உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயன் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 3.10 மணியளவில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, …
-
- 2 replies
- 509 views
-
-
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதுபெரும் அதிகார வரிசையில் தன்னுடைய அடையாளத்தை மையப்படுத்துதல் தொடர்கின்ற நிலையில், வத்திக்கானில் நடைபெற்ற வழிபாட்டில் 17 புதிய கர்தினால்களை போப் பிரன்சிஸ் நியமித்திருக்கிறார், Image captionதிருச்சபைக்கு ஆற்றிய சிறந்த பணிகளுக்காக 80 வயதுக்கு மேலான நான்கு ஆயர்கள் கர்தினால்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் இந்த கர்தினால்களில் பெரும்பாலோர் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் வளர்முக நாடுகளை சேர்ந்தவர்களாவர். ஆனால், முற்போக்கு எண்ணம் கொண்டோர் என்று கருதப்படும் மூன்று அமெரிக்க ஆயர்களையும் போப் பிரான்சிஸ் காதினால்களாக நியமித்திருக்கிறார். இந்த நடவடிக்கை, அமெரிக்க கர்தினால்களில் அதிக அளவில் பழமைவாத கொள…
-
- 0 replies
- 238 views
-
-
மலேசியாவில் வெடித்தது மக்கள் புரட்சி! ஊழல் புகாரில் சிக்கி உள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் முகம்மது பதவி விலககோரி மலேசியாவில் இன்று மக்கள் புரட்சி வெடித்தது. இரண்டாவது முறையாக மலேசிய பிரதமராக உள்ள டத்தோஸ்ரீ நஜீப் முகம்மது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 260 கோடி மலேசிய ரிங்கிட் (வெள்ளி) பணத்தை, தனது சொந்த கணக்கில் மாற்றியதற்காக அதிரடியாக ஊழல் புகாரில் சிக்கினார். ஆனால், அந்த பணம் வெளிநாட்டில் இருந்து தனக்கு நன்கொடையாக வந்ததாக அவர் விளக்கம் அளித்தார். அதனைத்தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 'பெர்சே' அமைப்பு கடந்த மூன்று வருடங்களாகப் போராட்ட களத்தில் குதித்துள்ளது. மலேசியாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் …
-
- 0 replies
- 816 views
-
-
மோடியின் ஏமாற்று நாடகங்கள்! நாடே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்கள் வேலைக்குப் போகாமல் ஏடிஎம் வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் மணிக்கணக்கில் ரூபாய் நோட்டை மாற்றுவதற்காக காத்துக் கிடக்கின்றார்கள். அவர்களிடம் சென்று மோடியின் இந்தத் திட்டத்தைப் பற்றி கேட்டால் கழுவி, கழுவி ஊற்றுகின்றார்கள். மோடியை காதுகொடுத்துக் கேட்க முடியாத கெட்ட கெட்ட வார்த்தைகளால் சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்க்கின்றார்கள். ஆனால் சூடு சுரணையே இல்லாத பாஜகவினர் ஊடகங்களில் மக்கள் இந்தத் திட்டத்திற்குப் பெரிய அளவில் ஆதரவு தருவதாக புளுகுகின்றார்கள். சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று அரைலூசுகளால் சொல்லப்பட்ட இந்த அறிவிப்பு ஒரு உலகமகா மோசடி என்று தற்போது தெரிய வந்துள்ளது. மோடி இந்த அறிவிப்பை வெளியிடும் முன்பே…
-
- 5 replies
- 724 views
-
-
இந்தியாவிலேயே தமிழர்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியிலே முஷாரப் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தென் இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென் இந்தியர்கள் அவர்களுக்கான வளர்ச்சியை அவர்களே செய்து கொள்கின்றனர். இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தென் இந்தியா கல்வியில் சிறந்து விளங்குகிறது. தகவல் தொழில்நுட்பமும் அதிகரித்து வருகிறது. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள சாதனைகள் குறித்து அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தென் இந்தியர்களை குற…
-
- 10 replies
- 816 views
-
-
காடுவரை உறவு இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக (சாத்திரி) குடியேற்றவாசிகளின் காடு அமேசன் காடு பற்றி அறிந்திருப்போம்.இதென்ன குடியேற்றவாசிகளின் காடு? இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையில் பிரான்சின் கடைசி நகரமான CALAIS யில் தான் குடியேற்றவாசிகளின் காடு அமைந்துள்ளது. பிரான்சில் குளிர்காலம் தொடங்கும்போதும் தேர்தல் காலத்திலும் இந்த குடியேற்றவாசிகளின் காடு ஊடகங்களின் முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு அரசியல் வாதிகளின் வாயிலும் பேசுபொருளாக மாறிவிடும்.இந்த வருட இறுதி குளிர்,தேர்தல் இரண்டுமே ஓன்று சேர்ந்து வருவதால் எங்கு பார்த்தாலும் இதே பேச்சுத்தான் .சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்று முடியாமல் போனவர்கள் சிலர் CALAIS இரயில் நிலையத்திலும் வீதியோரங்களிலும் தங…
-
- 0 replies
- 721 views
-
-
நேட்டா படையில் பணிபுரியும் நாடுகளில் தஞ்சம் கோரும் துருக்கி ராணுவத்தினர் நேட்டோ படையில் பணிபுரியும் துருக்கி ராணுவத்தினர் சிலர், தாங்கள் பணிபுரியும் சில நாடுகளிலேயே தஞ்சம் கோரியிருப்பதாக நேட்டோ பொது செயலாளர் என்ஸ் ஸ்டோல்டென்பெர்க் உறுதிப்படுத்தியிருக்கிறார். சட்டப்படியான ஆட்சிக்கு துருக்கி மதிப்பளிக்க ஸ்டோல்டென்பெர்க் கோரிக்கை கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பையும், அதன் விளைவாக ஆட்கள் களையெடுப்பு நடப்பதையும் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ள படுகிறது. இந்த தஞ்சம் கோரிக்கை அந்தந்த நாடுகளின் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டிய விடயம் என்று ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை தொடங…
-
- 0 replies
- 432 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயற்பாட்டை சீனப்பத்திரிகை ஒன்று விமர்சனம் செய்துள்ளது. சீனாவில் இருந்து வெளிவரும் Global times என்னும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000ம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்றும் கடந்த 8ம் திகதி அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா முழுவதும் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். இதற்கிடையில் இதுவரை இப்பணப் பிரச்சினையால் 40 பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப…
-
- 7 replies
- 809 views
-
-
குடியேறிகளின் இறப்பு கடந்த ஆண்டை விட 1000 பேர் அதிகரிப்பு கடந்த மூன்று நாள்களாக மத்திய தரைக் கடலில் 350-க்கு மேலான குடியேறிகள் இறந்துள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக சர்வதேச குடிவரவு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஏற்பட்டிருந்த இறப்பை விட இந்த ஆண்டு இதுவரை 1000 பேர் அதிகமாக இறந்துள்ளனர். (கோப்புப்படம்) லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு வருவதற்கு கடல் கடந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட பெரும்பாலான ஆப்ரிக்கர்கள்தான் சமீபத்திய இந்த முயற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியிலுள்ள சர்வதேச குடிவரவு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இந்த சமீபத்திய புள்ளிவிவரம், இந்த ஆண்டு இதுவரை இறந்த அல்லத…
-
- 0 replies
- 238 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அழிவின் விளிம்பிலுள்ள விலங்குகளின் பாகங்கள் பகிரங்கமாக விற்கப்படுவது குறித்த அதிர்ச்சித்தகவல்கள். * சொமாலியாவின் இருண்டகாலம் முடிவுக்கு வருகிறதா? முப்பதாண்டுகளுக்குப் பின் நடக்கும் தேர்தலில் மொகதிஷு நிலவரம் குறித்த பிபிசியின் நேரடி செய்தி. * உருவாகிறது இன்னொரு பசுமைப்புரட்சி; உணவுதானிய உற்பத்தியை அதிகரிக்க புதிய வழியை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு.
-
- 0 replies
- 391 views
-
-
கொதி நிலையில் இருந்த அமிலதன்மை மிக்க ஒரு வெப்பக் குளத்தில் ஒரு நபர் விழுந்து இறந்த சம்பவத்துக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள யெல்லோ ஸ்டோன் தேசிய இயற்கை பூங்காவின் அதிகாரிகள், பூங்காவில் உள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு பூங்காவுக்கு வருபவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். காலின் ஸ்காட் என்ற அந்த நபரின் உடலை மீட்பு குழுக்கள் மீட்கும் முன்னர் அவரது உடல் வெப்பக் குளத்தில் கரைந்து விட்டது. வெப்பக் குளத்தின் வெப்ப நிலையை சோதிக்க காலின் ஸ்காட் சற்று குனிந்து முயற்சிக்கையில், அவர் இந்த குளத்தில் தவறி விழுந்துள்ளார். யெல்லோ ஸ்டோன் தேசிய இயற்கை பூங்கா இந்த சம்பவத்தை அவரது சகோதரி தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். அதிபயங்கரமான இந்த சம்பவம் குற…
-
- 2 replies
- 690 views
-
-
திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மணமகனின் அத்தை கொல்லப்பட்டுள்ளார். உறவினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய போதகர் பற்றி பிபிசியின் கீதா பாண்டே : சாத்வி ஓர் ஆயுத விரும்பி இந்தியாவின் வடக்கேயுள்ள ஹரியானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி வெளியான காணொளியில், சாத்வி தேவ தாக்கூர் முதலில் ரிவால்வராலும், பின்னர் இரட்டைக் குழல் துப்பாக்கியாலும் சுடுவது தெரிகிறது. அவரோடு சேர்ந்து அவருடைய சில பாதுகாப்பு பணியாளர்களும் சுடுகின்றனர். “புனிதப் பெண்” அல்லத…
-
- 7 replies
- 1k views
-
-
டிரம்பிடம் அதிகார ஒப்படைப்பு பற்றி ஐரோப்பிய தலைவர்கள் கலந்தாய்வு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு நடைபெறுகின்ற தங்களின் முதல் உச்சி மாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் டிரம்பிடம் அதிகார ஒப்படைப்பு பற்றி கலந்தாய்வு நடத்தியுள்ளனர். பிரியாவிடை பயணமாக ஜெர்மனியில் பராக் ஒபாமா பெர்லினில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிபர் பராக் ஒபாமாவும் பங்கேற்றார். உக்ரேனில் ரஷ்ய தலையீட்டை அடுத்து, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை டிரம்ப் தளர்த்தக் கூடாது என்பதில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார். முன்னதாக, முஸ்லிம்கள் பற்றிய பயம் நியாயமானதே என்று சமீபத்தில் டுவிட்டர் பதிவிட்ட ஓய்வு பெற்ற தளபதி மைக்கேல…
-
- 0 replies
- 285 views
-