Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லியில் அமைக்கப்பட உள்ள கலாம் அறிவுசார் மையத்துக்காக அவரது உடமைகளை வழங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவிற்கு பின் டெல்லியில் அவர் வாழ்ந்த இல்லத்தை அறிவுசார் மையமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை.அதற்கு பதிலாக அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட ராமேசுவரத்தில் பிரமாண்டமான அறிவுசார் மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனால் டெல்லியில் கலாம் இல்லத்தில் அவர் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள், ராமேசுவரத்தில் உள்ள கலாம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் கலாம் பெயரில் அறிவுசார் மையம் அமைக…

  2. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கடந்த 2004-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை தொடர்ந்து அவரது பத்தா கட்சியை சேர்ந்த மகமது அப்பாஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். ஆனால் அவரது படைகளுடன் ஹமாஸ் இயக்கத்தினர் கடுமையாக சண்டையிட்டு, காசா பகுதியை கடந்த 2007-ம் ஆண்டு கைப்பற்றினர்.அதைத் தொடர்ந்து, யாசர் அரபாத், ரமல்லா நகரில் வாழ்ந்து வந்த இல்லம் மூடப்பட்டு கிடக்கிறது. அந்த இல்லத்தில் யாசர் அராபத் நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.இதற்காக அந்த இல்லத்தை ஹமாஸ் ஆட்சியாளர்கள், யாசர் அராபத் கட்சியினரிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீனின் அனைத்து பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=144605&category=WorldN…

  3. ஆப்பிரிக்காவில் மூளைக்காய்ச்சலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி நடவடிக்கை அபார வெற்றி பெற்றுள்ளது என சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.காம்பியா முதல் எத்தியோப்பியா வரை உள்ள 16 நாடுகளில் மெனின்ஜைட்டிஸ்-ஏ எனும் மூளைக்காய்ச்சல் நோய்க்கெதிராக 2010-ம் ஆண்டு முதல் இதுவரை, 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு அந்தப் பகுதி முழுவதிலும் மொத்தமாக நான்கு பேருக்கு மட்டுமே மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.ஒரு காலத்தில் ஆப்ரிக்காவின் மேற்கு தொடங்கி கிழக்கு வரையிலான அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் தற்போது அங்கு மூளைக்காய்ச்சல் மரணங்களே ஏற்படாதத்து குறி…

  4. அவசர நிலைப்பிரகடனத்தை திரும்பப் பெற்ற மாலைதீவு அரசு! [Wednesday 2015-11-11 18:00] மாலத்தீவுகள் நாட்டில் அவசர நிலைப்பிரகடனம் திரும்பப் பெறுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.கடந்த வாரத்தில் மாலத்தீவில் அதிபர் மாளிகைக்கு அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யமீன் அவசரநிலையை பிரகடனம் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நாட்டில் பாதுகாப்பு நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் அவசரநில…

  5. இத்தாலிய ஓவியரின் நிர்வாண நங்கையின் விலை 170 மில்லியன் christies இந்த ஓவியம் இதுவரை ஏலத்தில் விற்கப்பட்டதில்லை இத்தாலிய ஓவியர் அமீடியோ மோடிக்லியானி தீட்டிய நிர்வாண நங்கை ஓவியம் 170 மில்லியன் டாலர்களுக்கு நியூயார்க் நகரில் ஏலம் போயுள்ளது. இத்தாலிய ஓவியர் அமீடியோ மோடிக்லியானி தீட்டிய நிர்வாண நங்கை ஓவியம் 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது. இத்தாலியர் ஒருவர் தீட்டிய ஓவியம் இந்த அளவுக்கு விலைபோயுள்ளது இதுவே முதல் முறை. நியூயார்க்கிலுள்ள கிறிஸ்ட்டி ஏல நிறுவனத்தின் அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஏலத்தில் ஓவியத்தை வாங்க பெரும் போட்டி நிலவிய சூழலில் ஒன்பது நிமிடங்கள…

  6. தொடரும் துயரம்: துருக்கியில் படகு கவிழ்ந்து அகதிகள் 14 பேர் பலி படம்: ராய்ட்டர்ஸ். துருக்கியின் ஏஜியன் கடல் பகுதியில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் உட்பட 14 பேர் மூழ்கி பலியாகியுள்ளனர். இவர்கள் கிரீஸ் நாட்டை அடைய முயற்சி மேற்கொண்டனர். இவர்கள் வந்த படகு கனக்கலே என்ற இடத்திலிருந்து கிரீஸின் லெஸ்பாஸ் தீவு நோக்கி வந்த போது இந்த துயரம் நிகழ்ந்தது. துருக்கி கடலோரக் காவற்படையைச் சேர்ந்தவர் சடலங்களை மீட்டனர். இதில் மேலும் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக டோகன் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் கர்ப்பவதி ஒருவரும் அடங்குவார். இவரது உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித…

  7. மோடி - ஒபாமா புதிய ஹாட்லைனில் தொடர்பு கொண்டு பேச்சு ஒபாமா, மோடி | கோப்புப் படம் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் முதல் முறையாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ஹாட்லைனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. துருக்கியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசித்ததாக அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் பருவநிலையை சமாளிப்பது தொடர்பாக இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள நடவடிக…

  8. இஸ்ரேல் ராணுவ வீரரைக் கத்தியால் குத்த முயன்ற பெண் சுடப்பட்டார் (வீடியோ) ஜெருசலேம்: ஜெருசலேம் அருகே இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்த முயன்ற பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஜெருசலேமில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கரை பெய்டர் லிலிட் பகுதியில், பாலஸ்தீனிய பெண் ஒருவர் சாதாரணமாக நடந்து வந்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் யூத நகரத்திற்குள் நுழைய ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையை காட்ட வேண்டும். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கிரிடென் பெர்கர் என்ற இஸ்ரேல் வீரர் , அவரிடம் அடையாள அட்டையைக் கேட்கிறார். அடையாள அட்டையை அந்த பெண் காட்டுகிறார்.…

  9. ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோகினூர் வைரம்: பிரிட்டன் அரசி மீது வழக்கு! இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தை திருப்பித் தரக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில், பிரிட்டன் அரசிக்கு எதிராக வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம், 105 கேரட் எடை கொண்டது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம், பிரிட்டன் அரசர் நான்காம் ஜார்ஜ் காலத்திலிருந்து ( 1937-ம் ஆண்டு முதல்) பிரிட்டன் அரசிகளின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது. தற்போது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மணி மகுடத்தில் கோகினூர் வைரம் உள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு முதல் அவரது கிரீடத்தில் கோகினூர் வைரம் இடம் பெற்றுள்ளது. தற்போது பிரிட்டன் அரசுரிமை பொருளா…

  10. மேற்கு சஹாராவில் சமரசத்துக்கு இடமில்லை சர்ச்சைக்குரிய மேற்கு சஹாராவின் ஆளுகை குறித்தான சமசரங்கள் எவற்றுக்கும் இடம் கிடையாது எனவும், மொரோக்கோவின் கீழ் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனவும், அந்நாட்டின் அரசர் மொஹமட் ஏஐ தெரிவித்துள்ளார். மேற்கு சஹாரா மீதான ஆளுகை தொடர்பாக பல நாடுகள் தங்களது கோரிக்கையை விடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக நான்கு தசாப்தங்களாகக் குழப்பம் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பான பேரம் பேசலை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை, அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே, பிராந்தியத்துக்குத் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனத் தெரிவித்த அரசர், 'மொரோக்கோ வழங்கக்கூடிய அதிகபட்ச தீர்வு இதுதான்" எனத் தெரிவித்தார். …

  11. நானும் ஒரு பெண்ணியவாதி' - நடிகை எம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த மலாலா எம்மா வாட்சன் - மலாலா | கோப்புப் படம் பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற யூசப்சாய் மலாலா, தான் ஒரு பெண்ணியவாதி என்று அறிவித்துக் கொள்ள, நடிகை எம்மா வாட்சன் காரணம் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐநா-வில் உலகத் தலைவர்கள் முன்பு எம்மா வாட்சன் ஆற்றிய உரை தன் மனதை மாற்றியதாக யூசப்சாய் மலாலா தெரிவித்தார். மலாலா தன்னைப் பற்றிய ஆவணப்படத் திரையிடல் ஒன்றில் கலந்து கொள்ள லண்டன் வந்த போது எம்மா வாட்சனிடம் இவ்வாறு தெரிவித்தார். “பெண்ணியவாதி என்பது ஒரு சிக்கலான வார்த்தை. நான் முதன்முதலில் இந்த வார்த்தையை கேட்ட போது எதிர்மறைக் கருத்துகள் எழுந்தன. சில நேர்ம…

  12.  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும்: கமரூன் தனது சீர்திருத்தக் கோரிக்கைகள் கேட்கப்படாது விட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருப்பது தொடர்பில் தான் மீண்டும் சிந்திக்க வேண்டி ஏற்படும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், ஐரோப்பியத் தலைவர்களை எச்சரிக்கவுள்ளார். பிரித்தானியாவுக்காக வேண்டப்படும் மாற்றங்கள் தொடர்பில் ஐரோப்பிய சபையின் தலைவருக்கு கடிதம் வரையவுள்ள, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், சமகாலத்தில் நாளை தனது எச்சரிக்கையையும் விடுக்கவுள்ளார். டொனால்ட் டஸ்க்குக்கு வரையப்படவுள்ள மேற்படிக் கடிதம் மூலம், தனது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமை தொடர்பில் முறையாக பே…

  13. அரவிந்த் கேஜ்ரிவால். | கோப்புப் படம்: சுசில் குமார் வர்மா. பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணியின் தோல்வி, பிரதமர் மோடியின் அரசின் செயல்பாடுகள் மீதான தீர்ப்பு என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜ்ரிவால் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆட்சி மற்றும் அவரது செயல்பாடுகள் மீதான தீர்ப்பே பிஹார் தேர்தல் முடிவுகள். ஆளும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் வெற்றி, மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோரது அராஜகம் மற்றும் கர்வத்தை சுக்குநூறாக்கியுள்ளது. வெறுப்பின் மீது கட்டப்படும் அரசியலை பிஹார் மக்கள் அனுமதிக்கவில்லை. நாட்டை சகிப்பின்மை…

  14. மகா கூட்டணிக்கு மகத்தான வெற்றி; பிஹாரில் மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார் நிதிஷ் குமார் பிஹாரில் நிதிஷ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் | படம்: ரஞ்சித் குமார் பிஹார் மாநில சட்டப்பேரவையின் 243 தொகுதிகளில் 170-க்கும் மேலான இடங்களை வசப்படுத்தும் நிதிஷ் - லாலு - காங்கிரஸ் மெகா கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். பிரதமர் மோடியின் பிரச்சார யுக்தியும், அமித் ஷாவின் தேர்தல் வியூகங்களும் பிஹாரில் கைகொடுக்கவில்லை என்பது தெளிவானது. | இணைப்பு - பிஹார் தேர்தல் முடிவுகள் - செய்தித் தொகுப்பு | நாடு முழுவதிலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட பிஹார் மாநில சட்டப்பே…

  15. டைட்டானிக் 'மெனு' ஒரு லட்சத்து 19 ஆயிரம் டாலருக்கு ஏலம் போனது other டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு மூழ்கியது AP ஜான் எஃப் கென்னெடி 1963-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார் டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்னதாக அளிக்கப்பட்ட கடைசி இரவு விருந்தின் மெனு ஒரு லட்சத்து 19 ஆயிரம் டாலருக்கு ஏலம் போயுள்ளது. டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்னதாக கடைசியாக அளிக்கப்பட்ட இரவு விருந்தின் உணவுப் பட்டியல் (மெனு) கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரம் டாலருக்கு அமெரிக்காவில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. சூப்பர் வகுப்பு பயணிகளுக்கு அளிக்கப்பட்ட மெனுவ…

  16. தாவூத்தை நெருங்கும் இந்தியா: காப்பாற்ற தீவிரம் காட்டும் பாகிஸ்தான்! புதுடெல்லி: தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்திய உளவுத்துறை நெருங்கி விட்டதாகவும், ஆனால், அவரை காப்பாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 23 ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளில் பல பெயர்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன், ஆஸ்திரேலியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இந்தோனேசியா வந்தபோது பாலி நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, இந்திய சி.பி.ஐ. சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், தாவூத் இப்ராஹிம் குறித்த பல்வேறு தகவல்களை சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார். …

    • 1 reply
    • 453 views
  17. குண்டுவெடிப்பால் சிதறியது ரஷ்ய விமானம்: கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்த நிபுணர்கள் தகவல் எகிப்தின் சினாய் பகுதியில் சிதறி விழுந்த ரஷ்ய விமானத்தின் பாகங்கள் எகிப்தின் சினாய் பகுதியில் விழுந்த ரஷ்ய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை, குண்டு வெடிப்பால்தான் அந்த விமானம் சிதறி விழுந்துள்ளது என்று கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரஷ்யாவில் இருந்து எகிப்துக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ரத்து செய்தார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்த 22-வது நிமிடத்த…

  18. ஏவுகணை வீச்சில் இருந்து தப்பிய இங்கிலாந்து விமானம் Krish November 07, 2015 Canada இங்கிலாந்தின் லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி சென்ற தாம்சன் விமானம் ஒன்று ஆயிரம் அடி தொலைவில் தன்னை நோக்கி வந்த ராக்கெட் ஒன்றிடமிருந்து விமானியின் உடனடி நடவடிக்கையால் மோதலுக்கு உட்படாமல் தப்பியது. அதன்பின் விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியதுடன் மரணத்திற்கு மிக நெருங்கிய இந்த சம்பவம் குறித்து பயணிகளிடம் தகவல் எதுவும் தெரிவிக்கப்பட்வில்லை. எகிப்து நாட்டில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 224 பேரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு 2 மாதங்களுக்கு முன் இங்கிலாந்து ஜெட் வ…

  19. ரஷ்ய அதிபர் புதின் நண்பர் அமெரிக்க ஹோட்டலில் மர்ம மரணம்: பரபரப்பு தகவல்கள்! வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நெருங்கிய நண்பரும், பிரபல தொழிலதிபருமான மிகயீல் லெஸின், அமெரிக்காவின் நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதினின் மிக நெருங்கிய நண்பர்களில் குறிப்பிடத்தக்கவரான மிகயீல், ரஷ்ய அரசின் ஊடகத்துறையில் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் என்பதும், இவரது பதவி காலத்தில் ரஷ்யாவில் ஊடகங்களுக்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 1999 முதல் 2004 ம் ஆண்டுவரை அந்நாட்டின் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி துறையின் அமைச்சராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார். ரஷ்ய அரசுக்கு சொந…

  20. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் 2-வது திருமணம் முறிவு இம்ரான் கான் - ரேஹம் கான். | கோப்புப் படம்: பிடிஐ. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீர்ரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கானின் 2-வது திருமணம் முறிவடைந்தது. ரேஹம் கான் மற்றும் இம்ரான் ஆகியோர் பரஸ்பர புரிதல் அடிப்படையில் விவாகரத்து செய்து கொண்டனர். முதலில் பிரிட்டனைச் சேர்ந்த ஜெமீமா கோல்ட்ஸ்மித் என்பவரை இம்ரான் திருமணம் செய்து கொண்டார். 9 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2004-ம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. இவர்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். தற்போது டிவி நிருபர் ரேஹம் கானுடனான திருமண உறவு 10 மாதகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பரஸ்பர புரிதல் அடிப்படையில் முடிவுக்கு வந்தது. இம்ரான் கானின் …

  21. சிரியாவில் 65,00 பேர் காணாமல் போயினர் 2011ஆம் ஆண்டில் சிரிய சிவில் யுத்தம் ஆரம்பித்திருந்து, 65,000க்கும் மேற்பட்டோர் , அரசாங்கத்தினால் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்ப்புக் குரலைக் கொண்டுள்ளோரையே அரசாங்கம், இவ்வாறு கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில், காணாமல் போகச் செய்வதாக அச்சபை மேலும் தெரிவிக்கிறது. சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள 'சிறைக்கும் கல்லறைக்கும் நடுவில்" என்ற தலைப்பில், சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே, இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கப் பாதுகாப்புப் படைகளின் நான்கு பிரிவுகளான இராணுவப் புலனாய்வுப் பிரிவு, விமானப்படை புலனாய்வுப் பிர…

  22. 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீன பீங்கான் குடுவை ரூ.1.15 கோடிக்கு ஏலம் சீனாவின் பழங்கால பீங்கான் குடுவை ஒன்று, ரூ.1.15 கோடிக்கு இங்கிலாந்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் உள்ள பீட்டர் பிரான்சிஸ் என்ற ஏல நிறுவனம் கடந்த புதன்கிழமை அரிய பொருட்களை ஏலம் விட்டது. இதில் சீனாவின் பழங்கால பீங்கான் குடுவை ஒன்று ஏலம் விடப்பட்டது. அழகிய பூ வேலைப்பாடுகளுடன் இந்த குடுவை 19 சென்டிமீட்டர் உயரம் உடையது. அதன் இரு பக்கமும் யானை தலை போன்ற வடிவில் சிறிய கைப்பிடிகள் உள்ளன. அடிபாகம் பெருத்தும் வாய் பாகம் குறுகியும் இருக்கும் சீன பீங்கான் குடுவைகள் மிகவும் பிரபலமானவை. பார்ப்பதற்கு ஆங்கில எழுத்தான 'S' போல இருக்கும். அந்த வகையை சேர்ந்த இந்த சீன …

  23. பஹ்ரைனில் 47 தீவிரவாதிகள் கைது: ஈரான் ஏவிவிட்டதாக குற்றச்சாட்டு நாசவேலையில் ஈடுபடும் நோக்கத் துடன் தங்கள் நாட்டில் செயல்பட்டு வந்த, ஈரானின் தீவிரவாத முகாமை அழித்துவிட்டதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. தீவிரவாத முகாமில் இருந்த 47 தீவிரவாதி களையும் கைது செய்திருப் பதாக அறிவித்துள்ளது. பஹ்ரைன் நாட்டின் உள்வி வகாரத்தில், அண்டை நாடான ஈரான் தலையிட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பஹ்ரை னுக்குள், பயிற்சி பெற்ற தீவிர வாதிகளை அனுப்பி, அந்நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கில் ஈரான் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வந்தது. இந்த சூழலில், தலைநகர் மனாமா மற்றும் அதைச் சுற்றி யுள்ள புறநகர் பகுதிகளில், நேற்று பஹ்ரைன் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுப…

  24. லிங்கனின் கடிதம் ரூ.14.5 கோடிக்கு ஏலம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு தன் கைப்பட 10 வயது சிறுவனுக்கு எழுதிய கடிதம் 22.13 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.14.5 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்டது. 1865-ம் ஆண்டு, லிங்கன் தனது உள்துறை அமைச்சர் ஜான் யூசரின் மகன் லின்டன் யூசருக்கு இக்கடிதத்தை கைப்பட எழுதி, கையொப்பமிட்டுள்ளார். தனது இரண்டாவது தொடக்க உரையின் கடைசி பகுதியை அதில் லிங்கன் எழுதியுள்ளார். ஹெரிடேஜ் ஏல மையத்தில் நேற்று முன்தினம் விடப்பட்ட ஏலத்தில் இக்கடிதம் சுமார் ரூ.14.5 கோடிக்கு எடுக்கப்பட்டது. ஏலத்தில் எடுத்தவர் தனது பெயரை வெளியிட விரும்ப வில்லை. இதுபோன்று 5 கடிதங்களே இருப்பதால் இது மிகவும் அரிதானதாகக் க…

  25. கனடாவின் புதிய பிரதமராக ஜஸ்டின் ட்ருடியூ பதவியேற்றார் கனடாவின் ஒட்டாவா நகரில் 23-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ஜஸ்டின் ட்ருடியூ. படம்: ஏஎப்பி கனடா நாட்டின் 23-வது பிரதமராக விடுதலை கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ருடியூ (43) நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். ஒட்டாவா நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் (ரிடியூ அரங்கு) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜஸ்டினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரெஞ்சு மொழி ஆசிரியராக பணியாற்றிய இவர், கடந்த 2008-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். 43 வயதான ஜஸ்டின், கனடா வரலாற்றில் 2-வது இளம் வயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவரது தந்தை பீரே ட்ருடியூ கடந்த 1968 முதல் 1984 வரை (சிறிது இடைவெளி விட்டு) பிரதமராக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.