உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27056 topics in this forum
-
வடகொரிய படைத்தளபதிக்கு மரண தண்டனை' வடகொரிய படைத் தளபதிக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென்கொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவருடன் ஜெனரல் றி ஜெனரல் றி யொங் ஜில் சொந்த நலனுக்காக ஊழலில் ஈடுபட்டதாக யொன்ஹப் செய்தி நிறுவனம் பெயர் கூறப்படாத ஒருவரை ஆதாரம் காட்டி கூறியுள்ளது. இந்த அறிக்கையை உறுதி செய்யமுடியவில்லை. வடகொரிய தலைவர் கிம் யொங் உன்னின் கீழ் 2013இல் ஜெனரல் றி அவர்கள், கொரிய மக்கள் படையின் தலைமை ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2011இல் கிம் யொங் உன் பதவிக்கு வந்தது முதல் அவரது மாமா உட்பட 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக கடந்த ஆண்டு தென்கொரியா மதிப்பிட்டிருந்தது. http:…
-
- 0 replies
- 516 views
-
-
குடியுரிமை பறிப்பு தொடர்பில் பிரான்ஸில் புதிய சட்டம் பிரெஞ்சு அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரெஞ்சு அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த பிரெஞ்சு நாடாளுமன்றின் கீழவை ஒப்புதல் கடந்த ஆண்டு பாரிஸில் ஜிஹாதிகள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசரகால அதிகாரங்களில் திருத்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் தீவிரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரெஞ்சு மக்களின் குடியுரிமையை பறித்தல் எனும் இரண்டு சர்ச்சைக்குரிய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த மசோதா பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் மேலவைக்கு எடுத்து ச…
-
- 0 replies
- 452 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: வெள்ளை மாளிகைக்கான பந்தயத்தில் புதிய திருப்பமாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பேர்னி சாண்டர்ஸ் ஆகியோர் நியூஹம்ஷ்யர் மாநிலத்தில் வெற்றி. - பதின்மவயது கர்ப்பத்தை தவிர்க்க கன்னிப் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்ட்த்தால் தென்னாப்பிரிக்காவில் பெரும் சர்ச்சை. - உறவுகளை இணைக்கும் நவீன தொழில்நுட்பம்- வயதான பெற்றோருக்கு சீன கார்டூன் கலைஞரின் வழிகாட்டி உதவி.
-
- 0 replies
- 291 views
-
-
மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்! [Wednesday 2016-02-10 07:00] அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறார்.பொதுமக்கள் முன்னிலையில் தனது தலைப்பாகையை கழற்றும்படி கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரோமெக்ஸிகோவின் விமானத்தில் பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.வாரிஸ் அலுவாலியா எனும் அந்த சீக்கியர் மெக்ஸிகோ சிட்டியிலிருந்து நியூ யார்க் செல்ல விமான நிலையம் வந்தபோது கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு வி…
-
- 2 replies
- 343 views
-
-
130 கி.மீ வேகத்தில் வீசிய காற்று... விமானியின் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்! (அதிர வைக்கும் வீடியோ) லண்டன் விமான நிலையத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால், தரையிறங்க முடியாமல் விமனத்தை மீண்டும் வானில் பறக்க செய்தார் விமானி. விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இங்கிலாந்தில் மழைக்காலம் தொடங்கி, ஒன்பதாவது முறையாக உருவாகியுள்ள புதிய புயல் காரணமாக அந்நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இமோகென் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால், மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் கடலோர நகரங்களில் காற்று வீசியது. இந்நிலையில் இமோகென் புயல் தாக்கத்தால் திங்கள்கிழமை காலை லண்டன் நகரில் பலத்த …
-
- 0 replies
- 338 views
-
-
அலெப்பே நகரை அரசபடை முற்றுகையிடும் பட்சத்தில் 300,000 மக்களிற்கான உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம் 10 பெப்ரவரி 2016 சிரியாவின் வடபகுதி நகரான அலெப்பேயை அரசபடையினர் தமது முற்றுகைக்குள் கொண்டுவரும் பட்சத்தில் அங்குள்ள 300,000 மக்களிற்காக உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளது. அலெப்பே நகரிற்கு துருக்கியிலிருந்த உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்காக உலக உணவு திட்டம் பயன்படுத்தி வந்தபாதையை கடந்த வாரம் அரசபடையினர் துண்டித்துள்ளனர்,இதனை தொடர்ந்து உலக உணவு திட்டம் மாற்றுப்பாதையொன்றை பயன்படுத்தி வருகின்றது எனினும் இந்த பாதையும் துண்டிக்கப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளது.அரச படையினர் துருக்கியிலிருந்து கிழக்கு அலெப்பேயிற்கு செல்வும் பாதைய…
-
- 0 replies
- 287 views
-
-
ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம்! [Tuesday 2016-02-09 23:00] ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த, 60 பயங்கரவாதிகளை, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் நியமித்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, மேற்கத்திய நாடுகளின் புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்தாண்டு நவம்பரில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதி அபு முகம்மது அல் - அட்னானி தலைமையிலான குழுவை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழு அனுப்பி வைத்திருந்தது. இக்குழு, பாரீஸ் நகரின் பல இடங்களில் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில், 130 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் நடக்கும் முன், பாரீஸ், பிரிட…
-
- 0 replies
- 357 views
-
-
புலால் உண்ணாதவர்கள் சக மனிதனின் துயரங்களை கண்டு கொள்ளாத போது அகிம்சை என்னவாகிறது?- கமல் அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். ''இந்தியாவில் பேச்சு சுதந்திரம் இருக்கிறது . அதற்காக எதை வேண்டுமென்றாம் பேசி விட வாய்ப்பில்லையென்பதால் இங்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சில விஷயங்களை பதிவு செய்கிறேன். ஆனால் ஜனநாயகம் என்றாலே பேச்சு சுதந்திரம் என்பதுதான் என்ற அர்த்தம் தாமாகவே வருகிறது. இப்படி பேசுவதால் இந்திய ஜனநாயகத்தை நான் விமர்சிப்பதாக அர்த்தம் கொண்டு விடக் கூடாது. நான் இந்திய ஜனநாயகத்தை விமர்சிக்கவில்லை. மாறாக, இந்திய ஜன…
-
- 1 reply
- 667 views
-
-
ஜெர்மனியில் ரயில்கள் மோதி விபத்து: 8 பேர் பலி; காயம் 150 க்கு மேற்பட்டோர் ஜெர்மணியில் பவாரியா எனுமிடத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் ரயில் | படம்: ராய்ட்டர்ஸ். ஜெர்மணியில் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் குழுவினர் | படம்: ராய்ட்டர்ஸ் ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பலியாகினர். 150-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். விபத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு…
-
- 1 reply
- 610 views
-
-
மகிழ்ச்சிக்கு ஒரு அமைச்சகம், சகிப்புத்தன்மைக்கு ஒன்று - ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் மகிழ்ச்சிக்காக ஒரு அமைச்சகம் , ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உருவாகியிருக்கிறது. மகிழ்ச்சிக்கான புதிய அமைச்சகத்தை அறிவித்தார் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் பிரதமர் அரசின் அமைச்சகங்களில் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாக வரும் இதனை அறிவித்த ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டோம், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சிக்கான துணை அமைச்சர் , சமூக நலன் மற்றும் திருப்திக்கான கொள்கைகளை வகுப்பார் என்றார். சகிப்புத்தன்மைக்கான புதிய துணை அமைச்சர் பதவி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பல அமைச்சரவைகள் ஒன்றிண…
-
- 0 replies
- 313 views
-
-
கூகிள் சுந்தர் பிச்சை அதிக ஊதியம் பெறும் அமெரிக்க நிர்வாகியானார் கூகிள் நிறுவனத்தின் தலைவரான, சுந்தர் பிச்சை, அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரியாகியிருக்கிறார். இந்தியாவில் பிறந்தவரான43 வயதான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகிள் அதன் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார். அவருக்கு சுமார் 230 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன. இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களான, லாரி பேஜ் மற்றும…
-
- 0 replies
- 452 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டு வேளையில் அனுமதி அற்று போடப்பட்ட கடைகளை அகற்ற முயன்ற போலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் பெரும் மோதல். - ''கொசுவை உண்ணும் மீன்கள்'' ஸீக்கா மற்றும் டெங்கு பரவலை தடுக்க உதவுமா என்பது குறித்த ஒரு பார்வை. - 'கனவு நகரம்'- ஆள்நடமாட்டம் இல்லாத பாலைவனத்தில் சவுதியின் பல பில்லியன் டாலர் பெருநகரத் திட்டம்.
-
- 0 replies
- 1k views
-
-
நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மறைவு சுஷில் கொய்ராலா | கோப்புப் படம் நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரும் நேபாளி காங்கிரஸ் தலைவருமான சுஷில் கொய்ராலா மறைந்தார். அவருக்கு வயது 79. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுஷில் கொய்ராலா நுரையீரல் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் அமெரிக்காவில் அவர் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்தது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 12.50 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காத்மாண்டுவில் உள்ள கட்சி அலுவலகத்தில் …
-
- 0 replies
- 436 views
-
-
துருக்கி எல்லையில் மனிதாபிமான நெருக்கடி - அமெரிக்க வெள்ளை மாளிகை 2016-02-08 11:02:42 துருக்கியின் எல்லைக்கருகே, இலட்சக்கணக்கான சிரிய அகதிகள் இடம்பெயர்ந்து வந்துள்ளமை, மனிதாபிமான நெருக்கடியை தோற்றுவித்துள்ளதுடன், அது மோசமடைவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அலெப்பே நகருக்கு அருகே, ரஷ்யா ஆதரவுடன் அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதலில் இருந்து சிரியர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர். அவர்களை தமது நாட்டிற்குள் அனுமதிக்காத துருக்கி, அவர்களுக்கான உதவிகளை சிரிய எல்லைக்குள் அனுப்பி வைக்கிறது. அதேவேளை, சிரியாவில் போர் நிறுத்தம் ஒன்றிற்கு ஆதரவ…
-
- 1 reply
- 496 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - தைவானில் நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டடத்தில் இருந்து எட்டுவயதுச் சிறுமி மீட்கப்பட்டார். இரண்டு நாட்களின் பின்னர் மீட்கப்பட்ட மூன்றாவது நபர் இவர். - பிரஞ்சு போர் விமானங்கள் ஐ எஸ்ஸுக்கு எதிரான தாக்குதலை அதிகரிக்கின்றன. தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இஸ்லாமிய அரசுக்கு இனி வெற்றிக்கு வாய்ப்பில்லை என்கிறார் பிரஞ்சு தளபதி ஒருவர். - சிரியாவில் பிள்ளைகளுக்கு போரினால் ஏற்பட்ட மன ரணங்களை ஆற்ற இசை மற்றும் நடனத்தை பயன்படுத்தும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
-
- 0 replies
- 273 views
-
-
பெங்களூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை 2 பேரை கடித்து குதறிய சம்பவம் ( வீடியோ) கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை ஒன்று 2 பேரை கடித்து குதறியது. கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளி வளாகத்தில் ஒரு சிறுத்தை நடமாடுவதை காவலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்து பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். …
-
- 0 replies
- 379 views
-
-
குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள் 2016-02-08 10:52:09 ஐரோப்பாவுக்கு செல்லும் குடியேறிகளுக்கு எதிராக ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேற்கை இஸ்லாமிய மயமாக்குதலுக்கு எதிரான ஐரோப்பியர்கள் (பிஜிடா) என்ற அமைப்பால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பெரியளவில் நடத்தப்பட்ட இந்த போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின்…
-
- 0 replies
- 341 views
-
-
நடுவானில் நேருக்கு நேர் மோதி கொண்ட விமானங்கள் கடலில் விழுந்து மூழ்கின! லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கடல் பரப்புக்கு மேல் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு கடலில் விழுந்து மூழ்கி உள்ளது. அமெரிக்காவில் இரண்டு சிறிய ரக விமானங்கள் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, நடுவானில் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்களும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில், இரு விமானங்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கடலில் துறைமுகம் அருகே விழுந்து மூழ்கி உள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விம…
-
- 3 replies
- 656 views
-
-
அகதிகளுக்கு உதவ ஆஸியின் விக்டோரியா மாநிலம் முன்வந்துள்ளது ஆஸ்திரேலியாவில் 260க்கும் அதிகமான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு தாங்கள் அடைக்கலம் அளிப்பதாக விக்டோரியா மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. அகதிகளுக்கு ஆதரவாக விக்டோரியா மாநில முதல்வர் குரல் கொடுத்துள்ளார் அவர்கள் பசிஃபிக் பெருங்கடலிலுள்ள ஆஸ்திரேலிய அரசின் குடிவரவு மையங்களுக்கு அனுப்பப்படவிருந்த நிலையில், விக்டோரியா மாகாணத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இவர்களை நவ்ரூ தீவுக்கு அனுப்ப வேண்டாம் என ஆஸ்திரேலியப் பிரதமருக்கு, விக்டோரியா மாநில முதல்வர் டானியேல் ஆண்ட்ரூஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர்கள் அங்கு அனுப்பப்பட்டால், உடல் மற்றும் மனரீதியான பெரும் தாக்கங்களுடன் கூடிய வாழ்க்கையை எதிர…
-
- 0 replies
- 414 views
-
-
ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான 1.25 லட்சம் ட்விட்டர் கணக்கு நீக்கம் கோப்புப் படம் தீவிரவாத கருத்துகளை பரப்பவும் ஆதரவாகவும் செயல்பட்டு வந்த 1.25 லட்சம் பேருடைய கணக்கு களை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. சர்வதேச அளவில் தீவிர வாதத்தை பரப்ப சமூக வலை தளங்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. மேலும், தீவிரவாதத்துக்கு ஆட்களை சேர்க் கவும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். தற்போது சிரியாவில் பயங்கர வன்முறை களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதர வாகவும் ஆட்களை சேர்க்கவும் சமூக வலைதளங்களில் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தீவிரவாதத் துக்கு ஆதரவாக செயல்படு வோரின் கணக்குகளை கண் காணிக்க ட்விட்டர் ந…
-
- 0 replies
- 423 views
-
-
தொழுகையில் கலந்துகொள்ளத் தவறிய 14 வயது சிறுவனுக்கு பெற்றோர் முன்னிலையில் மரணதண்டனை Published by MD.Lucias on 2016-02-06 10:23:27 ஐ.எஸ். தீவிரவாதிகள் தொழுகையில் கலந்து கொள்ளத் தவறிய 14 வயது சிறுவன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் முன்னிலையில் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த மரணதண்டனை குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. வட சிரியாவிலுள்ள ஜராபுலஸ் நகரைச் சேர்ந்த மேற்படி சிறுவன் அந்நகரிலுள்ள மத்திய பள்ளிவாசலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொழுகையில் கலந்து கொள்ளத் தவறிய…
-
- 1 reply
- 524 views
-
-
36.5 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட அரியவகை பந்தயக்கார் [ Saturday,6 February 2016, 05:23:14 ] உலகில் மிகவும் அரிதானதும், வரலாற்றுடையதுமான பந்தயக்கார் 35.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை இதற்கான ஏலவிற்பனை இடம்பெற்றுள்ளது. 1957ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சிவப்பு நிறத்திலான இந்த பந்தயக் கார் தலைசிறந்ததும், சிறப்பான நிலையிலும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக இந்த ஏலவிற்பனையை ஏற்பாடு செய்திருந்த மத்தியூ லேமோர் (Matthieu Lamoure) தெரிவித்துள்ளார். 35.6 மில்லியன் டொலர்களுக்கு இந்த பந்தயக்கார் விற்பனை செய்யப்பட்டிருப்பது ஒரு சாதனை என்று கருதுவ…
-
- 0 replies
- 541 views
-
-
தைவானில் பாரிய நிலநடுக்கம்: பலமாடிக் கட்டிடங்கள் இடிந்து வீழந்தன - 4 பேர் பலி: 06 பெப்ரவரி 2016 தைவானில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி 10 மாத குழந்தை உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு தைவானின் தைனன் நகரில் அதிகாலை 4 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.4 ஆக ரிக்டர் அளவுகோளில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால், நகரில் உள்ள 17 மாடிகளை கொண்ட 'வேய் குவான்' குடியிருப்பு கட்டடம் உள்பட பல கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்தப்படி தங்களது வ…
-
- 0 replies
- 341 views
-
-
பிரான்ஸ்: பயங்கரவாத குற்றங்களுக்கு குடியுரிமையை பறிக்கும் சட்ட விவாதம் துவக்கம் பிரான்ஸ் நாடாளுமன்றம் அவையின் தோற்றம் பிரான்ஸின் அரசியல்சாசனத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கான விவாதத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் துவங்கியுள்ளது. புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சாசனத்தில், பயங்கரவாத குற்றச் செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட இரட்டை குடியுரிமையுடைவர்களின் பிரெஞ்சுக் குடியுரிமையை நீக்குவதற்கான பரிந்துரையும் வைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆண்டு நம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து, அரசியல்சாசனத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் பலவற்றில் ஒன்றாக இது இருக்கிறது. புதிய அரசியல் சாசனமானது, ஜிகாதி அச்சுறுத்தல்…
-
- 0 replies
- 318 views
-
-
28 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தையை வரவேற்கும் இத்தாலிய நகரம் வட இத்தாலிய நகரான ஒஸ்டானாவில் பிறந்த குழந்தையை நகரே ஒன்றுகூடி விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது வடக்கு இத்தாலியில் உள்ள சிறிய நகரம் ஒன்று, 1980 க்கு பிறகு பிறந்துள்ள முதல் குழந்தையின் வரவை மகிழ்வுடன் கொண்டாடி வருகிறது. பீட் மாண்ட் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒஸ்டானா என்ற அந்த நகரின் மேயர், இந்த குழந்தையின் வரவு, தமது சிறு நகரின் ஒட்டுமொத்த சமூகத்தின் கனவு நனவானதை குறிப்பதாக தெரிவித்தார். கடந்த நூறு ஆண்டுகளில் அந்த பகுதியில் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. கடந்த வாரம் டூரின் மருத்துவமனையில் பிறந்த குழந்தை பாப்லோவின் வருகையை அடுத்து அந்த நகரில…
-
- 0 replies
- 459 views
-