Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1,400 கோடி அபராதம் வாஷிங்டன் : இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம், ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமார். இந்த இருவரும் ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி பல்கலையில் பி.டெக்., மின்னணு தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள். இவர்களை உள்ளடக்கிய 4 பேர் கொண்ட குழு, அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலையின் கீழ் ச…

  2. லண்டன் பிக் பென் கடிகார மணியோசை நிறுத்தப்படுகிறது உலக அளவில் நன்கு அறியப்பட்ட லண்டன் Big Ben என்று அழைக்கப்படும் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வானுயர் மணிக்கூண்டு கோபுர கடிகாரத்தின் மணியோசை நிறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. உலக அளவில் நன்கு அறியப்பட்ட லண்டன் Big Ben என்று அழைக்கப்படும் மணிக்கூண்டு கோபுர கடிகாரத்தின் மணியோசை நிறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வானுயர் மணிக்கூண்டு கோபுரம் மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகவும், உடனடியாக அதற்கு பராமரிப்புப் பணிகள் செய்யவேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று பரிந்துரை செய்திருக்…

  3. 4 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை, 3 யூதர்களுக்கு கத்திக் குத்து: இஸ்ரேலில் தொடரும் பதற்றம் ஜெருசலேம் நகரில் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இஸ்ரேல் போலீஸார். இஸ்ரேலின் ஜெருசலேம், ஹீப்ரான் நகரங்களில் 3 யூதர்கள் மீது நேற்று கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தகைய தாக்குதலில் ஈடுபட்ட 4 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் யூதர்களை குறிவைத்து பாலஸ்தீன போராட்டக்காரர்கள் கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 8 யூதர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் போலீஸார், ராணுவ வீரர்கள் மேற்கொண்ட பதிலடியில் 39 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹீப்ரானில் நேற்றுமுன்தினம் செய்தியாளர் வேட…

  4. சவுதியில் ஐஎஸ் தீவிரவாதி தாக்குதல்: 5 பேர் பலி சவுதி அரேபியாவில் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். கிழக்கு மாகாணத்தின், காட்டிஃப் நகரம், சயிஹத் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை ஷியா முஸ்லிம்களின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அரங்கில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் ஒருவர் கூட்டத்தினரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 1 பெண் உட்பட 5 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த நபரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப் புடன் தொடர்புள்ளதாகசவுதி உள்துறை அமைச்சகம் தெரி வித்தது. இதனிடையே ஐ.எஸ். அமைப்பின் பஹ்ரைன் பிரிவு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற் றுள்ளது. ஷியா ம…

  5. குடி­யேற்­ற­வா­சி­களை அதிர்ச்­சி­ய­டைய வைத்த கரடி பிரித்­தா­னி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக பிர­வே­சிக்கும் முக­மாக லொறி­யொன்றின் பின் பக்­கத்தில் அத்­து­மீறி ஏற முயன்ற குடி­யேற்­ற­வா­சிகள், அங்கு கூண்டில் அடைக்­கப்­பட்ட நிலையில் அபா­ய­க­ர மான கர­டி­யொன்று இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் பிரான்ஸின் காலெயிஸ் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ ளது. செவ்வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் வியா ­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. மேற்­படி கர­டி­யா­னது அந்த லொறியில் ரஷ்­யா­வி­லி­ருந்து பிரித்­தா­னிய யோர்க் ஷிய­ரி­லுள்ள மிரு­கக்­காட்­சி­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட போதே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. காலெ­யிஸில் …

  6. 48 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்த பெண்ணுக்கு வெளியேறும் அச்சுறுத்தல் bbc 48 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்த பெண்ணுக்கு வெளியேறும் அச்சுறுத்தல் பிரிட்டனில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் ஒரு பெண்ணை நாட்டைவிட்டு வெளியேற வேண்டிவரும் என்று உள்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் பெண் ஒருவரை தொடர்பு கொண்ட பிரித்தானிய உள்துறை அலுவலகம், குறித்த பெண் தற்போது சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவதாகவும், ஆதலால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம் எனவும் அறிவித்துள்ளது. லன்காஷயரில் - பேர்ன்லி என்ற இடத்தை சேர்ந்த வின்னி பேர்க்கின்ஹெட், 1967 இல் மலேஷியாவிலிருந்து தனது தாயுடன், தாயின் கடவுச்சீட்டில் பதியப்பட்டு, அவருடன் வந்துள்ளார். அண்மையி…

  7. 'குடியேறிகளுக்கு ஆதரவான மேயர் வேட்பாளருக்கு கத்திக்குத்து' bbc ஹன்ரியட் ரெக்கர் ஜெர்மனியில் குடியேறிகளுக்கு ஆதரவான பெண் அரசியல்வாதி ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளானதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. ஜெர்மனியில் குடியேறிகளுக்கு ஆதரவான பெண் அரசியல்வாதி ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளானதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. ஜெர்மனிய நகரமான கொலோனில், உள்ளூர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக மேயர் வேட்பாளரை கத்தியால் குத்தியவர் இனவெறி நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதாக ஜெர்மன் போலீஸார் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான குடியேறிகளை அனுமதிக்கும் ஜெர்மன் அரசின் கொள்கைக்கு தாக்குதலாளி எதிரானவர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கொலோனுக்கு வரும் குடியேறிகளுக்கு தங்க இடம் அளிக்கும…

  8. அகதிகளை வரவேற்றுப் புகலிடமளிக்கும் யேர்மனிபற்றி பரபரப்பான செய்திகள் வெளிவரும் இவ்வேளையில், அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள்பற்றிய செய்திகள் மிகக்குறைந்தளவிலேயே வெளிவருகிறது, இந்நிலையில் லூட்விக்போர்க் நகரச் செய்திப் பத்திரிகையொன்று யேர்மனியிவிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள்பற்றிய கணக்கு ஒன்றைத் தற்போது வெளியிட்டுள்ளது. ஆண்டு: திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் தொகை: 2000 35444 2002 29036 2004 23334 2006 13894 2010 7558 2014 10884 2015 8178 தை - ஆனிமாதம்வரை. 2000ம் ஆண்டிற்கு முதலும், மற்றும் பின்வரும் ஆண்டுகள்பற்றிய கணக்குகளையும் அப்பத்திரிகை வெளியிடவில்ல…

    • 0 replies
    • 503 views
  9. இரட்டை கோபுர தாக்குதலில் புஷ்ஷுக்கு தொடர்பு: டோனால்ட் ட்ரம்ப் டோனால்ட் ட்ரம்ப். | கோப்புப் படம். அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதலில் அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு இருப்பதாக அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் கூறினார். 2016ல் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறினார். அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். அதனை விவரிக்குமாறு செய்தியாளர் கேட்டபோது, அப்போதைய அதிபர் அவர் தான். அதில் நிச்சயம் அவர் சம்மந்தப்பட்டுள்ளார் என்றார். அமெரிக்க அதிபர் த…

  10. ஐரோப்பாவுக்குள் வரும் குடியேறிகளைத் தடுக்க துருக்கி இணக்கம் bbc ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கிப் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது ஐரோப்பாவுக்குள் பெருந்தொகையான குடியேறிகள் வந்துகுவிவதை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு துருக்கி இணங்கியுள்ளது. ஐரோப்பாவுக்குள் பெருந்தொகையான குடியேறிகள் வந்துகுவிவதை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு துருக்கி இணங்கியுள்ளது. பெரும் நிதியுதவிகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியின் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரசல்ஸில் …

  11. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்குகிறது ரஷ்ய கடற்படை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக விரைவில் ரஷ்ட கடற்படை தாக்குதல் நடத்தும் என்று மூத்த கடற்படை அதிகாரி ஆண்ட்ரே கர்டாபோலவ் தெரிவித்துள்ளார். சிரியா, இராக்கில் பெரும் பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி அரசை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போரிட் டாலும் சிரியாவின் தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. இந்நிலையில் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படை சிரியாவில் முகாமிட்டுள்ளது. சில வாரங்களாக ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய விமானப் படை தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது…

    • 3 replies
    • 1.8k views
  12. யூதர்களின் புனிதத் தலம் எரிப்பு: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் முற்றுகிறது படம்: ராய்ட்டர்ஸ். இஸ்ரேல் நாட்டில் யூதர்களின் புனித தலத்தை பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதமாக யூதர்கள் மீது பாலஸ்தீன போராட்டக்காரர்கள் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதன்படி ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் யூதர்களுக்கு எதிராக கத்திக் குத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை 7 யூதர்கள் உயிரிழந்துள்ளனர். நுற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம், போலீஸாரின் பதிலடி தாக்குதல்களில் 30 ப…

    • 12 replies
    • 2.2k views
  13. புக்கர் பரிசை வென்ற முதல் ஜமைக்கன்! ஆங்கில இலக்கிய உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'மேன் புக்கர்' பரிசை இந்த ஆண்டு ஜமைக்காவை சேர்ந்த மர்லான் ஜேம்ஸ் என்பவர் வென்றுள்ளார். 5000 பவுண்ட் பரிசு தொகையைக் கொண்ட இந்த விருதைப் பெரும் முதல் ஜமைக்கன், மர்லான் ஜேம்ஸ் ஆவார். A Brief History of Seven Killings என்கிற இவரது புத்தகத்திற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. தனது முதல் நாவலை 70 பதிப்பாளர்கள் நிராகரித்தப் பின்னர், எழுதுவதையே கொஞ்ச காலம் விட்டு விட்ட ஜேம்ஸ், இன்று உலகின் மிகச் சிறந்த எழுத்தாளருக்கான புக்கர் பரிசை தட்டி சென்றுள்ளது விடாமுயற்சிக்கு கிடைத்திருக்கும் விஸ்வரூப வெற்றி. 1969 லிருந்து வழங்கப்பட்டு வரும் இந்த புக்கர் பரிசு இங்கிலாந்து, ஸ்காட்லான்ட், அயர…

  14. ரஷ்யா, அமெரிக்க நாடுகள் மீது புனிதப்போர்: ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடி! டமாஸ்கஸ்: சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய, அமெரிக்க நாடுகள் மீது நம் இனத்தினர் புனிதப்போர் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அழைப்பு விடுத்து உள்ளது. மேற்கு ஆசிய நாடான சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் கிளர்ச்சி தொடங்கியது. அதிபர் ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான சண்டையில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் ஆதரவு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு முக்கிய நகரங்களை தங்கள் கட…

  15. உலகிலேயே எந்த நாட்டில் வசிப்பவர்கள் மிகவும் பணக்காரர்கள் ? சுவிஸ் வங்கி வெளியிட்ட அறிக்கை [ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2015, 09:20.21 மு.ப GMT ] சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள் தான் உலகிலேயே மிகவும் வசதியானவர்கள் என்பது அந்நாட்டின் வங்கி ஒன்றின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. சுவிஸ் நாட்டின் சூரிச்சை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிரெடிட் சுயிஸ் (Credit Suisse) என்ற நிறுவனம் உலகில் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் வசதியானவர்கள் என்பது குறித்த 2015ஆம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்கள் சராசரியாக 567,100 டொலர் சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளனர் அடுத்த இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அந்நாட்டில் வசிப்பவர்களின் சராசரி …

  16. ஆஸ்திரேலியாவில் உள்ள காட்டுப்பூனைகளில் சுமார் 20 லட்சம் பூனைகளைக் கொல்ல அரசு எடுத்திருக்கும் முடிவை ஆஸ்திரேலிய அரசு நியாயப்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 2 கோடி காட்டுப்பூனைகள் இருக்கின்றன. இவைகள் நாட்டிற்கு சொந்தமான, அழிவின் அபாயத்திலிருக்கும் சுமார் 120க்கும் மேற்பட்ட விலங்கினங்களை அச்சுறுத்துவதாகவும் அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு கூறுகிறது. பிரெஞ்சு நடிகை பிரிஜிட் பார்தோவும் பிரிட்டிஷ் பாடகர் மோரிசியும் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு ஒரு "விலங்கினப் படுகொலை" என்று பிரிஜிட் பார்தோ வர்ணித்திருந்தார். இந்த பூனைகளைக் கொல்லும் முடிவு ஒரு "முட்டாள்தனமானது" என்று கூறிய மோரிசி, இந்த பூனைகள் ஜிம்பாப்வேயி…

    • 7 replies
    • 906 views
  17. வென்றவருக்கே வேட்டையின் பரிசுகள் அனைத்தும். வெள்ளை ஆர்டிக் நரியை சிவப்பு நரி கொல்லும் இந்தப் படத்துக்கு முதல் பரிசு கடுமையாக மோதும் நரிகளின் படம் ஒன்று 2015ஆம் ஆண்டுக்கான வன விலங்குப் புகைப்படக் கலைஞர் விருதை , டான் குடோஸ்கிக்கு பெற்றுத் தந்திருக்கிறது. "இதுதான் என் வாழ்க்கையிலேயே நான் எடுத்த மிகச் சிறந்த படம்", என்று பிபிசியிடம் கூறினார் டான். "நரிகளின் தலைகள், உடல்கள் மற்றும் வால்கள்-- ஏன் அவைகளின் முகங்களின் தெரியும் உணர்ச்சிகள் கூட ஒழுங்காக இந்தப் புகைப்படத்தில் வந்திருக்கின்றன" என்கிறார் அவர். " இரு நரிகளின் கதை" என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படம் ஒன்றும் அவ்வளவு ரத்தக்களறியானதாகவும் வெளிப்படவில்லை. இந்தப் படத்தை முதன் முதலாகப் பார்க்கும்போது ஏதோ இந்த சிவப்பு நரி தன…

  18. பின் லேடன் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தினார் பாக். முன்னாள் அமைச்சர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது அப்போதைய அரசுக்கு நன்றாக தெரியும் என்றும் அவனை மறைவான இடத்தில் பதுங்கியிருக்குமாறு கூறி, விருந்தாளியாகவே நடத்தினோம் என்றும் பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் புறநகரில் பின் லேடன் பதுங்கியிருந்த போது, அமெரிக்க இராணூவம் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றது. இந்த சம்பவத்திற்கு போது, பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது எங்களுக்கு தெரியாது என அந்நாட்டு அரசு தெரிவித்து வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் யுசுப் ராஸா கிலானியின் அமைச்சரவையில் 2008 முதல் 2012 வரை இராணுவ அமைச்சராக …

  19. மலேசிய விமானம் எம்.ஹெச். 17 ரஷ்யாவில் செய்த பக் ஏவுகணையால் தாக்கப்பட்டது: விசாரணை அறிக்கை ஹேக்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 ரஷ்யாவில் செய்யப்பட்ட பக் ஏவுகணை வீசித் தான் தாக்கப்பட்டுள்ளது என்று நெதர்லாந்து தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிளம்பியது. விமானம் உக்ரைன் வான்வெளியில் செல்கையில் அது பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானம் வெடித்துச் சிதறியது. அதில் இருந்தவர்கள் அனைவரும் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து நெதர்லாந்து தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. அந்…

  20. அண்மையில் பிரித்தானிய ஆளும் பழமைவாதக் கட்சி பேராளர் மாநாட்டில்.. பிரித்தானியாவின் அகதிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும்.. அகதி விசா நடைமுறைகளில் துஷ்பிரயோகத்தை குறைக்கும் வகையில் அது இருக்கும் என்றும்.. அகதி அந்தஸ்து கிடைத்தாலும் நிரந்தர வதிவுரிமை என்பது எனி எல்லாருக்கும் சாத்தியமாகும் என்று கூற முடியாது என்றும்.. அகதி அந்தஸ்து எந்த நாட்டுக்கு எதிராகக் கோரப்பட்டதோ அந்த நாட்டில் நிலைமைகள் முன்னேறும் பட்சத்தில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் அங்கு திருப்பி அனுப்பப்படக் கூடிய வகையில் மாற்றங்கள் வர உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரசா மே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். The overhaul also includes a new system of "safe return reviews" so asylum seekers…

  21. பிரிட்டனில் 'மோடி எக்ஸ்பிரஸ்' பேருந்து சேவை நியூயார்க் விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி புறப்பட்டபோது. | படம்: பிடிஐ பிரதமர் நரேந்திர மோடியின் பிரிட்டன் பயணத்தை சிறப்பிக்கும்விதமாக, லண்டனில் ஒரு மாத காலத்துக்கு 'மோடி எக்ஸ்பிரஸ்' பேருந்து சேவை தொடங்கப்பட்டது. நவம்பர் 12 முதல் 14ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், லண்டன் வாழ் இந்தியர்கள் பயன்பெறும் வகையில், மோடியின் வருகையை முன்னிட்டு 'மோடி எக்ஸ்பிரஸ்' பேருந்து சேவை தொடங்கப்பட்டது. ஒரு மாத காலத்துக்கு இயங்கும் இந்த பேருந்து சேவை மோடியின் பயண இடங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும். இதே போல தற்காலிக ரயில் சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது. பிரிட்டனில் அயல் நாட்டுப் பிரதம…

  22. சிரியாவில் ரஷ்ய தூதரம் மீது தாக்குதல் நடந்ததால் பதற்றம் ரஷ்ய தூதரகம் வெளியே ஆசாத் மற்றும் புடினுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த பேரணி. |கோப்புப் படம்: ஏஎப்பி. தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது 2 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. சிரியாவில் அமைந்துள்ள ரஷிய தூதரகத்தின் மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியிலிருந்து ராக்கெட்டுகள் வந்ததால் சம்பவத்துக்கு அவர்களின் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு அளித்தார். தொடர்ந்து ஐ.…

  23. எழும்புக் கூடுகளுடன் விமான பாகம் மீட்பு - மாயமான மலேஷிய விமானமா? தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தெற்கு உபியான் டாவி-டாவி அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில் மலேசிய நாட்டு கொடி வரையப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள் ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 8-ம் தேதி கடலில் விழுந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேர் என்ன ஆனார்கள்? என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. ஆனால், விமானத்தின் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கிடையில் பி…

  24. குழந்தைகளிடம் போர்கள் ஏற்படுத்தும் தாக்கம் ( மனதை உருக்கும் வீடியோ) போர் என்பது எப்போதுமே பெரியவர்களின் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. உயிரிழந்தவர்களை விட போரின் தாக்கத்தை தாங்கி உயிருடன் வாழ முயல்பவர்களுக்கே அதன் வலி அதிகம். அதுவும் அகதியாக புது இடத்தில் வாழ்வை தொடங்கியும், கொடூரமான அந்த போரின் நினைவுகளின் பாதிப்பை இந்த சிறு குழந்தையிடம் கூட பார்க்க முடிகிறது. சிறியாவில் இருந்து அகதிகளாக வேறு நாடுகளில் வாழ்பவர்களுக்கு இந்த நிலையே. அயிலான் குர்தி என்ற சிறுவனின் மறைவை உலகமே பேசியது. ஆனால் இன்றளவும் குழந்தைகள் போலீஸ் உடை அணிபவர்களை பார்த்து பயந்து போகிறார்கள். கேமராவை, துப்பாக்கி என நினைத்து கைகளில் உயர்த்திய குழந்தையை உலகம் நிச்சயம் மறந்திருக்காது. துருக்கி ந…

  25. ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை மீது தற்கொலைத் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை களைக் குறிவைத்து தலிபான்கள் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினர். வெடிப்பொருள் நிரப்பிய காரை மோதச் செய்து இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. காபூல் நகரின் ஜாய்சிர் பகுதியில் நடந்த இத்தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, குண்டுஸ் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் தலிபான் தீவிரவாதி களுக்குக் கிடைத்த மிகப்பெரு வெற்றியாக இது கருதப்படுகிறது. குண்டுஸ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக கார்வெடி குண்டுத் தாக்குதலை மேற் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.