உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
அதிகரிக்கும் ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதல்.. உள்துறை அமைச்சருடன் சுஷ்மா அவசர ஆலோசனை. டெல்லி: டெல்லியில் காங்கோ நாட்டு இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஹைதராபாத்தில் ஒரு நைஜீரிய மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும், டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதலால் ஆப்பிரிக்க நாடுகளில் அதிர்ச்சி அலை பரவியுள்ளது. காங்கோ தலைநகர் கின்ஹாசாவில் இந்தியர்களுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்தியர்களின் கடைகள் தாக்கப்பட்டன. இந்தியர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள். மேலும் ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும் கூட இ…
-
- 2 replies
- 437 views
-
-
புதிய ரகசியம்: அமெரிக்காவில் சலவைக் கடை நடத்தும் வடகொரிய அதிபர் கிம்-மின் சித்தி கிம் ஜோங் உன். | கோப்புப் படம். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சலவைக் கடை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவ்வப்போது சுவாரஸ்ய ரகசியங்கள் வெளியாகும். அந்த வகையில் தற்போது கிம்-மின் சித்தி குறித்து ஒரு ரகசியத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கிம் ஜோங் உன்னின் தாயார் கோ யோங் ஹுயி-ன் சகோதரி கோ யோங் சுக் கடந்த 1998-ல் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 606 views
-
-
தீவிரவாதத்துக்கு எதிராக செயல் திட்டம்: ஜி- 7 தீர்மானம் தீவிரவாதம், பயங்கரவாத வன் முறையை எதிர்த்துப் போரிடு வது, புலனாய்வுத் தகவல் களைப் பகிர்ந்து கொள்வது, எல்லைப் பாதுகாப்பில் பெரிய அளவில் ஒத்துழைப்பு உள்ளிட்ட தீவிரவாதத்துக்கு எதிரான செயல் திட்டத்துக்கு ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளி்த்துள்ளனர். அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வது ஜி-7 நாடுகளின் பொறுப்பு என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது. உலக பாதுகாப்புக்கான அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்த மேன்மேலும் ஒருங்கிணைந் த, கூடுதல் ஒத்துழைப்புக்கு ஜி7 தலைவர்கள், அரசுகள் மட்டு மின்றி, தனியார் துறை, பல்வேறு அமைப்புகள், சமூகம் என அனைத்து துறைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். ஐஎஸ்,…
-
- 1 reply
- 292 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. - முதலாவது அணுக்குண்டால் நிர்மூலமான ஜப்பானிய நகரான ஹிரோஷிமாவுக்கு அதிபர் ஒபாமா விஜயம். - புதிய தொழிற்சட்டம் குறித்து உறுதியாய் இருப்பேன் என்கிறார் பிரான்ஸ் நாட்டு அதிபர். ஆனால், தொழிற்சங்கங்களோ போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளன. - ரியோ டி ஜெனிரோவில் பதின்ம வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை பிரேசில் காவல்துறை தேடிவருகிறது.
-
- 0 replies
- 362 views
-
-
அமெரிக்கா அணுகுண்டு வீசிய நகருக்கு சென்று அஞ்சலி செலுத்திய ஒபாமா அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்நிலையில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமாவுக்கு முதல்முறையாக செல்லும் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா கருதப்படுகின்றார். முகத்தில் கவலையுடன் குறித்த இடத்திற்கு வந்த ஒபாமா 1945 ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க தாக்குதலின் நினைவுச் சின்னத்திற்கு வெள்ளை மலர்களால் செய்யப்பட்ட மலர்வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார். குறித்த நினைவிடத்திற்கு அமெரிக்க ஜனாதிபதியுடன் ஜப்பான் பிரதமர் ஷ…
-
- 4 replies
- 625 views
-
-
இங்கிலாந்திற்கு ஐ.எஸ் ஐ.எஸ் அச்சுறுத்தல் ; நாடுமுழுதும் தீவிர பாதுகாப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் கடும் பாதுகாப்பு நடவடிக்கையினை இங்கிலாந்து அரசு மேற்கொண்டுவருகின்றது. அந்நாட்டின் விசேட விமானப்படையினர் நாட்டின் மத்திய பகுதிகளின் வான்பரப்பில் 24 மணிநேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கி யமாக இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் நகரை தீவிரவாதிகள் குறிவைத்துள்ள நிலையில் லண்டன் நகரம் முழுவதும் கடும் பாதுகாப்பு பணிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் விசேட விமானப்படையினரின…
-
- 0 replies
- 389 views
-
-
கடந்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மருத்துவமனைகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது: ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் 2014, 2015 ஆண்டுகளில் 594 தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.இதில் குறைந்தபட்சம் 959 பேர் பலியாகினர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 60 சதவீத தாக்குதல்கள் வேண்டுமென்றே மருத்துவமனைகள் மீது நிகழ்த்தப்பட்டது எனத் தெரிய வந்துள்ளது. 20 சதவீத தாக்குதல்களை விபத்து எனலாம். தாக்குதல்களில் பாதியளவை …
-
- 0 replies
- 171 views
-
-
உலகளாவிய ரீதியில் உள்ள மிகப்பெரிய சவால் - இது தான்! பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வளர்ந்த நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் ஒன்றிணைந்து ஜி-7 என்றதொரு அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டின் ஜி-7 மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள இசே-ஷிமா நகரில் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுவரும் இந்த மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அகதிகள் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தென் சீனக்கடலில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கு…
-
- 1 reply
- 387 views
-
-
GTBC RadioLike Page 9 hrs · ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்... நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானது. எப்படியிருந்தாலும் என் பணிச்சுமைகள் எல்லாம் தாண்டி நானும் வாழ்க்கையில் சிறிது சந்தோசங்களை அனுபவித்திருக்கிறேன். பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில் தான் அறிந்து கொண்டேன். இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு வாழ்க்கையையும் திரும்பி பார்க்கும் இந்த தருணத்தில் …
-
- 6 replies
- 987 views
-
-
ஆஸ்திரேலிய மாநிலத்தின் நியூ சவுத் வேல்ஸின் அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான வௌவால்களால் முற்றுகையிடப்பட்டுள்ள பேட்மன்ஸ் பே நகரத்திற்கு உதவ அவசர நிலையை அறிவித்துள்ளனர். வௌவால்கள் தொடர்ந்து எழுப்பும் சத்தம், அவைகளின் துர்நாற்றம் மற்றும் கழிவுகள் என அனைத்தும் தங்களின் வாழ்க்கையை துயரமாக்குவதாக பேட்மன்ஸ் பே நகர வாசிகள் தெரிவிக்கின்றனர். பறக்கும் நரிகள் என்று அழைக்கப்படும் இந்த வௌவால்களை இடமாற்றம் செய்வதற்கு 1.8 மில்லியன் டாலர்களை செலவு செய்ய திட்டமிட்டு வருகின்றனர் அம்மாநில அதிகாரிகள். இந்த வௌவால் கூட்டங்கள் பேட்மன்ஸ் பேயில் உள்ள மரங்களின் பூக்களால் கவர்ந்திழுக்கப்படுகின்றன. இந்த பறக்கும் நரி வௌவால்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய ஒரு இனமாகும். …
-
- 3 replies
- 603 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - ஊழலால் ஓப்பியம் சாகுபடியை ஒழிக்க தடுமாறும் ஆப்கானிஸ்தான். பிபிசியின் சிறப்பு புலனாய்வு. - ரஷ்ய சிறையில் இரு வருடங்களை கழித்து நாடு திரும்பிய யுக்ரெய்னிய பெண் விமானிக்கு இராஜ வரவேற்பு. - உலகின் நவநாகரிக தலைநகரான பிரான்ஸில், முஸ்லிம் பெண்களுக்கான உடையலங்காரம் குறித்து சர்ச்சை.
-
- 0 replies
- 518 views
-
-
500 க்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்தது இத்தாலி நோக்கி வந்த படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 562 பேரை இத்தாலி கடற்படையினர் மீட்டனர். இதில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம் செய்து மத்திய தரை கடலை தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவி வருகிறார்கள். இந்த நிலையில் இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் உள்ள சிசிலி வளைகுடா பகுதியில் 550க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய படகில் இத்தாலி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இந்த படகு திடீரென ஒரு பக்கமாக சாய்து மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிரு…
-
- 0 replies
- 430 views
-
-
மல்லையாவின் தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு.! காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு அளிக்கப்படவுள்ள தண்டனை விவரங்கள் மீதான விசாரணையை ஜூன் 6ஆம் திகதிக்கு ஹைதரபாத் நகர நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஹைதராபாதில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தை ஜி.எம்.ஆர். விமான நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த விமான நிலையத்தில் தங்கள் விமானங்களை நிறுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கிங்ஃபிஷர் நிறுவனம் ஜி.எம்.ஆர். விமான நிறுவனத்துக்கு கொடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிங்ஃபிஷர் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட தலா 50 இலட்சம் ரூபா மதிப்பிலான இரு காசோலைகள், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின. இதுகுறித்து ஹ…
-
- 0 replies
- 318 views
-
-
சுமார் 3250 கோடி ரூபாய் மதிப்பில் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியாவும் ஈரானும் ஒப்பந்தம் ஏற்படுத்தியதையடுத்து இருநாடுகளுக்கு இடையேயான உறவை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ள வெளிவிவரங்களுக்கான உறவு குழு உறுப்பினர்களிடம் கூறியதாவது:- ஈரான் -இந்தியா இடையேயான 500 மில்லியன் டாலர் மதிப்பிலான சபஹர் துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தத்தில், சட்ட ரீதியான அளவீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை காண உள்ளோம். தற்போதைய சூழ்நிலையில், அந்த இரு நாடுகளுக்கு இடையேயும் ராணுவ ஒத்துழைப்போ அல்லது பய…
-
- 0 replies
- 353 views
-
-
மதுபானங்களை குறைவாக அருந்துங்கள் என்று"குடி'மகன்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவுரை வழங்கியுள்ளார்.பிகாரில் பூரண மதுவிலக்கு கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. எனினும், அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மது விற்பனை தாராளமாக இருப்பதால் அதன் எல்லையையொட்டி அமைந்துள்ள பிகார் பகுதிவாசிகள் அங்கு சென்று மது அருந்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது.மேலும், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிகாருக்குள் அதிக அளவிலான மது வகைகள் சட்ட விரோதமாகக் கொண்டு வருவதும் அதிகரித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பான அண்மையில் கருத்துத் தெரிவித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார், உத்தரப் பிரதேசத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இச்செய்தியானது, ஊடகங்களில் வெளியானதால் உத்த…
-
- 0 replies
- 308 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - ஆப்கானிஸ்தான் தலிபான்களின் புதிய தலைவராக ஹிபத்துல்லாஹ் அக்குண்ஷாடா அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தாக்குதலில் பழைய தலைவர் கொல்லப்பட்டு சில தினங்களில் அறிக்கை வந்துள்ளது. - போர் நடக்கும் சிரியாவில் இருந்து பிரான்ஸுக்கு வந்த ஒரு சிறுவனின் கதை. தனது சித்திரங்கள் மூலம் அவன் அந்த பயங்கரத்தை விபரித்துள்ளான். - சீனாவில் மனிதனுக்கு பார்வை தரும் பன்றிகள்.
-
- 0 replies
- 470 views
-
-
தாலிபான் புதிய தலைவர், துணை தலைவர்கள் நியமனம் தாலிபான் தலைவர் முல்லா அகத்தர் மன்சூர் , பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சில நாட்களில், ஆப்கான் தாலிபான், ஒரு புது தலைவரை நியமித்துள்ளதாக கூறியுள்ளது. ஹைபத்துல்லா அக்ஹுந்த்சாதா,தாலிபானின் புதிய தலைவர் தாலிபானின் பிரதிநிதி, ஹைபத்துல்லா அக்ஹுந்த்சாதாவை இயக்கத்தின் புதிய தலைவர் என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். முல்லா ஹைபத்துல்லா, முல்லா அகத்தர் மன்சூருக்கு துணைத் தலைவரகவும், தாலிபான் நீதித்துறையின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். காபூலில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட வலையமைப்பைச் சேர்ந்த…
-
- 0 replies
- 264 views
-
-
கம்போடியாவில் இருக்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் குறைவான சம்பளம் காரணமாக ஆயுதக்குழு ஒன்றை துவங்கி திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வன்முறை குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கம்போடியாவில் இருக்கும் போம் பென் காவல்துறை கடந்த ஐந்து ஆண்டுகளாக தேடிவந்த 62 வயதான மோங் சாரியை கைது செய்துள்ளனர்.மொத்தம் 37 ஆயுதக்கொள்ளைகளில் அவருக்குத் தொடர்பிருந்ததாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. கம்போடியாவின் தென்பிராந்தியமான ரெ வெங்கைச் சேர்ந்த இந்த முன்னாள் பள்ளி ஆசிரியர் நகைக்கடையில் நடந்த ஆயுதக்களவு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். கடையின் முதலாளிகளை தாக்கிவிட்டு சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் அமெரிக்க டாலர் மத…
-
- 0 replies
- 447 views
-
-
பிரபல முன்னணி நிறுவனங்களின் பிரெட்டுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப் பொருள்கள் கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பாக உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அறிக்கை கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா (படம்) செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமான பிரச்னையாக எடுத்துக் கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று எஃப்எஸ்எஸ்ஏஐ அமைப்பை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். அவர்கள் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதன்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நடவடிக்கை…
-
- 0 replies
- 419 views
-
-
தெலங்கானா மாநிலத்தில் அனல் காற்றால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 317-ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. கோடைக் காலம் தொடங்கியது முதல், தெலங்கானாவில் வெப்பக் காற்று அதிகமாக வீசி வருகிறது. இதனால் இதுவரை 317 பேர் உயிரிழந்து விட்டனர். இதில் நல்கொண்டா மாவட்டத்தில் அதிகபட்சமாக 91 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து மகபூப்நகர் மாவட்டத்தில் 44 பேர் பலியாகி விட்டனர். இதனிடையே, அடுத்த 72 மணி நேரத்துக்குள், தெலங்கானா மாநிலத்தில் அடிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர், மேடக், நல்கொண்டா, வாரங்கல் மற்றும் கம்மம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே அனல் காற்று அதிகமாக வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத…
-
- 0 replies
- 414 views
-
-
விமானம் விழுந்த இடத்திலிருந்து துண்டுதுண்டுகளாக சிதறிய 80 மனித எச்சங்கள் மீட்பு.! எகிப்துஎயார் எம்.எஸ்.804 விமானம் மத்தியதரைக் கடலில் விழுந்த இடத்திலிருந்து பெறப்பட்ட மனித எச்சங்கள் அந்த விமானத்தில் பாரிய வெடிப்பு இடம்பெற்றுள்ளமையை எடுத்துக்காட்டுவதாகவுள்ளதாக எகிப்திய தடயவியல் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி ஏ.பி. ஊடகம் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விமானம் கடந்த 19 ஆம் திகதி 66 பேருடன் மத்தியதரைக் கடலில் விழுந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இதுவரை ஒரு கரம் அல்லது ஒரு கால் என்ற ரீதியில் சுமார் 80 உடல் பாகங்கள் துண்டு துண்டுகளாக …
-
- 0 replies
- 346 views
-
-
ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு டோக்கியோ :''இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதற்காக, அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கப்போவதில்லை,'' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வியட்நாம் தலைநகர் ஹனோயில், அந்நாட்டு அதிபர் டிரான் டாய் குவாங் உள்ளிட்டேரை சந்தித்து பேசினார். அப்போது, சீனாவுடனான, வியட்நாமின் கடல் எல்லை விவகாரம், வியட்நாம் மீதான பொருளாதார தடையை அகற்றுவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர். இதை தொடர்ந்து ஜப்பான் செல்லும் ஒபாமா, ஹிரோஷிமா நகரில் நடக…
-
- 0 replies
- 379 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - துருக்கிய நகரான சிஸ்ரேயில் பொதுமக்களை கொன்றதாக வந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற ஐநா கோரிக்கையை துருக்கி நிராகரித்துள்ளது. - இருபத்தைந்தாவது சுதந்திர தினத்தை எரித்ரியா கொண்டாடுகிறது. ஆனால், கடும்போக்கு ஆட்சி நடக்கும் அந்த கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் இன்னமும் பிரச்சினைகள் இருக்கின்றன. - உலகின் மிகப்பெரிய முந்திரி ஏற்றுமதி நாடான இந்தியாவை முந்துகின்ற ஐவரிகோஸ்ட். சாக்லேட்டில் இருந்து முந்திரியை நோக்கி.
-
- 0 replies
- 466 views
-
-
வரி ஏய்ப்பு மோசடி குறித்து கூகுள் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை அமெரிக்காவின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுள் தலைமையகத்தில் வரி ஏய்ப்பு மோசடி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி உள்ளனர். மத்திய பாரீஸில் இருந்த கூகுள் தலைமை அலுவலகத்திற்குள் இன்று அதிகாலை சுமார் 100 வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர். பிரெஞ்சு அரசாங்கத்துக்கு கூகுள் நிறுவனம் சுமார் 1.8 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 12,186 கோடி ரூபாய்) வரி பாக்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. http://www.bbc.com/tamil/global/2016/05/160524_google_tax
-
- 0 replies
- 237 views
-
-
விசா இல்லாத பயணத்துக்கு அனைத்து நிபந்தனைகளையும் துருக்கி நிறைவேற்ற வேண்டும்: ஜெர்மன் சான்சிலர் மேர்க்கல் விசா இல்லாத பயணத்தை துருக்கிப் பிரஜைகள் ஜூலை முதலாம் பெறுவதற்கு முன்பதாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் துருக்கி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய ஜெர்மனிய சான்சிலர் அங்கெலா மேர்க்கல், துருக்கியின் பயங்கரவாதத்துக்கெதிரான சட்டம் தொடர்பாக துருக்கியுடன் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக ஜூலை முதலாம் திகதி என்ற இலக்கு பின்தள்ளிப் போகலாம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் துருக்கி ஜனாதிபதி ரீசெப் தய்யீப் எர்டோவானை திங்கட்கிழமை (23) சந்தித்த பின்னர் கருத்து தெரிவித்த மேர்க்கல், …
-
- 0 replies
- 250 views
-