Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பணயக் கைதிகளை விடுவிக்க ட்ரம்ப் காலக்கெடு! 2025 ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப், காசா போராளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 5 அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பிறகு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முட்டுக்கட்டையான முயற்சிகள் குறித்து திங்களன்று (02) வெளியான ட்ரம்பின் அறிக்கை மிகவும் வலுவாக இருந்தது. மேலும் அவர் தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்கும் முன் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கு அழுத்தம் கொடுக்கிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில் வந்துள்ளது. இஸ்ரேல் மீதான 2023 ஆம் ஆண்டு கொடிய தாக்குதலின் போது, ஹமாஸ் தலைம…

  2. இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை PrashahiniDecember 3, 2024 இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் அதையும் மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாசல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் இதாமன் பென் க்விர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பள்ளிவாசல்களில் இருந்து கேட்கும் ஒலி இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்தேய…

  3. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என அந்நாட்டின் கிரெம்ளின் மாளிகை(Kremlin - ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம்) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ரஷ்ய தூதரகத்தின் தகவலின்படி, புடினின் இந்தியா வருகைக்கான திகதிகள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவு செய்யப்படும் என கிரெம்ளின் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் வருடத்திற்கு ஒரு முறை இது போன்ற கூட்டங்களை நடத்த இரு நாட்டு தலைவர்களும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிரெம்ளின் மாளிகை மோடியின் அழைப்பை ரஷ்யா பெற்றுள்ளதாகவும், , நாங்கள் அதை நிச்சயமாக சாதகமாக பரி…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டத்திற்குப் புறம்பான சுரங்கத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கி அனுமதி எழுதியவர், நோம்சா மசெகோவ் பதவி, பிபிசி செய்திகள் தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சிறிய "நகரத்தில்" சுமார் 600 பேருடன் ஒருவராக இந்தூமிசோ என்ற நபர் அங்கே வசித்துப் பணிபுரிந்து வருகிறார். இந்த நகரம் முழுவதும் சந்தைகளும், பாலியல் தொழில் நடைபெறும் பகுதிகளும் இருக்கும். மேலும் இங்கு தென்னாப்பிரிக்காவில் பயன்பாட்டில் இல்லாத ஒரு தங்கச் சுரங்கத்தின் உள்ளே இந்த நகரம் இருக்கிறது. தங்கச் சுரங்கத்தில் உள்ள…

  5. கனடாவை அடுத்து இந்தியா, ரஷ்யாவுக்கு கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப் எதிர்வரும் ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் நிலையில் உலக நாடுகள் இரண்டாவது முறையாக மிகப்பெரிய வரி விதிப்புப் போரை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மெக்சிகோ ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதுடன், சுமூகமான தீர்வு எட்ட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரிடையாக புளோரிடாவுக்கு சென்று டொனால்டு ட்ரம்பை சந்தித்துள்ளார். இந்த நிலையில், இந்தியா, ரஷ்யா உட்பட்ட BRICS நாடுகளுக…

  6. 30 NOV, 2024 | 08:39 PM நைஜீரியாவில் இடம்பெற்ற படகுவிபத்தில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வடநைஜீரியாவில் இடம்பெற்ற படகுவிபத்தில் சிக்கிய 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொகி மாநிலத்திலிருந்து நைஜரை நோக்கி 200க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 27 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் சுழியோடிகள் ஏனையவர்களின் உடல்களை மீட்க முயல்கின்றனர் என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் விபத்து இடம்பெற்று 12 மணித்தியாலத்தின் பின்னரும் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.…

  7. 29 NOV, 2024 | 01:54 PM அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அனுபவசாலி, புத்திசாலி; தீர்வுகளை கண்டறியக்கூடியவர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். உக்ரைன் யுத்தம் தொடர்பில் மேற்குலகிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான பதட்டநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கஜகஸ்தானில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள புட்டின் புதிதாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு மேலதிக நெருக்கடிகளை உருவாக்கியமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை சாடியுள்ளார். ஒரேசினிக் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயு அணு ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைனை தாக…

  8. உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ரஷ்யா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புட்டின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்ட…

  9. பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE எழுதியவர், ஃபே நர்ஸ் பதவி, பிபிசி செய்திகள் தான் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று தெரிந்து கொண்ட நாள் முதல் தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்த தமுனா‌ மூசெரிட்சே, ஒரு நாள் தொலைபேசியை எடுத்து தனது தாய் என்று நம்பிய பெண்ணை அழைத்தார். அப்போது அவர் பெருமூச்சுவிட்டார். தன்னை‌ப் பெற்ற தாயாக‌ இருக்கலாம்‌ என்று நினைத்த பெண்ணை கடைசியில்‌ கண்டறிந்த அவருக்கு எல்லாம் நல்லவிதமாக முடியாது என்பது‌ தெரிந்தே இருந்தது. ஆனால், தொலைபேசியின் மறுமுனையில் இருந்த பெண் இவ்வளவு கடுகடுப்போடு, ஆத்திரத்துடன் பேசுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. "தான் ஒரு குழந்தையை பெறவே இல்லை என்றார், கதறினா…

  10. லெபனானுடனான போர் ஒப்பந்தத்திற்கு இடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏறக்குறைய 14 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது லெபனானுக்கு நிம்மதியை அளித்தது. இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் இரு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. காசா போருக்கு இணையாக நடைபெற்று வரும் இப்போரை முடிவுக்கு கொண்டுவர இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இரண்டு மாத போர்நிறுத்த காலத்தில், ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய தனது போராளிகளை தெற்கு லெபனானில் …

  11. 26 NOV, 2024 | 03:25 PM ஜனாதிபதியாக பதவியேற்றதும் கனடா, சீனா, மெக்சிக்கோ ஆகியநாடுகளில் இருந்து வரும் பொருட்களிற்கான வரிகளை அதிகரிப்பேன் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார் பதவியேற்ற முதல்நாளே இதனை செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க எல்லைக்கு அப்பாலிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றம், குற்றங்கள் போதைப்பொருட்களிற்கு எதிரான பதிலடியாகவே இதனை செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது முதலாவது உத்தரவு கனடா, மெக்சிக்கோவிற்கு எதிராக 25 வீத வரியை விதிப்பதாக காணப்படும் என தெரிவித்துள்ள டிரம்ப், இந்த நாடுகளில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் வருகின்ற அனைத்து பொருட்களிற்கு…

  12. அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசின் இந்த திட்டத்திற்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. இது குறித்து காணொலி மூலம் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் எட்டு மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப்…

  13. தென் கொரியா இரண்டாவது நாளாக கடுமையான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் இரண்டாவது நாளாக இன்றும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டடுள்ளது. இதனால் அந்நாட்டில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டுகூட வெளியே வராமல் சிக்கி தவித்து வருகின்றனர். விமான சேவையுடன், போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடும் குளிர் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில், 1907-ல் இருந்து, அதாவது கிட்டத்தட்ட 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகரான சியோலில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது இது மூன்றாவது முறை என்று கூறப்பட…

  14. இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியது. ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீண்டும் அவர்களுடைய இடத்தில் குடியமர்த்துவதுதான் நோக்கம் என இஸ்ரேல் அறிவித்து கடந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான சண்டை அதிகமானது. அடிக்கடி இஸ்ரேல் தாக்குவதும், ஹிஸ்புல்லா…

  15. உக்ரேனில் மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் அவதி! முக்கியமான எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களை அடுத்து உக்ரேனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாது தவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர். கிய்வில் உள்ள எரிசக்தி அமைச்சின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மாத்திரமான உக்ரேனில் ரஷ்யா முன்னெடுத்த எரிசக்தி கட்டமைப்புக்கு எதிரான 11 ஆவது பெரிய அளவிலான தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதல் இது நாடு தழுவிய மின் வெட்டுக்களை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனின் எல்விவ், வோலின் மற்றும் ரிவ்னேவின் மேற்குப் பகுதிகளில் பெரிய மின்தடை ஏற்பட்டுள்ளது. https://athavannews…

  16. பட மூலாதாரம்,CPS படக்குறிப்பு, பிறந்த முதல் மூன்று வருடங்களாக ஒரு தாய், அவரது மகளை டிராயரில் அடைத்து வைத்திருக்கிறார். எழுதியவர், கேட்டி பார்ன்ஃபீல்ட் மற்றும் இவான் காவ்னே பதவி, பிபிசி செய்திகள் பிரிட்டனில் பிறந்த முதல் மூன்று வருடங்களாக ஒரு தாய், அவரது மகளை டிராயரில் அடைத்து வைத்திருக்கிறார். இந்த குற்றத்திற்கு அந்த தாய்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர அலட்சிய செயலுக்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டிராயரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தச் குழந்தை, வெளி உலகத்தையோ, சுத்தமான காற்றையோ அனுபவித்தது இல்லை என்றும் செஷயரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருந்த ஒருவர் அந்த குழந்தை…

  17. பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, ரஷ்யாவின் அணு ஆயுத தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிஸ்டிக் ஏவுகணை எழுதியவர், வில் வெர்னோன் பதவி, பிபிசி செய்திகள் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழுமையான தாக்குதலை ஆரம்பித்த போதே, அதன் அணு ஆயுத தளம் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டதாக கூறுகிறார் ரஷ்யாவின் அணு ஆயுத தளம் ஒன்றில் பணியாற்றிய ஆண்டன். "அதற்கு முன்பு நாங்கள் பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டிருந்தோம். ஆனால் போர் ஆரம்பித்த நாளில் ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன," என்று கூறுகிறார் அந்த முன்னாள் ராணுவ வீரர். "கடல் மற்றும் வான்வழியாக (அணு ஆயுத) தாக்குதல் நடத்…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், நடாலி ஷெர்மேன் பதவி, பிபிசி நியூஸ் அமெரிக்காவில் மோசடி செய்ததாக இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நியூயார்க்கில் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றவியல் வழக்கு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான 62 வயதான கௌதம் அதானிக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என நீண்டிருக்கும் அவரது வணிகப் பேரரசு மீதும் இருக்கிறது. …

  19. ஐக்கிய அரபு அமீரகத்தில் காணாமல்போன மால்டோவா நாட்டைச் சேர்ந்த இஸ்ரேல் குடியுரிமை பெற்ற யூத மத குரு பயங்கரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மத குரு ஸ்வி கோகனின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க இஸ்ரேல் அனைத்து வழிகளிலும் பாடுபடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு ‘ஆபிரகாம்’ உடன்படிக்கையில் இரு நாடுகளுக்கும் ராஜீய உறவு தொடங்கியதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இஸ்ரேலியர்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் தாக்குதலால் ஓராண்டுக்கும் மேல் தொடரும் பிராந்திய பதற்றங்கள…

  20. கிரீன்லாந்து பனிக்கட்டிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம தளம்! கிரீன்லாந்தின் பனிப்பாறைக்கு அடியில் புதைந்துள்ள விசித்திரமான ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, சாட் கிரீன் மற்றும் அவரது குழுவினர் கிரீன்லாந்ன் பனிப்பாறைக்கு அடியில்1959 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தளத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த தளம் ஆர்க்டிக்கில் இருந்து அணு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்காவின் சோதனை தளமாக செயல்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரலில் ஒரு ஆய்வுப் பயணத்தின் போது, ரேடார் கருவிகளைச் சுமந்து சென்ற விமானம் கிரீன்லாந்தின் பனிக்கட்டியின் ஆழத்தையும் அதன் கீழே உள்ள பாறை அடுக்குகளையும் வரைபடமாக்கியது. இதன்போதே, இதுஉறைந்த …

  21. கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது எனவு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,பெண்கள் கொல்லப்பட்டது தொடர்பான தகவல் ஐ.நா. கிளை அமைப்புகளான ஐ.நா., பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களும், சிறுமிகளும் பாலின அ…

  22. உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரேய் பெலூசொவ் தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் வெடித்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரப் போவதாகத் தகவல் வெளியான நிலையில், இதனால் தனது நாட்டிற்கு ஆபத்து எனச் சொல்லி உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. இந்நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவ நிலையை நேரில் பாா்வையிட்ட ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்ட்ரேய் பெலூசொவ் , அங்கு பணியாற்றும் வீரா்களுக்கு பதக்கங்கள் அணிவித்தார். பின…

  23. எழுதியவர், யெமிசி அடெகோக்,சியாகோசி நோன்வு மற்றும் லினா ஷைகோனி பதவி, பிபிசி உலக செய்திகள் சியோமா தனது கைகளில் வைத்திருக்கும் ஆண் குழந்தை ஹோப் தனது மகன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். எட்டு வருடங்களாக கருத்தரிக்காமல் இருந்த அவர் ஹோபை தன் அதிசயக் குழந்தையாகப் பார்க்கிறார். "ஹோப் என்னுடைய மகன்," அவர் உறுதிபடச் சொல்கிறார். தம்பதியினரை விசாரிக்கும் நைஜீரிய அரசு அதிகாரியின் அலுவலகத்தில் தனது கணவர் இக்கேவுக்கு அருகில் அமர்ந்துள்ளார் சியோமா. அனம்ப்ரா மாநிலத்தில் மகளிர் விவகாரங்கள் மற்றும் சமூக நல ஆணையராக (commissioner for women affairs and social welfare), இஃபி ஒபினாபோ குடும்ப பிரச்னைத் தொடர்பான மோதல்களைத் தீர்ப்பதில் அனுபவம் உட…

  24. பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்துடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை! ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்துடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெஹ்ரான் (24) தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) நடக்கவிருக்கும் இந்த பேச்சுவார்த்தையானது ஈரானின் வெளிவிவகார அமைச்சினால் ஞாயிற்றுக்கிழமை (24) அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனம், லெபனான் பிரச்சினைகள், அணுசக்தி விவகாரம் உட்பட பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) கூறினார். இங்கிலாந்து அதிகாரிகள் இ…

  25. ரஸ்யா உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்ய உக்ரைன் போரில் ரஸ்யா முதல்தடவையாக இந்த ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து ரஸ்யா கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. இன்று அதிகாலை தாக்குதலின் போது அஸ்ட்ராகன் பகுதியிலிருந்து ஐசிபிஎம் ஏவுகணையை ரஸ்யா செலுத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. நிப்ரோவை பல்வேறு ஏவுகணைகளால் ரஸ்யா இலக்குவைத்தது என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் ஆறு கேஎச்-101 ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஸ்யா மீது தனது ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கிய மறுநாள் கண்டங்களிற்கு இடைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.