உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
அமெரிக்காவின் ஃபீனிக்ஸை தாக்கிய வெப்ப அலை; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு. அரிசோனாவின் ஃபீனிக்ஸ் என்ற பாலைவன நகரத்தில் கடந்த 113 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் (38 டிகிரி செல்சியஸ்) அதிகமான வெப்பநிலை நிலவி வருகின்றது. அதிரகரித்த வெப்பநிலை காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை குறித்த பகுதியில் பரவியுள்ள காட்டுத் தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளதாகவும் இதனால் பல பிராணிகள் உயிரிழந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஃபீனிக்ஸ் மரிகோபா கவுண்டியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெப்ப அலை காரணமா…
-
- 0 replies
- 504 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 23 செப்டெம்பர் 2024, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா ஆகிய இருதரப்பும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் எல்லை தாண்டிய தாக்குதல்களை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவியது. போரிலிருந்து பின்வாங்குமாறு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன. இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்றுப்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சுமார் 150 ராக்கெட்டு…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீன செய்தியாளர் 21 செப்டெம்பர் 2024 "ஒரே கிராமம், இரு நாடுகள்" இப்படித்தான் சீனாவின் தென்மேற்கு எல்லையில் உள்ள யின்ஜிங் கிராமம் அறியப்பட்டது. மியான்மருடனான எல்லை "மூங்கில் வேலிகள், சாக்கடைகள் மற்றும் மண் மேடுகள்" கொண்டது என்று பழைய சுற்றுலா பலகை ஒன்று குறிப்பிடுகிறது. பெய்ஜிங் தனது அண்டை நாட்டுடன் கட்டமைக்க முயன்ற எளிதான பொருளாதார உறவின் அடையாளம் இது. ஆனால் இப்போது, பிபிசி பார்வையிட்ட எல்லை யுனான் மாகாணத்தின் ருய்லி மாவட்டத்தில் உயர்ந்த உலோக வேலியால் குறிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் முள்கம்பிகள் மற்றும் கண்காணிப்பு…
-
- 0 replies
- 409 views
- 1 follower
-
-
ஹிஸ்புல்லா நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை! இஸ்ரேல் இராணுவம் தனது போர் விமானங்களைக் கொண்டு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா (Hezbollah )நிலைகளின் மீது நேற்றைய தினம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) அறிக்கைகளின்படி, ஹிஸ்புல்லா அமைப்புக்குச் சொந்தமான சுமார் 1,000 ரொக்கெட் லாஞ்சர் பீப்பாய்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், ”நாட்டைப் பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் உள்கட்டமைப்பு மற்றும் இலக்குகள் மீதான தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளன. எனினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்…
-
- 1 reply
- 614 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கலீத் மிஷால், யஹ்யா அய்யாஷ், முகத்தை மறைத்தபடி இருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர் கட்டுரை தகவல் எழுதியவர், தௌபா கலிஃபி பதவி, பிபிசி நியூஸ் அராபிக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையாக ஹெஸ்பொலா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டன. இஸ்ரேலின் மேம்பட்ட கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ஹெஸ்பொலா அமைப்பினர் பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்ததன் காரணமாக டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். இது இஸ்ரேல் நடத்திய "திட்டமிட்ட தாக்க…
-
- 0 replies
- 409 views
- 1 follower
-
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு! வேலை செய்யும் இடங்களில் சாப்பாடு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையை உடலுறவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு ரஷ்ய மக்களுக்கு புட்டின் வலியுறுத்தியதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு இது மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது. இதனால் மக்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நம்முடைய முன்னோர்கள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற வரலாறு உண்டு எனவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு…
-
-
- 80 replies
- 4.5k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 SEP, 2024 | 02:14 PM கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்தவருடம் குறைக்கப்போவதாக தெரிவித்துள்ள கனடா அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த விதிமுறைகளை இறுக்கமாக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது. கனடாவில் உள்ள தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. இந்த வருடம் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு கனடாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையிலேயே புதிய அறிவிப்பினை கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பெருமளவானவர்கள் குடியேறுவது நாட்டின் வீட்டு வசத…
-
-
- 4 replies
- 521 views
- 1 follower
-
-
இஸ்ரேல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம்! பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன. மேலும் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400194
-
- 3 replies
- 254 views
- 1 follower
-
-
19 SEP, 2024 | 11:53 AM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தகவல்களை ஹக்செய்த ஈரான் அதனை ஜோபைடனின் பிரச்சார குழுவிற்கு அனுப்பியது என எவ்பிஐ தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோபைடன் போட்டியிட்டவேளை ஈரானை சேர்ந்த ஹக்கர்கள் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரகுழுவின் தகவல்களை திருடி வேண்டுகோள் விடுக்கப்படாத மின்னஞ்சல்களை பைடனின் பிரச்சாரத்துடன் தொடர்புடையவர்களிற்கு அனுப்பினார்கள் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம் பைடனின் பிரச்சார குழுவின் ஆர்வத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்தார்கள் 2024 ஜனாதிபதி தேர்தலில் தலையிட முயன்றார்கள் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. ஈரான் ஹக்கிங்கில் ஈடுபட்டு முக்கியமான தகவல்களை த…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
அமெரிக்க தேர்தலில் ஈரானின் செல்வாக்கு: ட்ரம்பின் தகவல்களைத் திருடிய ஹேக்கர்கள். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. குறித்த தேர்தலில் ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய ஜனாதிபதியான பைடனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர். எனினும் பின் நாட்களில் உடல் நலக்குறைவு காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் அறிவித்தார். இதனையடுத்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வர…
-
- 0 replies
- 205 views
-
-
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்திற்கு அருகில் இருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த பரப்புரையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது இருமுறை துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நியூயோர்க்கில் யூனியண்டாலே என்ற இடத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், அங்கிருந்த வாக…
-
- 1 reply
- 331 views
- 1 follower
-
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, டிரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். வாஷிங்டன் டி.சி. அமெரிக்கா அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். https://www.dailythanthi.com/News/World/usa-suspects-shoot-at-trumps-golf-course-1122421
-
-
- 56 replies
- 3.2k views
- 2 followers
-
-
அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டால் நேட்டோ எங்களுடன் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கருதுவோம் - புட்டின் 13 SEP, 2024 | 02:12 PM ரஸ்யா மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேற்குலக அமெரிக்க இராஜதந்திரிகள் தயாராக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புட்டின் இந்…
-
-
- 11 replies
- 792 views
- 1 follower
-
-
புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது! எக்ஸ். இ. சி. புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டத்தில் புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1399981 @Kapithan , @ரசோதரன் 😂
-
-
- 8 replies
- 798 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மிட்செல் ராபர்ட்ஸ் பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கொரோனா வைரஸின் புதிய திரிபால் மேற்கத்திய நாடுகளில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாக, எக்ஸ் சமூக வலைதள பயனர்கள் தெரிவிக்கின்றனர். குளிர் காலத்தில் வேகமாக பரவத்தக்க …
-
- 0 replies
- 375 views
- 1 follower
-
-
டொலரை கைவிட்டு புதிய கட்டண முறைக்கு செல்லும் பிரிக்ஸ்! பிரிக்ஸ் அதன் வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை ஒருங்கிணைக்காமல் ஒரு புதிய கட்டண முறையை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதிப்படுத்தினார். புதிய கட்டண முறையானது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படாது, இது முழுமையான நிதி அமைப்பாக செயல்படும் என்றும் அவர் மேலும் கூறினார். புதிய பிரிக்ஸ் கட்டண முறையானது உலகளாவிய நிதித்துறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதேநேரம், டொலர் வர்த்தகம் நிறுத்தப்படுமானால் அது அமெரிக்காவில் பல துறைகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பிரிக்ஸ் முன்னணி வளர்ந்த…
-
- 0 replies
- 859 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போகன்சீ வில்லா 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒரு அழகிய ஏரிக் கரையில் 17 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட பிரமாண்ட பாரம்பரிய மாளிகை ஒன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. இந்த மாளிகை துரதிர்ஷ்டவசமாக வரலாற்றில் மிகவும் கொடூரமான நபராக கருதப்பட்ட ஒருவருடையது. அவர் அடால்ஃப் ஹிட்லரின் நாஜி பிரசார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ். 2000ஆம் ஆண்டு முதல் இந்த வீடு கைவிடப்பட்ட சொத்தாகி விட்டது. அதை பராமரிக்க அரசுக்கு பெரும் தொகை செலவாகும், யாரும் அதை வாங்க விரும்பவில்லை. இருக்கும் ஒரே வழி, அதை யாருக்காவது கொடுப்பது மட்டும் தான்! ஜோசப் கோயபல்ஸின் கோடைகால ஓய்வு இல்லமாக இருந்த இந்த வீட…
-
- 0 replies
- 517 views
- 1 follower
-
-
வெள்ளத்தால் நைஜீரியாவில் 274 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தை அடுத்து அங்குள்ள சிறைச்சாலையில் இருந்து 270 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அனர்த்தத்தால் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் 1,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 281 கைதிகள் பாதுகாப்பான நிலையங்களுக்கு மாற்றப்பட்டபோது தப்பியோடியுள்ளனர் எனவும், அவர்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தப்பியோடியவர்களின் அடையாளங்கள், அவர்களின் விபரங்கள் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட…
-
- 0 replies
- 264 views
-
-
16 SEP, 2024 | 02:56 PM புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தினரால் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக தாய் நாடு திரும்பிய இந்திய இளைஞர்கள் கூறியுள்ளனர். ரஷ்யாவில் பாதுகாவலர் வேலை, உதவியாளர் வேலை என மோசடி கும்பல் இங்குள்ள 60 இளைஞர்களை ரஷ்யாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் ரஷ்யாவின் தனியார் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலர் டிரோன் தாக்குதலில் இறந்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த ஹமில் என்பவர் டிரோன் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அபாயமான சூழலில் சிக்கியுள்ளதை அறிந்த தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சுபியன் என்பவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தங்களை மீட்க மத்தி…
-
-
- 13 replies
- 748 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,METSUL METEOROLOG கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் அண்டோனியா அரௌஹொ பதவி, பிபிசி நியூஸ் பிரேசில் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரேசிலைச் சேர்ந்த 44 வயதான கால்நடை பண்ணை உரிமையாளர் டியாகோ க்ளூக், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றை முயற்சிக்க முடிவு செய்தார். தெற்கு பிரேசிலிய நகரமான பெலோடாஸில் உள்ள தனது வீட்டின் பின் புறத்தில் உள்ள தோட்டத்தின் மையத்தில் ஒரு சுத்தமான வெள்ளை வாளியை வைத்தார். கருப்பு மழை என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு பற்றிய எச்சரிக்கைகள் அப்போது வழங்கப்பட்டிருந்தன. "இந்த வாளியில் சேகரிக்கப்படும் நீர், கூரைகள் அல்லது சுவர்களில் இருந்து விழாமல், மேகங்களிலிருந்து நேரடியாக விழுவ…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளை அமெரிக்காவின் ஜோர்ஜியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தேர்தலில் குறுக்கீடு செய்தமை தொடர்பில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரச சட்டத்தரணிகள் மேற்படி வழக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி அறிவித்திருந்தார். 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஜோர்ஜியாவில் டொனால்ட் ட்ரம்ப்பின் தோல்வியை முறியடிப்பதற்குச் சதி செய்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் 14 இணை பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்…
-
-
- 3 replies
- 582 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 01:48 PM 1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் சீனாவின் ஷங்காய் நகரத்தை திங்கட்கிழமை (16) அதிகாலை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து பாரிய காற்றும் வீசியதோடு, பலத்த மழையுடன் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கிருந்து 400,000 க்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடு, விமானங்கள், படகுகள் மற்றும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் மூன்று நாள் இலையுதிர்கால கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஷாங்காய்க்கு தென்மேற்கே 170 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதால் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 180 க்கும் மேற்பட்ட விமானங்களை இரத…
-
- 0 replies
- 432 views
- 1 follower
-
-
ஈரான் (Iran) ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேல் (Israe) மீது பலஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), வடக்கு ஏமனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பெரும் பதிலடியை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். மத்திய இஸ்ரேலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவ்வாறான தாக்குதலை முன்னெடுத்த முதல் தடவையாக இது தெரிவிக்கப்படுகிறது. 2,040 கிலோமீற்றர் தூரம் இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு 2,040 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் ஹைபோசோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக ஹூதியின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா செரியா தெரிவித்…
-
- 0 replies
- 768 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் டிரம்ப், புஷ் இருவரும் மக்கள் வாக்குகளை குறைவாக பெற்றும் அதிபரானது எப்படி? படக்குறிப்பு, அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. 15 செப்டெம்பர் 2024, 07:02 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் அதில் மக்கள் வாக்குகளை அதிகம் பெற்ற வேட்பாளர், வெற்றியாளராக முடியாது. ஏனென்றால், வாக்காளர்கள் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களைத் தேர்ந்தெடுப்பது எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழுதான். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். …
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார் கட்டுரை தகவல் எழுதியவர், மாலு கர்சீனோ பதவி, பிபிசி செய்திகள் 14 செப்டெம்பர் 2024 சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. யுக்ரேன் குறித்து ஒரு உத்தியில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக கல…
-
- 1 reply
- 260 views
- 1 follower
-