Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தென் கொரியாவிலிருக்கும் ராணுவ முகாம் மீது வட கொரியா கடந்த வியாழக் கிழமையன்று தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தென்கொரியாவும் பதில் தாக்குதல்களை நடத்தியது. தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் 1950-53ல் நடந்த யுத்தத்தில் அமைதி உடன்படிக்கை ஏதும் ஏற்படவில்லை. போர் நிறுத்தம் மட்டுமே செய்துகொள்ளப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நடப்பது வாடிக்கையாக இருந்துவருகிறது. இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் யொங் உண் போருக்கு தயாராகும் படி ராணுவத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து, வடகொரியாவின் படைகள் போருக்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்களுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்த நிலையில் வடகொரியாவின் இந்த நடவடிகை பதற்றத்தை மேலும் அதிகரித்துள…

    • 0 replies
    • 791 views
  2. 'பாகிஸ்தானின் முத்தரப்பு பேச்சுவார்த்தை கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல' 'ரஷ்யாவில் ஏற்பட்ட உடன்பாட்டில், இருநாட்டு அரசுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே ஒப்புக்கொள்ளப்பட்டது' (கோப்புப் படம்)தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் விவாதிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த, ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி தாங்கள் உறுதியாக உள்ளதாகவும், இது தொடர்பில் பாகிஸ்தான் தான் அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இதை தெரிவித்தார். எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோர் …

  3. கிரேக்கப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஏதுவாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். கடன் அளித்த சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மிகக் கடினமான காலகட்டம் கடந்துவிட்டதாகக் கூறியிருக்கும் சிப்ராஸ், இந்த ஒப்பந்தம் குறித்து தேசம் என்ன கருதுகிறது என்பதைச் சொல்ல அனுமதிக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சியில் பேசிய சிப்ராஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். சர்வதேச நாடுகளுடன் கிரேக்கம் செய்துகொண்ட கடன் ஒப்பந்தம் குறித்து சிப்ராஸின் சீரிஸா கட்சிக்குள் கடும் எதிர்ப்பு நிலவியது. சர்வதேச நாடுகளுடன் செய்துகொண்ட கடன்…

  4. கொலைதேசமா கொலம்பியா? கொலம்பிய கால்பந்து வீரர் எஸ்கோபார் | கோப்புப்படம் கொலம்பியாவைப் பற்றி அறியத் தொடங்குவதற்குமுன் அது தொடர்பாக எழக்கூடிய ஒரு குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டுவிடலாம். ‘’நாங்கள்தான் கொலம்பியா. கொலம்பியாதான் நாங்கள்’’. ஒபாமாவை ஜனாதிபதியாகக் கொண்ட நாட்டினர் இப்படிச் சொல்வதுண்டு. கொலம்பியா என்பது ஒரு பெண்ணின் பெயர். தங்கள் நாட்டைப் பெண்மையின் வடிவமாகப் பார்ப்பதில் அந்த மக்களுக்கு மகிழ்ச்சி. கொலம்பியா பல்கலைக்கழகம், கொலம்பியா நதி, கொலம்பியா மாவட்டம் இத்தனையும் யு.எஸ்.ஏ.வில் உள்ளன. தலைநகரத்தின் பெயரே வாஷிங்டன் D.C. (டி.ஸி.யின் விரிவு டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா). ஆனால் இந்தத் தொடரில் கொலம்பியா என்று நாம் குறிப்பிடுவது ஒரு தேசத்தை. தென் அமெரிக்காவின் நான்க…

  5. தீபிகா பல்லிகலை இந்து, கிறுஸ்தவ முறைப்படி திருமணம் செய்கிறார் தினேஷ் கார்த்திக்! கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலுக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான கிரிக்கெட் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளால் திருமணம் தள்ளிப் போய் கொண்டு வந்தது. இந்நிலையில், அடுத்த மாதம் இவர்களது திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். தீபிகா பல்லிகல் கிறுஸ்துவர் என்பதால், முதலில் ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னையில் கிறுஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெறுடிகிறது. தொடர்ந்து 20ஆம் தேதி தினேஷ் கார்த்திக் இந்து முறைப்படி தீபிகா பல்லிகல் கழுத்தில் தாலி கட்டுகிறார். இருவருமே விளையாட்டுத்துறையை சேர்ந்த பிரபலங்கள் என…

  6. கனடா- லொட்டோ மக்ஸ் சீட்டிழுப்பில் 50மில்லியன் டொலர்களை வென்ற அல்பேர்ட்டாவை சேர்ந்த தம்பதிகள் வெற்றி பெற்ற பணத்தை தங்கள் குடும்பத்தினருடன் மீள சேர்ந்து கொள்ளவும் தங்கள் தேன்நிலவை மேற்கொள்ளவும் பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளனர்.38வயதுடைய டிரக் சாரதி ஆகஸ்ட் மாதம் 7ந்திகதி அல்பேர்ட்டாவில் அட்மோர் என்ற கிராமத்தில் மூன்று லாட்டரி சீட்டுக்களை வாங்கினார்.இவரும் இவரது மனைவியான 27வயது ஷீனாவும் இந்த 50மில்லியன் டொலர்களை வென்ற தம்பதிகளாவர்.முதலாவதாக தனது தாத்தாவின் சாகுபடி நிலத்தை வாங்கி குடும்பத்தினருடன் சேர்வது முதலாவது வேலை என்று டிரக் சாரதி ஸ்கொட் தெரிவித்தார்.வெகு தொலைவில் வாழும் தனது உறவினர்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.டிரக் வண்டி ஓடுவதால் எந்நே…

    • 0 replies
    • 887 views
  7. புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, தண்டனைக் குறைப்பு பெற்றவர்கள் இரட்டை பலன் பெற முடியாது என்று கூறியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்த…

    • 2 replies
    • 1.1k views
  8. அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் அதிகாரியாக முதல்முறையாக திருநங்கையை அதிபர் ஒபாமா நியமித்து உள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன் என்ற திருநங்கை நேற்று நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகையில், அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் திருங்கை இவரே ஆவார். ரஃபி, இதற்கு முன்பு திருநங்கைகளின் சமத்துவத்துக்கான தேசிய மைய ஆலோசராக பணியாற்றியவர். திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன் உறுதி பூண்டிருப்பதற்கு, ஒபாமா அரசு மதிப்பளிக்கிறது என்பதை இந்த நியமனம் பிரதிபலிக்கிறது என்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் வலேரி ஜாரெட் கருத்து தெரிவித்து உள்ளார். மேலும், ரஃபி பிரீட்மேன்-குர்ஸ்பேன…

  9. ஹா – ஹாங்காங் பொருளாதாரத்தில் அப்படி யோர் அப்பப்பா வளர்ச்சி! எனவே அந்த நான்கு பகுதிகளையும் ‘ஆசியப் புலிகள்’ என்று கூறுகிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதத்துக்கும் அதிகம் என்கிற அளவில் பொருளாதார வளர்ச்சி. வெகு வேகமான தொழில் முன்னேற்றம். சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகியவற்றுடன் கைகோத்து கர்வம் பொங்க இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பகுதி ஹாங்காங். ஹாங்காங் என்றால் சீன மொழியில் ‘‘நறுமணம் வீசும் துறைமுகம்’’ என்று பொருள். ஆனால் இன்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் ‘’எங்கள் மூச்சுக் காற்றே தடை பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நறுமணத்தை எங்கே சுவாசிப்பது?’’ என்கிறார்கள் விரக்தியோடு. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பதுதான் இப்போதைக்கு அவர்களுக்கான சுவாசம். சீனாவும…

  10. அமெரிக்கப் பெண்ணை குறிவைத்து மிருகத்தைவிட கேவலமாக பொது இடத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபனை மும்பை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணான மர்யான்னா அப்டோ என்பவர் மும்பையில் உள்ள ஒரு பிரபல கணக்கு ஆடிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றியபடி, மும்பையில் வசித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் அவர் ’கேட் வே ஆப் இந்தியா’ பகுதியில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் அவரது பார்வையில் படும்படி ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் நடந்து கொண்டான். அவனது எண்ணத்தின் வக்கிரத்தை இவ்வாறு வெளிப்படுத்திய அந்த காட்டுமிராண்டி, அந்த வக்கிரத்தின் வடிகாலை அந்த அமெரிக்க பெண்ணின் மீது பாய்ச்சியுள்…

    • 0 replies
    • 1.3k views
  11. விரல் சொடுக்கும் வடகொரியா கொரிய தீபகற்பத்தின் எந்தப் பகுதியில் வட கொரியா இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. வடபகுதியில்தான்! கொரிய தீபகற்பம் எங்கே இருக்கிறது என்று கேட்பதில் தவறில்லை. இந்தியாவிலிருந்து வடகிழக்காகப் பயணம் செய்தால், சீனா, ரஷ்யா, தென் கொரியா ஆகியவற்றைத் தாண்டினால் வட கொரியா. ‘ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு’ என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ள வட கொரியாவின் தலைநகரம் பியாங் கியாங். தென் கொரியாவைவிட அதிக பரப்பளவு கொண்டது என்றாலும் வட கொரியாவில் மக்கள் தொகை குறைவு (தென் கொரியாவில் பாதிதான்) ஒரு நாடு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன தப்பு? பிற நாடுகள் என்ன செய்யும்? பாராட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைப்படும். அப்படித்தானே? 2012 டிசம்பர் 12…

  12. சங்காவிற்கு தூதுவர் தகைமை! August 19, 2015 தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான தகைமை கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (19) குமார் சங்கக்காரவிடம் கையளித்தார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=1879&mode=head

  13. மகாராணி எலிசபெத்தின் சாதனை இங்கிலாந்து ராணி ஆக இரண்டாம் எலிசபெத் பதவி வகிக்கிறார். இவரது தந்தை மரணம் அடைந்த பிறகு 1952–ம் ஆண்டு பெப்ரவரி 6–ம் திகதி அரசியாக ஆக பதவி ஏற்றார். அப்போது அவரது வயது 25. தற்போது அவருக்கு 89 வயது ஆகிறது. எனவே கடந்த 63 ஆண்டுகளாக இவர் ராணி ஆக பதவி வகித்து வருகிறார். மூன்று தலைமுறைக்கு முந்தைய இவரது முப்பாட்டி விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் ´அரசி´ ஆக இருந்துள்ளார். அவரைப் போன்று தற்போது இரண்டாம் எலிசபெத்தும் 63 ஆண்டுகள் ராணி ஆக இருந்து வருகிறார். வருகிற செப்டம்பர் 9–ம் திகதிக்குப் பிறகு இவர் இங்கிலாந்தில் நீண்ட நாள் ராணி ஆக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெறுகிறார். ஏனெனில் விக்டோரியா மகாராணி செப்டம்பர் 9–ம் திகதிதான் ´ராணி´ ஆக பதவி ஏற்றார். …

  14. டி கலோ ஜிரோ : 61 ஆண்டுகளாகியும் எவருமே தங்காத ஹோட்டல் Aug 15, 2015 Bella Dalima Don't miss, Local 0 இத்தாலியின் சிசிலி தீவில் 1,300 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் 300 அறைகளுடன் மிகப்பிரமாண்டமான ஹோட்டல் டி கலோ ஜிரோ அமைந்துள்ளது. ஹோட்டலின் மேல் தளத்திலிருந்து பார்த்தால், சிசிலி தீவின் அழகை முழுவதுமாக ரசிக்கலாம். ஹோட்டல் அருகே பிரசித்தி பெற்ற தேவாலயமும் பிரபலமான ஸ்பா ஒன்றும் அமைந்துள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு தவறாமல் வருகை தருகின்றனர். ஆனாலும், ரம்மியமான ஹோட்டல் கலோ ஜி ரோவில் மட்டும் இது வரை எவரும் தங்கியது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த ஹோட்டல் 2 முறை புதுப்பிக்கப்பட்டு 4 முறை திறப்பு விழாவும் கண்டுவிட்டது. அப்படி இருந்தும் எவரும் இங்கு…

    • 0 replies
    • 799 views
  15. சீர்குலையும் சிரியா 1 சிரியாவில் அமெரிக்க போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கு இலக்கான பகுதி | கோப்பு படம் : ஏபி வெள்ளம் வந்தது. காஷ்மீரில் பலரும் மேடான இடத்துக்கு அலறிக் கொண்டு இடம் பெயர்ந்தார்கள். விசாகப்பட்டினத்தை ஹுத் ஹுத் புயல் தாக்கும் என்ற செய்தி வந்தவுடனேயே ஆயிரக்கணக்கானவர்கள் துரதிஷ்டம் பிடித்த (சென்னை போன்ற இடங்களில் புயல் வீசும் என்று கருதப்பட்டால்கூட அது விசாகப்பட்டினத்தில்தான் விடியும்) விசாகப்பட்டினத்தைவிட்டு வெளியேறினர். ஒரு நாட்டில் கிட்டத்தட்ட பாதிபேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு ஓடினால் எப்படி இருக்கும்? அதுதான் சிரியாவில் நடக்கிறது. நம் நாட்டுக்கு வட மேற்கில் பாகிஸ்தான். அதற்கு மேற்காக ஆப்கானிஸ்தான். மேலும் மேலும் மேற்கில் சென்றால் இரான், பஹரின…

  16. தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இந்து (பிரமா) கோவிலுக்கு அருகில் நிகழ்ந்த பாரிய குண்டுவெடிப்பில் இதுவரை 12 பேர் உயிரிழந்து 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் பெளத்தர்களும் வழிபடச் செல்வது குறிப்பிடத்தக்கது. மேலும் இது கோடைகால விடுமுறை என்பதால்.. பல வெளிநாட்டவர்களும் பாங்கொக்கில் உல்லாசப் பயணம் செய்வது முறையே ஆகும். மேலதிக செய்திகள்.. http://www.bbc.co.uk/news/world-asia-33963280

  17. அபுதாபியில் முதல்முறையாக கோவில் கட்ட நிலம் வழங்கும் அரசு: மோடி பாராட்டு. அபுதாபி: பிரதமர் மோடி அபுதாபி சென்றுள்ள நிலையில் அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினர் வணங்க கோவில் கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை கிளம்பி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். டெல்லியில் இருந்து கிளம்பிய அவர் அபுதாபி சென்றடைந்தார். அங்கு அவர் தலைவர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்நிலையில் அபுதாபியில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் வழிபட அங்கு கோவில் ஒன்றை கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்திய சமூ…

  18. அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், லண்டன், பாரீஸ் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்துமாறு அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அப்போத்பாத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தன் பேரில் ஒசாமா பின் லேடன் பதுங்கி தங்கியிருந்த வீட்டினுள் அமெரிக்க படைவீரர்கள் அதிரடியாக நுழைந்து ஒசாமா பின் லேடனை சுட்டுகொன்றனர். இந்நிலையில் ஒசமா பின்லேடன் மகன் ஹம்சா பின் லேடன் ஆடியோ மூலம் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இணையளத்தில் வெளியாகி உள்ளது. அதனை அல் கொய்தா தீவிரவாதிகள் டுவிட்டரில் த…

    • 0 replies
    • 1.5k views
  19. 3 இயந்திரங்களுடன் 21 மணி நேரம் எண்ணப்பட்ட பெருந்தொகை ஊழல் பணம் Reuters பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். Reuters மேலும் தேடுதல் நடைபெறும் எனக் காவல்துறையினர் தகவல் இந்தியாவில் கொல்கத்தா நகரில் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் அதிகாரி ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணி முடிக்க 21 மணிநேரம் எடுத்ததாக காவல்துறை கூறுகின்றது இந்தியாவின் கொல்கத்தா நகரில் கையூட்டு பெற்றார் என்ற குற்றச்சாட்டில் அதிகாரி ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை 3 இயந்திரங்களுடன் எண்ணி முடிக்க 21 மணிநேரம் எடுத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு அனுமதி அளிக்கும் பொறுப்பில் இருந்த உள்ளூர் கவுன்சில் அதிகாரி ஒருவரிடமிருந்தே இந்தப் பணம் க…

  20. நகரத்துக்குள் ஒரு நாடு: வாடிகன் 1 வாடிகன் நகரின் எழில்மிகு தோற்றம் ஒரு நாட்டுக்குள் நகரம் இருக்குமா? நகரத்துக்குள் நாடு இருக்குமா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் யோசிப்பீர்கள். ஆனால் அப்படியொரு விசித்திரம்தான் வாடிகன். இத்தாலியின் தலைநகரம் ரோம். அதற்குள் இருக்கிறது கத்தோலிக்கர்களின் அதிகார பீடமான வாடிகன் என்ற நாடு. அரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கூட இல்லாமல் ஒரு நாடு! ‘வாடிகனின் வரலாறைச் சொல்லுங்கள். ஆனால் அதில் மதம் என்பதே கலந்திருக்கக் கூடாது’ என்று நிபந்தனை போட்டால் வேறொரு நாடு பற்றிதான் எழுத ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நீரும் செம்புலச் சேறும் கலந்திருப்பதுபோல வாடிகனோடு மதம் கலந்திருக்கிறது. இப்போது ரோம் என்பது (என்னதான் தலைநகர் என்றாலும்) ஒரு சிறு நகரம். ஆன…

  21. Started by நவீனன்,

    சீறும் சீனா - 1 சீனாவின் மலிவு விலை பொம்மைகள். (கோப்புப் படம்) வருங்காலத்தில் உலகப் பொருளாதாரத் தலைமையை எந்த நாடு ஏற்கும்? என்ற கேள்விக்கு சோவியத் யூனியன் என்பது, 1970-களில் சர்வதேச பொருளாதார நிபுணர்களின் பதிலாக இருந்தது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டார்கள். `மத்திய கிழக்கு நாடுகள்’. இப்படி மாற்றிக் கொண்டதற்குக் காரணம் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான பெட்ரோலியக் கிணறுகள். ஆனால் அமெரிக்காவுக்கு இந்தப் பெருமை கிடைத்தது. “இன்னும் நூறு ஆண்டுகளில் அமெரிக்காவை நாம் தாண்டிவிட வேண்டும்’’ என்று ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். சில ஆண்டுகள்தான். அவர்கள் அத்தனை பேருக்கும் எழுந்தது ஒரு திகில் …

    • 12 replies
    • 7.1k views
  22. இலங்கைக்கான அமெரிக்க தூதராக இந்தியர் பதவியேற்பு இலங்கை, மாலத்தீவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அதுல் கேஷப் பதவியேற்றுக் கொண்டார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரியாக அதுல் கேஷப் பணியாற்றியுள்ளார். வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் நேற்று முன்தினம் அவர் முறைப் படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அமெரிக் காவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்ற பிறகு அதுல் கேஷப் கூறியபோது, அழகிய தீவு நாடுகளில் அமெரிக்க தூதராகப் பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அதுலின் தந்தை கேஷப் சந்தர் சென் பஞ்சாபை சேர்ந்தவர். ஐ.நா. சபை ஊழியராகப் பணியாற்றிய அவ…

  23. வட கொரியா: கிம் அவையில் மசோதாவை எதிர்த்த தலைவருக்கு 'மரண தண்டனை' நிறைவேற்றம் சுட்டுக் கொல்லப்பட்டதாக கருதப்படும் வட கொரிய அமைச்சரவை மூத்த அமைச்சர் சோ யோங் கோன். | கோப்புப் படம்: ஏஎப்பி. வட கொரிய அமைச்சரவையில் மூத்த அமைச்சர் சோ யோங் கோனுக்கு 'மரண தண்டனை' நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அமைச்சரவையில் கடந்த 2014-ல் சோ யோங் கோன், அதிபருக்கு அடுத்தபடியான பதிவியில் இடம்பெற்றார். அதிபர் கிம் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்ட காடு வளர்ப்பு கொள்கைகளுக்கு சோ யோங் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு கடந்த மே மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய செய்தி ஊடகமான யோன்ஹாப் குறிப்பிட்டுள்ளது. வட கொரிய…

  24. பாகிஸ்தானில் சுமார் 350 குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்த 14 பேர் அடங்கிய கும்பலை பொலிஸார் கைதுசெய்து உள்ளனர். இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கசூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய கொடூரச்சம்பவம் வெளியாகி உள்ளது. 21-பேர் அடங்கிய கும்பலானது இங்குள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை சீரழித்து தங்களுக்கு ஏற்றவாறு புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து உள்ளனர். இதுதொடர்பான ஆபாச காணொளிகள் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. கும்பலானது எடுத்த ஆபாச படம் அடங்கிய இறுவட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள், சிறுவர்களை…

    • 2 replies
    • 1.7k views
  25. சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 1 சவூதி அரேபியாவில் உள்ள ரப் அல்-காலி பாலைவனத்தை கடந்து செல்லும் ஒட்டகங்கள். சவுதி அரேபியாவில் நடைபெறுவதாக ஒரு கதையைத் தான் எழுதியிருப்பதாக ஒருவர் கூறுகிறார். அந்தக் கதையின் தொடக்கம் இது. கதாசிரியரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? “காரை ஓட்டிச் சென்ற ஜாஸ்மின் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த தன் நண்பனைக் கண்டதும் காரை நிறுத்தினாள். அவளை அடையாளம் கண்டு கொண்ட அந்த நண்பனும் சற்றுத் தொலைவிலிருந்தே தன் கையை அசைத்தான். ஜாஸ்மின் காரை விட்டு இறங்கினாள். “எங்கே இந்தப் பக்கம்?” என்றான் அவன். “நதிக்கரையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாம் என்று கிளம்பினேன்.” என்றாள் ஜாஸ்மின். ‘’அப்படியா? நான் ஒரு சினிமாவுக்குப் போகலாம் என்று கிளம்பினேன்” என்றான் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.